இந்து மதம்
ஒரு பெண்ணின் இரண்டாவது திருமணத்தில், இந்த வாழ்நாளில் சந்ததி மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கிறார்::
ஓ பெண்ணே, வாழும் உலகத்திற்கு மேலே செல்; இறந்த இவருக்காக நீ நிற்கிறாய்; வா! உங்கள் கையைப் பிடித்தவருக்கு, உங்கள் இரண்டாவது மனைவி ( திதிசு) , நீங்கள் இப்போது மனைவியுடன் கணவன் உறவில் நுழைந்துவிட்டீர்கள். ரிக் (x.18.8)
புதிய கணவர் விதவையை அழைத்துச் செல்லும் போது, அவரது மனைவி கூறுவது போல்:
நம்மைத் தாக்கும் அனைத்து எதிரிகளையும் முறியடித்து ஆண் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வீரமும் வலிமையும் கொண்ட புதிய வாழ்க்கையைத் தொடங்குவோம்.
தனுர் ஹஸ்தாத் ஆதாதானோ ம்ருதஸ்யாஸ்மே க்ஷத்ராய வர்சஸே பாலாய |அத்ரைவ த்வம் இஹ வயம் சுவீரா விஸ்வா ஸ்ப்ருதோ அபிமதிர் ஜயேம || ரிக் (X.18.9)
விதவை தற்போதைய கணவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ ஆசீர்வதிக்கிறது:
ஓ மீற முடியாதவரே! (விதவை) உன் முன் ஞானத்தின் பாதையை மிதித்து, இந்த மனிதனை (மற்றொரு பொருத்தனை) உன் கணவனாகத் தேர்ந்தெடு. அவரை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, நீங்கள் இருவரும் மகிழ்ச்சியின் உலகத்தை ஏற்றுங்கள்.
ப்ரஜானதி அக்னியே ஜீவலோகம் தேவானம் பந்தம் அனுஸஞ்சரந்தி |அயந் தே கோபதிஸ் தஸ் ஜுஷஸ்வ ஸ்வர்கம் லோகம் அதி ரோஹயீனம் ||4 AV( XVIII.3.4)
தமிழர் சமயம் *
கணவனை இழந்த பெண்களை,
- ஆளில் பெண்டிர் (நற்.353)
- கழிகல மகளிர் (புறம்,280)
- பருத்திப்பெண்டிர் (புறம்.125)
- தொடிகழி மகளிர் (புறம்.238)
- கைம்மை (புறம்.125, 261)
- படிவமகளிர் (நற்.273)
- உயவற்மகளிர் (புறம்.246)
- பேஎய்ப் பெண்டிர் (ஐங்.- 70) என்று பல்வேறு பெயர்களில் தமிழ் நூல்கள் குறிப்பிடுகிறது.
கொழுநனை இல்லாள் கறையும், வழி நிற்கும்சிற்றாள் இல்லாதான் கைம் மோதிரமும்; பற்றியகோல் கோடி வாழும் அரசும், - இவை மூன்றும்சால்போடு பட்டது இல. (திரிகடுகம் 66)
விளக்கம் புருஷன் இல்லாதவர் பூப்பும், சிற்றாள் இல்லாதவனுடைய மோதிரமும், கொடுங்கோல் அரசும் சிறப்பற்றவையாகும். (இவை மூன்றும் ஏற்படுத்திக் கொள்ளப்படவேண்டும் என்று இப்பாடல் மறைமுகமாக கூறுகிறது.)
கிறிஸ்தவம் & யூதம்
ஒரு மனைவி தன் கணவன் வாழும் வரை அவனுக்குக் கட்டுப்பட்டவள். ஆனால் அவள் கணவன் இறந்துவிட்டால், அவள் விரும்பியவரை திருமணம் செய்து கொள்ள சுதந்திரம் உள்ளது. (1 கொரிந்தியர் 7:39)
அதனால் நான் இளைய விதவைகளை திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்று, அவர்களது குடும்பங்களை நடத்தவும், எதிரிக்கு அவதூறு சொல்ல வாய்ப்பளிக்கவும் செய்வேன். (1 தீமோத்தேயு 5:14)
திருமணமாகாதவர்களிடமும், விதவைகளிடமும், என்னைப் போலவே தனிமையில் இருப்பது நல்லது என்று கூறுகிறேன். ஆனால் அவர்களால் சுயக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க முடியாவிட்டால், அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால், உணர்ச்சியுடன் எரிவதை விட திருமணம் செய்வது நல்லது. (1 கொரிந்தியர் 7:8-9)
இஸ்லாம்
(ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களில் எவருக்கும் வாழ்க்கைத் துணை இல்லாவிட்டால், அவர்களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்துவிடுங்கள். (அவ்வாறே) உங்கள் அடிமையிலுள்ள நல்லோர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி (வாழ்க்கைத் துணைவரில்லாத) அவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தாலும் அல்லாஹ் தன்னுடைய அருளைக்கொண்டு அவர்களுடைய வறுமையை நீக்கி விடுவான். (கொடை கொடுப்பதில்) அல்லாஹ் மிக்க விசாலமானவனும் (மனிதர்களின் நிலைமையை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 24:32)
(விதவையான) பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தை (அவர்களின்) இத்தா காலத்தில் நீங்கள் சாடையாகத் தெரிவிப்பதிலோ, உங்கள் உள்ளங்களில் மறைத்து வைப்பதிலோ உங்கள் மீது எந்தத் தவறுமில்லை. அவர்களைப் பற்றி நீங்கள் எண்ணிப் பார்ப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். ஆனால் (இதோ பாருங்கள்:) அவர்களிடம் இரகசிய உடன்படிக்கை எதுவும் செய்யாதீர்கள்! அவர்களிடம் பேச வேண்டியிருந்தால், வெளிப்படையாக நேர்த்தியாகப் பேசுங்கள்! நிர்ணயிக்கப்பட்ட (இத்தா) தவணை நிறைவடையும் வரை நீங்கள் திருமண ஒப்பந்தம் செய்யத் தீர்மானிக்காதீர்கள்; மேலும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான் என்பதை நீங்கள் திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்; எனவே, அவனுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும், சகிப்புத் தன்மையுடையோனுமாய் இருக்கின்றான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்! (குர்ஆன் 2:235)
புதல்வர்களில் பன்னிரு வகை:
பதிலளிநீக்குமாண்டவர் மாண்ட வறிவினான் மக்களைப்
பூண்டவர்ப் போற்றிப் புரக்குங்கால் - பூண்ட
ஒளரதனே கேத்திரசன் கானீனன் கூடன்
கிரிதன்பௌநற்பவன் பேர்.
(நூலின் 30 ஆவது பாடல்)
மத்த மயிலன்ன சாயலாய் மன்னியசீர்த்
தத்தன் சகோடன் கிருத்திரமன் - புத்திரி
புத்ரனப வித்தனொடு பொய்யி லுபகிருதன்
இத்திறத்த வெஞ்சினார் பேர்
(நூலின் 31 ஆவது பாடல்)
மேற்காணும் இரண்டு பாக்களில் புதல்வர்களில் பன்னிருவகை பற்றியும் ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வகைப்பாடாவது:
(1) அவுரதன் -கணவனுக்குப் பிறந்தவன்,
(2) கேத்திரசன் -கணவன் இருக்கும்போது மற்றொருவனுக்குப் பிறந்தவன்,
(3) காணீனன் -திருமணம் ஆகாத பெண்ணொருத்திக்குப் பிறந்தவன்,
(4) கூடன் -விபச்சாரத்தில் பிறந்தவன்,
(5) கிரீதன் -விலைக்கு வாங்கப்பட்டவன்,
(6) பௌநற்பவன் -கணவன் இறந்த பிறகு மறுமணம் புரிந்துகொண்ட இரண்டாவது கணவனுக்குப் பிறந்தவன்,
(7) தத்தன் -சுவீகாரம் எடுத்துக்கொள்ளப்பட்டவன்,
(8) சகோடன் -திருமணம் செய்துகொள்ளும்போதே கற்பத்திலிருந்து பிறந்தவன்,
(9) கிருத்ரிமன் -கண்டு எடுத்து வளர்க்கப்பட்டவன்,
(10) புத்திரி-புத்திரன் -மகள் வயிற்றுப் பிள்ளை,
(11) அபவித்தன் - பெற்றோர்களால் கைவிடப்பட்டு மற்றவர்களால் வளர்க்கப்பட்டவன்
12) கிருதன் - காணிக்கையாக வந்தவன்,
இவ்வகைப்பாடு முந்தைய தமிழ்ச்சங்க நூல்கள் எவற்றிலும் கூறப்படவில்லை எனத் தெரிகிறது. இந்நூலில் மட்டும் காணப்படும் இச்செய்தி ஒரு சிறப்பாகும்
https://thedatatalks.in/ta/others/elaadhi/
நல்கூர்பெண்டிர், ஆளில் பெண்டிர், அரியல் பெண்டிர், சீறூர்ப்பெண்டிர், பேஎய் பெண்டிர், அயலில் பெண்டிர் ஆகிய அனைவரும் ஊர்ப்பெண்டிர் என்னும் தொகைப் பாத்திரத்துள் அடங்கி விடுகின்றனர்.
பதிலளிநீக்குதொகையிலக்கியக் காலத்தில் ‘பேய்’ என்ற சொல்லின் பொருட்பரிமாணம்; இன்று வழங்கும் பொருளில் இருந்து மாறுபட்டது. பேஎய் என்று சுட்டப்பெறும் பெண்; தலைவி தனக்குத் தானே கூறிக் கொள்ளும் உவமையில் இடம் பெறுகிறாள். மகப்பேற்றின் போது தலைவன் தன்னை விட்டு ஒதுங்கிப் புறத்தொழுக புனிறு நாறும் தன்னை விடுத்து; மணம் பொருந்திய பிற பெண்டிரை நாடிச் சென்ற அவனிடம்;
“பேஎய் அனையம் யாம் சேய் பயந்தனமே” (ஐங்.- 70)
என்கிறாள். இத்தலைவி பாசுபதநெறி சார்ந்தவள் எனலாம். இப்பாடலடியில் இடம் பெறும் ‘பேஎய்’ என்னும் சொல் எப்படிப்பட்ட பெண்ணைக் குறிக்கிறது என்பது நோக்கத்தக்கது.
‘பேஎய்ப் பெண்டிர்’ என்று பெயர் பெறுவோர் கணவனை இழந்த பாசுபத சமயம் சார்ந்த பெண்டிர் ஆவர். இல்லற சுகம் நீத்து நீற்றுப்பூச்சுடன் எஞ்சிய வாழ்வைக் கழிக்கும் தன்மையால் தெய்வத்தன்மை பொருந்தியோர் என்னும் கருத்தில் பேய்ப்பெண்டிர் என்று பெயர் பெற்றமை தெரிகிறது.
“பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்
காடு முன்னினனே கட்காமுறுநன்
தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப்
பாடுநர் கடும்பும் பையென்றனவே” (புறம்.- 238).
என்று வெளிமான் இறந்த போது அவனது மகளிர் தொடி கழித்தமையும் பேஎய் ஆயம் என்று பெயர் பெற்றமையும் ஒருங்கே பாடப்பட்டுள்ளது.
சுடலைத் தீயே விளக்காகக் கணவனை இழந்து அழுத கண்ணீரால் தாம் பூசிய வெண்ணீறு அவிந்து விட அங்கிருந்த பெண்டிர் பேஎய்மகளிர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர் (புறம்.- 356).
“பேஎய் மகளிர் பிணந்தழூஉப் பற்றி……
ஈமவிளக்கின் வெருவரப் பேரும் காடு” (புறம்.- 359)
எனக் குறிப்பிடப் படுவதைக் காண்கிறோம்.
புண்பட்டுக் குருதி சோர இறந்த தம் கணவரின் உடலைத் தீண்டிச் சிவந்த கைகளால் கூந்தலை அலைத்து அழுத பெண்களைப் பேஎய்ப் பெண்டிர் என்றே சுட்டுவது நோக்கத்தக்கது (புறம்.- 62)
https://www.vallamai.com/?p=100095
புறநானூற்றில் 125, 143, 224, 237, 242, 246, 250, 253, 261, 272, 280, 326, 353 ஆகிய பாடல்களிலும், நற்றிணையில் 272, 353 ஆகிய பாடல்களிலும் கணவனை இழந்த கைம்பெண்கள் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
பதிலளிநீக்குஇப்பாடற் செய்திகளின் வழியாக கைம்மை நோன்பிருக்கும் மகளிரின் நிலை அறியப்படுகிறது. ‘கைம்பெண்கள் நெய்யுண்பதில்லை; தண்ணீர்ச் சோற்றைப் பிழிந்து எடுத்துக் கொண்டு, அதனுடன் அரைத்த எள்ளையும், புளியையுங் கூட்டி, வெந்த வேளைக் கீரையுடன் அவர்கள் உண்ணுவர்’ என்று கணவனை இழந்த பெண்களின் நிலை பற்றி குறிப்பிடுகிறார் கே.கே.பிள்ளை.
3
கணவனை இழந்த பெண்கள் மட்டுமின்றி கணவனைப் பிரிந்த பெண்களும் பிரிவை நினைத்து கடுந்துயரில் ஆழ்ந்திருக்கும் நிலை சிலப்பதிகாரத்தில் சுட்டப்படுகிறது. கோவலனைப் பிரிந்திருக்கும் கண்ணகியின் பொலிவற்ற தோற்றத்தை,
‘அஞ்செஞ் சீரடி யணிசிலம் பொழிய
மென்றுகி லல்குன் மேகலை நீங்கக்
கொங்கை முன்றிற் குங்கும மெழுதாள்
மங்கல வணியிற் பிறிதணி மகிழாள்
கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்’4
(அந்திமாலை சிறப்புச் செய்காதை, 4751)
என்று வர்ணிக்கிறார் இளங்கோவடிகள்.