அரசியலில் மதம் தலையிட வேண்டிய அவசியம் என்ன?

அரசியலும் மதமும் பிரிந்தது எப்போது? Quora 

திருக்குறள் அரசியல் பேசவில்லையா?

“அறனிழுக்கா தல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு” (குறள் 384)

பொருள்: சமுதாயத்திலுள்ள குடிமக்கள் வாழ்க்கை நன்னிலை பெற செம்மையான நெறிகளை வகுத்து ஆட்சிபுரிதல் அரசின் கடமையாகும். மக்களின் இயல்பையும், தேவைகளையும் உணர்ந்து செயல்படும் செங்கோன்மையாக அறம் தவறாது, அல்லவை நீக்கி அரசானது சமுதாயத்தினை மேன்மையுறச் செய்தல் வேண்டும் என்கிறது கீழ்வரும் குறள்.

முதுமொழிக் காஞ்சி அரசியல் பேசவில்லையா? 

முறை இல் அரசன் நாடு நல்கூர்ந்தன்று. -  (நல்கூர்ந்த பத்து 9:1)
பதவுரை: முறையில் - முறைமையில்லாத; நல்கூர்ந்தன்று - வறுமையுறும் 
பொருளுரை: முறை செய்யாத அரசனுடைய நாடு எந்நாளும் வறுமையுடையதாகும். 

திருமந்திரம் அரசியல் பேசவில்லையா?

நாடொறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாடொறும் நாடி அவன்நெறி நாடானேல்
நாடொறும் நாடு கெடுமுட னண்ணுமால்
நாடொறும் செல்வம் நரபதி குன்றுமே. - (பாடல் 239: முதல் தந்திரம் 13. இராசதோடம் (அரசாட்சி முறை)) 
 

விளக்கம்ஒரு நாட்டுக்கு அரசனாக இருக்கின்றவன் அந்த நாடு முழுவதிலும் தினந்தோறும் தவ வழியில் வாழ்பவர்களுக்கு எந்தவொரு துன்பமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசனுக்கு என்று விதிக்கப்பட்ட நீதியிலும் தர்மத்திலும் சிறிதளவும் பிழை வந்துவிடாமல் தினந்தோறும் நடந்துகொள்ள வேண்டும். இதில் எதை செய்யத் தவறிவிட்டாலும் அவனுடைய நாட்டின் வளம் குன்றும். மக்களிடையே அறியாமை தோன்றும். அந்த நாட்டில் இருக்கும் செல்வங்கள் எல்லாம் தினந்தோறும் குறைந்து கொண்டே வந்து அரசனும் விரைவில் இறந்து போவான்.

திருக்குர்ஆன் அரசியல் பேசவில்லையா?

அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்.அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (குர்ஆன் 4:58)

திருவிவிலியம் அரசியல் பேசவில்லையா?

அரசன் நேர்மையுள்ளவனாக இருந்தால், நாடு பலமுடையதாக இருக்கும். ஆனால் அரசன் சுயநலக்காரனாக இருந்தால் எல்லாவற்றுக்கும் மக்கள் அரசனுக்குப் பணம் செலுத்தவேண்டியதாக இருந்தால், நாடு பலவீனமடையும். - (நீதிமொழிகள் 29:4)  

இவைகள் கூறும் அரசின் மாண்பும், அரசனின் மாண்பும், குடிமக்கள் மாண்பும் பேணப்பட்டால் அதுதான் பொற்காலம். இவைகள் கூறும் அரசியலின் கூறுகளை தனித்தனியாக பிரித்தது இன்று குடியரசு என்றும் பொதுவுடைமை என்றும், சோசியலிசம் என்றும், கேப்பிடலிசம் என்றும் தனித்தனியே முழுமைபெறா சிக்கலான உருக்களாக உலாவருகிறது. இவை அனைத்தின் பண்புகளும் சரியான விகிதத்தில் ஒருங்கே அமையப்பெறும் பொழுதுதான் பொற்கால ஆட்சி நடைபெறும்.

ஆனால் அறநூல்கள் கூறும் நல்ல அரசாட்சியின் பண்புகளை கூறுபோட்டு பிரித்தவர்களின் வாக்குமூலம் இதோ!

முழுமையாக வாசிக்க : Must_Readable.pdf 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக