எத்தனை பிறவி உண்டு? / ஏழேழு ஜென்மாமா? ஒரே ஜென்மமா?

தமிழர் சமயம் 

 
பல பிறப்புகள் என்கிற வாதமுமும் இம்மை மறுமை என இரண்டே பிறப்புகள் என்றும் பலர் பல விதமான கொள்கைகளை முன்மொழிவதை நாம் காணலாம். அதற்கு ஆதாரமாக பல செய்திகளை அவர்களை கூறும்பொழுது அதன் மூலத்தையும் உண்மைத் தன்மையையும் ஆராய்வது அவசியமாகிறது. ஏனென்றால் பௌதீக விதிக்கு மீறிய நிகழ்வுகளாக பிறப்பும் அதன் இரகசியங்களும் இருக்கிறது. 
 
ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு (பேதைமை:835)

பதவுரை: 
ஒருமை-ஒருபிறப்பு,தனிமை; 
செயல்-செய்தல்; 
ஆற்றும்-செய்யும்; 
பேதை-அறிவிலி; 
எழுமையும்-எழுபிறப்பும், நீண்ட காலத்தும்; 
தான்-தான்; 
புக்கு-புகுந்து; 
அழுந்தும்-ஆழ்வதற்குக் காரணமாகிய; 
அளறு-நரகம், நிரயம்.

மணக்குடவர் உரை: : பேதை ஒரு பிறப்பின் கண் செய்யும் செயலாலே செய்ய வல்லவன், எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை. புக்கழுந்தல்- ஒருகால் நரகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல்.

எமது மாற்று உரை: அறிவிலி தனிமையில் செய்யும் செயலாலே, இவ்வுலகில் படும் துன்பத்துடன் மீண்டும் எழும் வாழ்க்கையிலும் அவன் நரகத்தில் புகுத்தப்பட்டு அழுத்தப்படுவான்.

குறிப்பு: "எழுமை" என்கிற பதத்தை ஏழு பிறவி என வரையறுப்பது மாபெரும் பிழை என்பதற்கு சான்று இந்த குறள்.

    • "எழுமையில் அளறு" அதாவது "மீண்டும் எழக்கூடிய வாழ்வில் நரகம்" என்கிற வலுவான கருத்து, ஏழுபிறவி என்கிற கருத்தை உடைத்து எறிகிறது.
    • எழுமை என்பதனை "ஏழு" என்று பொருள் கொண்டால், ஏழு பிறவியிலும் நரகம் என்ற கருத்து வரும். ஏழு பிறவி என்பது இவ்வுலகில் நிகழும் என்றால், நரகத்தை நாம் இங்கு கண்டதுண்டா? அல்லது நம்முடன் வாழும் நபர் யாராவது நரகில் வாழ்கின்றனாரா?
    • முதல் பிறவியில் ஒருவன் பாவங்கள் செய்து இருந்தால் கூட அடுத்த ஆறு பிறவியில் தான் நரக வாழ்க்கை இருக்குமே தவிர இதில் குறிப்பிட்டது போல ஏழு பிறவியில் அல்ல.
    • நரகம் என்பது இடத்தை குறிக்கிறதா அல்லது வாழ்க்கை நிலையை குறிக்கும் சொல்லா என்று யோசித்தால் அது ஒரு குறிப்பிட்ட தன்மைகள் கொண்ட இடத்தை குறிக்கும் சொல் ஆகும்.
    • கடுமையான வாழ்கை நிலையை "நரகம்" என்று குறிப்பிடுவதாக கொண்டால் கூட வாழ்க்கை முழுவதும் துன்பத்தில் உள்ள யார் ஒருவரையும் உங்களால் காட்ட முடியாது. இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதே வாழ்க்கை.
    • நிதர்சனம் என்னவென்றால் நரகம் முடிவில்லாதது, நெருப்பு சூழ்ந்தது. அதற்கும் இவ்வுலகத்திற்கு தொடர்பில்லை.
    • எழுமையில் மனிதன் "வீடு" அல்லது "அளறு" என இரண்டில் ஒன்றை அடைவான் என்கிற இதன் மறைமுக பொருளானது எழுமையில் ஒருவன் புவியில் பிறப்பான் என்ற ஏழு ஜென்ம இந்துமத கருத்தை புறக்கணிக்கிறது. திருக்குறளில் ஏழு பிறவி கொள்கையை நிறுவ "எழுமை" என்கிற வார்த்தையை பயன்படுத்தும் நபர்கள் திருவள்ளுவருக்கு எதிரானவர்கள். 
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.’ (குறள் எண் 62) 

உரை: எழுபிறப்பினுந் (மறுமையினுந்) துன்பங்கள் சாரா: பழியின்கண் மிகாத குணத்தினையுடைய புதல்வரைப் பெறுவாராயின்.

‘சிறுமையின் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.’ (குறள் எண் 98)

உரை: இனிய சொல்லானது இம்மையில் மட்டுமல்லாது மறுமையிலும் (எழுபிறப்பிலும்) இன்பம் தரும், எனவே இனிய சொற்களையே பேச வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கள்
விழுமம் துடைத்தவர் நட்பு.’ (குறள் எண் 107)

உரை: தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை எழுமை எழுபிறப்பும் (மறுமையிலும்) நினைப்பர்.

‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.’ (குறள் எண் 126)

உரை: ஒரு பிறப்பில் ஆமை கூட்டுக்குள் ஒடுங்குவதுபோல் ஐம்புலன்களையும் ஒருவன் அடக்குவானாகில் அது அவனுக்கு எழுமையும் (மறுமையிலும்) சிறப்பு  சேர்க்கும்.

‘ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.’ (குறள் எண் 398)

உரை: ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி அவனுக்கு இம்மையில் மட்டுமல்லாமல் எழுமையும் (மறுமையிலும்) உதவும் தன்மை உடையது.

‘மனநலத்தி னாகும் மறுமை மற்றஃதும்
இன நலத்தின் ஏமாப் புடைத்து.’ (குறள் எண் 459)

உரை:ஒருவனுக்கு மன நலத்தால் மறுமை இன்பம் உண்டாகும். அதுவும் இனநலத்தால் மேலும் சிறப்புப் பெறும்.

‘இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.’ (குறள் எண் 1042)

உரை: நல்குரவென்று கூறப்படுகின்ற நிகரில்லாத பாவத்தை யுடையவன் இம்மையின்கண்ணும் மறுமையின்கண்ணும் நுகர்ச்சி இன்றி விடும். தன்மம் பண்ணாமையால் மறுமையின்கண்ணும் நுகர்ச்சியில்லாமையாயிற்று. இது நல்குரவு துன்பமாக்கு மென்றது.

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறுவின்று எய்துப ...’
 
என்று அகநானூறு (66 ஆம் பாடல்) மறுமை பற்றிப் பேசுகிறது.

மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு செய்ம்மினென் பாரே - நறுநெய்யுள்
கட்டை யடையைக் களைவித்துக் கண்சொரீஇ
இட்டிகை தீற்று பவர்.’

‘மறு உலகத்தைப் பற்றிப் பேசாமல் இம்மையில் எல்லாச் சுகங்களையும் அனுபவியுங்கள் என்று சொல்பவர்கள் நறுமணம்   கொண்ட நெய்யில் செய்து பாகில் ஊறிய அடையை உண்ணக் கொடுக்காமல், செங்கல்லை உண்ணக் கொடுப்பவர்களைப் போன்றவர்கள்!’ என்கிறார்   மூன்றுறையரையனார் தம் பழமொழி நானூறு என்ற நூலில்.
 
‘எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்
மறுமை அறியாதார் ஆக்கத்தின், சான்றோர்
கழிநல் குரவே தலை’ ... (நாலடியார் 275)

கடல்நீர் அளவு அதிகமிருந்தாலும் அதை மக்கள் தேடிப் பருகுவதில்லை. சிறுகிணற்றின் ஊற்று நீரையே தேடிப் பருகுவார்கள். எனவே, மறுமை  இன்பத்தை நாடி  அறம் செய்யாதாரின் செல்வத்தை விட, சான்றோரின் வறுமையே போற்றத்தக்கது என்கிறது நாலடியார் வெண்பா.

கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;
உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே. - (சிவவாக்கியம் 47)

ஆவையம் பாவையும் மற்றற வோரையும் 
தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும் 
காவலன் காப்பவன் காவா தொழிவனேல் 
மேவும் மறுமைக்கு மீளா நரகமே (திரு .243)

பசு , பெண் , அறவோர் , துறவோர் முதலானோரை மன்னன் காத்தல் வேண்டும் என்கின்றது திருமந்திரம் ; அவ்வாறு  காக்கவில்லையெனில் அரசனுக்கு நரகமே கிட்டும் என்பதை 
எடுத்துரைக்கின்றது

மறுமை நோக்கின்றோ? அன்றே!
பிறர் வறுமை நோக்கின்று
அவன்கை வண்மையே! (புறநானூறு 141)

பொருள்: அவன் வண்மை மறுமையை நோக்கியது அல்ல; அது பிறர் வறுமையை நோக்கியது. 

இஸ்லாம்  


“உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் (உயிரை) கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறுவீராக! (குர்ஆன் 32:11)

(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள். குர்ஆன்  2:4

'மனிதர்களே! (இறந்த பின் உங்களுக்கு உயிர்கொடுத்து) எழுப்புவதைப் பற்றி நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், (அது பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.) நிச்சயமாக உங்களை (ஆரம்பமாக) மண்ணிலிருந்தும், பின்னர் (உங்களை) ஒரு துளி இந்திரியத்திலிருந்தும், பின்னர் இரத்தக்கட்டியிலிருந்தும், பின்னர் (நிறைவாக உருவம் கொடுக்கப்பட்டு) படைக்கப்பட்ட, (அல்லது நிறைவாக உருவம் கொடுக்கப்பட்டு) படைக்கப்படாத தசைக்கட்டியிலிருந்தும் நாம் படைத்தோம்: (என்ற நம் ஆற்றலை) உங்களுக்குத் தெளிவு படுத்துவதற்காகவே (இவ்வாறு விளக்குகிறோம்.) மேலும், நாம் நாடியவைகளைக் கர்ப்பப்பைகளில் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் (நிலைப்படுத்தி) தங்கிவிடும்படி செய்கிறோம்: பின்னர் உங்களை குழந்தையாக நாம் வெளிப்படுத்துகிறோம்: பின்பு உங்கள் வாலிபத்தை நீங்கள் அடைவதற்காக (தக்க வளர்ச்சியைத் தருகிறோம்) இன்னும் உங்களில் (சிலர் பருவ வயதை அடையுமுன்பே) இறந்துவிடுகிறவரும் இருக்கின்றனர்: (அல்லது ஜீவித்திருந்து) யாவையும் அறிந்த பின்னர், ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயதுவரையில் (உயிர் வாழ) விட்டுவைக்கபடுபவரும் உங்களில் இருக்கின்றனர்: மேலும், பூமியை வரண்டதாகப் பார்க்கிறீர்: அப்பொழுது, அதன் மீது நாம் மழையை இறக்கிவைப்போமானால், அது பசுமையாகி, இன்னும் வளர்ந்து, அழகான ஒவ்வொருவகையிலிருந்தும் (உயர்ந்த புற்பூண்டுகளை) முளைப்பிக்கின்றது' (17: 5) 
 

கிறிஸ்தவம் 


அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின் மேல் வீற்றிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 19:28)

மறுஜென்மம் எனபது இறந்து எழுப்பப்படும் காலத்தை குறிப்பதை நாம் இங்கே அறியலாம். 
 

முடிவுரை

எனவே ஏழு ஜென்மம் எனபது ஒரு கற்பனைக் கதை. பிறப்பையும் இறப்பையும் தீர்மானிக்கிற இறைவனிடமிருந்து வந்த புனித நூல்கள் கூறுவது இம்மையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான வாழ்வு, மறுமையில் முடிவில்லா பெருவாழ்வு. இம்மை வாழ்வும் அதன் தன்மைகளையும் நாம் அறிவும். மறுமையில் நிரந்தர சொர்கம் அலல்து நிரந்தர நரகம் வழங்கப்படும் அவரவர் செயலுக்கு ஏற்ப.

செயல், பண்ணுதல், அமல், வினை, கருமம் & கர்மா இவை அனைத்தும் ஒரே பொருளை கொண்டவை. 

8 கருத்துகள்:

  1. "குலமும் ஒன்றே குடியும் ஒன்றே
    பிறப்பும் ஒன்றே இறப்பும் ஒன்றே." (கபிலர் அகவல்)

    பதிலளிநீக்கு
  2. அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய்
    எவ்வெழுத்து அறிந்தவர்க்கு ஏழுபிறப்பு அது இங்கிலை
    சவ்வுதித்த மந்திரத்தை தற்பரத்து இருத்தினால்
    அவவும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே. சிவவாக்கியம் 96

    ஒரேழுத்து மந்திரமே முதல் எழுத்தாகிய அகாரம் தோன்றுவதற்கும் உயிர் எழுத்தாகி உகாரம் தோன்றுவதற்கும் காரணமாய் உள்ளது. அது எவ்வாறு என்பதை அறிந்து தியாநிப்பவர்களுக்கு இங்கு ஏழு பிறப்பு என்பது இல்லை என்றாகிவிடும். தொண்டைச் சவ்வில் உதிக்கும் அந்த மந்திரத்தை ‘ம்’ என்று ஓதி தன்னிடமே உள்ள பரம்பொருளில் இருத்தி தியானியுங்கள். அகாரத்திலும், உகாரத்திலும், மகாரத்திலும் சிகாரமாய் அமர்ந்திருப்பது ஊமைஎழுத்தே என்பதை உணருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஏழு பிறவி (அல்லது) மறுபிறவி



    இந்துமதத்தில் சொல்லப்படுகிற ஏழுபிறவிகள் என்பது இஸ்லாம் கூறும் ஏழு பிறவிகள், நான் தேடியவரை வேதத்தில் எந்த ஆதாரமும் ஏழு பிறவிகளுக்கு கிடைக்கவில்லை.

    இஸ்லாத்தின் ஏழுபிறவிகள்


    ஆலமே அர்வா - ரூஹ்களின் உலகம்,
    தகப்பனின் நெற்றி
    தாயின் கருவறை
    உலகம்
    மண்ணறை
    மறுமை
    சொர்க்கம் அல்லது நரகம்.

    ஆக இஸ்லாத்தின் அடிப்படையும் மற்ற வேதங்களின் அடிப்படையும் ஒன்றே, ஆகையால் இஸ்லாத்தை பின்பற்றி மோட்சம் அடைவோம். ஏன் இஸ்லாத்தை பின்பற்றவேண்டும்? ஏனெனில் இஸ்லாம் தான் லேட்டஸ்ட் வெர்சன், யாரும் சம்பளம் உயர்த்தியபின் பழைய சம்பளம் தாருங்கள் என்று பிடிவாதம் பிடிக்கமாட்டோம்.

    http://www.sacred-texts.com/the/tot/chap07.htm

    https://hindmuslim.blogspot.com/2019/01/12.html

    பதிலளிநீக்கு
  4. கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா
    உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா;
    விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா;
    இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே - சிவவாக்கியர் 47

    பதிலளிநீக்கு
  5. 1. படைக்கப்பட்டது முதல் கருவுறும் வரை (50k - 100k yrs)

    2. கருவறை வாழ்க்கை (8 - 10 months)

    3. இம்மை வாழ்க்கை (1k - 100 - 60 yrs)

    4. மண்ணறை வாழ்க்கை (1k - 50k yrs)

    5. விசாரணை காலம் (50k yrs)

    6. மறுமை வாழ்கை (∞ yrs)

    மேற்கண்ட தகவல்கள் இஸ்லாமிய நம்பிக்கை அடிப்படையில் கூறப்பட்டுள்ளது, மேலும் அனைத்து வேதமும் சமயமும் ஒரே இறைவனிடத்தில் இருந்துதான் வந்தது என்றும் அனைத்து வேதமும் இதைத்தான் சொல்கிறது என்றும் இஸ்லாமிய நம்பிக்கை கூறுகிறது

    பதிலளிநீக்கு
  6. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற்று உலகு
    (அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:23)

    பொழிப்பு (மு வரதராசன்): பிறப்பு இறப்பு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

    மணக்குடவர் உரை: பிறப்பும் வீடுமென்னு மிரண்டினது கூறுபாட்டை யாராய்ந்து இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது பெருமை உலகத்தில் மிக்கது.
    இஃது எல்லாரானும் போற்றப்படுமென்றது.http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0023.aspx
    

    பதிலளிநீக்கு
  7. **இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற்று உலகு. **
    **சாலமன் பாப்பையா: இம்மை**யின் துன்பத்தையும் **மறுமை**யின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது
    மணக்குடவர் உரை: **பிறப்பு**ம் **வீடு**மென்னு மிரண்டினது கூறுபாட்டை யாராய்ந்து இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது பெருமை உலகத்தில் மிக்கது.
    இஃது எல்லாரானும் போற்றப்படுமென்றது.

    பதிலளிநீக்கு
  8. John 3:4-7 New King James Version (NKJV)
    Nicodemus said to Him, “How can a man be born when he is old? Can he enter a second time into his mother’s womb and be born?” Jesus answered, “Most assuredly, I say to you, unless one is born of water and the Spirit, he cannot enter the kingdom of God. That which is born of the flesh is flesh, and that which is born of the Spirit is spirit. Do not marvel that I said to you, ‘You must be born again.’

    ஜான் 3:4-7 கிங் ஜேம்ஸ் பதிப்பு (KJV)
    நிக்கொதேமு அவனை நோக்கி: ஒரு மனிதன் வயதாகும்போது எப்படிப் பிறக்க முடியும்? அவர் இரண்டாவது முறையாக தனது தாயின் வயிற்றில் நுழைந்து பிறக்க முடியுமா? இயேசு பிரதியுத்தரமாக: மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறக்காவிட்டால், அவன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான். மாம்சத்தில் பிறந்தது சதை; ஆவியிலிருந்து பிறப்பது ஆவி. நீங்கள் மீண்டும் பிறக்க வேண்டும் என்று நான் உன்னிடம் சொன்னதைக் கண்டு வியக்காதே.

    https://www.bible.com/bible/compare/JHN.3.4-7

    பதிலளிநீக்கு