வேதம் ஓதும் பொழுது வாய்மூடி கேட்க*
தமிழரசமயம்
பால்: பொருட்பால்
அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுதல்
எப்பொருளும் ஓரார் தொடரார் மற்றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. - குறள் 695:
விளக்கம்: மறைநூல் ஓதப்பபிடும்பொழுது வேறு எப்பொருளையும் உற்றுக் கேட்காமல், தொடர்ந்து சிந்திக்காமல் அது ஓதி முடிக்கும் பொழுது அது பற்றி விளக்கத்தை கேட்டறிய வேண்டும். ஒதப்படும் வரை வேறு எதுவும் செய்யமல் மன ஒர்மையுடன் கேட்க தகுதியானது மறை நூல் என்பது இக்குறளின் பொருள்.
இஸ்லாம்
(மனிதர்களே!) திருக்குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி,செவி தாழ்த்தி அதனைக் கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்) அருளை அடைவீர்கள். [அல்குர்ஆன் : 7:204]
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது எங்களுக்கு (நாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய) எங்களது வழிமுறையைக் கற்றுத் தந்தார்கள். எங்களுக்குத் தொழும் முறையை விளக்கினார்கள். “இமாம் தக்பீர் சொன்னால் நீங்கள் தக்பீர் சொல்லுங்கள்; அவர் ஓதினால் நீங்கள் வாய் மூடுங்கள்” என்று சொன்னார்கள். (நூல்: முஸ்தக்ரஜ் அபீ உவானா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக