விவாகரத்து

விவாகரத்து என்று இந்துமதத்தில் குறிப்பிடப்படும் நிகழ்வுக்கு மணமுறிவு, மணவிலக்கு, தள்ளி வைத்தல், தலாக், குலா என்று பல்வேறு பண்பாடுகளில் குறிப்பிடப் படுகிறது.
 

தமிழர் சமயம் 


திருக்குறளில் மணவிலக்கு மறைமுகமாக உள்ளது 
 
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி (குறள் 887)

விளக்கம்: செப்பின் இணைப்பைப் போல புறத்தே பொருந்தி இருந்தாலும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர் அகத்தே பொருந்தி இருக்கமாட்டார்.

 கிறிஸ்தவம் & யூத மதம்


அந்த இரண்டாம் புருஷனும் அவளை வெறுத்து, தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளை விவாகம் பண்ணின அந்த இரண்டாம் புருஷன் இறந்து போனாலும், அவள் தீட்டுப்பட்ட படியினால், அவளைத் தள்ளி விட்ட அவளுடைய முந்தின புருஷன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக் கொள்ளக் கூடாது; அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தின் மேல் பாவம் வரப் பண்ணாயாக. (உபகாமம் 24:1-4) 
 

இஸ்லாம்  


மணமுறிவை தடுக்க முயற்சி செய்யும் இஸ்லாம்.  
 
“(கணவன் மனைவி ஆகிய) அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.” (குர்ஆன் 4:35)

(முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) நபி (ஸல்) அவர்கள் “முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா?” என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா “அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா?” என்று கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் “(இல்லை.) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன்” என்றார்கள். அப்போது பரீரா, “(அப்படியானால்,) அவர் எனக்குத் தேவையில்லை” என்று கூறிவிட்டார். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரலி. (நூல் : புகாரி 5283)

ஆனால் இணக்கம் ஏற்படாத நிலையில் விகாரத்துக்கு அனுமதிக்கிறது  

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), “தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) - (நூல் : புகாரி 5273)

பெண்ணுக்கும் விவாகரத்து செய்ய உரிமை உண்டு. 

நான் என் கணவரிடமிருந்து விவாகரத்தைப் பெற்றுக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களிடம் வந்தேன். எவ்வளவு நாள் நான் இத்தா இருக்க வேண்டும் என்று அவர்களிடத்தில் கேட்டேன். அதற்கு அவர்கள் நீ ஒரு மாதவிடாய்க் காலத்தை அடையும் வரை பொறுத்திரு. இவ்விஷயத்தில் மகாலிய்யா குலத்தைச் சார்ந்த மர்யம் என்வருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கிய தீர்ப்பையே கடைபிடிக்கிறேன். அப்பெண் ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் என்பவருக்கு மனைவியாக இருந்தார். பின்பு அவரிடமிருந்து மணவிலக்குப் பெற்றுக் கொண்டார் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ருபைஃ பின்த் முஅவ்வித் (ரலி). (நூல் : நஸயீ  3441

3 கருத்துகள்:

  1. கள் உண்டல், காணின் கணவற் பிரிந்து உறைதல்,
    வெள்கிலளாய்ப் பிறர் இல் சேறல், உள்ளிப்
    பிறர் கருமம் ஆராய்தல், தீப் பெண் கிளைமை,-
    திறவது, தீப் பெண் தொழில். 23

    வெள்கு - நாணு

    கள்ளுண்டலும், கணவனைப் பிரிந்து வாழ்தலும், பிறர் மனைக்கட் சேறலும், பிறரின் செயலை நினைத்து ஆராய்தலும், தீய பெண்டிரின் நட்பும் ஆகியவை தீய பெண்டிரின் தொழில்களாம்.
    https://marainoolkal.blogspot.com/2022/09/blog-post_71.html

    பதிலளிநீக்கு
  2. இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்
    இன்னா அளவில் இனியவும்- இன்னாத
    நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே
    ஆள் இல்லா மங்கைக்கு அழகு. மூதுரை

    பொருள்: இளமையில் வறுமையும், இயலாத முதுமையில் செல்வமும்
    பெற்றால் அதனால் துன்பமே. அனுபவிக்க முடியாது. அது
    பருவமில்லாத காலங்களில் பூக்கும் பூக்களைப் போன்றது. அதைப்
    போல் துணைவனில்லாத பெண்களின் அழகும் வீணே.

    பதிலளிநீக்கு
  3. 16 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், “நான் விவாகரத்தை வெறுக்கிறேன். நான் ஆண்கள் செய்யும் கொடூரங்களை வெறுக்கிறேன். எனவே உன் ஆவிக்குரிய கூடிவருதலை காப்பாற்று. உன் மனைவியை ஏமாற்றாதே” என்று கூறுகிறார். https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%202&version=ERV-TA

    பதிலளிநீக்கு