கிறிஸ்தவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிறிஸ்தவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பத்துக்கட்டளை *

முதல் கட்டளை: என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்

கிறித்தவம் & யூதமதம் 

உன் தேவனாகிய கர்த்தர் நானே; என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். (யாத்திராகமம் 20: 2,3) (உபாகமம் 5: 6,7) 

இஸ்லாம் 

உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன்:2:163)

தமிழர் சமயம் 

சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே. - (திருமந்திரம் 5)

கருத்து: சிவனை விட்டால் வேறு தெய்வம் இல்லை அவன் தனியானவன் அவனுடனோ அவனல்லமலோ வேறு தெய்வம் இல்லை. இதன் மறை பொருள் இன்று சிவன் என்ற அறியப்படுகிற உருவத்திற்கும் கதைக்கும் இங்கே சொல்லப்படும் கருத்துக்கும் முற்றிலும் ஒற்றுமை இல்லை. எனவே சிவன் என்று சொல்லப்படும் இறைவனை நாம் தவறாக உருவகபடுத்தி புரிந்து வைத்து உள்ளோம்.

இரண்டாம் கட்டளை: எந்த விதமான விக்கிரகத்தையும் தொழுகை செய்யவோ அதை சேவிக்கவோ கூடாது


கிறித்தவம் & யூதமதம் 

நீங்கள் எந்த விக்கிரகங்களையோ, படங்களையோ, சிலைகளையோ செய்யக்கூடாது. வானிலும், பூமியிலும் தண்ணீரிலுமுள்ள எந்தப் பொருளின் வடிவத்திலும் அவற்றைச் செய்யக்கூடாது. எந்த விதமான விக்கிரகத்தையும் தொழுகை செய்யவோ அதை சேவிக்கவோ கூடாது. ஏனெனில் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். எனது ஜனங்கள் பிற தேவர்களைத் தொழுவதை நான் வெறுக்கிறேன். எனக்கு எதிராகப் பாவம் செய்வோர் எனது பகைவர்களாவார்கள். நான் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களின் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் அப்பேரர்களின் குழந்தைகளையும் தண்டிப்பேன். (யாத்திராகமம் 20: 4,5) (உபாகமம் 5: 8,9) 
 
இஸ்லாம் 

அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் - மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை; ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்; அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீங்கள் திரும்பக் கொண்டுவரப் படுவீர்கள். (குர்ஆன் 29:17)

தமிழர் சமயம்

மாடத்துளான் அலன் மண்டபத்தான் அலன்
கூடத்துளான் அலன் கோயில் உள்ளான் அலன்
வேடத்துளான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில்
மூடத்துளே நின்று முத்தி தந்தானே (திருமந்திரம் 2614)

பொருள்: மாடத்தில் இல்லை, மண்டபத்தில் இலை, கூடத்தில் இல்லை, கோவிலில் இல்லை, வேடத்தில் (உருவம்,  இன்று சொல்லப்படும் சிவன் என்னும் கதா பாத்திரம், லிங்கம், அல்லது ருத்ராட்சை போன்ற பொருள்களில்) இல்லை. அவன் ஆசை இல்லாதவர் நெஞ்சில் இருக்கின்றான், அவனே முக்தி தருகிறான்.

மூன்றாம் கட்டளை: கடவுளின் பெயரை தவறாக பயன்படுத்தாதே 


கிறித்தவம் & யூதமதம்  
 
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெயரைத் தகாத வழியில் பயன்படுத்தக்கூடாது. ஒருவன் அவ்வாறு பயன்படுத்தினால், அவன் குற்றவாளியாவான். கர்த்தர் அவனது குற்றத்திற்காக அவனை தண்டிப்பார். (யாத்திராகமம் 20: 7) (உபாகமம் 5: 11)

பொருள்: கடவுளின் பெயரில் பொய்யாகப் பேசும் தீர்க்கதரிசிகளுக்கு எதிரான தடையால் இந்த விளக்கம் ஆதரிக்கப்படுகிறது, இதற்கு மரண தண்டனை தேவை (உபாகமம் 13:1-5) 
 
இஸ்லாம் 

அல்லாஹ் கூறுகிறான்: ”அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்’ என்று (நபியே!) கூறிவிடும்” (அல்-குர்ஆன் 10:69

தமிழர் சமயம் *

-

நான்காம் கட்டளை: ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.

கிறித்தவம் & யூதமதம் 

“ஓய்வுநாளை விசேஷ நாளாகக் கருதும்படி நீங்கள் நினைவுகூருங்கள். உங்கள் வேலையை வாரத்தின் ஆறு நாட்களும் செய்யுங்கள். ஆனால் ஏழாம் நாள் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்தும்படி ஓய்வெடுக்க வேண்டிய நாள். எனவே அந்நாளில் நீங்களும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் வேலைக்காரரும், வேலைக்காரிகளும் வேலை செய்யக்கூடாது. உங்கள் மிருகங்களையோ, உங்கள் நகரங்களில் வாழும் அந்நியர்களையோ வேலை வாங்கக்கூடாது.. (யாத்திராகமம் 20: 8-10) (உபாகமம் 5: 12) 
 
இஸ்லாம் 

மேலும் ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாம்தாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். எனினும், (நமக்கு முன்வந்த) ஒவ்வொரு சமுதாயத்தாரும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அல்லாஹ் நம்மீது விதியாக்கியுள்ள இந்த (வெள்ளிக்கிழமை) நாளை அல்லாஹ் நமக்காக(த் தேர்ந்தெடுத்து) அறிவித்தான். (வார வழிபாட்டு நாள் தொடர்பாக) மக்கள் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே உள்ளனர். (வெள்ளிக்கிழமை நமது வழிபாட்டு நாள் எனில்) அடுத்த நாள் (சனிக்கிழமை) யூதர்களின் (வழிபாட்டு) நாளாகும். அதற்கடுத்த நாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறித்தவர்களின் (வழிபாட்டு) நாளாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 1549)

 ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர்; “அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (குர்ஆன் 62:9)

தமிழர் சமயம் *


ஐந்தாம் கட்டளை: உங்கள் தந்தை, தாயாரை மதிக்க வேண்டும்

கிறித்தவம் & யூதமதம் 

உங்கள் தந்தை, தாயாரை மதிக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் தரும் நாட்டில் நீண்டஆயுள் வாய்ப்பதற்கு இதைச் செய்தல் வேண்டும். (யாத்திராகமம் 20: 12) (உபாகமம் 5: 16) 
 
இஸ்லாம் 

தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்திருக்கிறோம்.. (குர்ஆன் 29:8) 

தமிழர் சமயம் 

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல் (மக்கட்பேறு குறள் எண்:70)

பொழிப்பு (மு வரதராசன்): மகன் தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைம்மாறு, `இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ’ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்..

ஆறாம் கட்டளை: கொலை செய்யாதிருப்பாயாக.

கிறித்தவம் & யூதமதம் 

கொலை செய்யாதிருப்பாயாக. (யாத்திராகமம் 20: 13) (உபாகமம் 5: 17) 
 
இஸ்லாம் 

( கொலையை ) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால் , அவருடைய வாரிசுக்கு ( பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம் ; ஆனால் கொலையின் மூலம் பதில் செய்வதில் வரம்பு கடந்து விடக் கூடாது ; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு ( நீதியைக் கொண்டு ) உதவி செய்யப் பட்டவராவார். (அல்குர்ஆன் 17:33)

தமிழர் சமயம் 

கொல்லான் பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்து உண்பான் மாசிலான் கள் காமம்
இல்லான் இயமத்து இடையில் நின்றானே (திருமந்திரம் 554)

பொருள்
கொல்லாமை
பொய் கூறாமை
களவு செய்யாமை
எண்ணத்தகுந்த நற்குணம் கொண்டிருத்தல்
நல்லவன் ஆதல் 
அடக்கம் உள்ளவன் ஆதல் 
நடுவு நிலையைப் பின்பற்றுதல் 
வல்லவன் ஆதல் 
பகுத்து உண்ணல் 
குற்றமற்றவன் ஆதல் 
கள் உண்ணாமை
காமம் இல்லாமை - ஆகியவை இயம நெறிகள்.  

ஏழாம் கட்டளை: விபசாரம் செய்யாதிருப்பாயாக.

கிறித்தவம் & யூதமதம் 

விபசாரம் செய்யாதிருப்பாயாக. (யாத்திராகமம் 20:14) (உபாகமம் 5:18) 
 
இஸ்லாம் 

மேலும், விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள்! திண்ணமாக, அது மானங்கெட்ட செயலாகவும், மிகத் தீய வழியாகவும் இருக்கிறது. (குர்ஆன் 17:32
 
தமிழர் சமயம் 

கோழை ஒழுக்கங் குளமூடு பாசியில்
ஆழ நடுவார் அளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
பூழை நுழைந்தவர் போகின்ற வாறே. (திருமந்திரம் 251)

(ப. இ.) முறையாக மணந்து நாட்டுக்கும் வீட்டுக்கும் மொழிக்கும், நன்னெறிக்கும் துணைபுரியத்தக்க நன்மக்களைப் பெறுவதே இல்வாழ்க்கையாகிய நற்றவப் பயனாகும். அதற்கென அமைக்கப்பட்டதே விந்துவாகிய வித்து. அவ் விந்து கோழை எனப்படும். அவ்விந்துவை முறை கடந்த பெண்பால் தீ யொழுக்கமாகிய மாசு மூடிக் கிடக்கும் குளமாகிய கருக்குழியில் ஒழுக்கி நட்டு வாழ ஆராய்வார்களை நல்லோர் தடுத்து ஒறுத்து வழி நிறுத்துதல் வேண்டும். அங்ஙனம் தடுக்காவிட்டால் அத் தீயோர் பாவப்புகும்வழி நுழைந்து தமக்கும் பிறர்க்கும் வரவேண்டிய நற்பயனை இழப்பித்து மாள்வர். 

(அ. சி.) கோழை - விந்து. குளம் - கருப்பை. பாசி - மாசு. அளப்புறுவார் - ஆராய்வார். தாழ - தடைப்பட. பூழை - புகும்வழி. 
 

எட்டாம் கட்டளை: திருடாதே 

கிறித்தவம் & யூதமதம் 

களவு செய்யாதிருப்பாயாக. (யாத்திராகமம் 20: 15) (உபாகமம் 5: 19)

இஸ்லாம் 

திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான். (குர்ஆன் 5:38)

தமிழர் சமயம் 
 
கொல்லான் பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்து உண்பான் மாசிலான் கள் காமம்
இல்லான் இயமத்து இடையில் நின்றானே (திருமந்திரம் 554)

பொருள்
கொல்லாமை
பொய் கூறாமை
களவு செய்யாமை
எண்ணத்தகுந்த நற்குணம் கொண்டிருத்தல்
நல்லவன் ஆதல் 
அடக்கம் உள்ளவன் ஆதல் 
நடுவு நிலையைப் பின்பற்றுதல் 
வல்லவன் ஆதல் 
பகுத்து உண்ணல் 
குற்றமற்றவன் ஆதல் 
கள் உண்ணாமை
காமம் இல்லாமை - ஆகியவை இயம நெறிகள்.   
 

ஒன்பதாம் கட்டளை: பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக

கிறித்தவம் & யூதமதம் 

பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக (யாத்திராகமம் 20: 16) (உபாகமம் 5: 20)

இஸ்லாம் 

 அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோரை நிந்திப்பது என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான் என்று கூறினார்கள். நிறுத்த மாட்டார்களா? என்று நான் கூறும் அளவுக்கு அவற்றைத் திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்கள். (புகாரி (5976), முஸ்லிம்)

தமிழர் சமயம் 

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை (நல்வழி வெண்பா:23)

விளக்கம்: வழக்காடு மன்றத்தில் (கோர்ட்) பொய் சாட்சி சொல்பவர் வீடு ஒருவருக்கும் பயன் படாமல் போகும், அந்த வீட்டில் வேதாளம் குடிபுகும், வெள்ளை எருக்கம் பூ பூக்கும் , பாதாள மூலி என்னும் கொடிய விஷம் உள்ள கொடி வளரும், மூதேவி போய் வாழ்வாள், பாம்பு குடியேறும். ஆதலால் நியாய அநியாயங்களை அலசி ஒருவரின் பிரச்சனையை தீர்க்க உதவும் வழக்காடு மன்றத்தில் நாம் பொய் சாட்சி சொல்லக்கூடாது.

கண்டொன்று சொல்லேல் (ஆத்திசூடி 14)

பத்தாம் கட்டளை: பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.


கிறித்தவம் & யூதமதம் 

பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக. (யாத்திராகமம் 20: 17)

இஸ்லாம் 

மேலும் நீங்கள் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்; மேலும் பிற மனிதர்களுடைய பொருள்களில் ஏதேனும் ஒரு பகுதியை அநீதியான முறையில் தின்பதற்காக அது தவறு என நீங்கள் அறிந்திருந்தும் அதற்குரிய வாய்ப்பைப் பெற அதிகாரிகளை அணுகாதீர்கள். (குர்ஆன் 2:188)

தமிழர் சமயம் 

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். (குறள் 178)

 பொருளுரை: ஒருவன் தன்னுடைய செல்வம் குறையாதிருப்பதற்கு வழி எது என்றால் பிறனுக்கு உரிமையான செல்வத்தை விரும்பாது இருத்தல் ஆகும்.

கர்த்தர் இயேசுவின் தந்தையா?

மத்தேயு 23:8 ஆனால் நீங்கள் ‘போதகர்’ என அழைக்கப்படக் கூடாது. ஏனென்றால் நீங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள். 9 உங்களுக்கு ஒரு போதகரே உண்டு. மேலும், பூமியில் உள்ள எவரையும் ‘தந்தையே’ என அழைக்காதீர்கள். உங்களுக்கு ஒருவரே தந்தை. அவர் பரலோகத்தில் உள்ளார். 10 நீங்கள் ‘எஜமானே’ என்றும் அழைக்கப்படக் கூடாது. ஏனென்றால், உங்கள் எஜமான் ஒருவர் மட்டுமே. அவர் தான் கிறிஸ்து.

மேற்கண்ட வசனத்தின் படி தந்தை என்பவர் பூமியில் இல்லை பரலோகத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இது ஏசுவுக்கு மட்டுமல்ல மாறாக அனைவர்க்கும் சொல்லப்படுகிறது. ஒருவேளை இயேசுவுக்கு மட்டும் என்று கூறி இருந்தால் தந்தை இல்லாமல் பிறந்த இயேசு இறைமகன் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் இது உலகில் உள்ள ஆண் பெண் அனைவருக்கும் பொதுவான செய்தியாக சொல்லப்படுகிறது. இயேசுவை தவிர அனைவருக்கும் இவ்வுலகில் தந்தை உண்டு என்பது நிதர்சனம். 

எனவே இயேசு தந்தை என்று குறிப்பிடுவது படைத்த இறைவனை தானே தவிர தனது பயோலொஜிக்கல் தந்தையை அல்ல. எனவே இயேசு இறைமகன் அல்ல. 



[ஏனென்றால், இஸ்ரவேல் என் குமாரன், என் தலைமகன்' என்று கர்த்தர் சொல்லுகிறார்.  - [யாத்திராகமம் 4:22, தோரா]

[மேலும்,] 'நான் இஸ்ரவேலுக்குத் தகப்பன், எப்பிராயீம் என் தலைமகன்.' - 
[எரேமியா 31:9, தோரா]

[மேலும்,] நான் [சாலமோனை] என் மகனாகத் தேர்ந்தெடுத்தேன், நான் அவனுடைய தகப்பனாக இருப்பேன். - [1 நாளாகமம் 28:6, தோரா]

[மேலும்,] 'நான் [தாவீதை] முதற்பிள்ளையாக்குவேன்,'" - [சங்கீதம் 89:27, தோரா]

[மேலும் அவர்கள், "தேவதூதன்] பதிலளித்து, [எஸ்ராவிடம்], 'இது கடவுளின் மகன், அவர்கள் உலகில் ஒப்புக்கொண்டார்' என்று கூறினார் - 
[2 எஸ்ரா 2:47, தோரா]

எனவே தீர்க்க தரிசிகளை மகன் என்று அழைக்கும் வழக்கம் அம்மொழியில் இருந்து இருக்க வேண்டும் அல்லது இது மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிழையாக இருக்க வேண்டும். நாம் அறிந்தபடிக்கு பழைய ஏற்பாடு ஹீப்ரு மொழியிலும் புதியஏற்பாடு அராமிக் மொழியிலும் வழங்கப்பட்டது. பிறகு அது கிரேக்கத்துக்கு, லத்தீனுக்கும் மொழி பெயர்க்கப்பட்டு பின்னர் அதிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப்பட்டு பின்னர் அதிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இதில் கருத்துப் பிழை ஏற்படுவது இயற்கையே. மேலும் மொழிபெயர்ப்புக்கு முன் உள்ள பதிப்பில் அரசியல் மற்றும் வேறு சில காரணங்களால் புகுத்தப்பட்ட செய்திகளை அடையாளம் காண்பது கடினமாகி விடுகிறது. எனவே எந்த வேதமும் அதன் மூல மொழியில் பாதுகாக்கப்பட்டு அம்மொழி வளக்கொளியாமல் இருந்தால் அதை நாம் பயன்படுத்தலாம். இல்லை என்றால் அந்த பழைய வேதம் வழிகாட்டும் புதிய வேதத்தை பின்பற்றுவதில் என்ன பிழை உள்ளது? எளிமையாக நாம்  விடயம் என்னவென்றால், பைபிள் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட முடியாது. அப்படி முரண்பட்டால் அது விதிவிலக்கு என்று குறிப்பிடப் பட்டு இருக்க வேண்டும். அல்லது அது இயேசுவுக்கு பிறகு மக்களால் புகுத்தப் பட்டு இருக்க வேண்டும்.

இப்படிபட்ட நிலைகளிலிருந்து உண்மையை பிரித்தறிய விரும்பினால் அதற்கும் இறைவன் விதியையும் வழியையும் வகுத்துள்ளான். தொல்காப்பிய முதல் நூல், வழி நூல் விதிகளும், திருமந்திரம் விளக்கும் நான்மறையும் அதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். மட்டுமல்லாமல், பழைய ஏற்ப்பாட்டை முறையாக ஆராய்ந்தால் கடவுளுக்கு பிறந்த மகன் என்பது இல்லை என்பதற்கு ஆதாரமாக பல செய்திகளை பெறலாம். 

முகமது நபி ﷺ இஸ்மாயீலின் சந்ததிதான்!


வாழ்த்துக்கள் சகோ,

உங்களது ஆய்வில் உள்ள சில பிழைகளை சுட்டிக்காட்ட இந்த பதிவு, ஒருவேளை உங்களுக்கு உபயோகப்படலாம்.

முதலில், "இஸ்மவேல் என்று கிறிஸ்தவத்திலும் இஸ்மாயீல் என்று இஸ்லாத்திலும் அழைக்கப்படுகிறவர்" என்று நீங்கள் கூறுவது பிழை. பைபிளும் இஸ்மாயீல் (Ismayel) என்றுதான் அழைக்கிறது, பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பின் நிலை இவ்வாறு உள்ளது.

இரண்டாவது, "நம்பிக்கை அடிப்படையிலே முகமது நபி இஸ்மாயீலின் சந்ததி என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்" என்று கூறுவதன் மூலம் எந்த நம்பிக்கையும் ஆதாரத்தின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் கூற வருவதாக நான் புரிந்து கொள்கிறேன். 
 
உங்களிடம் உள்ளது கர்த்தரிடம் வந்த, இயேசு அவர்கள் மூலம் வெளிப்பட்ட, உண்மை பைபிள் என்பதற்கான ஆதாரம் என்ன? இல்லை என்பதற்கான ஆதாரம் கிறிஸ்தவ இணைய தலங்களிலேயே விரவிக் கிடக்கிறது. சில ஆதாரங்கள் கீழே ஒன்றன் பின் ஒன்றாக விளக்கப் பட்டுள்ளது.

மூன்றாவது, "புஹாரி நூலானது முகமது நபிக்கு 200 வருடத்துக்கு பிறகு தொகுக்கப் பட்டுள்ளது" என்பதை குறிப்பிடுவதன் மூலம் அதன் மீதான உண்மைத் தன்மையை கேள்வி எழுப்புகின்றீர்கள். ஆனால் பைபிளை பற்றிய பின்வரும் செய்தியை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

"27 புத்தகங்களின் ஆரம்பகால முழுமையான பட்டியல் , 4 ஆம் நூற்றாண்டு அலெக்ஸாண்டிரியாவின் பிஷப் அதானசியஸ் 367 AD இல் எழுதப்பட்ட கடிதத்தில் காணப்படுகிறது. 27 புத்தகங்கள் கொண்ட புதிய ஏற்பாடு, வட ஆபிரிக்காவில் உள்ள ஹிப்போ (393 AD) மற்றும் கார்தேஜ் (397 AD) சபைகளின் போது முதன்முதலில் முறையாக நியமனம் செய்யப்பட்டது" - New Testament wikipedia
 
சில நூல்களில் கிறிஸ்துவுக்கு பிறகு 45 முதல் 95 வருடங்களுக்கு பிறகு தொகுக்கப்பட்டது என்கிறது.

நான்காவது, "ஹதீஸ் நூலகளைப் பற்றி முஸ்லிம்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது" என்று கூறுவதன் மூலம் அனைத்து ஹதீஸ் நூல்களையும் புறக்கணிக்க வேண்டும் என்கிற கருத்தை விதைக்க விரும்புகிறீர்கள் என்று கருதுகிறேன்.

புஹாரி நூலானது குர்ஆனுக்கு அடுத்த நம்பகமான நூல். 1200 வருடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிஞர்கள் விளக்கவுரை எழுதி உள்ளனர். அதில் எவரும் இதன் நம்பகத் தன்மையை கேள்வி எழுப்பவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹதீஸ் நூல்கள் உண்டு, அவை அனைத்தும் ஒரே தரமுடையதல்ல. எதிரிகள் அவர்கள் விருப்பட்டதை எழுதி ஹதீஸ் நூல் என்று சொன்னால் அதை எவ்வாறு தரம் பிரிப்பது என்று அறிவியல் ரீதியான ஒரு முறையினை கையாண்டு எழுதப்பட்ட நூல் புஹாரி. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் இமாம் புஹாரியால் சேகரிக்கப்பட்டு வெறும் 7000 மட்டுமே நூலில் பதியப்பட்டுள்ளது. மற்றவைகள் ஏன் பதியப்படவில்லை?, இவைகள் ஏன் பதியப்பட்டுள்ளது? என்பதற்கு தனி தொகுப்புடைய நூல்கள் உள்ளது. நீங்கள் கூறும் நூலின் பெயர் ஸஹீஹ் புஹாரி. ஸஹீஹ் என்றால் உண்மையான என்று பொருள்.

உதாரணமாக, பைபிளில் ஜான் எழுதிய சுவிசேஷத்தை எடுத்து கொள்வோம். கிறிஸ்துவுக்கு பிறகு சில நூறு ஆண்டுகள் கழித்து தொகுக்கப்பட்ட பைபிளில், ஜான் எழுதிய சுவிசேஷம், இயேசு அவர்களின் சீடரான ஜான் தான் எழுதினார் என்பதற்கும், ஒருவேளை அது உண்மையாக இருந்தால் அவர் எழுதிய சுவிசேஷம் மட்டும் தான் அதில் உள்ளது என்பதற்கும், அதில் பின் வந்தவர்கள் இடைச்சொருகல்கள் செய்யவில்லை என்பதற்கும், என்ன ஆதாரம் உங்களிடம் உண்டு? வெறும் நம்பிக்கை மட்டுமே உங்களிடம் உண்டு, ஆதாரம் இல்லை.!

ஐந்தாவது, பைபிளின் வசனத்தை அடிப்படையாக கொண்டு, குர்ஆனின் செய்தியை மறுக்க முடியாது. பைபிள் பரிசுத்தம் இல்லாதது என்கிறது குர்ஆன். இது வெற்று நம்பிக்கையல்ல, ஆதாரம் இதோ.

விருத்தசேதனம் ன்பது ஆப்ரஹாமின் சந்ததிகள் கர்த்தருடன் செய்துகொண்ட கால எல்லையற்ற உடன்படிக்கை ஆகும்.

இது தான் நீ கீழ்ப்படிய வேண்டிய உடன்படிக்கை. இதுவே உனக்கும் எனக்கும் இடையேயுள்ள உடன்படிக்கை. இது உனது சந்ததிகளுக்கெல்லாம் உரியது. உனது சந்ததியருக்குப் பிறக்கும் ஒவ்வொரு ஆண்பிள்ளையும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும். - (ஆதியாகமம் 17:10)

ஆனால் இப்படி ஒரு கேள்வி பைபிளில் உள்ளது! 

எனவே மற்றவர்களிடம் இல்லாத உயர்வு யூதர்களிடம் மட்டும் என்ன உள்ளது? அவர்களின் விருத்தசேதனம் என்பதில் அடங்கி இருக்கும் சிறப்பு என்ன? - (ரோமர் 3:1)

கட்டளையிட்டவர் உலகம் அனைத்தையும் படைத்த இறைவன் என்பதைவிட வேறு சிறப்பு வேண்டுமா?

ஆனால், இயேசுவுக்கு பின் வந்தவ பால் என்ன சொல்கிறார்?  

ஒருவன் விருத்தசேதனம் செய்யப்பட்டவனா, செய்யப்படாதவனா என்பது முக்கியமில்லை. தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே முக்கியமான காரியம். - (1 கொரி 7:19)

விருத்தசேதனம் செய்வதே கர்த்தரின் கட்டளைக்கு கட்டுப்படுவதாகும் அல்லவா?

கர்த்தருடன் இப்ராஹிமின் சந்ததி செய்து கொண்ட உடன்படிக்கையை, கர்த்தரோ அல்லது அவரது தீர்க்கதரிசியான இயேசுவோ தானே முறிக்க முடியும்? இயேசுவின் காலத்துக்கு பிறகு பால் என்று யாரோ ஒரு மனிதர் தன்னைத்தானே இயேசுவின் சீடராக அறிவித்து, கர்த்தருடனான விருத்தசேதன உடன்படிக்கையை முறித்து விடுகிறார். அவரைப்பற்றி முன்னறிவிப்போ அல்லது விருத்த சேதனத்திற்க்கான கால எல்லையோ பைபிளில் எங்குமே குறிப்பிடப் படவில்லை. 

பைபிள் கறைபடிந்தது என்பதற்கு இதைவிட சான்று என்ன தேவை?  

ஆறாவது, "சாராள் மகனுக்கு எகிப்துலிருந்து ஒரு பெண்ணை தன் மகனுக்கு கண்டுபிடித்தாள்" என்ற பைபிளின் செய்தியானது, "ஆப்ரகாமினால் வனாந்திரத்தில் விடப்பட்ட சாராள், விடப்பட்ட இடத்தின் வழியே வந்த ஏமன் நாட்டு கூட்டத்தாரின் பெண்ணை பிற்காலத்தில் இஸ்மாயில் திருமணம் செய்தார்" என்கிற புகாரியின் செய்தியோடு முரண்படுகிறது என்கிறீர்கள். இதன் மூலம் முகமது நபி இஸ்மாயீலின் சந்ததி அல்ல என்று நிறுவ முயல்கிறீர்கள்.

ஆனால், 1) கர்த்தருக்கும் இப்ராஹிமின் சந்ததிக்கும் இடையிலேயான "விருத்தசேதன ஒப்பந்தம்" முகமது நபியின் காலத்துக்கு முன்னமே அங்கே பின்பற்றி வந்ததற்கான வரலாற்று சான்றுகள் பல உண்டு. இஸ்மாயில் அங்கே வாழ்ந்திராமல் அது சாத்தியமில்லை.

மேலும் நீங்கள் சொல்லும் முரண்பாட்டில், தவறான தகவலாக பைபிளில் உள்ளத்தைத்தான் கருத முடியும். ஏன்?

2) ஆதியாகமம் 21:21 இல் இஸ்மாயீல் மற்றும் இஸ்மாயீல்களுடன் பரான் தொடர்பு இருப்பதை புவியியலாளர் யாகுத் அல்-ஹமாவி உறுதிப்படுத்துகிறார், அவர் " பரான், ஒரு ஹீப்ரு வார்த்தை, தோராவில் குறிப்பிடப்பட்டுள்ள மெக்காவின் பெயர்களில் ஒன்றாகும்." என்று கூறுகிறார் - Desert of Paran wiki

எனவே அரேபியாவிலிருந்து சாராள் எகிப்துக்கு சென்று பெண்ணை கண்டுபிடித்தால் என்பதைவிட, பிற்காலத்தில் தன் இடம் நோக்கி வந்த மக்கள் கூட்டத்திலிருந்து ஒரு பெண் தேர்ந்தெடுத்தாள் என்பதுதான் பொருத்தமானதாகும்.

மேலதிகமாக, 3) இஸ்மாயில் அவர்களுக்காக உருவான நீரூற்று என்பது என்றென்றும் வெளிப்படும் கெட்டுப்போகாத, எண்ணிலடங்கா நன்மைகள் நிறைந்த ஜம்ஜம் நீராக அல்லாமல் வேறெந்த இடத்தில் உள்ள நீராக இருக்க முடியும்? கர்த்தரின் அற்புதம் அல்லவா அது?

ஏழாவது, முகமது நபியின் வம்சம் பற்றியுள்ள முரண்பாடுகளை அர்-ரஹீக்குல் மக்துமில் குறிப்பிடப்பட்டுள்ளது, உண்மைதான்.  

ஆனால் அதைக் கொண்டு புகாரியின் செய்தியை பொய் என்று நிறுவமுடியாது. ஏன்?

ஏனென்றால் அந்த முரண்பாடுகள் தரவுகளின் குறைபாட்டால் ஏற்பட்டது. வேறு தரவுகள் இருந்தாலும் இல்லையென்றாலும் புகாரியின் செய்தி உண்மையானதே. 

உதாரணமாக ஆதம் ஏவாளின் செய்திகளை பைபிள் சொன்னதால் நம்பும் நீங்கள் அதற்கான ஆதாரத்தை வேறு இடங்களில் தேடி அதன் மூலம் கிடைக்கப்பெறும் ஆதாரத்தின் அடிப்படையில் பைபிளில் சொன்ன செய்திகளை நீங்கள் ஏற்பதில்லை. 

முகமது நபி அவர்களின் வம்ச செய்தியை பின்னாளில் பொய் என்று கூறி எடுத்துவிட்டார்கள் என்று கூறும் உங்களுக்கு ஒரு நபிமொழி-யின் தரம் தான்தோன்றித்தனமாக நிணயிக்கப் படுவதில்லை என்கிற செய்தி தெரிந்து இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். 

அதற்கென்று விதிகள் உள்ளன.அந்த விதிகளின் நோக்கம், அந்த செய்தி உண்மையிலேயே முகமது நபியால் சொல்லப்பட்டாதா அல்லது இடையிலே எதிரிகளால் சொருகப் பட்டதா என்று பிரித்தறியும் விதத்தில் அமைந்து உள்ளது. 

எட்டாவது, குர்ஆனின் 3:84, 6:156,157, 28:46 போன்றவைகளை குறிப்பிட்டு, "இஸ்மாயிலுக்கும், இஸ்மாயயிலின் சந்ததிக்கும் வேதம் கொடுக்கப்பட்டுள்து" என்று சில வசனத்திலும்,"வேதம் கொடுக்கப்படாத சமுதாயம் அரபு சமுதாயம்" என்று சில வசனத்திலும் குறிப்பிட்டுள்ளதை முரண்படுவதாக கருத தேவையில்லை. 

 காரணம் 1) நபி, ரசூல் என்று இரண்டு வகையான தீர்க்கதரிசிகள் உண்டு. அதன் வேறுபாடுகள் உங்களுக்கு தெரிந்தால் இந்த குழப்பம் ஏற்பட்டு இருக்காது. தமிழிலே தேவாரம் திருவாசகம் போன்றவைகள் பெரியதாகவும் இருப்பதற்கும், ஆத்திச்சூடி சிறியதாக இருப்பதற்கும் காரணம் உண்டு. மோசஸின் நான்கு புத்தகங்கள் பெரியதாகவும் ரூத்தின் செய்தி சிறியதாக இருப்பதற்கும் இருக்கும் காரணமுண்டு.

காரணம் 2) இஸ்மாயீலின் காலத்துக்கும் முகமது நபியின் காலத்துக்கும் இடையில் சில ஆயிரம் ஆண்டுகள் இடைவெளி உள்ளது. எனவே இத்தனை ஆண்டுகள் வேதம் கொடுக்கபடாத மக்களை வேதம் கொடுக்கப்படாதவர் என்றுதானே குறிப்பிட முடியும். சில நூறு ஆண்டுகள் இடைவெளியே மக்களின் குணத்திலும் செயலிலும் கலாச்சார பண்பாடுகளிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போதுமானது என்கிற பொழுது "சில ஆயிரம் ஆண்டுகள்" என்பது மிக மிகப் பெரிய இடைவெளி. 

எனவே முகமது நபி இஸ்மாயிலின் சந்ததி என்பதற்கு இவைகள் போதுமான ஆதாரங்கள்.

இறுதியாக, முகமது நபி அவர்கள் ஆதாமின், நோவாவின் சந்ததி தான் என்று நிறுவத் தேவையில்லை என்று கருதுகிறேன். 

மேலும் வாசிக்க

கர்த்தரை பற்றிய இயேசுவின் முக்கிய போதனை என்ன?


- இஸ்ரவேலரே கேள்! நம் தேவனாகிய கர்த்தர் ஒருவரே (மாற்கு 12:29)

“உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).

கர்த்தரை கண்டவர் உண்டா?

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை. (யோவான் 1:18)

கர்த்தருக்கு பிறப்பு இறப்பு உண்டா?

கர்த்தரே என்றென்றைக்கும் இருப்பார். (சங்கீதம் 9:7)

கடவுளை கொலை செய்ய முடியுமா ?

உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப் போடுகிறவன் கைக்கு நீ மனுஷனேயல்லாமல் தேவனல்லவே! (எசக்கியேல் 28:9)

பூமியில் உள்ளவர்கள் இறைவனாவார்களா?

பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா(இறைவன்) என்று சொல்லாதிருங்கள்! பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். (மத்தேயு 23:9)

சிலைகள் இறைவனா?

அந்த மக்களில் சிலர் செய்தது போல் விக்கிரகங்களை வணங்காதீர்கள் (1 கொரி 10:7)

சரி இயேசு கிறிஸ்து தன்னை யாரென்று கூறுகிறார்?

என்னை ஏற்றுக்கொள்கிறவன், என்னை அனுப்பியவரையும் (தேவனையும்) ஏற்றுக்கொண்டவன். தீர்க்கதரிசியைக் கண்டு அவரை ஒப்புக்கொள்கிறவன், தீர்க்கதரிசி பெறும் வெகுமதியைப் பெறுவான். (மத்தேயு 10:40,41)

இந்த வசனம் இயேசு கிறிஸ்து அவர்கள் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்கிறது. மேலும் அவர் போதகர் என்று அறியப்பட்டு இருந்தார்.

இயேசு இஸ்ரவேலருக்கு மட்டும் அனுப்பபட்டவர் !

அதற்கு அவர், “கடவுள் என்னை எல்லா மக்களிடமும் அனுப்பவில்லை, வழிதவறிப்போன ஆடுகளைப் போல் இருக்கிற இஸ்ரவேல் மக்களிடம்தான் அனுப்பியிருக்கிறார்”+ என்று சொன்னார். - மத்தேயு 15:24

இயேசு சீடர்களிடம் ,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். 6 ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். (மத்தேயு 10:5)

எதற்கு இயேசு உலகுக்கு அனுப்பபட்டார் ?

மோசேயின் சட்டங்களையோ அல்லது தீர்க்கதரிசிகளின் போதனைகளையோ அழிப்பதற்காக நான் வந்துள்ளதாக நினைக்காதீர்கள். அவர்களது போதனைகளை அழிப்பதற்காக நான் வரவில்லை. அவர்களின் போதனைகளின் முழுப் பொருளையும் நிறைவேற்றவே வந்துள்ளேன். (மத்தேயு 5:17)

இயேசு தாமாகவே அனைத்தையும் செய்தாரா?

நான் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயம் தீர்க்கிறேன். னக்குச் சித்தமானதை நான் தேடாமல் என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது(யோவான் 5:30)

எனவே அவர் கர்த்தரும் இல்லை கர்த்தரின் மகனும் இல்லை என்று பொருள்.

வேத வசனங்களை மனிதர்கள் எழுதலாமா?

தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசினார்கள். (இரண்டாம் பேதுரு 1:21)

பைபிளில் மாற்றம் செய்ய மனிதருக்கு உரிமை உண்டா?

அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டினால் அவர்உன்னைக் கடிந்து கொள்வார். நீ பொய்யானவனாவாய் - (நீதிமொழிகள் 30:6)

எனில் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து அவர்களின் வார்த்தைகள் மட்டுமே இறைவனின் வசனங்கள் மற்றவைகள் பவுல் என்பவரால் எழுத பட்டது : இறைவசனததோடு பவுல் சேர்த்த வார்த்தைகள் பொய் என்பது உறுதியாகிறது மேலும் அதில் இயேசு கிறிஸ்து அவர்களின் போதனைக்கு எதிரான வசனங்களும் உள்ளது? கர்த்தர் ரட்சிப்பானாக...

மேலுள்ள அனைத்து கொள்கைகளும் போதனைகளும் முகமுது நபி அவர்களாலும் போதிக்க பட்டுள்ளது. ஒவ்ருவொம் முஸ்லிமும் இயேசு கிறிஸ்து அவர்கள் மீது அன்பு கொள்வதும் அவரை நம்புவதும் கடைமை ஆகும்.

முகமது நபி அவர்கள் பற்றி மோசே மற்றும் இயேசு கிறிஸ்துவும் முன்னறிவிப்பு செய்து உள்ளனர். இயேசு கிறிஸ்து அவர்களை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் உண்மையில் கிருஸ்துவை நேசிப்பது உண்மையானால் அவர்கள் முகமுது நபி அவர்களை நம்புவதும் பின் பற்றுவதும் அவசியமாகிறது.

1. "வேறு ஒரு தேற்றரவாளன்" வருவார் என்று இயேசு சொன்னது முகமதுவைத் தான் (யோவான் 14:16, யோவான் 15:26, யோவான் 16:7-11, யோவான் 16:3)

2. மோசே வருவார் என்று சொன்ன தீர்க்கதரிசி முகமது தான் (உபாகமம் 18:17-19)

3. உன்னதப்பாட்டு என்ற புத்தகத்தில் 5:16ம் வசனத்தில் "முகமது" என்ற வார்த்தை வருகிறது,

4. உபாகமம் 33:1-3 வசனங்களில் முகமது பற்றி சொல்லப்பட்டுள்ளது

கிறிஸ்து சத்தியத்தை போதித்தார் :

ஆனால் இன்றைய நடைமுறையில்
  • கிறிஸ்துவின் பிறந்த நாளாக கொண்டாட படும் நாள் அவரின் உண்மை பிறந்த நாள் அல்ல என்பதை அனைவரும் அறிவர்.
  • பைபிளில் சுவிசேசம் எழுதிய பலர் இயேசுவின் உண்மை சீடர்கள் இல்லை.
  • பவுல் இயேசு அவர்களை நேரில் பார்க்காத பல வருடங்களுக்கு பின் வந்த மனிதர், தன்னை தானே இயேசுவின் சீடராக அறிவித்து கொண்ட யூதர்.
  • இயேசு அவர்களின் போதனைக்கு எதிரான போதனைகளை பவுல் செய்கிறார்.
  • கிறிஸ்மஸ் தாத்தா என்பவர் பைபிளில் எங்கும் இல்லை.
  • இயேசு தன்னை கர்த்தர் என்றோ கர்த்தரின் நேரடி மகன் என்றோ தன் வாயால் சொன்னதே இல்லை.
  • இயேசு ஒரே இறைவனை வணங்க சொல்லியும் சிலை வணக்கம் கூடாது என்றும் சொல்லி இருக்க நடப்பது அனைத்தும் அவருக்கு எதிரான செயல்களே..
  • கிருஸ்தவர்கள் என்பவர்கள் இயேசு கிறிஸ்து போதித்ததை மட்டும் பின்பற்றுபவர்கள். தேவை என்கிற பட்சத்தில் சிகப்பு பைபிள் என்ற ஒரு பதிப்பில அவரது வார்த்தைகள் மட்டும் சிகப்பு நிறத்தில் அச்சிட பட்டு இருக்கும் அவைகளையும் திருக்குரானில் இயேசு கிறிஸ்து பற்றிய வாசகங்களையும் ஒப்பிட்டு பார்க்கவும்..
  • பவுல் என்பவர் இயேசு கிறித்து அவர்களின் போதநீகு எதிராக செய்தவற்றின் சில எடுத்துக்காட்டுகள் கீழே..