விண்ணுலகப் பயணம் : மிஃஹ்ராஜ்

இஸ்லாம் :

தன் அடியாரை (முஹம்மதை)(கஃபா என்ற) மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (பைத்துல் முகத்தஸ் என்ற) மஸ்ஜிதுல் அக்ஸா வரை ஒரே இரவில் அழைத்துச்சென்ற இறைவன் மிகவும் பரிசுத்தமானவன்” (அல்குர் ஆன் 17:1)

இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்கு தனது உடலுடன் சென்றார்கள். இப்பயணம் மஸ்ஜிதுல் ஹராமில் தொடங்கி முதலில் பைத்துல் முகத்தஸ் சென்றார்கள். ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை 'புராக்' என்னும் வாகனத்தில் அழைத்துச் சென்றார்கள். 'புராக்' எனும் வாகனத்தை மஸ்ஜிதுல் அக்ஸாவுடைய கதவின் வளையத்தில் கட்டிவிட்டு நபிமார்கள் அனைவருக்கும் இமாமாக தொழுகை நடத்தினார்கள்.

பிறகு அதே பைத்துல் முகத்தஸிலிருந்து முதல் வானத்திற்கு ஜிப்ரீல் அழைத்துச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்களுக்காக ஜிப்ரீல் கதவைத் திறக்கக்கோரவே அவர்களுக்காக கதவு திறக்கப்பட்டது. அங்கு மனிதகுல தந்தை ஆதம் (அலை) அவர்களை சந்தித்தார்கள். ஆதம் (அலை) நபி (ஸல்) அவர்களுக்கு முகமன், ஸலாம் கூறி வரவேற்றார்கள். அல்லாஹ் ஆதமின் வலப்புறத்தில் நல்லோர்களின் உயிர்களை நபி (ஸல்) அவர்களுக்குக் காண்பித்தான். அவ்வாறே கெட்டவர்களின் உயிர்களை அவரது இடப்புறத்தில் காண்பித்தான். பிறகு இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யஹ்யா, ஈஸா (அலை) ஆகியோரை சந்தித்தார்கள். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் ஸலாமுக்கு பதில் கூறி அவர்களை வரவேற்றார்கள்.

அங்கிருந்து மூன்றாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யூஸுஃப் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூறினார்கள். அவர்கள் ஸலாமுக்குப் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு நான்காவது வானத்திற்குச் சென்று இத்ரீஸ் (அலை) அவர்களை சந்தித்தார்கள். நபி (ஸல்) ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு ஐந்தாவது வானத்திற்குச் சென்று ஹாரூன் (அலை) அவர்களை சந்தித்து ஸலாம் கூற அவர்களும் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு ஆறாவது வானத்திற்குச் சென்று மூஸா (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி வரவேற்றார்கள். மூஸா (அலை) அவர்களைக் கடந்து நபி (ஸல்) சென்றபோது மூஸா (அலை) அழ ஆரம்பித்தார்கள். ''நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?'' என்று கேட்டதற்கு, ''எனக்குப் பிறகு அனுப்பப்பட்டவரின் சமுதாயத்தில் சொர்க்கம் செல்பவர்கள் எனது உம்மத்தில் சொர்க்கம் செல்பவர்களைவிட அதிகமாக இருப்பதால் நான் அழுகிறேன்'' என்று கூறினார்கள். பிறகு ஏழாவது வானத்திற்கு சென்றார்கள். அங்கு இப்றாஹ்ீம் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற, பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். ஏழு வானங்களில் சந்தித்த அனைத்து இறைத்தூதர்களும் முஹ்ம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

பிறகு 'ஸித்ரதுல் முன்தஹ்ா'விற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதன் பழங்கள் ஹ்ஜர் நாட்டு பானைகளைப் போன்றும், அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போன்றும் இருந்தன. பிறகு ஸித்ரதுல் முன்தஹாவை தங்கத்தினாலான வண்ணத்துப் பூச்சிகளும், பிரகாசமும், பல நிறங்களும் சூழ்ந்துகொண்டவுடன் அது மாற்றமடைந்தது. அல்லாஹ்வின் படைப்பினங்களில் எவரும் அதன் அழகை வருணிக்க முடியாத அளவுக்கு அது இருந்தது. பிறகு அங்கிருந்து பைத்துல் மஃமூருக்கும்* அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதில் ஒவ்வொரு நாளும் 70,000 மலக்குகள் நுழைகிறார்கள். ஒருமுறை நுழைந்தவர்கள் மீண்டும் அங்கு வருவதில்லை.

பிறகு சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு முத்து வளையங்கள் இருந்தன. சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது. பிறகு அங்கிருந்து அதற்கு மேல் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு எழுதுகோள்களின் சப்தங்களைக் கேட்டார்கள்.

பிறகு அல்லாஹ்விடம் அழைத்து செல்லப்பட்டார்கள். (சேர்ந்த) இரு வில்களைப் போல் அல்லது அதைவிடச் சமீபமாக அல்லாஹ்வை அவர்கள் நெருங்கினார்கள். அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர்களுக்குப் பல விஷயங்களை அறிவித்துக் கொடுத்தான். ஐம்பது நேரத் தொழுகைகளை அவர்கள் மீது கடமையாக்கினான்.

அவர்கள் திரும்பி வரும்போது மூஸா (அலை) அவர்களை சந்தித்தார்கள்.
மூஸா (அலை) ''தங்கள் இறைவன் தங்களுக்கு என்ன கடமையாக்கினான்'' என்று கேட்க நபி (ஸல்) ''ஐம்பது நேரத் தொழுகைகளைக் கடமையாக்கினான்'' என்று கூறினார்கள். மூஸா (அலை) ''நீங்கள் திரும்பிச் சென்று உங்களது இறைவனிடம் இதைக் குறைக்கச் சொல்லுங்கள்'' என்று கூறவே நபி (ஸல்) ஆலோசனைக் கேட்பதைப் போன்று ஜிப்ரீலைப் பார்த்தார்கள். ஜிப்ரீல் ''நீங்கள் விரும்பினால் அப்படியே செய்யுங்கள்'' என்று கூறவே நபி (ஸல்) அதை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்விடம் திரும்பச் சென்றார்கள். அல்லாஹ் பத்து நேரத் தொழுகைகளைக் குறைத்தான்.

திரும்பும்போது மூஸா (அலை) அவர்களைச் சந்திக்கவே அவர்கள் மீண்டும் குறைத்து வர ஆலோசனை கூற, நபி (ஸல்), அல்லாஹ்விற்கும் மூஸாவுக்கும் இடையில் திரும்பத் திரும்ப சென்று வந்ததில் அல்லாஹ் ஐம்பதை ஐந்து நேரத் தொழுகைகளாக ஆக்கினான். மூஸா (ஸல்) மீண்டும் சென்று குறைத்து வரும்படி கூறவே, நபி (ஸல்) அவர்களுமோ ''நான் எனது இறைவனிடம் திரும்பச் சென்று இதற்கு மேல் குறைத்துக் கேட்பதற்கு வெட்கப்படுகிறேன். என்றாலும் நான் இதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன். முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்'' என்று கூறிவிட்டார்கள். அதற்குப் பின் நபி (ஸல்) சற்று தூரம் சென்று விடவே, அல்லாஹ் அவர்களை அழைத்து ''நீங்கள் எனது கடமையையும் ஏற்றுக்கொண்டீர்கள். எனது அடியார்களுக்கு இலகுவாகும் ஆக்கிவிட்டீர்கள்'' என்று கூறினான். (ஜாதுல் மஆது)

மிஃராஜில் நபி (ஸல்) அல்லாஹ்வை பார்த்தார்களா? என்பதில் சில மாறுபட்ட கருத்துகள் உள்ளன என்று இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறியபிறகு. இது விஷயத்தில் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களின் கருத்துகளையும் மற்ற அறிஞர்களின் கருத்துகளையும் எடுத்துக் கூறியுள்ளார். இப்னுல் கய்யிம் (ரஹ்) இது விஷயத்தில் செய்திருக்கும் ஆய்வின் சுருக்கமாவது:

''நபி (ஸல்) அல்லாஹ்வை கண்கூடாக பார்க்கவில்லை. அவ்வாறு எந்த நபித்தோழரும் கூறவுமில்லை'' என்பதாகும். ஆனால், இப்னு அப்பாஸ் (ரழி) மூலம் இரு அறிவிப்புகள் வந்துள்ளன. ஒன்று நபி (ஸல்) அல்லாஹ்வைப் பார்த்தார்கள். இரண்டாவது, நபி (ஸல்) அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள். எனவே, மற்ற நபித்தோழர்களின் முடிவுக்கும் இப்னு அப்பாஸின் கருத்துக்குமிடையில் முரண்பாடு இல்லை. ஏனெனில், அல்லாஹ்வை நபி (ஸல்) பார்த்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) கூறுவது உள்ளத்தால் பார்த்ததையே குறிப்பிடுகிறார்கள். மற்ற நபித்தோழர்கள் அல்லாஹ்வை நபி (ஸல்) பார்க்கவில்லை என்று கூறுவது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை கண்ணால் பார்க்கவில்லை என்பதைக் குறிப்பிடுவதாகும்.

தொடர்ந்து இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: அத்தியாயம் நஜ்மில் 'இறங்கினார், பின்னர் நெருங்கினார்' என்ற வசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கம் என்பது ஜிப்ரீல் நெருங்கியதையும் அவர் இறங்கியதையும் குறிக்கிறது. இவ்வாறுதான் ஆயிஷா, இப்னு மஸ்வூத் (ரழி) ஆகியோரும் கூறுகிறார்கள். குர்ஆனின் இவ்வசனத்தின் முன் பின் தொடரும் இக்கருத்தையே உறுதிபடுத்துகிறது. 'மிஃராஜ்' தொடர்பான ஹதீஸில் வந்துள்ள 'தனா ஃபததல்லா' என்பது அல்லாஹ் நெருங்கியதைக் குறிப்பிடுகிறது. அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பற்றி 'நஜ்ம்' அத்தியாயத்தில் குறிப்பிடப்படவில்லை. மேலும், ஸித்ரத்துல் முன்தஹ்ாவிற்கு அருகில் அவர் அவரைப் பார்த்தார் என்று 'நஜ்ம்' அத்தியாயத்தில் உள்ள வசனம் நபி (ஸல்) வானவர் ஜிப்ரயீலை அங்கு பார்த்ததையே குறிப்பிடுகின்றது. நபி (ஸல்) ஜிப்ரயீலை அவரது முழு உருவத்தில் இருமுறை பார்த்தார்கள். ஒன்று பூமியிலும், மற்றொன்று ஸித்ரத்துல் முன்தஹ்ாவிற்கு அருகிலுமாகும். (இத்துடன் இப்னுல் கய்யிமின் கூற்று முடிகிறது.) (ஜாதுல் மஆது. மேலும் விவரங்களுக்கு பார்க்க, புகாரி 1 : 50, 455, 456, 470, 471, 481, 545, 550. 2 : 284. முஸ்லிம் 1 : 91-96)

நபி (ஸல்) அவர்களின் இருதயம் இப்பயணத்திலும் பிளக்கப்பட்டது என்று சில அறிவிப்புகளில் வந்துள்ளது. மேலும், இப்பயணத்தில் நபி (ஸல்) பலவற்றைக் கண்டார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு பாலும், மதுவும் வழங்கப்பட்டது. நபி (ஸல்) பாலை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அதற்கு ''நீங்கள் இயற்கை நெறிக்கு வழிகாட்டப்பட்டீர்கள். நீங்கள் மதுவை எடுத்திருந்தால் உங்களது சமுதாயத்தினர் வழிகெட்டிருப்பார்கள்'' என்று கூறப்பட்டது.

ஸித்ரத்துல் முன்தஹ்ாவின் வேரிஇருந்து நான்கு ஆறுகள் வெளியாகுவதைப் பார்த்தார்கள். இரண்டு ஆறுகள் வெளிரங்கமானது. இரண்டு ஆறுகள் உள்ரங்கமானது, வெளிரங்கமான இரண்டு ஆறுகள் நீல் (நைல்), ஃபுராத் ஆகும். இவ்விரண்டின் பிறப்பிடம் அங்கிருந்துதான் உருவாகிறது. மற்ற உள்ரங்கமான இரண்டு ஆறுகள் சுவர்க்கத்தில் உள்ள ஆறுகளாகும். நீல், ஃபுராத் நதிகளை நபி (ஸல்) பார்த்தது, 'இவ்விரு பகுதிகளிலும் இஸ்லாம் பரவும்' என்பதற்கு ஒரு முன்னறிவிப்பாக இருக்கலாம். (இரகசியங்களை அல்லாஹ்வே மிக அறிந்தவனாக இருக்கின்றான்.)

நரகத்தின் காவலாளியைப் பார்த்தார்கள். அவர் சிரிப்பதே இல்லை. முகமலர்ச்சியும் புன்முறுவல் என்பதும் அவரிடம் காணமுடியாத ஒன்று. அவரது பெயர் மாலிக். மேலும், செர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்தார்கள். அனாதைகளின் சொத்துகளை அநியாயமாகப் பயன்படுத்திக் கொண்டவர்களைப் பார்த்தார்கள். அவர்களுடைய உதடுகள் ஒட்டகங்களின் உதடுகளைப் போன்று இருந்தது. அம்மிக் குழவிகளைப் போன்ற நெருப்புக் கங்குகளை அவர்களது வாயில் தூக்கி எறியப்படவே அது அவர்களின் பின் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தது.வட்டி வாங்கி வந்தவர்களையும் பார்த்தார்கள். அவர்களது வயிறு மிகப் பெரியதாக இருந்ததால் அவர்கள் தங்களது இடங்களிலிருந்து எந்தப் பக்கமும் திரும்ப சக்தியற்றவர்களாக இருந்தனர். ஃபிர்அவ்னின் குடும்பத்தாரை நரகத்தில் கொண்டு வரப்படும்போது அவர்கள் இவர்களைக் கடந்து செல்வார்கள். அப்போது அவர்கள் இவர்களை மிதித்தவர்களாகச் செல்வார்கள்.விபசாரம் செய்தவர்களையும் பார்த்தார்கள். அவர்களுக்கு முன் கொழுத்த நல்ல இறைச்சித் துண்டும் இருந்தது. அதற்கருகில் துர்நாற்றம் வீசும் அருவெறுப்பான மெலிந்த இறைச்சித் துண்டும் இருந்தது. அவர்கள் இந்த துர்நாற்றம் வீசும் இறைச்சித் துண்டையே சாப்பிடுகின்றனர். நல்ல கொழுத்த இறைச்சித் துண்டை விட்டுவிடுகின்றனர்.பிற ஆண்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டு, அதை தங்களது கணவன் மூலம் பெற்ற குழந்தை என்று கூறும் பெண்களையும் பார்த்தார்கள். இத்தகைய பெண்கள் மார்பகங்கள் கட்டப்பட்டு அதில் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.நபி (ஸல்) மிஃராஜ் போகும்போதும் வரும்போதும் மக்காவாசிகளின் வியாபாரக் கூட்டத்தை வழியில் பார்த்தார்கள். அவர்களின் ஓர் ஒட்டகம் தவறி இருந்தது. அவர்களுக்கு நபி (ஸல்) அதை காண்பித்துக் கொடுத்தார்கள். அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்களின் மூடி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் இருந்து தண்ணீரை அருந்திவிட்டு மீண்டும் அப்பாத்திரத்தை அவ்வாறே மூடி வைத்து விட்டார்கள். அன்று இரவு விண்வெளிப் பயணம் முடித்து திரும்பிய நபி (ஸல்), காலையில் மக்களுக்கு இப்பிரயானக் கூட்டத்தைப் பற்றிக் கூறியது நபி (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் உண்மை என்பதற்குரிய மிகப்பெரிய ஆதாரமாக அமைந்தது.(ஸஹீஹ்ுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: காலையில் நபி (ஸல்) தங்களது கூட்டத்தாரிடம் அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை அறிவித்தார்கள். இதைக் கேட்ட அம்மக்கள் முன்பைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்களுக்கு நோவினையும், தொந்தரவும் கொடுத்து அவர்களை 'பெரும் பொய்யர்' என்று வருணித்தனர். ''உங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்'' என்று கேட்டனர். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் கண்முன் பைத்துல் முகத்தஸைக் காண்பிக்கவே நபி (ஸல்) அவர்கள் அம்மக்கள் கேட்ட அடையாளங்களை அப்படியே கூறினார்கள். அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் போகும் வழியில் சந்தித்த வியாபாரக் கூட்டத்தையும், அது எப்போது மக்காவிற்கு வரும் என்பதையும், அவர்களது காணாமல்போன ஒட்டகத்தைப் பற்றியும் மக்காவாசிகளுக்கு அறிவித்தார்கள். நபி (ஸல்) எவ்வாறு கூறினார்களோ அனைத்தும் அவ்வாறே இருந்தன. இருப்பினும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் நிராகரிக்கவே செய்தனர். சத்தியத்தை விட்டும் வெகுதூரம் விலகியே சென்றனர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது)

மக்கள் இந்நிகழ்ச்சியை பொய்யென்று மறுத்துக் கூறியபோது அபூபக்ர் (ரழி) இந்நிகழ்ச்சியை உண்மையென்றும், சத்தியமென்றும் ஏற்றுக் கொண்டதால்தான் அவர்களை 'சித்தீக்' (வாய்மையாளர்) என்று அழைக்கப்பட்டது. (இப்னு ஹிஷாம்)

இந்த வானுலகப் பயணம் நடைபெற்றதற்குரிய மகத்தான காரணத்தைப் பற்றிக் கூறும்போது மிக சுருக்கமாக ''நாம் நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே'' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்

அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹ்ம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற பள்ற்யிலிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடைய செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும், உற்று நோக்கியவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 17:1)

இது நபிமார்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் நியதியாகும். பல இறைத் தூதர்களுக்கு இவ்வாறு பல அத்தாட்சிகளை அல்லாஹ் காண்பித்திருக்கிறான்.


சான்றுகள் : 

http://tntjrahmathnagar.blogspot.com/2009/07/blog-post_8297.html
_____________________________________

சித்தர் திருமூலர் பிரபஞ்ச பயணம் 
******************************

இந்தியா PSLபி எஸ் எல் வி சி 23 என்ற
ராக்கெட்டை ஏவி 5 செயற்கை கோல்களை
ஜூன் 30 இல் விண்ணில் வெற்றிகரமாக
நிறுவியது . இந்த வெற்றியை பற்றி பாரத
பிரதமர் “பாஸ்காரரும் ஆரிய பட்டரும் செய்த
விண்வெளி ஆராய்ச்சியின் தொடர்ச்சி” என்று
புகழ்ந்துகூறினார் . நமக்கு மகிழ்ச்சிகும்
பெருமைக்கும் உரிய சாதனை .

இன்றைய வின் வெளி பயணத்தில் முக்கியம்
மானது பயண சாதனம் , வேகமும் காலமும்.
மற்ற ஒன்று திரும்பிவருவது ..

ஆனால் 4000 ஆண்டுக்கு முன் தமிழ் சித்தர்
திருமூலர் இந்த பிரபஞ்சத்தை சுததிவந்த்தார் .

இப்பிரபஞ்சம் 1008 அண்டம் கொண்டது என்று
சொல்லியதுடன் அவரின் பிரபஞ்ச பயணத்தை
பதிவு செய்துள்ளார் .

உலகில் பிரபஞ்ச
பயணத்தை பதிவு செய்த முதல்
வின்வெளிபயணி திரு மூலர் . அவரின்
அனுபவம் இன்றைய விண்வெளி பயணத்திற்கு
உதவலாம் . பல சித்தர்கள் வின்வெளிபயணம்
செய்துள்ளார்கள் ஆனால் அவர்களின்
பயணபதிவுகள் நமக்கு கிடைக்கவில்லை.

இன்று வின் உலக மனிதர்கள் உள்ளர்களா
அல்லது இல்லையா எண்று விவாதிக்கிறோம் .

திரு மூலரின் வின் வெளி பயணத்தில் அவர் சந்தித்த வின் உகலக மனிதர்களையும்
பார்ப்போம் .

பிரபஞ்ச பயண தயாரிப்பு .

சித்தர்களின் உச்ச பச்ச சித்தி கெவுணம்
பாய்தல் என்ற பிரபஞ்சபயணம் .

அதற்க்கு தயாரிப்பாக . சிவயோகம் செய்து
காய சித்தி செய்து உடலை ஒளி உடலாக
மாற்றவேண்டும் இதனால் காலத்தை
வெல்லலாம் மற்றும் கன்னக்கில்லா வேகத்தில்
பயணிக்க முடியும் .

வின்வெளி பயணம்
செய்ய குளிகை என்ற சாதனம் செய்தனர் . .

குளிகை என்பது பாத ரசத்தை
மூலப்பொருளாக கொண்டது .. திரவ
பாதரசத்தை அனுமாற்றம் செய்து
திடப்பொருளாக மாற்ற வேண்டும் அதன் பின்
உலோகங்கள் ரத்தினங்கள்(உபரசங்கள் 120)
பாசானங்கள் ஆகியவற்றின் அணுக்களை
(சதது) திடரூப பாதரசத்துக்கு கொடுத்து
(சாரணை ) பாதரசத்தின் நிறையை தங்கத்தின்
நிறைக்கு சமமாக கொண்டு வரவேண்டும் ..

இவ்விதம் ஒருமுறை சாரணை செய்தால்
அந்த்த குளிகைக்கு சகம் என்று பெயர் .

பதினான்குமுறை சாரணை செய்தால் “கமலினி
“என்ற குளிகை ஆகும !7 முறை சாரணை
செய்தால் “சொரூபம்” என்ற குளிகை ..

கமலினியும் சொருபமும் விண்வெளி
பயணத்திற்கு பயன்படுத்தினார்கள் . .
.
அண்டம் இருந்த்த அடவு சொன்னார் நந்தி
தாண்டியது அஞ்சும் தனித்த அடுக்காக .

ஒண்டிஇருந்தது ஓடி நுழை என்றார்
கண்டி கமலினி காணீர் சொரூபமே
சொருபத்தை வாய்வைத்து சூட்டிக் கமலினி
அரூபத்தை ஜோதிபோல் அண்டம்
நுழைந்திட்டேன்
நிருபத்த கற்பம் நிறையான யோகியும்
தரு வோத்த ஞான சதகோடி சித்தரே
சித்தரை கண்டேன் தெவிட்டாதே பாழித்தேன்
ஓதிய சித்து உனக்கென்ன ஆச்சென்றார்
அத்திய கோடி அறுபது ஆச்சென்றேன்
எத்தி இளஞ்சித்து இன்னம் பார் என்றாரே.

திருமூலர் கருக்கிடை வைத்தியம் பாடல் 353,
354

நந்தி என்ற அம்மையாப்பனாகிய சிவன்
பிரபஞ்சத்தை பற்றி விளக்கி சொன்னார் .

இப்பிரபஞ்சம் தனித்தனியான ஐந்து அடுக்கு
கொண்டது ஒன்றை ஒன்று ஒட்டி இருந்தது ..

கமலினி என்ற குளிகையை உடலில்
அணிந்தேன் .

சொரூபம் என்ற குளிகையை
வாயில் அடக்கினேன் .,

அண்டவெளி உள்லேநுழைய அண்டத்தின்
வேகம் எனது வேகமும் ஒத்து போகவேண்டும்
. எனவே ஓடிவந்து அண்டத்துக்குள் நுழை
என்று நந்தி சொன்னார் .

நான் ஒளி உடம்புக்கு மாறினேன் வேகமாக
ஓடிவந்து அண்டத்துள் நுழைந்து விட்டேன்..

நான் நுழைந்த அண்டத்தில் கற்பம் உண்டு
ஞானத்தில் முதிர்ந்தத கோடிகணக்கான
சித்தர்கள்(அறிவியலார்) இருந்ததனர் .

சித்தர ஒருவரைகண்டு அவருக்கு பணிவான
வணக்கம் செய்தேன் அந்த விண்வெளி சித்தர்.என்னிடம்
“எத்தனை வகை சித்தி செய்து உள்ளீர்கள்
“என்றார் .

நான் .” அறுபது கோடி சித்திகள் அடைந்து
உள்ளேன் “. என்றேன்
அதற்கு அவர் “. இன்னும் நீங்கள் இளமையான
சித்தர். மேலும் பல சித்திகள் செய்து
பாருங்கள்” என்றார் ..

எனவே நான் அங்கிருந்து
வெளியேறினேன்
என்றே நுழைந்தேன் அயலொரு அண்டத்தில்
கண்டேன்சிததரை கடிபதுமை போல .

தண்டே கை கூப்பினேன் தடவினேன் தட்டது
அண்ட நிராகாரத்து அடைந்த பெரியோரை
பாடல் 356

பெரியோர் தனைகண்டேன் பேராய் வலம்
வந்தேன்
நரியோ மௌனம் மென்று அப்பால்
நுழைந்திட்டேன்
பரிவை அதுகொண்டு பாய்ந்து முடிஏறி
விரிவாம் அடுக்கில் விரைந்து நுழைந்தேனே.
பாடல் 357

அதன்பின் வேறு ஒரு அண்டத்துள்
நுழைந்திட்டேன்..

அங்கு சித்தர்களை
கண்டேன். அவர்கள் அசையாத பொம்மை போல்
இருந்தார்கள். .

அவர்களை கைகூப்பி
வணங்கினேன்..

தடவிப்பர்த்தேன் . அவர்கள்
தட்டுப்படவில்லை.

அவர்கள் நிராகாரன் என்ற கடவுள்நிலை
அடைந்தத பெரியவர்கள் என்று அறிந்த்தேன்
.அவர்களை வலம் வந்தேன் . அவர்கள் மௌன
யோகத்தில் இருக்கிறார்கள் என்று வியந்தேன்
அந்த அண்டத்து உச்சிக்கு சென்றேன்.

அதில் இருருந்த்து அடுத்த அடுக்குக்குள் விரைவாய்
நுழைந்திட்டேன்..

நுழைந்திடில் அண்டத்தில் நூல்பார்த்த
சித்தர்கள்
அழைந்திடு நூல்சொன்னது ஆர்தான்
எனகேட்டேன்
தனஞ்செய வீசண் தாய்கண்டு சொன்னது
களைந் தேழு லட்சம் கரைகண்டு பார்த்தோமே
பாடல் 358

பார்த்தோம் என்றிறே பராபர சித்தரே
கார்த்தே இந்நூல்தனை கண்டு சுருக்காததேன்
சேர்த்ததே சுருக்க சிவனாலும் கூடாது
மார்த்ததே உண்டாகில் மகத்துவம் சொல்வீரே
பாடல் 359

சொல்லிடும் என்றீர் சுகஞான சித்தர்கள்
மல்லிய நந்தி தான் வைத்தர்கேள் ஆயிரம்
பல்லுயிர் பார்க்க பகர்ந்தேழு லட்சமும்
க்லலுயிர் வெட்டுபோல் காட்டினார் பார்த்திடே
பாடல் 360

நான் நுழைந்த அண்டத்தில் சித்தர்கள்
நூல்களை பார்த்து கொண்டு இருந்தார்கள் ..

அவர்களிடம் “ இந்த்த நூல்களை எழுதியது
யார்” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் “ஈசன் பார்வதியிடம் சொன்ன
எழு லட்சம் பாடல்கள் . இவற்றை
ஆராய்ந்துபார்த்துவிட்டோம் “ என்றனர் .

அதற்கு நான் “ இறைவனுக்கு ஒப்பான
சித்தர்களே !! ஆராய்ந்து பார்த்தோம் என்றீர்கள்.

அதை சுருக்காத்து யேண்? “என்றேன்
அவர்கள் “ இவற்றை சுருக்க ஈசனாழும ஆகாது
. அப்படி யாராகிழும் சுருக்கியிருந்ததால் ,
அந்த மகத்துவமான நூல் பற்றி சொல்லுங்கள்
“ என்றனர்.

நான் ‘நந்தி என்பவர் உலகில் பலஉயிர்கள்
பார்த்து பயன் பெற எழுலட்சம் பாடல்களை
சுருக்கி ஆயிரம் பாடல்களாக எழுதி உள்ளார் .

இது கல்வெட்டில் எழுதியது போன்ற
தெளிவானது . அதை படித்து பாருங்கள் “
என்றேன்.

இந்தபிரபன்ச்ம ஐந்து
மடக்குடன் 1008 அண்டம் கொண்டது என்று
சித்தர்கள் கணக்கிட்டு உள்ளனர் இன்றைய
பிரபஞ்ச அறிவியல் காணாதது , மேலும் நமது பூமி பிரபஞ்சத்தில் எந்த இடத்தில் உள்ளது
என்பதை சொல்லி உள்ளார் திடுமூலர் .
அவற்றை பார்ப்போம் .

. பார்த்திடு என்றிறே நீர்பார்கும் நூல்
எங்குண்டு
தேர்த்து மடக்குந் தச்சன பாகத்தில்
ஆர்த்திடு ஒரு நூற்றுஅறுபதாம் அண்டத்தில்
கோர்த்திடு சித்தர் குலாவிப் படிப்பபதே
திரு மூலர் கருக்கிடை வைத்தியம் பாடல் 361

படிக்கின்ற நூலில் பயனெல்லாம் சொல்லுமோ
படிக்கின்ற நூலில் பாய்சுமோ சாரணை
படிக்கின்ற நூலில் பறித்தான் குருவாமோ
படிக்கும் பதினாறும் பாங்காமோ சித்தரே
திரு மூலர் கருக்கிடை வைத்தியம் பாடல் 362

பாங்காமோ எட்டெட்டும் பலபல சித்தொடு
வாங்காமல் ஆடலாம் மற்றோர்க்கு கிட்டாது
தேங்காமல் தேங்கும் சிவயோக பூரணம்
தூங்காமல் தூங்கும் சொருபத்தை காட்டுமே
திரு மூலர் கருக்கிடை வைத்தியம் பாடல் 363

பொருள் பாடல் 3 61
வேற்று கிரக (சித்தர்கள் ) மனிதர்கள் என்னிடம்
(திரு மூலரிடம் ) “ சிவன் எழுதிய எழு லட்சம்
பாடல்களை சுருக்கி ஆயிரம் பாடல்களாக
பாடப்பட்ட நூலை படிக்க சொன்னிரே .

அந்த
நூல் எங்கு உள்ளது:? “
என்றனர் .

நான் (திருமூலர்) “” இந்த அண்டம் உள்ள
மடக்கிற்கு( அடுக்கு ) முன்பு உள்ள அடுக்கில்
160 ௦ வது அண்டத்தில் பூமியில் சித்தர்கள்
குழுவாக விரும்பிப்படிக்கும் நூல் ( திருமூலர் ) நந்தி நூல் 1000 “
பொருள் பாடல் 3 6 2 .
மேல் உலகத்தோர் “இந்தநூல் சிவன் சொன்ன
எல்லா பயன் பாடுகளை சொல்லுமா ?
பாதரசத்திர்க்கு சாரணை செய்து குளிகை
ஆக்கும் முறை சொல்லுமா ?

தங்கத்தை குரு
மருந்தாக மாற்றும் முறை சொல்லப்பட்டு
இருக்கிறதா ? சிவன் சொன்ன பதினாறு
அத்தியாயங்கள் அதில் உண்ட ?” என்றனர்
பொருள் பாடல் 3 6 3

நான் “ இவை அனைத்தும் உள்ளது . மேலும்
64 சித்திகள் பெறும்முறை ,. பல சித்து
என்னும் அபூர்வ செயல் முறைகள்.

சொல்லப்பட்டு உள்ளது செய்து பயன்
பெறலாம் சிவயோகம் செய்முறை
முழுமையாக சொல்லப்பட்டது .

துங்காமல்
தூங்கி என்ற சொரூப சித்தி என்ற முக்தி நிலை
பெறலாம் . . இது சிவ யோகிக்கு கிடைக்கும்
பிறருக்கு கிடைக்காது .” என்றேன்
திரு மூலர் கருக்கிடை வைத்தியம் பாடல்

காட்டும் மென்றீர் நூலை கைக்குள்ளாறீபேர
்சொல்லும்
நாட்டிய வாசிக்கு குருநாத நந்தி தான்
கூட்டினார் சித்தர்க்குக்கொடுத்தார் தான்
இந்நூலை
ஆட்டிய மூலர் தான் அறைநத நூல் என்பரே
திரு மூலர் கருக்கிடை வைத்தியம் பாடல் 364

அறைநதுநீர் சொல்லவோ என்ற திருமூலர்
மறைத்தே மயங்கியே வார்த்தையால்
நீர்சொன்னீர்
குறைந்திடுமோ நூலை கொடுத்தாக்கால்
பூரணம்
உரைதேழு லட்சமும் ஒண்ணாக் கரிதென்னே
திரு மூலர் கருக்கிடை வைத்தியம் பாடல் 365

அரிதல்ல காணும் அகப்பட்டால் வாசிதான்
புரிதல்ல மூலத்தில் புகட்டினால் வாசியை
எருதல்ல நந்தி எழுநூறும் ஒணறாகப
பெரிதல்லோ நூலை பேசவறி நீரே
திரு மூலர் கருக்கிடை வைத்தியம் பாடல் 366
பொருள் பாடல் 364

“சொருப சித்தியை காட்டும் நூல் எழுதியவர்
பெயர் சொல்லுங்கள்”
என்றனர் ( வேறு உலகத்தார் )
நான் “ எனக்கு வாசி யோகம் சொல்லிக்
கொடுத்து இந்த நூல் எழுத குருவானவர்
நந்தி என்ற சிவன் .

அதை சுருக்கி எழுதி
சித்தர்களுக்கு கொடுத்தவர் திரு மூலர் என்று
சொல்லு வார்கள் “ என்றேன் .

பொருள் பாடல் 365

“சிவன் சொன்ன ஏழுலட்சம் பாடலை சுருக்கி
எழுதுவது அரிதான செயல் . அத்தகைய
அருமையான நூலை திரு மூலனாகிய நான்
எழுதினேன் என்றால் நூலின் பெருமை
குறைந்து விடும் என்று கருதினீர்கள் .

ஆகையால் நூல் எழுதியவர் பெயரை
மறைத்தும் தெளிவாக சொல்லாமல்
மயக்கியும் நீர் சொன்னீர் “ என்று
சொன்னார்கள் வேறு உலக வாசிகள்
பொருள் பாடல் 366

பேசுவதற்கு அரிதான நந்தி எழுதிய
எழுலட்சம் பாடல்களை அவரே சுருக்கி 7 0 0
பாடல்களாக எழுதி உள்ளார் .

மூலாதாரத்தில்
இருந்து வாசி யோகம் செய்து வாசி யோகம்
சித்தி பெற்றவருக்கு .

இவ்விதம் சுருக்கி
எழுதுவது அரிதான செயல் இல்லை . வாசி
யோகா சித்தர்கள் பெற்ற உயர்ந்த அறிவால்
சிவனின் பாடல்களை.. புரிந்து அதன் சாரத்தை
சுருக்கி விடுவார்கள் .

இந்த பாடல்களில் ஒரு பெரிய உணமை
உள்ளது . சிவன்இந்த பூமியிலுள்ளவர்களுக்கு.அறிவியல் போதித்து உள்ளார் .

மேலும்
வேற்று உலக மக்களுக்கும் அதே அறிவியல்
சொல்லி உள்ளார் . .
  

melum vaasikka :' https://araneriislam.blogspot.com/2019/10/blog-post_78.html

1 கருத்து:

  1. "தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே
    தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே
    தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம் உள்ளே
    தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே". (திருமந்திரம் - 129)

    https://www.kamakoti.org/tamil/ttm1.htm

    பதிலளிநீக்கு