நெறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மனிதர்கள் ஏன் மதங்களை உருவாக்கினார்கள்?

கேள்வியில் உள்ள பிழை என்னவென்றால், மதங்களாவன மனிதர்களால் உருவாக்கப் பட்டது என்ற கருதுகோளை கொண்டதாக உள்ளது. இந்த முடிவுக்கு வரும் முன்னர் சில விடயங்களை நாம் உற்று நோக்க வேண்டி உள்ளது.

நாம் காண்பனவற்றில் பெரும்பாலான மதங்கள் ஒரே மதத்தின் இடம் பொருள் காலத்திற்க்கான வெவ்வேறு பதிப்புகள் ஆகும், அவை அனைத்தையும் படைத்த ஒரே கடவுளிடமிருந்து வந்தவை. ஆனால் அவற்றில் சமீபத்தியது பின்பற்றப்பட வேண்டும்.

அதைப் புரிந்து கொள்ள ஒரு அரசாங்கத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாட்டின் சட்டம் என்பது சூழ்நிலை மற்றும் தேவைகளின் அடிப்படையில் மாற்றப்பட்டு கொண்டே இருக்கும். ஆனால் அவற்றில் சட்டத்தின் சமீபத்திய திருத்தம் பின்பற்றப்படும்.

உங்கள் வேதங்களைப் பாருங்கள், ஒரே புத்தகத்தில் வெவ்வேறு ஆசிரியர்களின் பட்டியலைக் காணலாம்.

உதாரணமாக,

  • நீங்கள் இந்துவாக இருந்தால், RIG வேதத்தில் 356 ஆசிரியர்களைக் கொண்ட 10 புத்தகங்கள் உள்ளன என்பதை நீங்கள் அறிந்திருக்க கூடும். அவர்களில் சிலர் அகினி, வாயு, இந்திரன், வருணன். இன்னும் உங்களிடம் மற்ற இரண்டு வேதங்களும் உள்ளன.
  • நீங்கள் ஒரு முஸ்லீமாக இருந்தால், குர்ஆன் என்பது உலகெங்கிலும் உள்ள மற்ற அனைத்து வேதங்களின் தொடர்ச்சியாகும் என்பதை நீங்கள் அறிந்து இருக்கலாம், அதற்க்கான ஆதாரங்கள் நான்மறைகளிலும் கொடுக்கப்பட்டுள்ளது என்று குர்ஆன் கூறுகிறது.
  • நீங்கள் தமிழராக இருந்தால், குறள், புறநானூறு, அகநானூறு, தொல்காப்பியம், திருமந்திரம், நல்வழி என்று பல்வேறு நூல்கள் உள்ளன. புறநானூற்றை உதாரணமாக எடுத்துக் கொண்டால் அதை 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதி இருக்கிறார்கள். நமக்கு பரிச்சயமானது திருக்குறள் மட்டும் தான், ஆனால் அவ்வையாரின் ஞானக்குறளும் காகபுசுண்டரின் குறளும் நாம் அறியவேண்டிய சில பதிப்புகள். 

எனவே ஒவ்வொரு வேதத்திற்கும் பலவேறு ஆசிரியர்கள் பல்வேறு காலத்திலிருந்து இடம்பெற்று உள்ளனர் அவர்கள் கொள்கையில் ஒருவருக்கு ஒருவர் முரண் பட்டவராகவும் இருந்திருக்கவில்லை என்பது அந்த நூல்களை வாசிப்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம். 

இப்போது சொல்லுங்கள், ஒரே புத்தகம் வெவ்வேறு காலகட்டங்களில் இருந்து ஏராளமான ஆசிரியர்களால் தொடர்ந்து எழுதப்படுவது என்பது எப்படி சாத்தியம்? அவர்களின் அடிப்படைக் தத்துவத்தில் எந்த வேற்றுமையும் இல்லை. எனவே அவர்களின் கூற்றுப்படி - சக்திவாய்ந்த, மரணமில்லா,மேலும் ஆழமான அகலமான அறிவுடன் வேறு ஒன்று உள்ளது அது அவர்களை இணைக்கிறது என்று நாம் முடிவு செய்யலாம். அது கடவுள் என்று கொள்ளலாம்.

சரி இருக்கட்டும், இந்த ஆதாரங்கள் ஒரு பாரம்பரிய தொடர்ச்சி அல்லது ஒரே ஒரு நூலை உறுதி படுத்தலாம் ஆனால் அனைத்தும் ஒரே இறைவனிடம் இருந்து வந்தவை என்பதை நிறுவவில்லையே என்று கருதுவதாக இருந்தால், இதற்கான பதிலை திருமந்திரம் தருகிறது.

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.
 
நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.
 
நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

என்ற திருமந்திர பாடல்கள் சொல்வது என்னவென்றால், நந்தி தேவர் காட்டிய வழியில் நாங்கள் இருந்தோம் ஆனால் அது ஒருவரல்ல அவர்கள் நால்வர், திசைக்கு ஒருவராக அவர்கள் இருந்தார்கள். நந்தி தேவரின் மூலம் நாங்கள் இறைவனை அறிந்தோம் என்பதாம். 

திசைக்கொருவர் என்பதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. அதில் ஒன்று மொழி. ஒவ்வொரு திசையிலும் ஒரு மொழிப் பரம்பரியம் உண்டு. தமிழை சார்ந்த மொழிகளும், சீன மொழியை சார்ந்த மொழிகளும், ரஷிய மொழியை சார்ந்த மொழிகளும், ஐரோப்பிய மொழிகளும் ஒவ்வொன்றும்பல ஒற்றுமைகளுடன் இருப்பதை நாம் அறிவோம். இவை அல்லாத இந்தி, ஆங்கிலம் போன்ற சமீபத்திய மொழிகள் இந்த மூல மொழிகளை உள்வாங்கி பிறந்தது என்பதையும் நாம் அறிவோம். திசைக்கொருவர் என்பதை மொழிக்கொருவர் என்று எடுத்து கொள்ளலாம். எனவே அனைத்து சமயமும் ஒரே கடவுளிடத்தில் இருந்து வந்தது என்பதையும் அவைகள் ஒவ்வொன்றும் முரணானவைகள் அல்ல எனப்தையும் நாம் அறியலாம். 

இதை வலுப்படுத்த திருக்குர்ஆனில் ஒரு வசனம் வருகிறது.

ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 14:4)

எனவே வெவ்வேறு வேத நூல்களில் உள்ள தொடர்ச்சி மட்டுமல்ல, அனைத்து வேத நூலும் ஒரே இறைவனிடம் இருந்துதான் என்று அறிய இன்னும் பல்வேறு சான்றுகள் உள்ளன. நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான் திறந்த மானதுடன் உண்மையை தேட நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். மனமிருந்தால் மார்க்கமுண்டு. 

குறிப்பு: "வேதம் நான்கு" என்றுநான்கு வேத பாரம்பரியங்களை குறிப்பிடும் இது போன்ற வசனங்களை தன்வயப்படுத்த பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சி "அதர்வண வேதம்" ஆகும். நான்கு வேதங்கள் சமஸ்கிருதத்தில் தான் உள்ளது என்று குறிப்பிடுவதற்காக ரிக், யஜுர் மற்றும் சாமத்துடன் அதர்வணம் என்கிற வேதமல்லாத நூலை வேதமாக குறிப்பிட துவங்கினர். எனவே நால்வேதம் இந்து மதத்துக்கு சொந்தமானதல்ல மாறாக உலகில் உள்ள இறைவனால் வழங்கப் பட்ட அனைத்து வேதங்களும் நான்கு பாரம்பரியங்களை கொண்டது என்று பொருள்.

முடிவுரை

இந்த சிக்கல்களெல்லாம் ஒரு சிறிய அடிப்படையை அறியாததால் தோன்றியது.

    1. ஒரு சமயத்தை யாரோ ஓர் மனிதன் நினைத்ததால் உருவாக்கிவிட முடியாது.
    2. ஒரு சமயம் ஒன்று அல்லது பல அந்நாள் ஒன்றுக்கொன்று முரண்படாத வேதத்தை அடிப்படையாக கொண்டதாக அமையும்.
    3. ஒரு வேதம் ஒரு முனைவனால் மக்களுக்கு தரப்படும். அந்த முனைவனை பற்றிய தீர்க்க தரிசனம் முன்னுள்ள மறை நூலில் சொல்லப்பட்டு இருக்கும், பின்வரும் வேதத்தில் சான்று அளிக்கப்பட்டு இருக்கும். 
    4. அந்த முனைவனுக்கு அவ்வேதம் தேவரால் தரப்படும்.
    5. அந்த தேவருக்கு அவ்வேதம் அனைத்தையும் படைத்த தெய்வத்தால் தரப்படும்
    6. இந்த அமைப்பில் உள்ள சமயங்கள்தான் உண்மை சமயம், இதுவல்லாமல் உள்ள சமயங்கள் அனைத்தும் பொய் மதங்கள்.
    7. சைவம், வைணவம், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்றவைகள் தெய்வத்தால் தரப்பட்டது. ஆனால் இவைகளை இணைத்து புது மதம் உருவாக்க யாருக்கும் அனுமதி இல்லை.
    8. அப்படி செய்தால் அதை நியாயப் படுத்த சிவனையும் விஷ்ணுவும் மாமன் மச்சான் போல கதை எழுத வேண்டி வரும். எனவே "அரியும் சிவனும் ஒன்னு" என்ற சத்தியத்தை கூறும் பொழுது அதை புரியாத நிலையில் தான் மக்கள் இருப்பர்.

மனிதனால் உருவாக்கப்பட்ட மதங்கள் இருப்பதை மறுக்கமுடியாது ஆனால் அது சில தசாப்தங்களுக்கு மேல் நீடிக்காது. அவைகளை எளிதாக அடையாளம் காணலாம் ஏனென்றால் அவைகள் தங்களுக்குள்ளும் கடவுளின் புத்தகங்களுடனும் அடிப்படையிலேயே முரண்பாடுகளைக் கொண்டு இருக்கும்.

கடவுள் படைத்த இந்த பிரம்மாண்டமான வடிவமைப்பை (அறிவியலில் மட்டுமல்ல, சமயங்களிலும்) இந்த புத்தகத்தில் தெளிவுபடுத்தி இருப்பது போல நீங்கள் புரிந்து கொண்டால், நீங்கள் அவரை ஒருக்காலமும் மறுக்க முடியாது.

மதம் சார்ந்த கருத்துக்களில் உள்ள நன்மை மற்றும் தீமை என்ன?

பொதுப்படையான கேள்விக்கு பொதுப்படையாக பதில் சுருக்கமாக தருவதென்றால்,

சமயம் சார்ந்த கருத்துக்கள் பொதுவாக உலக நன்மைக்கே வித்திடும். முரண்பாடாகதெரியும் இந்த கருத்து அதை ஆழ்ந்து கற்காததன் விளைவு. மொழி, இட, கால பாகுபாடு அன்றி ஒரே தத்துவத்தை தாங்கி நிற்பதன் மூலம் அதன் நம்பகத்தன்மை உறுதி ஆகிறது. சமயங்கள் ஓவ்வொன்றுக்கும் முரண்கள் பல இருப்பதாக போதிக்கப்படும் நாம், ஒற்றுமைகளை பட்டியலிட்டால், சமயங்களுக்கு இடையேயான வேற்றுமை என்பது மக்களை பிளவு படுத்த திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என்று என்னும் அளவுக்கு மிகப் பெரியது. இந்த வளையொலி முழுவதும் ஒற்றுமைகளை பட்டியலிடும் வேலையை தான் செய்கிறது.

அப்படி அனைத்து மதங்களிலும் பொது விடயங்களாவன,

  1. ஒன்றே குலம் ஒருவனே தேவன்
  2. நிலையில்லா உலகுக்கு மட்டுமே உழைக்காமல் நிலையான வீடு பேரு பெறவும் உழை
  3. குலத்தால், மொழியால், நிறத்தால் சிறப்பில்லை, அவரவர் செய்யும் செயலால்தான் சிறப்பு
  4. அவரவர் செய்த வினைப்பயனும் உண்டு, இறைவன் எழுதிய விதிப்பயனுமுண்டு
  5. பொறாமை, பெருமை, கோபம், நயவஞ்சகம் கொள்ளாதே
  6. கொலை, திருட்டு, கொள்ளை, ஏமாற்று செய்யாதே
  7. அன்பு, கருணை, தருமம், உதவி செய்
  8. பிறன் மனை நோக்காதே, விபச்சாரம் செய்யாதே
  9. வட்டி வாங்காதே, கொடுக்காதே
  10. எடையில் குறைக்காதே
  11. நன்மை தீமையின் அளவு பொறுத்து சொர்கம் நரகம் உண்டு
  12. இறந்தவர் மீண்டும் பிறப்பதில்லை

இவைகளை ஏற்று பின்பற்றும் ஒருவனால் தனக்கும் தன சமூகத்துக்கும் நன்மையை தவிர வேறு ஏற்படுத்த முடியாது.

மதம் சார்ந்த கருத்துக்களில் உள்ள தீமை என்பது சற்று சிக்கலான ஆனால் எல்லோரும் கற்று அறிய வேண்டிய பகுதி ஆகும்.

மதம் சார்ந்த கருத்துக்களில் உள்ள தீமையாக சொல்லப்படுவது 

  1. சில கருத்துக்கள் அறிவியலுக்கு எதிராக பேசுகிறது
  2. கடும் போக்கு வாதத்தை போதிக்கிறது
  3. சமயங்களுக்கு இடையேயான இணக்கங்களை உடைக்கிறது
  4. மக்களின் மனித தன்மையை இழக்க செய்கிறது

ஆனால் இந்த தீமைகள் எல்லாம் எதன் மூலம் ஏற்படுகிறதென்றால்,

  1. ஒரே இறைவன் தான் அனைத்து மொழிகளுக்கும் அவனது பிரதிநிதிகளை (சித்தர்/ரிஷி/நபி/தீர்க்கதரிசி/குரு) அனுப்பி மக்களை வழி நடத்துகிறான் என்பதை மறுப்பதன் மூலம் பல இறைவனை கற்பனை செய்கிறான், பல இறைவன் கோட்பாடு மக்களை பிளவுபடுத்தவும் யுத்தங்களை ஏற்படுத்தவும் செய்கிறது.
  2. இறைவன் தேவ தூதர்கள் (நந்தி/ஜிபிரியேல்/கேப்ரியேல்) வாயிலாக அவனது பிரதிநிதிகளுக்கு கட்டளைகளை அனுப்புகிறான் என்பதை மறுப்பதன் மூலம் இறைவனின் grand design-ஐ புரிய  மறுக்கிறான், அது அவனை அறியாமையில் ஆழ்த்தும், அறியாமை அழிவின் வாசல் ஆகும்.
  3. அந்த பிரதிநிதிகளை பற்றிய முன்னறிவிப்புமுன் சென்ற வேத ஆகம நூல்களில் கொடுக்கப்படாமல் அவர்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுவதில்லை என்பதை அறியாமையினால், வசீகரமாக பேசும் எவரையும் குரு என்று நம்பி தவறான வழிகாட்டுதலுக்கு ஆளாகி ஏமாற்றம் அடையும் பொழுது இறைவனை மறுக்கும் சூழலுக்கு செல்கிறான். போலி மருத்துவரால் மருத்துவத்தை விடாத மனிதன், போலி குருவால் ஆன்மீகத்தை விடுகிறான்.
  4. இறைவன் தந்த வேத நூலின் மூலமே மக்களாகிய நாம் வழிநடத்தப் படவேண்டும் என்பதை அறியாமல், அவனுடைய வேதம் என்ன என்று கூட அறியாமல் அறமும் வழிகாட்டுதலும் இல்லாமல் மனிதன் அநியாயங்களை செய்ய துவங்குகிறான்.
  5. உண்மையை, சத்தியத்தை, ஹக்கை அறியாமல் பொய் தெய்வங்களை, பொய் குருக்களை, பொய் வேதங்களை ஏற்று பாவங்களை விதைத்து நரகத்தை அறுவடை செய்யும் துர்பாக்கிய சாலிகளாக மனிதன் மாறிப்போய் நிற்கிறான்.
  6. உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் எப்படி அதற்கே உரிய விதிகளின் அடிப்படையில் செயல்படுகிறதோ அதேபோல இறைவனை அறியவும், உண்மையான வேதத்தை அறியவும், வேதங்களில் கலக்கப்பட்ட பொய்களை களையவும், வேதங்களில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை திரிபுகளையும் அடையாளம் காணவும் விதிகள் உள்ளன என்பதை அறியாத நிலையில் மனிதன் உள்ளான்.

சமயம் என்பது அறிவியலை போன்று, ஆற்றல் போன்று, வாகனத்தை போன்று - முறையாக கற்று கையாளப்பட வேண்டிய ஒன்று. அறிவியலை புறந்தள்ள முடிவு செய்வது அறிவீனம், அப்படியேதான் சமயமும்.

https://ta.quora.com/மதம் சார்ந்த கருத்துக்களில் உள்ள நன்மை மற்றும் தீமை என்ன?


எது உண்மையாக இறைவனின் மதம், சமயம் [அ] மார்க்கம் !


மதங்கள் இரண்டு வகை வகைப்படும் 

  • உண்மை சமயம் - கறைபடா அல்லது முடிவுறா மறைநூலை கொண்டது.
  • பொய் சமயம் - கறைபட்ட, முடிவுற்ற அல்லது மனிதன் எழுதிய மறைநூலை கொண்டது. 
"கறைபடா" என்றால், அது எவ்வாறு வழங்கப் பட்டதோ அவ்வாறே இன்றுவரை மாறாது முதல் நூலுக்கான அல்லது வழிநூலுக்கான இலக்கணத்தோடு இருத்தல் என்று பொருள். 
 
"முடிவுறா" என்றால், இன்றும் அது நடைமுறைப் படுத்த வேண்டிய சட்டமாக இருத்தல் என்று பொருள். அதாவது அதற்குப் பிறகு எந்த வழிநூலும் வழங்கப் படவில்லை என்றும், அந்த சொற்களில் திரிபு ஏதும் ஏற்படுத்தவில்லை என்றும் பொருள். 
 
"கறைபட்ட" என்றால், அதில் புது செய்திகள் உரிமையில்லா ஆசிரியர் மூலம் இணைக்கப்பட்டோ, நீக்கப்பட்டோ இருத்தல் என்று பொருள். தீர்க்கதரிசனம் சொல்லப்பட்ட நபர்தான் அந்த குறிப்பிட்ட மறைநூலில் சேர்க்கவோ நீக்கவோ உரிமையுள்ளவர். 
 
"முடிவுற்ற" என்றால், அந்த நூல் பல காரணங்களளால் ஓதி உணர தகுதியற்றதாக மாறியிருப்பதாகும். பொருள் திரிதல், மறுவுதல், பாரம்பரியமாக கற்றுத்தரும் ஆசிரியர் அற்றுப் போதல், அதன் அடுத்த வழி நூல் தோன்றி இருத்தல் போன்றவைகள் சில காரணங்களாம். முடிவுற்ற மறைநூல்களிலேயே மக்களால் கறைபடுத்த முடியும் என்பது கூடுதல் தகவல். 
 
"மனிதன் எழுதிய" மறைநூல் என்றால், பல்வேறு மொழியில் உள்ள வேதங்களை கற்று, தனது மொழி அறிவைக்கொண்டு நூல் ஒன்றை எழுதி அதை இறைவனிடமிருந்து வந்ததாக அல்லது புனிதமானதாக கூறி ஒரு சமயத்தை துவங்குவது. 
 
ஒரு நூலின் தன்மையை மறைநூல்களின் வரையறையினையோடு ஒப்பிட்டு அதன் முழு வடிவமைப்பை ஆய்வு செய்யும் பொழுதும், அந்த நூலை எழுதிய குருவின் தன்மையை ஆய்வு செய்யும் பொழுதும் உண்மை சமயம் எது? பொய் சமயம் எது? என்று கண்டறியலாம்.

இறைவனின் ஒவ்வொரு நூலும் அது பேசும் சமயம் தான் உண்மை மார்க்கம் என்று கூறுவதை பார்க்கலாம். உதாரணங்கள்,

தமிழர் சமயம்


சிவம்அல்லது இல்லை இறையே; சிவம்ஆம்
தவம்அல்லது இல்லை; தலைப்படு வார்க்குஇங்கு
அவம்அல்லது இல்லை அறுசம யங்கள்;
தவம்அல்ல; நந்திதாள் சேர்ந்துஉய்யும் நீரே (திருமந்திரம் 1534)

பொருள்: சிவத்தை விட்டால் வேறு கடவுள் யாரும் கிடையாது; சிவமாகவே ஆகிவிடுகிற தவத்தை விட்டால் வேறு தவம் ஏதும் கிடையாது; பிற மதங்களின் வழியாகக் கடவுளைக் கண்டுகொள்வோம் என்று முயல்கிறவர்களின் முயற்சி வீண் முயற்சியே அல்லாமல் வேறில்லை. ஆகவே வேண்டாத வேலைகள் செய்வதைவிட்டு, நல்லபடியாகச் சிவத்தின் திருவடி சேர்ந்து விடுதலை பெறத் தலைப்படுங்கள். 
 
வந்த மடம்ஏழு மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடவரைத்
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே. (திருமந்திரம்: 38) 
 

இஸ்லாம்


‘….இன்னும் இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்….” (குர்ஆன் 5:3
 
‘...நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (ஏற்றுக்கொள்ளப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும்.” (குர்ஆன் 3:19) 
 
‘இஸ்லாம் அல்லாததை அல்லாஹ் ஒப்புக் கொள்ள மாட்டான்” (அல்குர்ஆன் 3:85) 

கிறிஸ்தவம்

அதற்கு இயேசு: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6).

சத்தியத்தின் மூலம் இவர்களைப் புனிதப்படுத்துங்கள்; உங்களுடைய வார்த்தைதான் சத்தியம். - (யோவான் 17:17)

முடிவுரை

உண்மை மதமும் இறைவனும் உண்மை குரு மூலம் வழங்கப்பட்ட உண்மை மறைநூல் வழியாகவே அறியப் படுகின்றனர். அந்த வழிமுறை வேதங்கள் தலைப்பில் ஒவ்வொன்றாக கொடுக்கப்பட்டுள்ளது.