திருக்குறளை படிப்பவர்கள் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும்?

 திருக்குறளை படிப்பவர்கள் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும்?

குறளை வெய்யாற்க்கு மறைவிரி எளிது - முதுமொழிக்காஞ்சி

இதில் மறை என்பது தமிழ் மறையை மட்டும் குறிப்பிடுகிறதா?

இல்லை. எப்படி?

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை 
திருவாசகமும் திருமூலர் சொல்லும் 
ஒருவா சகம்என்று உணர். (நாலடியார்-40)

குறளும் நான்மறையும் ஒருவாசகம் ஆகும்.

ஆனால் இதில் நான்மறை எனபது என்ன?

ரிக் யஜுர் சாம அதர்வணமா?

இல்லை! நான்மறை என்பது உலகில் இதுவரை அனைத்து மொழியிலும் அனைத்து நிலத்திலும் வந்த அனைத்து வேதங்களையும் குறிக்கிறது.

மேலும் குறளும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகம் என்கிறது இந்த பாடல்.

அந்தவகையில் திருமந்திரம், ஏழாம் தந்திரம், 13. குருபூசை, பாடல் - 1864 இதற்கான பதிலை தரலாம்.

குறள் என்றால் சுருக்கமாக என்று பொருள். எனவே உலகில் உள்ள வேதங்கள் அனைத்தின் சுருக்கம் திருக்குறள் ஆகும்.

உதாரணம்:

குறளையுள் நட்பு அளவு தோன்றும்; உறல் இனிய
சால் பினில் தோன்றும், குடிமையும்; பால் போலும்
தூய்மையுள் தோன்றும் பிரமாணம்; - இம் மூன்றும்
வாய்மை உடையார் வழக்கு. . . . .[திரிகடுகம் 37]

பொருள்: சுருக்கத்தினால் நட்பின் எல்லை தோன்றும். இனிய செயல்களினால் குடிப் பிறப்பின் தன்மை தோன்றும். மனத் தூய்மையினால் வாழ்வின் அளவு தோன்றும். எனவே இம்மூன்றும் உண்மையான பெரியோரின் குணங்களாகும்.

முடிவுரை:

குறளில் தமிழ் என்ற வார்த்தை பயன்படுத்த பட்டததற்கும், குறளில் இறைவனின் தனிப்பெயர் குறிப்பிட படாததற்கும் காரணம் உண்டு. குறள் தென்னாட்டுக்கு அல்லது தமிழுக்கு மட்டும் உள்ள அற விதிகளை கூறும் நூல் அல்ல. மாறாக உலகில் வேதங்கள் என்று சொல்லப் படுபவைகள் உண்மையில் வேதம்தானா என்று கண்டறியும் அளவுகோலாகவும் பயன்படுத்தலாம். அவ்வாறு கண்டறியப் படுவதில் சமீபத்திய நூல் அதாவது இக்காலத்துக்கு பொருந்தும் சமயம் எதுவோ அதை பின்பற்ற வழிகாட்டும் நூல் குறள் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக