கர்த்தர் இயேசுவின் தந்தை என்றால் - அதை ஒன்று கர்த்தர் சொல்லி இருக்க வேண்டும் அல்லது இயேசு சொல்லி இருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு கூறி உள்ளனரா என்று பார்ப்போம்.
சொற்பொருள்: தந்தை = பிதா = அப்பன் = தகப்பன்
மகன் = குமாரன் = சுதன்
இயேசு கர்த்தரை பிதா என்று கூறி உள்ளார்!
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14:6)
“...மேலும், பூமியில் உள்ள எவரையும் ‘தந்தையே’ என அழைக்காதீர்கள். உங்களுக்கு ஒருவரே தந்தை. அவர் பரலோகத்தில் உள்ளார். நீங்கள் ‘எஜமானே’ என்றும் அழைக்கப்படக் கூடாது. ஏனென்றால், உங்கள் எஜமான் ஒருவர் மட்டுமே. அவர் தான் கிறிஸ்து. (மத்தேயு 23:8-10)
கர்த்தரும் இயேசுவை தனது குமாரன் என கூறி உள்ளார்!மேற்கண்ட வசனத்தின் படி தந்தை என்பவர் பூமியில் இல்லை பரலோகத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இது இயேசுவுக்கு மட்டுமல்ல மாறாக அனைவருக்கும் சொல்லப்படுகிறது. ஒருவேளை இயேசுவுக்கு மட்டும் என்று கூறி இருந்தால் தந்தை இல்லாமல் பிறந்த இயேசு இறைமகன் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் இது உலகில் உள்ள ஆண் பெண் அனைவருக்கும் பொதுவான செய்தியாக சொல்லப்படுகிறது. இயேசுவை தவிர அனைவருக்கும் இவ்வுலகில் தந்தை உண்டு என்பது நிதர்சனம்.
வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. அக்குரல்,, “இவர் (இயேசு) என் குமாரன். நான் இவரை நேசிக்கிறேன். நான் இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன்” எனக் கூறியது. (மத்தேயு 3:17)
கர்த்தர் இயேசுவை மட்டும்தான் குமாரன் என்று கூறினாரா?
[ஏனென்றால், இஸ்ரவேல் என் குமாரன், என் தலைமகன்' என்று கர்த்தர் சொல்லுகிறார். - [யாத்திராகமம் 4:22, தோரா][மேலும்,] 'நான் இஸ்ரவேலுக்குத் தகப்பன், எப்பிராயீம் என் தலைமகன்.' - [எரேமியா 31:9, தோரா][மேலும்,] நான் [சாலமோனை] என் மகனாகத் தேர்ந்தெடுத்தேன், நான் அவனுடைய தகப்பனாக இருப்பேன். - [1 நாளாகமம் 28:6, தோரா][மேலும்,] 'நான் [தாவீதை] முதற்பிள்ளையாக்குவேன்,'" - [சங்கீதம் 89:27, தோரா][மேலும் அவர்கள், "தேவதூதன்] பதிலளித்து, [எஸ்ராவிடம்], 'இது கடவுளின் மகன், அவர்கள் உலகில் ஒப்புக்கொண்டார்' என்று கூறினார் - [2 எஸ்ரா 2:47, தோரா]
எனவே தீர்க்கதரிசிகளை மகன் என்று அழைக்கும் வழக்கம் கர்த்தரிடம் இருக்கிறது அல்லது இது மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிழையாக இருக்க வேண்டும்.
கர்த்தர் இயேசுவை மனித குமாரன் என்றும் அழைக்கிறார்
31 “When the Son of Man comes in his glory and all the angels with him, then he will sit on his glorious throne. 32 All the nations will be assembled before him, and he will separate people one from another like a shepherd separates the sheep from the goats. 33 He will put the sheep on his right and the goats on his left
31 ,“மனித குமாரன் மீண்டும் வருவார். அவர் மாட்சிமையுடன் தேவதூதர்கள் சூழ வருவார். அரசராகிய அவர் தன் மாட்சிமை மிக்க அரியணையில் வீற்றிருப்பார். 32 உலகின் எல்லா மக்களும் மனித குமாரன் முன்னிலையில் ஒன்று திரள்வார்கள். மனித குமாரன் அவர்களை இரண்டு குழுக்களாகப் பிரிப்பார். ஓர் ஆட்டிடையன் தன் ஆடுகளை வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் என பிரிப்பதைப் போல அவர் பிரிப்பார். 33 மனித குமாரன் செம்மறியாடுகளை (நல்லவர்களை) வலது பக்கமும், வெள்ளாடுகளை (தீயவர்களை) இடது பக்கமும் நிறுத்துவார். (மத்தேயு 25:31-33)
தந்தை இல்லாத ஒருவரை மனித குமாரன் என்று கர்த்தர் ஏன் அழைக்கிறார்? ஏனென்றால் அவர் கடவுளின் குமாரன் அல்ல என்பதால்.
நாம் அறிந்தபடிக்கு பழைய ஏற்பாடு ஹீப்ரு மொழியிலும் புதிய ஏற்பாடு அராமிக் மொழியிலும் வழங்கப்பட்டது. பிறகு பாலின் கிரேக்க லத்தீன் கடிதங்கள் அதனுடன் இணைக்கப்பட்ட பொழுது இயேசுவின் வேதம் கிரேக்கத்துக்கு, லத்தீனுக்கும் மொழி பெயர்க்கப்பட்டு பின்னர் அதிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப்பட்டு பின்னர் அதிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இதில் கருத்துப் பிழை ஏற்படுவது இயற்கையே. மேலும் மொழிபெயர்ப்புக்கு முன் உள்ள பதிப்பில் அரசியல் மற்றும் வேறு சில காரணங்களால் புகுத்தப்பட்ட செய்திகளை அடையாளம் காண்பது கடினமாகி விடுகிறது. எனவே எந்த வேதமும் அதன் மூல மொழியில் பாதுகாக்கப்பட்டு அம்மொழி வழக்கொலியாமல் இருந்தால் அதை நாம் பயன்படுத்தலாம். இல்லை என்றால் அந்த பழைய வேதம் அடையாளம் காட்டும் புதிய வேதத்தை பின்பற்றுவதில் என்ன பிழை உள்ளது? எளிமையாக நம் கருத்து என்னவென்றால், பைபிள் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட முடியாது. அப்படி முரண்பட்டால் அது விதிவிலக்கு என்று குறிப்பிடப் பட்டு இருக்க வேண்டும். அல்லது அது இயேசுவுக்கு பிறகு மக்களால் புகுத்தப் பட்டு இருக்க வேண்டும். இந்த இடைச்சொருகள் காரணமாக பைபிளின் ஒரே வசனம் பாதிப்புக்கு பாதிப்பு வேறுபாடுவதையும் காணலாம். உதாரணங்கள் கீழே.
எனவே இயேசு தந்தை என்று குறிப்பிடுவது படைத்த இறைவனை தானே தவிர தனது பயோலொஜிக்கல் தந்தையை அல்ல. அதேபோல கர்த்தர் இயேசுவை மகன் என்று குறிப்பிடுவது அனைத்து தீர்க்க தரிசிகளையும் குறிப்பிடுவது போலத்தானே தவிர பெற்றெடுத்த மகன் எனும் கருத்தில் அல்ல.
உண்மையை சொல்ல போனால், கடவுளை அப்பன் என்று கூறும் வழக்கம் தமிழிலும் உண்டு.
"ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லைநீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினுந்தூண்டு விளக்கின் சுடரறி யாரே". (திருமந்திரம் - 178)
ஆனால் கடவுளுக்கு பாலினம் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
முடிவாக, கர்த்தர் ஏசுவுக்கு மட்டும் தந்தை அல்ல, மாறாக அனைவருக்கும் தந்தை ஆவார் ஆனால் பெற்றெடுத்த தந்தை அல்ல. இக்கருத்தை நிறுவ புதிய ஏற்ப்பாட்டில் இயேசுவின் நேரடி சீடர்கள் குறிப்பிட்ட செய்திகளே ஆதாரமாக எடுத்து கொள்ளப்பட்டு உள்ளது. பவுலின் கருத்துக்கள் எதற்கும் ஆதாரமாக எடுக்காத பட்சத்தில் இயேசுவின் உண்மை போதனைகள் வெளிப்படும் என்கிற காரணத்தினால்.
எரேமியா 4:22
பதிலளிநீக்கு22 என் மக்கள் முட்டாள்கள், அவர்கள் என்னை அறியவில்லை; அவர்கள் முட்டாள்தனமான பிள்ளைகள், அவர்களுக்கு அறிவு இல்லை;
மத்தேயு 5:45
பதிலளிநீக்குTamil Bible: Easy-to-Read Version
45 நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவீர்கள். உங்கள் பிதாவானவர் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார். உங்கள் பிதாவானவர் நன்மை செய்பவர்களுக்கும் தீமை செய்பவர்களுக்கும் மழையை அனுப்புகிறார்
25 “கிறிஸ்து என்று அழைக்கப்படுகிற மேசியா வந்துகொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அவர் வந்ததும் எங்களுக்கு அனைத்தையும் விளக்குவார்” என்றாள் அப்பெண்.
பதிலளிநீக்கு26 பிறகு இயேசு, “இப்பொழுது அவர்தான் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறார். நான்தான் மேசியா” என்றார்.
https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%204&version=ERV-TA
தன் சொந்த ஊரில் இயேசு
பதிலளிநீக்கு16 தான் வளர்ந்த இடமாகிய நாசரேத்திற்கு இயேசு பயணம் செய்தார். யூதர்களின் ஓய்வு நாளில் அவர் வழக்கம் போல் ஜெப ஆலயத்திற்குச் சென்று வாசிப்பதற்காக எழுந்து நின்றார். 17 ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. இயேசு புத்தகத்தைத் திறந்து கீழ்வரும் பகுதி எழுதப்பட்டிருப்பதைக் கண்டார்:
18 “தேவனுடைய ஆவி என்னிலுள்ளது.
ஏதுமற்ற மக்களுக்கு நற்செய்தியைப் போதிப்பதற்கு தேவன் என்னைத் தேர்ந்தார்.
கைதிகள் விடுதலை பெறவும்
குருடர்கள் மீண்டும் பார்வை பெறவும் அம்மக்களுக்குப் போதிக்கும்படியாக தேவன் என்னை அனுப்பினார்.
தங்கள் துன்பத்தினின்று பலவீனர்கள் விடுதலை பெறும்பொருட்டு தேவன் என்னை அனுப்பினார்.
19 மக்களுக்கு தேவன் இரக்கம் காட்டும் காலத்தை அறிவிக்கும்படியாக தேவன் என்னை அனுப்பினார்”
என்பதை இயேசு வாசித்துவிட்டு புத்தகத்தை மூடினார்.
24 மேலும் இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒரு தீர்க்கதரிசியை அவனது சொந்த நகரத்தார் ஏற்றுக்கொள்வதில்லை.
https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%B2%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%204%3A16-30&version=ERV-TA
வெளி 2216 “இயேசுவாகிய நான் சபைகளில் இவற்றை உங்களுக்குச் சொல்லும் பொருட்டு என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் குடும்ப வாரிசு. நான் பிரகாசமான விடிவெள்ளியாக இருக்கிறேன்” என்றார்.
பதிலளிநீக்குhttps://www.biblegateway.com/passage/?search=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%2022&version=ERV-TA
இயேசு ஒரு தீர்க்கதரிசி:
பதிலளிநீக்குமத்தேயு 21:11
இயேசுவைத் தொடர்ந்து வந்த ஏராளமான மக்கள்,, “இவர்தான் இயேசு, கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்துள்ள தீர்க்கதரிசி” எனப் பதிலளித்தனர்.
மாற்கு 6:4
இயேசு மக்களைப் பார்த்து, “ஒரு தீர்க்கதரிசியை மற்ற மக்களே மரியாதை செய்வர். ஆனால் அவர் சொந்த ஊரில் சொந்த மக்களிடம் சொந்த வீட்டில் மரியாதை பெறுவதில்லை” என்றார்.
மாற்கு 6:15
இன்னும் சிலர், “இவர்தான் எலியா” என்றனர். மேலும் சிலரோ, “இயேசு ஒரு தீர்க்கதரிசி. இதற்கு முன்னால் வாழ்ந்த பல தீர்க்கதரிசிகளைப்போன்று இவரும் ஒருவர்” என்று சொல்லிக்கொண்டனர்.
மாற்கு 8
27 இயேசுவும், அவரது சீஷர்களும் பிலிப்பு செசரியா நகரத்தைச் சார்ந்த ஊர்களுக்குச் சென்றனர். அவர்களின் பயணத்தின்போது “மக்கள் என்னை யார் என்று சொல்கிறர்கள்?” என்று இயேசு கேட்டார்.
28 அதற்குச் சீஷர்கள், “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்கின்றனர். சிலர் உம்மைத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்கின்றனர்” என்று சொன்னார்கள். 29 பிறகு இயேசு அவர்களிடம், “நீங்கள் என்னை யார் என்று சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார் அதற்கு பேதுரு, “நீர்தான் கிறிஸ்து” என்று பதில் கூறினான்.
30 இயேசு சீஷர்களிடம், “நான் யார் என்று எவரிடமும் சொல்லவேண்டாம்” என்றார்..
லூக்கா 4:24
மேலும் இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒரு தீர்க்கதரிசியை அவனது சொந்த நகரத்தார் ஏற்றுக்கொள்வதில்லை.
லூக்கா 13:33
அதற்குப் பிறகு, எல்லாத் தீர்க்கதரிசிகளும் எருசலேமில் மரிக்க வேண்டும் என்பதால் நான் என் வழியில் செல்லவேண்டும் என்று சொல்லுங்கள்” என்றார்.
யோவான் 9:17
யூதர்கள் குருடனாயிருந்த அந்த மனிதனிடம் மீண்டும் கேட்டார்கள். “இயேசு உன்னைக் குணமாக்கினான். உன்னால் பார்க்க முடிகிறது. அவனைப்பற்றி நீ என்ன சொல்கிறாய்?” அந்த மனிதன் “அவர் ஒரு தீர்க்கதரிசி” என்றான்.
பதிலளிநீக்குஇயேசு மனித குமாரன்:
மத்தேயு 11:19
மனிதகுமாரன் வந்திருந்து மற்றவர்களைப் போலவே உண்ணுகிறார்: திராட்சை இரசமும் குடிக்கிறார். மக்களோ, ‘அவரைப் பாருங்கள்!’ அதிகமாக உண்ணுகிறார். அதிகமாக திராட்சை இரசமும் குடிக்கிறார். வரி வசூலிப்பவர்களுக்கும் தீயவர்களுக்கும் அவர் நண்பர் என்று சொல்கிறார்கள். ஆனால் ஞானம் அதன் செயல்களால் தீர்மானிக்கப்படுகிறது
மத்தேயு 19:28
இயேசு தன் சீஷர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், புதிய உலகம் படைக்கப்படும்பொழுது, மனிதகுமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப் பின்பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள். பன்னிரெண்டு அரியணைகளில் நீங்கள் அமர்ந்து, இஸ்ரவேலின் பன்னிரெண்டு இனங்களுக்கும் நீதி செய்வீர்கள்.
மத்தேயு 24:30
அப்பொழுது மனித குமாரனின் வருகையை அறிவிக்கும் அடையாளம் வானில் தெரியும். உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் கதறுவார்கள், வானத்து மேகங்களின் மீது மனித குமாரன் வருவதைக் காண்பார்கள். மகத்தான வல்லமையுடனும் மிகுந்த மகிமையுடனும் மனிதகுமாரன் வருவார்.
மத்தேயு 26:2
,“நாளைக்கு மறுநாள் பஸ்கா பண்டிகை என்பதை அறிவீர்கள். அன்றையதினம் மனிதகுமாரன் சிலுவையில் அறைந்து கொல்லப்படுவதற்காக எதிரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்” என்று கூறினார்.
மத்தேயு 26:64
அதற்கு இயேசு,, “ஆம் நான் தான், ஆனால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். எதிர்காலத்தில் தேவனுடைய வலது பக்கத்தில் மனிதகுமாரன் அமர்ந்திருப்பதைக் காண்பீர்கள். மேலும் வானத்து மேகங்களின் மீது மனித குமாரன் வருவதைக் காண்பீர்கள்” என்று விடையளித்தார்.
மாற்கு 13:27
பூமி முழுவதும் தேவதூதர்களை மனிதகுமாரன் அனுப்பிவைப்பார். அத்தேவ தூதர்கள் உலகம் முழுவதிலும் உள்ள கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களைக் கூட்டுவார்கள்.
மாற்கு 14:21
மனித குமாரன் இறந்து போவார். வேதவாக்கியங்களில் எழுதியபடி எல்லாம் நடக்கும். எனினும் எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக் கொடுக்கப்படுவாரோ அந்த மனிதனுக்குக் கேடு வரும். அவன் பிறக்காமல் இருந்தால் அது அவனுக்கு நன்மையாக இருந்திருக்கும்” என்றார்.
யோவான் 9:37
“நீ ஏற்கெனவே அவரைப் பார்த்திருக்கிறாய். இப்போது உன்னோடு பேசிக்கொண்டிருப்பவர்தான் அந்த மனிதகுமாரன்” என்றார்.
யோவான் 3:15
பிறகு அந்த மனிதகுமாரன்மேல் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொருவரும் நித்திய ஜீவனைப் பெறமுடியும்.
இயேசு தேவ குமாரனா? இயேசு மட்டும் தான் தேவ குமாரனா? (Son of GOD)
யாத்திராகமம் 4:22 - ஜெக்கப்
22 அப்போது நீ பார்வோனைப் பார்த்து, ‘இஸ்ரவேல் எனது முதற்பேறான மகன்.
எரேமியா 31:9
9 அந்த ஜனங்கள் அழுதுக்கொண்டே திரும்பி வருவார்கள்.
ஆனால் நான் அவர்களை வழிநடத்தி ஆறுதல் செய்வேன்.
நான் அவர்களை வழிநடத்திச் சென்று நீரோடைக்கு அழைத்துச் செல்வேன்.
அவர்களை நான் எளிதான பாதையில் நடத்திச் செல்வேன்.
எனவே, அவர்கள் இடறமாட்டார்கள்.
நான் அந்த வழியிலே அவர்களை வழிநடத்திச் செல்வேன்.
ஏனென்றால், நான் இஸ்ரவேலின் தந்தை.
எப்பிராயீம் எனது முதலில் பிறந்த மகன்.
1 நாளாகமம் 28:6 - சாலமோன்
6 கர்த்தர் என்னிடம், ‘தாவீது, உன் மகனான சாலொமோன் எனக்கு ஆலயத்தைக் கட்டுவான். அதைச் சுற்றிய இடங்களையும் கட்டுவான். ஏனென்றால் நான் அவனை எனது மகனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நான் அவனது தந்தையாக இருப்பேன்.
சங்கீதம் 89:27 - தாவீது
27 நான் அவனை என் முதற்பேறான மகனாக்குவேன்.
அவன் பூமியின் முதன்மையான அரசனாக இருப்பான்.
எனவே தீர்க்கதரிசிகளை மகன் என்று அழைக்கும் வழக்கம் கர்த்தரிடம் இருக்கிறது என்றோ அல்லது இது மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிழையாகவோ இருக்க வேண்டும் என்றுதான் கருத முடிகிறது.
இருக்கலாம் ஆனால் இயேசு கர்த்தரின் begotton son என்று கூறினால் அதற்க்கு ஆதாரம் என்ன? அது முதன் முதலில் கிங் ஜேம்ஸ் பதிப்பில் தான் குறிப்பிடப்பட்டது.