நபிமார்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நபிமார்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இந்து மதத்தில் உள்ள நபிமார்கள் யார்?

மிக நல்ல கேள்வி.. இவ்வாறு கேட்டவுடன் மாற்றுமத அன்பர்களுக்கு பிழையான கண்ணோட்டம் உண்டாக வாய்ப்பு உண்டு.

காரணம், இறைவன் ஒரு தேவதூதர் வாயிலாக ஒரு மனிதரை தேர்ந்தெடுத்து அவர் மூலமாக மக்களுக்கு வேதத்தை உபதேசம் செய்யும் முறை சைவ சமண வைணவ சமயங்களில் இருப்பதாக யாரும் கற்பனை கூட பார்த்து இருக்க மாட்டார்கள்.

ஏனென்றால். ஆன்மீக சிந்தனை கொண்ட எம் மக்கள் தனது மொழியில் இறைவன் வேதம் வழங்கி உள்ளதாக கூட அவர்கள் நம்புவதில்லை.

சரி அது இருக்கட்டும், இந்து மதம் என்ன சொல்கிறது என்று எனக்கு தெரியாது ஆனால் தமிழர் சமயமான சைவ சமயத்தின் வேதமான திருமந்திரம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்..!

முதலில் திருமந்திரம் வேதமா? ஆம், திருமூலரின் வாக்கு இந்த பாடல்களில் அவ்வாறுதான் கூறுகிறது.

நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு

புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து

அந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்

சிந்தைசெய் தாகமஞ் செப்பலுற் றேனே. - (திருமந்திரம் 135.)

மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்

நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு

மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்

சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. - (திருமந்திரம் 138.)

ஆப்ரஹாமிய மதங்களைப் போல வேதம் வழங்கப்படும் வழிமுறை உண்டா? திருமந்திர பாடல்கள் இவ்வாறு கூறுகிறது..

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்

என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.

நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்

நந்தி அருளாலே மூலனை நாடினோம்

நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்

நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.

நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்

நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு

நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என

நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

சொற்பொருள்:

நந்தி: தேவர் இனத்தில் மனிதர்களுக்கும் இறைவனுக்கும் இடையில் செய்தி பரிமாறும் செயலை செய்பவர்கள்.

நாதன்: ஆசிரியன், குரு  

குறிப்பு: நந்தி தேவர்கள் நால்வர், ஒவ்வொரு திசைக்கு ஒருவர் பொறுப்பு, நந்தி தேவர் மூலமாக இறைவனை நாடலாம், நந்தி தேவர் திருமூலர் போன்ற தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நாதராக வழிகாட்டியாக இருக்கிறார். திருமூலர் போன்றவர்கள் மக்களுக்கு நாதனாக வழிகாட்டியாக மக்களுக்கு ஆக்கப் படுகிறார்கள்.

எனவே ஆப்ரஹாமிய சமயங்களைப் போலவே தமிழர் சமயங்களும் புனித செய்திகள் கீழ்கண்ட முறையில்தான் வேத உபதேசம் நடைபெற்றது.

கடவுள் >> நந்தி >> முனைவன் >> சீடர்கள் > >  மக்கள்

அதாவது அனைத்தையும் படைத்த இறைவன் ஆசிரியராக இருந்து தேவர்களின் தலைவரான சிவயோக மாமுனியிடம் கூறிய வேதத்தை, மற்ற மூன்று தேவர்களுக்கு (நந்திகளுக்கு) உபதேசித்து, இவர்கள் நால்வரும் அவரவருக்கு உரிய முனைவருக்கு ஆசிரியராக இருந்து வேதத்தை உபதேசிக்கின்றனர். இப்பொழுது வேதம் உபதேசிக்கப்பட்ட முனைவர் ஆசிரியராக இருந்து மக்களுக்கு அந்த வேதத்தை உபதேசிக்கிறார். அவரிடம் வேதத்தை கற்ற சீடர்கள் அதை மக்கள் பலருக்கும் ஆசிரியராக இருந்து உபதேசிப்பதன் மூலம் வேதம் மக்களிடம் பரவுகிறது. இந்த முனைவர்கள் காலத்துக்கு காலம் வேறுபடுகின்றனர், அவர்கள் முன்னே உள்ள வேதத்தில் தீர்க்க தரிசனம் கூறப்பட்டு தான் வருவார். 

மேலும் இவ்வாறுதான் உலக சமயங்களில் செய்தி பரிமாற்றம் நடைபெறுவதாக திருமந்திரம் கூறுகிறது.

எனவே தமிழில் வேதம் கூறிய அனைவரும் நபிமார்களாக இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் வேதம் என்றால் என்ன, அதை எப்படி கண்டறிவது என்ற பதில் நீண்ட ஆய்வு பயணத்துக்கு பிறகுதான் கிடைக்கும்.

அந்த வகையில் கீழ்கண்டவர்கள் தமிழுக்கு வந்த நபிமார்களாக இருக்கலாம்.

    1. அகத்தியர்
    2. தொல்காப்பியர்
    3. திருவள்ளுவர்
    4. அவ்வையார் (இவர் பெண் என்பது கற்பனை)
    5. புறநானூறு எழுதிய 150 ஆசிரியர்கள்
    6. அகநானூறு எழுதியவர்கள்
    7. முனைப்பாடியார்
    8. அருஞ்செக்கலப்பு எழுதியவர்
    9. காயத்தூர் பெய்வாயின் முள்ளியார்
    10. கபில தேவர்
    11. பூதஞ் சேந்தனார்
    12. நாதகுத்தனார்
    13. காரியாசான்
    14. கணி மேதாவியார்
    15. நல்லாதனார்
    16. அப்பர்
    17. சுந்தரர்
    18. ஞானசம்பந்தர்
    19. திருமூலர்
    20. மாணிக்கவாசகர்
    21. சிவவாக்கியர்

போன்றவர்கள் சிலராக இருக்கலாம்.

முகமது நபி ﷺ அவர்களின் மீது கிறிஸ்தவர்கள் கூறும் முக்கிய குற்றச்சாட்டு!

இரண்டு முரணான குற்றச்சாட்டுகளை கிறிஸ்தவர்கள் முகமது நபி அவர்கள் மீது காலம் காலமாக கூறிவருகின்றனர். அவைகளாவன, 

1) தங்களுக்கு என்று எதுவும் சொந்தமாக கொண்டிராமல் பைபிளை காப்பி அடித்து உள்ளார் முகமது

உபாகமத்த்தில் மோசஸ் இவ்வாறு கூறுகிறார்:

“ஆனால் நான் உங்களிடம் சொல்லும்படி சொல்லாத சிலவற்றை ஒரு தீர்க்கதரிசி கூறலாம். அதுமட்டுமின்றி, அந்தத் தீர்க்கதரிசி நான் தேவனுக்காகப் பேசுகிறேன் என்று சொல்லலாம். அப்படி ஏதும் நடந்தால் பின் அந்தத் தீர்க்கதரிசி கொல்லப்பட வேண்டும். - (உபகாமம் 18:20

மோசேவின் போதனைக்கு எதிரான எந்தவொரு போதனையும் முகமது நபி ﷺ அவர்களால் செய்யப் படவில்லை. உதாரணமாக மோசேயின் பத்து கட்டளைகளைக்கு முகமது நபியின் உபதேசங்கள் எங்கும் வேறுபடவில்லை. 

மேலும் மோசே கூறியுள்ளார்: 

கர்த்தருக்காக நான் பேசுகிறேன், என்று கூறும் தீர்க்கதரிசியின் வார்த்தைகள் நடக்காமல் போனால், பின் நீங்கள் கர்த்தர் இவற்றை கூறவில்லையென்று அறிந்து கொள்ளலாம். அந்தத் தீர்க்கதரிசி பேசியது, அவனது சொந்தக் கருத்துக்களே என்று நீங்கள் அறிந்து கொண்டால், நீங்கள் அவனைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை. (உபகாமம் 8:22)

முகமது நபி  கூறிய 1000-க்கும் மேற்பட்ட முன்னறிவிப்புகள் அவர் வாழ்ந்த சமகாலத்திலும் இப்பொழுதும் நடந்துவந்து உள்ளது. அவற்றில் சில,

    • முசுலிம்களின் நம்பிக்கையின் படி குர்ஆனே மிகப்பெரும் அற்புதமாகும். ஏனெனில் மற்ற இறைத்தூதர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் போலல்லாமல் குர்ஆன் முகம்மது நபியின் வாழ்நாளைக் கடந்தும் நிலைபெற்றுள்ளது.
    • முகம்மது நபி நிலவை பிளந்த நிகழ்வு
    • இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்
    • அலி இபின் சகல் ரப்பான் அல் தபரி அவர்கள் கூற்றுப் படி முகம்மது நபி தனது எதிரிகள் அனைவரையும் வென்றது அற்புதங்களில் ஒன்றாகும். இதைப் போன்ற பல நவீன முசுலிம் வரலாற்றாசிரியர்கள், முகம்மது நபி குறுகிய காலத்தில் மதம், சமூகம், அரசியல், இராணுவம் மற்றும் இலக்கியம் போன்ற பல்வேறு உலகியல் துறைகளில் மாற்றங்களை நிகழ்த்தியதும், "நாடோடி குழுக்களாகவும் கல்வியறிவற்றவர்களாவும் இருந்த அரேபியர்களை உலகை வென்றவர்களாக மாற்றியதும் அற்புதமாகக் கருதப்படுகின்றது.
    • பல சந்தர்ப்பங்களில் இறைவன் அருளால் உணவு மற்றும் தண்ணீர் வழங்கியது.
    • அழுத ஈச்ச மரம் முகம்மது நபி(ஸல்) உரை நிகழ்த்தும் போது அதன் மீது சாய்ந்ததால் ஆறுதல் அடைந்தது.
    • அவரது கட்டளையை ஏற்று இரண்டு மரங்கள் நகர்ந்தது.
    • அவரது முன்னறிவுப்புகள்: எய்ட்ஸ், ஹெட் போன், பூகம்பங்கள், ஜெருசலேம் வெற்றிகொள்ளப் படும், அரபு தேசம் உயரமான கட்டிடங்களை போட்டிப் போட்டு கட்டும்.  
    • மக்காவிலிருந்து மதீனா சென்ற ஹிஜ்ரா பயணம் செய்தது.
    • முகம்மது நபி தபுக் யுத்தத்தின் ஆயிரக்கணக்கான வீரர்களின் தாகம் தணிக்கவும் உளூச் செய்யவும் நீர் சுரக்கச் செய்த நிகழ்வு.
    • முகம்மது நபி ஹுதைபியா உடன்படிக்கை போது மக்களின் தாகம் தணிக்கவும் உளூச் செய்யவும் வறண்ட கிணற்றை ஊற்றெடுக்கச் செய்தது.
    • பத்ர் யுத்தம் போது அவர் கையினால் எறிந்த தூசியினால் சில எதிரிகளைக் குருடாக்கினார். இந்நிகழ்வு குர்ஆனில் சூரா அல்-அன்ஃபால், வசனம் 17 (8:17) இல் கூறப்பட்டுள்ளது.
    • முகம்மது நபியின் தோழர் உஸ்மானுக்கு பிற்காலத்தில் பேராபத்து ஏற்படும் எனக் கூறினார். அதே போல் உஸ்மான் அவர்கள் கலிபா பதவி ஏற்றபின் அவருக்கு பேராபத்து ஏற்பட்டது.
    • முகம்மது நபியின் தோழர் அம்மார் இப்னு யாசிர் பிற்காலத்தில் நீதியில்லா குழுவால் கொல்லப்பட நேரும் எனக் கூறினார். அதே போல் அம்மார் இப்னு யாசிர் பிற்காலத்தில் கொல்லப்பட்டார்.
    • முகம்மது நபி, பிற்காலத்தில் இறைவன் அவரது பேரன் ஹசன் மூலம் இரண்டு பெரிய முஸ்லீம் குழுக்கள் இடையே சமாதானம் ஏற்படச் செய்வார் என முன்னறிவிப்புக் கூறினார். பிற்காலத்தில் ஹசன்-முஆவியா குழுக்களுக்கிடையே ஒப்பந்தம் நடைபெற்றது.
    • அவர் முஸ்லிம்களின் எதிரிகளின் பிரபலமான ஒருவரை கொல்வேன் என்று கூறினார். அதே போல் உஹது போரில் உபை இப்னு கலப் கொல்லப்பட்டார்.
    • பத்ரு போர் ஆரம்பிக்கும் முன்பே எதிரிப்படையின் தலைவன் எவ்விடத்தில் கொல்லப்படுவான் என சுட்டிக்காட்டினார். அதேபோல அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் எதிரிப்படையின் தலைவர் கொல்லப்பட்டார்.
    • அரேபிய பாலைவனத்தில் வாழ்ந்த அவர் பிற்காலத்தில் தமது நாட்டில் கடல் பகுதியும் இருக்கும் எனக்கூறினார். அதே போல் கலிபாக்கள் ஆட்சியில் நாட்டின் எல்லைகள் விரிந்து கடல் பகுதியும் நாட்டின் எல்லையில் வந்தது.
    • அவர் தமது மனைவிகளிடம் தாம் இறந்த பிறகு மனைவிகளில் அதிகத் தொண்டு செய்யும் ஒருவரே விரைவில் இறப்பார் எனக்கூறினார். அதே போல் அவர் இறந்த பிறகு அதிக தொண்டுள்ளம் கொண்ட அவரது மனைவியான ஜைனப் இறந்தார்.
    • அப்துல்லா இப்னு மஸ்ஊத் அவர்களின் பால் வற்றிய ஆடு முகம்மது நபி நிகழ்த்திய அற்புதத்தால் அதிகமாக பால் கொடுத்தது.
    • கைபர் போரில் நோயுற்ற அலீயின் கண்ணைக் குணப்படுத்தினார்.
    • வறண்டு கிடந்த மதீனா நகரில் மழை பொழிய காரணமாக இருந்தார்.
    • அவரது விரல்களுக்கு இடையே இருந்து தண்ணீர் வரச் செய்தது அற்புதமாகக் கருதப்படுகிறது.
    • முகம்மது நபி தபுக் போரில் கையளவு பேரித்தம் பழங்கள் மூலம் பல வீரர்களின் பசியைத் தணிக்க வைத்தார்.
    • முகம்மது நபி அவர்கள் தான் இறந்த பிறகு எனது குடும்ப உறவினர்களில் தனது மகள் பாத்திமா தான் முதலில் இறப்பார் எனக்கூறினார். அதே போல் முகம்மது நபி இறந்த பிறகு அவரது மகள் பாத்திமா தான் முதலில் இறந்தார்.
    • ஹுனைன் போரில் அயத் பின் அம்ரு என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது முகம்மது நபி அவர்கள் தன் கையால் இரத்தத்தைத் துடைத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்ய அவர் காயம் ஆறி நெற்றி பளபளப்பாக மாறியது.
மேலும் முன்னறிவிப்பு தொடர்பான தகவலுக்கு  

இயேசு கூறினார்:  “நான் உங்களோடு இருக்கையில் இவற்றை எல்லாம் உங்களுக்குச் சொல்லிவிட்டேன். ஆனால் உதவியாளர் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதிப்பார். நான் உங்களுக்குச் சொன்னவற்றையெல்லாம் உங்களுக்கு அவர் நினைவுபடுத்துவார்அவரே பரிசுத்த ஆவியானவர். பிதா எனது நாமத்தினால் அவரை அனுப்புவார். (யோவான் 14:15-16) 
 
எனவே பைபிளை முகமது காப்பி அடித்தார் என்று சுருக்குவது பிழை. மோசேயின் மற்றும் இயேசுவின் போதனைகளை கூறவே அவர் வந்துள்ளார் என்கிற பொழுது அவைகள் ஒன்றுபோல அல்லாமல் வேறெப்படி இருக்கும்?  
 

 2) இன்றைய தோராவுக்கும், பைபிளுக்கும் எதிராக முகமது நபி சில செய்திகளை கூறுவதால் அவர் பொய் தீர்க்க தரிசி ஆவார். 

“ஆனாலும், நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன்; நான் போவது உங்களுக்கு உகந்தது, ஏனென்றால் நான் போகவில்லை என்றால் தேற்றரவாளன் உங்களிடம் வரமாட்டார். ஆனால் நான் புறப்பட்டால், நான் அவரை உங்களிடம் அனுப்புவேன். (யோவான் 16:7)

12 “உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஆனால் இப்பொழுது நீங்கள் தாங்கிக்கொள்ள முடியாதபடி அந்தச் செய்திகள் அதிகப்படியானவை. 13 ஆனால் உண்மையின் ஆவியானவர் வரும்போது அனைத்து உண்மைகளிலும் உங்களை வழிநடத்திச் செல்வார். ஆவியானவர் அவரது சொந்த வார்த்தைகளைக் கூறுவதில்லை. அவர் என்ன கேட்டிருக்கிறாரோ அவற்றையே பேசுவார். 14 நடக்கப்போகிறவற்றைப்பற்றி மட்டுமே அவர் பேசுவார். உண்மையின் ஆவியானவர் எனக்கு மகிமையைக் கொண்டுவருவார். எப்படி என்றால் அவர் என்னிடம் கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார். 15 பிதாவினுடையவைகள் எல்லாம் என்னுடையவைகள். அதனால்தான் ஆவியானர் என்னிடமிருந்து கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார் என்றேன்.” (யோவான் 16:12-15)

இயேசுவுக்கு பிறகு அவர் வருவார் என்பதும், இயேசு கூறிய செய்திகள் அனைத்தையும் மேலும் அதோடு சேர்த்து மேலதிகமான செய்திகளையும் அவர் மக்களுக்கு வழங்குவார் என்பதும் மேலும் அவர் அவைகளை தனது சொந்த விருப்பப்படி அல்லாமல் கர்த்தரின் விருப்பப்படியே சொல்லுவார் என்பது இவ்வசனத்தின் மூலம் அறியப்படுகிறது. 

எனவே கிறிஸ்தவர்களின் இந்த முரண்பாடான குற்றச்சாட்டுகளை அவர்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.  

தீர்க்கதரிசிகள்

தீர்க்கதரிசிகள் என்போர் வெவ்வேறு பண்பாடுகளில் வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடப் படுகிறார்கள். அவர்களை அடையாளம் காண அவர்களின் வரையறை என்ன என்று அறிவது அவசியம். தூதர்கள் என்ற வார்த்தை நமக்கு ஆபிரகாமிய மதங்களிலிருந்து பரிட்ச்சயமானது. எனவே அதற்கான வரையறையை தேடும் பணியை அங்கிருந்து துவங்குவோம்.

ஆப்ரகாமிய மதங்கள் 

கிறிஸ்தவம் & யூத மதம்: Mesaya, Envoy, Christ, Prophet, Messenger  

தேவதூதர்கள் தீர்க்கதரிசிகளுக்கு கர்த்தரின் வேதத்தை போதிப்பார்கள்   

இது இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தின விசேஷம். விரைவில் நடைபெறப் போகிறவை எவையென்று தன் ஊழியர்களுக்குத் தெரிவிக்கும்பொருட்டு இயேசுவுக்கு தேவன் இதை வழங்கினார்...(வெளி 1:1) பிறகு, இன்னொரு தேவதூதன் உயரே காற்றில் பறந்து வருவதை நான் பார்த்தேன். பூமியிலே வாழ்கிற ஒவ்வொரு குல, தேச, மொழி, இனத்தவருக்கும் அறிவிக்கும்படியான நித்திய நற்செய்தியை அத்தூதன் வைத்திருந்தான். (வெளி 14:6) (இது இறுதி வேதம் குர்ஆனை குறிக்கிறது) 

சகரியாவிடம் தூதன் அவனுக்குப் பதிலாக, “நான் காபிரியேல். தேவனுக்கு முன்பாக நிற்பவன். உன்னிடம் பேசவும், இந்த நல்ல செய்தியை உன்னிடம் எடுத்துரைக்கவும் தேவன் என்னை அனுப்பினார். (லூக்கா 1:19)

காபிரியேல், “இப்பொழுது, நான் தரிசனம் பற்றி விளக்குவேன். வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பதை நான் சொல்வேன். உனது தரிசனம் காலத்தின் முடிவைப்பற்றியது. (தானியேல் 8:19)

தீர்க்கதரிசிகள் கர்த்தரின் வேதத்தை மக்களுக்கு போதிக்கும் வேலைக்காரர்கள்
 
மேலும் அவர் கூறினார்: இப்போது என் வார்த்தைகளைக் கேளுங்கள்: உங்களில் ஒரு தீர்க்கதரிசி இருந்தால், கர்த்தராகிய நான் அவருக்கு ஒரு மாராவில் (தரிசனத்தில்) என்னை வெளிப்படுத்துவேன், மேலும் அவருடன் ஒரு சத்தத்தில் பேசுவேன். (எண்ணாகமம் 12:6) 
 
தீர்க்கதரிசிகள் எனது வேலைக்காரர்கள். நான் எனது வார்த்தைகளையும், சட்டங்களையும், போதனைகளையும் அவர்களைப் பயன்படுத்தி உன் முற்பிதாக்களுக்குச் சொன்னேன்... (சகரியா 1:6)  

இயேசு கூறினார் "நான் உங்களுக்கு செய்கிற உபதேசம் எனக்குச் சொந்தமானவை அல்ல. அவை என்னை அனுப்பினவரிடமிருந்து எனக்கு வந்தவை. (யோவான் 7:16)

தீர்க்கதரிசிகள் பின்வருவனவற்றை முன்னறிவிப்பு செய்வர்  

எனது கர்த்தராகிய ஆண்டவர் சிலவற்றைச் செய்ய முடிவுசெய்வார். ஆனால் அவர் எதையும் செய்யும் முன்னால் அவர் தனது தீர்க்கதரிசிகளிடம் சொல்வார். ஒரு சிங்கம் கெர்ச்சித்தால் ஜனங்கள் பயப்படுவார்கள். கர்த்தர் பேசினால் தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள். - (ஆமோஸ் 3:7-8) 

உங்களுக்கும் எனக்கும் முந்திய தீர்க்கதரிசிகள் பண்டைய காலங்களிலிருந்து பல நாடுகளுக்கும் பெரிய ராஜ்யங்களுக்கும் எதிராக போர், பஞ்சம் மற்றும் கொள்ளைநோய் போன்றவற்றை முன்னறிவித்தனர். சமாதானத்தை தீர்க்கதரிசனம் சொல்லும் தீர்க்கதரிசியைப் பொறுத்தவரை, அந்த தீர்க்கதரிசியின் வார்த்தை நிறைவேறும்போது, ​​கர்த்தர் உண்மையிலேயே தீர்க்கதரிசியை அனுப்பினார் என்பது தெரியவரும் (எரேமியா 28:8-9)

கர்த்தரின் அனுமதியோடு தீர்க்கதரிசிகள் அதிசயங்கள் செய்து காட்டுவர்  

தீர்க்கதரிசிகள், “ஐயம்கொள்ளும் மக்களே, கவனியுங்கள். நீங்கள் வியப்புறக்கூடும், ஆனால் மரித்து அழிவீர்கள். ஏனெனில் உங்கள் காலத்தில் நீங்கள் நம்பாத சிலவற்றை நான் செய்வேன். சிலர் உங்களுக்கு விளக்கிச் சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டீர்கள்" என்றனர். (அப்போஸ்தலர் 13:41

தீர்க்கதரிசிகளின் மரபு

இயேசு கிறிஸ்துவின் குடும்ப வரலாறு பின்வருமாறு: தாவீதின் வழி வந்த வர் இயேசு. தாவீது ஆபிரகாமின் குடும்பத்தைச் சேர்ந்தவர். (மத்தேயு 1:1)

மோசேயின் சட்டங்களையோ அல்லது தீர்க்கதரிசிகளின் போதனைகளையோ அழிப்பதற்காக நான் வந்துள்ளதாக நினைக்காதீர்கள். அவர்களது போதனைகளை அழிப்பதற்காக நான் வரவில்லை. அவர்களின் போதனைகளின் முழுப் பொருளையும் நிறைவேற்றவே வந்துள்ளேன். (மத்தேயு 5:17)

இஸ்லாம்: நபி, ரசூல், இறைதூதர், முத்திரை நபி, 

ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள். (குர்ஆன் 7:35) 

"ஓவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம், (அத்தூதர் அச்சமூகத்தவரிடம், ஏக இறைவனாகிய) அல்லாஹ்வையே வணங்குங்கள், (படைத்து பாதுகாத்து உணவளிக்கும்ஏக இறைவனை தவிர மற்ற வாங்கப் படும்) தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் (என்று கூறினார்கள்.) ஆகவே, அவர்களில் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியவர்களும் இருக்கிறார்கள், இன்னும் எவர்மீது வழிகேடு விதியாகிவிட்டதோ அவரும் அவர்களில் இருக்கிறார்கள், ஆகவே நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து பொய்யாக்கியவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள்." (குர்ஆன் 16:36) 

அல்லாஹ்வின் தூதரே! நபிமார்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி) (நூல் : அஹ்மத், தப்ரானி)

முதல் நபி  யார்? ஆதம் (அலை) அவர்கள் முதல் மனிதரும் நபியும் ஆவார்கள்.

முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனில் இருபத்தைந்து நபிமார்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

  1. ஆதம் (அலை)
  2. இத்ரீஸ் (அலை)
  3. நூஹ் (அலை)
  4. ஹுது (அலை)
  5. சாலீஹ் (அலை)
  6. இப்ராகிம் (அலை)
  7. இஸ்மாயீல் (அலை)
  8. இஸ்ஹாக் (அலை)
  9. லூத் (அலை)
  10. யாகூபு (அலை)
  11. யூசுப் (அலை)
  12. சுஹைபு (அலை)
  13. அய்யூப் (அலை)
  14. மூசா (அலை)
  15. ஹாரூன் (அலை)
  16. துல்கிப்ல் (அலை)
  17. தாவூது (அலை)
  18. சுலைமான் (அலை)
  19. இலியாஸ் (அலை)
  20. யஹ்யா (அலை)
  21. யூனுஸ் (அலை)
  22. ஜக்கரியா (அலை)
  23. அல் யசஉ (அலை)
  24. ஈசா (அலை)
  25. முஹம்மத் (ஸல்)

இதில், உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக அனுப்பபட்ட முதல் நபி நூஹ்(அலை) அவர்கள் ஆவார்கள். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.

மறுமையில் மக்கள் நூஹ் (அலை) அவர்கள் வந்து உலக மக்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களில் நீங்கள்தான் முதலாமவர் என்று கூறுவார்கள். அறிவிப்பவர் :  அபூஹுரைரா(ர­) (நூல் : புகாரீ 3340)

இறுதித்தூதர்  யார் ? அதற்குரிய ஆதாரம் என்ன?

இறைத்தூதர்களில் இறுதியானவர் நபி முஹம்மது (ஸல்) ஆவார்கள். இறுதி நாள் வரை தோன்றுகின்ற மனித சமுதாயம் முழுமைக்கும் இவர்கள்தான் கடைசி நபியாவார்கள். இவர்களுக்குப் பின்னர் எந்த இறைத்தூதரும் வரமாட்டார்கள். நபித்துவம் இவர்களோடு நிறைவு பெற்றுவிட்டது. 

முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். (குர்ஆன் 33:40)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமூதாயத்தாருக்கு மட்டுமே தூதராக (நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார்கள். (ஆனால்,) நானோ ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் இறைத்தூதராக (நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டுள்ளேன். அறிவிப்பவர்: ஜாபிர் (ர­) (நூல்:புகாரி 438) 

தேவதூதர்களின் தலைவர் ஜிபிரியேல் முகமது நபிக்கு அல்லாஹ்வின் வேதத்தை போதித்தார்

(நபியே!) “ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரீல்) இதை இறக்கி வைத்தார்” என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக. (16:102)

 மேலும், நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது. ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரீல்) இதைக் கொண்டு இறங்கினார். (நபியே!) அச்சமூட்டி எச்சரிப்பவராக நீர் இருப்பதற்காக (இதை) உம் இதயத்தின் மீது (இவ்வேதத்தை இறக்கினார்) தெளிவான அரபி மொழியில். நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் (அறிவிக்கப்பட்டு) இருக்கிறது. (26:192-96)

(இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள். (2:285)

(மறுமை நாளில் இறைவன் ஜின்களையும் மனிதர்களையும் நோக்கி) “ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை (அறிவித்து) ஓதிக்காட்டவும், இந்த நாளில் (ஏற்படப்போகும்) சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா?” (என்று கேட்பான்), அதற்கு அவர்கள், “நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சி கூறுகிறோம்” என்று கூறுவார்கள்; இதற்குக்காரணம் உலக வாழ்க்கை அவர்களை மயக்கிவிட்டது - அவர்கள் காஃபிர்களாக இருந்ததாக அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள். (6:130)

(நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம் - இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? மறுமை வீடுதான் பயபக்தியுடையவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா? (12:109) 

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். (அல்குர்ஆன் 16:43) 

(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி) “நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்” (என்று கூறுவீராக). (16:43)

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்க வில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மை களை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 7:188) 

எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது (அல்குர்ஆன் 13:38) 

”அவனது தூதர்களில் எவருக்கிடை யேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம்; ( என முஃமின்கள் கூறுவார்கள்.) (குர்ஆன் 2:285) 

“(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னர் தூதுவர்கள் பலரை அனுப்பியிருக்கின்றோம். அவர்களில் சிலருடைய சரித்திரத்தைத்தான் நாம் உமக்குக் கூறியிருக்கின்றோம். அவர்களில் பலருடைய சரித்திரத்தை நாம் உமக்குக் கூறவில்லை” (அல்குர்ஆன்: 40:78)

யாருக்கு (நம்) தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களைத் திடனாக விசாரணை செய்வோம். இன்னும் (நம்) தூதர்களையும் திடனாக விசாரிப்போம். (7:6) 

முகமது நபி எந்த பாரம்பரியத்தை சார்ந்தவர்? 

வாத்திலா இப்னு அல்-அஸ்கா அறிவித்தார்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் கேள்விப்பட்டேன், "நிச்சயமாக, அல்லாஹ் இஸ்மாயீலின் மகன்களிடமிருந்து கினானாவைத் தேர்ந்தெடுத்தான், மேலும் அவர் கினானாவிலிருந்து குரைஷிகளைத் தேர்ந்தெடுத்தார், அவர் தேர்ந்தெடுத்தார். குரைஷிகளில் இருந்து ஹாஷிம் கோத்திரம், அவர் ஹாஷிம் கோத்திரத்திலிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தார்." (முஸ்லிம் 2276)

                 

தமிழர் சமயம்: சித்தர், குரு, ஆசிரியர், நாதன், முனைவன், முனிவன், தலைவன்

ஆபிரகாமிய மதங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், இறைவன் மனிதர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்க்கதரிசிகளிடம் தேவர்களை தூதர்களாகவும் ஆசிரியர்களாகவும்  அனுப்புகிறான். தூதர்கள் என்ற பதத்தை தமிழ் வேதங்கள் பயன்படுத்தியது குறைவே. ஆனால் தூதர்கள் என்று ஆபிரகாமிய மதங்கள் யாரை குறிப்பிட்டதோ, தூதர்கள் என்பவர்களுக்கு ஆபிரகாமிய  மதங்கள் என்ன வரையறையை தருகிறதோ அந்த அமைப்பில் உள்ளதா என்று ஆய்வு செய்வோம்.

நந்தி தேவர் மூலம் சிவனின் வேதம் நாதர்களுக்கு வழங்கப் பட்டது.

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே. (திருமந்திரம் பாயிரம் பாடல் 6)

பதவுரை: நாதர் - ஆசிரியர்; 

பொழிப்புரை: நந்தியின் உதவி பெற்ற ஆசிரியர் யார் என்று அறிய விரும்பினால், நந்திகள் நான்கு பேர் : 1) சிவயோக மாமுனி, 2) பதஞ்சலி, 3) வியாக்கிரமர்என்றும் என்னொடுகூட இருப்பவர் 4) எண்மர் என்பவர்களாம். (இதில் சிவயோக மாமுனி என்பவர் ஜிப்ரயிலாக இருக்கலாம்)

குறிப்புரை: நந்தியின் உதவி பெற்ற ஆசியரைத்தான் நாம் தேடவேண்டும், நந்தியின் உதவி இல்லாமல் ஒருவர் ஓர் வேதத்தையோ, சமயத்தையோ கொண்டுவந்தால் அது இறைவனிடம் வந்ததல்ல என்று குறிப்புணர்த்துவதோடு, அந்த நதிகள் யார் என்ற என்ற விளக்கத்தையும் இந்த பாடல்கள் தருகிறது. 

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றேன்
நந்தி அருளாலே மூலனை நாடினேன்
நந்தி அருளாவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நான் இருந்தேனே. (பாடல் எண் : 7)

பதவுரை: என் - எட்டு;  
 
பொழிப்புரை: நந்தியால் அருளால் நான், ஆசிரியன் எனப் பெயர் பெற்றேன். நந்தியின் உதவியால் மூலோனாகிய சிவபெருமானை நாடினேன். எட்டு சமயங்கள் செய்யும் நாட்டினில் நந்தி காட்டும் வழியில் நான் இருந்தேன். 

நால்வரும் நாலு திசைக்கொன்றும் நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதரா னார்களே. (பாடல் 9)

பதவுரை: நானாபலவகைப்பட்ட; 

பொழிப்புரை: நான்கு நந்திகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கும் (நான்கு மரபுகளுக்கு) ஒரு ஆசிரியராக உள்ளனர். நந்திகள் எனப்பட்ட நால்வரும் பலவகை பொருள்களை (Subject) கைக்கொண்டு  எல்லா உலகங்கட்கும் பொருந்திய ஆசிரியர்களாய், நான் பெற்ற பேற்றினை உலகம் பெறுக என்று நான்கு நந்தி தேவர்களும் ஆசிரியர்கள் ஆனார்கள்.

நந்திகள் நால்வருக்கும் வேதத்தை மொழிந்தவன் சிவன் ஆவான்  

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே. (பாடல் 10)

பொழிப்புரை : மூன்று படைப்புகளாகிய தேவர், அசுரர், இயக்கருக்கும், நான்கு நந்திகளுக்கும் மொழிந்தவன் ஈசன் ஆவான். 

நந்தி இணையடி நான் தலை மேற்கொண்டு
புத்தியினுள்ளே புகப் பெய்து போற்றி செய்
நந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்
சிந்தை செய்து  ஆகமம் செப்பலுற்றேனே. (பாடல் எண் : 12)

பொழிப்புரை: ஆசிரியராகிய நந்தி தேவதூதருக்கு அடிபணிந்து இணைந்து என் தலையில் ஏற்றி, சிந்தையிலும் கொண்டு, வாயினாலும் துதித்து, அவ்வாற்றானே சிவபெருமானது திருவருட் பெருமையை இடைவிடாது சிந்தித்து உணர்ந்து, அங்ஙனம் உணர்ந்தவற்றால், நந்தியினால் சிவாகமம் போதிக்கப்பட்டேன்.   
 
தூதர்களின் மரபு 
 
மரபுநிலை திரியா மாட்சிய ஆகி,
உரை படு நூல் தாம் இரு வகை இயல
முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639)

பொருள்: மரபு நிலை திரிதல் என்றால், உரைக்கும் ஆசிரியர் அவர் மரபில் உரைக்கப்பட்ட நூலில் முன் அறிவிக்கப்பட்டவராகவும், அவர் உரைக்கும் நூலில் தனது மரபை கூறக்கூடியவராகவும் இருப்பர். அவ்வாறு உரைக்கும் நூலில் அவருக்கு முந்தியது முதல் நூல் என்றும், அவரு கூறுவது வழிநூல் என்றும் ஆகும்.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. - (குறள் 681)
 
பதவுரை: அன்புடைமை - பிறர் மீது அன்பு கொள்ளுதல்; ஆன்றகுடி - மாட்சிமை, மேன்மை, உயர்வு, மகிமை பெற்ற குடியில் ; பிறத்தல்-பிறத்தல்; வேந்த - இறைவனால்; அவாம் - விரும்பப்படும்; பண்புடைமை - குணம் உடைமை; தூது - தூது; உரைப்பான் - சொல்லுபவன்; பண்பு - இலக்கணம். 

பொருளுரை: பிறர்மீது அன்புடையவனாக இருத்தல், மேன்மை பொருந்திய குடியில் பிறத்தல், இறைவனால் விரும்பப்படும் குணம் உடைமை தூது சொல்லுபவன் இலக்கணம் ஆகும்.  

குறிப்புரை: இது அரசனிடமிருந்து இன்னொரு அரசனுக்கு செல்லும் தூதனைக் குறிக்காது. ஏனென்றால் முதலில், எல்லா அரசனும் ஆன்ற குடியில் பிறப்பதில்லை, ஆட்சி பொறுப்பில் இல்லாத இனமே இல்லை எனலாம். ஆட்சி ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இனத்திடமும் மாறி மாறி வரும். ஆனால் தூதர்கள் உயர் குளத்திலும், பாரம்பரியம் / மரபு உள்ள குலத்திலும் பிறப்பர். இரண்டாவது, அரசனே தூதுவனாக செல்வதில்லை. மூன்றாவது, தூதனுக்கு பண்பு இருக்க வேண்டும் எனலாம், அன்பு இருக்க வேண்டிய அவசியம் என்ன? எனவே இது அரசனின் தூதுவனைக் குறிக்கவில்லை, மாறாக இறைதூதனை குறிக்கிறது. நான்காவது, இது இறை தூதுவை குறிப்பிடவில்லை என்றால், 

குறளை வெய்யோர்க்கு மறை விரி எளிது. - (முதுமொழிக் காஞ்சி எளிய பத்து 8:4

எனும் முதுமொழி காஞ்சியின் வாக்கு மறைநூல்களை புரிய குறள் உதவும் என்கிறது. மறைநூல்கள் தூதர்களின் மூலமாக வருகிறது என்று தொல்காப்பிய முதல்நூல் சூத்திரம் கூறுகிறது. 

திருமூலருக்கு பின் அவரின் மரபு தொடர்ச்சி   

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோ
டிந்த எழுவரும் என்வழி யாமே. - (திருமந்திரம், 04 குருபாரம்பரியம், பாடல்  2)

பொழிப்புரை : இத்திருமந்திரத்தைப் என்னிடமிருந்து பெற்று வழி வழியாக உணர்த்த இருப்பவர் 1) மாலாங்கன், 2) இந்திரன், 3) சோமன், 4) பிரமன், 5) உருத்திரன், தறிபோன்ற உருவத்துடன் யோகத்தில் இருக்கும் 6) காலாக்கினி, 7) கஞ்சமலையன் என்னும் எழுவருமாவர். இவரே என்வழியினர்.

"நந்தி மாதிரி குறுக்க வர" என்று திட்டுவது பெரும் பாவம் என்று இதன் மூலம் புலப்படுகிறது.

இந்து மதம்: ரிஷி, குரு, ஆச்சாரியார்


ஆபிரகாமிய மதங்கள் (யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம்) கடவுளின் தூதர்களால் தோன்றியவை என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் இந்து மதத்தில் "கடவுளின் தூதர்" என்று எதுவும் இல்லை என்று நாங்கள் நினைக்கிறோம். பதிலாக, கடவுள் மனிதனாக உலகில் அவதரிக்கிறார் என்று கருதுகிறோம். கடவுள் பிறப்பும் இறப்பும் அற்றவன் என்பதற்கான பல சான்றுகள் சனாதன தர்ம வேதங்களில் பல உள்ளன. அவதரிப்பவர்கள் தூதர்கள் அன்றி கடவுள் அல்ல. இந்த கட்டுரையில் அவ்வாறு அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளை பற்றி உலக வேதங்கள் என்ன சொல்கிறது? விரும்புகிறவர் களெல்லாம் தனது முயற்சியால் அவ்வாறு ஆகிவிட முடியுமா? என்று பார்ப்போம். 

அக்னி - கடவுளின் தூதர்

1) தெய்வீகப் பூசாரியும் என்னுடைய தூதருமான அக்னியை மகிமைப்படுத்துங்கள் செழிப்பை அருளும் கடவுளுக்கு காணிக்கைகள். - (RIG 1.1.1 மந்திரம் 1:1)

2) ஆணைப்படி பிறந்த அக்னி வைஸ்வாணர், பூமியின் தூதர், சொர்க்கத்தின் தலைவர், முனிவர், சோவ்ரன், மனிதர்களின் விருந்தாளி, அவர்களின் வாய்க்கு ஏற்ற எங்கள் பாத்திரத்தை கடவுள் உருவாக்கினார். - (SAMA 3.2.4.2.3 கந்தா (பிரிவு) 3:1)

3) அக்னி பூமி மற்றும் வானத்தின் தூதரானார் - (RIG 1.1.59 மந்திரம் 59:2)

4) 
அக்னி கடவுளின் தூதராக இருந்தார்.. ..அக்னியை தூதராக நாம் தேர்வு செய்கிறோம், தன்னை வளப்படுத்துகிறான், அவனது எதிரி தோற்கடிக்கப்படுகிறான்... - (யஜூர் 2.2.5.8 மந்திரம் 8:5)

5) அக்னி கடவுளின் தூதுவர் - (யஜூர் 2.2.5.12 மந்திரம் 12:8)

6) இந்த என்னுடைய மரியாதையுடன், வலிமையின் மகனே, உனக்காக நான் அக்னியை அழைக்கிறேன். அன்பே, புத்திசாலித்தனமான தூதுவர், உன்னத தியாகத்தில் கைதேர்ந்தவர், அனைவருக்கும் அழியாத தூதர். - (சாமா 3.1.1.1.5 தசதி (தசாப்தம்) 5:1)

7) அக்னி வைஸ்வாணரா, ஆணைப்படி பிறந்தவர், பூமியின் தூதர், வானத்தின் தலைவர், முனிவர், சோவரன், மனிதர்களின் விருந்தாளி, அவர்களின் வாய்க்கு ஏற்ற எங்கள் பாத்திரத்தை, தேவர்கள் உருவாக்கியுள்ளனர். - (சாமா 3.1.1.2.2 தசதி (தசாப்தம்) 2:4)

மேலும், RIG VEDA 
1.1.12 மந்திரம் 12:8, 1.1.36 மந்திரம் 36:3,4 & 5, 1.1.44 மந்திரம் 44:2,3,9 &11, 1.2.2 மந்திரம் 2:2, 1.2.4 மந்திரம் ஆகியவற்றைச் சரிபார்க்கவும். 4:2, 1.3.11 மந்திரம் 11:2, 1.3.17 மந்திரம் 17:4, 1.4.1 மந்திரம் 1:1, 1.4.9 மந்திரம் மற்றும் பல வசனங்கள் அக்னியின் தூதுத்துவம் பற்றி பேசுகிறது.

ரிக் பண்டைய தூதுவர்களைப் பற்றியும் பேசுகிறது 

1) கடவுள் தன் பண்டைய தூதுவர்கள் - வருணன், மித்ரா, ஆரியமன் ஆகியோரை.. (RIG 1.1.36 மந்திரம் 36:4)

வைச்வாணர் - யஜுர் வேதத்தில் கடவுளின் தூதர்

1) வானத்தின் தலைவன், பூமியின் தூதர், வைச்சுவாணர், புனித ஆணைக்காகப் பிறந்தவர், அக்னி, முனிவர், அரசர், மனிதர்களின் விருந்தினர், தேவர்கள் தங்கள் வாய்க்குக் கோப்பையாகத் தயாரித்துள்ளனர். - (யஜூர் 2.1.4.13 மந்திரம் 13)

2) "..பூமியின் தூதர்'... ..'வைச்சனாரா, புனித ஆணைக்குப் பிறந்தவர்'..." - (2.6.5.2 V 2:1) 
 
கடவுளின் தூதர் என்ற கருத்து இந்து மதத்தில் உள்ளது, RIG இன் குறிப்புடன், இந்து மதத்தின் தோற்றம் கடவுளின் தூதரிடம் இருந்து வந்தது என்பதை நிறுவுகிறது.

ஆனால் அவர்கள் தானாக உருவாக முடியாது. அவர்கள் HOLY ORDER-ல் தான் வருவார்கள். ஒரு தூதரை பற்றிய முன்னறிவிப்புகள் முந்தய வேதங்களில் கொடுக்கப் பட்டு இருக்கும். 

ஆபிரகாமிய மதத்தின் தீர்க்கதரிசிகள்/கடவுளின் தூதர்கள் புனித வரிசையில் பிறந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே, அதன் வரிசை இங்கே ஒரு படமாக கொடுக்கப்பட்டுள்ளது.

தூதர்களின் புனித மரபு 
 
இந்து மதத்தில் தூதுவர்கள் இருப்பதைப் பார்த்தோம், ஆனால் இந்து மதத்தில் விரும்பியவர்கள் எல்லாம் அலல்து கடுமையாக தவம் புரிவோர் எல்லாம் தூதர்களாக மாற முடியுமாஅல்லது புனித ஒழுங்கில் (Holy Order) பிறந்தவர்களுக்கு தான் வாய்ப்பு உண்டா?, வேதம் அதைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்?

1) ஹோலியார்டரின் அனைத்து வழிகளையும் அவர்கள் கண்டுபிடித்தனர், அவர் முழு அறிவுடன், இந்த செயல்களை வழிபாட்டின் மூலம் பகிர்ந்து கொண்டார். - (ரிக் 1.3.31 மந்திரம் 31)

2) அக்னி தன்னைப் புகழ்பவர்களின் கீர்த்தனைகளால் போற்றப்படுவதற்காக, புகழ்ச்சிகளால் வலிமைமிக்கவராக வளர்த்தார். விடியலின் முதல் ஃப்ளஷில் ஹோலி ஆர்டரின் பல்வேறு நிகழ்ச்சிகளை விரும்பி அவர் தூதுவராக ஜொலிக்கிறார்.- (ரிக் 1.3.5 மந்திரம் 5"2)

3) அவர், பூமியின் தூதுவரும், சொர்க்கத்தின் தலைவருமான, அக்னி வைஸ்வாணரா, புனித ஒழுங்கில் பிறந்தவர், முனிவர், அரசர், மனிதர்களின் விருந்தாளி, அவர்களின் வாய்க்கு ஏற்ற பாத்திரம், கடவுள் உருவாக்கியிருக்கிறார் - (ரிக் 1.6.7 மந்திரம் 7: 1)

4) வருணன் மற்றும் மித்ராவின் அந்த வலிமைமிக்க கண், தவறாத மற்றும் அன்பே, மேல்நோக்கி நகர்கிறது. புனித ஒழுங்கின் தூய்மையான மற்றும் அழகான முகம் அதன் எழுச்சியில் சொர்க்கத்தின் தங்கம் போல் பிரகாசித்தது. - (1.6.51 மந்திரம் 51:1)

5) ஓ மித்ரா மற்றும் வருணா, யார் புனித ஒழுங்கை செழிக்கச் செய்கிறார்கள்; - (2.1.4.5 மந்திரம் 5:a)

6) வானத்தின் தலைவர், பூமியின் தூதர், வைச்வாணரா, ஹோலியார்டரில் பிறந்தவர், அக்னி - (2.1.4.13 மந்திரம் 13:a)