முகமது நபி ﷺ அவர்களின் மீது கிறிஸ்தவர்கள் கூறும் முக்கிய குற்றச்சாட்டு!

இரண்டு முரணான குற்றச்சாட்டுகளை கிறிஸ்தவர்கள் முகமது நபி அவர்கள் மீது காலம் காலமாக கூறிவருகின்றனர். அவைகளாவன, 

1) தங்களுக்கு என்று எதுவும் சொந்தமாக கொண்டிராமல் பைபிளை காப்பி அடித்து உள்ளார் முகமது

உபாகமத்த்தில் மோசஸ் இவ்வாறு கூறுகிறார்:

“ஆனால் நான் உங்களிடம் சொல்லும்படி சொல்லாத சிலவற்றை ஒரு தீர்க்கதரிசி கூறலாம். அதுமட்டுமின்றி, அந்தத் தீர்க்கதரிசி நான் தேவனுக்காகப் பேசுகிறேன் என்று சொல்லலாம். அப்படி ஏதும் நடந்தால் பின் அந்தத் தீர்க்கதரிசி கொல்லப்பட வேண்டும். - (உபகாமம் 18:20

மோசேவின் போதனைக்கு எதிரான எந்தவொரு போதனையும் முகமது நபி ﷺ அவர்களால் செய்யப் படவில்லை. உதாரணமாக மோசேயின் பத்து கட்டளைகளைக்கு முகமது நபியின் உபதேசங்கள் எங்கும் வேறுபடவில்லை. 

மேலும் மோசே கூறியுள்ளார்: 

கர்த்தருக்காக நான் பேசுகிறேன், என்று கூறும் தீர்க்கதரிசியின் வார்த்தைகள் நடக்காமல் போனால், பின் நீங்கள் கர்த்தர் இவற்றை கூறவில்லையென்று அறிந்து கொள்ளலாம். அந்தத் தீர்க்கதரிசி பேசியது, அவனது சொந்தக் கருத்துக்களே என்று நீங்கள் அறிந்து கொண்டால், நீங்கள் அவனைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை. (உபகாமம் 8:22)

முகமது நபி  கூறிய 1000-க்கும் மேற்பட்ட முன்னறிவிப்புகள் அவர் வாழ்ந்த சமகாலத்திலும் இப்பொழுதும் நடந்துவந்து உள்ளது. அவற்றில் சில,

    • முசுலிம்களின் நம்பிக்கையின் படி குர்ஆனே மிகப்பெரும் அற்புதமாகும். ஏனெனில் மற்ற இறைத்தூதர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் போலல்லாமல் குர்ஆன் முகம்மது நபியின் வாழ்நாளைக் கடந்தும் நிலைபெற்றுள்ளது.
    • முகம்மது நபி நிலவை பிளந்த நிகழ்வு
    • இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்
    • அலி இபின் சகல் ரப்பான் அல் தபரி அவர்கள் கூற்றுப் படி முகம்மது நபி தனது எதிரிகள் அனைவரையும் வென்றது அற்புதங்களில் ஒன்றாகும். இதைப் போன்ற பல நவீன முசுலிம் வரலாற்றாசிரியர்கள், முகம்மது நபி குறுகிய காலத்தில் மதம், சமூகம், அரசியல், இராணுவம் மற்றும் இலக்கியம் போன்ற பல்வேறு உலகியல் துறைகளில் மாற்றங்களை நிகழ்த்தியதும், "நாடோடி குழுக்களாகவும் கல்வியறிவற்றவர்களாவும் இருந்த அரேபியர்களை உலகை வென்றவர்களாக மாற்றியதும் அற்புதமாகக் கருதப்படுகின்றது.
    • பல சந்தர்ப்பங்களில் இறைவன் அருளால் உணவு மற்றும் தண்ணீர் வழங்கியது.
    • அழுத ஈச்ச மரம் முகம்மது நபி(ஸல்) உரை நிகழ்த்தும் போது அதன் மீது சாய்ந்ததால் ஆறுதல் அடைந்தது.
    • அவரது கட்டளையை ஏற்று இரண்டு மரங்கள் நகர்ந்தது.
    • அவரது முன்னறிவுப்புகள்: எய்ட்ஸ், ஹெட் போன், பூகம்பங்கள், ஜெருசலேம் வெற்றிகொள்ளப் படும், அரபு தேசம் உயரமான கட்டிடங்களை போட்டிப் போட்டு கட்டும்.  
    • மக்காவிலிருந்து மதீனா சென்ற ஹிஜ்ரா பயணம் செய்தது.
    • முகம்மது நபி தபுக் யுத்தத்தின் ஆயிரக்கணக்கான வீரர்களின் தாகம் தணிக்கவும் உளூச் செய்யவும் நீர் சுரக்கச் செய்த நிகழ்வு.
    • முகம்மது நபி ஹுதைபியா உடன்படிக்கை போது மக்களின் தாகம் தணிக்கவும் உளூச் செய்யவும் வறண்ட கிணற்றை ஊற்றெடுக்கச் செய்தது.
    • பத்ர் யுத்தம் போது அவர் கையினால் எறிந்த தூசியினால் சில எதிரிகளைக் குருடாக்கினார். இந்நிகழ்வு குர்ஆனில் சூரா அல்-அன்ஃபால், வசனம் 17 (8:17) இல் கூறப்பட்டுள்ளது.
    • முகம்மது நபியின் தோழர் உஸ்மானுக்கு பிற்காலத்தில் பேராபத்து ஏற்படும் எனக் கூறினார். அதே போல் உஸ்மான் அவர்கள் கலிபா பதவி ஏற்றபின் அவருக்கு பேராபத்து ஏற்பட்டது.
    • முகம்மது நபியின் தோழர் அம்மார் இப்னு யாசிர் பிற்காலத்தில் நீதியில்லா குழுவால் கொல்லப்பட நேரும் எனக் கூறினார். அதே போல் அம்மார் இப்னு யாசிர் பிற்காலத்தில் கொல்லப்பட்டார்.
    • முகம்மது நபி, பிற்காலத்தில் இறைவன் அவரது பேரன் ஹசன் மூலம் இரண்டு பெரிய முஸ்லீம் குழுக்கள் இடையே சமாதானம் ஏற்படச் செய்வார் என முன்னறிவிப்புக் கூறினார். பிற்காலத்தில் ஹசன்-முஆவியா குழுக்களுக்கிடையே ஒப்பந்தம் நடைபெற்றது.
    • அவர் முஸ்லிம்களின் எதிரிகளின் பிரபலமான ஒருவரை கொல்வேன் என்று கூறினார். அதே போல் உஹது போரில் உபை இப்னு கலப் கொல்லப்பட்டார்.
    • பத்ரு போர் ஆரம்பிக்கும் முன்பே எதிரிப்படையின் தலைவன் எவ்விடத்தில் கொல்லப்படுவான் என சுட்டிக்காட்டினார். அதேபோல அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் எதிரிப்படையின் தலைவர் கொல்லப்பட்டார்.
    • அரேபிய பாலைவனத்தில் வாழ்ந்த அவர் பிற்காலத்தில் தமது நாட்டில் கடல் பகுதியும் இருக்கும் எனக்கூறினார். அதே போல் கலிபாக்கள் ஆட்சியில் நாட்டின் எல்லைகள் விரிந்து கடல் பகுதியும் நாட்டின் எல்லையில் வந்தது.
    • அவர் தமது மனைவிகளிடம் தாம் இறந்த பிறகு மனைவிகளில் அதிகத் தொண்டு செய்யும் ஒருவரே விரைவில் இறப்பார் எனக்கூறினார். அதே போல் அவர் இறந்த பிறகு அதிக தொண்டுள்ளம் கொண்ட அவரது மனைவியான ஜைனப் இறந்தார்.
    • அப்துல்லா இப்னு மஸ்ஊத் அவர்களின் பால் வற்றிய ஆடு முகம்மது நபி நிகழ்த்திய அற்புதத்தால் அதிகமாக பால் கொடுத்தது.
    • கைபர் போரில் நோயுற்ற அலீயின் கண்ணைக் குணப்படுத்தினார்.
    • வறண்டு கிடந்த மதீனா நகரில் மழை பொழிய காரணமாக இருந்தார்.
    • அவரது விரல்களுக்கு இடையே இருந்து தண்ணீர் வரச் செய்தது அற்புதமாகக் கருதப்படுகிறது.
    • முகம்மது நபி தபுக் போரில் கையளவு பேரித்தம் பழங்கள் மூலம் பல வீரர்களின் பசியைத் தணிக்க வைத்தார்.
    • முகம்மது நபி அவர்கள் தான் இறந்த பிறகு எனது குடும்ப உறவினர்களில் தனது மகள் பாத்திமா தான் முதலில் இறப்பார் எனக்கூறினார். அதே போல் முகம்மது நபி இறந்த பிறகு அவரது மகள் பாத்திமா தான் முதலில் இறந்தார்.
    • ஹுனைன் போரில் அயத் பின் அம்ரு என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது முகம்மது நபி அவர்கள் தன் கையால் இரத்தத்தைத் துடைத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்ய அவர் காயம் ஆறி நெற்றி பளபளப்பாக மாறியது.
மேலும் முன்னறிவிப்பு தொடர்பான தகவலுக்கு  

இயேசு கூறினார்:  “நான் உங்களோடு இருக்கையில் இவற்றை எல்லாம் உங்களுக்குச் சொல்லிவிட்டேன். ஆனால் உதவியாளர் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதிப்பார். நான் உங்களுக்குச் சொன்னவற்றையெல்லாம் உங்களுக்கு அவர் நினைவுபடுத்துவார்அவரே பரிசுத்த ஆவியானவர். பிதா எனது நாமத்தினால் அவரை அனுப்புவார். (யோவான் 14:15-16) 
 
எனவே பைபிளை முகமது காப்பி அடித்தார் என்று சுருக்குவது பிழை. மோசேயின் மற்றும் இயேசுவின் போதனைகளை கூறவே அவர் வந்துள்ளார் என்கிற பொழுது அவைகள் ஒன்றுபோல அல்லாமல் வேறெப்படி இருக்கும்?  
 

 2) இன்றைய தோராவுக்கும், பைபிளுக்கும் எதிராக முகமது நபி சில செய்திகளை கூறுவதால் அவர் பொய் தீர்க்க தரிசி ஆவார். 

“ஆனாலும், நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன்; நான் போவது உங்களுக்கு உகந்தது, ஏனென்றால் நான் போகவில்லை என்றால் தேற்றரவாளன் உங்களிடம் வரமாட்டார். ஆனால் நான் புறப்பட்டால், நான் அவரை உங்களிடம் அனுப்புவேன். (யோவான் 16:7)

12 “உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஆனால் இப்பொழுது நீங்கள் தாங்கிக்கொள்ள முடியாதபடி அந்தச் செய்திகள் அதிகப்படியானவை. 13 ஆனால் உண்மையின் ஆவியானவர் வரும்போது அனைத்து உண்மைகளிலும் உங்களை வழிநடத்திச் செல்வார். ஆவியானவர் அவரது சொந்த வார்த்தைகளைக் கூறுவதில்லை. அவர் என்ன கேட்டிருக்கிறாரோ அவற்றையே பேசுவார். 14 நடக்கப்போகிறவற்றைப்பற்றி மட்டுமே அவர் பேசுவார். உண்மையின் ஆவியானவர் எனக்கு மகிமையைக் கொண்டுவருவார். எப்படி என்றால் அவர் என்னிடம் கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார். 15 பிதாவினுடையவைகள் எல்லாம் என்னுடையவைகள். அதனால்தான் ஆவியானர் என்னிடமிருந்து கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார் என்றேன்.” (யோவான் 16:12-15)

இயேசுவுக்கு பிறகு அவர் வருவார் என்பதும், இயேசு கூறிய செய்திகள் அனைத்தையும் மேலும் அதோடு சேர்த்து மேலதிகமான செய்திகளையும் அவர் மக்களுக்கு வழங்குவார் என்பதும் மேலும் அவர் அவைகளை தனது சொந்த விருப்பப்படி அல்லாமல் கர்த்தரின் விருப்பப்படியே சொல்லுவார் என்பது இவ்வசனத்தின் மூலம் அறியப்படுகிறது. 

எனவே கிறிஸ்தவர்களின் இந்த முரண்பாடான குற்றச்சாட்டுகளை அவர்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக