தமிழர் சமயம்
மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்ஞாலம் அறியவே நந்தி அருளதுகாலை எழுந்து கருத்தறிந் தோதிடின்ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே. (பாடல் எண் : 36)
பொருள்: நந்தியின் உதவியினால் திருமூலர் மூலம் தமிழில் 3000 பாடல்கள் உலக மக்கள் அறிவதற்காக வழங்கப்பட்டது. அதை கருத்து அறிந்து ஒதிடின் உலகத்தின் இறைவனை பொருந்திகொள்ளலாமே
நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரந்தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே. - (திருமந்திரம் 147)
(ப. இ.) நான் பெற்ற இன்பத்தை இந்த உலகம் பெறவேண்டும். வானிலிருந்த மறை பொருளை இவ்வையக மக்களுக்கு சொல்லவில்லை என்றால் அது தவறு. இந்த உடலை பற்றி உணர்வுடைய திருமந்திரத்தை பற்ற பெற்ற அதாவது அதை ஓத ஓத நமக்கு அதன் விளக்கங்கள் புரியும். அதுவே இந்த உலக மக்களின் இன்பத்துக்கு காரணமாக அமையும்.
வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்ஓதத் தகும்அறம் எல்லாம் உள தர்க்கவாதத்தை விட்டு மதிஞர் வளமுற்றவேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே.(பாடல் எண் : 51)
பொருள்: வேதத்தை ஓதி வீடு பெற்றனர்! வேதத்தில் நாம் ஓதத்தக்க நீதிகள் எல்லாம் உள்ளன. எனவே தர்க்கவாதத்தை விட்டு வேதத்தை ஓதி அனுபூதி மான்கள் முக்தி பெற வேண்டும்.
இஸ்லாம்
அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்: 4:82)
கிறிஸ்தவம்
இதில் எழுதியிருக்கிறவைகளின் படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய். - (யோசுவா 1:8)

