நேர்வழி

தமிழர் சமயம் 

இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
மயங்கா வழிசெல்வர் வானுல காள்வர்
புயங்களு மெண்டிசை போதுபா தாள
மயங்காப் பகிரண்ட மாமுடி தானே. திருமந்திரம் 1836.

(ப. இ.) ஓவாது சுழலும் இவ்வுலகினில் சிவபெருமானின் திருவடியுணர்வு கைவரப்பெற்ற சிவனடியார்கள் செந்நெறியிற் செல்வர்; வான் உலகை ஆள்வர். அச் சிவபெருமான் திருத்தோள்கள் புலம் எட்டிலும் நலம்புரிய எட்டாயின. போதாகிய அவன் திருவடித் தாமரை பாதாளம் ஏழினுக்கும் அப்பால்; திருமுடி. வெளியில் திகழும் புறவண்டங்களுக்கும் அப்பாலாம்.

இஸ்லாம் 

நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் நம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர்வழி காட்டுவான்; இன்பமயமான சுவர்க்கபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக்கொண்டிருக்கும். (குர்ஆன் 10:9)

(பின்பு) நாம் சொன்னோம்: "நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நேர்வழி வரும்போது, யார் என்னுடைய (அவ்)வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்." - (குர்ஆன் 2:38)

மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இதற்கு முன்னரும் (வேதங்களை இறக்கினான்); (நன்மை, தீமைகளைப்) பிரித்துக் காட்டுகிறதையும் இறக்கிவைத்தான்; ஆகவே, எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்குக் கடும் தண்டனையுண்டு; அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனாகவும், தண்டிப்போனாகவும் இருக்கின்றான். (குர்ஆன்  3:4)

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்: அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள்: உங்கள் இதயங்களுக்கிடையே அன்பை ஏற்படுத்தினான்; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக்குழியின் விளிம்பின் மீது இருந்தீர்கள்; அதிலிருந்தும் அவன் உங்களைக் காப்பாற்றினான்; நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு, அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்குத் தெளிவாக்குகின்றான். (குர்ஆன் 3:103)

நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் - அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்கு விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும், அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள். (குர்ஆன் 2:159)

 நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! (அல்குர்ஆன் : 1:6)

மேலும், (உலகில் அவர்களுக்கு மத்தியில்) அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்த குரோதத்தையும் நாம் நீக்கிவிடுவோம்; அவர்களுக்குக் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்: இன்னும், அவர்கள் கூறுவார்கள்: "இ(ந்தப் பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர்வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம்; எங்கள் இறைவனுடைய தூதர்கள் சத்தியத்தையே நிச்சயமாகக் கொண்டுவந்தார்கள்:" (அப்பொழுது) "இந்தச் சொர்க்கம் - (உலகில்) நீங்கள் செய்துகொண்டிருந்த (நன்மையான)வற்றின் காரணமாக, இதன் வாரிசுகளாக நீங்கள் ஆக்கப்பட்டிருக்கிறீர்கள்" என்று அழைக்கப்படுவார்கள். (குர்ஆன் 7:43)

யூதம் 

என்னைப் பொறுத்த வரை உங்களுக்காக நான் ஜெபிப்பதை என்றும் நிறுத்தமாட்டேன். நிறுத்தினால், கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தவனாவேன். நல்வாழ்க்கைக்கான சரியான வழியை போதித்துக்கொண்டே இருப்பேன். (1 சாமுவேல் 12:23)

கர்த்தரைப் பின்பற்றுவதை ஒருவன் தெரிந்துகொண்டால் அவன் வாழ்வதற்குரிய நல் வழியை தேவன் காட்டுவார். -  (சங்கீதம் 25:12)

கர்த்தர், “நீ வாழவேண்டிய வழியை உனக்கு போதித்து வழிநடத்துவேன். உன்னைக் காத்து உனக்கு வழிகாட்டியாயிருப்பேன் என்று கூறுகிறார். - (சங்கீதம் 32:8)

கிறிஸ்தவம் 

ஆனால் உண்மை வழியைப் பின்தொடர்ந்து செல்கிறவர்கள் ஒளியிடம் வந்தடைகிறார்கள். பிறகு, அந்த ஒளி அவர்கள் செய்த செயல்கள் தேவன் மூலமாகச் செய்த நற்செயல்கள் எனக் காட்டும் என்று இயேசு கூறினார். -  (யோவான் 3:21)

அக்கிருபை நமக்குத் தெளிவானது. நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து வந்தபோதுதான் அக்கிருபை நமக்குப் புலப்படுத்தப்பட்டது. இயேசு மரணத்தை அழித்து நமக்கெல்லாம் நித்திய வாழ்வுக்குரிய வழியைக் காட்டினார். நற்செய்தியின் மூலமாகவே நமக்கு அவர் நித்திய வாழ்வைப் பெறுவதற்கான வழியைக் காட்டினார். -  (2 தீமோத்தேயு 1:10)


4 கருத்துகள்:

  1. நம்பிக்கை கொண்டு, பின்னர் (ஏக இறைவனை) மறுத்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து, பிறகு (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. அவர்களுக்கு வழி காட்டுபவனாகவும் இல்லை. (அல்குர்ஆன் 4:137)

    பதிலளிநீக்கு
  2. யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு” என்று கூறினார்கள்.

    அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 1848

    பதிலளிநீக்கு
  3. ஏசாயா 66

    கர்த்தர்தாமே இவற்றைக் கூறினார்.
    “எனக்கு சொல், நான் எந்த ஜனங்களைப் பாதுகாக்கவேண்டும்.
    ஏழைகளையும், துயரப்படுபவர்களையும் பாதுகாக்கிறேன்.
    எளியவர்களுக்காகவும், துயரப்படுபவர்களுக்காகவும் பொறுப்பேற்கிறேன்.
    எனது வார்த்தைகளுக்குக் கட்டுப்படுகிற ஜனங்களை நான் பாதுகாக்கிறேன்.
    3 சில ஜனங்கள் காளைகளைப் பலியிடுகிறார்கள்.
    ஆனால், அவர்கள் ஜனங்களையும் அடிக்கிறார்கள்.
    அந்த ஜனங்கள் ஆடுகளைப் பலியாகக் கொடுக்கிறார்கள்.
    ஆனால், அவர்கள் நாய்களின் கழுத்துகளையும் உடைக்கிறார்கள்.
    அவர்கள் பன்றியின் இரத்தத்தையும் எனக்கு பலியாகச் செலுத்துகிறார்கள்.
    அந்த ஜனங்கள் நறுமணப் பொருட்களை எரிக்க நினைவுகொள்வார்கள்.
    ஆனால், அவர்கள் தமது பயனற்ற விக்கிரகங்களை நேசிக்கிறார்கள்.
    அவர்கள் எனது வழியை அல்ல.
    தங்கள் சொந்த வழியையே தேர்ந்து எடுப்பார்கள்.
    அவர்கள் தங்களது பயங்கரமான விக்கிரகங்களை நேசிக்கிறார்கள்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%8F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%2066&version=ERV-TA

    பதிலளிநீக்கு
  4. ஏசாயா 665 கர்த்தருடைய கட்டளைகளுக்கு அடிபணிகிற ஜனங்களாகிய நீங்கள் கர்த்தர் சொல்கிறவற்றையும் கேட்கவேண்டும்.
    “உங்களை உங்கள் சகோதரர் வெறுத்தார்கள்.
    அவர்கள் உங்களுக்கு எதிராக மாறினார்கள்.
    ஏனென்றால், என்னை நீங்கள் பின்பற்றுகிறீர்கள்.
    உங்கள் சகோதரர்கள் கூறினார்கள், ‘கர்த்தர் மகிமைப்படுத்தப்படும்போது, நாங்கள் உம்மிடம் திரும்பிவருவோம்.
    பிறகு, நாங்கள் உங்களோடு மகிழ்ச்சியாக இருப்போம்’ அத்தீய ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள்.”

    பதிலளிநீக்கு