நிலையான தர்மம் *

தமிழர் சமயம் 


மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும், மாசு இல் சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் - பெற்றானும், உண்ணு நீர்க்
கூவல் குறை இன்றித் தொட்டானும், - இம் மூவர்
சாவா உடம்பு எய்தினார். (திரிகடுகம் 16)

விளக்கவுரை:
  1. மண்ணுலகத்தில் புகழை அடைந்தவனும், 
  2. கற்புடைய மனைவியைப் பெற்ற கணவனும், 
  3. கிணறுகளைத் தோண்டி வைத்தவனும்
எக்காலத்தும் அழியாத புகழைப் பெற்றவராவார். அவர் இறந்தாலும் அவர் புகழ் நிலைக்கும். 
 

இஸ்லாம் 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன;
  1. நிலையான அறக்கொடை (ஸதகா ஜாரியா)
  2. பயன்பெறப்படும் கல்வி 
  3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 3358)

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் :
  1. "ஒருமுஃமினான மனிதன் கற்பித்த கல்வியும்,
  2. (எழுத்து மூலம் நூல்வடிவில் உலகெங்கும் ) அவன் பரப்பிய கல்வியும் ,
  3. அவன் விட்டுச்சென்ற ஸாலிஹான பிள்ளைகளும்,
  4. (பள்ளிவாசல்கள், மத்ரஸாக்களுக்கு ) வாரிஸாக்கிய குர்ஆன் ஷரீபும்,
  5. அவன் கட்டிக்கொடுத்த பள்ளியும்,
  6. வழிப்போக்கர்களுக்கு அவன் அமைத்துக் கொடுத்த தங்கும் விடுதியும்,
  7. அவன் வாய்க்கால் வெட்டி ஓடச்செய்த ஆறும்,
  8. அவன் இப்பூவுலகில் வாழும்போது கொடுத்து உதவிய தானங்களும்
கண்டிப்பாக அவனின் மௌத்துக்குப் பிறகும் அவனைப் போய்ச்சேரும்.
அறிவிப்பவர் : ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு (இப்னுமாஜா : 242)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக