மரணமில்லாத ஒரே ஒருவன்

தமிழர் சமயம்


அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர் புகு மாறறி யேனே. (திருமந்திரம் 5


இஸ்லாம்


(உலகிலுள்ளவை) யாவும் அழிந்து போகக்கூடியதே, மிக்க வல்லமையும், கண்ணியமுமிக்க உம் இறைவனின் முகம் மட்டுமே நிலைத்திருக்கும்.'' (அல்குர்ஆன் 55:26,27)  
 

கிறிஸ்தவம் & யூதம்


அவர் ஒருவரே என்றும் மரிப்பதில்லை. அவர் யாராலும் அருகில் நெருங்கி வரமுடியாத ஒளியில் வாழ்கிறார். எந்த மனிதனும் அவரை ஒரு போதும் பார்த்ததில்லை. யாராலும் அவரைப் பார்க்கமுடியாது. என்றென்றைக்கும் அவருக்குக் கனமும் வல்லமையும் உண்டாகுவதாக ஆமென். (1 தீமோத்தேயு 6:16)

முடிவுரை

மரணமில்லாத அமரன் ஒரே ஒருவன் தான் அவனே நம் இறைவன். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து படைப்புகளும் ஒரு நாள் நிச்சயமாக மரணித்தோ அழிந்தோ போகும்.  

7 கருத்துகள்:

  1. அந்தம் இல் ஈசன்

    சந்தி எனத்தக்க தாமரை வாள் முகத்து
    அந்தம் இல் ஈசன் அருள் நமக்கே என்று
    நந்தியை நாளும் வணங்கப்படும் அவர்
    புந்தியின் உள்ளே புகுந்து நின்றானே. 27

    https://www.chennailibrary.com/saiva/thirumanthiram.html

    பதிலளிநீக்கு
  2. >பிறப்பு இலி பிஞ்ஞகன் பேரருளாளன்
    **இறப்பு இலி** யாவர்க்கும் இன்பம் அருளும்
    துறப்பு இலி தன்னைத் தொழுமின் தொழுதால்
    மறப்பு இலி *மாயா விருத்தமும் ஆமே. *(திருமந்திரம் *25)

    பதிலளிநீக்கு
  3. அவிநாஸி² து தத்³வித்³தி⁴ யேந ஸர்வமித³ம் ததம்|
    விநாஸ²மவ்யயஸ்யாஸ்ய ந கஸ்²சித்கர்துமர்ஹதி ||2-17||

    அவிநாஸி² து = அழிவற்றது தான் என்று
    தத்³ வித்³தி⁴: = அதை அறிந்து கொள்
    யேந இத³ம் ஸர்வம் = எதனால் இவை அனைத்தும்
    ததம் = வியாபிக்கப் பட்டிருக்கிறதோ
    அஸ்ய அவ்யயஸ்ய = அந்த அழிவற்றதற்கு
    விநாஸ²ம் கர்தும் கஸ்²சித் ந அர்ஹதி = அழிவை ஏற்படுத்த யாருக்கும் இயலாது

    இவ்வுலக முழுவதிலும் பரந்து நிற்கும் பொருள் அழிவற்ற தென்றறி; இது கேடற்றது; இதனை யழித்தல் யார்க்கும் இயலாது.

    https://www.sangatham.com/bhagavad_gita/gita-chapter-2

    பதிலளிநீக்கு
  4. நித்திய ஜீவன் (என்றென்றும் நிலைத்திருப்பவன்):

    அல்லாஹ் - அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;...2:255

    இன்னும், நிலைத்தவனாகிய நித்திய ஜீவனான (அல்லாஹ்வுக்கு) யாவருடைய முகங்களும் பணிந்து தாழ்ந்துவிடும்; ஆகவே எவன் அக்கிரமத்தைச் சுமந்து கொண்டானோ, அவன் நற்பேறிழந்தவனாகி விடுவான். 20:111

    (பூமியில்) உள்ள யாவரும் அழிந்து போகக்கூடியவரே -55:26

    மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.55:27

    https://www.islamkalvi.com/basic/believes/001.htm

    பதிலளிநீக்கு
  5. திருநாவுக்கரசர்

    நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்;
    ஆறுகோடி நாராயணர் அங்ஙனே;
    ஏறு கங்கை மணல், எண் இல் இந்திரர்;
    ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே - தேவாரம்:2078

    ஈறு - முடிவு

    பதிலளிநீக்கு
  6. இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
    வெளிப்படுத்தின விசேஷம் 1:8

    பதிலளிநீக்கு
  7. அந்தமில் ஈசன்

    27. சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்
    தந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
    நந்தியை நாளும் வணங்கப் படுமவர்
    புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே.

    (ப. இ.) சந்தி எனப்படும் அந்தியின் நிறம் சிவப்பு. அந்நிறம் போலும் தாமரை செந்தாமரை. அம் மலர்போலும் ஒளியுடைத் திருமுகம் சிவபெருமான் முகம். அவனே ஆண்டவன். அவன் திருவருள் எந்நாளும் நமக்கேயாம். அவ்வருளை அளிப்பவன் அழிவில் செல்வத்தன் ஆகிய நந்தி. அந் நந்தியை நாளும் வணங்கும் நல்லன்பர்தம் பிறந்த அறிவினுள் சிவபெருமான் புகுந்து நின்றனன்.

    (அ. சி.) சந்தியெனத்தக்க - அந்தியில் தோன்றும் செவ்வான நிறத்தையுடைய. வணங்கப்படுமவர் - தொழும் அவர்.

    பதிலளிநீக்கு