விபச்சாரம் செய்யாதே

யூதம் 

விபச்சாரம் என்பது வலைபோன்றது. இவ்வலையில் விழுபவர்களின் மீது கர்த்தர் மிகுந்த கோபங்கொள்கிறார். (நீதிமொழிகள் 22:14)

நீங்கள் விபச்சாரம், செய்யாதிருப்பீர்களாக. (யாத்திராகமம் 20:14)

விபச்சாரம் என்னும் பாவத்தைச் செய்யாதே. (உபாகமம் 5:18)

 8 “ஆனால் நீங்கள் பொய்களை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். அந்தப் பொய்கள் பயனில்லாதவை. 9 நீங்கள் களவும், கொலையும் செய்வீர்களா? நீங்கள் விபச்சாரம் என்னும் பாவத்தை செய்வீர்களா? நீங்கள் மற்றவர்கள் மேல் பொய்வழக்கு போடுவீர்களா? நீங்கள் பொய்த் தெய்வமான பாகாலைத் தொழுதுகொண்டு, உங்களால் அறியப்படாத அந்நிய தெய்வங்களைப் பின்பற்றுவீர்களா? 10 நீங்கள் அந்தப் பாவங்களைச் செய்தால், எனது நாமத்தால் அழைக்கப்படும். இந்த வீட்டில் எனக்கு முன்னால் நிற்க முடியும் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் இதுபோன்ற கெட்ட செயல்களையெல்லாம் செய்துகொண்டு, எனக்கு முன்னால் நின்று, ‘நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்’ என்று சொல்லிக்கொண்டே தீய செயல்களைத் தொடர்ந்து செய்யலாம் என்று நினைக்கிறீர்களா? 11 இந்த ஆலயம் எனது நாமத்தால் அழைக்கப்படுகின்றது. இந்த ஆலயம் உங்களுக்கு, கள்ளர் பதுங்கும் இடமே ஒழிய, வேறு எதுவுமில்லையா? நான் உங்களை கவனித்துக்கொண்டிருக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். (எரேமியா 7)

கிறிஸ்தவம் 

திருமணம் என்பது அனைவராலும் மதிக்கத்தக்கது. இது இரண்டு பேருக்கு இடையில் மிகப் பரிசுத்தமாகக் கருதப்படுகிறது. விபசாரம், சோரம் போன்ற பாலியல் குற்றங்களைச் செய்கின்றவர்களை தேவன் கடுமையாகத் தண்டிப்பார் - எபிரெயர் 13:4

“எந்தக் கட்டளைகளை” என்று கேட்டான் அம்மனிதன். அதற்கு இயேசு,, “நீ யாரையும் கொலை செய்யக்கூடாது. விபசாரம் செய்யக் கூடாது. திருடக்கூடாது. பொய் சாட்சி சொல்லக் கூடாது.  (மத்தேயு 19:18)

இஸ்லாம்  

"மேலும் விபச்சாரத்தை நெருங்காதீர்கள், நிச்சயமாக அது ஒரு அநாகரீகமும் தீய வழியும் ஆகும்." (சூரா அல்-இஸ்ரா', 17:32 ) 

 விபசாரியும், விபசாரனும்-இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டவர் களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில் அவ்விருவர் மீதும் உங்க ளுக்கு இரக்கம் ஏற்படவேண்டாம்; இன்னும், அவ்விருவரின் வேதனையையும் நம்பிக்கை யாளர்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும். (குர்ஆன் 24:2)
 
என்னிடமிருந்து இறைச் சட்டத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பெண்களுக்கு தீர்ப்பளித்து வழி ஏற்படுத்தவிட்டான். திருமணம் ஆகாதவன், திருமணம் ஆகாதவளுடன் விபச்சாரம் செய்தால் அதற்குத் தண்டனை நூறு கசையடியும் ஓராண்டு காலம் நாடு கடத்துவதுமாகும். மேலும், திருமணம் ஆனவன், திருமணம் ஆனவளுடன் விபச்சாரம் செய்தால் அதற்குரிய தண்டனை நூறு கசையடியும், கல்லெறிந்து கொல்வதுமாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார். (நூல்: முஸ்லிம் 1245.)

3 கருத்துகள்:

  1. தடைசெய்யப்பட்ட பெண்ணின் உதடுகளில் தேன் துளிர்க்கிறது, அவளுடைய பேச்சு எண்ணெயை விட மென்மையானது, ஆனால் இறுதியில் அவள் புழுவைப் போல கசப்பானவள், இரு முனைகள் கொண்ட வாள் போன்ற கூர்மையானவள். அவளது பாதங்கள் மரணத்திற்குச் செல்கின்றன; அவள் அடிகள் ஷியோலுக்குச் செல்லும் பாதையில் செல்கின்றன. (நீதிமொழிகள் 5:3-5)

    பதிலளிநீக்கு
  2. விபச்சாரம் செய்பவன் புத்தி இல்லாதவன்; அதைச் செய்பவன் தன்னை அழித்துக் கொள்கிறான். (நீதிமொழிகள் 6:32)

    பதிலளிநீக்கு
  3. விபச்சாரத்திற்கு கடுமையான சட்டங்களையும் கடுமையான தண்டனைகளையும் (அதிக பயத்தை ஏற்படுத்தும்) அவர்கள் பரிந்துரைக்கின்றனர் (8.352)

    பதிலளிநீக்கு