தஞ்சம்

தமிழர் சமயம் 

நச்சித் தற் சென்றார் நசை கொல்லா மாண்பு இனிதே,
உட்கு இல்வழி, வாழா ஊக்கம் மிக இனிதே,
எத் திறத்தானும் இயைவ கரவாத
பற்றினில் பாங்கு இனியது இல். (இனியவை நாற்பது 26)

தன்னை, தஞ்சமாக வந்தடைந்தவர் தம் விருப்பத்தை நிறைவேற்றும் மாட்சிமை இனியது. நாணம் இல்லாத வழிச் செல்லாத ஊக்கம் இனியது. உதவ இயன்றவற்றை மறைக்காத தன்மை இனியது. 
 
இஸ்லாம் 

(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரை பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு ( பத்திரமாக) அனுப்பபுவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 09:6)

கிறிஸ்தவம் & யூதம் 

ஓர் அடிமை உன்னிடம் அடைக்கலம் புகுந்திருந்தால், அவர்களை எஜமானிடம் ஒப்படைக்காதே. அவர்கள் விரும்பும் இடத்திலும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் எந்த ஊரிலும் அவர்கள் உங்களிடையே வாழட்டும். அவர்களை ஒடுக்க வேண்டாம் (உபாகமம் 23:15-16)

புறமுதுகிட்டு ஓடுதல்

தமிழர் சமயம் 

எருது இல் உழவர்க்குப் போகு ஈரம் இன்னா;
கருவிகள் மாறிப் புறங்கொடுத்தல் இன்னா;
திருவுடையாரைச் செறல் இன்னா; இன்னா,
பெரு வலியார்க்கு இன்னா செயல். - (இன்னா நாற்பது 4)

புறங்கொடுத்தல் - முதுகுகாட்டுதல்

எருது இல்லாத உழவர்க்கு அருகிய ஈரம் துன்பமாம். கருவிகளை இழந்து போரில் புறமுதுகிடுதல் துன்பமாம். செல்வம் உடையவர்களிடம் கோபம் கொள்ளுதலும், திறனுடையவர்களுக்குத் தீங்கு செய்தலும் துன்பமாம்.

வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம் (உலக நீதி 36)

பொருள்: கொடிய போரில் புறமுதுகு காட்டி திரும்பிவாராதே 
 
இஸ்லாம்  

''என் சமூகத்தாரே! உங்களுக்கு அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்; இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டித் திரும்பி விடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நட்டமடைந்தவர்களாகத் திரும்புவீர்கள்.'' (அல்குர்ஆன் 5:21)

கிறிஸ்தவம் & யூதம் 

ஆயுதமணிந்த வில்வீரரான எப்பிராயீம் புத்திரர் யுத்தநாளிலே முதுகு காட்டினார்கள். அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதியாமலும், அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள். (சங்கீதம் 78:9-11)

 10 கர்த்தர் யோசுவாவை நோக்கி, “உன் முகத்தைத் தரையில் கவிழ்த்து ஏன் விழுந்துகிடக்கிறாய்? எழுந்து நில்! 11 இஸ்ரவேல் ஜனங்கள் எனக்கு எதிராகப் பாவம் செய்தார்கள். அவர்கள் கீழ்ப்படியுமாறு கட்டளையிட்ட உடன்படிக்கையை மீறினார்கள். அழித்துவிடும்படி நான் கட்டளையிட்ட பொருட்களை எடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் அதை திருடிவிட்டனர். அவர்கள் பொய் கூறிவிட்டனர். அப்பொருட்களை அவர்களுக்காக எடுத்துள்ளனர். 12 அதனால்தான் இஸ்ரவேல் படை போரிலிருந்து புறமுதுகு காட்டித் திரும்பிவிட்டது. அவர்கள் தவறு செய்ததாலேயே அவ்விதம் நடந்தது. நான் உங்களுக்கு உதவமாட்டேன். நீங்கள் அழிக்கவேண்டுமென நான் கட்டளையிட்டவற்றை அழிக்காவிட்டால் நான் உங்களோடு இருக்கமாட்டேன். 13 “இப்போதும் போய், ஜனங்களை பரிசுத்தப்படுத்து. ஜனங்களிடம், ‘உங்களை பரிசுத்தப்படுத்திக்கொள்ளுங்கள், நாளைக்குத் தயாராகுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இங்கு சிலர், கர்த்தர் அழிக்குமாறு கட்டளையிட்ட பொருட்களை வைத்துக்கொண்டிருப்பதாகக் கூறுகிறார். நீங்கள் அவற்றை அப்புறப்படுத்தாவிட்டால் உங்கள் பகைவர்களை ஒருபோதும் வெல்ல முடியாமல் போகலாம். (யோசுவா 7:12)

நம்பிக்கையற்றவர்களை கொல்லலாமா? *

கிறிஸ்தவம் & யூதம்  

16 ஆனால், தேசங்களின் நகரங்களில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிறார், சுவாசிக்கும் எதையும் உயிருடன் விடாதீர்கள். 17 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஏத்தியர்கள் , எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள் மற்றும் எபூசியர்களை முற்றிலும் அழித்துவிடுங்கள். 18 இல்லையேல், தங்கள் தெய்வங்களை வணங்குவதில் அவர்கள் செய்யும் எல்லா அருவருப்பான செயல்களையும் பின்பற்றும்படி அவர்கள் உங்களுக்குக் கற்பிப்பார்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்வீர்கள். - (உபாகமம் 20:16-18)

இஸ்லாம் 

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 2:190) 

(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை (குர்ஆன் 2:191)  

எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்); நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 2:192) 

 'போர் விலக்கப்பட்ட சங்கைமிக்க மாதங்கள் (நான்கு மாதங்கள்) கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளை கண்ட இடங்களில் வெட்டுங்கள். அவர்களை பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களை குறிவைத்து உட்கார்ந்திருங்கள். ஆனால் அவர்கள் (மனந்திருந்தி, தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைபிடித்து, (ஏழை வரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடைய வனாகவும் இருக்கின்றான்.' (அல் குர்ஆன் 9: 5)

அல்லாஹ் ரப்புல் ஆலமீன், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அனுமதி அளிக்கிறான்;மக்காவிற்கு நீங்கள் செல்லுங்கள் மக்காவை வெற்றி கொள்ளுங்கள் அங்கிருந்து முஷ்ரிக்களை வெளியேற்றுங்கள் என்று. (அல்குர்ஆன் 9 : 28)

எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன். (அல்குர்ஆன் 22:40)

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். (திருக்குர்ஆன் 60:8)

 '(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரை பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு ( பத்திரமாக) அனுப்பபுவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.'(அல் குர்ஆன் 09:6)

முடிவுரை 

இறைவனை அவன் தந்த கட்டளையை இவர்கள் மறுக்க செய்வார்கள் என்கிற  அடிப்படையில் ஒரு நாட்டின் படைக்கு, அதன் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைச் சட்டம் ஆகும். இது தனி மனிதன் இன்னொரு தனிமனிதனை கொலை செய்வதை ஆதரிக்கும் சட்டமல்ல.

நேர்ச்சை செய்தல் *

கிறிஸ்தவம் & யூதம் 

21 நீ உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் பொருத்தனை செய்தால் , அதைச் செலுத்தத் தாமதிக்காதே; உன் கடவுளாகிய ஆண்டவர் அதை உன்னிடம் கேட்பார், நீ பாவம் செய்வாய். 22 ஆனால் நீங்கள் சபதம் செய்யாமல் இருந்தால், நீங்கள் குற்றவாளியாக இருக்க மாட்டீர்கள். 23 உன் உதடுகள் எதைச் சொன்னாலும் அதை நீ உறுதியாகச் செய்ய வேண்டும்; (உபாகமம் 23 :21-23)

 இஸ்லாம் 

அவர்கள் தாம் தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொண்டும் அனைத்துத் திசைகளிலும் தீங்கு பரவக்கூடிய மறுமை நாளினைக் குறித்து அஞ்சிக் கொண்டுமிருப்பார்கள். (குர்ஆன் 76:7

‘நம்பிக்கையாளர்களில் இத்தகையவர்களும் உள்ளனர். இறைவனிடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் மெய்ப்படுத்திக் காட்டி விட்டிருக்கிறார்கள்; அவர்களில் சிலர் தமது நேர்ச்சையை நிறைவேற்றி விட்டார்கள்; இன்னும் சிலர் அதற்கான நேரத்தை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள்’. (திருக்குர்ஆன் 33:23

நேர்த்திக்கடன் விதியில் எதையும் துரிதப்படுத்தவும் செய்யாது; தாமதப்படுத்தவும் செய்யாது என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்:புகாரி)ம்(சிறு பகுதியைத்) தடவிக் கொள்ளுங்கள்’.- (அல்-குர்ஆன் 5:6)

  

இந்த காலத்தில் வட்டிக்கு விடுவதும், வாங்குவதும் பாவம் என்றால் இந்த உலகமே இயங்குமா?

மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பார்கள். எனவே நம்மை பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கும் வட்டியை நம்மால் விட இயலவில்லை என்பது நமக்கு மனமில்லை என்பதையே காட்டுகிறது. இதை தெளிவாக புரிந்து கொள்ள வட்டியைப் பற்றி சில அடிப்படைகளை புரிந்துகொள்வோம்.

வட்டிக்கு பணம் எதற்காக வாங்க வேண்டும்?

  • மருத்துவ செலவுக்கு
  • படிப்பு செலவுக்கு
  • திருமண செலவுக்கு
  • ஒரு தொழில் தொடங்க
  • வீடு வாங்க

போன்ற நியாயமான காரணங்களுக்காக வாங்கப்படுகிறது.

இன்று EMI என்கிற பெயரில் சின்ன சின்ன பொருட்கள் வாங்க, கார் வாங்க, சுற்றுலா போக என அல்ப காரணங்களுக்காக வாங்கப் படுவதெல்லாம் அவரவர் சுய கட்டுப்பாடின்மையால் நிகழ்கிறது. எனவே அவைகளை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டாம்.

சமகால பொருளாதார கட்டமைப்பில் அனைத்துக்குமே மாற்று வழி உண்டு.

  • மருத்துவ செலவு - அரசு மருத்துவமனை, அரசின் காப்பீட்டுத்திட்டம்
  • கல்வி - அரசு பள்ளி, பல தொண்டு நிறுவனங்கள், தனிமனிதர்கள் என கல்விக்கு உதவுபர்கள் உண்டு.

கல்வியும், மருத்துவமும் 99 சதவிகிதம் இலவசமாக அல்லது தொண்டு நிறுவனங்கள் மூலம் செய்து முடிக்க முடியும்.

  • திருமணம் - கோவிலில், பதிவு அலுவலகங்களில், வீட்டில் - ஆக மொத்தம் எளிமையாக நடத்தலாம். திருமணம் என்பது ஒரு இனிய வாழ்க்கை துவக்கத்திற்காக என்ற நிலை மாறி, சமூகத்தில் பெருமைக்காக, கௌரவத்துக்காக என்று மாற்றப்பட்டு விட்டது. பெருமைக்காக ஆடம்பர திருமணம் செய்வோர் வட்டியில் சிக்கி சீரழிய வேண்டியவர்களே.
  • தொழில் தொடங்க - அடிப்படையில் தொழில் தொடங்க சிறிய அளவில் முதலீடு தேவை என்றால் சிறிது காலம் வேலை செய்து சேமித்து அதில் தொடங்கவேண்டும். பெரிய அளவு என்றால், நமது சேமிப்புடன் முதலீட்டாளர்களை அல்லது பங்குதாரர்களை தேடவேண்டும்.
  • வீடு வாங்க - வீட்டின் விலை உயர்வுக்கு என்ன காரணம் என்பதை அறிந்தால் நாம் வீட்டிற்க்காக EMI வாங்குவதை நிறுத்திவிடுவவோம். Demand தான் இடத்தின் விலையை நிர்ணயிக்கிறது. Demand எப்படி உருவாகிறது, வாங்கும் மக்களின் எண்ணக்கை கூடியதால். வாங்கும் மக்களின் எண்ணிக்கை எப்படி கூடியது? எல்லோரிடமும் பணம் உள்ளதா? இல்லை. பிறகு எப்படி வாங்குகிறார்கள்? EMI வசதி இருப்பதால். இப்போ சொல்லுங்க ஒரு வீடு வாங்க கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது? கடன் வாங்கியாவது வீடு வாங்கவேண்டும் என்ற எண்ணத்தாலும் EMI பழக்கத்தாலும் வந்தது.

எனவே சமகால பொருளாதார கட்டமைப்பில் நிச்சயம் நாம் வட்டி இல்லாமல் வாழ முடியும். அதற்கு நீங்க அடிப்படையில் சில நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவேண்டும் மேலும் சில கெட்ட பண்புகளை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் நமது பண்புகள்தான் நாம் செயல்பட காரணமாக உள்ளது. வட்டி செயல்பாட்டின் 

தவிர்க்க வேண்டிய கெட்ட பண்புகள்

  • பெருமை
  • பொறாமை
  • பேராசை
  • தேவையை பெருக்கி கொள்ளுதல் & தேவையற்ற செலவு

வளர்க்க வேண்டிய நல்ல பண்புகள்

  • பொறுமை
  • கருணை
  • தானம்
  • அறக் கல்வி & ஆன்மிகம்

இவைகள் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாததை போல தோன்றலாம் ஆனால் இவைகள் ஒன்றுக்கொன்று பின்னி பிணைந்தவைகள்.

  • பெருமை - அவனைவிட நான் சற்றும் குறைந்தவனல்ல - அவன் அப்படி grand ஆ செய்தான் நான் இன்னும் அதைவிட ஆடம்பரமான செய்யணும் என்கிற எண்ணம் பெருமையின் விளைவு.
  • பொறாமை - இது நமது உள்ளதை சிதைத்து நம்மை இன்னும் கீழ் நிலைக்கு செல்லும் என்பது அடிப்படை. பொறாமை யின் விளைவை குறள் முதல் குர்ஆன் வரை பேசுகிறது. அது எதார்த்தத்தில் நிகழ்கிறது.
  • பேராசை - பேராசை படவேண்டும் என்று இன்று பல influencers, சினிமா, பேச்சாளர்கள் பேசுகிறார்கள். வானமளவு ஆசைப்படு அப்பொழுதுதான் பட்டத்தின் அளவாவது அடைய முடியும் என்பதெல்லாம் அவர்களின் தத்துவம். இது இலக்குத் தெளிவில்லாதவர்களின் கருத்து. தனது தேவை என்ன? தனது ஆற்றல் என்ன? அதை அடையும் அற வழி என்ன என்பதை அறியாத மூடர்களின் கருத்து. இலக்கை பெரிதாக வைத்து அதை அடைய என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பதன் விளைவை யோசித்து பாருங்கள். நிகழ்கால உதாரணமாக அதானி அம்பானியை எடுத்து கொள்ளுங்கள்.
  • தேவையை பெருக்கி கொள்ளுதல் & தேவையற்ற செலவு - ஒரு ஜோடி அலல்து இரண்டு ஜோடி செருப்புக்கு 10 அல்லது 20 ஜோடி செருப்பு வைத்து இருப்பது எப்படிப்பட்ட தேவை. 300 முதல் 1000 ருபாய் வரை செலவு செய்து இருக்க வேண்டிய இடத்தில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செருப்புக்கு செலவு செய்யும் மக்கள் இன்று அதிகம். இது தேவையற்ற எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
  • பொறுமை - இந்த பண்பை வளர்த்து கொண்டால் வட்டியை தவிர்க்கும் வழியை தேடி அதை அடைய ஏற்படும் முயற்சியில் ஏற்படும் முயற்சியில் வரும் இடர்களை பொறுத்துக்கொண்டு இலக்கை அடையலாம்.
  • கருணை - கருணையை வளர்த்துக்கொண்டால் வட்டி எப்படி சமுதாயத்தை அழிக்கிறது என்கிற அடிப்படை புரிதல் வட்டி வாங்கவோ கொடுக்கவோ அனுமதிக்காது.
  • தானம் - செல்வம் கிடைக்கும் போதே தானம் செய்யவேண்டும் என்று குறள், மந்திரம், நாலடியார் உட்பட பல தமிழ் மறைகள் கூறுகிறது. அவ்வாறே பைபிள் மற்றும் குர்ஆன் உட்பட பல சமய நூல்கள் கூறுகிறது. அதிலும் இஸ்லாம் 2.5% ஏழை வரி (ஜக்காத்து) என்ற கட்டாய வரியை விதித்து உள்ளது. சமீபத்தில் உலகில் உள்ள 3000 பில்லினியர்கள் 2% வரி செலுத்தினாலே உலகம் ஏழ்மையிலிருந்தும் வறுமையிலிருந்து நீங்கிவிடும் என்று சில நாடுகள் (காணொளியில்) கூறி வருகின்றன. எனவே தானம் பெருக பெருக வட்டி அற்றுப்போகும். 


  • அறக்கல்வி & ஆன்மிகம் - மேற் சொன்ன அடிப்படைகள் எல்லாம் எந்த பொருளாதார நூல்களிலும் கிடையாது. இவைகள் பற்றிய ஆழமான புரிதல் ஏற்பட உண்மையான கல்வியான அறநூல்களையும் சமய நூல்களையும் கற்க வேண்டும்.
சரி சமய நூல்கள் வட்டியை தடுத்தும் வட்டியின் அடிப்படையில் உலகம் இயங்கும் முறையினை யார் ஏற்படுத்தியது?

யூதர்களின் வட்டி திட்டம்


மேலும் வாசிக்க

  1. வட்டி
  2. ஏன் கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களில் கந்துவட்டி கொடுமை இல்லை?
இறுதியாக, வட்டியால் உலகம் இயங்கவில்லை, நமது தீய பண்புகளால் வட்டி இயங்குகிறது.