நேர்ச்சை செய்தல் *

கிறிஸ்தவம் & யூதம் 

21 நீ உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் பொருத்தனை செய்தால் , அதைச் செலுத்தத் தாமதிக்காதே; உன் கடவுளாகிய ஆண்டவர் அதை உன்னிடம் கேட்பார், நீ பாவம் செய்வாய். 22 ஆனால் நீங்கள் சபதம் செய்யாமல் இருந்தால், நீங்கள் குற்றவாளியாக இருக்க மாட்டீர்கள். 23 உன் உதடுகள் எதைச் சொன்னாலும் அதை நீ உறுதியாகச் செய்ய வேண்டும்; (உபாகமம் 23 :21-23)

 இஸ்லாம் 

அவர்கள் தாம் தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொண்டும் அனைத்துத் திசைகளிலும் தீங்கு பரவக்கூடிய மறுமை நாளினைக் குறித்து அஞ்சிக் கொண்டுமிருப்பார்கள். (குர்ஆன் 76:7

‘நம்பிக்கையாளர்களில் இத்தகையவர்களும் உள்ளனர். இறைவனிடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் மெய்ப்படுத்திக் காட்டி விட்டிருக்கிறார்கள்; அவர்களில் சிலர் தமது நேர்ச்சையை நிறைவேற்றி விட்டார்கள்; இன்னும் சிலர் அதற்கான நேரத்தை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள்’. (திருக்குர்ஆன் 33:23

நேர்த்திக்கடன் விதியில் எதையும் துரிதப்படுத்தவும் செய்யாது; தாமதப்படுத்தவும் செய்யாது என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்:புகாரி)ம்(சிறு பகுதியைத்) தடவிக் கொள்ளுங்கள்’.- (அல்-குர்ஆன் 5:6)

  

இந்த காலத்தில் வட்டிக்கு விடுவதும், வாங்குவதும் பாவம் என்றால் இந்த உலகமே இயங்குமா?

மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பார்கள். எனவே நம்மை பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கும் வட்டியை நம்மால் விட இயலவில்லை என்பது நமக்கு மனமில்லை என்பதையே காட்டுகிறது. இதை தெளிவாக புரிந்து கொள்ள வட்டியைப் பற்றி சில அடிப்படைகளை புரிந்துகொள்வோம்.

வட்டிக்கு பணம் எதற்காக வாங்க வேண்டும்?

  • மருத்துவ செலவுக்கு
  • படிப்பு செலவுக்கு
  • திருமண செலவுக்கு
  • ஒரு தொழில் தொடங்க
  • வீடு வாங்க

போன்ற நியாயமான காரணங்களுக்காக வாங்கப்படுகிறது.

இன்று EMI என்கிற பெயரில் சின்ன சின்ன பொருட்கள் வாங்க, கார் வாங்க, சுற்றுலா போக என அல்ப காரணங்களுக்காக வாங்கப் படுவதெல்லாம் அவரவர் சுய கட்டுப்பாடின்மையால் நிகழ்கிறது. எனவே அவைகளை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டாம்.

சமகால பொருளாதார கட்டமைப்பில் அனைத்துக்குமே மாற்று வழி உண்டு.

  • மருத்துவ செலவு - அரசு மருத்துவமனை, அரசின் காப்பீட்டுத்திட்டம்
  • கல்வி - அரசு பள்ளி, பல தொண்டு நிறுவனங்கள், தனிமனிதர்கள் என கல்விக்கு உதவுபர்கள் உண்டு.

கல்வியும், மருத்துவமும் 99 சதவிகிதம் இலவசமாக அல்லது தொண்டு நிறுவனங்கள் மூலம் செய்து முடிக்க முடியும்.

  • திருமணம் - கோவிலில், பதிவு அலுவலகங்களில், வீட்டில் - ஆக மொத்தம் எளிமையாக நடத்தலாம். திருமணம் என்பது ஒரு இனிய வாழ்க்கை துவக்கத்திற்காக என்ற நிலை மாறி, சமூகத்தில் பெருமைக்காக, கௌரவத்துக்காக என்று மாற்றப்பட்டு விட்டது. பெருமைக்காக ஆடம்பர திருமணம் செய்வோர் வட்டியில் சிக்கி சீரழிய வேண்டியவர்களே.
  • தொழில் தொடங்க - அடிப்படையில் தொழில் தொடங்க சிறிய அளவில் முதலீடு தேவை என்றால் சிறிது காலம் வேலை செய்து சேமித்து அதில் தொடங்கவேண்டும். பெரிய அளவு என்றால், நமது சேமிப்புடன் முதலீட்டாளர்களை அல்லது பங்குதாரர்களை தேடவேண்டும்.
  • வீடு வாங்க - வீட்டின் விலை உயர்வுக்கு என்ன காரணம் என்பதை அறிந்தால் நாம் வீட்டிற்க்காக EMI வாங்குவதை நிறுத்திவிடுவவோம். Demand தான் இடத்தின் விலையை நிர்ணயிக்கிறது. Demand எப்படி உருவாகிறது, வாங்கும் மக்களின் எண்ணக்கை கூடியதால். வாங்கும் மக்களின் எண்ணிக்கை எப்படி கூடியது? எல்லோரிடமும் பணம் உள்ளதா? இல்லை. பிறகு எப்படி வாங்குகிறார்கள்? EMI வசதி இருப்பதால். இப்போ சொல்லுங்க ஒரு வீடு வாங்க கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது? கடன் வாங்கியாவது வீடு வாங்கவேண்டும் என்ற எண்ணத்தாலும் EMI பழக்கத்தாலும் வந்தது.

எனவே சமகால பொருளாதார கட்டமைப்பில் நிச்சயம் நாம் வட்டி இல்லாமல் வாழ முடியும். அதற்கு நீங்க அடிப்படையில் சில நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவேண்டும் மேலும் சில கெட்ட பண்புகளை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் நமது பண்புகள்தான் நாம் செயல்பட காரணமாக உள்ளது. வட்டி செயல்பாட்டின் 

தவிர்க்க வேண்டிய கெட்ட பண்புகள்

  • பெருமை
  • பொறாமை
  • பேராசை
  • தேவையை பெருக்கி கொள்ளுதல் & தேவையற்ற செலவு

வளர்க்க வேண்டிய நல்ல பண்புகள்

  • பொறுமை
  • கருணை
  • தானம்
  • அறக் கல்வி & ஆன்மிகம்

இவைகள் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாததை போல தோன்றலாம் ஆனால் இவைகள் ஒன்றுக்கொன்று பின்னி பிணைந்தவைகள்.

  • பெருமை - அவனைவிட நான் சற்றும் குறைந்தவனல்ல - அவன் அப்படி grand ஆ செய்தான் நான் இன்னும் அதைவிட ஆடம்பரமான செய்யணும் என்கிற எண்ணம் பெருமையின் விளைவு.
  • பொறாமை - இது நமது உள்ளதை சிதைத்து நம்மை இன்னும் கீழ் நிலைக்கு செல்லும் என்பது அடிப்படை. பொறாமை யின் விளைவை குறள் முதல் குர்ஆன் வரை பேசுகிறது. அது எதார்த்தத்தில் நிகழ்கிறது.
  • பேராசை - பேராசை படவேண்டும் என்று இன்று பல influencers, சினிமா, பேச்சாளர்கள் பேசுகிறார்கள். வானமளவு ஆசைப்படு அப்பொழுதுதான் பட்டத்தின் அளவாவது அடைய முடியும் என்பதெல்லாம் அவர்களின் தத்துவம். இது இலக்குத் தெளிவில்லாதவர்களின் கருத்து. தனது தேவை என்ன? தனது ஆற்றல் என்ன? அதை அடையும் அற வழி என்ன என்பதை அறியாத மூடர்களின் கருத்து. இலக்கை பெரிதாக வைத்து அதை அடைய என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பதன் விளைவை யோசித்து பாருங்கள். நிகழ்கால உதாரணமாக அதானி அம்பானியை எடுத்து கொள்ளுங்கள்.
  • தேவையை பெருக்கி கொள்ளுதல் & தேவையற்ற செலவு - ஒரு ஜோடி அலல்து இரண்டு ஜோடி செருப்புக்கு 10 அல்லது 20 ஜோடி செருப்பு வைத்து இருப்பது எப்படிப்பட்ட தேவை. 300 முதல் 1000 ருபாய் வரை செலவு செய்து இருக்க வேண்டிய இடத்தில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செருப்புக்கு செலவு செய்யும் மக்கள் இன்று அதிகம். இது தேவையற்ற எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
  • பொறுமை - இந்த பண்பை வளர்த்து கொண்டால் வட்டியை தவிர்க்கும் வழியை தேடி அதை அடைய ஏற்படும் முயற்சியில் ஏற்படும் முயற்சியில் வரும் இடர்களை பொறுத்துக்கொண்டு இலக்கை அடையலாம்.
  • கருணை - கருணையை வளர்த்துக்கொண்டால் வட்டி எப்படி சமுதாயத்தை அழிக்கிறது என்கிற அடிப்படை புரிதல் வட்டி வாங்கவோ கொடுக்கவோ அனுமதிக்காது.
  • தானம் - செல்வம் கிடைக்கும் போதே தானம் செய்யவேண்டும் என்று குறள், மந்திரம், நாலடியார் உட்பட பல தமிழ் மறைகள் கூறுகிறது. அவ்வாறே பைபிள் மற்றும் குர்ஆன் உட்பட பல சமய நூல்கள் கூறுகிறது. அதிலும் இஸ்லாம் 2.5% ஏழை வரி (ஜக்காத்து) என்ற கட்டாய வரியை விதித்து உள்ளது. சமீபத்தில் உலகில் உள்ள 3000 பில்லினியர்கள் 2% வரி செலுத்தினாலே உலகம் ஏழ்மையிலிருந்தும் வறுமையிலிருந்து நீங்கிவிடும் என்று சில நாடுகள் (காணொளியில்) கூறி வருகின்றன. எனவே தானம் பெருக பெருக வட்டி அற்றுப்போகும். 


  • அறக்கல்வி & ஆன்மிகம் - மேற் சொன்ன அடிப்படைகள் எல்லாம் எந்த பொருளாதார நூல்களிலும் கிடையாது. இவைகள் பற்றிய ஆழமான புரிதல் ஏற்பட உண்மையான கல்வியான அறநூல்களையும் சமய நூல்களையும் கற்க வேண்டும்.
சரி சமய நூல்கள் வட்டியை தடுத்தும் வட்டியின் அடிப்படையில் உலகம் இயங்கும் முறையினை யார் ஏற்படுத்தியது?

யூதர்களின் வட்டி திட்டம்


மேலும் வாசிக்க

  1. வட்டி
  2. ஏன் கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களில் கந்துவட்டி கொடுமை இல்லை?
இறுதியாக, வட்டியால் உலகம் இயங்கவில்லை, நமது தீய பண்புகளால் வட்டி இயங்குகிறது. 

சிவன் எந்த உலகைச் சேர்ந்தவர்?

 சிவன் என்றால் யார் என்ற கேள்விக்கு ஜக்கி அடிச்சுவிட்ட கதையை அடிப்படையாக வைத்து கேட்கப்பட்ட கேள்வி போல உள்ளது.

அவரது இணையத்தில் இந்த தலைப்பில் இவ்வாறு எழுதி உள்ளார்: சிவன் எங்கே பிறந்தார்? அவரின் தாய்-தந்தையர் யார் என்ற எந்த விவரமும் நம்மிடம் இல்லை. ஆனால், அவர் கைலாசத்தில் இருப்பார் எனச் சொல்வதுண்டு. சிவனின் பூர்வீகம் பற்றி இந்த வீடியோவில் பேசும் சத்குரு, சிவன் இந்த உலகைச் சேர்ந்தவரில்லை எனச் சொல்கிறார். அப்படியென்றால் சிவன் வேற்றுலகத்தவரா?! உண்மையென்ன என்பதை வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!  


இந்த காணொளியில் ஜக்கி சிவனை பற்றிய கூறும் செய்திகள்:

  • சிவன் ஆதியோகி,
  • அவன் சுயம்பு அதாவது அவனுக்கு தாய் தந்தை இல்லை,
  • அவன் சிறுவயதில் எங்கு இருந்தான் என்று யாருக்கும் தெரியாது,
  • வயதான பிறகு எங்கு இருந்தான் என்று யாருக்கும் தெரியாது,
  • இருந்திருந்தால் அவனது சமாதி இருந்து இருக்க வேண்டும்,
  • ஏதோ ஒரு நேரத்தில் வருவான், இடையிடையே காணாமல் போயிடுவான்,
  • ஒருமுறை வரும்பொழுது அழகாக இருப்பான், ஒருமுறை வரும்பொழுது அசிங்கமா இருப்பான்.
  • இப்படியெல்லாம் நம்ம "இது"ல சொல்லி இருக்குது.
  • அவன் கூட இருக்கவங்க எல்லோரும் விசித்திரமான இருப்பாங்க,
  • விசித்திரமான உடல் அமைப்பு கொண்டவர்,
  • கைலாசா என்று ஏதோ ஒரு இடத்திலிருந்து வந்ததாக சொல்லுவார்கள்,
  • அவருக்கு குழந்தை இல்லை என்றால் எந்தப்பெண்மணியும் அவனது விதையை கருவில் வைத்து இருக்க சக்தி பெறவில்லை
  • எனவே பார்வதிக்கு குழந்தை இல்லை
  • மேலும் சிவன் போனால் ஒரு 10, 12 வருஷம் வரமாட்டன், எங்கயோ போயிடுவான், எங்க போறான்னு யாருக்கும் தெரியாது
  • எனவே பார்வதி ஒரு குழந்தைக்கு ஆசைப்பட்டு கணபதியை உருவாக்கினார் (அந்த கதையை விரிவாக சொல்கிறார் - அதி வேறு தலைப்பு)
  • அவர் இந்த பூரியில் பிறந்தவர் இல்லை என்று தெரிகிறது, யக்ஷசொரூபா என்கிறார்கள் புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது அதாவது எங்கிருந்தோ வந்து இங்கு மனித வடிவை எடுத்துள்ளார், அவர்களுடன் வந்தவர்கள் அப்படியே இருக்கிறார்கள்.
  • வேறு ஏதோ யாருக்கும் புரியாத மொழியை பேசிக்கொள்கிறார் அவர்களுக்குள்.
  • அவர் இந்த கலாச்சாரத்தை சேர்ந்தவரல்ல
  • அவர் மனிதர் என்று நாம் சொல்ல முடியாது, ஏதோ ஒருவிதமான உயிர் இங்க வந்து மனித ரூபம் போட்டு கொள்கிறார்.

இவ்வாறு அவர் முடிக்கிறார். அறியாமையின் மொத்த ரூபமாய் ஜக்கி அவர்கள் காட்சி அளிக்கிறார். இவ்வளவு விளக்கம் கொடுக்கும் ஜக்கி தமிழிலோ சம்ஸ்கிருதத்திலோ பாண்டியத்துவம் பெற்றவரா என்று தேடினால் இல்லை என்றுதான் அவரே சொல்லி இருக்கிறார்.

அதை காண இங்கே சொடுக்கவும்.

எனவே அவர் தமிழ் வேதத்தின் மூலத்தை வாசிக்கும் வாய்ப்பு இல்லாதவர் என்பதால் இப்படிப்பட்ட தலைப்புகளை பற்றி பேசும் தகுதி அற்றவர் ஆகிறார்..

சரி அவர் சொன்ன கருத்துக்களில் உள்ள உண்மைத்தன்மையை அறிவோம் வாருங்கள். எப்படி ஆராய்வது? தமிழ் சைவ வேதத்தில் ஏதாவது ஒன்றை எடுத்து கொள்ளலாம். அந்தவகையில் திருமந்திரத்தை ஆய்வு சேய்வோம்.

அவர் சொன்னதில் சில கருத்துக்கள் பிழை இல்லை. அவையான,

  • அவன் சுயம்பு, அவனுக்கு தாய் தந்தை இல்லை.

ஆம் அவன் பிறப்பிலி என்பதை சைவ ஆகமங்கள் கூறுகிறது.

ஒன்றவன் தானே - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1)

இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி - (திருமந்திரம் - 126)

பிறப்பு இலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்று கை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடும் கூடிநின்று ஓதலும் ஆமே. - (திருமந்திரம் 86)

பிறப்பு இலி பிஞ்ஞகன் பேரருளாளன்
இறப்பு இலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பு இலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பு இலி *மாயா விருத்தமும் ஆமே. (திருமந்திரம் 25)

அவர் கூறிய மற்ற செய்திகளின் நிலை என்ன?
  • சிவன் ஆதியோகி,

முதலில் ஆதியோகி என்றால் என்ன?

ஆதி + யோகி = ஆதியோகி

ஆதி: ஆரம்ப / முதல் / தொடக்க

யோகி: முனிவன், சிந்திப்பவன், சந்நியாசி

அதாவது முதல் சந்நியாசி. அதாவது முதல் மனிதன் என்று கொள்ளலாம். ஆனால் சிவனின் வேத வரையறைகள் அவன் மனிதனல்ல என்கிறது, அதோடு இவரும் சிவனை மனிதனல்ல என்கிறார். எனவே சிவனை ஆதியோகி என்று அழைப்பது பொருத்தமல்ல.
  • அவன் சிறுவயதில் எங்கு இருந்தான் என்று யாருக்கும் தெரியாது, 
  • ஏதோ ஒரு நேரத்தில் வருவான், இடையிடையே காணாமல் போயிடுவான்,
  • ஒருமுறை வரும்பொழுது அழகாக இருப்பான், ஒருமுறை வரும்பொழுது அசிங்கமா இருப்பான்.
  • சிவன் விசித்திரமான உடல் அமைப்பு கொண்டவர்,
  • மேலும் சிவன் போனால் ஒரு 10, 12 வருஷம் வரமாட்டன், எங்கயோ போயிடுவான், எங்க போறான்னு யாருக்கும் தெரியாது
  • அவன் கூட இருக்கவங்க எல்லோரும் விசித்திரமான இருப்பாங்க,
முதலில் சிவனை பார்க்க முடியுமா? யாராவது பார்த்து உள்ளார்களா? சிவனை யாரும் காண்டத்தில் என்று திருமந்திரம் 55 பாடல் கூறுகிறது.

ஆறு அங்கமாய் வரு மாமறை ஓதியைக்
கூறு அங்கம் ஆகக் குணம் பயில்வார் இல்லை,
வேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம் ,
பேறு அங்கம் ஆகப் பெருக்குகின்றாரே. (திருமந்திரம் 55)

ஆறு அங்கங்கள் கொண்ட வேதத்தைத் தந்தவன் ஈசன். அந்த இறைவனின் இயல்பினை, உடல் அங்கங்களைக் கொண்டு அறிந்து கொண்டவர் எவரும் இல்லை. இறைவனைத் தம்மிலும் வேறுபட்டவனாக எண்ணிக்கொண்டு தம் விருப்பங்களை பெருக்கித் துன்பம் அடைகின்றார்களே!
  • வயதான பிறகு எங்கு இருந்தான் என்று யாருக்கும் தெரியாது, இருந்திருந்தால் அவனது சமாதி இருந்து இருக்க வேண்டும்,
இறப்பில்லாதவனின் சமாதியை தேடுவது என்பது எப்படிப்பட்ட அறிவு?

பிறப்பு இலி பிஞ்ஞகன் பேரருளாளன்
இறப்பு இலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பு இலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பு இலி *மாயா விருத்தமும் ஆமே. (திருமந்திரம் 25)

  • கைலாசா என்று ஏதோ ஒரு இடத்திலிருந்து வந்ததாக சொல்லுவார்கள், அது இமயமலை அல்ல.

கைலாசம் என்கிற சொல்லை திருமந்திரம் உள்ளிட்ட ஆகமங்களில் காணகிடைக்கவில்லை, இருந்தால் அறிய விரும்புகிறோம்.

  • இப்படியெல்லாம் நம்ம "இது"ல சொல்லி இருக்குது.

எதுல சொல்லி இருக்கு? எது என்று தெளிவாக பொய்யுரைப்பவர்கள் கூற விரும்புவதில்லை.

  • அவருக்கு குழந்தை இல்லை என்றால் எந்தப் பெண்மணியும் அவனது விதையை கருவில் வைத்து இருக்க சக்தி பெறவில்லை
சிவன் ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல என்கிற பொழுது உடலுறவின் மூலம் எப்படி குழந்தை பெறுவது சாத்தியம்?
பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்
உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. - (7ம் தந்திரம், 14 அடியார் பெருமை, பாடல் 4)
  • எனவே பார்வதிக்கு குழந்தை இல்லை
  • எனவே பார்வதி ஒரு குழந்தைக்கு ஆசைப்பட்டு கணபதியை உருவாக்கினார் (அந்த கதையை விரிவாக சொல்கிறார் - அதி வேறு தலைப்பு)
சிவன் என்பவன் சக்தி/பார்வதி என்கிற மனைவியோடு இருப்பவன் என்கிற கருத்தை "சத்தி" என்கிற திருமந்திர சொல்லை கொண்டு இவர்கள் நிறுவுகிறார்கள். ஆனால் சத்தி என்பதன் பொருளாக திருமந்திரம் இவ்வாறு கூறுகிறது.
சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞான ஆனந்தத்திற் சார்தலே. - (திருமந்திரம் 332)
பொழிப்புரை: ஆற்றலை பெற சமயத்தோர் கள்ளுண்பார்கள். கள்ளுண்ட பின் அவர் நினைவிழந்து செயலற்றுக் கிடத்தலால் இயல்பாகத் தமக்கு அமைந்த வலிமையும் அழிந்தது. ஆற்றல் என்பது, சிவன் வழங்கும் ஞானத்தில் தோன்றி, அந்த சத்திய ஞான ஆனந்தத்தை சார்ந்து இருத்தல் ஆகும்.

பதவுரை: சத்தி - ஆற்றல்; தலைப்பட்டு - தோன்றி;

குறிப்பு: சிவனின் மனைவி சக்தியை பெற ஒருசில சமயத்தை சேர்ந்தவர்கள் மதுபானம் குடித்தார்கள் என்பது எவ்வாறு பொருளுடையதாகும். எனவே "சத்தி" என்பது ஒரு நபரோ பெண்ணோ தெய்வமோ அல்ல. அது மனிதன் இயங்க தேவையான ஆற்றல் ஆகும் அது சிவன் வழங்கும் ஞானத்தால் கிடைக்கிறது. இந்த பொருளில் "சத்தி" என்கிற வார்த்தையை திருமந்திரத்தில் கையாண்டால், இவர்கள் கூறும் அனைத்து புராணங்களும் பொய்த்துப் போகும். மட்டுமல்ல, சிவன் என்றால் யார் என்கிற வரையறையை திருமந்திரம் தருவது போல கையாண்டால் இவர்களின் மொத்த சமயமும் பொய்த்துப் போகும். சிவனை அடிபணிவதுதான் நோக்கம் என்றால் இதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும், அவனால் ஏற்படுத்தப்படாத சமயத்தை (சிவன் சொல்லாத பொருளில் கையாண்டால் அது சிவ சமயமல்ல) காப்பதுதான் நோக்கமென்றால் அப்படியே கடந்து செல்லலாம். .
  • அவர் இந்த பூமியில் பிறந்தவர் இல்லை என்று தெரிகிறது, யக்ஷசொரூபா என்கிறார்கள் புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது அதாவது எங்கிருந்தோ இங்கு வந்து மனித வடிவை எடுத்துள்ளார், அவர்களுடன் வந்தவர்கள் அப்படியே இருந்தார்கள்.
  • அவர் மனிதர் என்று நாம் சொல்ல முடியாது, ஏதோ ஒருவிதமான உயிர் இங்க வந்து மனித ரூபம் போட்டு கொள்கிறார். அவர் இந்த கலாச்சாரத்தை சேர்ந்தவரல்ல
இந்த கூற்றுக்களின் சாரம் என்னவென்றால் சிவன் மனிதனல்ல. அவன் வேற்றுகிரகவாசி என்பதாகும்.

அதற்கு

முதலில் ஏலியன் என்பதன் வரைவிலக்கணம் என்ன? என்று நாம் அறிந்து இருக்க வேண்டும்.

இரண்டாவது கடவுள் என்பதன் வரையறை என்னவென்று அறிந்து இருக்க வேண்டும்.

மூன்றாவது, இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

கடவுள் என்பது வேறு கோளிலிருந்து வந்த உயிரினமோ அல்லது அயல் நாட்டை சார்ந்த மனிதரோ அல்ல. ஏன்?

  • இறைவன் எங்கே இருக்கிறான்? கடவுள் பூமிக்கு வருவது இல்லை, அவன் உயர்ந்த வானத்தில் இருக்கிறான்
  • கடவுளை கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்
  • ஏலியன்களுக்கும் ஏதோ ஒரு வகையான உணவும் சுவாசிக்க காற்றும் தேவை, தெய்வத்துக்கு அதுவெல்லாம் தேவை அல்ல.
  • ஏலியன்கள் இந்த பிரபஞ்ச விதிகளுக்கு உட்பட்டது, பிரபஞ்ச விதிகளை ஏற்படுத்திய இறைவன் அவர்களுக்கு அப்பாற்பட்டவன்.
  • ஏதோ யாருக்கும் புரியாத வேறு மொழியை பேசிக்கொள்கிறார்கள்.
யாருக்கும் புரியாத மொழியை பேசிய ஏலியன் ஏன் தமிழில் வேதம் தந்தது?
சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம்
*மிதா சனியாதிருந்தேன் நின்ற காலம்
இதா சனியாதிருந்தேன் மனம் நீங்கி
உதா சனியாது உடனே #உணர்ந்தோமால் (திருமந்திரம் 76. :4)

ஆராய்ச்சியால் உண்மையை உணர்ந்தேன்! உணவையும் மறந்து சதாசிவ தத்துவம், முத்தமிழ் வேதம் ஆகியவற்றில் அளவுக்கு மீறிய ஆராய்ச்சியால் மனம் தெளிந்து உண்மைப் பொருளை உணர்ந்திருந்தேன் என்கிறார் திருமூலர்.

81. பின்னை நின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல் தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே. 9

தமிழ் செய்யுமாறு என்னைப் படைத்தான்! தன்னைப் பற்றித் தமிழில் ஆகமம் செய்யும் வண்ணம் தனக்கு நல்ல ஞானத்தை அளித்ததுடன் இறைவன் தனக்கு பிறவியையும் கொடுத்து அருளினான் என்கிறார் திருமூலர்

87. அங்கி மிகாமை வைத்தான் உடல் வைத்தான்
எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும்
தங்கு மிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமை வைத்தான் பொருள் தானுமே. 15

உலகமும் உயிரும் வாழச் செய்வது திருமந்திரம்! இறைவன் உடல் சீராக இருக்கும் வண்ணம் உடலில் அங்கிக் குடரைச் சீராக வைக்கும் "சாடாராக்கினி"யை வைத்தான். ஏழுலகங்களும் சீராக இருக்கும் வண்ணம் "வடவாமுகாக்கினி"யை வைத்தான். எந்த குழப்பமும் இல்லாதிருக்க எல்லாப் பொருள்களையும் அடக்கி வைத்துள்ள திருமந்திரத்தை வைத்தான். உலகையும் உயிரையும் வாழவைக்க உதவுவது திருமந்திரம்.

99. மூலன் உரைசெய்த மூவாயிரந் தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந்து ஓதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே. 1

திருமந்திரம் மூவாயிரம் பாடல்கள்! மூவாயிரம் திருமந்திரங்களையும் பொருளுணர்ந்து காலை எழுந்தவுடன் ஓதினால் சிவனை அடையலாம்.

தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி – (திருவாசகம் 170)

இதை எல்லாம் எப்படி ஒரு ஆதாரமாக எடுத்து கொள்ள முடியும் என்று சிந்திப்பவர்கள் தமிழில் வேதம் உண்டா? என்று அறியவேண்டும்.

அல்லது ஜக்கியை ஒரு சித்தராக ரிஷியாக யாரேனும் கருதினால் பொய் குரு பற்றிய சதகுரு பற்றிய தகவலை அறிந்து இருக்க வேண்டும்.

மேலும் சிவன் அவனைப்பற்றி அவனே அவனது ஆகமத்தில் பின்வருமாறு கூறுகிறான்.

சிவனுக்கு ஒப்பான தெய்வம் இல்லை. - சிவன் ஒருவனே தெய்வம் அவன் மனிதனல்ல

சிவனொடு ஒக்கும்தெய்வம் தேடினும் இல்லை

அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை-(திருமந்திரம் 5)

ஆதியும் அந்தமும்

ஆதியோ டந்தம் இலாத பராபரம் போதம தாகப் புணரும் பராபரை - (திருமந்திரம் - 378)

பொருள்: அவனுக்கு தொடக்கமும் முடிவும் இல்லை

அந்தமும் ஆதியு மாகிப் பராபரன் - (திருமந்திரம் - 1927)

பொருள்: படைப்புகளின் தொடக்கமும் முடிவுமானவன்

சிவன் சொர்கத்தில் உள்ளான் - பூமியில் அல்ல

ஆறு விரிந்தனன் எழும்பர்ச் சென்றனன் - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1)

பொருள்: ஆறு நாட்களில் உலகை விரித்து, ஏழாவது வானத்திற்கு (உம்பர்) சென்றான்.

சிவனை மனிதர்கள் வரையறுத்து கூற முடியாது

உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்

கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ

திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்றிருந்தான் புரிசடையோனே (திருமந்திரம் 2915)

இந்த எந்த தகுதியும் பண்பும் ஜக்கி கூறும் சிவனுக்கு கிடையாது. ஒருவேளை அவர் தமிழ் ஆகமங்கள் கூறாத ஒருவரை பற்றி பேசி இருந்தால் எமது விளக்கம் பிழை அல்லது அவர் முழுக்க முழுக்க பொய்யையே பரப்பிக்கொண்டு இருக்கரியார். தாமிர தெய்வம் சிவனை வியாபார பொருளாக மாற்றிவிட்டார் என்று பொருள்.

மேலும் வாசிக்க தமிழர் தெய்வம் - சிவன் யார்?

 

சாதிய ஏற்றத்தாழ்வு எப்பொழுது உருவாகி எப்பொழுது நிலைபெற்றது?

 

11:00 சாதியை தமிழர்கள் தலையில் காட்டியது ஆங்கிலேயர்கள் (கிபி 1700) என்பதிலும் சோழர் காலத்துக்கு (கிபி 1000) பிறகுதான் வருணாசிரமம் தலை தூக்கியது என்பதிலும் உள்ள முரணை பின்வரும் பாடல்கள் கூறுகிறது. 

அதவாது உயர்வு தாழ்வு பாராட்டாத ஒன்றாக சாதி இருந்த பட்சத்தில் கிமு 300 முதல் வெவ்வேறு காலகட்டத்தில் சாதி முறையை சாடிய பாடல்கள் ஏன் பல நூல்களில் இடம் பெற்று உள்ளது?

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார்இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி. - (நல்வழி 2) - கிமு 300

பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுந்து பாரும் உம்முளே (38) (சிவா வாக்கியம் 38) கி.பி. 9

நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்வள வல்லாற் பொருளில்லை - தொல்சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம். (நாலடி.195) - கிபி 250 
 
இவ்வாறு இருக்க வருணாசிரமம் ஏற்ற தாழ்வு என்பது சோழர் காலத்துக்கு பிறகுதான் இங்கே வந்ததாக குறிப்பிடுவது பொருத்தமற்றது.
  • இப்பாடல்கள் தரும் புரிதலின்படி, சாதி/குல/குடி பாகுபாடு என்பது கிமு 300 முதல் இருந்தே வந்துள்ளது.
  • ஆரம்பத்தில் குல/குடி பகை காரணமாக, விருப்பு வெறுப்பு போதிக்கப்பட்டும், அதன் தொடர்ச்சியாக ஏற்றத்தாழ்வுகள் போதிக்க பட்டும் இருக்கலாம்.
  • பின்னாளில் அந்த ஏற்றத்தாழ்வு நிரந்தரமாகி அதன் விளைவாக விருப்பு வெறுப்பு ஏற்பட்டு இருக்கலாம்.
  • பின்னாளில் சுய இலாபத்துக்காக தமிழ்கூறும் நல்லுலகில் இதை நிறுவனமயப்படுத்த கீதை பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்.
  • ஆரிய பிராமணர்களின் தேவைக்கு ஏற்ப கீதையில் இந்த பாடல்களை திணித்தோ திரித்தோ இருக்கலாம். ஏனென்றால் சம்ஸ்கிருத வேத கடவுள்களுக்கும் கீதையின் கடவுளுக்கும் தொடர்பில்லை. எனவே கீதையின் மூல மொழி சமஸ்கிருதமா எனபதிலும் சந்தேகம் உள்ளது. மேலும் கீதை மகாபாரதத்தில் வேண்டுமென்றே திணிக்கப்பட்டு உள்ளது.
  • 18:20 சாதிய ஏற்றத்தாழ்வு தமிழகத்தில் கிபி 1218-க்கு பிறகுதான் உருவானதிற்கான ஆதாரம் கிடைக்கிறது என்கிற தரவு, கிமு 300-இல் இருந்து சாதிய முரண் இருந்து வந்துள்ளது என்கிற கருத்தை வலுவிழக்க செய்யாது. காரணம் ஆண்டாண்டு காலமாக நமக்கு பல்வேறு சித்தர்கள் முனிவர்கள் மூலம் சாதி / குல / குடி ஏற்றத்தாழ்வு க்கு எதிராக போதனைகள் செய்யப்பட்டு கொண்டே வந்துள்ளது. எனவே அது உருவாகும் பொழுதெல்லாம் உடைக்கப்பட்டு வந்து உள்ளது. எனவே  நமது தமிழ் உலகில் குருக்கள் / சித்தர்கள் தோன்றுவது நின்று போன சாதிய முரணுடன் வருணாசிரம கொள்கை திணிக்கப்பட்டு இந்த ஏற்றாததாழ்வு முறை ஆரியர்கள் மூலம் இங்கே நிலைநிறுத்தப்பட்ட காலம் வேண்டுமானால் கிபி 1200 ஆக இருக்கலாம்.  
இல்லாத ஒன்றை எப்பொழுதும் தீய சக்திகள் புதிதாக ஏற்படுத்தாது, மாறாக இருப்பதன் பொருளை / விளக்கத்தை திரித்து தனக்கு தேவையானதை சாத்தித்து கொள்ளும் என்பது வரலாறு.
 




இறைவனின் நாட்டத்தை தவிர வேறு எதுவும் நடக்காது


தமிழர் சமயம் 

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. - (குறள் 377)

உரை: கோடி தொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும், வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது - தெய்வம் வகுத்த வகையான் அல்லது நுகர்தல் உண்டாகாது.

இஸ்லாம் 

ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! - (குர்ஆன் 9:51)

கிறித்தவம் 

அதற்கு ஜான் பதிலளித்தார், “ஒரு நபர் பரலோகத்திலிருந்து கொடுக்கப்பட்டதை மட்டுமே பெற முடியும். (யோவான் 3:27)