இறைவனின் அரியணை

தமிழர் சமயம் 

அங்கே அடற்பெரும் தேவரெல் லாம்தொழச்
சிங்கா தனத்தே சிவன்இருந் தானென்று
சங்குஆர் வளையும் சிலம்பும் சரேலெனப்
பொங்குஆர் குழலியும் போற்றிஎன் றாளே - (8ம் தந்திரம் - 14. அறிவுதயம் 2356.)

அங்கே அடற்பெரும் தேவரெல்லாம் தொழச்
சிங்காதனத்தே சிவன் இருந்தானென்று
சங்கு ஆர் வளையும் சிலம்பும் சரேலெனப்
பொங்கு ஆர் குழலியும் போற்றி என்றாளே

கிறிஸ்தவம் 

கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது. கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது (சங்கீதம் 11:4-5)

 இஸ்லாம் 

வானங்களையும், பூமியையும் அவனே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும் வானிலிருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் அறிவான். நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (அல்குர்ஆன் 57:4)

நாகூர் தர்கா பற்றி கூற முடியுமா?

 நாகூர் மட்டுமல்ல வேறு எந்த தர்காவும் இஸ்லாத்துக்கு தொடர்புடையது அல்ல.

1. படைத்த இறைவனை தவிர மற்றவர்களை வணங்க கூடாது.

ஏனென்றால் இறந்தவர்கள் எவ்வளவு பெரிய அவுலியாவாக இருந்தாலும், முகமது நம்பியாகவே இருந்தாலும் அவர்களை வணங்க எவருக்கும் அனுமதி இல்லை.

(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று கட்டளையிடுகிறான்… (அல்குர்ஆன் 17:23)

ஏனென்றால் முகமது நபி அவர்களும் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

"கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல், என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள்! " - (நூல்: புகாரி 3445)

முன்னிருந்தவர்கள் தங்களது நபிமார்களின் மண்ணறைகளை மஸ்ஜித்களாக – தர்காக்களாக – ஆக்கிக் கொண்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் மண்ணறைகளை மஸ்ஜித்களாக – தர்காக்களாக – ஆக்காதீர்கள். அதை விட்டு உங்களை நான் தடுக்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 827

2. அது இறைவனைக்கு இணையாக வேறொன்றை கருதுவது ஆகும்

ஏனென்றால் இவ்வாறு உலகு அனைத்தையும் படைத்த கடவுளைத் தவிர வேறெவரும் வணங்கப்பட தகுதி அற்றவர்கள். அவ்வாறு செய்தால் அது படைத்து பாதுகாத்து அழிக்கும் இறைவனுக்கு இணையாக வேறொன்றை கருதுவது போல் (ஷிர்க்) ஆகும்.

இவ்வாறு படைத்து பரிபாலிக்கும் இறைவனைத் தவிர வேறு எதை வணங்கினாலும் மனிதனுக்கு நிம்மதி அற்றுப் போகும்.

3. அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யவோ அல்லது அல்லாஹ்வுடன் நம்மை நெருக்கமாக்கவோ மரணித்தவர்களால் செய்ய முடியாது

அல்ல, நாங்கள் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்ய வேண்டி நல்லடியார்களிடம் பிராத்தனை செய்ய மட்டுமே செல்கிறோம் என்று சிலர் கூறுவதுண்டு. அவர்களிடம் அல்லாஹ் இவ்வாறு கேட்கிறான்.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். 'வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக! - (திருக்குர்ஆன் 10:18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். - (திருக்குர்ஆன் 39:3

(நபியே!) இறந்தவர்களை உம்மால் கேட்கச் செய்ய முடியாது. - (குர்ஆன் 27:80)

அவர்களுக்காக துஆ செய்கிறோம் என்று சிலரும் சொல்வதுண்டு ஆனால் அதுவெல்லாம் வெரும் பசப்பு வார்த்தைகளே.. ஏனென்றால் கடமையாக விதிக்கப்பட்ட தொழுகை, நோன்பு, ஜக்காத், பொருமை உட்பட பல அமல்களை விடுத்து கட்டாயமாக்கப்படாத ஒன்றை இவர்கள் செய்வது எவ்வகையில் பொருத்தமாகும்? எப்படி உண்மையாகும்?.

4. மண்ணறைகளை உயர்த்தி கட்டக் கூடாது

மேலும் மனிதர்கள் புதைக்கப்பட்ட இடத்தை தர்கா கட்டிடம் போன்று அல்ல, சிறிதளவு கூட உயர்த்தி கட்ட இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

யஹூதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்கள் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக (தர்காவாக) ஆக்கிக் கொண்டனர்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணத்தைத் தழுவிக் கொண்ட அந்த நோயின் போது குறிப்பிட்டார்கள். இவ்வாறு எச்சரிக்கை செய்து இருக்காவிட்டால் அவர்களின் கப்ரையும் உயர்த்தி இருப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1330, முஸ்லிம் – 921, அபூதாவூத் – 3227, நஸாயீ – 703, முஅத்தா – 414, தாரமி – 1403, அஹ்மத் – 1884, நஸாயீயின் குப்ரா – 782, பைஹகீ – 7010, அபூயஃலா – 5844, தப்ரானி (கபீர்) – 393-411 - இன்னும் ஏராளமான நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

(கப்ருகளை) இறந்தவர்களை புதைத்த இடங்களை மஸ்ஜித்களாக – தர்காக்களாக – ஆக்கிக் கொண்டவர்களே மக்களில் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபூ உபைதா (ரலி) நூல்: அஹ்மத் 1602

தங்கள் நபிமார்களின் அடக்கத் தலங்களை மஸ்ஜித்களாக தர்காக்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 437

‘உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்கள் மற்றும் நல்லோரின் கப்ருகளை மஸ்ஜித்களாக – தர்காக்களாக – ஆக்கி விட்டனர். எச்சரிக்கை! கப்ருகளை மஸ்ஜித்களாக – தர்காக்களாக – ஆக்காதீர்கள். இதை விட்டு உங்களை நான் தடுக்கிறேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுன்துப் ((ரலி) நூல்: முஸ்லிம் 827

ஹபஷா தேசத்தில் தாம் கண்ட ஒரு கிறிஸ்தவக் கோயிலையும், அதில் உள்ள உருவங்களையும் பற்றி உம்முஸலமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் கூறினார்கள். அப்பொழுது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களில் நல்லவர் மரணித்து விட்டால் அந்த நல்லவரின் மண்ணறையின் மீது மஸ்ஜிதை தர்காவை கட்டி அந்த உருவங்களை அதில் செதுக்குவார்கள். இவர்கள் தான் அல்லாஹ்விடத்தில் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள்” எனக் கூறினார்கள். நூல்: புகாரி 427, 434, 1341, 3873

உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவூத் 1746

இவ்வளவு தெளிவாக வேறு எந்த மார்க்கத்திலும் குறிப்பிடவில்லை. எனவே தர்காவில் வணங்கும் ஒருவர் இஸ்லாத்தின் அடிப்படை போதனைகளில் இருந்து தன்னைத் தானே விடுவித்து கொள்கிறார்.

வழிபாடு

வழிபாடு - வழிபடுதல் - வழிப்படுதல் - கட்டுப்படுத்தல்

வழிபாடு எனும் சொல் இறைவணக்கம் எனும் பொருளில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வழிபடுதல் என்றால் கட்டுப்படுதல் என்று பொருள். இறைவனுக்கு கட்டுப்படும் பொழுது அவனை வணங்குவது ஒருபகுதி, ஆனால் அதுமட்டுமே வழிபாடு ஆகாது.
 

கிறித்தவம்


ஒருவன் செய்யவேண்டிய முதலாவது காரியம், கர்த்தருக்கு கனம் செலுத்துவதையும் அவருக்குக் கீழ்ப்படிவதையும் கற்றுக் கொள்ளவேண்டும். அது தம்மை உண்மையான ஞானத்தைப்பெற வழிநடத்தும். ஆனால், தீய ஜனங்கள் உண்மையான ஞானத்தையும் ஒழுக்கத்தையும் வெறுக்கிறார்கள். (நீதிமொழிகள் 1:7)

இஸ்லாம்


“ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள், இறைத்தூதருக்கும் உங்களில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள்." (அல்குர்ஆன் 4:59)

இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். (குர்ஆன் 24:52)

தமிழர் சமயம் 

 
தாம் அறிவார் அண்ணல்தாள் பணிவார் அவர்
தாம் அறிவார் அறம் தாங்கிநின்றார் அவர்
தாம் அறிவார் சிவதத்துவர் ஆவர்கள்
தாம் அறிவார்க்கும் தம் பரனாகுமே. (திருமந்திரம்-251)

கருத்து: தன்னை அறிவோர், சிவபெருமானை வாங்குவார், சிவபெருமான் வழங்கிய திருமந்திரம் எனும் வேதத்தில் கூறிய அறங்களுக்கு கட்டுப்படுவார், அவர்தான் சிவ தத்துவத்தை ஏற்று நடப்போர்கள் ஆவர். தன்னை அறிவோர்க்கும் சிவபெருமான் உற்ற துணையாவார். 

முடிவுரை

இறைவனை வணங்குவது மட்டும் இறைவனின் எதிர்பார்ப்பல்ல. அவன் வேதத்தில் வழங்கிய அறத்துக்கும், நீதிக்கும், கட்டளைக்கும் கட்டுப்பட்டு நடப்பதுதான் இறைவண்ணக்கத்தை பூர்த்தி செய்யும். அல்லாதவருக்கு அவன் துணை நிற்க மாட்டான், வெற்றியை அளிக்க மாட்டான், சொர்கத்தை வழங்கமாட்டான் என்பதே இறைவனின் வாக்குறுதியாக உள்ளது. 

எண்ணத்திலும் தீமை கூடாது

தமிழர் சமயம்

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். (குறள் - 282)

விளக்கம்: பிறன் பொருளைக் கள்ளமாகக் களவாடிக் கொள்வோம் என்று ஒருவன் தன் உள்ளத்தால் நினைத்தாலும் அந்த நினைவுக்கூடத் தீமையானதே.

இஸ்லாம்

(நபியே!) நீர் கூறும்: “உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்; இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்; அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்.” (அல்குர்ஆன் : 3:29)

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்குர்ஆன் : 49:12)

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: (பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்த உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம் தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குற்றங் குறைகளை) துருவித் தருவி ஆராயாதீர்கள். ஒட்டுக்கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள்.  - ஸஹீஹ் புகாரி : 5143

கிறிஸ்தவம்/யூதம் 

கர்த்தரால் வெறுக்கப்படும் ஏழு காரியங்கள்

16 கர்த்தர் இந்த ஆறு அல்லது ஏழு காரியங்களையும் வெறுக்கிறார்.

17     கர்வம் கொண்ட கண்கள், பொய்களைக் கூறும் நாவுகள், அப்பாவி ஜனங்களைக்கொல்லும் கைகள்.

18     தீயவற்றைச் செய்யத் திட்டமிடும் மனது, கெட்டவற்றைச் செய்ய ஓடும் கால்கள்,

19     வழக்கு மன்றத்தில் பொய்யைச் சொல்லுபவன், உண்மையில்லாதவற்றைக் கூறுபவன், விவாதங்களைத் தொடங்கி வைத்து அடுத்தவர்களுக்குள் சண்டை மூட்டுபவன்.


தேவையை இறைவனிடமே கேட்போம் *

கிறிஸ்தவம் 

1 உங்களுக்குள்ளே சண்டைகளும், வாக்குவாதங்களும் எங்கிருந்து வருகின்றன? உங்கள் சரீர உறுப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்ந்து சண்டையிட்டுக்கொள்ளக் காரணமாக இருக்கிற உங்கள் உள் ஆசைகளில் இருந்து இவை வரவில்லையா? 2 நீங்கள் சிலவற்றை விரும்புகிறீர்கள். ஆனால் அவை கிடைப்பதில்லை. எனவே கொலைக்காரராகவும் பொறாமை உள்ளவர்களாகவும் மாறுகிறீர்கள். அப்படியும் நீங்கள் விரும்புகிறவற்றை அடைய முடியாமல் போகிறது. நீங்கள் அதனால் சண்டையும் சச்சரவும் செய்கிறீர்கள். நீங்கள் தேவனிடம் கேட்டுக்கொள்ளாததால் எதையும் பெறுவதில்லை. 3 மேலும் தவறான நோக்கங்களோடு நீங்கள் கேட்பதால், நீங்கள் கேட்கிறபோது எதையும் பெறுவதில்லை. சொந்த இன்பத்தில் திளைக்கும் வகையில் நீங்கள் கேட்கிறீர்கள். ( யாக்கோபு 4:1-3)

இஸ்லாம் 

 மனிதன் வாழ்வதற்கு வசதியாக பேரண்டத்தைப் படைத்தப் பேரறிவாளன் அல்லாஹ், மனிதனின் தேவைகளை தன்னிடம் கேட்பதை விரும்புகிறான். உயர்ந்தோன் அல்லாஹ் மனிதனின் நியாயமான தேவைகளை அவனிடம் கேட்கும்போது அவற்றை நிறைவேற்றக் காத்திருக்கிறான். 

''என்னிடம் கேளுங்கள் உங்களுக்குப் பதிலளிக்கிறேன்'' (அல்குர்ஆன் 40:60)

 ''அல்லாஹ்விடம் துஆ - பிரார்த்தனையை விட மதிப்பிற்குரியது எதுவுமில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள் - திர்மிதீ, இப்னுமாஜா)

திருட்டு

கிறிஸ்தவம் 

பறக்கும் ஓலைச்சுருள் -  (சகரியா 5)

1 நான் மறுபடியும் மேலே பார்த்தேன். நான் ஒரு பறக்கும் புத்தகச்சுருளைப் பார்த்தேன். 

2 தூதன் என்னிடம், “என்ன பார்க்கிறாய்?” எனக் கேட்டான். “நான் ஒரு பறக்கும் புத்தகச்சுருளைப் பார்க்கிறேன். அந்த புத்தகச்சுருள் 30 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்டது” என்று நான் சொன்னேன்.

3 பின்னர் தூதன் என்னிடம் சொன்னான்: “அந்த புத்தகச்சுருளில் சாபம் எழுதப்பட்டிருக்கிறது. புத்தகச்சுருளின் ஒரு பக்கத்தில் திருடிய ஜனங்களுக்கான சாபம் எழுதப்பட்டுள்ளது. புத்தகச்சுருளின் இன்னொரு பக்கத்தில் வாக்குறுதி அளிக்கும்போது பொய் சொன்ன ஜனங்களுக்கான சாபம் எழுதப்பட்டுள்ளது. 

4 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: நான் இந்தப் புத்தகச்சுருளை திருடர்களின் வீடுகளுக்கும் கர்த்தருடைய நாமத்தால் பொய் சத்தியம் செய்தவர்களின் வீடுகளுக்கும் அனுப்புவேன். அந்தப் புத்தகச்சுருள் அங்கே தங்கி அது அவ்வீடுகளை அழிக்கும். அவ்வீட்டிலுள்ள கற்களும் மரத்தூண்களும் அழிக்கப்படும்.”

இஸ்லாம் 

அல்லாஹ் கூறுகிறான்: “திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி அவர்களின் கரங்களைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதனைக்கான கூலியாகும். மேலும் அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையுமாகும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும் நுண்ணறிவுள்ளோனுமாவான்” (குர்ஆன் 5:38)

அல்லாஹ்வின் சாபம் திருடன் மீது ஏற்படட்டும்.அவன் (விலை மதிப்புள்ள)தலைக்கவசத்தைத் திருடுகிறான்;அதனால் அவனது கை வெட்டப்படுகிறது.(விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான்;அதனாலும் அவனது கை துண்டிக்கப்படுகிறது என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் (புகாரி 6783)

தமிழர் சமயம்  

களவென்னும் காரறி வாண்மை அளவுஎன்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல் (கள்ளாமை குறள் எண்:287)

 பரிமேலழகர் உரை: களவு என்னும் கார் அறிவு ஆண்மை - களவு என்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை உடையராதல்; அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் - உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமையை விரும்பினார்கண் இல்லை. (இருள் - மயக்கம். காரியத்தைக் காரணமாக உபசரித்துக் 'களவென்னும் கார் அறிவு ஆண்மை' என்றும், காரணத்தைக் காரியமாக்கி 'அளவு என்னும் ஆற்றல்' என்றும் கூறினார். களவும் துறவும், இருளும் ஒளியும் போலத் தம்முள் மாறாகலின், ஒருங்கு நில்லா என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)

மழை

கிறிஸ்தவம் / யூதம் 

மழைக்காலத்தில் மழைக்காகக் கர்த்தரிடம் ஜெபம் செய். கர்த்தர் மின்னலை அனுப்புவார், மழை விழும். ஒவ்வொருவரின் வயலிலும் தேவன் செடிகளை வளரச் செய்வார். (சகரியா 10:1)

இஸ்லாம் 

மழை உருவாகும் விதம் 

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைகளைப் போன்ற மேகக் கூட்டங்களிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான் ; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது. (அல்குர்ஆன் : 24:43)

மழையின் மூலமே உணவுகள்

இறைவனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும் , வானத்தை விதானமாகவும் அமைத்து , வானத்தினின்றும் மழை பொழியச்செய்து ; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (அல்குர்ஆன் : 2:22)

அல்லாஹ்வின் அருளை கொண்டே விளைச்சல் 

(ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை) களை வெளிப்படுத்துகிறது ; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம் . (அல்குர்ஆன் : 7:58)

மழை நீரை சேகரிப்பதில்

இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை. (அல்குர்ஆன் : 15:22)

நூஹ் (நபி) காலத்தில் ஈமான் கொண்டவர்கள் கப்பலில் உயிர் பிழைத்தும்.அநியாயம் செய்தவர்கள் கன மழையால் அழிந்ததும். (அல்குர்ஆன் : 11:44)

பூமியே ! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்  என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது .

மூஸா (நபி) சமூகத்தார்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை 

ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும் , இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக ) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர். (அல்குர்ஆன் : 7:133)

லூத் (நபி) சமூகத்தவர்களின் அழிவு 

இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மழை பொழியச் செய்தோம்; எனவே , எச்சரிக்கப்பட்ட அவர்கள் மீது பெய்த அம்மழை மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் : 27:58)

மறுமைக்கு மழை ஓர் உவமை

மேலும் அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான்; அவை மேகங்களைக் கிளப்பி ஓட்டுகின்றன - பின்னர் அவற்றை (வறண்டு) இறந்துகிடக்கும் நிலத்தின் மீது செலுத்துகிறோம். (மழை பெய்யச் செய்து) அதைக் கொண்டு நிலத்தை அது (வறண்டு இறந்து போனபின் உயிர்ப்பிக்கின்றோம். (இறந்து போனவர் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே இருக்கிறது (அல்குர்ஆன் : 35:9).

மழையின் படிப்பினைகளை புரிந்து அல்லாஹ்வை நாடுவோம்

எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் நாம் உங்களுக்கு செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம்; அவர்கள் மீது நாம் வானம் தாரை தாரையாக மழை பெய்யுமாறு செய்து, அவர்களுக்குக் கீழே ஆறுகள் செழித்தோடும்படிச் செய்தோம்; பிறகு அவர்களின் பாவங்களின் காரணத்தால் அவர்களை அழித்து விட்டோம்; அவர்களுக்குப் பின் வேறு தலைமுறைகளை உண்டாக்கினோம். (அல்குர்ஆன் : 6:6)

என்னுடைய சமூகத்தார்களே ! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள் ; இன்னும் ( தவ்பா செய்து ) அவன் பக்கமே மீளுங்கள் ; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான் ; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள் ” (என்றும் எச்சரித்துக் கூறினார்) - (அல்குர்ஆன் : 11:52)

மழை வேண்டி பிரார்த்தனை 

அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். அப்போது கிப்லாவை நோக்கியவர்களாகத் தம் மேலாடையை மாற்றிப் போட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். (ஸஹீஹ் புகாரி : 1012)

பெரு மழையால் பாதிக்கப்பட்டால் பிரார்த்திப்பது 

அனஸ்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'கால்நடைகள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள் துஆச் செய்தனர். அந்த ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது. பின்னர் ஒருவர் வந்து, 'வீடுகள் இடிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. கால்நடைகள் அழிந்துவிட்டன' என்றார். நபி(ஸல்) அவர்கள் 'இறைவா! மணற்குன்றுகளின் மீதும் மலைகளின் மீதும் ஓடைகளிலும் விளை நிலங்களிலும் (இம்மழையைத் திருப்புவாயாக!)' என்று பிரார்த்தனை செய்தார்கள். உடைகளைக் கழுவுவது போல் அம்மழை மதீனாவைக் கழுவியது.  (ஸஹீஹ் புகாரி : 1017)

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் அக்குள் வெண்மையை நான் பார்க்கும் அளவுக்கு (துஆச் செய்யும் போது) தம் கைகளை உயர்த்தினார்கள்.  (ஸஹீஹ் புகாரி : 1030)

தமிழர் சமயம் 

மழையின் சிறப்பு

கொடை வள்ளல்களில் சிறந்த இடத்திலுள்ள பாரியின்கொடைத்தன்மையைக் கூறவந்த சுபிலர்.

''மாரியுமுண்டு ஈங்கு உலகு புரப்பதுவே'' (புறம் 107)

எனக் கூறிப்பிடுகிறார். வள்ளுவரும் மழையின் சிறப்பை பத்துகுறட்பாக்களில் கூறுகிறார். அவற்றில்,

விசும்பின் துளிவீழின் அல்லால் மாற்றாங்கே

பசும்புல் தலைகாண்ப தரிது. (குறள் 16)

எனப் புல் வாழ்வதற்குக்கூட மழை மிக இன்றியமையாதது எனகுறிப்பிடுவதையும் இங்கு எண்ணிப்பாரக்கத் தக்கது.

மழையும் அறிவியலும்

சூரிய வெப்பத்தால் நீரானது நீராவியாக மாறி மேலே சென்று மேகமாகமாறுகிறது. இந்தச் செயல் மீண்டும் மீண்டும் நடைபெறும்போதுமேகத்தின் அடர்த்தி அதிகரிக்கிறது. இந்நிலையில் மேகங்கள் காற்றின்போக்கிற்கேற்ப செல்கிறது. இவ்வாறு செல்கிற மேகங்களை மலைகள்தடுக்கின்றன் மலைகளில் காணப்படும் தாவரச் சூழல் காரணமாகஅப்பகுதி குளிர்ச்சியாகக் காணப்படுகிறது இதனால் மேகங்களாகக்காணப்படும் நீராவியானது குளிர்ச்சியடைந்து மழையாக பெய்கின்றது.

அதேபோல ஒரு இரத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது அங்குள்ளவெப்பமானக் காற்று மேல்நோக்கி செல்கைறது அவ்வெற்றிடத்தைநிரப்புவதற்கு குளிர்ந்த காற்று வந்து சேர்கின்றது. இவ்வாறு குளிர்க்காற்றுவருவதும் மேகங்கள் மழைபொழிவதற்குக் காரணமாகிறது. காடுகள்மிகவும் அதிகாம இருப்பதாலும் சுற்றுசூழல் குளிர்விக்கப் பட்டுமழைப்பெய்கின்றது. இவையாவும் மழை பொழிவிற்கான அறிவியல்காரணங்களாகும்.

இலக்கியமும் மழையும்

மழை உருவாக்கத்திற்குரிய நீரில் பெரும் பகுதி நீண்டு விரிந்த கடலில்இருந்து பெறப்படுகிறது. ‘’ பெரும்பாகமான தண்ணீர் கடலில் இருந்துசூரியனால் நீராக்கப்படுகிறது. இந்த நீராவியை, பூமியின் காற்றுமண்டலத்தில் வீசிக்கொண்டிருக்கும் காற்றோட்டங்கள், நிலப்பரப்புக்குஇழுத்து வருகின்றன’’

பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகிக்

காலை வந்தன்றால் காரே (அகம் 183)

என்று குறிப்பிடப்படுகின்றது. பெருங்கடலில் முகந்து கொள்ளப்படும் நீர்ஆவியாகி மேலே செல்கிறது. அவ்வாறு மேலே செல்லும் நீர் மேகத்தின்அடர்த்தியைப் பொறுத்து அதுமிதந்து செல்லும் உயரம் அமைகிறது.

பெயில் உலர்ந்து எழுந்த பொங்கல் வெண்மழை [நெடு 20]

அதிக நீர் கொள்ளாத மேகம் மேலே உயர்ந்து செல்கின்றது. அதனால்மேகத்தில் அதிகளவு நீர்த்தன்மை இருக்கின்ற மேகம் உயர்ந்து செல்லாது,தாழ்ந்து செல்வதை,’’ கடுஞ்சூல் மகளிர்’’ போன்று இருப்பதாகக்குறுந்தொகை குறிப்பிடுகிறது.

காற்றும் மழையும்

மழைபொழிதலில் காற்றின் பங்கு மிக முக்கியமானஇடத்தைப்பெறுகின்றது. நீராவி மேகமாக மாறிய நிலையில் அதனைப்பிற இடங்களுக்கு அடித்துசெல்கின்ற பணியைக் காற்று செல்கிறது.இல்லையெனில் பல பகுதிகளில் மழை இல்லாமல் போய்விடும்.

நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே ( ஐங். 492)

எனக்கார்கால மேகம் காற்றில் அடித்துச் செல்லப்படுகிறதுவிளக்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்குப்பருவக்காற்று காலமே மழைப்பொழிவதற்குரிய காலமாகும்.இக்காலத்தில் காற்று வடக்கிலிருந்து வீசுகின்றது அது பருவ சுழற்சியின்காரணத்தாலும் தமிழகம் புவியின் நடுக்கோட்டின் கீழ் இருப்பதனாலும்கிழக்கிலிருந்து மேற்காக காற்று வீசுகிறது இதை நன்குணர்ந்த பண்டைத்தமிழர்கள் மேகம் வலமாகச் சுற்றுவதை

வலனேர்பு அங்கண் இரு விசும்பதிர

ஏறொரு பெயல் தொடங்கின்றே வானம் (ஐங். 469)

என்றும்

கடல் முகந்து கொண்ட காமஞ் சூல்

மாமழை சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு (அகம். 43)

என்றும் சுட்டப்படுகின்றன. காற்று வலம் நோக்கி செல்வதற்கானகாரணத்தை மிகத்தெளிவாக பின்வரும் பாடல் குறிப்பிடுகின்றது.

நனந்தலை உலகம் வளையி நேமியொடு

வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை (முல்லை. 1-2)

என்றும் முல்லைப் பாட்டு குறிப்பிடுகின்றது.

இதனை வலியுறுத்தும் விதமாக

பணை முழங்கு எழிலி பெளவம் வாங்கி

தாழ் பெயற் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ (அகம் 840

எனக் குறிப்பிடுகின்றது. காற்றின் போக்கினை தெளிவாக உணர்ந்திருந்தகாரணத்தால் அக்கால தமிழ் மக்கள் கடல் தொழில் செய்வதிலும்வல்லவர்களாக இருந்தனர். கீழ்காற்று கடல் தொழில் செய்வதற்குஏற்றதல்ல என்பதும் இக்காலத்தில் கடலிலிருந்து காற்று கரை நோக்கி வீசுவதால் பாய்மரத்தின் உதவியால் படகை கடலுக்குள் செலுத்தமுடியாது என்பதும் இக்காலம் மழைக்காலம் என்றும் அவர்கள் அறிந்துவைத்திருந்தனர்.

கொண்டல் மாமழை குடக்கு ஏர்பு குழைத்த [ நற். 140]

என்று நற்றிணை குறிப்பிடுவதையும் நாம் இங்கு நினைத்துப்பார்க்கத் தக்கதாகும்.

மலையும் மழையும்

காற்றுக்களால் அடித்துச் செல்லப்படும் மேகங்களை மலைகள்தடுக்கின்றன இவ்வாறு தடுக்கப்படும் மேகங்கள் அம்மலைகளில்காணப்படும் தாவரங்களின் குளிர்ச்சியால் நீரின் அடர்த்திஅதிகமாகின்றன. காடுகளில் வளர்ந்திருக்கும் பெருமரங்கள்தாவரங்கள் எல்லாமே அதிகளவு மழை நீரை வேர்களீன்மூலமாக உறிஞ்சுகினறன. ஆனால் மிக குறைந்த அளவுதண்ணீரையே தங்கள் உணவை தயாரிக்க பயன் படுகின்றன.இதனால் தான் மரங்கள் அடர்ந்திருக்கும் இடங்கள் எப்போதும்குளிர்ச்சியாக இருக்கும்.ஏனென்றால் எஞ்சிய பெருமளவு நீர்இலைத்துளைகளின் வழியாக நீராவியாக காற்று மண்டலத்தில்மீண்டும் செலுத்தப்படுகிறது.இந்த கருத்தை வலியுறுத்தும்விதமாக நற்றிணைப் பாடல் ஒன்று உள்ளது

நளி கடல் முகந்து செறிதக இருளி

கனை பெயல் பொழிந்து..(நற்றிணை 289)

இப்பாடல் அடர்த்தி அதிகமாகி மழைப் பொழிவதைக்காட்டுகிறது. அடர்த்தி அதிகரித்தல் என்பதை செறிதக எனும்சொல்லால் சுட்டபடுகிறது. காற்று வீசும் திசைக்கு குறுக்காகஉள்ள மலைகள் மழையைத் தடுப்பதை கூர்ந்து கவனித்தபுலவர்கள் தங்கள் பாடல்களில் அதனை பதிவு செய்துள்ளனர்.

கருவி வானம் தண்டளி தலைஇய

வடதெற்கு விலங்கி விலகுதலைத் தெழிலிய .. [பதி. 31]

என்றும்

வெஞ்சுடர் கரந்த காமஞ்சூல் வானம்

நெடும்பல் குன்றத்துக் குறும்பல மறுகி

தாஇல் பெரும்பெயல் தழைஇய யாமத்து. (நற்றிணை 261)

என்றும் குறிப்பிடுகின்றன. இதற்கு மருதலையாக மலைகள்மேகங்களை தடுத்து சிகரங்களில் மழையை பெய்விக்கின்றன.இவ்வாறு காற்றினால் தள்ளப்படும் மேகம் மலையில் மழைப்பொழிவதை

வளிபொரு மின்னொடு வான்இருள் பரப்பி

விளிவுஉன்று கிளையொடு மேல்மலை முற்றி

தளிபொழி சாரல் ததர்மலர் தாஅய்.. [ பதி . 12]

எனும் பாடல் வரிகள் தெளிவாக விளக்குகின்றன.

சங்க இலக்கியங்கள் என்பவை காலத்தின் பெட்டகங்களாகபண்டை தமிழரின் அழகிய வாழ்வின் அடையாளங்களாக,அறிவியல் சிந்தனைகளின் புதையல்களாகக் காணப்படுகின்றன.அவ்வகையில் மழைக்கான அறிகுறிகளையும் அதற்கானக்காரணங்களையும் பண்டை தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதைஇகட்டுரையின் வழி அறிய முடிகின்றது.


மொழி

மொழிகள் மனிதர்களால் வளர்ந்தவை எனில் மத நூல்கள் குறிப்பிடும் கடவுள்கள் எப்படி உண்மையாக இருக்க முடியும்? மனிதர்களின் கற்பனையாகத் தானே அவை இருக்க முடியும்?

மொழிகள் மனிதனால் வளந்தவைகள் என்பதற்கு என்ன சான்று? உலக சமயங்கள் இதற்கு மாற்றமாக கூறுகிறது.

கடவுள் தான் மொழியை கற்றுக் கொடுத்தார். மனிதர்கள் ஆரம்பத்தில் ஒரே மொழியை பேசினார்கள். வெள்ளப்பெருக்கு வரை ஒரே மொழியை பேசினர்.

கிறிஸ்தவம்

ஆதியகமம் 11:11 வெள்ளப் பெருக்குக்குப் பிறகு முழு உலகமும் ஒரே மொழியைப் பேசியது. எல்லா ஜனங்களும் ஒரே விதமாகப் பேசினர்.

ஆதியகமாம் 11:7 எனவே, நாம் கீழே போய் அவர்களின் மொழியைக் குழப்பி விடுவோம். பிறகு அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளமாட்டார்கள்” என்று சொன்னார். 8 அவ்வாறே, கர்த்தர் ஜனங்களை பூமி முழுவதும் சிதறிப் போகும்படி செய்தார். அதனால் அவர்கள் அந்த நகரத்தைக் கட்டி முடிக்க முடியாமல் போயிற்று. 9 உலகமெங்கும் பேசிய ஒரே மொழியைக் கர்த்தர் குழப்பிவிட்டபடியால் அந்த இடத்தை பாபேல் என்று அழைத்தனர். கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியெங்கும் பரவிப் போகச் செய்தார்.

விளக்கம்: கடவுள் பல மொழிகளை உருவாகியதை இங்கே குறிப்பிடுகிறார்.

இஸ்லாம்

2:31. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.

2:32. அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.

(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பி வைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; … (குர்ஆன் 2:213)

(குர்ஆன் 30:22). மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.

விளக்கம்: மொழிகள் வேறுபட்டு இருப்பது இறைவனால்.

தமிழர் சமயம்

என்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு

நின்றது நூல்என்று உணர் - (அருங்கலச்செப்பு 9)

ஆரம்ப காலத்தில் நூல் என்றாலே இறைவன் வழங்கியதுதான் என்று அருங்கலச்செப்பு கூறுகிறது.

மரபுநிலை திரியா மாட்சிய ஆகி,

உரை படு நூல் தாம் இரு வகை இயல

முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639)

அதை முதல் மற்றும் வழி நூல் என்று பிரித்த தொல்காப்பிய நூல் இறைவன் வழங்கிய தமிழ் இலக்கண நூல் ஆகும்.

அகத்தியமே முற்காலத்து முதனூலென்பதூஉம், அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன்வழி நூலென்பதூஉம் பெற்றாம் (தொல்.பொருள்.649.பேரா.)

மேலும் தமிழ் வளர்க்க தன்னை அனுப்பியதாக திருமூலர் திருமந்திரத்தில் கூறுகிறார்.

பின்னை நின்று என்னே பிறவி பெறுவது

முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யு மாறே (திருமந்திரம் 81)

முடிவுரை

மொழிகள் இறைவன் வழங்கியது மட்டுமே. பிற்கால மொழிகளான ஆங்கிலம், ஹிந்தி போன்றவைகள் இறைவன் வழங்கிய மொழிகளை இணைத்து உருவாக்கப்பட்டது. அவற்றின் மூல கருப்பொருள்களான எழுத்துரு, இலக்கணம், சொற்கள் ஆகியவை வெவ்வேறு மொழிகளை இணைத்து உருவாக்கப்பட்டது கண்கூடு. இவ்வாறு பிரித்தும் சேர்த்தும் செய்யப்படும் மாற்றங்கள் மொழியில் மட்டுமல்ல, மாறாக அரசியல் தத்துவங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள், பொருளாதாரம் போன்ற பல தலைப்புகளில் நீண்டு செல்கிறது. எனவே உலக வேதங்கள் உள்ளடக்கிய நான்மறைகளை வாசிக்கமல் எல்லாவற்றையும் கற்பனையாக யூகமாக பேசுவதை நாம் குறைத்து கொண்டு இந்த நூல்களை கற்க வேண்டும். எனவே கடவுள் உண்டு என்பதை நாம் உணர வேண்டும்