கள் உண்ணுவதை எல்லா வேதமும் எல்லா நேரங்களிலும் தடை செய்யும் அதே வேளையில், இறைவணக்கத்தின் போது அறவே செய்யக்கூடாத கருமமாக உறுதியாக கூறுகிறது.
இஸ்லாம்
இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் பேசுவதை நீங்களே அறிய முடியாதவாறு போதையாக இருக்கும் நிலையில் தொழுகைக்கு நெருங்காதீர்கள்! (குர்ஆன் 4:43)
கிறிஸ்தவம் & யூதம்
ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் (Wine) மதுவையும் (Strong Drink) குடிக்கவேண்டாம். பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம்பண்ணும்படிக்கும், கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். - (லேவியராகமம் : 10: 8 - 11)
தமிழர் சமயம்
யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி
மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்று
ஆகும் மதத்தால் அறிவழிந் தாரே.(திருமந்திரம்: கள்ளுண்ணமை 318)
பொருள்: உண்மையான யோகிகள் அமர்ந்து (கால்கட்டி), சிறந்த அழகிய ஞான அமுதத்தைப் பருகி, எண்வகைச் சித்திகளையும் பெற்றுச் சிவானந்தத்தில் திளைப்பர். ஆனால், அத்தகைய யோக நிலையை விடுத்து, இச்சை கொண்டு கள்ளைக் குடிப்பவர்கள், அறிவை இழந்து, மூடர்களாகி, மோகத்தில் ஆழ்ந்து, கள் தரும் மதத்தால் (போதையால்) அறிவு கெட்டு, அழியும் நிலையை அடைவர்.
இந்த வேத வரிகள் அனைத்தும் போதையும் இறைவணக்கம் ஒன்றாக அமையக்கூடாது அமையாது என்று தெளிவுபட கூறுகிறது.