இரவுத் தவம்

தமிழர் சமயம் 

சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை
முந்திய பானுவில் இந்துவந் தேய்முறை;
அந்த இரண்டும் உபய நிலத்தினில்,
சிந்தை தெளிந்தார்; சிவமாயி னாரே. (ஏழாம் தந்திரம் - 24. மனவாதித்தன் 2) 
 
பதவுரை: பூசனை - வணங்கு; பானு - சூரியன், ஒளி; இந்து - நிலவு; தேய்முறை - காலைக் கதிரவனால் நிலவொளி தேயும் முறை; உபயம் - இரண்டு, தானம், உரிமையான; சிவம்: செம்மை, முழுமை.

பொழிப்புரை: சந்திரன் சூரியன் சேர்ந்து வானில் வரும் காலத்தில், சூரியன் உதிக்கும் முன் உள்ள ஒளியில் அதாவது விடியற்காலையில் (அ)  சூரியன் உதிக்கும் முன், நிலவு வந்து தேயும் (அ) மறையும் நேரத்தில் அதாவது விடியற்காலைக்கு முன் உள்ள இரண்டு பொழுதும் உரிமையான நிலத்தில் பூசனை அதாவது இறைவனை வணங்குவோருக்கு சிந்தை தெளியும், முழுமை பெறுவார்.

இஸ்லாம் 

நிச்சயமாக இரவில் எழுந்திருந்து வணங்குவது (நாவு, மனம், செவி, பார்வை ஆகியவற்றையும்) ஒருமுனைப்படுத்துவதில் சக்தியானது இன்னும் வாக்கையும் நேர்படச் செய்கிறது. (73:6)

இரவில் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது

நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இரவில் ஒரு நேரம் இருக்கிறது அந்நேரத்தில் ஒரு முஸ்லிம் இம்மை மறுமையின் நற்பேறுகளை கேட்பானேயானால் நிச்சயமாக அவனுக்கு அல்லாஹ் கேட்டதை வழங்கி விடுவான். இது அனைத்து இரவிகளிலுமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிப்பேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

மக்களே முகமன் கூறுவதை விசாலமாக்கி கொள்ளுங்கள் மேலும் (ஏழைகளுக்கு) உணவு வழங்குங்கள், மக்கள் தூங்கி கொண்டிருக்கும் நிலையில் இரவில் (எழுந்து) தொழுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் ஸலாம்(ரலி) நூல்: திர்மிதி

 ( நபியே) இன்னும் இரவில் (ஒருசில) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் (அதிகாலை) தொழுகையைத் தொழுது வருவீராக (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன் ' மகாமே மஹ்மூதா' என்னும் (புகழ்பெற்ற) தளத்தில் உம்மை எழுப்ப போதுமானவன் (17:79)

அவர்கள் இரவில் மிகவும் சொற்பநேரமேயன்றித் தூங்கமாட்டார்கள். அவர்கள் விடியற்காலங்களில் (பிரார்த்தனைகளின் போது அறைவனிடம் மன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்: 51:15,16,17,18) 

கிறிஸ்தவம்

அக்காலத்தில் இயேசு பிரார்த்தனை செய்யும்பொருட்டு ஒரு மலைக்குச் சென்றார். இரவு முழுவதும் தேவனிடம் பிரார்த்தனை செய்தவாறே அம்மலையில் இருந்தார். - (லூக்கா 6:12)

இந்து மதத்திலும் மற்ற மதங்களைப் போன்று தன் கடவுளைத் தொழவில்லை என்றால் தண்டிக்கப்படுவீர்கள் எனும் கோட்பாடு ஏதேனும் உள்ளதா?

உண்டு. ஆனால் அதை ஓதி உணர்ந்தவர் குறைவு. சமய நெறிகளை பொறுத்தமட்டில் அவரவர் விருப்பத்துக்கு விளக்கம் கொடுக்கும் நிலையில் தான் இன்று இந்து மதம் உள்ளது. வேதம் தான் அனைத்துக்கும் ஆதாரம். நமது ஈருலக வாழ்ககைக்கு தேவையான வழிகாட்டுதல் மறைநூல் அல்லாமல் வேறொன்றி தேடுவது பிழை.

நாம் தமிழர்களாக இருப்பதால், தமிழரின் சைவ சமய வேத ஆதாரங்களை பார்ப்போம். நமக்கு சம்ஸ்கிருத சனாதன சமய ஆதாரம் தேவை இல்லை. இவ்விரண்டும் வேறு வேறு என்கிற அறிவு பலருக்கு இருந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

1) உடல் மற்றும் உயிர் சேர்ந்த உருவம் இறைவனை தொழவில்லை என்றால் அது ஏழாவது நரகில் அழுந்தும்.

மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவம் தொழாமல்
இடர்படர்ந் தேழாம் நரகிற் கிடப்பர்
குடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே. (திருமந்திரம் பாடல் எண் : 23)

பொழிப்புரை: விடிந்தும் இருளாவது போலப் பெரிதும் அறி யாமையில் கிடப்பவர், சிவபெருமான் படைத்த உடம்பும், உயிரும் கூடிவாழுங் காலத்தில் அவன் படைத்த குறிப்பின்படி அவனது திரு மேனியை வணங்காமல், வேறு பலவற்றையே செய்திருந்து, அவை பிரியுங்காலத்து, அச்சத்தால் குடர் குழம்பும்படி யமதூதர் வந்து இரைந்து அழைத்துப் பிடித்துச் செல்லும் வழியிலே மிக்க துயரத்துடன் சென்று, ஏழாகச் சொல்லப்படும் நரகங்களில் அழுந்துவர். 
 
2) தனது சமய சின்னங்களை மட்டும் அணிந்து அது கூறிய அறத்தை பின்பற்றாதவர்களை தெய்வம் மறுமையில் தண்டிக்கும், இங்கே தண்டிப்பது அரசனின் கடமை

தத்தம் சமயத் தகுதி நில்லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல் நெறி
எத்தண்டமும் செயும் அம்மையில், இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வது அவ்வேந்தன் கடனே -(திருமந்திரம் - 246)

கருத்து: சமயவாதிகள் நல்வழியில் நடவாமல், தத்தம சமயங்களுக்கு உண்டான சின்னங்களை மட்டும் அணிவதில் என்ன பயன்? அவர்களுக்கு மறுமையில், தெய்வம் தண்டனை கொடுக்கும். அதேசமயம், அவ்வாறு நல்வழியில் நடவாத சமயவாதிகளுக்குத் தண்டனை கொடுப்பது அரசனின் கடமை.

3) நெறிதவற துன்பம் நேரும்

நெறியைப் படைத்தான்; நெருஞ்சில் படைத்தான்!
நெறியில் வழுவின் நெருஞ்சில் முள்பாயும்!
நெறியில் வழுவாது இயங்கவல் லார்க்கு
நெறியில் நெருஞ்சில்முள் பாயகி லாவே! (திருமந்திரம், 1617)

முடிவுரை

எனவே வணங்காது இருந்தாலும் அவனை வழிபாடாது இருந்தாலும் அதாவது அவன் வேதத்தில் சொன்ன அறத்தை பின்பற்றாது இருந்தாலும் தண்டனை இம்மையிலும் மருண்மையும் உண்டு.

நாம் அறியவேண்டிய உண்மை என்னவென்றால், உலகம் ஒன்று, அதை படைத்த்ட்ட இறைவன் ஒன்று, அனைத்து வேதங்களையும் தந்தவன் ஒன்று. அப்படி இருக்க அதன் போதனைகள் மட்டும் எப்படிவேறுபடும்?

ஆனால் இங்கே சிக்கல் என்னவென்றால், கடவுளை வழிபடுவது என்றால், நமது விருப்பத்துக்கு வணங்க வழிபட முடியாது. அது கடவுள் விரும்பியாடிதான் அமையவேண்டும். அதற்கு நாம் சைவ சமய வேதத்தை வாசிக்க வேண்டும். ஆனால் இன்று அதற்கு உள்ள சாத்தியகூறுகளை சிந்திக்கவேண்டி உள்ளது.

தேவர்களின் எண்ணிக்கை என்ன?

தேவர்கள் என்றதும் பெரும்பாலானோர் சம்ஸ்கிருத வேதங்களில் என்ன சொல்லப்பட்டு உள்ளது என்பதை தேடி செல்கின்றனர். நாம் நமது மொழியில் வந்த வேதத்திலும், நமது மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட வேதங்களையும் தேடி பார்ப்போம் வாருங்கள். 

தமிழர் சமயம்

குறிப்பறிந் தேன்உட லோடுயிர் கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகும் கல்விகற் றேனே.

குறிப்பறிந்தேன் உடலோடுயிர் கூடிச்
செறிப்பறிந்தேன் மிகுதேவர் பிரானை
மறிப்பறியாது வந்துள்ளம் புகுந்தான்
கறிப்பறியா மிகும் கல்வி கற்றேனே.

குறிப்பு: உள்கருத்து
செறிப்பு: செறிவு, நெருக்கம்
மிகு தேவர்: அளவில்லா தேவர்கள்
மறிப்பு: தடை
கறிப்பு: காரம், கடினம் 

விளக்கம்: உடலோடு உயிர் கூடிய உட்கருத்தை தெரிந்து கொண்டேன், எண்ணிலடங்கா தேவர்களின் தலைவனுடைய நெருக்கம் அறிந்தேன். தடையேதும் இல்லாமல் உடனே என் உள்ளத்தில் புகுந்து வீட்டிருப்பதையும் தெரிந்து கொண்டேன். தானாக பெருகும் குணமுடைய கல்வியை கடினம் அறியாமல் கற்றேன்.

இஸ்லாம்

அவர்களின் எண்ணிக்கையை அல்லாஹ்வைத்தவிர எவரும் அறியமாட்டார்கள். ‘மேலும் உம்முடைய இறைவனின் (வானவர்கள் என்னும்) படைகளை அவனைத் தவிர எவரும் அறியமாட்டார்கள்’ (குர்ஆன் 74:30)

கிறிஸ்தவம்

11 Then I looked and heard the voice of many angels, numbering thousands upon thousands, and ten thousand times ten thousand. They encircled the throne and the living creatures and the elders.

11 பிறகு நான் பல தூதர்களைப் பார்த்தேன். அவர்களது குரலைக் கேட்டேன். அத் தூதர்கள் சிம்மாசனத்தைச் சூழ்ந்து இருந்தனர். அவர்கள் ஜீவன்களையும், முதியவர்களையும் சூழ்ந்து இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆயிரமாகவும் பத்தாயிரம் பத்தாயிரமாகவும் இருந்தது (வெளி 5) 

முடிவுரை  

தேவர்களின் எண்ணிக்கையை யாரும் அறியார். அதை முப்பத்து முக்கோடி என்று கூற எந்த வேத ஆதாரமும் இல்லை.

கட்டாய மதமாற்றம் பற்றி உங்கள் கருத்து என்ன?

பொதுவாக இந்த குற்றச்சாட்டு இஸ்லாமிய கிறிஸ்தவ சமயங்கள் மீதுதான் அதிகமாக உள்ளது. ஆனால் அப்படி கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்கள் சொல்கிறதா? என்று அவைகளின் மூல நூலை ஆய்வு செய்வோம்.

மதங்கள் கட்டாய மதமாற்றம் செய்ய சொல்கிறதா?

என் மதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மரணம் என்று கிறிஸ்தவம் சொல்ல வாய்ப்பே இல்லை. ஏனென்றால் அது யூதர்களுக்கு வந்த மதம்.

உபதேசமும் உதவியும் யூதர் அல்லாதவர்களுக்கு செய்ய இயேசு மறுத்து உள்ள பொழுது கிறிஸ்தவம் அப்படி சொல்ல வாய்ப்பே இல்லை.

அப்பிரதேசத்தைச் சேர்ந்த கானான் ஊர் பெண் ஒருத்தி இயேசுவிடம் வந்தாள். அவள் இயேசுவிடம் கதறியழுது,, “ஆண்டவரே! தாவீதின் குமாரனே! எனக்கு உதவும்!….24 இயேசு,, “தேவன் காணாமல் போன இஸ்ரவேலின் ஆடுகளிடம் மட்டுமே என்னை அனுப்பினார்” என்று கூறினார். மத்தேயு 15

இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பின் அவர்களை மக்களுக்குப் பரலோக இராஜ்யத்தைப்பற்றிக் கூறுவதற்கு அனுப்பினார். இயேசு அவர்களிடம்,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். மத்தேயு 10:5-6

இஸ்லாம் உலகம் முழுமைக்கும் வந்த சமயம் என்று முகமது நபி அவர்கள் கூறினார்கள். ஆனால் கட்டாயப்படுத்தி யாரையும் மதம் மாற்ற முகமது நபிக்கே அனுமதி இல்லை.

மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா? (குர்ஆன் 10:99)

எனவே கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்கள் மற்றவரை கட்டாயப்படுத்துகிறது என்று கூறுவது உண்மை அல்ல.

இந்த மதங்களை சார்ந்தவர்கள் மற்றவர்களை வேறுவகையில் மதம் மாற்றுகிறார்களா?

இஸ்லாமிய கிறிஸ்தவ மக்கள் மற்றவர்களுக்கு தனது மதத்தை எடுத்து கூறுகிறீர்களா என்று கேட்டால், ஆம் செய்கிறார்கள்! தான் சார்ந்த மதத்தை தத்துவத்தை பிறரிடம் எடுத்துரைப்பது தவறா? என்று கேட்டால் இல்லை என்பது தான் அனைத்து சமயங்களும் கூறும் உண்மை.

இது போல போதனை செய்து இந்து மதத்துக்கு மக்களை யாரும் மாற்றவில்லையா என்று கேட்டால் மாற்றுகிறார்கள் எனபதுதான் உண்மை. ஆதாரங்கள் இங்கே: இந்துக்களும் கிறிஸ்தவர்களைப் போன்று தன் மதத்தைப் பரப்ப முயற்சிக்கிறார்கள்!

ஆனால் கிறிஸ்தவ இஸ்லாமிய சமயத்தில் சாமானியர்கள் அல்லது சமய அறிஞர்கள் மக்களை கட்டாயப் படுத்துகிறார்கள் என்பது உண்மைக்கு புறம்பானது. இன்று இவ்வாறு வரும் செய்திகள் அனைத்தும் அரசியல் விளையாட்டுதானே தவிர வேறு இல்லை. போதனையின் மூலம் ஒருவர் விரும்பி ஏற்பதை தடை செய்ய "கட்டாய மத மாற்றம்" என்று திரித்து சொல்லப்படுகிறது. இதன் மூலம் சமய போதனைகளை தடை செய்வதே இவர்களின் நோக்கம்.

சரி, கட்டாயப்படுத்தி மதம் மாற்றும் வேலைகளை யாருமே செய்யவில்லையா? என்று கேட்டால் செய்தார்கள் என்பது உண்மை தான். அவர்கள் நிச்சயமாக பாசிசவாதிகள், தனது சொந்த சமயத்தின் கட்டுப்பாட்டை மீறிய தற்குறிகள். உதாரணமாக,

இஸ்லாத்தின் பெயரில்

  • சிரியாவில் ஆட்சியை பிடித்த ISIS இந்த வேலையை செய்தது (யாசிடி இனப்படுகொலை). ஆனால் இஸ்லாமிய சமூகம் ISIS-க்கு எதிராக பேசிய அளவு பொது சமூகம் கூட பேசி இருக்க வாய்ப்பு இல்லை.

கிறிஸ்தவத்தின் பெயரில்,

  • லோரெய்ன், லோயர் ரைன், பவேரியா மற்றும் போஹேமியா, மைன்ஸ் மற்றும் வார்ம்ஸில் சிலுவைப்போர்களால் யூதர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது (ரைன்லேண்ட் படுகொலைகள், புழுக்கள் படுகொலை (1096) பார்க்கவும்).

இந்து மதத்தின் பெயரில்,

  • சைவ வைணவங்கள் எல்லாம் சனாதன மதத்துக்குள் உள் இழுக்கபப்ட்டு இந்து என்று பெயர் மாறி நிற்கிறது. இதுவும் ஒரு வகை கட்டாய மதமாற்றம் தான். எந்த சைவராவாது தான் இந்துவாக ஒப்புதல் அளித்தாரா? அல்லது அவரிடம் ஒப்புதல் கேட்கப்பட்டதா? இவைகளுக்குள் நடந்த கருத்து மற்றும் கள யுத்தங்கள் தான் கடந்த 5000 ஆண்டுகால இந்திய நிலத்தின் வரலாறு ஆகும்.

நன்றாக கவனித்தால் கட்டாய மதமாற்றங்கள் எல்லாம் மதம் சார்ந்த அரசு ஆட்சியில் இருக்கும் பொழுது நடைபெறுகின்றன. அது இந்தியாவிலும் இப்பொழுது நடைபெறுகிறது. ஆனால் வரலாறு இவைகளை பதிந்து வைத்துக்கொண்டே வருகிறது.

கட்டாய மதமாற்றத்தை எந்த சமயமும் அங்கீகரிக்கவில்லை. போதனை செய், விரும்பினால் ஏற்கட்டும் என்றுதான் சொல்கிறது. ஆனால் அதிகாரம் கிடைத்த மமதையில் எல்லா சமய அரசுகளும் தத்தம் சமய போதனைக்கு எதிராக கட்டாய மத மாற்றம் செய்ய துணிகிறார்கள். இதனால் அந்த அரசுக்கோ, அந்த நாட்டுக்கோ, அந்த சமயத்துக்கோ எந்த பிரயோசனமும் இல்லை, மாறாக அழிவுதான் நேரும் என்கிற அடிப்படை அறிவு அவர்களுக்கு இருந்து இருக்க வேண்டும்.

மேலும் வாசிக்க

அரேபிய பாலைவன காட்டு மிராண்டி ஆபிரஹாமிய மதங்களின் கோட்பாடுகள் படி இறைவன் மனிதர்களை படைப்பதற்கு முன் சாத்தானை படைத்தாரா அல்லது சாத்தானை படைத்த பின்பு மனிதனை படைத்தாரா? தங்களின் கருத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

யூத மதம் இல்லாமல் போய் இருந்தால் ஏசுவும் முகமதுவும் ஹிந்து மத கதைகளை காப்பி அடித்து இருப்பார்களா?

இந்துக்கள் ஏன் தங்கள் மதத்தை பரப்பவில்லை?

மதமாற்ற தெரசா எப்படி மதர் தெரசா வாக மாற்றப்பட்டார்?

போலி சாமியார்கள் உருவாவதற்கான காரணங்கள் என்ன?

கடவுளை நம்பும் மனிதர்கள் ஏன் சாமியார்களை நம்புகிறார்கள்?

ராமாயணத்திலும் மகாபாரத்திலும் வரும் கடவுள்கள் பிறந்த நட்சத்திரங்கள் துல்லியமாக எப்படி கணிக்கப்பட்டன?

சனாதனம் பற்றி சைவ வைணவ நூல்களில் குறிப்பு உண்டா?

சிவனைப் பற்றி பலர் அறியாததைப் பற்றி கூற முடியுமா?


ப்ரொபைல்-ஐ பின்பற்றுக அறம் கற்க கசடற (Learn Virtues)

பக்கத்தை பின்பற்றுக அறம் - கற்க கசடற

ப்ளோகை வாசிக்க அறம் கற்க கசடற

சாத்தானை வழிபடலாமா?

கடவுளை வழிபட்டால் கூட ஒன்றும் விளங்கவில்லை. நான் சாத்தானை வழிபடலாமா? - Quora 

உங்களுக்கு ஒரு சின்ன உதாரணம்! உங்களுக்கு கடுமையாக பசிக்கிறது, ஆனால் நீங்களே சமைத்து உண்ணும் நிலை. எனவே மற்றவர்கள் சமைப்பதை பார்த்து நீங்களும் சமைகின்றீர்கள். ஆனால் உங்களுடைய உணவில் ருசியும் பக்குவமும் இல்லை. இப்பொழுது என்ன நினைப்பீர்கள்? சாப்பாடே வேண்டாம் என்று கருதுவீர்களா? சாப்பாட்டுக்கு பதிலாக வேறொன்றை தேர்வு செய்வீர்களா? அல்லது முறையாக சமைக்க கற்று கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்களா?

சமையல் முதல் வேலை வாய்ப்பு வரை அனைத்துக்கும் அதற்கு ஏற்ற அளவு முறையாக கற்க வேண்டி உள்ளது என்கிற அடிப்படை அறிவுடைய நமக்கு கடவுளை வணங்கி வழிபட தேவையான கல்வியை கற்கவேண்டும் என்ற அடிப்படை தெரிவதில்லை.

இப்போ நீங்க கேட்ட கேள்வியில் உங்களுக்கு தெளிவு உண்டா என்று பார்ப்போமா?

வழிபடுதல் என்றால் கோவிலுக்கு சென்று வணங்குவதை நீங்க குறிப்பிடுவதாக நான் புரிந்து கொள்கிறேன்.

ஆனால் உண்மையில் கடவுளை வழிபடுதல் என்றால் என்ன?

வழிபடுதல் என்றால் கட்டுப்படுதல் (அ) பின்பற்றுதல் என்று பொருள்! கடவுளுக்கு வழிப்பட உங்களுக்கு கடவுளின் அறிவுரைகள் என்னென்ன, நீங்கள் செய்யும் தினசரி விடயங்களில் சரி பிழைகளை கடவுள் எவ்வாறு வரையறுத்து உள்ளார், என்று நீங்கள் கற்று அறிந்து உள்ளீர்களா? கடவுள் நிமிடம் பேசும் முறை மறைநூல்கள் ஆகும் என்பதை நீங்கள் அறிவீர்களா? இதற்காக உங்கள் வாழ்நாளில் எத்தனை நிமிடம் இதுவரை செலவு செய்து உள்ளீர்கள்?

கடவுள் கூறியுள்ள விதத்தில் நாம் கடவுளை வணங்கினால், நாம் கடவுளுக்கு வழிப்படுவதாக பொருள். ஆனால் இது கடவுளுக்கு வழிப்படுதலில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. ஆனால் விழிப்பது முதல் உறங்குவது வரை, பிறப்பு முதல் இறப்பு வரை, ஒவ்வொரு கால சூழ்நிலைக்கும் கடவுள் சில விதிகளையும் அறங்களையும் வகுத்து தந்துள்ளார். அதை கற்பதுதான் கல்வி ஆகும். எனவே நீங்கள் கடவுளை எப்படி வழிப்பவேண்டும் என்று விளங்காமல் வழிப்பட்டு உள்ளதால், உங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை என்று கருதுகிறேன்.

சாத்தானை வழிபடலாமா? என்று கேட்டால், மேற்சொன்ன விடயங்களில் கல்வி இல்லாததால் நீங்கள் ஏற்கனவே நேரடியாக அல்லது மறைமுகமாக சாத்தானை பின்பற்றி கொண்டுதான் இருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால் இறைவனை வழிப்படும் பொழுது மன அமைதியும், சாத்தானை பின்பற்றும் பொழுது குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் இருப்பதுதான் இயல்பு.

சுருக்கமாக உங்கள் கேள்விக்கு பதில் சொல்வதென்றால் இறைவனை அறிந்து அவனது மறைநூல்களை கற்று அதைக்கொண்டு அவனுக்கு வழிப்பட்டால் உங்களுக்கு மனத் தெளிவும் நிமமதியும் கிடைக்கும்.

மேலும் அறிய வாசிக்க வாய்மை.