தெய்வத்தை கற்பனை செய்து வரையறுக்க முடியுமா?

தமிழர் சமயம்

உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்

கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ

திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்

புரையற்றிருந்தான் புரிசடையோனே (திருமந்திரம் 2915)


பொருள்: உரை செய்ய முடியாத ஒன்றை உரை செய்ய முயன்று திணறிப் போய் ஊமையர் போல நிற்பவர்களே, எல்லையற்ற ஒன்றுக்கு கரை எப்படி இருக்கும்? இல்லாத கரையை காண முடியுமா? அவ்வாறு உறையில்லா கடவுளுக்கு உரை செய்ய முடியுமா? அப்படி செய்தால் அந்த உரை கடவுளைக் குறிக்குமா? அலையற்ற தெளிந்த நீரைப்போன்ற அறிவுடையோருக்கு ஒப்பற்றவனாய் இருந்தான் எங்கும் நிறைந்தவன். கடவுளை மனிதர்கள் விருப்பப்படி வரையறுத்து வருணித்து உரை செய்துவிட முடியாது என்பது கருத்தாம்.

பதவுரை: புரைஒத்திரு, போன்றிரு; திரை - அலை; புரி - மிகுந்திரு; சடை - படர்ந்த, விரிந்த; 

கிறிஸ்தவம்

தேவன் எப்படிப்பட்டவர் என்று ஜனங்களால் கற்பனை செய்ய முடியாது: எவற்றோடும் தேவனை ஒப்பிட முடியுமா? முடியாது! தேவனுடைய படத்தை உருவாக்க முடியுமா? முடியாது! - (ஏசாயா 40:18) 

இஸ்லாம்

இதன் பின்னரும் எவரேனும் ஒருவர் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறினால் நிச்சயமாக அவர்கள் அக்கிரமக்காரர்களே ஆவார்கள். (குர்ஆன் 3:94)

மேலும், “எண்ணப்பட்ட சில நாட்களைத் தவிர, (நரக)நெருப்பு எங்களைத் தீண்டவே மாட்டாது” என அவர்கள் கூறுகின்றார்கள்; (அதற்கு நபியே! அவர்களிடம்) நீர் கேளும்: அல்லாஹ்விடம் ஏதேனும் (அவ்வாறு) ஓர் வாக்குறுதியை நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? அவ்வாறாயின், நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வாக்குறுதியில் மாற்றம் செய்யவே மாட்டான்; அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (கற்பனை செய்து) கூறுகின்றீர்களா? - (குர்ஆன் 2:80)

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (குர்ஆன் 4:48)

முடிவுரை 

  • இறைவன் யார்? 
  • அவனது ஆற்றல் என்ன? 
  • அவனது பண்புகள் என்ன? 
  • அவனது பெயர் என்ன? 
  • அவன் எதை விரும்புகிறான்? 
  • யாரை விரும்புகிறான்? 
  • எதை வெறுக்கிறான்? 
  • யாரை வெறுக்கறான்? 
  • அவனது விருப்புக்கும் வெறுப்புக்கும் காரணம் என்ன? 
  • உலகை எப்படி படைத்தான்? 
  • விதியை எப்படி வடிவமைக்கிறான்? 
  • எது அறம்? 
  • எது மறம்?  

போன்றவற்றை மனிதர்கள் கற்பனை செய்து வரையறுக்க முடியாது. அவனது நான்மறைகள் மூலம் அவனே சொன்னவைகளை ஏற்பதுதான் குணமுடைய மனிதன் செய்ய வேண்டிய செயல் ஆகும்!

தர்மம் செல்வத்தை அதிகரிக்கும்.

தமிழர் சமயம்


தாய் இழந்த பிள்ளை, தலை இழந்த பெண்டாட்டி,
வாய் இழந்த வாழ்வினார், வாணிகம் போய் இழந்தார்,
கைத்து ஊண் பொருள் இழந்தார், கண்ணிலவர்க்கு, ஈய்ந்தார்; 
வைத்து வழங்கி வாழ்வார். (ஏலாதி 78)

விளக்கவுரை 

  1. தாயை இழந்த பிள்ளை
  2. தலைமகனை இழந்த பெண்டாட்டி
  3. வாய்ப்பேச்சினை இழந்து ஊமையராய் வாழ்பவர்
  4. வாணிகம் செய்து பொருளை இழந்தவர்
  5. கையில் வைத்துக்கொண்டிருக்கும் பொருளால் உண்ணும் பேற்றினை இழந்தவர்
  6. கண் பார்வையை இழந்தவர்கள்
ஆகியோருக்குக் கொடுத்தவர்கள் தம் கையில் எப்போதும் பொருள் வைத்துக்கொண்டிருப்பவராக வாழ்வார்கள். கொடையாளி கைக்குப் பொருள் வந்து சேரும். 

இஸ்லாம் 


(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை உண்டாகிவிடும் என்று அதைக் கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான். (அல்குர்ஆன் : 2:268)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தர்மம் ஒருபோதும் உங்கள் செல்வத்தை குறைப்பதில்லை. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (முஸ்லிம் 5047
 

கிறிஸ்தவம் 


பிறருக்குக் கொடுங்கள். நீங்களும் பெறுவீர்கள். உங்களுக்கு மிகுதியாக அளிக்கப்படும். உங்கள் கைகளில் கொள்ளமுடியாதபடிக்கு உங்களுக்கு அள்ளி வழங்கப்படும். உங்கள் மடிகளில் கொட்டும்படிக்கு மிகுதியாக உங்களுக்குத் தரப்படும். நீங்கள் பிறருக்குக் கொடுக்கிறபடியே தேவனும் உங்களுக்குக் கொடுப்பார்” என்றார். (லூக்கா 6:38)

கடவுளை கேள்வி கேட்போர் உண்டா? *

இஸ்லாம்


அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது; ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள். (குர்ஆன் 21 : 23) 
 

கிறிஸ்தவம்


“நமது செயல்களையெல்லாம் தேவனால் கட்டுப்படுத்த முடியுமானால் பிறகு ஏன் அவர் நமது பாவங்களுக்காக நம்மைக் குற்றம் சாட்டுகிறார்” என்று உங்களில் ஒருவர் கேட்கலாம். அதைக் கேட்காதீர்கள். நீங்கள் மானிடர். மானிடர்களுக்கு தேவனைக் கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை. ஒரு மண்ஜாடி தன்னைச் செய்தவனிடம் கேள்வி எதுவும் கேட்கக்கூடாது. “என்னை ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று மண்ஜாடி கேட்கலாமா? - (ரோமர்கள் 9:19-20)


அனைத்துக்கும் எஜமான்

தமிழர் சமயம்


அண்ணலை வானவர் ஆயிரம் பேர் சொல்லி
உன்னுவர் உள் மகிழ்ந்து உள் நின்று அடி தொழ
கண் அவன் என்று கருதும் அவர்கட்கு
பண் அவன் பேர் அன்பு பற்றி நின்றானே. - (திருமந்திரம் 8211)

பதப்பொருள்: அண்ணலை (அனைத்திற்கும் எஜமானனாகிய இறைவனை) வானவர் (அடியவர்களாகிய வானவர்கள்) ஆயிரம் (ஆயிரம் விதமான) பேர் (பெயர்களை) சொல்லி (சொல்லி போற்றி) 
உன்னுவர் (தமது எண்ணத்திற்குள் வைத்து நினைந்து) உள் (உள்ளம்) மகிழ்ந்து (மகிழ்ந்து) உள் (தமக்குள்) நின்று (நிற்கின்ற) அடி (அவனது திருவடியை) தொழ (தொழுவார்கள்) 
கண் (தமது கண்ணுக்கு கண்ணாக இருப்பவன்) அவன் (அவனே) என்று (என்று) கருதும் (எண்ணுகின்ற) அவர்கட்கு (அவர்களுக்கு உள்ளே இருந்து) 
பண் (இலயிக்கின்ற இசையைப் போல) அவன் (அந்த இறைவன்) பேர் (மாபெரும்) அன்பு (அன்பு காட்டி) பற்றி (அவர்களை அரவணைத்து) நின்றானே (நிற்கின்றான்).

விளக்கம்: அனைத்திற்கும் எஜமானனாகிய இறைவனை அடியவர்களாகிய வானவர்கள் ஆயிரம் விதமான பெயர்களை சொல்லி போற்றி தமது எண்ணத்திற்குள் வைத்து நினைந்து உள்ளம் மகிழ்ந்து தமக்குள் நிற்கின்ற அவனது திருவடியை தொழுவார்கள். தமது கண்ணுக்கு கண்ணாக இருப்பவன் அவனே என்று எண்ணுகின்ற அவர்களுக்கு உள்ளே இருந்து இலயிக்கின்ற இசையைப் போல அந்த இறைவன் மாபெரும் அன்பு காட்டி அவர்களை அரவணைத்து நிற்கின்றான்.

இஸ்லாம் 


அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் - (குர்ஆன் 1:1)

முதலில் ரப்புல் ஆலமீன் என்ற பண்பை எடுத்துக் கொள்வோம். ரப்பு என்ற சொல்லுக்கு எஜமான், பரிபாலனம் செய்பவன் என்று பொருள். ஆலமீன் என்றால் படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் குறிக்கும். பகுத்தறிவுள்ள, பகுத்தறிவற்ற, உயிருள்ள, உயிரற்ற, சரீரம் உள்ள, சரீரம் அற்ற எல்லவாற்றையும் உள்ளடக்கிக் கொள்ளும் வார்த்தையே ஆலமீன் என்ற சொல்.

அகில உலகையும் பரிபாலனம் செய்பவன் என்பது ரப்புல் ஆலமீன் என்பதன் பொருள்.  

கிறிஸ்தவம் 


ஏனெனில் பூமியும் அதில் உள்ள அனைத்தும் இறைவனுடையது . - (1 கொரிந்தியர் 10:26)

'நிலம், மேலும், நிரந்தரமாக விற்கப்படாது, நிலம் என்னுடையது; ஏனென்றால் நீங்கள் என்னுடன் அந்நியர்களாகவும் வெளிநாட்டவர்களாகவும் இருக்கிறீர்கள். (லேவியராகமம் 25:23)

“ஏனென்றால், காட்டில் உள்ள ஒவ்வொரு மிருகமும், மலைகளில் உள்ள கால்நடைகளும் என்னுடையவை.  - (சங்கீதம் 50:10)

'வெள்ளி என்னுடையது, பொன்னும் என்னுடையது' என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். - (ஆகாய் 2:8)

இதோ, எல்லா ஆத்மாக்களும் என்னுடையவை; தந்தையின் ஆன்மா மற்றும் மகனின் ஆன்மா என்னுடையது. -  (எசேக்கியேல் 18:4)

ஆண்டவரே, உமது செயல்கள் எத்தனை! ஞானத்தில் அவை அனைத்தையும் உண்டாக்கினாய்; பூமி உங்கள் உடைமைகளால் நிறைந்துள்ளது. - (சங்கீதம் 104:24)

"நான் அவருக்குத் திருப்பிச் செலுத்தும்படி எனக்கு யார் கொடுத்தது? வானத்தின் கீழுள்ள அனைத்தும் என்னுடையது. - (யோபு 41:11)

விபச்சாரமும் வறுமையும்

தமிழர் சமயம்


அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும் (நல்வழி வெண்பா : 20)

விளக்கம்: கனமான அம்மியை துணையாகக் கொண்டு ஆற்றில் இறங்கினால் அது நம்மை மூழ்கச்செய்து விடும், அது போல் அழகான மார்பகங்களைக் கொண்டு நம்மை மயக்கும் வேசியுடன் கொண்ட உறவு. அந்த உறவு இந்த பிறவிக்கும் அடுத்து வரும் பிறவிக்கும் நல்லது இல்லை. நம்மிடம் உள்ள அனைத்து செல்வத்தையும் பறித்து நம்மை ஒன்றும் இல்லாத வறுமை நிலைக்கு தள்ளி, நீங்காத துன்பத்தில் ஆழ்த்தி விடும்.

இஸ்லாம்


'விபசாரத்தை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:
1. முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்
2. வருமானத்தை அறுத்துவிடும்
3. ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்
4. நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்' (ஆதாரம் : அத்தபராணி)

கிறிஸ்தவம் 


ஒரு விபச்சாரி உன்னை வறுமையில் தள்ளுவாள், ஆனால் வேறொருவரின் மனைவியுடன் உறங்குவது உங்கள் உயிரை இழக்க செய்யும்- (நீதிமொழிகள் 6:26)