இஸ்லாமியர்களின் குண்டுவெடிப்புகளும் மற்றும் கலவரங்களும் :



1993 பம்பாய் குண்டு வெடிப்பு வழக்கில் உலகிலேயே ஒரு நாட்டு சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு உதவமுன்வந்த ஒரு நபரை தூக்கில் போட்ட பெருமை இந்திய அரசுக்கு மட்டுமே..
சான்று :
- http://www.firstpost.com/india/forgive-heres-jail-officials-say-yakub-memons-last-words-2376116.html
- http://scroll.in/article/744801/the-yakub-memon-story-the-man-who-helped-india-expose-pakistans-role-in-1993-bombay-blasts
- http://www.firstpost.com/india/all-you-need-to-know-about-1993-mumbai-blasts-accused-yakub-memon-2354838.html
- http://indianexpress.com/article/explained/yakub-memons-story-he-saw-it-as-sacrifice/
- http://www.rediff.com/news/special/it-is-important-to-know-the-truth-in-the-yakub-memon-case/20150727.htm
- https://en.wikipedia.org/wiki/Bharatiya_Janata_Party

2001-ல் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் நிரூபிக்கபடாமல் தேசத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்த உலகிலேயே தூக்குதண்டனை விதிக்கப்பட்ட ஒரே நபர் அப்சல் குரு
சான்று:
- https://www.theguardian.com/commentisfree/2013/feb/10/hanging-afzal-guru-india-democracy
- http://www.news18.com/news/india/full-text-supreme-court-judgement-on-afzal-guru-589761.html
- http://www.thehindu.com/opinion/lead/the-disturbing-truth-about-an-execution/article4501567.ece

கோத்ரா ரயிலைத் தீ வைத்துக் கொளுத்தி விட்டு அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட்டு 2000 முஸ்லிம்களைக் குஜராத்தில் கொன்று குவித்ததை நாட்டு மக்கள் மறக்க முடியாது. கோத்ரா ரயிலை எரித்ததே சங்பரிவாரர் தான் என்பதை வீடியோ ஆதாரங்களுடன் தெஹல்கா ஏடு அம்பலப்படுத்திய பிறகும் முஸ்லிம்களுக்கு எதிராக
அவதூறு பரப்பும் மீடியாக்களிடம் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை.
சான்று:
- http://www.wsws.org/tamil/articles/2011/apr/110412_guj.shtml
- https://en.wikipedia.org/wiki/2002_Gujarat_riots
- http://www.vinavu.com/2011/04/19/godhra-injustice/
- http://www.tehelka.com/2012/09/the-sting-in-the-story/
- https://en.wikipedia.org/wiki/Sanjiv_Bhatt
-https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_2002

2002ல் மோவ் எனும் ஊரிலுள்ள கோவிலில் வெடிகுண்டு வெடித்தது. முதலில் முஸ்லிம்கள் மீது பழி போடப்படாலும் தீவிர விசாரணைக்குப் பின் வி.ஹெச்.பி. தொண்டர்கள் தான் குண்டு வைத்தனர் என்று காவல்துறை கண்டு பிடித்து கைது செய்தது. இவர்களின் ஒப்புதல் வாக்கு மூலம் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது.
சான்று:
- http://www.sakshitimes.net/blog/2008/09/08/reporting-and-exposing-orissa-persecution-by-hindu-terrorists-rss-updated-2/
- http://www.thehoot.org/media-watch/media-practice/bombs-defused-in-newsrooms-3302l

2002ஆம் ஆண்டு சத்தியமங்கலம் அருகில் உள்ள சதுமுகையில் விநாயகர் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டது. இதை முஸ்லிம்கள் மீதும், திகவினர் மீதும் போட்டு  இந்துத்துவா இயக்கங்கள் ஆர்ப்பரித்தனர். கடைசியில் தீவிர விசாரணைக்குப் பின் செல்வகுமார், மஞ்சுநாதன் ஆகிய இரண்டு இந்து முன்னணியினர் தான் விநாயகர்  சிலைக்கு செருப்பு மாலை போட்டவர்கள் என்று அம்பலமாகி இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சான்று:
- http://keetru.com/index.php?option=com_content&view=article&id=10112:2010-07-24-03-47-52&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139
- http://idhuthanunmai.blogspot.in/2008/10/blog-post_8955.html
- http://9k.9941.yi.org/0/?url=bG10aC4yMF90c29wLWdvbGIvMTEvODAwMi9tb2MudG9wc2dvbGIucm9vam5hdi1yb29qbmF2Ly9BMyVwdHRo

2003 ஆம் ஆண்டு மும்பை ரயிலில் வெடிகுண்டு வெடித்ததில் 11 பேர் பலியானார்கள். அந்தப் பழியும் முஸ்லிம்கள் மீது போடப்பட்டது. இது வரை வழக்கில் எந்தத் துப்பும் இல்லை.
சான்று:
- http://www.milligazette.com/news/9388-from-day-one-of-my-arrest-in-2003-till-today-i-am-in-custody-without-any-relief-or-trial-muzammil-akhtar
- http://www.globalresearch.ca/india-s-9-11-who-was-behind-the-mumbai-attacks/11217
- http://indianexpress.com/article/india/india-others/unraveling-the-truth-behind-7-11-mumbai-train-blasts-probe/

2006 ஏப்ரல் 7 அன்று மராட்டிய மாநிலம் நான்டெட் நகரில் ஒரு வீட்டில் குண்டு வெடித்து சங்பரிவாரத்தைச் சேர்ந்த இரண்டு பேர் இறந்தனர். ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஔரங்காபாத் மசூதியில் வெள்ளிக் கிழமை தொழுகையின் போது குண்டு வைப்பதற்காக தயார் செய்த போது  வெடித்து விட்டதாகக் கூறினார்கள். அந்த வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான அனைத்து மூலப்பொருட்களும் ஏராளமாகக் கிடைத்தன .முஸ்லிம்கள் அதிகமாகக் கூடும் பள்ளிவாசல்களில் குண்டு வைப்பது இவர்களின் சதித் திட்டத்தில் உள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. பள்ளிவாசலில் குண்டு வைத்தாலும் அதையும் முஸ்லிம்கள் மீது போடுவதற்கு மீடியாக்கள் தயாராக இருப்பதால் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்று இவர்கள்  நம்புகின்றனர்.
சான்று:
- http://archives.peoplesdemocracy.in/2006/0709/07092006_nanded%20bomb.htm
- http://www.satp.org/satporgtp/countries/india/database/maharashtra_Incidents.htm

2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதியன்று நடந்த மகாராட்டிர மாநிலம் மாலேகான் என்ற ஊரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் பல்லாயிரம் மக்கள் வெள்ளிக் கிழமை தொழுது கொண்டிருந்த போது மூன்று சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்து 38 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 125 முஸ்லிம்கள் படுகாயம் அடைந்தனர்.

 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 29 இதே மாலேகான் நகரில்ஆம் தேதியன்று மற்றொரு குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட சிமி அலுவலகம் அருகில்  மோட்டார் சைக்களில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் ஆறு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பல முஸ்லிம்கள் படுகாயம் அடைந்தனர்.இந்தக் குண்டு வெடிப்பிலும் முஸ்லிம்களே பலியாகி இருந்தும் அந்தப் பழியையும் மராட்டியக் காவல் துறை முஸ்லிம்கள் மீது தான் போட்டது.

இதே (2007ஆம் ஆண்டு செப்டம்பர் 29) நாளில் குஜராத் மாநிலம் மொடாசா நகரிலும் குண்டு வெடித்தது. இதனால் கொந்தளித்துப் போன முஸ்லிம்கள் இது குறித்து  சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். சி.பி.ஐ. விசாரணைக்கு மறுத்த மராட்டிய அரசு ஏ.டி.எஸ். எனப்படும் தீவிரவாதத் தடுப்புப் படையிடம்  மறு விசாரணை செய்யும் பொறுப்பை ஒப்படைத்தது.

இந்த மோட்டார் சைக்கிள் இளம் பெண் துறவியான பிரக்யா சிங் என்பவருக்குச் சொந்தமானது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவானது. இவர் ஆர்.எஸ்.எஸ்.  இயக்கத்தின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. யிலும், ஹிந்து ஜாக்ரான் மஞ்ச் என்ற பயங்கரவாத அமைப்பிலும், விஷ்வ ஹிந்து பரிஷத் மகளிர் பிரிவான துர்கா  வாஹினியிலும் அங்கம் வசித்தவர் என்பதும் தெரிய வந்தது. குண்டு வைக்கப்பட்ட மோட்டார் சைக்களில் குர்ஆன் வசனம் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.  அப்போது தான் முஸ்லிம்கள் மீது சந்தேகம் எழும் என்பது இவர்களின் எண்ணம். இந்தக் குண்டு வெடிப்புகளில் ஜெலட்டின், அமோனியம் நைட்ரேட் போன்ற  வெடிமருந்துகள் பயன்படுத்தப்படவில்லை. மாறாக ஆர்.டி.எக்ஸ். என்னும் அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டன. மற்ற வெடி மருந்துகளைப் போல் இது எங்கேயும் கிடைக்காது. இராணுவத்தில் மட்டுமே இந்த வகை வெடிமருந்து இருக்கும். மாட்டிக் கொண்ட இவர்கள் குண்டு  வைத்ததை ஒப்புக் கொண்டதுடன் ஆர்.டி.எக்ஸ். எப்படிக் கிடைத்தது என்று விசாரித்த போது தான் முன்னாள் இராணுவத்தினரும் இந்நாள் இராணுவத்தினரும்  ஆர்.டி.எக்ஸ். சப்ளை செய்ததும் வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளித்துள்ளதும் தெரியவந்தது. மேஜர் அந்தஸ்தில் இருந்து ஓய்வு பெற்ற பிரபாகர் குல்கர்னி, உபாத்யாயா ஆகிய இராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். தற்போது கர்னல் என்ற உயர்  அந்தஸ்தில் உள்ளவருக்கும் தொடர்பு உள்ளதைக் கண்டு பிடித்து இராணுவத்தின் அனுமதி பெற்று அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். வெடிகுண்டு வைத்ததில்  தொடர்புடைய சியாம்சாரு, திலீப் நஷர், சிவநாராயனன் ஆகிய மூவர் மேலும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல சங்பரிவாரத்தினரும், காஷ்மீர் சாமியாரும் கைது  செய்யப்பட்டுள்ளனர். பெரும் பண முதலைகள் இதற்குப் பெருமளவில் பண உதவி செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. முக்கிய அரசியல் புள்ளி ஒருவரைக் கைது செய்ய  நீதி மன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது. மாலேகான் குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்ட பெண் சாமியார், பா..ஜ.க அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத்சிங்குடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும்  தொடர்புகளும் அம்பலமாகியுள்ளன. மேலும் அந்தச் சாமியார் வந்தேமாதரம் என்ற அமைப்பை குஜராத்தில் நிறுவியுள்ளார். இதற்கு குஜராத் மோடி அரசு நிதியுதவி
அளித்ததும் அம்பலமாகியுள்ளது. மோடி அரசு வந்தபிறகு அவர் விடுதலை செய்துள்ளார்..
சான்று :
- https://en.wikipedia.org/wiki/2006_Malegaon_bombings
- http://thewire.in/4767/10-facts-about-the-malegaon-blasts/
- http://www.thehindu.com/news/2006-malegaon-blasts-case-accused-disharged/article8519574.ece
- http://www.vinavu.com/2011/01/09/saffron-terror-exposed/
- http://www.vinavu.com/2013/06/04/malegaon-chargesheet-exposes-hindu-terrorists/
- http://www.firstpost.com/india/malegaon-blasts-sadhvi-pragya-nia-ats-hemant-karkare-2780250.html
- http://www.hardnewsmedia.com/2010/06/3562

2007 பிப்ரவரி 19 அன்று பாகிஸ்தான் சென்ற சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் செத்தனர். பெரும்பாலோர் முஸ்லிம்கள். ஆயினும் இந்தப் பழியும் முஸ்லிம்கள் மீதே போடப்பட்டது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்.-ஐ சேர்ந்த அசிமானந்தா என்பவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்
சான்று:
- https://en.wikipedia.org/wiki/Samjhauta_Express
- https://en.wikipedia.org/wiki/Swami_Aseemanand
- http://www.tehelka.com/2013/01/not-just-a-confession-forensic-evidence-piles-up-against-hindutva-terror/

2007 மே 18 அன்று ஹைதாரபாத் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடித்து 11 பேர் செத்தனர். அந்தப் பழியையும் முஸ்லிம்கள் மீதே
போட்டனர். ஆனால் துப்பு துலக்கவில்லை கடைசியில் அசீமனந்தா ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
சான்று:
- http://www.tehelka.com/2013/01/not-just-a-confession-forensic-evidence-piles-up-against-hindutva-terror/
- https://en.wikipedia.org/wiki/Mecca_Masjid_bombing

2007 ஆகஸ்ட் 25 அன்று ஹைதராபாத் பூங்காவில் வெடிகுண்டு வெடித்து 40 பேர் பலியானார்கள். அந்தப் பழியும் உடனடியாக முஸ்லிம்கள் மீதே போடப்பட்டது. ஆனால் இது வரை தடையங்கள் இல்லை.
சான்று:
- http://www.firstpost.com/india/hyderabad-blasts-indian-mujahideen-plot-a-year-in-making-635207.html
- https://www.facebook.com/shamsherkhan.pathan/posts/699481976854459

19.10.2008 அன்று கேரள மாநிலம் தலைச்சேரியை அடுத்த தர்மடத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் வீட்டுத் தோட்டத்தில் சக்திவாய்ந்த 20 குண்டுகளைக் காவல்துறை கண்டு  பிடித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் விபின் தாஸ் என்பவருக்குச் சொந்தமான ஷோபாசதனம் என்ற வீட்டில் தான் மேற்படி குண்டுகள் எடுக்கப்பட்டன. மேலும் இதே போல் நிகழ்வு ஆந்திர மாநிலத்திலும் அதே ஆண்டு நடைபெற்றது.
சான்று:
- http://twocircles.net/2014sep12/1410463310.html#.V96KNoh94dU
- http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=53443

2008ஆம் ஆண்டு தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் அருகில் குண்டு வெடித்தது. முஸ்லிம் தீவிரவாதிகள் தான் இதைத் செய்தனர் என்று ராமகோபாலன் உள்ளிட்ட  இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் முடிவில் இந்து முன்னணியைச் சேர்ந்த ரவி, கே.டி.சி. குமார், இலட்சுமி நாராயண சர்மா ஆகியோர் தான்  குண்டு வைத்தவர்கள் என்று கண்டு பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
சான்று:
- http://twocircles.net/2008feb26/terrorisms_tenkasi_moment.html#.V96MuIh94dU
- http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/rss-office-blast-three-arrested/article1193363.ece

ஜூன்-4-2008 அன்று மராட்டிய மாநிலம் தானேயில் விஷ்னுதாஸ் பவே ஆடிட்டோரியத்திலும், அத்காரி ரக்சயாதன் என்ற ஆடிட்டோரியத்திலும் நடத்தப்பட்ட குண்டு  வெடிப்பிலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.பயங்கரவாதத் தடுப்புப் போலீசாரின் தீவிர புலனாய்வுக்குப் பின் 1. மங்கேஷ் தினகர் நிகாம், 2. ரமேஷ் ஹனுமந்த் காத்கரி, 3. சந்தோஷ் ஆங்ரே, 4. விக்ரம் பவே ஆகிய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த நால்வர் தான் இதை நிகழ்த்தியவர்கள் என்று கண்டு பிடிக்கப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராய்காட் மாவட்டம் வர்சா கிராமம் மற்றும் பென் ஆகிய கிராமங்களில் உள்ள இவர்களின் வீடுகளை தீவிரவாதத் தடுப்புப் போலீசார் சோதனையிட்ட போது பாக்கெட் பாக்கெட்டாக அமோனியம் நைட்ரேட் 200ட்டனேட்டர்கள், டைமர்கள், வோல்டேஜ்  மீட்டர்கள், இரண்டு ரேடியோ சர்க்யூட்கள், ரிமோட் கன்ட்ரோல்கள், ரிவால்வர், 92தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேற்கண்ட குண்டுவெடிப்புகளில் அப்பாவி  இந்துக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். இந்துக்களின் கோபத்தை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்புவதற்காக சில இந்துக்களை அழிப்பது தவறில்லை என்பது இவர்களின் அடிப்படைக் கொள்கை.
சான்று :
- http://zeenews.india.com/news/maharashtra/thane-blast-prosecution-did-not-prove-terror-act_730771.html
- http://dnasyndication.com/dna/Mumbai/dna_english_news_and_features/Two-convicted-for-2008-Thane-blasts/DNMUM220748

2008 செப் 21 அன்று கர்நாடகா புத்துர் எனும் இடத்தில் பா.ஜ.க. தலைவர் சுரேஷ் காமத்துக்குச் செந்தமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் இருந்து 397 ஜெலட்டின் குச்சிகள்,  1200 டெட்னேட்டர்கள் மற்றும் மூலப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் பா.ஜ.க தலைவர் சுரேஷ் காமத் கைது செய்யப்பட்டுள்ளார்.
சான்று :
- https://faketerrorism.wordpress.com/2008/11/17/recap-large-quantity-of-explosives-recovered-from-bajrang-dal-activist-in-puttur/

2016 திருவனந்தபுரம் கேரளாவில் வீட்டுக்குள் ரகசியமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்துவந்த பா.ஜ.க. தொண்டர் குண்டு வெடிப்பில் பலி
சான்று:
- http://www.news18.com/news/india/kerala-police-suspect-bjp-worker-killed-in-blast-was-making-bomb-1283926.html

கோவை குண்டுவெடிப்பும் மும்பை தொடர் குண்டுவெடிப்பும் ஆகிய இரண்டு மட்டுமே முஸ்லிம்கள் மீது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

கோவையில் முஸ்லிம்களுக்கு எதிராகப் போலீசும், அரசும் இந்துத்துவா சக்திகளும் ஒருமித்து தாக்குதல் நடத்தி 19 பேர் கொல்லப்பட்டு, பல்லாயிரம் கோடிக்கு சேதம்  ஏற்பட்டது. இதற்கு அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவற்றையெல்லம் தொகுத்துப் பார்க்கும் போது கோவை, மும்பை தொடர் குண்டுவெடிப்பு தவிர அனைத்துமே சங்பரிவாரத்தின் சதித் திட்டம் என்பது தெளிவாகிறது.

அப்பாவி பொதுமக்கள் உயிருக்கு பங்கம் விளைவிக்கும் இது போன்ற செயல் யார் செய்யினும் தண்டனைக்கு உரியதே. உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து  நீதி சமநிலையில் வழங்கப்பட வேண்டும்..

ORIGINAL STORY : http://www.tntjlalpet.com/2015/08/pdf.html

3 கருத்துகள்:

  1. ‘எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான்” என்று கூறியதற்காக எவ்வித நியாயமுமின்றி அவர்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் சிலரை மற்றும் சிலர் மூலம் அல்லாஹ் தடுக்கா திருந்திருப்பின் ஆச்சிரமங்களும், கிறிஸ்தவ ஆலயங்களும், யூதர்களின் கோயில்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகம் நினைவு கூறப்படும் மஸ்ஜிதுகளும் தகர்க்கப்பட்டிருக்கும். அல்லாஹ் தனக்கு உதவி செய்பவருக்கு நிச்சயமாக உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமைமிக்கவன்; யாவற்றையும் மிகைத்தவன்.” (22:40)

    பதிலளிநீக்கு


  2. அஜ்மீர் தர்க்காவில் அக்டோபர் 11, 2007ல் குண்டு வெடித்து 3 பேர் கொல்லப் பட்டனர். பயங்கரவாத ஊடகங்களில் ஹூஜி, எல்-இ-டி அமைப்புகளைச் சேர்ந்த ஜிகாதி கைவண்ணம் என்ற புலனாய்வு அதிகாரிகளின் கதையை பத்திரிகைகளும் ஆர்வத்துடன் பரப்பி வந்தன. கைது செய்யப்பட்டவர்களில் அப்துல் ஹபீஸ் ஷமீம், குஷிபுர் ரஹ்மான், இம்ரான் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டு முஸ்லிம்களை தீவிரவாதிகளாக் சித்தரித்தனர்.

    ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் போலீஸ் தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் பட்டிதார் என்ற மூன்று பேரை கைது செய்தது. ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரான குப்தாதான் அந்த குண்டை வெடிக்கச் செய்த மொபைல் தொலைபேசியையும் சிம் கார்டையும் வாங்கினார் என்று தெரிய வந்தது. குண்டு வெடிப்புக்கு சில வாரங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட சுனில்\ஜோஷி திட்டமிட்டவர்களில் முக்கியமானவர் என்று அறிவிக்கப்பட்டது.

    மே 18, 2007ல் ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர்; 50 பேர் காயமடைந்தனர்.’உள்ளூர் உதவியுடன் ஹர்கத்-உல்-ஜிகாத்-எ-இஸ்லாமி (HuJI) என்ற அமைப்புதான் இதைச் செய்திருக்க வேண்டும்’ என்று ஹைதராபாத் போலீஸ் சொன்னது.

    80 முஸ்லீம்கள் அடைத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு 25 பேர் குற்றம் செய்ததாக ஒத்துக் கொள்ள வைக்கப்பட்டனர்.ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு, ‘அஜ்மீர் குண்டு வெடிப்பிலும் மெக்கா மசூதி குண்டு வெடிப்பிலும் ஒரே மாதிரியான மொபைல் போன்-சிம் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன’ என்பது சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்தது.

    ‘பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ்-டி.என்.டி. வெடிமருந்து கலவை இந்திய இராணுவத்தில் பயன்படுத்தும் விகிதத்திலானது’ என்றும் தெரிய வந்தது.
    இப்ராஹிம் ஜூனைத், ஷோயிப் ஜாகிர்தார், இம்ரான் கான், முகமது அப்துல் கலீம் உள்ளிட்ட பலர் விடுதலை செய்யப்பட்டனர்.

    குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் டாங்கே மற்றும் ராமச்சந்திரா கல்சங்காரா பற்றிய தகவல் சொல்பவர்களுக்கு ரூ 10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று ஜூன் 2010ல் போலீஸ் அறிவித்தது. லோகேஷ் ஷர்மா என்பவர் கைது செய்யப்பட்டார்.

    அக்டோபர் 2009ல் மார்கோவாவில் நடந்த குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். 2010ல் தேசிய புலனாய்வு நிறுவனம் வலதுசாரி பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் 11 பேர் மீது கோவாவில் உள்ள பஞ்சிம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    செப்டம்பர் 8, 2006 அன்று மகராஷ்டிராவின் மாலேகானில் ஒரு மசூதிக்கு அருகில் மூன்று குண்டுகள் வெடித்து 37 பேர் கொல்லப்பட்டனர்; 100 பேர் காயமடைந்தனர் அப்போதும் காவி பயங்கரவாத ஊடகங்களும் உளவுத்துறையும் திட்டமிட்டபடி முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து சல்மான் பார்சி, பரூக் இக்பால் மக்தூமி, ராயிஸ் அகமது, நூருல் ஹுதா சம்சுதோஹா, ஷபீர் பேட்டரிவாலா ஆகியோர் கைது செய்யப்பட்டு குற்றத்தை ஏற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர்.

    பதிலளிநீக்கு

  3. 2008ம் ஆண்டு 7 பேர் உயிரிழந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சந்தேகம் இந்து பயங்கரவாதிகள் பக்கம் திரும்பியது. இந்த சம்பவத்துக்கும் ஆரம்பத்தில் இந்தியன் முஜாகிதீன் போன்ற குழுக்கள் சந்தேகிக்கப்பட்டன. பின்னர் அபினவ் பாரத் மற்றும் ராஷ்ட்ரீய ஜாகரன் மஞ்ச் அமைப்புகளைச் சேர்ந்த பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் புரோகித் மற்றும் ஸ்வாமி அமிர்தானந்த் தேவ் தீர்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    சாத்வி பிரக்யா சிங் தாக்கூரின் மோட்டர் சைக்கிள் குண்டை வெடிக்கச் செய்ய பயன்படுத்தப்பட்டது. விசாரணையின் போது, ‘மெக்கா மசூதி குண்டு வெடிப்புக்கும் அவர்தான் வெடிமருந்து கொடுத்தாக’ புரோகித் சொன்னார். ஆனால் ஹைதராபாத் போலீஸ் ஹூஜி உறுப்பினர்களை கைது செய்து வைத்திருந்ததால் இந்த விபரத்தை வெளியிட வேண்டாம் என்று சிறப்பு புலனாய்வு பிரிவு கேட்டுக் கொள்ளப்பட்டது.

    ப்ரவரி 18, 2007ல் சம்ஜௌதா எக்ஸ்பிரசில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் பெரும்பான்மை பாகிஸ்தானியர் உள்ளிட்ட 68 பேர் உயிரிழந்தனர். இதிலும் வழக்கம் போல் காவி தீவிரவாத திருவிளையாடல்களை முஸ்லிம்களையே சித்தரித்தனர்.ஆனால், மூன்று மாதங்களுக்குப் பிறகு மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட அதே முறை இங்கும் பயன்பட்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரர்களான சந்தீப் டாங்கேவையும் ராம்ஜியையும் போலீஸ் தேட ஆரம்பித்தது.

    ஜூன் 4, 2008 அன்று, தானே சினிமா குண்டு வெடிப்பு தொடர்பாக ஹிந்து ஜன்ஜாக்ரிதி மற்றும் சனாதன் சன்ஸ்தா அமைப்புகளைச் சேர்ந்த ரமேஷ் ஹனுமந்த் கட்கரியும் மங்கேஷ் தினகர் நிகமும் கைது செய்யப்பட்டனர். ஜோதா அக்பர் திரைப்படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பாக அந்த குண்டு வெடிப்பு திட்டமிடப்பட்டிருந்தது.

    ஏப்ரல் 2006ல் நந்தாதில் உள்ள குண்டு உற்பத்தி பட்டறையில் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் என் ராஜ்கோண்ட்வாரும் எச் பன்சேவும் தயாரித்த வெடிகுண்டுகள் தவறுதலாக வெடித்து கொல்லப்பட்டனர்.

    ஆகஸ்ட் 2006ல் அதே அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஷ்ராவும் பூபிந்தர் சிங்கும் கான்பூரில் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருக்கும் போது கொல்லப்பட்டனர்.

    இவற்றைத் தொடர்ந்து மகராஷ்டிராவில் உள்ள பல நகரங்களில் மசூதிகளில் குண்டுகள் வெடித்தன. நந்தாதில் தயாரிக்கப்பட்ட குண்டு அவுரங்காபாத் மசூதிக்கானது என்று தெரியவந்தது. சம்பவ இடத்தில் அவுரங்காபாத் வரைபடமும் பொய் தாடிகளும் முஸ்லீம் ஆண் உடைகளும் கண்டு பிடிக்கப்பட்டன.

    2002-03ல் போபால் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிக்கும் கருவி உள்ளூர் இந்துத்துவா தொண்டர்கள் ராம்நாரயன் கல்சங்கரா, மற்றும் சுனில் ஜோஷியுடன் தொடர்புடையவை என்று தெரிந்தன.

    இவைகளை விட கொடுமையான குஜராத் படுகொலைகளை செய்த பயங்கரவாதி பிரதமராக போஸ் தருகிறார். கள்ளக் காதல் கந்து வட்டி அடுத்தவன் பொண்டாட்டியை ஆட்டையை போடுவது முதல் அனைத்திற்கும் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் காவி பயங்கரவாத ஊடகங்களும் உளவுத்துறையும் உளவுத்துறையும் சென்றது கொண்டு இஸ்லாமியர்களையே தீவிரவாதிகளாக சித்தரிக்க முயல்கின்றது.

    விநாயகர் சதுர்த்தி என்ற பெயரால் நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இன்றளவும் தாக்கப்படுகிறார்கள், அதற்கும் வாய்ப்பு கிடைத்தால் முஸ்லிம்கள் தான் விநாயகர் சதிர்த்தியை கொண்டாடுகிறார்கள் என்று கூறும் அளவிற்கு காவி பயங்கரவாத அடிமைகளாக சேவகம் செய்து கொண்டிருக்கும் ஊடகங்களும் கருப்பாடுகளாக இருந்து கொண்டு அரசுப்பணிகளில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளும் முயன்றாலும் ஆச்சரியமில்லை.

    இந்த நிலையில் காவி பயங்கரவாத அமைப்புக்களால் உருவாக்கப்பட்டு ஆட்சியில் இருக்கும் கட்சியை சேர்ந்த காவி பயங்கரவாதி மதரஸாக்களில் தீவிரவாதம் போதிக்கப்படுகிறது என்கிறார் அதையும் காவி பயங்கரவாத ஊடகங்கள் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் பிரசுரிக்கிறது.

    Source : https://www.facebook.com/MediaTheMessage/photos/a.300482656632335.92841.300465473300720/930720970275164/?type=1

    பதிலளிநீக்கு