இவர்களால் வன்முறையை விட்டுவிட்டு வாழமுடியதா?

ஹிந்துக்களாகும் முன் சைவம், வைணவம், சமணம் மற்றும் புத்தம் என்று ஒருவருக்கொருவர் வன்முறைகளை செய்துகொண்டிருந்தவர்கள் இன்று முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஏன்? இவர்களால் வன்முறையை விட்டுவிட்டு வாழமுடியதா?

  • தெற்கில் இருந்த சைவம் வைணவம் சமணம் மட்டுமல்ல,
  • மேற்கில் உள்ள யூதம் கிறிஸ்தவம் இஸ்லாம் போன்ற சமயங்களுக்கும்,
  • வடக்கே இருந்த வேத மதம், புத்தம் Tengris சமயங்களுக்கும்,
  • கிழக்கில் இருந்த Confucianism, Daoism, Shinto போன்ற மதங்களுக்கு இடையிலேயேயும்,
  • திசைகளை மீறி மேலே குறிப்பிட்ட சமயங்களுக்கு இடையிலேயேயும்,
  • கடவுளை நம்பும் மக்களுக்கும் நம்பாத மக்களுக்கு இடையிலேயேயும்,

போர்கள் நடைபெற்றது, நடைபெறுவது வரலாறு.

இதற்கு காரணம் அறிய வேண்டுமென்றால் வாசிக்க வாய்மை

ஒரு வரியில் சொல்வதென்றால் இது நமைக்கும் தீமைக்குமான யுத்தம். இதில் வேடிக்கை என்னவென்றால் எல்லோரும் தங்களை நன்மையின் பக்கம் இருப்பதாகவும் எதிரியை தீமையின் பக்கம் இருப்பதாகவும் கருதுவர். ஆனால் தத்தம் மறைநூல் வாசிக்கப்பட்டு தங்களை தாங்களே எடை போடும் பொழுது அவர்கள் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்று அவர்களே அறிந்துகொள்ளலாம். மற்றொருவர் கூறும் பொழுது ஏற்க்கும் மனநிலை எவருக்கும் இருக்காது. இந்த உலகம் இருப்பதன் நோக்கமான இந்த யுத்தத்தை உலகம் முடியும் வரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக