பாலஸ்தீனர்கள்

 கிபி 610ஆம் ஆண்டுதான் இஸ்லாம் என்ற மதம் உருவானது. அதற்கு முன்பு இஸ்ரேல் நிலத்தில் யூத மக்களே இருந்தனர். ஒரு சிறு துண்டு நிலத்துக்காக அப்பாவி உயிர்களைப் பணையம் வைக்காமல் எகிப்து போன்ற இஸ்லாமிய நாடுகளில் பாலஸ்தீனர்கள் அடைக்கலம் தேடலாம் அல்லவா?


இஸ்லாம் புதிய மதமா ?

உலகை பொறுத்த வரை இஸ்லாம் கிபி 610 ஆம் ஆண்டு தோன்றியது.

ஆனால் இஸ்லாத்தை பொறுத்த வரை இஸ்லாம் தான் முதல் மனிதனின் மார்க்கம். இஸ்லாம் தான் இறைவன் ஏற்றுக்கொண்ட மார்க்கம்.

இஸ்லாம் தன்னை "சமயம்" என்று அடையாள படுத்தாமல் "தீன்" அதாவது "மார்க்கம்" அதாவது "வாழும் வழிமுறை" என்று அடையாளப்படுத்துகிறது. அதற்கு காரணம் உலகில் தொடக்கம் முதல் இஸ்லாத்துக்கு முன்பு வரை பல்வேறு வேதங்களும் அது சொல்லும் சமயங்களும் மொழிக்கும், இடத்துக்கும், பாரம்பரியத்துக்கும் ஏற்றவாறு வேறுபட்டு வந்துள்ளது. ஆனால் அதன் அற நெறிகள் எல்லாம் பெரும்பாலும் ஒன்றுதான் என்று கூறும் விதமாகவும் அனைத்து சமயங்களின் தொடர்ச்சியாக இஸ்லாம் இருக்கிறது என்றும் தன்னை தானே அடையாள படுத்துகிறது. அனைத்து வேதங்களும் சமயமும் வழங்கப்பட்ட இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கம் தான் இஸ்லாம் என்று கூறுகிறது.

  • 3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.
  • 2:120. (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.
  • 3:85. இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
  • 49:17. அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால், உமக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; “நீங்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால் எனக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதாதீர்கள்; எனினும், நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் ஈமானின் நேர் வழியில் உங்களைச் சேர்த்ததனால் அல்லாஹ் தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கிறான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

இஸ்லாம் என்றே பெயரில் இந்த மார்க்கம் 610 லிருந்து அடையாள படுத்தப்பட்டு இருக்கலாம் ஆனால் இதுதான் முதல் மனிதனின் மார்க்கம், கால இட மொழி வேறுபாடின்றி அனைவரின் மார்க்கம் ஆகும்.

உயிரை காக்க வேறு நிலத்துக்கு குடிபெயர வேண்டுமா ?

முதலில், ஆரம்பத்தில் இருந்தவர்கள் தான் இஸ்ரேலில் இருக்க வேண்டும் என்றால், யூதர்கள் எகிப்திலிருந்து இஸ்ரேலுக்கு வருவதற்கு முன்பு அங்கு யார் இருந்தார்களோ அவர்களுக்குத்தான் அந்த இடம் சொந்தம். அந்த வகையில் அந்த இடம் காணான் மக்களுடையது (the ancient Canaanites). அவர்கள் தான் பின்னாளில் இஸ்லாத்தை ஏற்று முஸ்லீம் ஆனார்கள் என்ற கருத்தும் உண்டு. இவர்களுக்கும் யூதர்களுக்கும் காணான் மக்கள் தான் மூதாதையர்கள் ஆவார்கள் என்ற கருத்தும் உண்டு. எப்படி பார்த்தாலும் அவர்கள் அந்த இடத்தின் பூர்வ குடிகள். யூதர்களைவிட அல்லது யூதர்களுக்கு இணையான உரிமை உடையவர்கள்.

இரண்டாவது, வரலாற்றில் ஒவ்வொரு முறையும் அந்நிய படையெடுப்பின் பொழுது வெளியேறிய யூதர்களுக்கு இன்று அந்த இடம் சொந்தமாகும் ஆனால் எப்பொழுதும் எதிரிகளை எதிர்த்து சண்டையிட்டு அங்கேயே நிலைத்து இருந்த கூட்டம் இப்பொழுது வேறு நாட்டில் அடைக்கலம் புக வேண்டும். எல்லா அறத்தையும் மீறும் ஒருவனை விடுத்து, பாதிக்கப்படுபவர்களுக்கு ஆலோசனை சொல்லும் இந்த தர்க்கம் என்ன மாதிரியானது?

மூன்றாவது, நமது இடம் ஆக்கிரமிக்கப்பட்டால் நாம் வேறு இடத்துக்கு அடைக்கலம் பெயரவேண்டும் என்பது சரியான தர்க்கம் என்றால் இந்த நாடு வரலாற்றில் பல தேசத்தவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சமீபமாக வெள்ளையர்கள் 200 ஆண்டாக ஆண்டபொழுது நாம வேறு நாட்டுக்கு குடி பெயரவில்லை. சண்டை செஞ்சோம். நிலம் சிறு துண்டோ கைப்பிடி அளவோ அது அவர்களுடையது, புலம்பெயரும் விடயத்திலும் முடிவெடுக்கும் உரிமை அவர்களுடையது.

நான்காவது, அநீதி இழைக்கப்பட்டவன் இஸ்லாமியராக இல்லை என்றாலும் அவரது பிராத்தனை வலிமையானது என்று இஸ்லாம் கூறுகிறது. எனவே அவர்களது பிராத்தனை அவர்களுக்கு நிச்சயம் பதில் தரும் என்று நம்புகிறார்கள்.

  • அல்லாஹ்வின் உதவியில் உறுதியுடன் இருக்கும் இத்தகைய அநீதி இழைக்கப்பட்டோரின் பிரார்த்தனைகளை அல்லாஹ் எவ்வித தடையுமின்றி ஏற்றுக்கொள்கிறான். ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், ஐந்து வகையான துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படுகின்றன. அவற்றில் அநீதி இழைக்கப்பட்டவரின் துஆவும் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: பைஹகீ)
  • நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முஆஹிதை (முஸ்லிம் ஆட்சியின் கீழ் வாழும் முஸ்லிமல்லாதவர்) கொல்பவர், நாற்பது ஆண்டுகள் தூரத்தில் இருந்தாலும் உணரப்படும் சொர்க்கத்தின் வாசனையை கூட உணரமாட்டார்.அல்-புகாரி (3166).

ஐந்தாவது, இந்த இடம் யாருடையது என்பது பற்றிய மற்றும் இந்த யுத்தம் பற்றிய தீர்க்கதரிசனங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? யூதர்கள் சுமேரியாவிலிருந்து வந்தவர்கள். 

இன்றைய ஈராக்கில் இருந்து எகிப்துக்கு அடிமையாக சென்று கிமு 1200 களில் இன்றைய பாலஸ்தீனத்திற்கு குடி பெயர்ந்தவர்கள் தான் யூதர்கள்

யூதர்கள் பாவிகளா?

ஆம், என்று நாங்கள் கூறவில்லை. அவர்களின் வேதமும் அவர்களின் ஒப்புதல் வாக்குமூலமும் அதை உறுதி படுத்துகிறது.

இந்த யுத்தம் பற்றிய முன்னறிவிப்பு?

சஹீஹ் முஸ்லிமில் (2922), அபு ஹுரைராவின் ஹதீஸிலிருந்து அல்லாஹ்வின் தூதர் ஸல் கூறினார்கள்: “முஸ்லிம்கள் யூதர்களுடன் சண்டையிடும் வரை மற்றும் முஸ்லிம்கள் கொல்லும் வரை நேரம் தொடங்காது. ஒரு யூதர் ஒரு பாறை அல்லது மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளும் வரை, பாறை அல்லது மரம் கூறும்: ஓ முஸ்லீம், அல்லாஹ்வின் அடிமை, எனக்குப் பின்னால் ஒரு யூதர் இருக்கிறார், அவரைக் கொல்லுங்கள். கர்காத் (முட்கள் நிறைந்த மரம்) தவிர, அது யூதர்களின் மரங்களில் ஒன்றாகும்.

இது அந்த யுத்தமா என்று தெரியாது ஆனால் அதன் ஒரு பகுதி என்பதில் ஐயம் இல்லை. 

எகிப்து போன்ற இசுலாமிய நாடுகளில் குடியேறலாமே?

போரின் ஆரம்பத்தில், எகிப்தின் அரசாங்கம் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும் வலுக்கட்டாயமாக இடப்பெயர்ச்சிக்கு எதிராகவும் பொதுப் போராட்டங்களுக்கு கூட சுருக்கமாக அழைப்பு விடுத்தது. அதே நேரத்தில் எகிப்து போருக்கு இழுக்கப்படுவதை விரும்பவில்லை.

எகிப்து மட்டுமல்ல வேறு எந்த இஸ்லாமிய நாடுகளும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் இவர்களை ஏற்க்காது. ஈழத்தமிழர்களை இந்தியா ஏற்காதது போல.

ஒருவேளை இவர்களை பாதுக்காக்க கருதினால் அவர்களுக்கு ஆதரவாக யுத்தத்தில் தான் இறங்கும் ஈரான் போல, ஏமன் போல. அது பிராந்திய பதட்டத்தை மட்டுமல்லால் உலக அளவில் பதட்டத்தை ஏற்படுத்தும். பதட்டத்தை மட்டுமல்ல அழிவை ஏற்படுத்தும்.

முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக

 குர்ஆன் வசனம் 8:65 "நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக…" (முஃமின் என்றால் நம்பிக்கையுள்ள முஸ்லிம் என்று பொருள்). இவ்வாறு வன்முறையைத் தூண்டும் இஸ்லாம் எப்படி அமைதி மார்க்கமாக முடியும்?

போருக்கு ஆர்வமூட்டுவது இஸ்லாம் மட்டும்தானா?

தமிழர் சமயம்

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்

வெறுக்கையுள் எல்லாம் தலை. (குறள்: படைமாட்சி - 761)

உரை: எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த

போர்தாங்கும் தன்மை அறிந்து. (குறள்: 767)

தன் மேல் எதிர்த்து வந்த பகைவரின் போரைத்தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து அவனுடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.

சனாதனம்

அந்தவந்த இமே தே³ஹா நித்யஸ்யோக்தா: ஸ²ரீரிண:|
அநாஸி²நோऽப்ரமேயஸ்ய தஸ்மாத்³யுத்⁴யஸ்வ பா⁴ரத ||கீதை 2-18||

பொருள்: ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: “ஆத்மா நித்தியன்; அழிவற்றான்; அளவிடத்தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள் இறுதியுடையன என்பர். ஆதலால் பாரதா, போர் செய்.

கிறிஸ்தவம் / யூதம்

16 ஆனால், தேசங்களின் நகரங்களில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிறார், சுவாசிக்கும் எதையும் உயிருடன் விடாதீர்கள். 17 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஏத்தியர்கள் , எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள் மற்றும் எபூசியர்களை முற்றிலும் அழித்துவிடுங்கள். 18 இல்லையேல், தங்கள் தெய்வங்களை வணங்குவதில் அவர்கள் செய்யும் எல்லா அருவருப்பான செயல்களையும் பின்பற்றும்படி அவர்கள் உங்களுக்குக் கற்பிப்பார்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்வீர்கள். - (உபாகமம் 20:16-18)

எனவே சமயங்கள் அனைத்தும் அரசியலையும் போதிப்பதால், அதில் போருக்கு வரும் எதிரிகளை கையாளும் விதிகளையும் கூறுகிறது. இக்கேள்வி யின் மூலமான குர்ஆன் 8:65 என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.

8:65. நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக; உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்).

சரி இந்த வசனத்தின் சூழலை அறிவோம் வாருங்கள்!

8:58. (உம்முடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்தக் கூட்டத்தாரும் மோசம் செய்வார்கள் என நீர் பயந்தால். (அதற்குச்) சமமாகவே (அவ்வுடன் படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடும்; நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை.

8:60 அவர்களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.

8:61 அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து (இணங்கி) வந்தால், நீங்களும் அதன் பக்கம் சாய்வீராக! அல்லாஹ்வின் மீதே உறுதியான நம்பிக்கை வைப்பீராக - நிச்சயமாக அவன் (எல்லாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

8:62 அவர்கள் உம்மை ஏமாற்ற எண்ணினால் - நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவன் - அவன் தான் உம்மைத் தன் உதவியைக் கொண்டும், முஃமின்களைக் கொண்டும் பலப்படுத்தினான்.

நபிகளார் காலத்தில் எதிரிகள் போட்ட உடன்படிக்கையை மீறுவார்கள் என்று அறியும் பொழுதும், அவர்கள் சமாதானத்துக்கு வர மாட்டார்கள் என்ற நிலையில் போருக்கு ஊக்குவிக்கும்படி இந்த வசனம் சொல்கிறது.

எவன் வேடுமானாலும் அடிக்கட்டும், உங்களுடன் போடும் ஒப்பந்தத்தை மீறட்டும் ஆனால் நீங்க அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறினால் அதற்க்கு பெயர் தான் அமைதி மார்கமோ? அப்படி பார்த்தால் உலகில் எக்காலத்திலும் அமைதியான சமயம் மட்டுமல்ல, அமைதியான அரசாங்கமும் கிடையாது.

முத்தொழில் செய்வோன் - படைத்தல் காத்தல் அழித்தல்

தமிழர் சமயம் 

சிவனே முத்தொழிலையும் செய்பவன் - அழிப்பவன் மட்டுமல்ல

நின்றனன் மூன்றினுள் - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து)

பொருள்: நின்றனன் மூன்றினுள் என்பது ஒடுக்க காலத்தும் (அழித்தல்) அனுபவ காலத்தும் (காத்தல்) செயற்படுங்காலத்தும் (படைத்தல்) அவற்றுள் நிற்பவன் என்றார். எனவே மூன்றுக்கும் வெவ்வேறு இறைவன் இல்லை, இருப்பதாக சொல்லும் சித்தாந்தம் மனித ஏற்பாடு இறைவன் ஏற்பாடு அல்ல.

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே. - (திருமந்திரம் 404)

பொழிப்புரை : உலகு ஏழையும் படைத்தவனும், அவற்றுக்கு வேண்டியன அளிப்பவனும், தருணம் வரும் பொழுது துடைத்து அழிப்பவனும், உலகில் உள்ள அனைத்துக்கும் உயிர் கொடுத்தவனும் ஒருவன் தானே.

இஸ்லாம்  

''அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.' .(திருக்குர்ஆன் 30:40

அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான் - (அல்குர்ஆன் 39:62) 

மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை; அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள் - (அல்குர்ஆன் 35:3) 
 
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; உங்களை மீண்டும் உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். 
(அல்குர்ஆன் 2:28)

வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; (அவனே) உயிர் கொடுக்கிறான்; (அவனே) மரணிக்கும்படியும் செய்கிறான் - அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு வேறு பாதுகாவலரும் இல்லை, உதவியாளரும் இல்லை  (குர்ஆன் 9:116)

கிறிஸ்தவம் / யூதம் 

தேவன் ஏழாவது நாளை ஆசீர்வதித்து அதனைப் பரிசுத்தமாக்கினார். அவர் அன்றைக்குத் தமது படைப்பு வேலைகளையெல்லாம் நிறைவு செய்துவிட்டதால் அந்த நாள் சிறப்புக்குரியதாயிற்று. - ஆதியாகமம் 2:3

 25 ,“எனவே, நான் சொல்கிறேன், நீங்கள் உயிர்வாழத் தேவையான உணவிற்காகக் கவலை கொள்ளாதீர்கள். உங்கள் உடலுக்குத் தேவையான உடைக்காகவும் கவலைகொள்ளாதீர்கள். உணவைவிடவும் முக்கியமானது ஜீவன். உடையைவிடவும் முக்கியமானது சரீரம். 26 பறவைகளைப் பாருங்கள். அவைகள் விதைப்பதோ அறுவடை செய்வதோ களஞ்சியங்களில் சேமித்து வைப்பதோ இல்லை. ஆனால் உங்கள் பரலோகப் பிதா அவைகளுக்கு உணவளிக்கிறார். பறவைகளை காட்டிலும் நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என நீங்கள் அறிவீர்கள். 27 கவலைப்படுவதினால் உங்களால் உங்கள் வாழ்நாளைக் கூட்ட இயலாது. (மத்தேயு 6)

அழுங்கள், ஏனெனில் ஆண்டவரின் நாள் நெருங்கிவிட்டது. அது சர்வவல்லவரிடமிருந்து அழிவாக வரும்.  (ஏசாயா 13:6)

முடிவுரை  

படைக்கவும், காக்கவும், அழிக்கவும் வெவேறு கடவுள்கள் அல்ல. அனைத்தையும் செய்ய இருக்கும் ஒரே இறைவன் சக்திபெற்றவன்.   

முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள் - குர்ஆன்

 குர்ஆன் 9:5 "...முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள்..." - இப்படி பிற மதத்தினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் இஸ்லாம் அமைதி மார்க்கமா?


குர்ஆன் 9:5 செய்தியின் முழு வரிகளை வாசிப்போம்.

9:4. ஆனால், நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில், எதையும் குறைத்துவிடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர: அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.

9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

9:6. (நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக; அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.

ஒப்பந்தம் போட்டு அதன் படி நடக்காத அதை மீறும் மக்களை பற்றி பேசுகிறது இந்த வசனம். அவர்களையும் புனிதமான மாதங்களில் ஒன்றும் செய்யக்கூடாது அவைகள் முடிந்த பின்பு போர் புரிய சொல்கிறது. அவர்கள் மனம் திருந்தினாலும் ஒன்றும் செய்யக்கூடாது என்கிறது. அவர்களில் கூட யாராவது அடைக்கலம் என்று வந்துவிட்டால் அவர்களை பாதுகாக்க சொல்கிறது இஸ்லாம்.

சமகாலத்தில் ஒரு அரசு எதிரிகளின் யாரேனும் அடைக்கலம் தேடி வந்தால் சிறையில் அடைத்து கொடுமை செய்யுமா? அல்லது பாதுகாத்து பத்திரமாக அனுப்பி வைக்குமா? எதிரிகளில் யாரேனும் மணம் திருந்தினால் அவர்களை மண்ணிக்குமா அல்லது தண்டனையை நிறைவேற்றுமா?

முஸ்லீம் அலலத்தவர் எல்லோருடனும் போரா?

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 2:190)

(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை (குர்ஆன் 2:191)

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். (திருக்குர்ஆன் 60:8)

மேலும் இது ஒரு தனி மனிதனுக்கு வழங்கப்பட்ட உரிமைகளோ சட்டங்களோ அல்ல. இது ஒரு நாடு, அதன் அரசாங்கம், அதன் அதிகாரிகள், அதன் படைகளுக்கு வழங்கப்பட்ட சட்டங்கள்.

எந்த நாட்டில் இதுபோன்ற சட்டங்கள் இல்லை? இந்திய அரசாங்கம் சீனாவோ பாக்கிஸ்தானோ போருக்கு வரும்பொழுது நாங்கள் அமைதியான நாட்டை சேர்ந்தவர்கள் எனவே நீங்கள்

  • எங்களை அடித்தாலும்,
  • கொலை செய்தாலும்,
  • எங்களது சொத்துக்களை பிடுங்கினாலும்,
  • எங்களது பெண்களை கற்பழித்தலும்,
  • எங்களை நாட்டை விட்டு வெளியேற்றினாலும்

நாங்கள் அமைதியாக இருப்போம் என்று கூற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா? அந்த எதிர்பார்ப்பு சரியா?

இவ்வாறு அத்து மீரும் எதிரிகளிடம் செய்யும் போரிலும் பல கட்டுப்பாடுகளை வைத்துள்ளது இஸ்லாம்.

  • கொல்லப்பட்ட எதிரிகளின் உடலை சிதைக்க கூடாது
  • பெண்களை, குழந்தைகளை, வயதானவர்களை, அவர்களின் மதகுருமார்களை கொல்லாக்கூடாது
  • மரங்களை, சொத்துகளை நாசம் செய்ய கூடாது
  • போருக்கு வராத பெண்களை சிறைபிடிக்கப்பட்ட கூடாது, வருவோர்களை கர்ப்பழிக்க கூடாது, விரும்பினால் அவரின் அனுமதியோடு மணமுடிக்கலாம்.

இவ்வாறு இந்திய இராணுவம் கற்பனை கூட செய்யாத பல ஆச்சரியமிக்க கட்டுப்பாடுகளை விதித்ததுடன் அதை நடைமுறை படுத்தியும் காட்டியது.

மேலும் இது இஸ்லாத்தில் மட்டுமில்லை. இஸ்லாம் உலக வேதங்கள் அனைத்தும் ஏக இறைவனிடத்தில் இருந்து வந்தது என்று சொல்கிறது. அந்த அடிப்படையில் பார்த்தால் எல்லா சமயங்களிலும் இந்த கருத்து உள்ளது.

கிறிஸ்தவம் & யூதம்:

16 ஆனால், தேசங்களின் நகரங்களில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிறார், சுவாசிக்கும் எதையும் உயிருடன் விடாதீர்கள். 17 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஏத்தியர்கள் , எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள் மற்றும் எபூசியர்களை முற்றிலும் அழித்துவிடுங்கள். 18 இல்லையேல், தங்கள் தெய்வங்களை வணங்குவதில் அவர்கள் செய்யும் எல்லா அருவருப்பான செயல்களையும் பின்பற்றும்படி அவர்கள் உங்களுக்குக் கற்பிப்பார்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்வீர்கள். - (உபாகமம் 20:16-18)

தமிழர் சமயங்கள்

இன்னும் தமிழர் சமயங்களில் புறநானூறு, குறள் உள்ளிட்ட நூல்கள் அரசு மற்றும் போர் பற்றி என்ன சொல்கிறது என்று வாசித்து அறியவும். அந்த அரசர்கள் அறத்தின்கண் நின்று அறத்துக்காக மற்றவர்களை பகைத்தவர்கள் ஆவார்கள் . ஆறாம் என்பது அக்கலாத்தில் சமயமே .

வேதத்தை விட்ட அறமில்லை - திருமந்திரம்.

நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி - 
புறநானூறு

வடநாட்டார் தூங்கார்!

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல

இரு குடை பின்பட ஓங்கி ஒருகுடை

உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க,

5 நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப்

பாசறை யல்லது நீயல் லாயே;

நுதிமுகம் மழுங்க மண்டி ஒன்னார்

கடிமதில் பாயும்நின் களிறுஅடங் கலவே;

போர்எனில் புகலும் புனைகழல் மறவர்

10 காடிடைக் கிடந்த நாடுநனி சேய;

செல்வேம் அல்லேம் என்னார்; கல்லென்

விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்

குணகடல் பின்ன தாகக் குடகடல்

வெண்தலைப் புணரிநின் மான்குளம்பு அலைப்ப

15 வலமுறை வருதலும் உண்டுஎன்று அலமந்து

நெஞ்சுநடுங்கு அவலம் பாயத்

துஞ்சாக் கண்ண வடபுலத்து அரசே. - புறநானூறு

உரை: அறத்தின் சிறப்பினால், பொருளும் இன்பமும் அறத்தின் பின்னதாகக் கருதப்படுவதுபோல், சேர பாண்டியருடைய கொற்றக்குடைகள் பின் வர உன் கொற்றக்குடை அழகிய திங்களைப்போல் வெகு தொலைவில் உயர்ந்து விளங்குகிறது. நல்ல புகழை விரும்பி, உன் தலைநகராகிய பூம்புகாரில் இல்லாமல், நீ வெற்றிதரும் போர்ப்பாசறையிலேயே உள்ளாய். உன் யானைகள், அவற்றின் தந்தங்களின் நுனிகள் மழுங்குமாறு பகைவர்களின் காவலுடைய மதில்களைக் குத்தித் தாக்கியும் அடங்காமல் உள்ளன. போர் என்று கேள்விப்பட்டவுடன் உன் படை வீரர்கள், வீரக்கழல்கள் அணிந்து, போருக்குப் புறப்படுகிறார்கள். பகைவர்களின் நாடு காட்டுக்கு நடுவே, மிகவும் தொலைவில் இருந்தாலும் அங்கே செல்லமாட்டோம் என்று அவர்கள் சொல்லமாட்டார்கள். பகைவர்களின் நாட்டில் ஆரவாரமாக வெற்றிவிழா கொண்டாடிக், கிழக்குக் கடற்கரையிலிருந்து கிளம்பிய உன் குதிரைகளின் குளம்புகளை மேற்குக் கடலின் வெண்ணிற அலைகள் அலம்ப, நீ நாடுகளை வலம் வருவாயோ என்று வடநாட்டு மன்னர்கள் வருந்தி, நெஞ்சம் நடுங்கி உறக்கமின்றி உள்ளனர்.

உன் கொள்ளையால் வளநாடும் வற்றிவிடும்!

களிறு கடைஇயதாள்

கழல்உரீஇய திருந்துஅடிக்

கணைபொருது கவிவண்கையால்

கண்ஒளிர்வரூஉம் கவின்சாபத்து

5 மாமறுத்த மலர்மார்பின்

தோல்பெயரிய எறுழ்முன்பின்

எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்

ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்

கொள்ளை மேவலை ஆகலின், நல்ல

10 இல்ல ஆகுபவால், இயல்தேர் வளவ!

தண்புனல் பரந்த பூசல் மண்மறுத்து

மீனின் செறுக்கும் யாணர்ப்

பயன்திகழ் வைப்பின்பிறர் அகன்றலை நாடே. - புறநானூறு

உரை: யானையைச் செலுத்திய கால்களும் வீரக்கழல்கள் உராய்ந்த அடிகளும், அம்பு தொடுத்துக் குவிந்த கையும், கண்ணைக் கவரும் ஒளியுடன் கூடிய வில்லும், திருமகள் விரும்பும் அகன்ற மார்பும், யானையை வெல்லும் வலிமையும் உடையவனே! இரவு பகல் என்று கருதாமல் பகவரின் ஊரைச் சுடும் தீயின் ஒளியில், அங்குள்ளவர்கள் கதறி அழுது ஒலி யெழுப்பமாறு அவர்கள் நாட்டைக் கொள்ளை அடிப்பதில் நீ விருப்பமுடையவன். ஆகவே, குளிர்ந்த நீர் பெருகியோடும் உடைப்புகளை மண்ணால் அடைக்காமல் மீனால் அடைக்கும் புதிய வருவாயினையுடைய பயனுள்ள ஊர்களையுடைய அகன்ற இடங்களுடன் கூடிய உன் பகவர்களின் நாட்டில் நல்ல பொருள்கள் இல்லாமல் போயின. நன்கு செய்யப்பட்ட தேர்களையுடைய வளவனே!

தண்டனை யாருக்கு ?

வழிபடு வோரை வல்லறி தீயே;

பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;

நீமெய் கண்ட தீமை காணின்

ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;

5 வந்து, அடி பொருந்தி முந்தை நிற்பின்

தண்டமும் தணிதிநீ பண்டையிற் பெரிதே;

அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்

வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை

மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்

10 மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப;

செய்து இரங்காவினைச் சேண்விளங் கும்புகழ்

நெய்தலங் கானல் நெடியோய்!

எய்த வந்தனம்யாம் ஏத்துகம் பலவே. - புறநானூறு

உரை: உன்னை வழிபடுவோரை (கட்டுப்படுவோரை) நீ விரைவில் அறிவாய். பிறர்மீது குற்றம் கூறுவோர் சொல்லை நீ ஏற்றுக் கொள்ள மாட்டாய். உண்மையிலே ஒருவன் செய்தது தவறு (தீமை) என்று நீ கண்டால் நீதி நூலுக்கு ஏற்ப ஆராய்ந்து தகுந்த முறையில் அவனைத் தண்டிப்பாய். தவறு செய்தவர்கள், உன் முன்னர் வந்து அடிபணிந்து நின்றால் நீ முன்பு அளித்த தண்டனையைப் பெரிதும் குறைப்பாய். அமிழ்தத்தைச் சேர்த்துச் சமைத்தது போல் உண்ணத் தெவிட்டாத மணம் கமழும் தாளிதத்தோடு கூடிய உணவை வருவோர்க்கு குறைவின்றி வழங்கும் பழியற்ற இல்வாழ்க்கை நடத்தும் உன் மகளிர் ஊடல் செய்வதன்றி, பகை வேந்தர் உன்னோடு போர் செய்வதில்லை. வானவில் போன்ற மாலையை அணிந்த மார்பையுடையவனே! வருந்தத்தக்க செயலைச் செய்யாத தன்மையும், பரந்த புகழும் உடையவனே! நெய்தலங்கானம் என்னும் ஊரைச் சார்ந்த பெரியோனே! யாம் உன்னை அணுகி வந்தோம். உன்னைப் பலவாறாகப் புகழ்கிறோம்.

எதிரி நாட்டினருக்கு எச்சரிக்கை

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்

5 எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்என

அறத்துஆறு நுவலும் பூட்கை மறத்தின்

கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்

எங்கோ வாழிய குடுமி; தங்கோச்

செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த

10 முந்நீர் விழவின் நெடியோன்

நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே. - புறநானூறு

உரை: ”பசுக்களும், பசுபோன்ற இயல்புடைய பார்ப்பன மக்களும், பெண்டிரும், பிணியுடையோரும், இறந்தவர்களுக்கு இறுதிக் கடன் செய்வதற்கு நல்ல புதல்வர்கள் இல்லாத ஆண்களும் பாதுகாவலான இடத்தைச் சென்றடையுங்கள். விரைவில் எங்கள் அம்புகளை ஏவப் போகிறோம் என்று அறநெறி கூறும் கொள்கை உடையவனே! கொல்கின்ற வலிய யானையின் மேல் உள்ள உன் கொடி வானில் நிழல் பரவச் செய்கிறது. எங்கள் அரசே! குடுமி! நீ வாழ்க! செம்மையான உயர்ந்த பொன்னைக் கூத்தர்க்கு அளித்துக் கடல் விழா எடுத்த உன் முன்னோன் நெடியோனால் உண்டாக்கப்பட்ட பஃறுளி ஆற்று மணலினும் பல காலம் நீ வாழ்க!

சனாதன மதம்

சனாதன நூல்களான கீதையும் ரிக் வேதங்கள் எல்லாம் போரை பிரதானமாக பேசும் நூல்கள் ஆகும்.

போர் புரிய மனம் வராமல் திகைத்துத் தன்னைச் சரணடைந்த அர்ஜுனனை நோக்கிக் கண்ணன் உரைக்கின்றான்:- “அர்ஜுனா, நீ வருந்துவது முற்றிலும் தவறு. எதிரிகளின் ஆன்மாவைப் பற்றி வருந்துகின்றாயா? அல்லது அவர்களின் உடலைப் பற்றி வருந்துகின்றாயா? இரண்டும் சரியல்ல. ஆன்மா என்றும் அழிவற்றது. அதைக் கத்தியால் வெட்டவும், தீயினால் எரிக்கவும் முடியாது. உடலோ அழியும் இயல்பு வாய்ந்தது. நீ அழிக்காவிடினும் அது தானே அழிய வேண்டியதுதான். ஆன்மாவுக்கு ஓருடல் அழிந்ததும், மற்றோருடல் தானே வந்து சேரும். ஆன்மாவின் இயற்கையை எண்ணி உனக்கு ஏற்படுத்தப்பட்ட செயல்களை நீ செய்தே தீரவேண்டும். அச்செயல்களைச் செய்யுங்கால், நாம் செய்ய வேண்டியதைச் செய்கிறோம். அதுவும் ஈசுவரப் பிரீதிக்காகவே என்று எண்ணிச் செய். இதனால் ஆத்மஞானம் பெருகி, அதில் நிலைபெற்று நற்கதியடைவாய். ஈசுவர பிரீதியைத் தவிர மற்ற பலனைக் கோரினால் சம்சாரக்கட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது.” சஞ்ஜயன் சொல்லுகிறான்: - கீதை

ஸஞ்ஜய உவாச
தம் ததா² க்ரிபயாவிஷ்டமஸ்²ருபூர்ணாகுலேக்ஷணம்|
விஷீத³ந்தமித³ம் வாக்யமுவாச மது⁴ஸூத³ந: ||2-1||

பொருள்: அவ்வண்ணம் இரக்க மிஞ்சியவனாய் நீர் நிரம்பிய சோக விழிகளுடன் வருந்திய அர்ஜுனனை நோக்கி மதுசூதனன் சொல்லுகிறான்

ஸ்ரீப⁴க³வாநுவாச
குதஸ்த்வா கஸ்²மலமித³ம் விஷமே ஸமுபஸ்தி²தம்|
அநார்யஜுஷ்டமஸ்வர்க்³யமகீர்திகரமர்ஜுந ||2-2||

பொருள்: ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த முட்டுதலில் இவ்வுள்ளச் சோர்வை நீ எங்கிருந்து பெற்றாய்? இஃது ஆரியருக்குத் தகாது. வானுலகைத் தடுப்பது; அபகீர்த்தி தருவது அர்ஜுனா!

ஸஞ்ஜய உவாச
ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஸ²ம் கு³டா³கேஸ²: பரந்தப:|
ந யோத்ஸ்ய இதி கோ³விந்த³முக்த்வா தூஷ்ணீம் ப³பூ⁴வ ஹ ||2-9||

பொருள்: சஞ்ஜயன் சொல்லுகிறான்: “பகைவரைக் கொளுத்தும் பார்த்தனங்கு பசுநிரை காக்கும் பகவனை நோக்கிப் போரினிப் புரியேன்’ என்று வாய்புதைத்திருந்தான்.”

அந்தவந்த இமே தே³ஹா நித்யஸ்யோக்தா: ஸ²ரீரிண:|
அநாஸி²நோऽப்ரமேயஸ்ய தஸ்மாத்³யுத்⁴யஸ்வ பா⁴ரத ||2-18||

பொருள்: ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: “ஆத்மா நித்தியன்; அழிவற்றான்; அளவிடத்தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள் இறுதியுடையன என்பர். ஆதலால் பாரதா, போர் செய்.

முடிவுரை:

எனவே போரை நியாயப்படுத்தாத, எதிரிகளை கொல்ல சொல்லாத எந்த வேதமும் இல்லை எனலாம். அதற்க்கெல்லாம் தக்க காரணமும் சூழ்நிலையும் உள்ளது. மேலும் போருக்கென்று நெறியையும் வகுத்து தந்துள்ளது. ஆனால் இதுவெல்லாம் சும்மா வீட்டில் இருக்கும் அலல்து தவறு செய்யாத மக்கள் மீது பிரயோக படுத்த சொல்லவில்லை. மேலும் சமகாலத்த்தில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல வேத அறிவில்லாத அப்பாவிகளை தூண்டிவிட்டு கும்பலாய் சேர்ந்து இன்னொரு அபபவியை அடித்து கொலை செய்யும் நிலைக்கு வெறுப்புகளை விதைக்க தவறாக பயன்படுத்தப்பட்ட வசனங்கள் இவைகள். இது அரசாங்கங்களுக்கு படைகளுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள் ஆகும்.

அனைத்து வேதமும் ஒரே இறைவனிடத்தில் இருந்து வந்தது, அனைத்து வேதமும் ஒரே இறைவனைப்பற்றி தான் பேசுகிறது. எனவே வெறுப்பை விடுத்து உண்மை ஆன்மீகத்தை பற்றிய சில அடிப்படைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதற்க்கு வாசிக்க வாய்மை