இறைவனின் நாட்டத்தை தவிர வேறு எதுவும் நடக்காது


தமிழர் சமயம் 

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. - (குறள் 377)

உரை: கோடி தொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும், வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது - தெய்வம் வகுத்த வகையான் அல்லது நுகர்தல் உண்டாகாது.

இஸ்லாம் 

ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! - (குர்ஆன் 9:51)

கிறித்தவம் 

அதற்கு ஜான் பதிலளித்தார், “ஒரு நபர் பரலோகத்திலிருந்து கொடுக்கப்பட்டதை மட்டுமே பெற முடியும். (யோவான் 3:27)

1 கருத்து:

  1. அருளினா லன்றி யகத்தறி வில்லை
    அருளின் மலமறுக்க லாம். ஞானக்குறள் 101

    இறையருள் இருந்தாலன்றி உள்ளத்தில் இறைவனை உணரும் அறிவு கிட்டாது. அந்த அகத்தறிவால் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மல மாசுகளை அறுக்கலாம்.

    https://marainoolkal.blogspot.com/2023/09/blog-post_24.html

    பதிலளிநீக்கு