முகமன் கூறும் முறை

கிறிஸ்தவம்


இயேசு தாம் அனுப்பிய எழுபத்திரண்டு பேரை நோக்கி, "நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், 'இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்" என்றார் (லூக்கா 10:1-2,5-6) 
 

இஸ்லாம்


(எவரேனும்) உங்களுக்கு “ஸலாம்” (அசலாமு அழைக்கும் - உங்களுக்கு அமைதி உண்டாகுக) கூறினால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கூறுங்கள். அல்லது அதனையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கணக்கெடுப்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:86)

 "வேதமுடையோர் உங்கள் மீது ஸலாம் கூறினால் வஅலைக்கும் (உங்கள் மீதும்) எனக் கூறுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ 6258)  

 

தமிழர் சமயம்


வாழ்த்து – சொற்பொருள் விளக்கம்: வாழ்த்து எனும் சொல்லுக்கு பிங்கல முனிவர் “வாழ்த்தின் பெயர் – ஆசிடைரூபவ் ஆசி”என்று பிங்கலநிகண்டு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அபிதான சிந்தாமணியில், “வாழ்த்து – மெய்வாழ்த்துரூபவ் இருபுற வாழ்த்து என இருவகை” என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மதுரைத் தமிழ்ப்பேரகராதிரூபவ் “வாழ்த்து – ஆசீர்வாதம்ரூபவ் ஒருவருக்கு நன்மை வருவதாகவெனக் கூறுவது” 
 

முடிவுரை 

"வணக்கம்" என்று கூறும் முறை தமிழர் பண்பாடு அல்ல என்பது மட்டுமல்ல, வணக்கம் என்ற சொல்லுக்கு  வணங்குதல் என்று பொருள். அது இறைவனுக்கு மட்டும் செலுத்தவேண்டிய ஒன்று என்பது அனைத்து சமயங்களும் வலியுறுத்தும் ஒன்று. எனவே ஒருவரை காணும் பொழுது முகமன் அல்லது வாழ்த்து சொல்லவேண்டும் தவிர வணக்கம் என மொழிய கூடாது.

15 கருத்துகள்:

  1. புறநானூறு கூறும் வாழ்த்தியல் விழுமியம் https://ngmtamil.in/article/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/

    பதிலளிநீக்கு
  2. “மாறுகொள் மன்னரும்ரூபவ் வாழிய நெடிதே!”
    (புறம்:9)

    பதிலளிநீக்கு
  3. “நீ வாழியம்! நின் தந்தை
    தாய் வாழியர்ரூபவ் நிற் பயந்திசினோரே!”
    (புறம்:137:14-15)

    பதிலளிநீக்கு
  4. “கடுவழி தொகுப்ப ரூடவ்ண்டிய
    வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே!”

    (புறம்: 55)

    “நெடியோன் நல்நீர்ப் பஃறுளி மணலினும் பலவே!”
    (புறம்: 09)
    “தண் புனல் வாயில் துறையூர் முன்துறை நுண் பல மணலினும் ஏத்திரூபவ்
    உண்குவம்; பெரும!”

    (புறம்:136)

    என்ற பாடலடிகள் மூலம் தன்னலப் போக்கற்று குடிகளைக் காப்பதற்காக எண்ணவியலாத மணலின் எண்ணிக்கை போல மன்னர்கள் நீண்ட நாள் வாழ்ந்து மக்களைக் காக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பும்ரூபவ் ஏக்கமும் கொண்டு வாழ்த்தியுள்ளனர்.

    பதிலளிநீக்கு
  5. “தண்டா ரூடவ்கைத் தகை மாண் குடுமி!
    தன் கதிர் மதியம் போலவும்ரூபவ் தெறுசுடர்
    ஒண்கதிர் ஞாயிறு போலவும்
    மன்னிய பெரும! நீ நிலமிசையானே!”
    (புறம்:6)

    என்ற பாடலில் காரிக்கிழார் பாண்டிய மன்னனை வாழ்த்தியுள்ளமை புலனாகின்றது. மக்களைக் காக்கும் காவலனாகிய அன்றைய கால அரசன் நல்லாட்சி புரிந்துள்ளான் என்பதனை

    பதிலளிநீக்கு
  6. பொற் கோட்டு இமயமும்ரூபவ் பொதியமும் போன்றே!”
    (புறம்:2:24)
    “நீடிய நெடுவரைக் கழைவளர் இமயம் போல
    நீலிஇயா அத்தை நீ நிலம் மிசையானே”

    என்னும் வாழ்த்துச் சொற்களில் மலை நடுக்கமற்றது; உயர்ந்தது; நிலைத்தது; அத்தகைய நிலைப்புத்தன்மையோடு மன்னன் தனது வாழ்நாளைப் பெற்று வாழ வேண்டும் என்ற உறுதிப்பாடு நிரம்பியிருப்பதனைக் காண முடிகின்றது.

    பதிலளிநீக்கு
  7. “நாடாகொன்றோ காடாகொன்றோ
    அவலாகொன்றோ மிசையா கொன்றோ
    எவ்வழி நல்லவர் ஆடவர்
    அவ்வழி நல்லை வாழிய நிலனே”

    (புறம்: 187)

    என்ற ஒளவையின் பாடல் மண்ணைக் காக்கும் மன்னவனின் இன்றியமையாமையைப் புலப்படுத்துகின்றது. இப்பெருவுலகினைக் காக்கும் தன்மையுடைய ஞாயிறுரூபவ் மதிரூபவ் விசும்புரூபவ் மணல் போன்ற மாற்று இல்லாத இயற்கை உண்மைகளை தனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்குரிய சொற்களாக இவ்இயற்கை மெய்ப்புகளைப் போல மன்னனும் வாழ

    பதிலளிநீக்கு
  8. “பெருங்காப் பியநிலை பேசுங் காலை
    வாழ்த்து வணக்கம் வருபொ ளிவற்றினெனே றேற்புடைத் தாகி”

    (தண்டியலங்காரம்:க:அ)

    என்ற இலக்கணத்தில் பெருங்காப்பியம் இயற்றும்போது வாழ்த்துக் கூறவேண்டும் என்பது மரபு என்பதனை அறியவியலுகிறது.

    பதிலளிநீக்கு
  9. ஒளியும் ஆற்றலும் ஓம்பா ரூடவ்கையும்
    அளியும் என்றிவை ஆய்ந்துரைத்தன்று”(கொளு.1)
    என்று இந்நூல் எடுத்துரைக்கின்றது.அரசனுடைய புகழையும் இ வலிமையையும் இ கொடைத்தன்மையையும் இஅருளுடைமையையும்
    அறிந்துணர இப்பாடாண்திணைப் படலம் ஏதுவாகிறது.

    பதிலளிநீக்கு
  10. பாடப்படும் ஆண்மகனின் ஒழுக்கலாற்றைக் கூறும் புறத்திணைகளுள் ஒன்றான பாடாண்திணையில் தொல்காப்பியர் பண்டையதமிழ்ப் புலவர்களின் பாக்களை முன்மொழிவதனைக் காணமுடிகின்றது.

    “வழங்கிய மருங்கின் வகைபட நிலைஇம்
    புரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும்
    முன்னோர் கூறிய குறிப்பினும் செந்துறை
    வண்ணப் பகுதி வரைவின் றாங்கே”

    (தொல். பொருள்: புறத்: 1028)

    என்ற சூத்திரத்தில் எடுத்து மொழித்துள்ளார். பண்டைச்சான்றோர் கூறியுள்ள இயற்பாக்களே
    வாழ்த்துதலுக்கும்ரூபவ் புகழ்தலுக்கும் சான்றாகும்.

    பதிலளிநீக்கு
  11. முன்னையிற்புனைந்து முகம னளித்தும் (கல்லா. 13)
    முகிழ்நகைக் கிளவி முகமன் கூறி (உதயண குமார காவியம்)

    பதிலளிநீக்கு
  12. முருகென வுணர்ந்து முகமன் கூறி அக . 22 : 7-11 .

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சொல்லாதே’ – பேராசிரியர் நன்னன்

    அண்மையில் மறைந்த தமிழறிஞர் பேராசிரியர் நன்னன் அவர்கள் “வணக்கம் சொல்வது தமிழர் முறையே அல்ல” என்று சொல்லுகிறார். அவருடைய கருத்து இங்கே.

    // நாம் ஒருவரை ஒருவர் பார்த்தால் வணக்கம் சொல்கிறோம். அது தவறு, வணக்கம் சொல்வது முட்டாள்தனம், தமிழர் வரலாற்றில் எங்குமே வணக்கம் என்ற குறிப்பே கிடையாது. சேர மன்னர் தன் குடும்பத்துடன் கானகத்தை காணச் சென்ற போது கூட மக்கள் அனைவரும் வாழ்த்து தான் சொன்னார்களேத் தவிர வணக்கம் சொல்லவில்லை. 'வாழ்க எங்கோ' அதாவது வாழ்க அரசர் என்று தான் சொன்னார்கள். ஆரிய பழக்கம் வந்த பின்னர் தான் நமஸ்ஹாரம் என்று ஒருவரைஒருவர் பார்த்து சொன்னார்கள். அதைத் தமிழில் எப்படி சொல்வது என்று கேட்டார்கள். அதைத் தொடர்ந்து தான் வணக்கம் நம்மை தொற்றிக் கொண்டது. //

    என்று சென்னை புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற போது நன்னன் உரையாற்றினார். ( நன்றி: tamil.oneindia.com Dt 07.11.17 )

    பதிலளிநீக்கு