சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கூத்து - சினிமா - நாடகம்

தமிழர் சமயம்


பாடு அகம் சாராமை; பாத்திலார்தாம் விழையும்
நாடகம் சாராமை; நாடுங்கால், நாடகம்
சேர்ந்தால், பகை, பழி, தீச்சொல்லே, சாக்காடே,
தீர்ந்தாற்போல் தீரா வரும். ஏலாதி 25

பொருள்: பாடுமிடஞ் சாராதொழிக. விலைமகள் தோன்றும்  நாடகஞ் காணாதொழிக. அவ்வாறு காணுமாயிற்பகையும், பழியும், பிறர் சொல்லுந் தீச்சொல்லும், சாக்காடுமென்று சொல்லப்பட்ட நான்கு மவர்க்கு நீங்கினபோல நீங்காவாய் வரும்.

கூத்தும், விழவும், மணமும், கொலைக் களமும்,
ஆர்த்த முனையுள்ளும், வேறு இடத்தும், ஒத்தும்
ஒழுக்கம் உடையவர் செல்லாரே; செல்லின்,
இழுக்கம் இழவும் தரும். ஏலாதி 62

பொருள்: கூத்தாடு மிடத்தும், விழாச் செய்யுமிடத்தும், மணஞ் செய்யுமிடத்தும், ஆர்த்த போர்க்களத்தும், பகைவரிடத்தும், இதுபோலும் வேறிடத்தும் ஒழுக்க முடையவர் செல்லார். செல்வராயின் உயிர்க்கிடையூறும் பொருளிழவுந் தரும்.

கருத்து: கூத்தாடுமிடம் முதலியவற்றிற்குச் செல்லுதல் கீழ்மைத் தன்மையையும் பொருளழிவையும் உண்டாகும்.

இஸ்லாம் 

அல்லாஹ் தந்த உறுப்புகளில் முக்கியானவைகள்தான் செவிப்புலனும் பார்வைப்புலனுமாகும். இந்த இரண்டும் மனிதனது உள்ளத்தை தவறான பாதையின் பக்கம் அழைத்துச் செல்பவைகளாக இருந்து கொண்டிருக்கின்றன. அல்லாஹ்வுத்தஆலா அவன் தந்த உறுப்புகளை எப்படி பயன்படுத்தினோம் என்று மறுமையில் விசாரிக்க இருக்கிறான்.

“நிச்சயமாக செவிப்புலன்கள், பார்வைப்புலன்கள் உள்ளங்கள் இவை ஒவ்வொன்றும் அவைகள் பற்றி விசாரிக்கப்பட இருக்கின்றன” (ஸுரதுல் இஸ்ரா:36) என்று அல்லாஹ் கூறியிருக்கிறான்.

இமாம் இப்னுல் கையும் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்

“உடல் உறுப்புகள் ஏழாகும். அவைகளாவன: கண்கள், காதுகள், வாய், மர்ம உறுப்பு, கைகள், கால்களாகும். இந்த உறுப்புகள் வெற்றிக்கும் கைசேதத்துக்கும் மத்தியில் இணைக்கப்பட்டிருக்கின்றன. யார் கவனமில்லாமல் அவைகளை பாதுகாக்கவில்லையோ அவன் கைசேதத்திற்குரியவனாவான். யார் அவைகளை கண்காணித்து பேணி பாதுகாத்து வருகிறாரோ அவர் வெற்றி பெற்றவராவார். அந்த உறுப்புகளை பாதுகாப்பது நலவுகளின் அஸ்திவாரமாகும். அவைகளை பாதுகாக்காமல் புறக்கணிப்பது எல்லா தீங்குகளுக்குறிய அஸ்திவாரமாகும். அல்லாஹ் கூறுகிறான்

விசுவாசிகள் தங்களது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் மர்ம உறுப்புகளை பாதுகாக்குமாறும் (நபியே) நீர் கூறுவீராக…. (ஸூரதுன் நூர்30)”

(இஹாததுன் லிஹான்:1/80)

மேற்கண்ட அல்குர்ஆன் வசனத்தில் சொல்லப்படுகின்ற பார்வையை தாழ்த்துதல், மர்ம உறுப்பைப் பாதுகாத்தல் என்ற விடயங்களை ஒன்று சேர்த்து பார்க்கின்ற போது பார்வையை தாழ்த்துவதானது மர்ம உறுப்பை பாதுகாப்பதற்குரிய காரணியாக இருந்து கொண்டிருக்கின்றது. பார்வையை தவறான பாதையில் செலுத்துவது மானக்கேடான காரியங்கள் இடம்பெறுவதற்குரிய காரணியாக அமையும் என்ற செய்தியை சுட்டிக் காட்டியிருக்கிறது.

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

கண்ணுடைய விபச்சாரம் தவறான விடயங்களை பார்ப்பதாகும். நாவினுடைய விபச்சாரம் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதாகும். கையினுடைய விபச்சாரம் மோசமானவைகளை தொடுவதாகும். காலினுடைய விபச்சாரம் மோசமானவைகளின் பக்கம் நடந்து செல்வதாகும். உள்ளம் ஆசை கொள்கின்றது. மர்ம உறுப்பு அதனை உண்மையாகவும் பொய்யாகவும் ஆக்குகின்றது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புஹாரி:2643, முஸ்லிம்:2657)

இமாம் அல் அமீன் அஷ்ஷின்கீதீ ரஹிமகுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்

“இந்த ஹதீஸில் சொல்லப்படுகின்ற “கண்ணுடைய விபச்சாரம் தவறான விடயங்களை பார்ப்பதாகும்” என்ற செய்தியில் வருகின்ற கண்ணுடைய விபச்சாரம் என்பது ஹலாலாக்கப்படாதவைகளை பார்ப்பைக் குறித்து நிற்கின்றது. எனவேதான் இப்படிப்பட்டவைகளை பார்ப்பது ஹராம் என்பதற்கும் இவைகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்குரிய தெளிவான ஆதாரமாக இது இருந்து கொண்டிருக்கின்றது. இந்த நபிமொழிகள் இது போன்ற அதிகமான தகவல்களை தருகின்றன.

(மோசமான) பார்வைகள் விபச்சாரத்திற்குரிய காரணம்தான் என்பது அறியப்பட்ட விடயமாகும். உதாரணத்திற்கு பார்வைகளில் அதிகமானவைகள் அழகான பெண்ணின் பால் செல்கின்றன. அதன் காரணமாக சிலவேளைகளில் அந்தப் பெண்ணை நேசிப்பது அவனுடைய உள்ளத்தில் உருவாகி அது அவனை அழிவின் பக்கம் செல்வதற்கும் காரணமாக அமைகிறது. – அல்லாஹ் எங்களைப் பாதுகாப்பானாக- எனவேதான் (தவறான) பார்வைகள் விபச்சாரத்திற்குரிய ஊடகங்களாகும். (அழ்வாஉல் பயான் 5/510)

எனவேதான் இப்படியான ஒவ்வொரு செய்திகளையும் நுணுக்கமாக வசிக்கின்ற போது மனிதனை தவறான நடத்தைகளுக்கு அழைத்து செல்பவைகளாக கண்களும் காதுகளும் காணப்படுகின்றன. அவைகளைக் கொண்டு மனிதன் தவறான ஆபாசமான விடயங்களைப் பார்ப்பதானது, கேட்பதானது மனிதனை பாவத்தின் பால் அழைத்து செல்கின்றன.

அந்தடிப்படையில்தான் இன்றைய முஸ்லிம்கள் எந்தவொரு வயது வித்தியாசமுமின்றி திரைப்படங்கள் சினிமாக்களுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். சினிமாக்கள் ஆபாசம் நிறைந்ததாகவும், பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் நடிப்பததனாலும் மனித உள்ளங்களில் ஒரு விதமான தவறான எண்ணங்களை அது தோற்றுவிக்கின்றன.   

ஆகவேதான் முஃமினான ஆண்களையும் பெண்களையும் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு அல்லாஹ் கூறி இருப்பதனால் சினிமாக்கள் பார்ப்பது முஃமின்கள் மீது ஹராமான ஒன்றாக காணப்படுகின்றது.

திரைப்படத்தின் அடிப்படையான இசை-யும் தடைசெய்யப் பட்ட ஒன்று. மேலும், திரைப்படம் முழுவதும் குழப்பம் ஏற்படுத்தும் கருத்துகளையும் நடைமுறைகளையும் கொண்டதாகவும், புறம் மற்றும் அவதூறு பேசுவனவாகவும், உள்ளது. சுருக்கமாக, மறை நூல்கள் கூறும் தீய செயல்களை பட்டியலிட்டால் அவற்றில் பெரும்பாலானவை அதில் இடம் பெற்று இருக்கும். தீய செயல்களை மக்கள் மத்தியில் பரப்பும் ஊடகமே சினிமா.

எப்படி உணவு விடயத்தில், வியாபார நேரத்தில் ஹராத்தை தவிர்ந்து கொள்கிறோமோ அதே போன்று இந்த விடயத்தை விட்டும் தவிர்ந்து கொள்ள அல்லாஹ் அருள்புரிவானாக.மேலும் 


கிறிஸ்தவம்

 
வீணான காரியங்களைப் பார்க்காதபடி என் கண்களைத் திருப்புங்கள்” — (சங்கீதம் 119:37)

 

யூதர்களின் சதி  




கே.ஜி.எப் திரைப்படம் இந்திய சினிமாவிற்கு சொல்லும் செய்தி என்ன?

திரைப்படத்தில் கெட்ட குணமுடைய, செயலுடைய ஒருவரை மக்கள் திட்டி தீர்த்த ஒரு காலமுண்டு.

பணத்துக்காக ஒருவன் ஒரு கொலையோ திருட்டோ செய்தால் அந்த கதாபாத்திரம் இழிவாக பார்க்கப் பட்டது.

ராதா ரவி ஒரு நேர்காணலில் சொன்னார் "மக்கள் காரி துப்பனும், அப்பத்தான் நான் என் வில்லன் பாத்திரத்தை சரியாக செய்ததாக நான் நம்புவேன்" என்றார். ஏனென்றால் பொது மக்களின் மன நிலை அப்படி இருந்தது. சாதாரணமான மக்களில் பெரும்பாலானோர் கெட்டதை வெறுத்தார்கள், அதை அவமானமாக கருதினார்கள்.

KGF-இன் வெற்றி மட்டுமல்ல இது போன்ற ஒவ்வொரு படத்தின் வெற்றியும் மக்களின் மனநிலையை பிரதி பலிக்கிறது. அதன் காட்சி அமைப்பு, பிரமாண்டம் மட்டும் வெற்றிக்கான காரணமல்ல, அதன் என்ன ஓட்டமும் மிகப் பிரதானமானது. கொலையும் கொள்ளையும் தற்ப்பெருமையும் குடியும் கூத்தும் தானே இந்த திரைப்படத்தில் பிரதான இடத்தை பிடித்து இருந்தது. மக்களின் மனநிலையை யூகித்து படங்கள் எடுக்கப்படுகின்றன, சரியான யூகங்கள் வெற்றி பெறுகின்றன. பலப்படங்கள் மக்களை வழிநடத்த எடுக்கப் படுகின்றன, சில சரியான வழிகளில், பல தவறான வழிகளில்.

இது ஒரு cyclic effect - மக்களால் திரைப்படமும், திரைப்படத்தால் மக்களும் மோசமாகி கொண்டே போகிறனர். பகவாதர் தூரத்தில் இருந்து "மேயாத மான்" என்று பாடியதில் துவங்கி இன்று எப்படிப்பட்ட வக்கிரத்தில் வந்து நிற்கிறது என்பதை நாம் அறிவோம். நாளை எங்கே செல்லும் என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை. இது போல ஒவ்வொரு ஒழுக்கநெறியையும் அறநெறியையும் உடைத்துக்கொண்டே வருகின்றன திரைப்படங்களும் அது போன்றவைகளும்.

மக்களின் மனங்களில் ஏற்படும் தவறுகளை போக்க நெறிநூல்கள் முயல்கிறது, மக்களின் தவறான மனஓட்டத்தை ஊக்குவிக்கிறது திரைப்படங்கள். நல்லதை சொல்லும் திரைப்படங்கள் வெறும் 1% தான், அதிலும் 1% தான் வெற்றி பெறுகிறது. எனவே திரைப்படத்தின் தன்மையே இதுதான். இன்னும் சொல்லப்போனால் இன்றைய வியாபாரத்தின் தன்மையே இதுதான். இலாபம் மட்டுமே நோக்கு, நல்லது கெட்டது பற்றி கவலை இல்லை.

உண்மையான இன்பம் இது போன்ற திரைப்படங்களில் அல்லது அது அழைத்துச் செல்லும் அசிங்கங்களில் இல்லை. உண்மையான இன்பம் என்பது

  • சக மனிதனை மதிப்பதில் உள்ளது
  • ஒருவன் ஏமாற்றினாலும் அவனை மன்னிப்பதில் உள்ளது
  • சக மனிதனுக்கு உழைப்பதில் உள்ளது
  • சக மனிதனுக்கு தர்மம் செய்வதில் உள்ளது
  • சக மனிதனுக்கு உதவி செய்வதில் உள்ளது
  • ஒழுக்கமாக வாழ்வதில் உள்ளது
  • நேர்மையாக வாழ்வதில் உள்ளது
  • விட்டுக்கொடுப்பதில் உள்ளது
  • இறை நேசத்துடன் வாழ்வதில் உள்ளது
  • அறநெறிகளுடன் வாழ்வதில் உள்ளது
  • செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் உயர்ந்த கூலி உண்டு என்று அறிவதில் உள்ளது

தனி மனிதனும் சமுதாயமும் தன்னை சீர்படுத்த தவறினால்..! பேரழிவு நிச்சயம்.