மஹ்ரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மஹ்ரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உரிமையுள்ள உறவுகள் *

தமிழர் சமயம் 


கொண்டான் கொழுநன், உடன்பிறந்தான், தன் மாமன்,
வண்டு ஆர் பூந் தொங்கல் மகன், தந்தை,-வண் தாராய்! -
யாப்பு ஆர் பூங் கோதை அணி இழையை, நற்கு இயையக்
காப்பர், கருதும் இடத்து. - (சிறுபஞ்சமூலம் 52)

கோதை - மாலை
கருதும் - நினைக்கும் 
 
விளக்கம்: கணவனும், அவள் உடன் பிறந்தவனும், மாமனும், வண்டுகள் மொய்க்கின்ற பூமாலையை அணிந்த மகனும், தந்தையும் ஒரு பெண்ணைக் காக்கத் தக்கவராவார்.

இஸ்லாம் 


ஆண்களுக்கு மஹ்ரமான உறவுகள்:

1) பெற்றெடுத்த தாய் அல்லது தந்தையின் மனைவி (தாய்கள்)
2) பெண் பிள்ளைகள்
3) உடன் பிறந்த சகோதரிகள்
• உடன் பிறந்த சகோதரிகளாக இருந்தாலும் சரி, தந்தை இன்னொரு மனைவியைத் திருமணம் செய்து அந்த மனைவியின் மூலம் பிறந்த பெண் பிள்ளைகளாக இருந்தாலும் சரி!
• தாய் இன்னொரு கணவனைத் திருமணம் முடித்து அவர் மூலமாகப் பிறந்த சகோதரிகளாக இருந்தாலும் சரி! இவர்கள் மூன்று பேருமே சகோதரிகளாவார்கள்!
4) தந்தையின் உடன் பிறந்த சகோதரிகள் (மாமி / அத்தை)
5) தாயின் உடன் பிறந்த சகோதரிகள் (பெரியம்மா / சின்னம்மா)
6) உடன் பிறந்த சகோதரன் & சகோதரியின் பெண் பிள்ளைகள்
7) சிறு வயதில் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்கள்
8) பால்குடிச் சகோதரிகள்
• பால்குடி உறவு என்பது வேறு வேறு பெற்றோர்களுக்கு பிறந்த பிள்ளைகள் சிறு வயதில் நமது தாயிடம் பால் குடித்து இருந்தால் அல்லது நாம் சிறு வயதில் வேறு பெண்ணிடம் (செவிலி தாய்) பால் அருந்தி இருந்தால் அவர்களும் நமக்கு தாய் போன்று ஆகி விடுவார்கள் அவர்களின் பிள்ளைகளும் நமக்கு சகோதர சகோதரிகளாக ஆகி விடுவார்கள்! இன்னும் அவர்களிடம் வேறு குழந்தைகள் பால் அருந்தி இருந்தால் அவர்களும் நமக்கு சகோதர சகோதரிகள் ஆகி விடுவார்கள்! இதை பால் குடி உறவு என்று இஸ்லாம் கூறுகிறது!
• இந்த பால் குடி உறவு என்பது 5 முறை பால் குடித்து இருந்தால் மட்டும் ஏற்படும்! (நூல் : முஸ்லீம் : 2877)
• அதே போன்று பால் குடி உறவுகளை நாம் தெரியாமல் நிக்காஹ் செய்து இருந்தால் அந்த நிக்காஹ் செல்லுபடி ஆகாது! (நூல் : புகாரி : 2640)
 9) மனைவியின் தாய் (மாமியார்)
10) மகன்களின் மனைவியர்கள் (மருமகள்கள்)
11) இரண்டாவதாக திருமணம் செய்த மனைவியின் பெண் பிள்ளைகள்
• இரண்டாவது மனைவியுடன் திருமணம் ஆகியும் உடலுறவு கொள்ளாமல் இருந்து அல்லது உடலுறவு கொள்ளாமல் தலாக் பெற்று விட்டால் இரண்டாவது மனைவியின் பெண் பிள்ளைகளை நிக்காஹ் செய்து கொள்ளலாம்! (அல்குர்ஆன் : 4 : 23)
• மேலே உள்ள அனைவரும் ஒரு ஆணுக்கு மஹரமான உறவுகள் ஆவர்கள்! இவர்களை மற்ற அனைவருமே மஹ்ரம் இல்லாத அந்நிய பெண்களே!

 பெண்களுக்கு மஹ்ரமான உறவுகள்:

1) பெற்றெடுத்த தந்தை அல்லது தாயின் இரண்டாவது கணவன்!
2) ஆண் பிள்ளைகள்
3) உடன் பிறந்த சகோதரர்கள்
• தாய் இன்னொரு ஆணை திருமணம் செய்து அந்த ஆணின் மூலம் பிறந்த ஆண் பிள்ளைகள்! இவர்களும் நமக்கு சகோதரர்கள் ஆவார்கள்!
4) தந்தையின் உடன் பிறந்த சகோதரர்கள் (மாமா / சித்தப்பா)
5) தாய் உடன் பிறந்த சகோதரர்கள் (பெரியப்பா / சிச்சா)
6) உடன் பிறந்த சகோதரன் & சகோதரியின் ஆண் பிள்ளைகள்
7) சிறு வயதில் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களின் பிள்ளைகள் (பால்குடிச் சகோதரர்கள்)
• பால்குடி உறவு என்பது வேறு வேறு பெற்றோர்களுக்கு பிறந்த பிள்ளைகள் சிறு வயதில் நமது தாயிடம் பால் குடித்து இருந்தால் அல்லது நாம் சிறு வயதில் வேறு பெண்ணிடம் (செவிலி தாய்) பால் அருந்தி இருந்தால் அவர்களும் நமக்கு தாய் போன்று ஆகி விடுவார்கள் அவர்களின் பிள்ளைகளும் நமக்கு சகோதர சகோதரிகளாக ஆகி விடுவார்கள்! இன்னும் அவர்களிடம் வேறு குழந்தைகள் பால் அருந்தி இருந்தால் அவர்களும் நமக்கு சகோதர சகோதரிகள் ஆகி விடுவார்கள்! இதை தான் பால் குடி உறவு என்று இஸ்லாம் கூறுகிறது!
• இந்த பால் குடி உறவு என்பது 5 முறை பால் குடித்து இருந்தால் மட்டும் ஏற்படும்! (நூல் : முஸ்லீம் : 2877)
• அதே போன்று பால் குடி உறவுகளை நாம் தெரியாமல் நிக்காஹ் செய்து இருந்தால் அந்த நிக்காஹ் செல்லுபடி ஆகாது! (நூல் : புகாரி : 2640)
8) கணவனின் தந்தை (மாமனார்)
9) மகள்களின் கணவன்மார்கள் (மருமகன்கள்)
10) இரண்டாவதாக திருமணம் செய்த கணவனின் ஆண் பிள்ளைகள்
• இரண்டாவது கணவனுடன் திருமணம் ஆகியும் உடலுறவு கொள்ளாமல் இருந்து அல்லது உடலுறவு கொள்ளுவதற்கு முன் தலாக் பெற்று விட்டால் இரண்டாவது கணவனின் ஆண் பிள்ளைகளை நிக்காஹ் செய்து கொள்ளலாம்! (அல்குர்ஆன் : 4 : 23)
• மேலே உள்ள அனைவரும் ஒரு பெண்ணுக்கு மஹரமான உறவுகள் ஆவர்கள்! இவர்களை மற்ற அனைவருமே மஹ்ரம் இல்லாத அந்நிய ஆண்களே!

 

உரிமையில்லா பெண்ணை

தமிழர் சமயம்


பெருமை உடையார் இனத்தின் அகறல்,
உரிமை இல் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்,
விழுமிய அல்ல துணிதல், - இம் மூன்றும்
முழு மக்கள் காதலவை. - (திரிகடுகம் 9)

பொருள்: பெருந்தன்மை உடையாரிடம் நட்பு கொள்ளாதிருத்தலும், தமக்கு உரிமை இல்லாத பெண்களை விரும்புதலும், சிறந்தவை அல்லாதவற்றைச் செய்வதும் அறிவற்ற மூடர்கள் விரும்பிச் செய்வதாம்.

இஸ்லாம் - விரும்ப உரிமையில்லா பெண்கள்


உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாகரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (விலக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன்:4:23)


கிறிஸ்தவம் & யூதமதம் - லேவியராகமம் 20 பாலியல் பாவங்களுக்கான தண்டனைகள்


10 “எவனாவது பிறனுடைய மனைவியோடு பாலின உறவு கொண்டால் இருவரும் விபசாரம் என்னும் பாவத்துக்கு ஆளாகிறார்கள். எனவே அந்த ஆண், பெண் இருவரும் கொலைச் செய்யப்பட வேண்டும். 
 
11 எவனாவது தன் தந்தையின் மனைவியோடு பாலின உறவு கொண்டால் அந்த இருவரும் கொலை செய்யப்பட வேண்டும். அவர்களின் மரணத்துக்கு அவர்களே பொறுப்பாவார்கள். அது அவன் தன் தந்தையை நிர்வாணப்படுத்தியது போன்றதாகும்.

12 “ஒருவன் தன் மருமகளோடு பாலின உறவு கொண்டால் அந்த இருவரும் கொலை செய்யப்பட வேண்டும். அவர்கள் மிக மோசமான பாலியல் பாவத்தைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் மரணத்துக்கு அவர்களே பொறுப்பாவார்கள்.

13 “ஒருவன் இன்னொரு ஆணோடு, பெண்ணோடு பாலின உறவு கொள்வது போன்று பாலின உறவு கொண்டால் (ஓரினப் புணர்ச்சி) அந்த இருவரும் பெரும் பாவம் செய்தபடியால் அவர்கள் கொல்லப்பட வேண்டும். அவர்களே தம் மரணத்துக்குப் பொறுப்பாவார்கள்.

14 “ஒருவன் ஒரு தாயோடும் மகளோடும் பாலின உறவு கொண்டால் இதுவும் பெரிய பாலியல் பாவமாகும். ஜனங்கள் அவர்கள் மூவரையும் நெருப்பிலே போட்டுக் கொல்ல வேண்டும். இது போன்ற பாலியல் பாவங்கள் உங்கள் ஜனங்களிடம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

15 “எவனாவது மிருகத்தோடு பாலின உறவு கொண்டிருந்தால் அவன் கொல்லப்பட வேண்டும். அந்த மிருகத்தையும் நீ கொன்றுபோட வேண்டும். 
 
16 ஒரு பெண் மிருகத்தோடு பாலின உறவு கொண்டால் நீ அவளையும் அந்த மிருகத்தையும் கொன்றுவிட வேண்டும். அவர்களே தங்கள் மரணத்துக்குப் பொறுப்பாவார்கள்.

17 “ஒருவன் தன் சகோதரியையோ, சகோதரி முறையுள்ளவளையோ மணந்துகொண்டு அவளோடு பாலின உறவு கொள்வது வெட்ககரமான பாவமாகும். அவர்கள் பொது ஜனங்கள் மத்தியில் தண்டிக்கப்படுவதுடன், மற்ற ஜனங்களிடமிருந்தும் தனியே பிரிக்கப்பட வேண்டும். ஒருவன் தன் சகோதரியோடு பாலின உறவு கொண்ட பாவத்துக்காக அவன் தண்டிக்கப்பட வேண்டும்.

18 “ஒருவன் ஒரு பெண் மாதவிலக்காக இருக்கும்போது அவளுடன் பாலின உறவு கொண்டால் அவர்கள் இருவருமே தங்கள் ஜனங்களிடமிருந்து தனியே ஒதுக்கப்பட வேண்டியவர்கள். அவளது இரத்தப் போக்கை அவன் திறந்து விட்டிருக்கிறபடியால் அவர்கள் பாவம் செய்தவர்களாக ஆகிறார்கள்.

19 “நீங்கள் உங்கள் தந்தை அல்லது தாயின் சகோதரியோடு பாலின உறவு கொள்ளக் கூடாது. இது நெருங்கிய உறவோடு பாலின உறவு கொண்ட பாவத்திற்குரியது. உங்கள் பாவத்திற்கு நீங்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

20 “ஒருவன் தன் தகப்பனின் சகோதரனுடைய மனைவியோடு பாலின உறவு கொண்டால் அது தகப்பனின் சகோதரனோடு பாலின உறவு கொண்டது போலாகும். அவனும் அவனுடைய தகப்பனின் சகோதரனின் மனைவியும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் குழந்தைகள் இல்லாமல் செத்துப்போவார்கள்.

21 “ஒருவன் தனது சகோதரனின் மனைவியை எடுத்துக்கொள்வது தவறானதாகும். இது அவன் தன் சகோதரனோடு பாலின உறவு கொள்வது போன்றதாகும். அவர்களுக்கும் குழந்தைகள் இல்லாமற்போகும்.

22 “நீங்கள் எனது சட்டங்களையும் விதிகளையும் நினைவில் கொண்டு, அவற்றுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நான் உங்கள் நாட்டிற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். நீங்கள் அங்கு வாழும்போது எனது சட்டங்களுக்கும், விதிகளுக்கும் கீழ்ப்படிந்தால் அந்த நாடு உங்களை கக்கிவிடாது.