ஓரினப் புணர்ச்சி

தமிழர் சமயம் 

சாதாரண சந்நியாச வேட ஞானிகள் அஞ்சி தப்பி ஓட முயலும் இந்த பொல்லாத காமத்தை நல்வழிப் படுத்தும் இறைவனது வீரட்டானத்தை ஆழமான உளவியல் நுட்பத்தோடு திருமூலர் விளக்குகின்றார்.

இருந்த மனத்தை இசைய இருத்தி
பொருந்தி யிலிங்க வழியது போக்கி
திருந்திய காமன் செயல் அழித்து அங்கண்
அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே - (திருமந்திரம் 346)

கருத்து இங்கு இலிங்க வழியது என்பது ஆணுறுப்பின் காமவேட்கைக்கு அடிமையாகி அன்பின் வழி உள்ளத்துப் புணர்ச்சி முன்னே வரும் உண்மையான காதலின் மங்கையரைப் புணர்ந்து பரியங்க யோகம் செய்து சுக்கில நீக்கம் மகிழ்வது போக்கி பிழையான பல்வேறு வழிகளில் சுக்கில நீக்கம் மகிழ்வதாகும். தொல்காப்பியத்தில் பகரப்படும் ஒருதலைக் காமத்து கைக்கிளை ஒவ்வாக் காமத்து பெருந்திணை போன்ற தகாத காமவேட்கைகள் இங்கு அடங்கும், எந்தக் காமத்தூய்ப்பு ஓர் ஆண் பெண்ணிடையே அன்பின் வழி பிறவாது போகின்றதோ அது பிழையான காம வழி ஆகும். இது ஆண்கள் மேல் ஏற்றிக் கூறப்பட்டாலும் பெண்களுக்கும் உரியதே. இத்தகையக் காமங்கள் பல்வேறு உடற்பிணிகட்கும் உளப்பிணிகட்கும் காரணமாக அமைந்து அகால மரணத்திற்கே இட்டுச்செலும் பண்பினதும் ஆகும்

குறிப்பு: ஆபிரகாமிய நூல்களில் சொல்லப்படும் ஓரினப் புணர்ச்சி தமிழர் பண்பாட்டில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அதற்க்கான காரணங்கள் இரண்டு.

    1. களவியல் பற்றி பல்வேறு நூல்களில் ஒரு பகுதியாவும், அகநானூறு முழுவதும் களவியல் பேசும் பண்பாட்டில் ஓரினப்புணர்ச்சி பற்றி குறிப்பிடப் படாததற்கு காரணம் திருக்குர்ஆன் நமக்கு தருகிறது. லூத் என்கிற தீர்க்கதரிசியின் காலத்தை சார்ந்த மக்கள் முதன் முதலில் ஆணும் ஆணும் புணரும் முறையை கையாண்டனர். இந்த லூத் என்பவர் ஆப்ரஹாம் என்று பைபிளில் அழைக்கப்படுபவரின் சமகாலத்தவர் ஆவார். இந்த ஆப்ரஹாம் நான்காயிரம் ஆண்டுக்கு முந்தியவர் என்று ஆய்வாளர்களால் சொல்லப் படுகிறது. 
    2. மேலும் நடைமுறையில் இல்லாத ஒன்றுக்காக சட்டங்கள் தேவை இல்லை என்பதால் ஹோமோ அல்லது லேஸ்பியன் பற்றி தமிழர் நூல்களில் எங்கும் காண கிடைக்கவில்லை.

இஸ்லாம்

மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: ‘நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள். நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிரயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்’ என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: ‘நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக’ என்பது தவிர வேறு எதுவுமில்லை” (அல்-குர்ஆன் 29:28-29)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "லூத் (அலை) சமுதாயத்தினர் செய்த செயலை செய்யக் கூடியவர்களைக் கண்டால் செய்தவனையும் செய்யப்பட்டவனையும் கொன்று விடுங்கள்" (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாம் : அஹ்மத்)

கிறிஸ்தவம் 

 ஒருவன் இன்னொரு ஆணோடு, (அல்து ஒரு பெண் இன்னொரு) பெண்ணோடு பாலின உறவு கொள்வது போன்று பாலின உறவு கொண்டால் அந்த இருவரும் பெரும் பாவம் செய்தபடியால் அவர்கள் கொல்லப்பட வேண்டும். அவர்களே தம் மரணத்துக்குப் பொறுப்பாவார்கள். (லேவியராகமம் 20:13

 9. அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. - (1 கொரிந்தியர் 6:9-10)

7 கருத்துகள்:


  1. 4 அவர்கள் படுக்கப் போவதற்கு முன்பு, சோதோம் நகரத்திலிருந்த சிறுவன்முதல் கிழவன்வரை எல்லா ஆண்களும் கும்பலாக வந்து அவருடைய வீட்டைச் சூழ்ந்துகொண்டார்கள். 5 லோத்துவை அவர்கள் சத்தமாகக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தார்கள். “ராத்திரி உன் வீட்டில் தங்க வந்த ஆண்கள் எங்கே? நாங்கள் அவர்களோடு உறவுகொள்ள வேண்டும்,+ அவர்களை வெளியே கொண்டுவா” என்று கத்திக்கொண்டே இருந்தார்கள்.

    6 அப்போது லோத்து வீட்டுக்கு வெளியே வந்து, கதவைச் சாத்தினார். 7 அவர் அவர்களிடம், “என் சகோதரர்களே, தயவுசெய்து இந்தக் கெட்ட காரியத்தைச் செய்யாதீர்கள். 8 தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள். கல்யாணமாகாத இரண்டு பெண்கள் எனக்கு இருக்கிறார்கள். அவர்களை நான் வெளியில் கொண்டுவருகிறேன், அவர்களை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், இந்த ஆண்களை மட்டும் தயவுசெய்து ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவர்கள் என் வீட்டில்* தங்க வந்திருக்கிறார்கள்”+ என்று சொன்னார்.


    12 அப்போது அந்த மனிதர்கள்* லோத்துவிடம், “இந்த நகரத்தில் உனக்கு வேறு யாராவது இருக்கிறார்களா? மருமகன்கள், மகன்கள், மகள்கள் என்று யார் இருந்தாலும் எல்லா சொந்தபந்தங்களையும் கூட்டிக்கொண்டு இங்கிருந்து போய்விடு! 13 நாங்கள் இந்த இடத்தை அழிக்கப்போகிறோம். இந்த ஜனங்களைப் பற்றிய பயங்கரமான புலம்பலை யெகோவா கேட்டிருக்கிறார்.+ அதனால், இந்த நகரத்தை அழிக்க யெகோவா எங்களை அனுப்பியிருக்கிறார்” என்று சொன்னார்கள்

    https://wol.jw.org/ta/wol/b/r122/lp-tl/nwtsty/1/19#study=discover

    பதிலளிநீக்கு
  2. “இதனைக்‌
    காமஞ்‌ சாலா இளமை யோள்வயின்‌
    ஏமஞ்‌ சாலா இடும்பை எய்தி
    நன்மையும்‌ தீமையும்‌ என்றிரு திறத்தான்‌
    தன்னொடும்‌ அவளொடும்‌ தருக்கிய புணர்த்துச்‌
    சொல்‌ எதிர்‌ பெறா அன்‌ சொல்லி இன்புறல்‌
    புல்லித்‌ தோன்றும்‌ கைக்கிளைக்‌ குறிப்பே” (43)

    அது காமஞ்‌ சான்ற தலைவி மாட்டு நிகழ்வது. இது அவ்வாறில்லாமல்‌
    காம நுகர்ச்சிக்குரிய செவ்வி பெறாத இளைய பெண்ணிடம்‌ ஒருவன்‌
    அணுகி அவனுற்ற காம நோயைப்‌ போக்கிக்‌ கொள்ளுதற்குரிய
    வாய்ப்பில்லாத நிலையில்‌ அவ்விளையோளைப்‌ புகழ்தலும்‌, பழித்தலும்‌
    ஆகிய இரு வேறுப்பட்ட மொழிகளைப்‌ பிதற்றுவான்‌. அப்பிதற்றலுள்‌
    தன்னோடும்‌ அவளோடும்‌ உறவுண்டாயது போலத்‌ தருக்கி இணைத்துப்‌
    பேசி அம்மொழிகட்கு அவள்மாட்டு ஒரு மறுமொழி பெறாது வறிதே சில
    சொல்லிச்‌ சொல்லி இன்புறுதலாகிய ஒருபால்‌ உறவுக்‌ குறிப்பினையே
    கைக்கிளை என்பர்‌.
    https://www.bdu.ac.in/cde/SLM/SLM_FULL/B.Lit%20Tamil-%20Books/Tholkappiyam%20Porullathigaram/Book%20Work%20Final.pdf

    பதிலளிநீக்கு
  3. அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும் - 1கொரிந்தியர். 6:9,10

    பதிலளிநீக்கு

  4. I கொரிந்தியர் 8:4 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம். 9. அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், 10. திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  5. “ஒரு பெண்ணிடம் பொய் சொல்வது போல் ஆணோடு பொய் சொல்லாதே; இது ஒரு அருவருப்பானது." (லேவியராகமம் 18:22)

    பதிலளிநீக்கு
  6. இந்து
    மதத்தில் ஓரினச்சேர்க்கை விஷயத்தைக் கையாள்வதில் எழும் முதல் பிரச்சனை சரியான சொற்களஞ்சியம் மற்றும் சூழலை வரையறுப்பதாகும். "மூன்றாம் பாலினம்" (திருத்திய பிரகிருதி) என்று அடிக்கடி குறிப்பிடப்படுவதை விவரிக்கசமஸ்கிருத இலக்கியங்கள் கிளிபா, உபயா, நபும்சகா அல்லது ஷந்தா போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றன. இந்தச் சொற்கள் பொதுவாக பன்முக-பாலியல் செயலிழந்த ஆண்களையோ பெண்களையோ குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்ளப்படலாம், அவர்கள் சூழலின்படி, ஆண்மையற்றவர்களாக, ஓரினச்சேர்க்கையாளர்களாக அல்லது மாற்றுத்திறனாளிகளாக அல்லது அசாதாரணமான பிறப்புறுப்பைக் கொண்டவர்களாக இருக்கலாம்.

    https://www.opindia.com/2016/02/homosexuality-and-hinduism/

    பதிலளிநீக்கு
  7. லேவியராகமம் 18:22

    “நீ பெண்ணோடு பாலின உறவு வைத்துக்கொள்வதைப் போல ஆணோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது பயங்கரமான பாவமாகும்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%2018&version=ERV-TA

    பதிலளிநீக்கு