சிவன் எந்த உலகைச் சேர்ந்தவர்?

 சிவன் என்றால் யார் என்ற கேள்விக்கு ஜக்கி அடிச்சுவிட்ட கதையை அடிப்படையாக வைத்து கேட்கப்பட்ட கேள்வி போல உள்ளது.

அவரது இணையத்தில் இந்த தலைப்பில் இவ்வாறு எழுதி உள்ளார்: சிவன் எங்கே பிறந்தார்? அவரின் தாய்-தந்தையர் யார் என்ற எந்த விவரமும் நம்மிடம் இல்லை. ஆனால், அவர் கைலாசத்தில் இருப்பார் எனச் சொல்வதுண்டு. சிவனின் பூர்வீகம் பற்றி இந்த வீடியோவில் பேசும் சத்குரு, சிவன் இந்த உலகைச் சேர்ந்தவரில்லை எனச் சொல்கிறார். அப்படியென்றால் சிவன் வேற்றுலகத்தவரா?! உண்மையென்ன என்பதை வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!  


இந்த காணொளியில் ஜக்கி சிவனை பற்றிய கூறும் செய்திகள்:

  • சிவன் ஆதியோகி,
  • அவன் சுயம்பு அதாவது அவனுக்கு தாய் தந்தை இல்லை,
  • அவன் சிறுவயதில் எங்கு இருந்தான் என்று யாருக்கும் தெரியாது,
  • வயதான பிறகு எங்கு இருந்தான் என்று யாருக்கும் தெரியாது,
  • இருந்திருந்தால் அவனது சமாதி இருந்து இருக்க வேண்டும்,
  • ஏதோ ஒரு நேரத்தில் வருவான், இடையிடையே காணாமல் போயிடுவான்,
  • ஒருமுறை வரும்பொழுது அழகாக இருப்பான், ஒருமுறை வரும்பொழுது அசிங்கமா இருப்பான்.
  • இப்படியெல்லாம் நம்ம "இது"ல சொல்லி இருக்குது.
  • அவன் கூட இருக்கவங்க எல்லோரும் விசித்திரமான இருப்பாங்க,
  • விசித்திரமான உடல் அமைப்பு கொண்டவர்,
  • கைலாசா என்று ஏதோ ஒரு இடத்திலிருந்து வந்ததாக சொல்லுவார்கள்,
  • அவருக்கு குழந்தை இல்லை என்றால் எந்தப்பெண்மணியும் அவனது விதையை கருவில் வைத்து இருக்க சக்தி பெறவில்லை
  • எனவே பார்வதிக்கு குழந்தை இல்லை
  • மேலும் சிவன் போனால் ஒரு 10, 12 வருஷம் வரமாட்டன், எங்கயோ போயிடுவான், எங்க போறான்னு யாருக்கும் தெரியாது
  • எனவே பார்வதி ஒரு குழந்தைக்கு ஆசைப்பட்டு கணபதியை உருவாக்கினார் (அந்த கதையை விரிவாக சொல்கிறார் - அதி வேறு தலைப்பு)
  • அவர் இந்த பூரியில் பிறந்தவர் இல்லை என்று தெரிகிறது, யக்ஷசொரூபா என்கிறார்கள் புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது அதாவது எங்கிருந்தோ வந்து இங்கு மனித வடிவை எடுத்துள்ளார், அவர்களுடன் வந்தவர்கள் அப்படியே இருக்கிறார்கள்.
  • வேறு ஏதோ யாருக்கும் புரியாத மொழியை பேசிக்கொள்கிறார் அவர்களுக்குள்.
  • அவர் இந்த கலாச்சாரத்தை சேர்ந்தவரல்ல
  • அவர் மனிதர் என்று நாம் சொல்ல முடியாது, ஏதோ ஒருவிதமான உயிர் இங்க வந்து மனித ரூபம் போட்டு கொள்கிறார்.

இவ்வாறு அவர் முடிக்கிறார். அறியாமையின் மொத்த ரூபமாய் ஜக்கி அவர்கள் காட்சி அளிக்கிறார். இவ்வளவு விளக்கம் கொடுக்கும் ஜக்கி தமிழிலோ சம்ஸ்கிருதத்திலோ பாண்டியத்துவம் பெற்றவரா என்று தேடினால் இல்லை என்றுதான் அவரே சொல்லி இருக்கிறார்.

அதை காண இங்கே சொடுக்கவும்.

எனவே அவர் தமிழ் வேதத்தின் மூலத்தை வாசிக்கும் வாய்ப்பு இல்லாதவர் என்பதால் இப்படிப்பட்ட தலைப்புகளை பற்றி பேசும் தகுதி அற்றவர் ஆகிறார்..

சரி அவர் சொன்ன கருத்துக்களில் உள்ள உண்மைத்தன்மையை அறிவோம் வாருங்கள். எப்படி ஆராய்வது? தமிழ் சைவ வேதத்தில் ஏதாவது ஒன்றை எடுத்து கொள்ளலாம். அந்தவகையில் திருமந்திரத்தை ஆய்வு சேய்வோம்.

அவர் சொன்னதில் சில கருத்துக்கள் பிழை இல்லை. அவையான,

  • அவன் சுயம்பு, அவனுக்கு தாய் தந்தை இல்லை.

ஆம் அவன் பிறப்பிலி என்பதை சைவ ஆகமங்கள் கூறுகிறது.

ஒன்றவன் தானே - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1)

இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி - (திருமந்திரம் - 126)

பிறப்பு இலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்று கை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடும் கூடிநின்று ஓதலும் ஆமே. - (திருமந்திரம் 86)

பிறப்பு இலி பிஞ்ஞகன் பேரருளாளன்
இறப்பு இலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பு இலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பு இலி *மாயா விருத்தமும் ஆமே. (திருமந்திரம் 25)

அவர் கூறிய மற்ற செய்திகளின் நிலை என்ன?
  • சிவன் ஆதியோகி,

முதலில் ஆதியோகி என்றால் என்ன?

ஆதி + யோகி = ஆதியோகி

ஆதி: ஆரம்ப / முதல் / தொடக்க

யோகி: முனிவன், சிந்திப்பவன், சந்நியாசி

அதாவது முதல் சந்நியாசி. அதாவது முதல் மனிதன் என்று கொள்ளலாம். ஆனால் சிவனின் வேத வரையறைகள் அவன் மனிதனல்ல என்கிறது, அதோடு இவரும் சிவனை மனிதனல்ல என்கிறார். எனவே சிவனை ஆதியோகி என்று அழைப்பது பொருத்தமல்ல.
  • அவன் சிறுவயதில் எங்கு இருந்தான் என்று யாருக்கும் தெரியாது, 
  • ஏதோ ஒரு நேரத்தில் வருவான், இடையிடையே காணாமல் போயிடுவான்,
  • ஒருமுறை வரும்பொழுது அழகாக இருப்பான், ஒருமுறை வரும்பொழுது அசிங்கமா இருப்பான்.
  • சிவன் விசித்திரமான உடல் அமைப்பு கொண்டவர்,
  • மேலும் சிவன் போனால் ஒரு 10, 12 வருஷம் வரமாட்டன், எங்கயோ போயிடுவான், எங்க போறான்னு யாருக்கும் தெரியாது
  • அவன் கூட இருக்கவங்க எல்லோரும் விசித்திரமான இருப்பாங்க,
முதலில் சிவனை பார்க்க முடியுமா? யாராவது பார்த்து உள்ளார்களா? சிவனை யாரும் காண்டத்தில் என்று திருமந்திரம் 55 பாடல் கூறுகிறது.

ஆறு அங்கமாய் வரு மாமறை ஓதியைக்
கூறு அங்கம் ஆகக் குணம் பயில்வார் இல்லை,
வேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம் ,
பேறு அங்கம் ஆகப் பெருக்குகின்றாரே. (திருமந்திரம் 55)

ஆறு அங்கங்கள் கொண்ட வேதத்தைத் தந்தவன் ஈசன். அந்த இறைவனின் இயல்பினை, உடல் அங்கங்களைக் கொண்டு அறிந்து கொண்டவர் எவரும் இல்லை. இறைவனைத் தம்மிலும் வேறுபட்டவனாக எண்ணிக்கொண்டு தம் விருப்பங்களை பெருக்கித் துன்பம் அடைகின்றார்களே!
  • வயதான பிறகு எங்கு இருந்தான் என்று யாருக்கும் தெரியாது, இருந்திருந்தால் அவனது சமாதி இருந்து இருக்க வேண்டும்,
இறப்பில்லாதவனின் சமாதியை தேடுவது என்பது எப்படிப்பட்ட அறிவு?

பிறப்பு இலி பிஞ்ஞகன் பேரருளாளன்
இறப்பு இலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பு இலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பு இலி *மாயா விருத்தமும் ஆமே. (திருமந்திரம் 25)

  • கைலாசா என்று ஏதோ ஒரு இடத்திலிருந்து வந்ததாக சொல்லுவார்கள், அது இமயமலை அல்ல.

கைலாசம் என்கிற சொல்லை திருமந்திரம் உள்ளிட்ட ஆகமங்களில் காணகிடைக்கவில்லை, இருந்தால் அறிய விரும்புகிறோம்.

  • இப்படியெல்லாம் நம்ம "இது"ல சொல்லி இருக்குது.

எதுல சொல்லி இருக்கு? எது என்று தெளிவாக பொய்யுரைப்பவர்கள் கூற விரும்புவதில்லை.

  • அவருக்கு குழந்தை இல்லை என்றால் எந்தப் பெண்மணியும் அவனது விதையை கருவில் வைத்து இருக்க சக்தி பெறவில்லை
சிவன் ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல என்கிற பொழுது உடலுறவின் மூலம் எப்படி குழந்தை பெறுவது சாத்தியம்?
பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்
உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. - (7ம் தந்திரம், 14 அடியார் பெருமை, பாடல் 4)
  • எனவே பார்வதிக்கு குழந்தை இல்லை
  • எனவே பார்வதி ஒரு குழந்தைக்கு ஆசைப்பட்டு கணபதியை உருவாக்கினார் (அந்த கதையை விரிவாக சொல்கிறார் - அதி வேறு தலைப்பு)
சிவன் என்பவன் சக்தி/பார்வதி என்கிற மனைவியோடு இருப்பவன் என்கிற கருத்தை "சத்தி" என்கிற திருமந்திர சொல்லை கொண்டு இவர்கள் நிறுவுகிறார்கள். ஆனால் சத்தி என்பதன் பொருளாக திருமந்திரம் இவ்வாறு கூறுகிறது.
சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞான ஆனந்தத்திற் சார்தலே. - (திருமந்திரம் 332)
பொழிப்புரை: ஆற்றலை பெற சமயத்தோர் கள்ளுண்பார்கள். கள்ளுண்ட பின் அவர் நினைவிழந்து செயலற்றுக் கிடத்தலால் இயல்பாகத் தமக்கு அமைந்த வலிமையும் அழிந்தது. ஆற்றல் என்பது, சிவன் வழங்கும் ஞானத்தில் தோன்றி, அந்த சத்திய ஞான ஆனந்தத்தை சார்ந்து இருத்தல் ஆகும்.

பதவுரை: சத்தி - ஆற்றல்; தலைப்பட்டு - தோன்றி;

குறிப்பு: சிவனின் மனைவி சக்தியை பெற ஒருசில சமயத்தை சேர்ந்தவர்கள் மதுபானம் குடித்தார்கள் என்பது எவ்வாறு பொருளுடையதாகும். எனவே "சத்தி" என்பது ஒரு நபரோ பெண்ணோ தெய்வமோ அல்ல. அது மனிதன் இயங்க தேவையான ஆற்றல் ஆகும் அது சிவன் வழங்கும் ஞானத்தால் கிடைக்கிறது. இந்த பொருளில் "சத்தி" என்கிற வார்த்தையை திருமந்திரத்தில் கையாண்டால், இவர்கள் கூறும் அனைத்து புராணங்களும் பொய்த்துப் போகும். மட்டுமல்ல, சிவன் என்றால் யார் என்கிற வரையறையை திருமந்திரம் தருவது போல கையாண்டால் இவர்களின் மொத்த சமயமும் பொய்த்துப் போகும். சிவனை அடிபணிவதுதான் நோக்கம் என்றால் இதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும், அவனால் ஏற்படுத்தப்படாத சமயத்தை (சிவன் சொல்லாத பொருளில் கையாண்டால் அது சிவ சமயமல்ல) காப்பதுதான் நோக்கமென்றால் அப்படியே கடந்து செல்லலாம். .
  • அவர் இந்த பூமியில் பிறந்தவர் இல்லை என்று தெரிகிறது, யக்ஷசொரூபா என்கிறார்கள் புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது அதாவது எங்கிருந்தோ இங்கு வந்து மனித வடிவை எடுத்துள்ளார், அவர்களுடன் வந்தவர்கள் அப்படியே இருந்தார்கள்.
  • அவர் மனிதர் என்று நாம் சொல்ல முடியாது, ஏதோ ஒருவிதமான உயிர் இங்க வந்து மனித ரூபம் போட்டு கொள்கிறார். அவர் இந்த கலாச்சாரத்தை சேர்ந்தவரல்ல
இந்த கூற்றுக்களின் சாரம் என்னவென்றால் சிவன் மனிதனல்ல. அவன் வேற்றுகிரகவாசி என்பதாகும்.

அதற்கு

முதலில் ஏலியன் என்பதன் வரைவிலக்கணம் என்ன? என்று நாம் அறிந்து இருக்க வேண்டும்.

இரண்டாவது கடவுள் என்பதன் வரையறை என்னவென்று அறிந்து இருக்க வேண்டும்.

மூன்றாவது, இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

கடவுள் என்பது வேறு கோளிலிருந்து வந்த உயிரினமோ அல்லது அயல் நாட்டை சார்ந்த மனிதரோ அல்ல. ஏன்?

  • இறைவன் எங்கே இருக்கிறான்? கடவுள் பூமிக்கு வருவது இல்லை, அவன் உயர்ந்த வானத்தில் இருக்கிறான்
  • கடவுளை கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்
  • ஏலியன்களுக்கும் ஏதோ ஒரு வகையான உணவும் சுவாசிக்க காற்றும் தேவை, தெய்வத்துக்கு அதுவெல்லாம் தேவை அல்ல.
  • ஏலியன்கள் இந்த பிரபஞ்ச விதிகளுக்கு உட்பட்டது, பிரபஞ்ச விதிகளை ஏற்படுத்திய இறைவன் அவர்களுக்கு அப்பாற்பட்டவன்.
  • ஏதோ யாருக்கும் புரியாத வேறு மொழியை பேசிக்கொள்கிறார்கள்.
யாருக்கும் புரியாத மொழியை பேசிய ஏலியன் ஏன் தமிழில் வேதம் தந்தது?
சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம்
*மிதா சனியாதிருந்தேன் நின்ற காலம்
இதா சனியாதிருந்தேன் மனம் நீங்கி
உதா சனியாது உடனே #உணர்ந்தோமால் (திருமந்திரம் 76. :4)

ஆராய்ச்சியால் உண்மையை உணர்ந்தேன்! உணவையும் மறந்து சதாசிவ தத்துவம், முத்தமிழ் வேதம் ஆகியவற்றில் அளவுக்கு மீறிய ஆராய்ச்சியால் மனம் தெளிந்து உண்மைப் பொருளை உணர்ந்திருந்தேன் என்கிறார் திருமூலர்.

81. பின்னை நின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல் தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே. 9

தமிழ் செய்யுமாறு என்னைப் படைத்தான்! தன்னைப் பற்றித் தமிழில் ஆகமம் செய்யும் வண்ணம் தனக்கு நல்ல ஞானத்தை அளித்ததுடன் இறைவன் தனக்கு பிறவியையும் கொடுத்து அருளினான் என்கிறார் திருமூலர்

87. அங்கி மிகாமை வைத்தான் உடல் வைத்தான்
எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும்
தங்கு மிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமை வைத்தான் பொருள் தானுமே. 15

உலகமும் உயிரும் வாழச் செய்வது திருமந்திரம்! இறைவன் உடல் சீராக இருக்கும் வண்ணம் உடலில் அங்கிக் குடரைச் சீராக வைக்கும் "சாடாராக்கினி"யை வைத்தான். ஏழுலகங்களும் சீராக இருக்கும் வண்ணம் "வடவாமுகாக்கினி"யை வைத்தான். எந்த குழப்பமும் இல்லாதிருக்க எல்லாப் பொருள்களையும் அடக்கி வைத்துள்ள திருமந்திரத்தை வைத்தான். உலகையும் உயிரையும் வாழவைக்க உதவுவது திருமந்திரம்.

99. மூலன் உரைசெய்த மூவாயிரந் தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந்து ஓதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே. 1

திருமந்திரம் மூவாயிரம் பாடல்கள்! மூவாயிரம் திருமந்திரங்களையும் பொருளுணர்ந்து காலை எழுந்தவுடன் ஓதினால் சிவனை அடையலாம்.

தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி – (திருவாசகம் 170)

இதை எல்லாம் எப்படி ஒரு ஆதாரமாக எடுத்து கொள்ள முடியும் என்று சிந்திப்பவர்கள் தமிழில் வேதம் உண்டா? என்று அறியவேண்டும்.

அல்லது ஜக்கியை ஒரு சித்தராக ரிஷியாக யாரேனும் கருதினால் பொய் குரு பற்றிய சதகுரு பற்றிய தகவலை அறிந்து இருக்க வேண்டும்.

மேலும் சிவன் அவனைப்பற்றி அவனே அவனது ஆகமத்தில் பின்வருமாறு கூறுகிறான்.

சிவனுக்கு ஒப்பான தெய்வம் இல்லை. - சிவன் ஒருவனே தெய்வம் அவன் மனிதனல்ல

சிவனொடு ஒக்கும்தெய்வம் தேடினும் இல்லை

அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை-(திருமந்திரம் 5)

ஆதியும் அந்தமும்

ஆதியோ டந்தம் இலாத பராபரம் போதம தாகப் புணரும் பராபரை - (திருமந்திரம் - 378)

பொருள்: அவனுக்கு தொடக்கமும் முடிவும் இல்லை

அந்தமும் ஆதியு மாகிப் பராபரன் - (திருமந்திரம் - 1927)

பொருள்: படைப்புகளின் தொடக்கமும் முடிவுமானவன்

சிவன் சொர்கத்தில் உள்ளான் - பூமியில் அல்ல

ஆறு விரிந்தனன் எழும்பர்ச் சென்றனன் - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1)

பொருள்: ஆறு நாட்களில் உலகை விரித்து, ஏழாவது வானத்திற்கு (உம்பர்) சென்றான்.

சிவனை மனிதர்கள் வரையறுத்து கூற முடியாது

உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்

கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ

திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்றிருந்தான் புரிசடையோனே (திருமந்திரம் 2915)

இந்த எந்த தகுதியும் பண்பும் ஜக்கி கூறும் சிவனுக்கு கிடையாது. ஒருவேளை அவர் தமிழ் ஆகமங்கள் கூறாத ஒருவரை பற்றி பேசி இருந்தால் எமது விளக்கம் பிழை அல்லது அவர் முழுக்க முழுக்க பொய்யையே பரப்பிக்கொண்டு இருக்கரியார். தாமிர தெய்வம் சிவனை வியாபார பொருளாக மாற்றிவிட்டார் என்று பொருள்.

மேலும் வாசிக்க தமிழர் தெய்வம் - சிவன் யார்?

 

சாதிய ஏற்றத்தாழ்வு எப்பொழுது உருவாகி எப்பொழுது நிலைபெற்றது?

 

11:00 சாதியை தமிழர்கள் தலையில் காட்டியது ஆங்கிலேயர்கள் (கிபி 1700) என்பதிலும் சோழர் காலத்துக்கு (கிபி 1000) பிறகுதான் வருணாசிரமம் தலை தூக்கியது என்பதிலும் உள்ள முரணை பின்வரும் பாடல்கள் கூறுகிறது. 

அதவாது உயர்வு தாழ்வு பாராட்டாத ஒன்றாக சாதி இருந்த பட்சத்தில் கிமு 300 முதல் வெவ்வேறு காலகட்டத்தில் சாதி முறையை சாடிய பாடல்கள் ஏன் பல நூல்களில் இடம் பெற்று உள்ளது?

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார்இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி. - (நல்வழி 2) - கிமு 300

பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுந்து பாரும் உம்முளே (38) (சிவா வாக்கியம் 38) கி.பி. 9

நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்வள வல்லாற் பொருளில்லை - தொல்சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம். (நாலடி.195) - கிபி 250 
 
இவ்வாறு இருக்க வருணாசிரமம் ஏற்ற தாழ்வு என்பது சோழர் காலத்துக்கு பிறகுதான் இங்கே வந்ததாக குறிப்பிடுவது பொருத்தமற்றது.
  • இப்பாடல்கள் தரும் புரிதலின்படி, சாதி/குல/குடி பாகுபாடு என்பது கிமு 300 முதல் இருந்தே வந்துள்ளது.
  • ஆரம்பத்தில் குல/குடி பகை காரணமாக, விருப்பு வெறுப்பு போதிக்கப்பட்டும், அதன் தொடர்ச்சியாக ஏற்றத்தாழ்வுகள் போதிக்க பட்டும் இருக்கலாம்.
  • பின்னாளில் அந்த ஏற்றத்தாழ்வு நிரந்தரமாகி அதன் விளைவாக விருப்பு வெறுப்பு ஏற்பட்டு இருக்கலாம்.
  • பின்னாளில் சுய இலாபத்துக்காக தமிழ்கூறும் நல்லுலகில் இதை நிறுவனமயப்படுத்த கீதை பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்.
  • ஆரிய பிராமணர்களின் தேவைக்கு ஏற்ப கீதையில் இந்த பாடல்களை திணித்தோ திரித்தோ இருக்கலாம். ஏனென்றால் சம்ஸ்கிருத வேத கடவுள்களுக்கும் கீதையின் கடவுளுக்கும் தொடர்பில்லை. எனவே கீதையின் மூல மொழி சமஸ்கிருதமா எனபதிலும் சந்தேகம் உள்ளது. மேலும் கீதை மகாபாரதத்தில் வேண்டுமென்றே திணிக்கப்பட்டு உள்ளது.
  • 18:20 சாதிய ஏற்றத்தாழ்வு தமிழகத்தில் கிபி 1218-க்கு பிறகுதான் உருவானதிற்கான ஆதாரம் கிடைக்கிறது என்கிற தரவு, கிமு 300-இல் இருந்து சாதிய முரண் இருந்து வந்துள்ளது என்கிற கருத்தை வலுவிழக்க செய்யாது. காரணம் ஆண்டாண்டு காலமாக நமக்கு பல்வேறு சித்தர்கள் முனிவர்கள் மூலம் சாதி / குல / குடி ஏற்றத்தாழ்வு க்கு எதிராக போதனைகள் செய்யப்பட்டு கொண்டே வந்துள்ளது. எனவே அது உருவாகும் பொழுதெல்லாம் உடைக்கப்பட்டு வந்து உள்ளது. எனவே  நமது தமிழ் உலகில் குருக்கள் / சித்தர்கள் தோன்றுவது நின்று போன சாதிய முரணுடன் வருணாசிரம கொள்கை திணிக்கப்பட்டு இந்த ஏற்றாததாழ்வு முறை ஆரியர்கள் மூலம் இங்கே நிலைநிறுத்தப்பட்ட காலம் வேண்டுமானால் கிபி 1200 ஆக இருக்கலாம்.  
இல்லாத ஒன்றை எப்பொழுதும் தீய சக்திகள் புதிதாக ஏற்படுத்தாது, மாறாக இருப்பதன் பொருளை / விளக்கத்தை திரித்து தனக்கு தேவையானதை சாத்தித்து கொள்ளும் என்பது வரலாறு.
 




இறைவனின் நாட்டத்தை தவிர வேறு எதுவும் நடக்காது


தமிழர் சமயம் 

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. - (குறள் 377)

உரை: கோடி தொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும், வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது - தெய்வம் வகுத்த வகையான் அல்லது நுகர்தல் உண்டாகாது.

இஸ்லாம் 

ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! - (குர்ஆன் 9:51)

கிறித்தவம் 

அதற்கு ஜான் பதிலளித்தார், “ஒரு நபர் பரலோகத்திலிருந்து கொடுக்கப்பட்டதை மட்டுமே பெற முடியும். (யோவான் 3:27)

பூமி எதிர் திசையில் சுழலத் தொடங்கினால் என்னவாகும்? : அறிவியல் தீர்க்க தரிசனங்கள் - 02

காலத்துக்கு ஏற்ற கேள்வி. ஏற்கனவே உள்பகுதி எதிர் திசையில் சுழல ஆர்மபித்து விட்டதாம்.

மேலுள்ள செய்தி குறிப்பிட்டு இருப்பது போல மையப்பகுதியின் வேகம் அல்லது திசை மாறுவதற்கான காரணம் என்ன?

உங்களைப் பூமி ஆட்டம் காணச் செய்யாதிருக்க அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுவினான். (திருக்குர்ஆன் 16:15)

தங்கம், நிலக்கரி, வைரம், லித்தியம் போன்றவைகளுக்காக மலைகளை குடைவதும், கிரானைட் போன்றவைகளுக்காக மலைகளை உடைத்ததும், தொடந்து உடைப்பதும், போட்டி போட்டு ரஷ்யாவும் அமெரிக்காவும் பூமியில் துளையிட்ட ப்ரொஜெக்ட்டும் சில காரணங்களாக இருக்கலாம். ஏனென்றால் மலைகளை உள்ளும் புறமும் சேதப்படுத்துவது அவைகள் எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ அந்த காரணத்தை வலுவிழக்கச் செய்கிறது.

சரி இதன் பாதிப்புகள் என்னவாக இருக்கும்?

  • பூமி சுற்றுவது நின்று மறுபக்கம் முழுவதுமாக சுழல துவங்கும் முன் ஒரு பகலோ அல்லது இரவோ நீண்டு இருக்க வாய்ப்பு உண்டு
  • சூரியன் மேற்கிலிருந்து உதிக்கலாம்
  • இதுவரை இல்லாத அளவு பூகம்பங்கள் ஏற்படலாம்
  • பருவநிலை மாறுபடலாம்

இதை யாராவது முன்பே கணித்து உள்ளார்களா?

ஆம். ஆனால் அதை கணிப்பு என்று சொல்ல முடியாது. அது ஒரு டிவைன் மெசேஜ் என்று கூறலாம். அதாவது தொல்காப்பிய நூல்விதி கூறுவது போல.

  • பூமி சுற்றுவது நின்று மறுபக்கம் முழுவதுமாக சுழல துவங்கும் முன் ஒரு பகலோ அல்லது இரவோ நீண்டு இருக்க வாய்ப்பு உண்டு

'தஜ்ஜால் இப்பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான்'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பது நாட்கள். ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், ஒரு நாள் ஒரு மாதம் போன்றும், ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதாரண நாட்களைப் போன்றுமிருக்கும் என்று விடையளித்தார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! ஒரு வருடத்தை ஒத்த அந்த நாள், நாம் ஒரு நாளுக்கு உரியதை மட்டும் தொழுதால் போதுமா?". அவர் நபி அவர்கள், "இல்லை, ஆனால் கணக்கிட்டு தொழுங்கள்!" என்றார். (அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் ரலி)

  • சூரியன் மேற்கிலிருந்து உதிக்கலாம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் –“சூரியன் மேற்கிலிருந்து உதிக்காமல் மறுமைநாள் ஏற்படாது. அதைக் கண்டதும் மக்கள் இறைவனை நம்புவார்கள். ஆனால் ஏற்கனவே இறைவனை நம்பாதிருந்தவரது நம்பிகை்கை எப்பயனுமளிக்காது”அறிவிப்பவர் அபூஹுரைரா(ரழி)நூல் (புகாரி 6506)

சூரியன் மேற்கிலிருந்து உதித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

  • இதுவரை இல்லாத அளவு பூகம்பங்கள் ஏற்படலாம்

பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். (நூல்: புகாரி 1036, 7121)

  • பருவநிலை மாறுபடலாம்
அரேபியாவின் நிலம் புல்வெளிகளாகவும் ஆறுகளாகவும் மாறும் வரை கடைசி நேரம் வராது." [முஸ்லிம் 157 c] 
 

 

 இந்த பதிவுக்காக மீள் வாசிப்பு செய்யும்பொழுது உள்ளுக்குள் பதட்டம் அதிகரிக்கிறது. உலக அழிவுநாள் மிக அருகில் இருப்பதை உணராமல் இருக்க முடியவில்லை. மேலும் சில முன்னறிவிப்புகள் பட்டியல் உங்களுக்காக.

  • விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்
  • தகுதியற்றவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கபப்டும்
  • பாலை வனம் சோலை வனமாகும்
  • காலம் சுருங்குதல்: அதாவது நாள் மிக வேகமாக ஓடுவது.
  • கொலைகள் பெருகுதல்
  • பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
  • நெருக்கமான கடை வீதிகள்
  • பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
  • ஆடை அணிந்தும் நிர்வாணம்
  • உயிரற்ற பொருட்கள் பேசுவது
  • பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்
  • இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
  • யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
  • செல்வம் பெருகும்
  • மகளின் தயவில் தாய்
  • குடிசைகள் கோபுரமாகும்

பூமியின் ஆழம்: அறிவியல் தீர்க்க தரிசனங்கள் - 01

இந்த பூமியின் மையப்பகுதி என்பது சுமார் 5000 கிலோ மீட்டர்கள் ஆழத்தில் இருப்பது. இன்றுவரை பூமிக்கு கீழ் 12 கிமீ அளவிற்கு மட்டுமே துளையிட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. - பிபிசி

மனிதர்கள் இயந்திரங்களை கொண்டு துளையிட்ட தூரம் 12km. ஆனால் மனிதர்கள் அடைந்த தூரம் எவ்வளவு?

பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நீர் பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்! (அல்குர்ஆன் 17:37)

மிக உயாமான எவெரெஸ்ட்டின் உயரம் 8848 மீட்டர் அதாவது 8.8 கிமீ.

மனிதர்கள் அதனுள்ளே சென்று அடைந்தது என்று பார்த்தால் அதிக பட்சம் 4 கிலோமீட்டர் மட்டுமே.

எனவே இன்னும் மனிதன் உள்ளே செல்ல முடியும் என்றால் மேலும் ஒரு 4.8 கிமீ முயற்சிக்கலாம்.

இஸ்லாம் இறைவனிடம் இருந்து வந்த சமயம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

குறளை பைபிளோடு ஒப்பிடுவது சரியா?

புலால் மறுத்தல் என்னும் ஒரு அதிகாரத்தை எழுதிய வள்ளுவரை எல்லா உயிரினங்களையும் அடித்து துன்புறுத்தித் தின்னும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர் என்று சொல்லுவது வெட்கக்கேடாக இல்லையா அவர்கள் எப்பேர்பட்ட கீழ் மக்கள்

புலால் மறுத்தல் அதிகாரம் வள்ளுவரால் எழுதப்பட்டது என்பதை ஏற்பதே கடினமாக உள்ளது. அதற்கு சில காரணங்கள் உண்டு.

  1. குறளின் மற்ற அதிகாரங்களில் உள்ள பாடல்களின் சுவைக்கும் வார்த்தை பயன்பாட்டுக்கும் இந்த அதிகார பாடல்களுக்கும் இடையே உள்ள வேற்றுமை இந்த அதிகாரம் குறளுக்கு பொருந்தமால் இருப்பதை உணர முடிகிறது. இந்த பாடல்களில் ஒருசில பொருட் பிழைகளும் உண்டு. திருக்குறளில் இடைசொருகள் இருப்பதாக வாவுசி கருதுகிறார், நானும் அவ்வாறே. ஆனால் ஆதிகரங்கள் வேறு வேறு.

2. தேவர் குறளும் மூலர் சொல்லும் ஒன்றே என்று கூறும் ஒளவையாரின் நல்வழி பாடலை கொண்டு ஆராய்ந்தால் திருமந்திரம் கெட்ட புலாலை (பொல்லாப் புலால், பாதக மாம்) மட்டுமே கூடாது என்று கூறுகிறது. புலால் என்றாலே கெட்டது என்பதற்கு போதிய ஆதாரம் இந்த பாடல்களில் இல்லை.

3. நான்மறை என்பது உலக வேதங்கள் அனைத்தையும் குறிக்கும் எனவே நான்மறை முடிவும் குறளும் ஒன்றே என்றால் குரான், பைபிள், தோரா, ரிக், யஜூர், சாமம், குறள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், உட்பட பல்வேறு மொழிகளில் உள்ள மறை நூல்களும் ஒன்றுகொன்று முரண்பட முடியாது என்று பொருள். அவ்வாறு இருக்க குறளில் மட்டும் எவ்வாறு புலால் மறுப்பு இருக்க முடியும்?

4. சிவவாகியரும் புலால் மறுப்பு என்ற கருத்து சைவத்தில் இல்லை என்று கூறுகிறார்.

5. புலால் உண்ணாமை என்பது பௌத்தம் போன்ற நாத்தீக சமயங்களில் இருந்து எடுத்து கொள்ளப்பட்டதாக ஒரு கருத்தும் நிலவுகிறது.

6. பிராமண எதிர்ப்பிர்க்காக புலால் மறுப்பை குறளில் வைத்துள்ளார் வள்ளுவர் என்ற கருத்து உண்டு ஆனால் அதில் எனக்கு உடன்பாடில்லை.

7) குறளை வெய்யோர்க்கு மறைவிரி எளிது. - (முதுமொழிக் காஞ்சி 8. எளிய பத்து 4) என்று தமிழ் கூறும் பொழுது பைபிள் மறை நூலா என்று அறிய இந்த ஒப்பீடு பயன்படும்

8) குறள் என்றால் சுருக்கமாக என்று பொருள். எனவே உலகில் உள்ள வேதங்கள் அனைத்தின் சுருக்கம் திருக்குறள் என்றும் பொருள் கொள்ளலாம்.

உதாரணம்:

குறளையுள் நட்பு அளவு தோன்றும்; உறல் இனிய
சால் பினில் தோன்றும், குடிமையும்; பால் போலும்
தூய்மையுள் தோன்றும் பிரமாணம்; - இம் மூன்றும்
வாய்மை உடையார் வழக்கு. . . . .[திரிகடுகம் 37]

பொருள்: சுருக்கத்தினால் நட்பின் எல்லை தோன்றும். இனிய செயல்களினால் குடிப் பிறப்பின் தன்மை தோன்றும். மனத் தூய்மையினால் வாழ்வின் அளவு தோன்றும். எனவே இம்மூன்றும் உண்மையான பெரியோரின் குணங்களாகும்.

எனவே புலால் மறுப்பு அதிகாரத்தை ஆதாரமாக கொண்டு பைபிள் மற்றும் குறளை ஒப்பிடுவதை விமர்சிப்பது பொருந்தாது. குறளை உலகில் வேதம் என கூறப்படும் எந்த ஒரு நூலோடும் ஒப்பிட்டு பார்க்கலாம். 

சனாதனம் பற்றி சைவ வைணவ நூல்களில் குறிப்பு உண்டா?

 சனாதனம் பற்றி சைவ வைணவ நூல்களில் குறிப்பு உண்டா என்று ஆய்வு செய்ய முதலில் சந்தானம் என்றால் என்ன என்று அறிய வேண்டும்.

சனாதன தர்மத்துக்கு ஆரிய மதம் என்று இன்னொரு பெயரும் உண்டு. அது பிற்கலத்தில் இந்து மதம் என்று அழைக்கப்பட்டது.

சரி இந்த ஆரியர்கள் யார்? இன்றைய தீவிர இந்து தேசியவாதம் பேசும் மக்களின் முன்னோடிகளான கோல்வால்கர் மற்றும் விவேகானந்தர் ஆகியோர் வட புலத்திலிருந்தும், ஆப்கானிஸ்தானத்திலிருந்து வந்ததாக முறையே ஒப்பு கொள்கின்றனர். ஆனால் அக்காலத்தில் அது இந்தியாவின் ஒரு பகுதி என்கின்றனர்.

ஆனால் இவர்களின் கருத்துக்கு வரலாற்று இந்தியாவின் எல்லை முரண்படுகிறது. உதாரணமாக,

  • இமயம் முதல் கடல்கொண்ட குமரிவரை தமிழ் ஆண்டதற்கான பல்வேறு தரவுகள் கிடைக்க பெருகின்றன, மேலும் ஒரு நிலத்தில் இரு வேத பாரம்பரியங்கள் தொடந்து இருக்க வாய்ப்பு இல்லை. எனவே ஆரியர்கள் இந்த நிலப்பரப்பை சார்ந்தவர்கள் அல்ல.
  • தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம், இரண்டும் தொன்மை வாய்ந்த மொழிகள், ஆனால் தமிழுக்கு தான் சொந்தமாக எழுத்துருக்கள் உள்ளன, வரலாற்று நோக்கில் சமசுகிருதத்துக்கோர் எழுத்துமுறை இருந்ததில்லை. பண்டைய பிராமி எழுத்துக்கள் அசோகச் சக்கரவர்த்தியின் தூண் கல்வெட்டுக்களின் காலம் வரை கூடப் புழக்கத்திலிருந்தது. பின்னர், கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டதுடன், தெற்கே கன்னடம் போன்ற எழுத்துக்களும், வடக்கே வங்காளம் மற்றும் ஏனைய வட இந்திய எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டன. எனினும் பல ஆண்டுகளாக, சிறப்பாக அண்மைக் காலங்களில் தேவநாகரி எழுத்துக்களே பரவலாக சமசுகிருதத்துடன் தொடர்புபட்டுள்ளது. சில சூழல்களில், குறிப்பாக தேவநாகரி எழுத்துக்கள் உள்ளூர் எழுத்து முறைமையாக இல்லாத பகுதிகளில் கிரந்த எழுத்துக்கள் அல்லது உள்ளூர் எழுத்துக்கள் பயன்பாட்டிலுள்ளன. சமஸ்கிருதத்தின் பழைய வேதகால வடிவம், எல்லாப் பிற்கால இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் மூலமான முதல்நிலை-இந்தோ-ஐரோப்பிய மொழிக்குக் கிட்டியதாகும். வேதகால வடமொழி ஈரானின் அவெத்தன் மொழியை ஒத்தது. எனவே ஆரியர்கள் இந்தியர்கள் அல்ல.
  • புவியியல் அமைப்பும் ஆரியர்கள் ஒரு கணவாய் வழியாக இன்றைய இந்தியாவிற்குள் குடிபெயர்ந்தவர்கள் என்பதற்கு சான்றாக அமைந்து உள்ளது. எனவே ஆரியர்கள் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் அல்ல.
  • கோல்வால்கர் சொல்வது போல வடதுருவம் முழுவதும் இந்தியாவுடன் எக்காலத்திலும் இணைந்து இருந்ததில்லை என்கிறது வரலாறு. மேலும் விவேகானந்தர் சொல்வது போல ஆஃப்கானிஸ்தான் இந்தியாவின் எல்லைக்குள் தொடந்து இருந்ததற்கு ஆதாரமோ அல்லது இன்றைய தென் இந்திய கலாச்சார பண்பாடுகளுடன் ஒன்றி இருந்ததற்கான ஆதாரமோ இல்லை. மேலும் ஆரிய நூல்களில் சொல்லப்பட்ட நில, கால சூழ்நிலைகள் இந்தியாவிற்கு பொருந்தாத உதாரணங்கள். சைவ சமண நூல்களில் சொல்லப்பட்ட பூ காய் கனி விலங்கு நில அமைப்பு போன்றவைகள் தான் இந்த மண்ணுக்கு பொருந்தும் உதாரணங்கள். எனவே ஆரியர்கள் நம்மவர்கள் அல்ல.
  • இன்று இந்தியா எனும் நிலப்பரப்பை ஏறக்குறைய முழுமையாக முதன் முதலில் மௌரியர்கள் கிமு 322-லும், பிறகு மொகலாயர்கள் கிபி 17ஆம் நூற்றாண்டிலும், பிறகு ஆங்கிலேயர்களும் உருவாக்கினார். அதற்கு முன் இப்படி ஒரு ஒன்றிணைந்த கட்டமைப்பே இல்லை. எனவே ஆரியர்கள் அதற்க்கு முன் இந்த மண்ணுக்கு தொடர்புடையவர்களாக இருந்து இருக்க வாய்ப்பில்லை.

இதன் விளைவாக நாம் அறிவது என்னவென்றால் ஆரியர்கள் அவர்கள் பேசும் சம்ஸ்கிருத மொழியில் இயற்றிய வேதத்தை அடிப்படையாக கொண்ட சனாதன மதம் தமிழர்களின் அல்லது இந்தியர்களின் சமயம் அல்ல.

இதன் காரணமாக சனாதனம் தொடர்பான செய்திகள் தமிழர் சமயத்தில் இருக்க வாய்ப்பு இல்லையா என்றால், சமய பாரம்பரியங்கள்தான் வேறே தவிர நான்மறைகளும் அதாவது அனைத்து சமயங்களும் ஒரே இறைவனிடத்தில் இருந்துதான் வந்தது என்கிற அடிப்படையில் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால்,

  • இரண்டும் வெவ்வேறு வேத பாரம்பரியம் என்பதில் மாற்று கருத்து இல்லை.
  • வேதங்கள் தான் முதன்மையானது என்பதில் மாற்று கருத்து இல்லை.
  • வேதத்துக்கு முரண்படும் புராண இதிகாசங்கள், வேதத்தை திரித்து இயற்ற பட்ட சட்டங்கள் புறந்தள்ளப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
  • வேதம் அந்த பாரம்பரியத்தை சார்ந்த எல்லோருக்குமானது என்பதில் மாற்று கருத்து இல்லை.
  • எல்லா வேதங்களும் ஒரே மாதிரியான அறத்தைதான் போதிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

எல்லாம் ஒன்று என்றால் சனாதனத்தை பின்பற்றலாமா என்றால்? "கூடாது" என்பதுதான் பதில். ஏன்? இறைவனை அறிய விரும்புவோர், இறைவனின் சட்டத்தை பின்பற்ற விரும்புவோர் தத்தம் மொழியில் உள்ள வேதத்தை கற்று செயல்படவேண்டும். மாற்று மொழி சட்டத்தை அல்லது வேதத்தை பின்பற்ற தத்தம் மொழியில் உள்ள வேதத்தில் வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டு இருந்தால் பிழையில்லை. இல்லையேல் 100% மாபெரும் பாவம் ஆகும். அது தனது மொழியில் உள்ள வேதத்தை நிராகரிப்பது ஆகும். அது உலகை படைத்து மக்களுக்கு வெவ்வேறு மொழியில் வெவ்வேறு காலத்தில் வேதத்தை வழங்கிய இறைவனை நிராகரிப்பது ஆகும்.

சைவ நூல்களில் சனாதனம் பற்றிய செய்திகளின் ஆதாரங்கள் என்ன என்று கேட்டால்? ரிக் யஜுர் சாம வேதங்களை அதன் உபநிடதங்களை சமஸ்கிருதத்தில் முறையே கற்றவர் சைவ ஆகம நூல்களான தேவாரம் திருவாசகம் திருமந்திரம் ஆகியவற்றையும் முறையே கற்று இருந்தால் அவர் ஒப்பிட்டு சொன்னால் மிகமிக ஏற்புடையதாகி இருக்கும். மற்றவர்களும் செய்யலாம், ஆனால் அதை ஏற்போர் மிக மிக குறைவு. அவ்வாறு ஒரு நூல் இருந்தால் பின்னூட்டம் இடுங்கள் வாசிக்க ஆர்வமாக உள்ளேன்.

"டார்வின் கோட்பாடும் ராமாயணத்தில் வானரப்படையும் " ஒன்றுக்கொன்று தொடர்புள்ள விசயங்களாக இருக்குமா?

 ராமாயணம் உணமையாக இருக்கும் பட்சத்தில் இதை சிந்திப்பதில்லை உபயோக முண்டு.

இராமாயணத்தை பற்றி சில உண்மைகள் தொகுக்கப்பட்டுள்ளது. அனைத்தும் ஆதாரங்களுடன் உள்ளது, இதில் சொந்த கருத்து எதுமில்லை.

  1. அம்பேத்கர் இராமாயண காலம் பற்றி வேறு கருத்துக்களை கொண்டுள்ளார்.

2. இந்து சமய அறிஞர்களை பொறுத்த வரையில் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்ட வெவ்வேறு வகையான இராமாயண நூல்கள் உண்டு. அவைகள் ஒன்றுக்கொன்று முரன்படவும் செய்கின்றன.

இந்த link ஐ சொடுக்கி, அதில் உள்ள வெவ்வேறு இராமாயண பட்டியலை வாசித்து கொள்ளுங்கள்.

மேலுள்ள ஆதாரத்தின் படி இராமாயண காலம் கிமு 249 அல்லது அசோகருக்கு ஒருசில நூறு வருடங்கள் முந்தயதே தவிர, 10000 ஆண்டு என்பதெல்லாம் வெறும் ஆதாரமற்ற நம்பிக்கையே.

3. இராமாயணம் தொடர்பாக பெரியார் சில கேள்விகளை முன்வைத்து உள்ளார். அவற்றில் சில.. சில அந்தரங்க கேள்விகளையும் முன் வைத்து உள்ளார், ஆனால் எமது விமர்சன முறைமை அவ்வாறு அல்ல என்பதாலும் கேள்விக்கு தொடர்பில்லாதது என்பதாலும் அவைகளை தவிர்க்கப்பட்டுவிட்டன.

எனவே காலத்திலும் ஏனைய விடயங்களிலும் பல முன்னுக்கு பின் முரணானது இந்த இராமாயண இதிகாசம். இதில் குறிப்பிட்டு உள்ள பல்வேறு பதிப்புகள், தகவல்கள் எல்லாம் இது உண்மைக்கு நெருக்கமாக இல்லை என்பதை விளக்குகிறது.

இப்போ டார்வினின் பரிணாம கொள்கைக்கு வருவோம்.

டார்வினின் பரிணாம கொள்கையை ஏற்க்கும் ஒருவர் படைப்பு கொள்கையை இயல்பாக மறுக்கிறார். மனிதன் நேரடியாக கடவுளால் படைக்கப்பட்டு இருக்கும் பொழுது அமீபாவில் இருந்து பரிணமிக்கும் அவசியம் என்ன? அல்லது பரிணமித்து இருந்தால் கடவுள் எப்படி படைத்து இருப்பார்?

முடிவுரை.

எனவே ஆய்வாளர்களின் கருத்துப்படி இராமாயணம் உண்மை அல்ல. குறைந்த பட்சம் அது கூறும் அமைப்பில் அது நிகழ்ந்து இருக்க வாய்ப்பு இல்லை. அதன் காலம் உண்மை அல்ல. ஏனென்றால் எழுதியவர்கள் கூற்றுப்படியே யாரும் இராமனை அருகில் இருந்து பார்த்து இருக்கவில்லை. இராம பக்தி வளர்க்கப்பட்டதெல்லாம் அப்பட்டமான அரசியல். இன்று மோடி பெரும்பான்மை கிடைக்காத பொழுதே இராமனை கைவிட்டுவிட்டார் மோடி.

அதே போல டார்வினின் பரிணாம கொள்கைக்கு முரணாக பல்வேறு ஆய்வு கட்டுரைகள் வெளிவந்து உள்ளது என்றாலும் அது தொடர்ந்து போதிக்க படுவதின் காரணம் நாத்தீகத்தை பரப்ப விரும்பும் உலக அரசியல் ஆகும்.