மரணத்தை எதிர்நோக்கிய வாழ்வு

தமிழர் சமயம் 

ஆற்றானை, 'ஆற்று' என்று அலையாமை முன் இனிதே;
கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு இனிதே;
ஆக்கம் அழியினும், அல்லவை கூறாத
தேர்ச்சியில் தேர்வு இனியது இல். (இனியவை நாற்பது 28)

ஆற்றானை - செய்யமாட்டாதவனை
கூற்றம் - எமன்

ஒரு வேலையைச் செய்யத் தெரியாதவனிடத்து ஒரு வேலையைக் கொடுக்காமை இனிது. எமனின் வருகையை எதிர்பார்த்து வாழ்வது இனிது. செல்வம் இழந்தாலும் பாவச் சொற்களைக் கூறாதிருப்பது எல்லாவற்றையும் விட இனியது.

இஸ்லாம் 

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்)  அவர்கள் கூறினார்கள்; உங்களுடைய சிற்றின்பங்களை, உங்களது அற்ப ஆசைகளை விட்டு உங்களை துண்டிக்க வைக்கக்கூடிய மரணத்தை நினைவு கூறுங்கள். வாழ்க்கையில் நெருக்கடியாக இருக்கும் போது மரணத்தை நினைவு கூர்ந்தால் அந்த வாழ்க்கை மரணத்தின் நினைவை விசாலமாக்கி விடும். ஒருவன் வசதியாக இருக்கும் போது, விசாலமான வாழ்க்கையில் இருக்கும் போது, மரணத்தை நினைத்தால் அந்த மரணம் அவனது அந்த வாழ்க்கையை நெருக்கடி ஆக்கிவிடும். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, (நூல்: ஸஹீஹுல் ஜாமிஃ 1211)


கிறிஸ்தவம் & யூதம் 

ஏனெனில் இந்த உலகம் நம் வீடு அல்ல; இன்னும் வரவிருக்கும் பரலோகத்தில் உள்ள எங்கள் நகரத்தை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். (1 பேதுரு 2:11).


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக