இயலும்போதே நன்மை செய்துவிடவேண்டும்

கிறிஸ்தவம் 


"நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே" (நீதி.3:27)

தமிழர் சமயம் 


உடம்பும் கிளையும் பொருளும் பிறவும் 
தொடர்ந்துபின் செல்லாமை கண்டும் - அடங்கித் 
தவத்தொடு தானம் புரியாது வாழ்வார் 
அவத்தம் கழிகின்ற நாள். - (அறநெறிச்சாரம் பாடல் - 128)  

விளக்கவுரை உடலும், சுற்றமும், செல்வமும், வீடு முதலியனவும், தம்மை உடையவன் இறந்த பின்பு அவன் பின் போகாதிருத்தலைப் பார்த்தும், மனம் சொல் உடம்புகளால் அடங்கி, தவத்தையும் தானத்தையும் செய்யாமல் வாழ்பவர்களுக்குக் கழியும் நாட்கள் வீண் ஆகும்

இஸ்லாம் 

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுவார்களாம்: “என் வாழ்வில் என்னை விட்டும் தப்பிப்போன எந்த ஒரு விஷயத்திற்காகவும் துளி அளவு கூட நான் வருத்தப்பட்டது கிடையாது. ஆனால், ஒவ்வொரு நாள் சூரியன் மறைகிற போதும் ஒரேயொரு விஷயத்தைக் குறித்து மாத்திரம் நான் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறேன். ”நேற்றை விட அதிகப்படியான எந்தவொரு நற்செயலும் செய்யாமல் என் வாழ்நாளில் ஒரு நாள் கழிந்து விட்டதே!”... என்று.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக