வழிபடுவோருக்கு ஞானம் கிடைக்கும்

இறைவனுக்கு கட்டுப்படுபவர்களுக்கு ஞானம் கிடைக்கும்


தமிழர் சமயம் 

வாய்ந்தறிந்‌ துள்ளே வழிபாடு செய்தவர்‌
காய்ந்தறி வாகக்‌ கருணை பொழிந்திடும்‌
பாய்ந்தறிந்‌ துள்ளே படிக்கத வொன்றிட்டுக்‌
கூய்ந்தறிந்‌ துள்ளுறை கோயிலு மாமே - (திருமந்திரம் 810)

விளக்கம்‌: இவனருள்‌ வாய்ந்து, சிவனின் அருமறை கூறும் அறங்களை வழிபடுபவர்களுக்கு, அவன்‌ கருணை பொழிவான்‌, அறிவு மினுங்கப்‌ பெறும்‌. வான்கங்கை பாயப்‌ பெற்று, படிக்கதவு ஆகிய அண்ணாக்கில்‌ மனம்‌ ஒன்றிட்டு கூர்ந்து அறிந்தால்‌, நம்முள்ளே சிவன்‌ கோயில்‌ கொண்டு அமர்ந்திருப்பதை உணரலாம்‌.

காய்ந்த அறிவு - மினுங்கும்‌ அறிவு, படிக்கத வொன்றிட்டு - படிக்கதவு ஒன்றி, கூய்ந்தறி - கூர்ந்து அறி 
 

இஸ்லாம் 


“ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (அவனது கட்டளைகளை பின்பற்றி) நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்”. (குர்ஆன் 8:29
 

யூதம் 


இதோ, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே, நீங்கள் அதைச் சுதந்தரித்துக்கொள்ளப் பிரவேசிக்கிற தேசத்திலே அவைகளைச் செய்யவேண்டும் என்று நான் உங்களுக்குக் கட்டளைகளையும் விதிகளையும் கற்பித்தேன். அவற்றைக் காத்து, அவைகளைச் செய், அதுவே உன் ஞானமும் ஜனங்களின் பார்வைக்கு உன் புத்தியுமாய் இருக்கும். ( உபாகமம் 4:5–6 )

கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து மரியாதை செய்! இதுவே ஞானத்தின் ஆரம்பம். புரிந்து கொள்ள, நீங்கள் பரிசுத்த கடவுளை அறிந்திருக்க வேண்டும். (நீதிமொழிகள் 9:10)

இறைவனின் கருணையால் சொர்கம் *

நம்பிக்கை அல்லது விசுவாசம் அல்லது ஈமான் என்பதன் மதிப்பு என்ன? 

கிறிஸ்தவம்

8 ஏனென்றால், கிருபையினால், விசுவாசத்தின் மூலமாக நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் - இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய பரிசு. 9 கிரியைகளால் அல்ல, அதனால் யாரும் பெருமை பேச முடியாது.10 ஏனென்றால், நாம் நற்கிரியைகளைச் செய்வதற்காக கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்ட தேவனுடைய கைவேலையாய் இருக்கிறோம்; எபேசியர் 2:8-10

இஸ்லாம்  

நிச்சயமாக எந்த மனிதரையும் அவருடைய அமல் அவரை சொர்க்கத்தில் நுழைவித்துவிட முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களைக் கூடவா? என்று கேட்டனர். அதற்கவர்கள், ஆம், நானும் கூட, அல்லாஹ்வின் கருணையும் பவமன்னிப்பும் என்னை சூழ்ந்து கொள்ளவில்லை என்றால் என்னைக் கூட என்னுடைய அமல் சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடாது என்றார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூல் : புகாரீ 5986)

 அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக உங்களில் எவரும் அவருடைய அமலின் காரணத்தால் -மறுமையில்- வெற்றியடையந்துவிட முடியாது என்றார்கள் (அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம் 5041)

 

யாரை வணங்கினாலும் அருள் செய்பவன் அவன் ஒருவனே

தமிழர் சமயம் 

யாதொரு தெயவம்‌ கொணெடீர் அத்தெய்வமாக ஆங்கே
மாதொரு பாகனார்தாம்‌ வருவர்‌ !!!! மற்றத்‌ தெய்வங்கள்‌
வேதனைப்படும்‌ பிறக்கும்‌ இறக்கும்‌ மேல்‌ வினையும்‌ செய்யும்‌
ஆதாலல்‌ அவை இலாதான்‌ அறிந்து அருள்‌ செய்வன்‌ அன்றே - திருமந்திரம்

சவஞானூத்தியார்‌ - அருணந்தி௫வம்‌

கருத்து - எந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலும்‌ அந்த தெய்வ வடிவில்‌ வந்து அருளுபவன்‌ சிவனே என்பதைக்‌ கூறும்‌ பாடல்‌.

பதவுரை: எந்தத்‌ தெய்வத்தை வணங்கி வழிபாடு செய்தாலும்‌ நமக்கு வேண்டுவனவற்றை எல்லாம்‌ வழங்க அந்த தெய்வங்களால்‌ இயலாது என்பதால்‌ மாதொரு பாகனாடிய இவனே வந்து அந்த தெய்வமா௫ அருள்செய்வான்‌. பிறதெய்வங்கள்‌ யாவும்‌ துன்பப்படும், பிறக்கும், இறக்கும், வினைகள் புரியும் ஆனால் எல்லாம்‌ வல்ல இறைவனாகிய இவபெருமானுக்கு இத்தகைய குறைவுகள்‌ இல்லையாதலால்‌, செய்த செயல்களுக்கு ஏற்ப பயனைக்‌ கொடுக்க வல்லவன்‌ அவனே ஆவான்‌. 
 

வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் என் பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேனா? அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப் படுவதில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக: இன்னும் (அல்லாஹ்வுக்கு) வழிபடுபவர்களில் முதன்மையானவனாக இருக்கும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்“ என்று கூறுவீராக! இன்னும், நீர் ஒருக்காலும் இணைவைப்போரில் ஒருவராகிவிட வேண்டாம். (குர்ஆன் 6:14)

''அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.' .(திருக்குர்ஆன் 30:40

கிறிஸ்தவம் 

 18.. அந்நியர்கள் மீதும் தேவன் அன்பு காட்டுகிறார். அவர்களுக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும் அளிக்கின்றார். 19 எனவே நீங்களும் அந்நியர்களிடம் அன்பு காட்ட வேண்டும். ஏனென்றால், நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராக இருந்துள்ளீர்கள். 20 “உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது மரியாதை செலுத்தி அவர் ஒருவரையே நீங்கள் ஆராதிக்க வேண்டும். (உபாகமம் 10)

நன்னாள்

யூதம்  

ஓய்வு நாளைப் பரிசுத்தப்படுத்தல்

19 கர்த்தர் என்னிடம் இவற்றைச் சொன்னார்: “எரேமியா, யூதாவின் அரசர்கள் வந்துபோகிற எருசலேமின் ஜனங்கள் வாசலுக்குப்போய் நில். எனது வார்த்தையை ஜனங்களிடம் கூறு. பிறகு எருசலேமின் மற்ற வாசல்களுக்கும் போ. அதே செயலைச் செய்.”

20 அந்த ஜனங்களிடம் சொல்: “கர்த்தருடைய செய்தியைக் கேளுங்கள்! யூதாவின் அரசர்களே, கேளுங்கள்! யூதாவின் ஜனங்களே, கேளுங்கள்! இந்த வாசல்கள் வழியாக எருசலேமிற்குள் வருகின்ற ஜனங்களே, என்னை கவனியுங்கள்! 21 கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்: ‘ஓய்வுநாளில் சுமைகளைத் தூக்கிச் செல்லாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள். ஓய்வுநாளில் எருசலேமின் வாசல்கள் வழியாகச் சுமையைத் தூக்கிவராதீர்கள். 22 ஓய்வுநாளில் உங்கள் வீட்டுக்கு வெளியே சுமையைத் தூக்கி வராதீர்கள். அந்த நாளில் எந்த வேலையும் செய்யாதீர்கள். நீங்கள் ஓய்வுநாளை ஒரு பரிசுத்த நாளாக்க வேண்டும். நான் இதே கட்டளையை உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்தேன். 23 ஆனால் உங்கள் முற்பிதாக்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் என் மீது கவனம் செலுத்தவில்லை. உங்கள் முற்பிதாக்கள் மிகவும் பிடிவாதமாக இருந்தார்கள். நான் அவர்களைத் தண்டித்தேன். ஆனால் அது அவர்களுக்கு எவ்வித நன்மையையும் செய்யவில்லை. அவர்கள் என்னை கவனிக்கவில்லை. 24 ஆனால் நீங்கள் எனக்குக் கீழ்ப்படிவதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. ஓய்வு நாளில் நீங்கள் எருசலேமின் வாசல்கள் வழியாக சுமையைக் கொண்டு வராதீர்கள். நீங்கள் ஓய்வு நாளைப் பரிசுத்தமாக்க வேண்டும். அந்நாளில் எவ்வித வேலையும் செய்யாமல் இருப்பதே ஓய்வுநாளை பரிசுத்தமான நாளாக வைப்பதாகும்.

25 “‘நீங்கள் இந்தக் கட்டளைக்கு அடிபணிந்தால், பிறகு தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற அரசர்கள் எருசலேமின் வாசல்கள் வழியாக வருவார்கள். அந்த அரசர்கள் இரதங்களின் மீதும் குதிரைகள் மீதும் வருவார்கள். அந்த அரசர்களோடு யூதாவின் மற்றும் எருசலேமின் தலைவர்கள் இருப்பார்கள். எருசலேம் நகரம் என்றென்றும் ஜனங்கள் வாழும் இடமாகும்! 26 யூதாவின் நகரங்களில் இருந்து ஜனங்கள் எருசலேமிற்கு வருவார்கள். எருசலேமிற்கு அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஜனங்கள் வருவார்கள். பென்யமீன் கோத்திரங்களில் உள்ளவர்கள் வாழும் நகரங்களிலிருந்து ஜனங்கள் வருவார்கள். மேற்கு மலை அடிவாரங்களிலிருந்தும், மலை நாடுகளிலிருந்தும் ஜனங்கள் வருவார்கள். நெகேவிலிருந்தும் ஜனங்கள் வருவார்கள். அந்த ஜனங்கள் எல்லோரும் தகன பலிகளையும் தானியக் காணிக்கைகளையும் நறுமணப் பொருட்களையும், ஸ்தோத்திர பலிகளையும் கொண்டு வருவார்கள். கர்த்தருடைய ஆலயத்திற்கு அவர்கள் இந்தப் பலிகளையும் காணிக்கைகளையும் கொண்டு வருவார்கள்.

27 “‘ஆனால், நீங்கள் என்னை கவனிக்காமலும் அடிபணியாமலும் இருந்தால் பிறகு தீயவை நிகழும். ஓய்வுநாளில் நீங்கள் எருசலேமிற்குள் சுமைகளைக் கொண்டு வந்தால் பின் நீங்கள் அந்நாளைப் பரிசுத்தப்படுத்தவில்லை. எனவே, உங்களால் அணைக்க முடியாத ஒரு தீயை பற்றவைப்பேன். எருசலேமின் வாசலிலிருந்து அந்த நெருப்பு தொடங்கும். அது அரண்மனைகள்வரை பற்றி எரியும்.’” எரேமியா 17

இஸ்லாம்
 
நமக்கென்று அளிக்கப்பட்ட நன்னாள்.
 
"இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வழங்கப் பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி). நூல்கள் : புகாரி 3486, முஸ்லிம் 1414

"சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் (அலை) படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : திர்மிதி 450

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. (அல்குர்ஆன் 62:9)

கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம். 
 
"அல்லாஹ் அழிக்கப் போகிற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகிற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?'' என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் "உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)'' எனக் கூறினர்.

கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தோரை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தோரை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம். தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது "இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறினோம். (அல்குர்ஆன் 7:163-166)
"ஒரு கூட்டத்தாருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் ஜும்ஆவிற்கு வராமல் இருந்து விடுகின்றனர். நான் ஒருவரை மக்களுக்குத் தொழுவிக்கச் செய்யுமாறு உத்தரவிட்டு விட்டு, ஜும்ஆவிற்கு வராமல் தங்களுடைய வீடுகளில் இருக்கும் ஆட்களை கொழுத்தி விட எண்ணி விட்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல் : முஸ்லிம் 1156 

தமிழர் சமயம் *

சனியும் வெள்ளியுந் திங்களும் ஞாயிறும்
முனிவ னாய்முடி பத்துடை யான்றனைக்
கனிய வூன்றிய காரண மென்கொலோ
இனிய னாய்நின்ற வின்னம்ப ரீசனே. (தேவாரம் 5ஆம் திருமுறை 1284)

சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும்
முனிவனாய் முடி பத்து உடையான் தனைக்
கனிய ஊன்றிய காரணம் என்கொலோ,
இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே? 
 
பொ-ரை: சனி, ஞாயிறு, வெள்ளி மற்றும் திங்கள் அன்றும் பத்து கிரீடங்களை உடையவன் அவனை முனிவனாய் கனியுமாறு ஊன்றிய காரணம் என்னவோ? இனியவனாய் நின்ற இன்னம்பர் ஈசனே! 

கு-ரை: முனிவன் - அறிவில் மூத்தவன்; முடி - கிரீடம்; 

கேரளாவில் பெண்களுக்கு மார்பக வரி இருந்தது உண்மையா?

கேரளாவில் பெண்களுக்கு மார்பக வரி இருந்தது உண்மையா?

 "மார்பக வரி" என்பது இப்போது இந்தியாவின் கேரளாவின் ஒரு பகுதியாக இருக்கும் திருவிதாங்கூர் இராச்சியத்தில் நாடார், ஈழவா மற்றும் பிற தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களுக்கு நம்பூதிரி பிராமணர்களின் வழிகாட்டுதலால் விதிக்கப்பட்ட வரி அல்லது மூலக்கரம் ஆகும்.. உயர்சாதிப் பெண்களுக்கு இந்த வரி விதிக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் 1859 வரை வரி செலுத்தாமல் பொது இடங்களில் தங்கள் மார்பகங்களை மறைக்க தடை விதிக்கப்பட்டது

முலக்கரம் என்பது முலைக்கான வரி அல்ல என்று முழு பூசணிகாயை சோற்றில் மறைக்க பலர் முயற்சி செய்கிறார்கள். அது உண்மை என்றால் இவர்கள் இவ்வாறு நிற்க வேண்டிய அவசியம் என்ன ?

இந்த வரி "இருந்தது" என்றும் "இருந்ததில்லை" என்றும் கூறும் இரண்டு வகையினர் உண்டு.

மேலே உள்ள படம் 1900 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டு பிட் நதிகள் அருங்காட்சியகம், இங்கிலாந்தில் வைக்கப்பட்டுளள்து. இதன் உண்மைத் தன்மையை கேள்வி கேட்கும் நிலை இருப்பதால், வேறு படங்கள் உண்டா என்று ஆய்வோம்.

இந்த விடயத்தை பொறுத்தவரை பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது.

  1. இப்படி ஒரு வரி இருந்ததே இல்லை என்கிறது ஒரு தரப்பு.
  2. இது சாதிய ஏற்றத்தாழ்வை நிலை நிறுத்தவே உருவாக்கப்பட்டது என்கிறது ஒருதரப்பு. இந்த வரியை நீக்க போராடிய நலங்கிள்ளியின் கதை ஓர் கற்பனை என்கிறது ஒரு தரப்பு.
  3. எல்லா சாதியினரும் மேலாடையை அணியாமல் இருந்தனர் என்கிறது ஒரு தரப்பு. ஆண்களுக்கு எப்படி மீசைக்கரம் இருந்ததோ அதுபோல முலைக்கரம் இருந்தது. இது பாலின வேறுபாட்டை கூற இவ்வாறு பெயரிடப்பட்டதே தவிர மேலாடை அணிவதற்கான வரி என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்கிறது ஒரு தரப்பு.

இந்த கருத்துகளுக்கு எதேனும் ஆதாரங்கள் உண்டா என்று தேடுவோம்.

இந்த விடயத்தில் ஆதாரம் என்றால் என்ன?

  • முதலில் இந்த வரி விதித்ததற்கான அல்லது இந்த வரியை நீக்கியதற்கான ஆதாரம் முதல் தரமுடையாது.
  • அங்கு அதை எதிர் கொண்ட அல்லது அங்கு வாழ்ந்த பிற மக்கள் எழுதிய நூல்கள் அடுத்த தரமுடையாது.
  • அடுத்த தரமுடையது அவர்களின் வழிவந்தவர்கள் கூறும் கருத்து.

கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள்

வரி விதித்ததற்கான ஆதாரம்:

சிலர் 1747 ஆம் ஆண்டு வாக்கில் அன்றைய திருவிதாங்கூர் ராஜாவினால் விதிக்கப்பட்டதாக கூறுகின்றனர் அனால் வரி விதித்ததற்கான ஆவண அல்லது கல்வெட்டு அல்லது பட்டய அல்லது வேறு வகையிலான வலுவான ஆதாரம் கிடைக்கப்பெறவில்லை.

இப்படி பட்ட வரி ஏற்கப்பட்டு பின்பற்றப் பட்டதென்றால் அக்கால அரசியல் நிலையை புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் முலக்கரத்துடன் தலைக்கரம் மற்றும் மீசைக்கரம் உள்ளிட்டவைகள் இருந்ததால் அன்று அந்த மக்கள் முழு ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருந்தது உணரமுடிகிறது. எனவே மூலக்கர வரி விதித்ததற்கான ஆதாரம் கிடைக்காமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

கிபி 900 ஆண்டுகளில் இருந்து ஆதிக்கம் செலுத்திய நம்பூதிரி பிராமணர்களின் ஆணாதிக்க சமூகத்தில் 1200 களில் இருந்து அனைத்து பெண்களும் மேலாடை அணியாத பழக்கம் இருந்து வந்ததால் புதிதாக வரி போடப்படுவது அதன் வீரியத்துக்கு ஏற்ற அளவிலான பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கமுடியாது.

வரியை நீக்கியதற்கான ஆதாரம்:

  • சிலர், முலகரம் வரியை நீக்கியது திப்பு சுல்த்தான் என்று கூறுவார் -அதற்கு வாய்ப்பு இல்லை ஏனென்றால் அவரின் காலமான 1799 க்கு பிறகும் அது நடைமுறையில் இருந்து வந்துள்ளது. ஒருவேளை அவர் முயற்சித்து இருக்கலாம்.

ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் மற்றும் தெற்கின் முசல்மான் சக்திகளுடனான போராட்டம் (1893) என்ற புத்தகத்தில் இதை எழுதுகிறார்: "... மேற்குக் கடற்கரை, முந்தைய காலங்களில் தங்களை விட உயர்ந்த சாதி மக்கள் முன்னிலையில் கீழ் சாதியைச் சேர்ந்த பெண்கள் உடலின் மேற்பகுதியை மறைக்க தடை விதிக்கப்பட்டது. அத்தங்கடி ராணி இந்த சட்டத்தை மீறிய ஒரு பெண்ணின் மார்பகங்களை துண்டிக்க உத்தரவிட்டார். இந்த நடைமுறையை நிறுத்தும் அரசாணையை திப்பு இயற்றியதாக பௌரிங் கூறுகிறார்.

  • சிலர் ஆங்கிலேயர்கள் என்றும் கூறுகின்றனர்

1858 இல், திருவிதாங்கூரில் பல இடங்களில் புதிய வன்முறை வெடித்தது. 1859 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி, சென்னை கவர்னர் சார்லஸ் ட்ரெவல்யனின் அழுத்தத்தின் பேரில், திருவிதாங்கூர் அரசர் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார், அனைத்து நாடார் பெண்களும் கிறிஸ்தவ நாடார்களைப் போல ஜாக்கெட் அணிந்து அல்லது கரடுமுரடான துணியால் தங்கள் மார்பகங்களை மறைக்க உரிமை உண்டு. அவர்களின் மேல்-உடல், முக்காவட்டிகள் (மீனவர்-பெண்கள்) போன்றது. ஆயினும்கூட உயர்தர நாயர் பெண்களின் பாணியில் அவர்கள் மார்பகங்களை மறைக்க இன்னும் அனுமதிக்கப்படவில்லை.

  • இலங்கைக்கு சென்று கிறிஸ்தவத்தை ஏற்றத்தாலும், பொதுவுடைமை தத்துவம் பரவியதாலும் இதற்கு எதிராக பெண்கள் போராட துவங்கினர் என்று சில கருத்துக்களும் உண்டு.

இப்படி 1780, 1813, 1814, 1859, 1891 என பல்வேறு ஆண்டுகளில் இதற்கு எதிரான போராட்டங்களும், இதை தடைசெய்து சட்டங்களும் வந்து கொண்டு இருந்தது அனால் ஆணாதிக்க சமூகமான நம்பூதிரிகளின் ஆதிக்கத்தில் இருந்த திருவிதாங்கூரில் இதை முற்றிலும் துடைத்தெறிய 1900 களின் தொடக்கத்தில் அவள் அவளின் மார்பை அறுத்து எரிய வேண்டி இருந்தது. அவள் பெயர் நலங்கிள்ளி ஆகும்.

இரு வேறு கருத்துக்கள் இருப்பதால் இதை பிபிசி களஆய்வு செய்தது.

BBC இன் கள ஆய்வு

நங்கேலியின் கதை அதிகம் அறியப்படாததால் வருத்தப்படுவதாக அவரது உறவினரின் கொள்ளுப் பேரன் மணியன் வேலு கூறுகிறார்.

"அவரது செயல் தன்னலமற்றது, திருவிதாங்கூர் பெண்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் தியாகம், இறுதியில் ராஜா மார்பக வரியை திரும்பப்பெறும்படி கட்டாயப்படுத்தியது," என்று அவர் கூறுகிறார்.

முதியவர், மணியனுக்கு சொந்தமாக நிலம் இல்லை, அவருடைய குழந்தைகள் விவசாயக் கூலிகளாக வேலை செய்கின்றனர். ஆனால் அவர் தொண்டுக்காக அல்ல, சில அங்கீகாரங்களை மட்டுமே தேடுகிறார்.

ஆனால் இவரின் கதையே கற்பனை எனவே வரியும் கற்பனை என்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் சமீப காலத்தில் தொடந்து பேசி வருகின்றனர்.

வரி இருந்ததற்கான ஆதாரம்:

  • Travancore Tribes And Castes Vol. 1 by Iyer, L. A. Krishna 1937

Around 1747, Mulakkaram, or the "breast tax," was a levy imposed on lower-caste women in the Kingdom of Travancore, now part of Kerala, India. Women from the Ezhava, Nadar, and other lower-caste communities had to pay this tax to cover their breasts. The tax was often determined by the size of the woman's breasts, reflecting the caste system's control over social customs and economic obligations. Men faced a similar tax called Thalakkaram, or "head tax." These taxes upheld the caste hierarchy by making clothing a sign of wealth and status. Only upper-caste women could cover their torsos without penalty. Failure to pay the tax resulted in severe punishments, including public beatings. Combined with other taxes, the breast tax left lower-caste people with barely enough food to survive.

One of the most tragic stories related to the breast tax is that of Nangeli, a Dalit woman from the Ezhava community. In defiance of the oppressive tax, Nangeli made a bold protest. When tax collectors came to her door, she cut off her breasts and presented them on a plantain leaf. This act of self-mutilation symbolised her rejection of the caste-based exploitation. Nangeli died from excessive bleeding, and her husband, devastated by her death, performed Sati by jumping into her funeral pyre.

The news of Nangeli’s protest reached the Royal Court, causing an uproar. The king, confronted with the public outrage, was forced to abolish the breast tax. This marked a significant moment in the fight against caste-based oppression in Travancore. The place where Nangeli died is now known as "Mulachiparambu," or "the breast woman’s plot," in honour of her sacrifice. Nangeli’s legacy lives on, symbolising the struggle against caste discrimination and the fight for dignity and equality for all, regardless of caste or gender.

Source : Travancore Tribes & Caste (1937) by LA Krishna Iyer, The Print.

இதில் திரு கிருஷ்ணன் அய்யர் அவரின் கருத்துக்கு மூலமாக காட்டுவது 1883 இல் எழுதப்பட்ட நூல் ஆகும்.

பெண்களுக்கு மட்டும் சில வரிகள் இருந்தன. மிகவும் மோசமான வரிகளில் ஒன்று மூலக்கரம் அல்லது மார்பக வரி, இது பெண்களுக்கு மார்பகங்கள் இருப்பதால் அவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டது. ஆலப்புழாவேலாயுத பணிக்கர் மற்றும் பிற சீர்திருத்தவாதிகள் முக்குத்தி அல்லது மூக்குத்தியை ஆபரணங்களாக அணியும் கீழ் சாதியினரின் உரிமைக்காக கூட பாடுபட்டனர். விஷயம் என்னவென்றால், இது உயர் சாதியினரின் அடையாளமாக கருதப்பட்டது மற்றும் உயர் சாதி பெண்களுக்கு மட்டுமே அவ்வாறு செய்ய உரிமை உண்டு. தாழ்த்தப்பட்ட சாதியினர் கல்லால் செய்யப்பட்ட ஆபரணங்களை மட்டும் அணிய அனுமதிக்கப்பட்டனர். இது கல்லுமலைப் போராட்டம் அல்லது பெரிநாடு போராட்டம் எனப் பெயரிடப்பட்ட மிக சக்திவாய்ந்த போராட்டங்களில் ஒன்றிற்குக் கூட வழிவகுத்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது அப்போதைய திருவிதாங்கூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த பெரிநாட்டில் நடந்தது.

முடிவுரை:

வெவ்வேறு கருத்துடைய எல்லோரும் ஏதோ ஒரு ஆதாரம் காட்டும் அளவில் இருக்கக்கூடிய இந்த விடயத்தில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு கோணம் உள்ளது. ஆணாதிக்க சமூகமான நம்பூதிரிகள் கிபி 900 ஆண்டுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கேரளாவில் ஆதிக்கம் செய்ய தொடங்கினர்.

1287 இல் மார்கோ போலோ வந்த பொழுது மேலாடை அணியாமல் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 1600 களில் வந்த இந்தாலியா பயனி Pietro della Valle வந்த காலத்திலும் அரச பெண்கள் உட்பட அனைவரும் மேலாடை அணியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே தரவுகளின்படி கேரளாவில் மேலாடை அணியா நிலை ஏறக்குறைய 600 வருடம் இருந்து வந்துள்ளது.

ஆனால் முலக்கர வரி 1747 முதல் 1859 வரை, ஏறக்குறைய 100 வருடங்களுக்கு மேல் இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே அப்பயணிகளின் நூலை முலக்கர வரி இல்லை என்பதற்கான ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.

எனவே பிபிசி இன் கள ஆய்வை கொண்டும், இணைக்க பட்ட படங்களை கொண்டும், மற்ற நூல்களை கொண்டும் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிராக இந்த வரி இருந்தது என்றுதான் புரிந்துகொள்ள முடிகிறது.

சுருக்கமாக சொல்வதென்றால் இந்திய சுதந்திரம் பெறுவதற்கு முன் கேரளாவில் நம்பூதரிகளின் வரலாறு ஏறக்குறைய 1000 ஆண்டுகள், அதில் பெண்கள் மேலாடை அணியாமல் இருந்தது ஏறக்குறைய 600 ஆண்டுகள், அதில் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு வரி போடப்பட்டது ஏறக்குறைய 100 ஆண்டுகள், அதற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது ஏறக்குறைய 50 ஆண்டுகள்.

இத்தனை தரவுகளை மறைத்து பொய் என்று கூறுவோரின் உள்நோக்கம் புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று, மேலும் அவர்களின் பின்புலம் ஆராயப்பட வேண்டிய ஒன்று.