சிறிதளவேனும் தானம் செய்க *

தமிழர் சமயம் 

இம்மி யரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக்
கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
அடாஅ அடுப்பி னவர். (நாலடியார் 4)

பொருள்: நாள்தோறும் அரிசியின் உமி அளவாவது நம்மால் கொடுக்கக் கூடிய பொருட்களை இரவலர்க்குக் கொடுத்து உண்ண வேண்டும். இல்லையேல் கடல் சூழ்ந்த இவ்வுலகில், இரவலர் நம்மைப் ‘பிறர்க்கு உதவாதவர்கள்’ என்று இகழ்வர்

இறப்பச் சிறிதென்னாது இல்லென்னாது என்றும்
அறப்பயன் யார்மாட்டும் செய்க - முறைப்புதவின்
ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல்
பைய நிறைத்து விடும். (நாலடியார் 9)

பொருள்: நம்மிடம் இருப்பது மிகவும் சிறிது என்று கருதாமலும், இல்லை என்று மறுத்து விடாமலும் எப்போதும் அறத்தைச் செய்ய வேண்டும். வாயில்கள் தோறும் இரக்கும் தவசியின் உண்கலம் போல புண்ணியம் மெல்ல மெல்ல அறப்பயனை நிறைவாக்கிவிடும்.

இஸ்லாம் 

பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தானம்) செய்து நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 1417 அதீ இப்னு ஹாத்திம் ரலி)

கிறிஸ்தவம் / யூதம் 

 "உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த ஆசீர்வாதத்தின்படியே அவனவன் தன் இயன்றவரைக் கொடுக்கவேண்டும்." — உபாகமம் 16:17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக