அதிகம் நம் அனைவரும் சந்திக்கும் கேள்வி!

ஒருவர் மிக நல்லவாராகவும் அதிகம் தான தர்மங்கள் செய்பவராகவும், உதவி செய்பவராகவும், பொறுமையானவராகவும், கோவிலுக்கு சென்று இறைவழிபாட்டில் ஈடுபடுபவராகவும் இருந்தாலும் முஸ்லீம் இல்லை என்றால் நரகமா? இது என்ன மத வெறியாகவும் முட்டாள்தனமாகவும் இருக்கிறது.!! ஒருவரின் கைகால்கள் மிக ஆரோக்கியமாக பலமாகவும் இருக்கிறது. மூளை , இதயம், நுரைஈரல் மற்றும் சிறுநீரகம் என அனைத்தும் மிக சரியாக இயங்கும் நிலையில் உள்ளது ஆனால் உயிர் இல்லை என்றால்? உயிர் இருந்தால் அவன் மனிதன், இல்லை என்றால் அவன் பிணம். இஸ்லாம் உயிர் போன்றது. இஸ்லாம் இருந்தால் அவன் முஸ்லீம்(இறைவனுக்கு கட்டுப்பட்டவன்) இல்லை என்றால் காபிர்(இறை மறுப்பாளன்). முஸ்லீம் என்கிற பதம் அரபியாக இருப்பதால் பலருக்கு பிரச்சனையாக உள்ளது. உலகம் ஓன்று, குலம் ஒன்று, தேவன் ஒன்று, எனவே உலக மக்கள் அனைவரும் இதை பின்பற்ற வேண்டும் என்று சொல்லி படைத்த ஓர் இறைவனின் நெறி பல ஆதாரங்களுடன் வருமேயானால் பலகோணங்களில் ஆய்ந்து அறிந்து உண்மையாக இருக்குமேயானால் அதனை பின்பற்றுவது நம் கடமையாகிறது. அந்த அடிப்படையில் "இஸ்லாம்" ஒவ்வொரு உயிர்களாலும் பின்பற்றப்பட வேண்டிய இறைவனின் வாழ்க்கை நெறி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக