தஞ்சம்

தமிழர் சமயம் 

நச்சித் தற் சென்றார் நசை கொல்லா மாண்பு இனிதே,
உட்கு இல்வழி, வாழா ஊக்கம் மிக இனிதே,
எத் திறத்தானும் இயைவ கரவாத
பற்றினில் பாங்கு இனியது இல். (இனியவை நாற்பது 26)

தன்னை, தஞ்சமாக வந்தடைந்தவர் தம் விருப்பத்தை நிறைவேற்றும் மாட்சிமை இனியது. நாணம் இல்லாத வழிச் செல்லாத ஊக்கம் இனியது. உதவ இயன்றவற்றை மறைக்காத தன்மை இனியது. 
 
இஸ்லாம் 

(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரை பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு ( பத்திரமாக) அனுப்பபுவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 09:6)

கிறிஸ்தவம் & யூதம் 

ஓர் அடிமை உன்னிடம் அடைக்கலம் புகுந்திருந்தால், அவர்களை எஜமானிடம் ஒப்படைக்காதே. அவர்கள் விரும்பும் இடத்திலும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் எந்த ஊரிலும் அவர்கள் உங்களிடையே வாழட்டும். அவர்களை ஒடுக்க வேண்டாம் (உபாகமம் 23:15-16)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக