மக்கள் தொண்டே மகேசன் தொண்டு *

 இஸ்லாம் 

மறுமை நாளில் அல்லாஹ் (வலிமையுடையவனும் உன்னதமானவனுமாக) கூறுவான்: ஆதாமின் மகனே, நான் நோய்வாய்ப்பட்டேன், நீங்கள் என்னைச் சந்திக்கவில்லை. 

அவர் கூறுவார்: ஆண்டவரே, நீங்கள் உலகங்களின் இறைவனாக இருக்கும்போது நான் எப்படி உம்மை தரிசிக்க வேண்டும்? 

அல்லாஹ் கூறுவான்: என் அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான் என்பது உனக்குத் தெரியாதா, நீங்கள் அவரைப் பார்க்கவில்லையா? நீங்கள் அவரைச் சந்தித்திருந்தால் அவருடன் என்னைக் கண்டிருப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? 

ஆதாமின் மகனே, நான் உன்னிடம் உணவு கேட்டேன், நீ எனக்கு உணவளிக்கவில்லை. 

அவர் சொல்வார்: ஆண்டவரே, நீங்கள் உலகங்களின் இறைவனாக இருக்கும்போது நான் உங்களுக்கு எப்படி உணவளிக்க வேண்டும்? 

அல்லாஹ் கூறுவான்: என் அடியான் உன்னிடம் உணவு கேட்டதையும், நீ அவனுக்கு உணவளிக்கவில்லை என்பதையும் நீ அறியவில்லையா? நீங்கள் அவருக்கு உணவளித்திருந்தால், அதை (அவ்வாறு செய்ததற்கான வெகுமதியை) நீங்கள் நிச்சயமாகக் கண்டிருப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? 
 
ஆதாமின் மகனே, நான் உன்னிடம் குடிக்கக் கொடு என்று கேட்டேன், நீ குடிக்காமல் கொடுத்தாய். 
 
அவர் கூறுவார்: ஆண்டவரே, நீயே அகிலங்களின் இறைவனாக இருக்கும் போது நான் எப்படி உமக்குக் குடிக்கக் கொடுப்பேன்? 
 
அல்லாஹ் கூறுவான்: என் அடியான் அதனால்-அவனுக்குக் குடிக்கக் கொடு என்று கேட்டான், நீ அவனுக்குக் குடிக்கக் கொடுக்கவில்லை. நீங்கள் அவருக்குக் குடிக்கக் கொடுத்திருந்தால், நீங்கள் நிச்சயமாக என்னுடன் அதைக் கண்டிருப்பீர்கள். (40 ஹதீஸ் குத்ஸி 18)

கிறிஸ்தவம் 

 34 ,“பின் அரசனானவர் தன் வலது பக்கமுள்ள நல்லவர்களிடம், ‘வாருங்கள். என் பிதா உங்களுக்குப் பெரும் ஆசீர்வாதத்தை வழங்கியுள்ளார். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேவனுடைய இராஜ்யத்தை அடையுங்கள். உலகம் தோன்றியது முதலே அந்த இராஜ்யம் உங்களுக்காகத் தயாராக உள்ளது. 35 நீங்கள் அந்த இராஜ்யத்தை அடையலாம். ஏனென்றால் நான் பசித்திருந்தபொழுது நீங்கள் எனக்கு உணவளித்தீர்கள். எனக்குத் தாகமேற்பட்டபோது தண்ணீர் கொடுத்தீர்கள். நான் வீட்டிலிருந்து தூரமாய்த் தனித்திருந்த பொழுது, என்னை உங்கள் வீட்டிற்கு அழைத்தீர்கள். 36 நான் ஆடையின்றி இருந்தபோது, நீங்கள் உடுக்க ஆடை அளித்தீர்கள். நான் நோயுற்றபோது, என்னைக் கவனித்துக் கொண்டீர்கள். நான் சிறைப்பட்டபோது நீங்கள் என்னைக் காண வந்தீர்கள்’ என்று சொன்னார்.

37 ,“அதற்கு நல்லவர்கள் பதில் சொல்வார்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நீர் பசித்திருந்ததைக் கண்டு நாங்கள் உமக்கு உணவளித்தோம்? எப்பொழுது உங்களுக்குத் தாகமேற்பட்டு நாங்கள் தண்ணீர் தந்தோம்? 38 எப்பொழுது நீர் வீட்டைவிட்டு வெளியேறி தனித்திருந்ததைக் கண்டு நாங்கள் உம்மை எங்கள் வீட்டிற்கழைத்தோம்? எப்போது நீர் ஆடையின்றி இருக்கக் கண்டு நாங்கள் உம்மை உடுத்துக்கொள்ள ஏதேனும் கொடுத்தோம்? 39 எப்பொழுது நாங்கள் உம்மை நோயுற்றோ சிறையிலோ இருக்க கண்டோம்?’ என்பார்கள்.

40 ,“பின்னர் மன்னவர், ‘உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், இங்குள்ள என் மக்களில் மிகவும் சாதாரணமான யாருக்கேனும் நீங்கள் ஒன்றைச் செய்திருந்தால் நீங்கள் அதை எனக்கே செய்ததாகும்’ என்று கூறினார்.

41 ,“பின் அரசர் தன் இடது பக்கமுள்ள தீயவர்களைப் பார்த்து, ‘என்னைவிட்டு விலகுங்கள். நீங்கள் தண்டிக்கப்பட வேண்டுமென ஏற்கனவே தீர்மானித்துவிட்டேன். என்றென்றும் எரிகிற அக்கினியில் விழுங்கள். பிசாசுக்காகவும் அவனது தூதர்களுக்காகவும் ஆயத்தமாக்கப்பட்டது, அந்த அக்கினி. 42 நீங்கள் அதிலே சேரவேண்டும். ஏனென்றால், நான் பசித்திருந்தபொழுது நீங்கள் புசிக்க எதுவும் தரவில்லை. நான் தாகமாயிருந்தபொழுது, நீங்கள் குடிக்க எதுவும் கொடுக்கவில்லை. 43 நான் வீட்டிலிருந்து தூரமாய் தனித்திருந்தபொழுது, நீங்கள் என்னை உங்கள் வீட்டிற்கழைக்கவில்லை. நான் ஆடையின்றி இருந்தபொழுது, நீங்கள் உடுக்கத் துணியேதும் தரவில்லை. நான் நோயுற்றபொழுதும் சிறையிலிருந்தபொழுதும் நீங்கள் என்னைக் கவனித்து கொள்ளவில்லை’ என்று கூறுவார்.

44 ,“அதற்கு அத்தீயவர்கள், ‘ஆண்டவரே எப்பொழுது நீர் பசித்தும் தாகத்துடனுமிருந்ததை நாங்கள் கண்டோம்? எப்பொழுது நீர் வீட்டிலிருந்து தூரமாய்த் தனித்திருந்ததைக் கண்டோம்? அல்லது எப்பொழுது உம்மை ஆடையின்றியோ நோயுற்றோ அல்லது சிறைப்பட்டோ கண்டோம்? எப்பொழுது இவைகளையெல்லாம் கண்டு உமக்கு உதவாமல் போனோம்?’ என்பார்கள்.

45 ,“அப்போது அரசர், ‘நான் உண்மையைச் சொல்லுகிறேன், இங்குள்ளவர்களில் சாதாரணமான யாருக்கேனும் எதையேனும் செய்ய நீங்கள் மறுத்தால், நீங்கள் எனக்கு மறுத்ததற்கு சமமாகும்!’ என்பார்.

46 ,“பிறகு அத்தீயவர்கள் விலகிச் செல்வார்கள். அவர்களுக்கு நித்தியமான தண்டனை கிடைக்கும். ஆனால் நல்லவர்களுக்கு நித்திய ஜீவன் கிடைக்கும்.” (மத்தேயு 25:34-46)

 

தமிழர் சமயம் 

அதனால்தான் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று கூறினர். திருமூலர்,

“படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கொன்று ஈயின்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே” (திருமந்திரம்-1857)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக