விபச்சாரம் : மனைவி அல்லாத பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது இந்த வகைதான்

கிறிஸ்தவம்


"விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்று உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று." மத்தேயு 5:27-28

இஸ்லாம்


ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)

”அலியே! ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரியதல்ல.” (அஹ்மத், அபூதாவூத்)

கெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ் கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்: ”இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும்.” (புகாரி)

தமிழர் மதம்


பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல் (பிறனில் விழையாமை குறள் 141)

பொருள்[தன்னுடைய மனைவியல்லாமல்] பிறனுடைய [மகளாக & மனைவியாக] பொருளாயிருப்பவளை விரும்பி யொழுகுகின்ற அறியாமை உலகத்து அறமும் பொருளும் அறிந்தார் மாட்டு இல்லையாம்.

பல்லார் அறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
கல்யாணம் செய்து கடிபுக்க - மெல்லியல்
காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
ஏதின் மனையாளை நோக்கு. - நாலடியார் 86

பொருள்: பலரும் அறியுமாறு மண முரசு கொட்டி, நல்ல நாளிலே திருமணம் செய்து கொண்டு, தன் காவலிற் புகுந்த மென்மைத் தன்மை வாய்ந்த அன்புடைய மனைவி வீட்டில் இருக்க, ஏன் ஒருவன் பிறர் மனையாளைக் கெட்ட எண்ணத்துடன் நோக்குகிறான்? (தன் மனைவி வீட்டில் இருக்கப் பிறன் மனைவியை நாடுதல் குற்றமாகும்; தன் மனைவிக்குச் செய்யும் துரோகமாகும்).

31 கருத்துகள்:

  1. நீதிமொழிகள் 5:7 என் பிள்ளைகளே! இப்பொழுது நான் சொல்வதைக் கவனியுங்கள். நான் சொல்லுகின்றவற்றை மறந்துவிடாதீர்கள். 8 விபச்சாரம் என்னும் பாவத்தைச் செய்கின்ற பெண்ணிடமிருந்து விலகி நில். அவளது வீட்டுக் கதவின் அருகில் போகாதே. 9 நீ அவற்றை செய்தால் நீ பெறவேண்டிய மதிப்பை மற்ற ஜனங்கள் பெறுவார்கள். நீ வருடக்கணக்கில் உழைத்துப் பெற்றப் பொருட்களை அந்நியன் ஒருவன் பெறுவான். முடிவில் உன் வாழ்வை இழப்பாய். தீயவர்கள் உன்னிடமிருந்து அதனை எடுத்துக்கொள்வார்கள். 10 உனக்குத் தெரியாதவர்கள் வந்து உன் செல்வத்தை எடுத்துக்கொள்வார்கள். உனது உழைப்பின் பலனை மற்றவர்கள் அடைவார்கள். 11 உன் வாழ்வின் முடிவில் நீ உனது செயலைக்குறித்து வருத்தப்படுவாய். உன் வாழ்க்கையை நீயே அழித்துக்கொள்கிறாய். ஆரோக்கியமும் உனக்குச் சொந்தமான அனைத்தும் அழியும். 12-13 பிறகு நீ, “நான் ஏன் என் பெற்றோர்கள் சொன்னதைக் கேட்காமல் போனேன். என் போதகர்கள் சொன்னதை ஏன் கேட்காமல் போனேன். நான் ஒழுக்கமாய் இருக்க மறுத்தேன். நான் திருத்தப்படமறுத்தேன். 14 இப்போது ஏறக்குறைய எல்லாவித பிரச்சனைகளிலும் அகப்பட்ட எனக்கு நேர்ந்த அவமானத்தை ஜனங்கள் அனைவரும் பார்க்கின்றனர்” என்று சொல்லுவாய்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%205&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  2. நீதிமொழிகள் 22
    14 விபச்சாரம் என்பது வலைபோன்றது. இவ்வலையில் விழுபவர்களின் மீது கர்த்தர் மிகுந்த கோபங்கொள்கிறார்.

    பதிலளிநீக்கு
  3. விசுவாசம் கொண்ட ஆண்களுக்கு அறிவுரை

    அண்டை வீட்டுக்காரரின் மனைவி

    அல்லாஹ்வுடைய நபியே! அல்லாஹ்விடம் எந்த பாவம் மிகப்பெரியது என்று நான்
    கேட்டேன். (அதற்கு) அவர்கள், நீர் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும்.
    அவன்தான் உம்மைப் படைத்தவன் என்று கூறினார்கள். பின்னர் எது? என்று நான்
    கேட்டேன். (அதற்கு) அவர்கள், உம்முடைய குழந்தைகள் உம்முடைய உணவில்
    பங்காளிகளாக வந்து விடுவார்களென்று அஞ்சி அவர்களைக் கொலை செய்வதாகும்’
    என்று கூறினர். பின்னர் எது? என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள்
    ‘நீர் உம்முடைய அண்டை வீட்டுக்காரரின் மனைவியைச் சோரம் செய்வதாகும்’
    என்று கூறினர். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத் (ரலி) ஆதாரம்: புகாரி,
    முஸ்லிம், திர்மிதீ, நஸயீ


    (நபியே!) விசுவாசம்கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள்
    பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப்
    பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: அது அவர்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும்.
    நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.' என்று அல்லாஹ்
    குறிப்பிடுகின்றான். (அல்-குர்ஆன் 24 : 30)



    ”நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையைப் போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே
    நாளின் இறுதியில் அவர்களுடனேயே உறவு கொள்வீர்கள்” என்று நபி
    கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) நூல்: புகாரி
    5204

    https://groups.google.com/g/fromgn/c/hsxWjgmEv9c

    பதிலளிநீக்கு
  4. நாலடியார் - 38.பொது மகளிர்

    விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்
    துளக்கற நாடின்வே றல்ல; - விளக்கொளியும்
    நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும்
    கையற்ற கண்ணே அறும். 371

    விளக்கினது ஒளியும் பொது மகளிரது அன்பும் ஆகிய இரண்டையும் தெளிவாக ராஆய்ந்து பார்த்தால் இரண்டும் வேறானவை அல்ல. விளக்கினது ஒளியும் எண்ணெய் வற்றிய போதே நீங்கும். பொது மகளிர் அன்பும் (தம்மை நாடுவார்) கைப்பொருள் நீங்கியபோதே நீங்கும்.


    அங்கோட்டு அகல் அல்குல் ஆயிழையாள் நம்மோடு
    செங்கோடு பாய்துமே என்றாள்மன்; - செங்கோட்டின்
    மேற்காணம் இன்மையான் மேவாது ஒழிந்தாளே
    காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து. 372


    அங்கண் விசும்பின் அமரர் தொழப்படும்
    செங்கண்மா லாயினும் ஆகமன்; - தம்கைக்
    கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளிர் அன்னார்
    விடுப்பர்தம் கையால் தொழுது. 373

    அழகிய இடமகன்ற தேவர் உலகில் உள்ள தேவர்களால் தொழப்படும் சிவந்த கண்களையுடைய திருமாலைப் போன்றவராக இருப்பினும், பொருள் இல்லாதவரை, கொய்தற்குரிய இளந்தளிர் போலும் மேனியுடைய பொது மகளிர், தம் கையால் கும்பிட்டு அனுப்பிவிடுவர்.


    ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்குக்
    காணமி லாதார் கடுவனையர்; - காணவே
    செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார்
    அக்காரம் அன்னர் அவர்க்கு. 374

    அன்பில்லாத மனத்தையும், அழகிய குவளை மலர் போன்ற கண்களையும் உடைய பொது மகளிர்க்கு, பொருள் இல்லாதவர் நஞ்சு போல் விரும்பத்தகாதவர் ஆவர். பலரும் காணச் செக்காட்டுவோர் ஆயினும், மிகுதியாகப் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவர் அப்பொது மகளிர்க்குச் சர்க்கரை போல் இனியவராவர்.


    பாம்பிற்கு ஒருதலை காட்டி ஒருதலை
    தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் - ஆங்கு
    மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்
    விலங்கன்ன வெள்ளறிவி னார். 375

    இனிமை மிக்க, தெளிந்த நீருள்ள பொய்கையிலே பாம்புக்கு ஒரு தலையைக் காட்டி, மற்றொரு தலையை மீனுக்குக் காட்டும் விலாங்கு மீனை ஒத்த செய்கையையுடைய பொதுமகளிரின் தோள்களை, மிருகத்தைப் போன்ற அறிவற்றவர்கள் தழுவுவர். (பாம்புக்கும் மீனுக்கும் ஆசைகாட்டி இரண்டையும் ஏமாற்றும் விலாங்கு மீனைப் போன்ற வஞ்சகமுள்ளவர் பொதுமகளிர்).


    பொத்தநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும் போல்
    நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த
    பொற்றொடியும் போர்தகர்க்கோ டாயினாள் நன்னெஞ்சே
    நிற்றியோ போதியோ நீ. 376

    நூலும் (அதில் கோத்த) மணியும் போன்றும், இணை பிரியாத அன்றிற் பறவைகள் போன்றும், நாளும் நம்மை விட்டுப் பிரிய மாட்டோம் என்று சொன்ன, பொன்னாலான வளையலையுடையவளும் போர் செய்யும் ஆட்டுக் கடாவின் முறுக்கேறிய கொம்பினைப் போல் குணம் மாறினாள். ஆதலின் நெஞ்சே! நீ இன்னமும் ஆசை கொண்டு அவளுடன் போவாயோ? அன்றி என்னிடம் நிற்பாயோ? சொல்!


    ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள்கொண்டு
    சேமாபோல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை
    ஏமாந்து எமதென்று இருந்தார் பெறுபவே
    தாமாம் பலரால் நகை. 377

    காட்டுப் பசுவினைப் போல், இன்பம் உண்டாகத் தழுவி, தம்மைச் சேர்ந்தவருடைய பொருளையெல்லாம் கவர்ந்துகொண்டு அவர் வறுமையுற்றதும், அவரைப் பார்த்து உடனே குப்புறப்படுத்துக்கொள்ளும் பொதுமகளிரின் அன்பைத் 'தமது' என மயங்கி ஏமாந்து இருப்பவர், பலரால் ஏளனமாகச் சிரிக்கப் பெறுவர்.


    ஏமாந்த போழ்தின் இனியார்போன்று இன்னாராய்த்
    தாமார்ந்தபோதே தகர்க் கோடாம் - மானோக்கின்
    தம்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே,
    செந்நெறிச் சேர்தும்என் பார். 378

    தம்மை நாடி வந்தவர், தம் அழகில் மயங்கியிருக்கும்போது (பொருளைப் பறித்துக்கொண்டு) பின் அவர்கள் வறுமையுற்றதும், ஆட்டுக் கடாவின் வளைந்த முறுக்கேறிய கொம்புபோல் மாறுபடும் குணத்துடன் கூடிய, மான்போலும் பார்வையுடைய பொது மகளிரின் கொங்கைகளை, அறநெறி செல்லும் சான்றோர் விரும்ப மாட்டார்கள்.


    ஊறுசெய் நெங்சந்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார்
    தேற மொழிந்த மொழிகேட்டுத் - தேறி
    எமரென்று கொள்வாரும் கொள்பவே யார்க்கும்
    தமரல்லர் தம்உடம்பி னார். 379

    ஒளி வீசும் நெற்றியையுடைய பொது மகளிர் துன்பம் செய்யும் மனத்தைப் பிறர் அறியாதவாறு தம்முள்ளே மறைத்து வைத்துப் பேசிய ஆசை மொழிகளை நம்பி, 'இவள் எமக்கு உரியவள்' என நினைப்பார் நினைக்கட்டும்! உண்மையில் அப்போது மகளிர் யார்க்கும் உரியரல்லர்!


    உள்ளம் ஒருவன் உழையதா ஒண்ணுதலார்
    கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம் - தெள்ளி
    அறிந்த இடத்தும் அறியாராம் பாவம்
    செறிந்த உடம்பி னவர். 380

    ஒளி பொருந்திய நெற்றியுடைய பொதுமகளிரின் மனம் ஒருவனிடத்தே இருக்க, அதனை மறைத்து, தம்மை அடைந்தவா¢டம் எல்லாம் சையுடையார் போல் பேசும் போலிச் சொற்களைத் தெளிவாக உணர்ந்தபோதும் பழி நிறைந்த உடம்பை உடைய பாவிகள், அப்பொது மகளிரின் உடம்பை விட்டொழித்தலை அறியார்.

    பதிலளிநீக்கு
  5. எபிரெயர் 13:4
    திருமண ஏற்பாட்டை எல்லாரும் மதியுங்கள்; தாம்பத்திய உறவின்* புனிதத்தைக் கெடுக்காதீர்கள்.+ ஏனென்றால், பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவர்களையும், மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களையும் கடவுள் நியாயந்தீர்ப்பார்.

    https://wol.jw.org/ta/wol/b/r122/lp-tl/nwtsty/58/13#study=discover

    பதிலளிநீக்கு
  6. லேவியராகமம் 20 பாலியல் பாவங்களுக்கான தண்டனைகள்

    10 “எவனாவது பிறனுடைய மனைவியோடு பாலின உறவு கொண்டால் இருவரும் விபசாரம் என்னும் பாவத்துக்கு ஆளாகிறார்கள். எனவே அந்த ஆண், பெண் இருவரும் கொலைச் செய்யப்பட வேண்டும். 11 எவனாவது தன் தந்தையின் மனைவியோடு பாலின உறவு கொண்டால் அந்த இருவரும் கொலை செய்யப்பட வேண்டும். அவர்களின் மரணத்துக்கு அவர்களே பொறுப்பாவார்கள். அது அவன் தன் தந்தையை நிர்வாணப்படுத்தியது போன்றதாகும்.

    12 “ஒருவன் தன் மருமகளோடு பாலின உறவு கொண்டால் அந்த இருவரும் கொலை செய்யப்பட வேண்டும். அவர்கள் மிக மோசமான பாலியல் பாவத்தைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் மரணத்துக்கு அவர்களே பொறுப்பாவார்கள்.

    13 “ஒருவன் இன்னொரு ஆணோடு, பெண்ணோடு பாலின உறவு கொள்வது போன்று பாலின உறவு கொண்டால் அந்த இருவரும் பெரும் பாவம் செய்தபடியால் அவர்கள் கொல்லப்பட வேண்டும். அவர்களே தம் மரணத்துக்குப் பொறுப்பாவார்கள்.

    14 “ஒருவன் ஒரு தாயோடும் மகளோடும் பாலின உறவு கொண்டால் இதுவும் பெரிய பாலியல் பாவமாகும். ஜனங்கள் அவர்கள் மூவரையும் நெருப்பிலே போட்டுக் கொல்ல வேண்டும். இது போன்ற பாலியல் பாவங்கள் உங்கள் ஜனங்களிடம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    15 “எவனாவது மிருகத்தோடு பாலின உறவு கொண்டிருந்தால் அவன் கொல்லப்பட வேண்டும். அந்த மிருகத்தையும் நீ கொன்றுபோட வேண்டும். 16 ஒரு பெண் மிருகத்தோடு பாலின உறவு கொண்டால் நீ அவளையும் அந்த மிருகத்தையும் கொன்றுவிட வேண்டும். அவர்களே தங்கள் மரணத்துக்குப் பொறுப்பாவார்கள்.

    17 “ஒருவன் தன் சகோதரியையோ, சகோதரி முறையுள்ளவளையோ மணந்துகொண்டு அவளோடு பாலின உறவு கொள்வது வெட்ககரமான பாவமாகும். அவர்கள் பொது ஜனங்கள் மத்தியில் தண்டிக்கப்படுவதுடன், மற்ற ஜனங்களிடமிருந்தும் தனியே பிரிக்கப்பட வேண்டும். ஒருவன் தன் சகோதரியோடு பாலின உறவு கொண்ட பாவத்துக்காக அவன் தண்டிக்கப்பட வேண்டும்.

    18 “ஒருவன் ஒரு பெண் மாதவிலக்காக இருக்கும்போது அவளுடன் பாலின உறவு கொண்டால் அவர்கள் இருவருமே தங்கள் ஜனங்களிடமிருந்து தனியே ஒதுக்கப்பட வேண்டியவர்கள். அவளது இரத்தப் போக்கை அவன் திறந்து விட்டிருக்கிறபடியால் அவர்கள் பாவம் செய்தவர்களாகிறார்கள்.

    19 “நீங்கள் உங்கள் தந்தை அல்லது தாயின் சகோதரியோடு பாலின உறவு கொள்ளக் கூடாது. இது நெருங்கிய உறவோடு பாலின உறவு கொண்ட பாவத்திற்குரியது. உங்கள் பாவத்திற்கு நீங்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

    20 “ஒருவன் தன் தகப்பனின் சகோதரனுடைய மனைவியோடு பாலின உறவு கொண்டால் அது தகப்பனின் சகோதரனோடு பாலின உறவு கொண்டது போலாகும். அவனும் அவனுடைய தகப்பனின் சகோதரனின் மனைவியும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் குழந்தைகள் இல்லாமல் செத்துப்போவார்கள்.

    21 “ஒருவன் தனது சகோதரனின் மனைவியை எடுத்துக்கொள்வது தவறானதாகும். இது அவன் தன் சகோதரனோடு பாலின உறவு கொள்வது போன்றதாகும். அவர்களுக்கும் குழந்தைகள் இல்லாமற்போகும்.

    22 “நீங்கள் எனது சட்டங்களையும் விதிகளையும் நினைவில் கொண்டு, அவற்றுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நான் உங்கள் நாட்டிற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். நீங்கள் அங்கு வாழும்போது எனது சட்டங்களுக்கும், விதிகளுக்கும் கீழ்ப்படிந்தால் அந்த நாடு உங்களை கக்கிவிடாது. 23 நான் மற்றவர்களை அந்நாட்டினின்று துரத்திவிடுகிறேன். ஏனென்றால் அவர்கள் இத்தகைய பாவங்களையெல்லாம் செய்கின்றனர். நான் அப்பாவங்களை வெறுக்கிறேன். எனவே அவர்களைப் போலவே நீங்களும் வாழாதீர்கள்! 24 அவர்களின் நாட்டை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள் என்று நான் கூறியிருக்கிறேன். அவர்களின் நாட்டை உங்களுக்குக் கொடுப்பேன். இது உங்கள் நாடாகும். அது நன்மைகள் நிரம்பிய நாடாக இருக்கும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!

    “நான் உங்களை என் சிறப்புக்குரிய ஜனங்களாக அழைத்திருக்கிறேன். மற்றவர்களைவிட உங்களை வித்தியாசமாக நடத்தியிருக்கிறேன். 25 எனவே நீங்கள் தீட்டுள்ள மிருகங்களிலிருந்து தீட்டு இல்லாத மிருகங்களையும், தீட்டுள்ள பறவைகளிலிருந்து தீட்டில்லாத பறவைகளையும், வேறுபடுத்தி நடத்த வேண்டும். தீட்டுளள்ள பறவைகளையும், மிருகங்ளையும், ஊர்ந்து செல்லுகின்றவற்றையும் உண்ணாதீர்கள். நான் அவற்றைத் தீட்டுள்ளதாகச் செய்திருக்கிறேன். 26 நான் உங்களை எனக்கென்று சிறப்பான மக்களாகச் செய்திருக்கிறேன்; எனவே நீங்கள் எனக்குப் பரிசுத்தமாக இருக்கவேண்டும். ஏனென்றால் நான் பரிசுத்தமுள்ளவர். நானே கர்த்தர்!

    27 “மந்திரவாதிகளையும், குறிசொல்லுகிற ஆண்களையும் பெண்களையும் ஜனங்கள் கல்லெறிந்து கொல்ல வேண்டும்” என்று கூறினார்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%2020&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  7. 1 இராஜாக்கள் 22:46

    46 தன் நாட்டில் உள்ள முறைகெட்ட புணர்ச்சிக்காரர்களை தொழுகை இடங்களிலிருந்து விரட்டினான். அவர்கள், தன் தந்தை ஆசா ராஜாவாக இருந்தபோது இருந்தவர்கள்.

    பதிலளிநீக்கு
  8. யோபு 31

    1 “என்னைக் கவர்கின்ற ஒரு கன்னிப் பெண்ணைப் பாராதிருக்கும்படி
    என் கண்களோடு நான் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  9. யோபு 31

    11“நான் பெண்களிடம் காம இச்சை (மோகம்) கொண்டிருந்தால்.
    அயலானின் மனைவியோடு தகாத நெறியில் நடக்கும்படி அவன் கதவருகே காத்திருந்தால்.
    10 அப்போது, எனது மனைவி மற்றொருவனின் உணவைச் சமைக்கட்டும்,
    பிற மனிதன் அவளோடு படுத்திருக்கட்டும்.
    11 ஏனெனில் உடலுறவால் விளையும் பாவம் அவமானத்திற்குரியது.
    அது தண்டனை பெறக்கூடியக் பாவமாகும்.
    12 பாலின உறவு சம்மந்தமான பாவம் அனைத்தையும் அழிக்கும்வரை எரியும் நெருப்பைப் போன்றது.
    நான் இதுவரைச் செய்த அனைத்தையும், எனது உடமைகள் யாவற்றையும் அது அழித்துவிடும்!

    பதிலளிநீக்கு
  10. எசேக்கியேல் 22:9
    எருசலேமில் உள்ள ஜனங்கள் மற்ற ஜனங்களைப்பற்றிப் பொய் சொல்கிறார்கள். அவர்கள் அப்பாவி ஜனங்களைக் கொல்வதற்காக இவ்வாறு செய்கின்றனர். ஜனங்கள் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள மலைகளுக்குப் போகிறார்கள். பிறகு அவர்களின் ஐக்கிய உணவை உண்ண எருசலேமிற்கு வருகிறார்கள். “‘எருசலேமில், ஜனங்கள் பல பாலின உறவு பாவங்களைச் செய்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  11. பழமொழி நானூறு 24. அவன் மயக்கம் தெளியவில்லை!

    தொடியணிந்த தோள்களையும், மடப்பத்தையும் உடையவரான பரத்தையர்களின் மார்பினைத் தன் மார்பிலே சேர்த்துக் கொண்டவனாக, அவர்களுடைய மார்பிலே நம் தலைவன் மயங்கிக் கிடக்கின்ற அச்செயலானது முறைமை உடையதன்று. அதனை, நீ அவன் பாற் சொல்லாதிருப்பாயாக. பாணனே! பொய்த்தூக்கம் தூங்குபவரை எழுப்பி விடுதல் என்பது எவருக்குமே முடியாத செயலாகும்.

    தொடித்தோள் மடவார் மருமந்தன் ஆகம்
    மடுத்(து), அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப,
    நெறியல்ல சொல்லல்நீ, பாண! - 'அறிதுயில்
    யார்க்கும் எழுப்பல் அரிது'.

    தலைவனுக்காகத் தலைவியிடம் சமரசம் பேச வந்த பாணனிடம், தலைவனின் பரத்தையர் மோகம் இன்னும் தெளியவில்லை என்று கூறித் தலைவி மறுத்துச் சொல்லுகிறாள். அறிதுயில் - யோக நித்திரையுமாம்; இங்கே அது பொய்த்துயில் ஆகும். 'அறிதுயில் யார்க்கும் எழுப்பல் அரிது' என்பது பழமொழி.

    பதிலளிநீக்கு
  12. வளர்ந்தெழுந்த கொங்கைதன்னைமாய மென்றெண்ணிநீ
    ரருள்கொள்சீவ ராருடம்புடைமை யாகத்தேர்வீர்காள்
    விளங்கு ஞானமேவியே மிக்கோர்சொல்லலைக் கேட்பிரேல்
    களங்கமற்று நெஞ்சுளே கருத்துவந்து புக்குமே. - திருமந்திரம் 410

    வளர்ந்து கொழுத்த மார்பகங்களை உடைய பெண்களின் மேல் உள்ள ஆசையை மாயம் எனப் புறந்தள்ளி, அருளுடைய சீவனிருக்கும் உடலை நிலையென நினைத்து, ஞானமிகுந்தவர்களின் போதனைகளைக் கேட்டு, அதன்படி நடந்து தவமிருக்க, களங்கம் இல்லா மனம் கிட்டும். அதனுள் கருத்தாய் ஈசன் வந்து அமர்வான்.

    பதிலளிநீக்கு
  13. வரைவின் மகளிர்

    பொதுமகளிரைத் திருவள்ளுவர் ‘வரைவின் மகளிர்’ எனக் குறிப்பிடுகிறார். [1] வரைவு என்னும் சொல் ஒருவன் ஒருத்தி என்று வரையறை செய்துகொள்ளும் (வரைந்துகொள்ளும்) திருமணத்தை உணர்த்தும். திருமணம் செய்துகொள்ளாமல் கட்டுப்பாடின்றிக் காசுக்காகத் தன் உடலின்பத்தை விற்கும் மகளிர் வரைவின் மகளிர்.

    இவர்களைப் பரத்தையர் என்றும் கூறுவர். பரம் என்னும் பரம்பொருள் எல்லாருக்கும் உரியது. பரத்தன், பரதர், பரத்தை என்னும் சொற்கள் வரையறுத்துக்கொண்ட ஒழுக்கம் இல்லாதவராய் பரந்துபட்ட ஒழுக்கம் பூண்டு வாழ்பவரை உணர்த்துவன.

    இவர்களைப் பொதுமகன் பொதுமகள் என்னும் சொற்களாலும் குறிப்பிடுவர்

    https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D

    பதிலளிநீக்கு
  14. சொல் விளக்கம்
    பொதுமகளிர் என்னும் சொல்லோடு தொடர்புடைய சில சொற்களின் விளக்கம்

    பரத்தமை [2] – பரத்தமைத் தொழில்
    பரத்தைமை [3] – பரத்தைமைத் தொழில்
    பரத்தன் [4] – பரந்துபட்ட ஒழுக்கம் உடையவன்
    பரத்தர் [5] – பரந்துபட்ட ஒழுக்கமுடைய இளைஞர்கள்
    பரத்தை [6] – பரந்துபட்ட ஒழுக்கம் உடையவள்
    கணிகையர் [7] – காலம் கணித்த ஒழுக்கத்தால் காணம் கொடுப்போருக்கு உடலின்பத்தை விற்கும் கலையரசி
    காமக்கிழத்தி [8] - காமம் துய்க்க உரிமையாக்கிக்கொள்ளப்பட்ட பெண்
    காமக்கிழத்தியர் – காமம் துய்க்க உரிமையாக்கிக்கொள்ளப்பட்ட மகளிர் [9]
    ஒத்த கிழத்தியர் – தானும் தன் மனைவியும் போன்று ஒத்த குலத்தில் தலைவன் தனக்கென உரிமையாக்கிக்கொள்ளப்பட்டவள்
    இழிந்த கிழத்தியர் – தலைவனால் உரிமையாக்கிக் கொள்ளப்பட்ட அவனினும் தாழ்ந்த குலத்து மகள்
    வரையப்பட்டோர் – தலைவனால் உரிமையாக்கிக் கொள்ளப்பட்ட கணிகையர் மகள்

    பதிலளிநீக்கு
  15. விபச்சாரத்திற்கு நீங்கள் நெருங்க வேண்டாம். (அல்குர்ஆன் 17:32)

    விபசாரியும், விபசாரனும் – இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும். (அல் குர்ஆன் 24:2)

    'ஒருவர் விபச்சாரம் செய்யும் நிலையில் முஃமினாக இருக்க மாட்டார்' (புகாரி, முஸ்லிம்)

    'விபசாரத்தை இட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:

    1.முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்
    2.வருமானத்தை அறுத்துவிடும்
    3.ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்
    4.நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்' (ஆதாரம் : அத்தபராணி)

    மனிதனை நாசமாக்கும் செயல்கள் ஏழு என்பதாக ஹதீதில் கூறப்பட்டுள்ளது. 1. பாவங்களில் மிகப் பெரியது அல்லாஹ்விற்கு இணை வைப்பதாகும். 2. கொலை செய்தல் 3. விபச்சாரம் புரிதல். 4. பெற்றோரை நோவினை செய்தல். 5. பொய்ச் சத்தியம் செய்தல். 6. அநாதைகளின் பொருட்களை அநியாயமாகச் சாப்பிடுதல். 7. போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடுதல் ஆகியவையாகும். மற்றோர் அறிவிப்பில் விபச்சாரம் இரண்டாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    விபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் – இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது. (அல் குர்ஆன் 24:3)

    https://sufimanzil.org/jina-law/

    பதிலளிநீக்கு
  16. செல்வமும் காமமும் விரும்புவோர் மக்கள் ஆகார் பாடல் - 92

    மக்களும் மக்கள்அல் லாரும் என இரண்டு
    குப்பைத்தே குண்டுநீர் அவையகம் - மக்கள்
    அளக்கும் கருவிமற்று ஒண்பொருள் ஒன்றோ
    துளக்குறு வெள்வளையார் தோள்.

    விளக்கவுரை ஆழமான நீரையுடைய கடல் சூழ்ந்த உலகம் மனிதர்களும் மனிதர் அல்லாதவரும் என இரு குவியல்களையுடையது. மக்களை அளவிடுகின்ற கருவிகள் சிறந்த செல்வமும், விளங்கும் சங்கு வளையல்களை அணிந்த மகளிர் தோளும் ஆகும்.


    https://marainoolkal.blogspot.com/2022/08/blog-post_25.html

    பதிலளிநீக்கு
  17. விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவர் தண்டிக்கப் படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.

    திருக்குர்ஆன் 24:2

    விபச்சாரம் செய்த ஆணுக்கும், பெண்ணுக்கும் நூறு கசையடிகள் தான் தண்டனை என்று அல்லாஹ் இவ்வசனத்தில் தெளிவாகக் கூறி விட்டான். திருமணமானவர்கள், திருமணமாகாதவர்கள் என்று அல்லாஹ் வேறுபடுத்தவில்லை. எனவே திருமணம் ஆனவர்களானாலும், திருமணம் ஆகாதவர்களானாலும் அவர்கள் விபச்சாரம் செய்வார்களானால் அவர்களுக்கு நூறு கசையடிகள் தான் தண்டனை; மரண தண்டனை கிடையாது என்பது இவர்களின் வாதம்.

    திருமணம் ஆனவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு மரண தண்டனை எனவும், திருமணம் ஆகாதவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு நூறு கசையடிகள் எனவும் ஹதீஸ்களில் இரு வகையான தண்டனைகள் கூறப்படுகின்றன. இவ்வசனத்திற்கு முரணாக இது உள்ளதால் இதை ஏற்கக் கூடாது என்று இவர்கள் கூறுகின்றனர்.

    விபச்சாரக் குற்றத்துக்கு இரண்டு வகையான தண்டனை கிடையாது என்ற தங்களின் வாதத்தை வலுப்படுத்திட மற்றொரு சான்றையும் இவர்கள் முன்வைக்கின்றனர்.

    எனவே, அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்ட பின் மானக்கேடாக நடந்து கொண்டால், விவாகம் செய்யப்பட்ட சுதந்தரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்.

    திருக்குர்ஆன் 4:25

    (இது ஜான் டிரஸ்ட் வெளியிட்ட தமிழாக்கம்)

    அடிமைப் பெண்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை என்ன என்பதை இவ்வசனம் கூறுகிறது. அதாவது அடிமையாக இல்லாத திருமணமான பெண்கள் விபச்சாரம் செய்தால் என்ன தண்டனை அளிக்கப்படுமோ அத்தண்டனையில் பாதி அளவு அடிமைப் பெண்கள் விபச்சாரம் செய்யும் போது அளிக்க வேண்டும் என்பது இவ்வசனத்திலிருந்து தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  18. இஸ்லாம் எந்த சமூக நோயிலும் அதன் வேரிலிருந்து மருத்துவம் பார்க்கும் குணம் கொண்டது.. பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களும் ஆண்களின் தேவைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது..

    - இஸ்லாம் ஆண்களை பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள் என்று கட்டளை இடுகிறது,
    - பெண்களிடம் மனகொடை வழங்கி மணம் புரிய கட்டளை இடுகிறது.
    - தாமதமான திருமணத்தை தடை செய்கிறது.

    - அரசு ஆபாச படங்களை இணையதளங்களை தடை செய்யவேண்டும் : பொதுவிழும் தனிமையிழும் பெரும்பான்மை குடிமக்கள் ஆபசங்களை பார்க்கவும் பரப்பவும் தடுக்க வகை செய்யும்.

    - ஆணுக்கும் பெண்ணுக்கும் துணை தேவை இருக்கும் பொழுது திருமணம் : பணம், வாழ்கையில் செட்டில், சாதனை என எதற்காகவும் திருமணத்தை தள்ளி போட கூடாது.

    - வரதட்சணையை காரணமாக கொண்டு பெண்கள் திருமணம் தடைபட கூடாது : பெண்களுக்கு மணக்கொடை ஆண்கள் கொடுக்க வேண்டும், ஆண்கள் வரதட்சணை பெற கூடாது. ஆண்கள் அவர்களால் இயன்றதை பெண்ணின் அனுமதியுடன் கொடுக்கலாம்.

    என அனைத்திலும் சமூக சீர் திருத்தும் செய்யும் பேலன்ஸ்ட் சட்டங்கள் உள்ள மார்க்கம் இஸ்லாம் : ஏனென்றால் இது உலகை படைத்த இறைவனின் சட்டங்கள்.

    பதிலளிநீக்கு
  19. தமிழர் சமயம்
    அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
    கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
    மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
    வெறுமைக்கு வித்தாய் விடும் நல்வழி வெண்பா : 20

    விளக்கம்: கனமான அம்மியை துணையாகக் கொண்டு ஆற்றில் இறங்கினால் அது நம்மை மூழ்கச்செய்து விடும், அது போல் அழகான மார்பகங்களைக் கொண்டு நம்மை மயக்கும் வேசியுடன் கொண்ட உறவு. அந்த உறவு இந்த பிறவிக்கும் அடுத்து வரும் பிறவிக்கும் நல்லது இல்லை. நம்மிடம் உள்ள அனைத்து செல்வத்தையும் பறித்து நம்மை ஒன்றும் இல்லாத வறுமை நிலைக்கு தள்ளி, நீங்காத துன்பத்தில் ஆழ்த்தி விடும்.

    பதிலளிநீக்கு
  20. எசேக்கியேல் 18:15
    அந்நல்ல மகன் மலைகளுக்குப் போய் தனது உணவைப் பொய்த் தெய்வங்களுக்கு பகிர்ந்து கொடுப்பதில்லை. இஸ்ரவேலில் அசுத்தத் தெய்வங்களிடம் அவன் விண்ணப்பம் செய்வதில்லை. அவன் அயலானின் மனைவியோடு விபச்சாரம் செய்வதில்லை.

    பதிலளிநீக்கு
  21. மத்தேயு 5:28
    ஆனால் நான் சொல்கிறேன். ஒரு பெண்ணைக் காமக் கண் கொண்டு நோக்கி, அவளுடன் உடலுறவுகொள்ள விரும்பினாலே, அவன் அவளுடன் விபச்சாரம் செய்தவனாகிறான்.

    பதிலளிநீக்கு
  22. விபச்சாரம் – 4:15, 4:24, 4:25, 5:5, 17:32, 23:5, 23:7, 24:2, 24:30, 24:31, 24:33, 25:68, 42:37, 53:32, 60:12, 70:29, 70:30 கொலை – 2:84, 2:91, 2:179, 4:92, 4:93, 5:28,29, 5:32, 5:45, 6:151, 17:33, 25:68

    பதிலளிநீக்கு
  23. ஆணுடைய அல்லது பெண்ணுடைய பின் துவாரத்தில் புணர்ந்தவனை அல்லாஹ் மறுமையில் கருணைக் கண்கொண்டு பார்க்கமாட்டான் எனவும் நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, நஸயீ, இப்னுஹிப்பான்)

    பதிலளிநீக்கு
  24. யாத்திராகமம் 20

    14 “நீங்கள் விபச்சாரம், செய்யாதிருப்பீர்களாக.

    17 “அயலானின் வீட்டை இச்சிக்கக்கூடாது. அவனது மனைவியை விரும்பவேண்டாம். அவனது வேலைக்காரனையோ வேலைக்காரியையோ, ஆடு மாடுகளையோ, கழுதைகளையோ எடுக்க வேண்டாம். இன்னொருவனுக்குச் சொந்தமான எந்தப் பொருளையும் வஞ்சித்து எடுத்துக்கொள்ளக்கூடாது!” என்றார்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%2020&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  25. புலை மயக்கம் வேண்டி பொருட்பெண்டிர்த் தோய்தல்,
    கலம் மயக்கம் கள் உண்டு வாழ்தல், சொலை முனிந்து
    பொய்ம் மயக்கம் சூதின்கண் தங்குதல், - இம் மூன்றும்
    நன்மை இலாளர் தொழில். திரிகடுகம் 39

    உடலை விரும்பி வேசியரைச் சேர்தல், மது மயக்கம் வேண்டி கள்ளுண்டல், சூதாடுவது இம்மூன்றும் அறம் இல்லாதவர் செய்யும் தொழில்களாகும்.

    https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_13.html

    பதிலளிநீக்கு
  26. லேவியராகமம் 18

    6 “நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுடன் பாலின உறவு கொள்ளக் கூடாது. நானே கர்த்தர்!

    7 “நீங்கள் உங்கள் தந்தையோடும் தாயோடும் பாலின உறவு தொடர்புகொள்ளக் கூடாது. அந்தப் பெண் உனது தாய். எனவே நீ அவளோடு பாலின உறவு கொள்ளக் கூடாது. 8 அவள் உனது தாயாக இல்லாவிட்டாலும் உனது தந்தையின் மனைவியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் அது உனது தந்தையை நிர்வாணமாக்குவது போன்றதாகும்.

    9 “நீங்கள் உங்கள் சகோதரியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. அவள் உனது தந்தைக்கோ, தாய்க்கோ பிறந்தவளாக இல்லாமல் இருக்கலாம். அவள் உனது வீட்டிலே பிறந்தவளாகவோ வேறு இடத்தில் பிறந்தவளாகவோ இருக்கலாம்.

    10 “நீ உன் பேத்தியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் உங்களில் ஒரு பகுதியானவர்கள்.

    11 “உனது தந்தைக்கும் அவரது மனைவிக்கும் பிறந்தவளாக இருந்தாலும் அவள் உனது சகோதரிதான். நீ அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.

    12 “உன் தந்தையின் சகோதரியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. அவள் உனது தந்தையோடு நெருங்கிய உறவு உடையவள். 13 நீ உனது தாயின் சகோதரியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அவள் உனது தாயின் நெருங்கிய உறவினள். 14 நீ உனது தந்தையின் சகோதரனோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. நீ அவரது மனைவியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் அவள் உனது அத்தை அல்லது சித்தி அல்லது பெரியம்மாள்.

    15 “நீ உனது மருமகளோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால் அவள் உனது மகனின் மனைவி. அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.

    16 “நீ உனது சகோதரனது மனைவியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அது உனது சகோதரனை நிர்வாணமாக்குவது போன்றதாகும்.

    17 “நீ தாய்-மகள் இருவரோடும் பாலின உறவு கொள்ளக்கூடாது. அதோடு அவளது பேத்தியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அந்தப் பேத்தி அவளது மகளின் மகளாகவும் மகனின் மகளாகவும் இருக்கலாம். அவளது பேத்தி என்றால் அவளுக்கு நெருக்கமான உறவினள். அவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்வது முறை கெட்ட செயல்.

    18 “உனது மனைவி உயிரோடு இருக்கும்போது அவளது தங்கையை அடுத்த மனைவியாக வைத்துக்கொள்ளக் கூடாது. இது அந்தச் சகோதரிகளை விரோதிகளாக மாற்றிவிடும். உனது மனைவியின் சகோதரியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.

    19 “ஒரு பெண் மாதவிலக்கான காலத்தில் இருக்கும்போது அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அவள் அப்போது தீட்டுள்ளவளாக இருக்கிறாள்.

    20 “பக்கத்து வீட்டுக்காரனின் மனைவியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது உன்னை தீட்டுள்ளவனாக்கிவிடும்.

    21 “நீ உனது குழந்தைகளை மோளேகு என்ற பொய்த் தெய்வத்திற்கு முன்பு நெருப்பில் நடக்கும்படி அனுமதியாதே. நீ இதனைச் செய்தால் உனது தேவனை மதிக்கவில்லை என்று பொருள். நானே கர்த்தர்.

    22 “நீ பெண்ணோடு பாலின உறவு வைத்துக்கொள்வதைப் போல ஆணோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது பயங்கரமான பாவமாகும்.

    23 “நீ எந்த மிருகத்தோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது உன்னை அருவருப்பு உள்ளவனாக்கும். இதுபோல் ஒரு பெண்ணும் எந்த மிருகத்தோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது இயற்கைக்கு மாறானது.

    பதிலளிநீக்கு
  27. காம எண்ணத்தின் கொடுமை பாடல் - 90

    சாவாய் நீ நெஞ்சமே சல்லிய என்னைநீ
    ஆவதன்கண் ஒன்றானும் நிற்கஒட்டாய் - ஓவாதே
    கட்டுஅழித்துக் காமக் கடற்குஎன்னை ஈர்ப்பாயே
    விட்டுஎழுங்கால் என் ஆவாய் சொல்.

    விளக்கவுரை மனமே! நீ கெடுவாயாக! கலக்கம் அடைந்த என்னை நல்ல நெறியில் ஒன்றிலும் நிற்கும்படி விடாமல் ஒழிவின்றி உறுதியைக் கெடுத்து, ஆசை என்னும் கடலுக்கு என்னை இழுக்கின்றாய். பொருளின் மீதுள்ள பற்றை விட்டு நான் எழும்போது நீதான் எந்த நிலையை அடைவாய் கூறுவாயாக!

    காம எண்ணத்தை விலக்குதல் பாடல் - 91

    பழியோடு பாவத்தைப் பாராய்நீ கன்றிக்
    கழிபெருங் காம நோய் வாங்கி - வழிபடாது
    ஓடும் மனனே விடுத்து என்னை விரைந்துநீ
    நாடிக்கொள் மற்றோர் இடம்.

    விளக்கவுரை மிகப்பெரிய ஆசை நோயை உட்கொண்டு என் வழியே இணங்காமல் பெண்களின் பால் ஆசை மிக்கு வருந்தி அவர்களிடம் ஓடும் மனமே, நீ பழியுடனே பாவங்களையும் எண்ணிப் பார்க்க மாட்டாய். ஆதலால் என்னை விட்டு நீங்கி அடைவதற்குரிய வேறு இடத்தை நீ விரைவில் தேடி அடைவாயாக!

    செல்வமும் காமமும் விரும்புவோர் மக்கள் ஆகார் பாடல் - 92

    மக்களும் மக்கள்அல் லாரும் என இரண்டு
    குப்பைத்தே குண்டுநீர் அவையகம் - மக்கள்
    அளக்கும் கருவிமற்று ஒண்பொருள் ஒன்றோ
    துளக்குறு வெள்வளையார் தோள்.

    விளக்கவுரை ஆழமான நீரையுடைய கடல் சூழ்ந்த உலகம் மனிதர்களும் மனிதர் அல்லாதவரும் என இரு குவியல்களையுடையது. மக்களை அளவிடுகின்ற கருவிகள் சிறந்த செல்வமும், விளங்கும் சங்கு வளையல்களை அணிந்த மகளிர் தோளும் ஆகும்.
    https://marainoolkal.blogspot.com/2022/08/blog-post_25.html

    பதிலளிநீக்கு
  28. செருக்கினால் வாழும் சிறியவனும், பைத்து அகன்ற
    அல்குல் விலை பகரும் ஆய்தொடியும், நல்லவர்க்கு
    வைத்த அறப்புறம் கொண்டானும், - இம் மூவர்
    கைத்து உண்ணார், கற்றறிந்தார். . . . .[25]

    செருக்கினால் வாழும் சிறியவனும் பைத்தகன்ற
    அல்குல் விலைபகரும் ஆய்தொடியும் - நல்லவர்க்கு
    வைத்த அறப்புறம் கொன்றானும் இம்மூவர்
    கைத்துண்ணார் கற்றறிந் தார். . . . .[25]

    விளக்கம்:
    பெரியோரை மதிக்காத அறிவில்லாதவனும், உடலை விற்கும் விலைமகளும், நல்லவர்க்கு வைத்த அறச்சாலையை அழித்தவனும், ஆகிய இம்மூவரிடத்தும் அறிஞர்கள் உணவு உண்ணமாட்டார்.

    பதிலளிநீக்கு
  29. பெண் விழைந்து பின் செலினும், தன் செலவில் குண்றாமை;
    கண் விழைந்து கையுறினும், காதல் பொருட்கு இன்மை;
    மண் விழைந்து வாழ் நாள் மதியாமை; - இம் மூன்றும்
    நுண் விழைந்த நூலவர் நோக்கு. . . . .[திரிகடுகம் 29]

    பெண்விழைந்து பின்செலினும் தன்செலவிற் குன்றாமை
    கண்விழைந்து கையுறினும் காதல் பொருட்கின்மை
    மண்விழுந்து வாழ்நாள் மதியாமை இம்மூன்றும்
    நுண்விழைந்த நூலவர் நோக்கு. . . . .[29]

    விளக்கம்:
    தன்னைச் சேர விரும்பும் பெண்ணைச் சேராமையும், பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருத்தலும், வாழ்கின்ற காலத்தை மதிக்காமல் இருத்தலும் கற்றவர்களின் கருத்தாகும்.

    பதிலளிநீக்கு
  30. புலை மயக்கம் வேண்டி பொருட்பெண்டிர்த் தோய்தல்,
    கலம் மயக்கம் கள் உண்டு வாழ்தல், சொலை முனிந்து
    பொய்ம் மயக்கம் சூதின்கண் தங்குதல், - இம் மூன்றும்
    நன்மை இலாளர் தொழில். . . . .[திரிகடுகம் 39]

    விளக்கம்:
    உடலை விரும்பி வேசியரைச் சேர்தல், மது மயக்கம் வேண்டி கள்ளுண்டல், சூதாடுவது இம்மூன்றும் அறம் இல்லாதவர் செய்யும் தொழில்களாகும்.

    பதிலளிநீக்கு
  31. வெகுளி நுணுக்கம் விறலும் மகளிர்கட்கு
    ஒத்த ஒழுக்கம் உடைமையும், பாத்து உண்ணும்
    நல் அறிவாண்மை தலைப்படலும், - இம் மூன்றும்
    தொல் அறிவாளர் தொழில். . . . .[திரிகடுகம் 40]

    விளக்கம்:
    சினத்தை அடக்குதலும், பெண்கள் வயப்படப்பாமல் இருத்தலும், நல்லறிவு பெற்றிருத்தலும், கற்றவர் செயல்களாகும்.

    பதிலளிநீக்கு