"நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம்" என்ற VIRAL பதிவிற்கு இந்து புத்தகங்களின் பதில்கள்

இந்துவாக பெருமை கொள்ளுங்கள்!
அதோடு கொஞ்சம் அதன் உண்மை நிலையை வாசியுங்கள், ஆய்வு செய்யுங்கள்.


இஸ்லாமியனாய் இரு என குரான் சொல்கிறது...
கிறிஸ்துவனாய் இரு என பைபிள் சொல்கிறது...
மனிதனாய் இரு என கீதை சொல்கிறது...

கடவுள் ஏழாவது வானத்தில் இருக்கிறார் என குரான் சொல்கிறது...
நாலாவது வானத்தில் இருக்கிறார் என பைபிள் சொல்கிறது...
கடவுள் உன்னுள்ளே தான் இருக்கிறார் என கீதை சொல்கிறது...

காபிர்களை (இசுலாமியர்கள் அல்லாதவர்களை) கொல் என குரான் சொல்கிறது...
சிலை வழிபாடு செய்பவர்களை தண்டி என பைபிள் சொல்கிறது....

உலகமே உன் குடும்பம் தான் என கீதை சொல்கிறது.....




1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்?

அக்ஞஷ் சாஷ்ரத்ததானஷ் சஸம்ஷயாத்மா வினஷ்யதி நாயம் லோகோ (அ)ஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ஷயாத்மன - கீதை 4:40

பொருள்: ஆனால், சாஸ்திரங்களை சந்தேகிக்கும் நம்பிக்கையற்ற முட்டாள் மனிதர்கள், இறையுணர்வை அடைவதில்லை; அவர்கள் வீழ்ச்சியடைகின்றனர். சந்தேகம் கொள்ளும் ஆத்மாவிற்கு இவ்வுலகிலோ மறு உலகிலோ இன்பம் இல்லை. - பகவத் கீதை 4.40

பதில் : இறை உணர்வை அடையாதவர்களுக்கு இன்பம் இல்லை எனவே குற்றம் என்றுதானே இந்துமதம் சொல்கிறது.

2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமுமோ கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்?


பதில்: கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது 
என்பது இந்துமத மக்களிடையே புழக்கத்தில் இருக்கும் பழமொழி. - கோவில் எதற்கு? 

ஆலயம் தொழுவது சாலமும் நன்று - ஆத்திச்சூடி 
என்பதற்கு என்ன பொருள்?

3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்?

பதில்: மற்ற மதமும் கட்டாய படுத்துவதில்லை, எல்லாமே வசதி வாய்ப்பை பொறுத்துதான். மேலும் தமிழர்களை அவர்கள் கட்டயப் படுத்த முடியாது ஏனென்றால் இந்து வேறு சைவம் வேறு.

4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்?

பதில்: வேதத்தை விட்ட அறமில்லை – வேதத்தில் ஓதத்தகும் அறம் எல்லாம் உள – தருக்க வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற வேதத்தை ஓதியே வீடுபெற்றார்களே! (திருமந்திரம் 51)

5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்?

பதில்: திருநீர் இடுவதும், ராமம் போடுவதும், கையிலும் கழுத்திலும் கயிறு காட்டுவதும், காது குத்துவதும், தாலி கட்டுவதும், தலையில் சிண்டு வைப்பதும், பூணூல் போடுவதும் தாழ்ந்த சாதிகளை தவிர அனைவரும் கட்டாயம். தாழ்ந்த சாதிகள் எதுவும் அணியததே இங்கு அடையாளம் தான்.

6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.

பதில்: இந்தியாவிற்கு வாரணாசியிலும், தமிழகத்திற்கு காஞ்சியிலும் இருக்கும் சங்கராச்சாரிகள் காதில் விழாமல் பேசுங்க சகோ. இப்பொழுது ஆர்.எஸ்.எஸ் அதை கையில் எடுக்க முயற்சிப்பது அனைவரும் அறிந்தது.

7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.

பதில்: பிறகும் நித்தியானந்தா போன்றவர்கள் பின்னே செல்பவரும் இந்துக்களே. உண்மையில் இது போன்றவர்களை தலையை துண்டிக்கும் தைரியம் கொண்ட மதங்களும் உண்டு. தமிழர்களுக்கு இதுபோன்ற சாமியார்ளும் தேவையில்லை, ஏமாற்றமும் தேவையில்லை.

8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை.?

👉மரமும் கடவுள், 👉கல்லும் கடவுள், 👉நீரும் கடவுள்(கங்கை), 👉காற்றும் கடவுள் (வாயு), 👉குரங்கும் கடவுள் அனுமன், 👉நாயும் கடவுள் (பைரவர்), 👉பன்றியும் கடவுள் (வராகம்).

பதில்: என்ன? இழி பிறவி என்று ஏதுமில்லையா?

‘‘ப்ராஹ்மனோஷ்ய முஹமாஸீத் பாஹு ராஜ்ன்யூ க்ரூதஹ் ஊரு ததஸ்ய்ய யதைவஷ்யஹ் பத்பியாம் ஸுரூத்ரோ அஜாயத’’ (ரிக் வேதம் 10:90:12)

பொருள்: கடவுளின் முகத்திலிருந்து பிராமணர்களும் அவனின் கரங்களிலிருந்து சத்திரியர்களும் முதுகிலிருந்து வைஷ்யர்களும் பாதங்களிலிருந்து சூத்திரர்களும் பிறந்தனர்.

இயற்கையாக தோன்றியது என்று ஏதுமில்லை, அனைத்தும் படைக்கப் பட்டது என்பது இந்து வேதேங்களின் கூற்று.

இயற்கை கடவுளா?

'அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே' - யஜீர்வேதா அதிகாரம் 40 :9 
'இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.'

9. நீயும் கடவுள், நானும் கடவுள்... பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.

பதில்: நீயும் நானும் கடவுள் என்றால்,

"எல்லாக் கடமைகளையும் பரித்யாகம் பண்ணிவிட்டு என்னையே சரண் புகு. நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக் கிறேன். துயரப் படாதே.” (கீதை 18-ஆம் அத்தியாயம், 66-ஆம் சுலோகம்) என்பது கடவுளுக்கு கடவுள் இட்ட கட்டளையா?

10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பண்ணிருதிருமறை?

பதில்: என்னிடம் 12 வீடு உள்ளது ஆனால் நடைபாதயில் உறங்குகிறேன் என்பது போல் உள்ளது. மக்களிடம் போதிக்க படாத மக்களை பண்படுத்த பயன்படாத நூல்கள் 1000 இருந்து என்ன பயன். பண்ணிருதிருமறை சைவ சமய நூல்.. சைவத்திற்கும் வைணவத்திற்கும் வரலாற்றில் யுத்தம் நடந்தது ஏன்?

பெண் ஆசையை ஒழிக்க 👉இராமாயணம், -
மண் ஆசையை ஒழிக்க 👉மகாபாரதம்,

பதில்: ராமயாணம் மற்றும் மகாபாரதங்கள் வேதங்கள் இல்லை, இதிகாசங்கள் இரண்டுக்கும் மாபெரும் வேறுபாடு உள்ளது. நான் சொல்லல, வேதாந்திகள் சொல்வது.

கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த 👉பகவதம்,
அரசியலுக்கு 👉அர்த்தசாஸ்த்திரம்,
தாம்பத்தியத்திற்கு 👉காம சாஸ்திரம்,
மருத்துவத்திற்கு 👉சித்தா, ஆயுர்வேதம்,
கல்விக்கு 👉வேதக் கணிதம்,
உடல் நன்மைக்கு 👉யோகா சாஸ்த்திரம்,
கட்டுமானத்திற்கு 👉வாஸ்து சாஸ்திரம்,
விண்ணியலுக்கு 👉கோள்கணிதம்.

பதில்: இவை அனைத்தும் வெவ்வேறு கொள்கை மற்றும் வெவ்வேறு பிராந்திய பண்பாடு மற்றும் கலாச்சார நூல்களின் தொகுப்பு, ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் அடிப்படை கொள்கையில் முரண்கள் பல.

11. யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்...?

பதில்: தமிழகத்தல் சமண மதம் அழிந்த வரலாறும் சைவ வைணவ மதங்களுக்கான இடையில் நடந்த யுத்தங்களும் பதியபடாமல் இல்லை. ரிக் யசுர் வேதங்களே மத யுத்தத்தின் வரலாற்று பதிவுகளே..

12. எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து "கொல்லாமை " "புலால் மறுத்தல்", ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையை கொடுத்த மதம்?

புலால்புலால் புலால் அதென்று பேதமைகள் பேசுகிறீர்?
புலாலைவிட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எங்ஙனே?
புலாலுமாய்ப் பிதற்றுமாய் பேருலாவும் தானுமாய்ப்
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன்காணும் அத்தனே! - சிவ வாக்கியர் பாடல் 147

13. இந்துக்களின் புனிதநூல் என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம் ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது?

பதில்: வேதங்களே புனிதமானவை என்று கீதை சொல்கிறது 

முக்தி எனப்படும் மரமில்லா பெருவாழ்விற்க்கு வழிகாட்டும் மதம்?

பதில்: அனைத்து மதத்தினரும் முயற்சிப்பது இதற்காகவே.. யார் வழி சரி என்பது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய ஒன்று..

14. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.?


பதில்: சகிப்புத்தன்மைக்கும் முறையான வரையறை அற்ற தன்மைக்கும் வேறுபாடுகள் உண்டு.

15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம்?

எந்த மதம் இதற்கு விதி விலக்கு ?

இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்......

எல்லாவற்றையும் தக்க முறையான காரணத்துடனும் ஆதரத்துடனும் மறுத்து கொண்டேயும் போகலாம்

இந்துவாக (இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமைகொள்வோம்?

இந்து இயற்க்கையாலன் அல்ல..! ஓர் இறைவன் மேலே இருக்கிறான் என்பது இயற்கையாக எல்லோர் மனதிலும் உள்ள ஓர் கருத்துக்கு முரணான பல கடவுள் கொள்கை கொண்டவன் எப்படி இயற்கையாலனாவான்? அவரவரின் நம்பிக்கையை புகழ்வது பிழையில்லை, மற்றவரை இழிப்பது பிழை..

முடிவுரை

இந்த பதிவு சொல்லும் அனைத்து காரணங்களும் புரிதல்களும் அறியாமையின் வெளிப்பாடு ஆகும் அல்லது தெரிந்தே மறைக்கும் செயலாகும். மேலும் எதிர்மறை கருத்துக்களை நேர்மறையாக சித்தரிக்கும் முயற்ச்சி.. இவை அனைத்தும் தமிழன் ஏன் இந்துவாக இருக்க கூடாது என்பதற்கான பட்டியல்.

நடைமுறைக்கு ஏற்ற எதார்த்தமான சாதிய ஏற்ற தாழ்வற்ற முரண்பாடற்ற நெறியை பின்பற்றுவதில் தெளிவு பெறுவோம்.