வரதட்சனை


 தமிழர் சமயம் 

கருங்கட் கோசர் நியமம் ஆயினும்
உறும் எனக் கொள்ளுநர் அல்லர்
நறு நுதல் அரிவை பாசிழை விலையே - (அகநானூறு பாடல் 90)- மருதன் இளநாகனார்

பொருள்: திருமணம் பேசச் செல்வோர் பெண்களுக்கு ‘’விலை’’ (ஸ்ரீதனம்) கொடுத்து பெண்ணைத் திருமணம் செய்துகொண்டனர்.

பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப்
பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்,
திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி
அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள்,
நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும், 5
பெறல் அருங் குரையள் ஆயின், அறம் தெரிந்து,
நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து, அவனொடு
இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,
பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும்,
படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம், இருப்பின், 10
தருகுவன் கொல்லோ தானே விரி திரைக்
கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த்
தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும்
கானல் அம் பெருந் துறைப் பரதவன் எமக்கே? (அகநானூறு 280)

பொருள்: பொன்னால் செய்து வைத்தது போல் பூத்துக் கிடக்கும் செருந்திப் பூக்கள் பலவற்றை இவள் தலையில் அணிந்திருக்கிறாள். 

திண்ணிதாக இருக்கும் மணலில் நண்டை ஓடும்படிச் செய்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாள். 

வளையல் அணிந்த இந்தச் சிறுபெண்ணைப் பெறற்கரிய பொருள்களைக் கலம் கலமாக கட்டிக் கொடுத்தாலும் இவளைப் பெறமுடியாது.

எனவே ஒன்று செய்யலாம். 

நான் வாழும் ஊரை விட்டுவிட்டு இவள் தந்தைக்கு அறம் செய்யலாம். 

இவள் தந்தை உப்பு உழவு செய்யும்போது உடனிருந்து உழைக்கலாம். 

கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது அவனுடன் மீன் பிடிக்கச் செல்லலாம். 

அவனுடன் படுத்து உறங்கலாம், அவனைப் பணிந்து நடந்துகொள்ளலாம். அவன் கூடவே இருக்கலாம். 

அப்படி இருந்தால் அவன் இவளை எனக்குத் தரக்கூடும்.

அவன் கொடையாளி. கடலில் மூழ்கி எடுத்துத் தான் கொண்டுவந்த முத்துக்களை, தேனீக்கள் மொய்க்கும் கரையில் எல்லாருக்கும் பங்கிட்டுக் கொடுக்கும் பண்பு கொண்டவன்.  

கானலம் பெருதுறையின் தலைவன். பரதவன். இவளுக்குத் தந்தை. இவன் எனக்கு இவளைத் தந்துவிடுவான். இப்படித் தலைவன் நினைக்கிறான்.  


இந்து மதம் 

அர்ஷா திருமணம் 

ஆர்ஷவிவாஹா என்பது திருமணத்தின் நீதியான வடிவம். ஒரு மணமகனிடமிருந்து ஒரு ஜோடி கால்நடை, ஒரு மாடு மற்றும் ஒரு காளை அல்லது இரண்டு ஜோடிகளைப் பெற்ற பிறகு, ஒரு மனிதன் தனது மகளை மணமகளாகப் பரிசளிக்கும் ஒரு வகையான திருமணமாகும். முன்னாள் மகள் விற்பனை. ஒரு ஜோடி பசுக்களுக்கு ஈடாக ஒருவரின் கன்னி மகளை மணமகளாக வழங்குமாறு யாக்ஞவல்கிய முனிவர் பரிந்துரைக்கிறார்.

அசுர திருமணம் 

அசுரவிவாஹா என்பது மணமகன் தன்னால் இயன்ற செல்வத்தை மணமகள் மற்றும் அவளுடைய உறவினர்களுக்கு வழங்கிய பிறகு, ஒரு கன்னியைப் பெறுவது ஒரு வகையான திருமணமாகும். 

 

கிறிஸ்தவம் 

Jacob loved Rachel. And he said, “I will serve you seven years for your younger daughter Rachel.” Laban said, “It is better that I give her to you than that I should give her to any other man; stay with me.” So Jacob qserved seven years for Rachel, and they seemed to him but a few days because of the love he had for her. (Genesis 29:18-20) 
 
யாக்கோபு ராகேலை நேசித்தார். அதற்கு அவர், “உன் இளைய மகள் ராகேலுக்காக ஏழு ஆண்டுகள் உனக்கு சேவை செய்வேன்” என்றார். லாபான், “நான் அவளை வேறு ஒருவருக்குக் கொடுப்பதைவிட, அவளை உனக்குக் கொடுப்பது நல்லது; என்னுடன் இருங்கள்." ஜேக்கப் ராகேலுக்காக ஏழு வருடங்கள் பணிபுரிந்தார், அவர் அவள் மீது வைத்திருந்த அன்பின் காரணமாக அவை அவருக்கு சில நாட்களே தோன்றின.(ஆதியாகமம் 29:18-20)

Ask me a great amount for a dowry, and I will give whatever you ask of me, but give me the young lady as a wife.” (Genesis 34:12 WEB)

வரதட்சணையும் வெகுமதியும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும், உங்கள் சொற்படி தருகிறேன்; அந்தப் பெண்ணை மாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்றான். (ஆதியாகமம் 34:12)   

இஸ்லாம்

‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4)

“எனவே, அவர்களது எஜமானர்களின் அனுமதியுடன் அவர்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். அவர்களுக்குரிய மணக்கொடைகளை நல்ல முறையில் அவர்களிடம் கொடுத்துவிடுங்கள்.” -(4:25) 

‘நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரை…நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்.’ (குர்ஆன் 33:50) 
 

வரதட்சணையை மறுப்பவனே வெறுப்பவனே

மனிதன்.
ஆண்மகன்.
தமிழன்.
முஸ்லிம்.

8 கருத்துகள்:

  1. கநாநூறு எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் உள்ள 400 பாடல்கள் வௌவேறு காலத்தில் வௌவேறு புலவர்களால் பாடப்பட்டவை. இதில் காணப்படும் இரண்டு பாடல்கள் (பாடல் 86, 138) பழந்தமிழரின் திருமணமுறையை வர்ணிக்கின்றன.

    அவற்றுள் பாடல் 86 நல்லாவூர் கிழார் என்ற செந்தமிழ்ப் புலவர் பாடிய பாடல். பொருள் தேடத் தலைவியைப் பிரிந்து சென்று திரும்பும் தலைவனை தலைவியின் தோழி வழிமறித்து “எனது தலைவி உன்னோடு மணமகன் தனக்கு முன்பு நிகழ்ந்த திருமணத்தைக் கூறுவதாகப் பாடப்பெற்றதாகும். இந்தப் பாடலில் கூறப் பெறும் திருமணமுறையைக் காண்போம்.

    உழுந்துதலைப் பெய்த கொழுந்கனி மிதவை

    பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால்

    தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமரி

    மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்

    கனையிருள் அகன்று கவின் பெறு காலைக்

    கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்

    கேடில் விழப்புகழ் நாடலை வந்தென

    வுச்சிக் குடந்தர் புத்தகல் மண்டையர்

    பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்

    முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தரப்

    புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று

    வாலிழை மகளிர் நால்வர் கூடிக்

    "கற்பினின் வாழாஅ நற்பல வுதவிப்

    பெற்றோற் பெட்கும் பிணையை ஆகென

    நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி

    பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க

    வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்

    கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து

    "பேரில் கிழத்தி யாகென" தமர் தர

    ஓரில் கூட்டிய வுடன்புணர் கங்குற்

    கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்

    தொடுங்கினள் கிடந்த வோர்புறந் தமீஇ

    முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப

    வஞ்சினள் உயிர்த்த காலை யாழநின்

    நெஞ்சம் படர்ந்த தெஞ்சா துரையென

    வின்னகை யிருக்கைப் பின்யான் வினவலிற்

    செஞ்சூட் டொண்குழை வண்காது துயல்வர

    அகமலி யுவகைய ளாகி முகனிகுத்

    தொய்யென விறைஞ்சி யோளே மாவின்

    மடங்கொண் மதைஇய நோக்கின்

    ஒடுங்கீ தோதி மாஅ யோளே. (அகநானூறு பாடல் 86)

    "எங்கள் திருமணநாளன்று உழுந்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த, பக்குவமாகக் குழைந்த பொங்கலோடு, மலைபோல் குவிந்த பெருஞ் சோற்றினை உண்பவர்கள் கூட்டம் நிறைந்திருந்தது.

    வரிசையாக கால்களை நட்டுக் குளிர்ந்த மணப் பந்தல் முழுதும் வெளியிலிருந்து கொண்டுவந்த வெண்மணல் பரப்பப் பட்டிருந்தது.

    மனையில் விளக்கு ஏற்றி மலர் மாலைகளை பந்தல் முழுதும் நெருக்கமாகத் தொங்க விட்டு மிகஅழகாக அலங்கரித்துள்ளார்கள். திருமண வீட்டில் மனைவிளக்குகளை ஏற்றி வைத்து ஒளிபெறச் செய்துள்ளார்கள்.

    புகழினையுடைய திங்களுடன் கூடிய உரோகிணி நன்னாள் குற்றமற்றதும் வாழ்விற்கு நல்லது பயக்கும் அடர்ந்த இருள் நீங்கி, விடியல் தொடங்கும் வனப்பு மிகு நேரத்தில் திருமண விழா தொடங்குகிறது.

    தலையில் நன்நீர்க் குடத்தினைத் தாங்கியும், கையில் அகன்ற பாத்திரத்தை ஏந்திக் கொண்டும், திருமணத்தை செய்து வைக்கும், கலகலப்புடன் கூடிய முதிய மங்கல வாழ்வரசியர் நீர்க் குடங்களை முன்னேயும் பின்னேயும் முறைமுறையாகத் தந்திட மணமகளை நன் நீராட்டினர்.

    நல்ல மக்களைப் பெற்று அடி வயிற்றில் வரி வரியாகத் தழும்புகள் கொண்ட மணிவயிறு வாய்ந்த மங்கல மகளிர் நால்வர் தூய ஆடைகளையும் அணிகளையும் அணிந்து கூடிநின்ற மணமகளிடம் 'உன்னை அடைந்த கணவனை விரும்பிக் கூடிக் "கற்பு நெறியின்றும் தவறாமல் நல்லறங்களைச் செய்து, கணவன் விரும்பத்தக்க மனைவியாhக அவனை வாழ்நாள் முழுதும் நன்கு பேணிக் காத்து வாழும் எண்ணத்தைக் கைக் கொண்டு வாழ்வாயாக!"

    என்று நீருடன் குளிர்ந்த இதழ்கள் உள்ள பூக்களையும் புதிய நெல்லையும் தூவி வாழ்த்தியதால் மணமளின் அடர்த்தியான கரிய கூந்தலில் அவை தோற்றமளிக்க, திருமணம் இனிதே நிகழ்கிறது.

    அதன்பின் ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் சூழ்ந்த உறவினர் 'இன்று முதல் நீயும் பெரிய மனைக் கிழத்தி ஆகிவிட்டாய்' என்று கேலி பேசி மணமகளுக்கு கோடியுடுத்தி மெல்லிய அலங்காரங்களைச் செய்து, வனப்புடன் கூடிய முதலிரவு அறைக்குள் உடன் கூடிய புணர்ச்சிக்குரிய அன்றிரவே அவளை அனுப்பி வைத்தனர். அவ்வறைக்குள் நுழையும் மணமகள் உடுத்திய புதிய புடவைக்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு, தன் இனிய கணவன் இருக்கும் இடம் நோக்கிச் செல்கின்றாள்.

    அப்போது அவள் புத்தாடையில் ஒடுங்கி முகம் புதைத்துக் கிடந்தாள். அவளைத் தழுவும் விருப்பத்தோடு முகத்தை மூடிய துணியைச் சற்றே விலக்க அவள் அதற்கு அஞ்சி பெருமூச்சு விட்டாள். நடுங்கி ஒடுங்கினாள். "ஏன் பயந்தனை, உன் மனதில் உள்ளதை உள்ளவாறு என்னிடம் கூறு'

    என வினாவினேன்.

    அப்போது மானைப்போல் மடமை கொண்டவளும், செருக்கினையுடைய நோக்கினையுடையவளும், குளிர்ந்த கூந்தலையுடையவளும், மாநிறத்தினை உடையவளுமாகிய மணமகள், அகம் மலர்ந்த மகிழ்ச்சியளாய் முகம் தாழ்த்தி என் காதலி மெலிந்த மடல் கொண்ட காதில் அணிந்திருந்த சிவந்த மணிகள் பதித்த அழகிய குழைகள் அசைய விரைந்து வந்து தனக்குரியவனை வணங்கினாள். ஆதலால் அவள் எக்காலத்தும் என்பால் அன்புடையவள். அதனை நீ அறியாய்" என்று தோழியிடம் கூறினான்.

    பதிலளிநீக்கு

  2. (பதவுரை)

    உழுந்து - பருப்பு

    களிமிதவை - குழைதலையுடைய கும்மாயம்

    கோள் - கெட்ட கிரகங்கள்

    கால் - இடம், சகடம்

    திங்களையுடைய நாள் - திருமண நாள்

    பொதுசெய் கம்பலை - திருமணம். எல்லாரும் புகுதற்கு யோக்கிய மாதலால் முதுசெம் பெண்டிர் - அதனைச் செய்கிற ஆரவாத்தினையுடைய செவ்விப்

    பெண்டிர்

    முன்னவும் பின்னவும் - முற்படக் கொடுப்பனவும் பிற்படக் கொடுப்பனவும் முறை

    முறையாகக் கொடுக்க

    புதல்வர் பயந்த - பிள்ளைகளைப் பெற்ற மகளிர்

    அலரி - பூ

    வதுமை நன்மணம் - வதுவைத் திருமணம்

    ஓரில் - சதுர்த்தி அறை

    உடன்புணர்தல் - கூடப்புணர்கிற

    நெஞ்சம் நினைந்தது எஞ்சாதுரை - மறையாதுரை

    கொடும்புறம் - நாணத்தால் வளைந்த உடம்பு

    சதுர்த்தியறை - நான்காம் நாட் பள்ளியறை

    சங்ககாலத் தமிழரது திருமண நெறியை பாடலில் படம்பிடித்து வைத்த புலவர் நல்லாவூர் கிழார் அவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். அவரது சொல்லோவியத்தைப் படிக்கும்போது எமது முன்னோரது நாகரிகச் சிறப்பையும் பகுத்தறிவையும் எண்ணி மனம் பூரிப்படைகிறது.

    புலவர் நல்லாவூர் கிழார் காதலால் பிணைக்கப்பட்ட தலைவன் - தலைவியது முதல் இரவை எப்படி மிக நாகரிகமாக, மிக நளினமாக தலைவன் கூற்றாகச் எடுத்துச் சொல்கிறார் என்பதும் எண்ணி மகிழத்தக்கது.

    முன்னர் கூறியவாறு இந்த இரண்டு சங்க காலத் திருமணங்களிலும் இன்றைய

    திருமணங்களில் உள்ள -

    (1) பொருள் புரியாத வட மொழி மந்திரங்கள் இல்லை

    (2) புரோகிதர் இல்லை.

    (3) எரி ஓம்பல் இல்லை.

    (4) தீவலம் இல்லை.

    (5) அம்மி மிதித்தல் இல்லை.

    (6) அருந்ததி காட்டல் இல்லை.

    (7) கோத்திரம் கூறல் முதலியன இல்லை.

    https://yarl.com/forum3/topic/38509-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/page/6/

    பதிலளிநீக்கு
  3. “மணக்கொடை(வரதட்சணை) கொடுமை இல்லை” (அகம்:280)

    https://www.vallamai.com/?p=81388&cpage=1

    பதிலளிநீக்கு
  4. அகநானூறு Agananuru 280
    பெண் வீட்டாருக்குப் பொருள்களைக் கொடுத்து ஆண் திருமணம் செய்கொள்ளும் காலம் அது.

    இவளை அடைவது எப்படி? காதலன் கலக்கம்.
    1
    பொன்னால் செய்து வைத்தது போல் பூத்துக் கிடக்கும் செருந்திப் பூக்கள் பலவற்றை இவள் தலையில் அணிந்திருக்கிறாள்.

    திண்ணிதாக இருக்கும் மணலில் நண்டை ஓடும்படிச் செய்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

    வளையல் அணிந்த இந்தச் சிறுபெண்ணைப் பெறற்கரிய பொருள்களைக் கலம் கலமாக கட்டிக் கொடுத்தாலும் இவளைப் பெறமுடியாது.
    2
    எனவே ஒன்று செய்யலாம்.

    நான் வாழும் ஊரை விட்டுவிட்டு இவள் தந்தைக்கு அறம் செய்யலாம்.

    இவள் தந்தை உப்பு உழவு செய்யும்போது உடனிருந்து உழைக்கலாம்.

    கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது அவனுடன் மீன் பிடிக்கச் செல்லலாம்.

    அவனுடன் படுத்து உறங்கலாம், அவனைப் பணிந்து நடந்துகொள்ளலாம். அவன் கூடவே இருக்கலாம்.

    அப்படி இருந்தால் அவன் இவளை எனக்குத் தரக்கூடும்.

    அவன் கொடையாளி. கடலில் மூழ்கி எடுத்துத் தான் கொண்டுவந்த முத்துக்களை, தேனீக்கள் மொய்க்கும் கரையில் எல்லாருக்கும் பங்கிட்டுக் கொடுக்கும் பண்பு கொண்டவன்.

    கானலம் பெருதுறையின் தலைவன். பரதவன். இவளுக்குத் தந்தை. இவன் எனக்கு இவளைத் தந்துவிடுவான்.

    இப்படித் தலைவன் நினைக்கிறான்.

    பாடல் சொல் பிரிப்புப் பதிவு
    திணை, நெய்தல்

    1
    பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப்
    பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்,
    திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி
    அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள்,
    நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும், 5
    பெறல் அருங் குரையள் ஆயின், அறம் தெரிந்து,
    2
    நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து, அவனொடு
    இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,
    பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும்,
    படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம், இருப்பின், 10
    தருகுவன் கொல்லோ தானே விரி திரைக்
    கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த்
    தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும்
    கானல் அம் பெருந் துறைப் பரதவன் எமக்கே?

    தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது;
    அல்ல குறிப்பட்டுப் போகாநின்றவன் சொல்லியதூஉம் ஆம்,
    அம்மூவனார் பாடல்

    கி.மு. காலத்துப் பாடல்
    https://vaiyan.blogspot.com/2016/09/agananuru-280.html

    பதிலளிநீக்கு
  5. Genesis 29:18 Jacob loved Rachel. And he said, q“I will serve you seven years for your younger daughter Rachel.”

    ஆதியாகமம் 29:18 யாக்கோபு ராகேலை நேசித்தார். அதற்கு அவர், “உன் இளைய மகள் ராகேலுக்காக ஏழு ஆண்டுகள் உனக்கு சேவை செய்வேன்” என்றார்

    https://biblia.com/bible/esv/genesis/29

    பதிலளிநீக்கு
  6. Ask me a great amount for a dowry, and I will give whatever you ask of me, but give me the young lady as a wife.” (Genesis 34:12WEB)

    வரதட்சணையும் வெகுமதியும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும், உங்கள் சொற்படி தருகிறேன்; அந்தப் பெண்ணை மாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்றான். (ஆதியாகமம் 34:12)

    https://biblehub.com/genesis/34-12.htm

    பதிலளிநீக்கு
  7. 5:5. (நம்பிக்கையாளர்களே!) இன்றுமுதல் நல்லவைகள் அனைத்தும் உங்களுக்கு (உண்பதற்கு) ஆகுமாக்கப்பட்டுவிட்டன. வேதத்தையுடையவர்களின் உணவும் உங்களுக்கு ஆகுமானதே! உங்களுடைய உணவும் அவர்களுக்கு ஆகுமானதே! நம்பிக்கை கொண்ட கற்புடைய பெண்களையும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்ட கற்புடைய பெண்களையும், விபச்சாரிகளாகவோ வைப்பாட்டிகளாகவோ கொள்ளாமல், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மஹர்களையும் கொடுத்து (திருமணம் செய்து) கொள்வது (உங்களுக்கு ஆகும்.) அன்றி, எவன் நம்பிக்கை கொண்டதன் பின்னர் (இவற்றை) நிராகரிக்கின்றானோ அவனுடைய நற்செயல்கள் நிச்சயமாக அழிந்துவிடும். மறுமையிலோ அவன் (முற்றிலும்) நஷ்டமடைந்தவனாகவே இருப்பான்

    பதிலளிநீக்கு
  8. செல்வக் குடும்பத்தில் பிறந்தவள் தலைவி. அவளை மணந்தவன் குடி வறுமையுற்றது. அந்நிலையிலும் தலைவி தன் செல்வத் தந்தையின் உதவியை எதிர்பாராமல், எளிய உணவை வேளை தவறி உண்டு வாழ்கிறாள்.

    கொண்டகொழுநன் குடிவறன் உற்றெனக்
    கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
    ஒழுகுநீர் நுணங்கு அறல்போலப்
    பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே (110)

    என்ற பகுதி இதனைக் காட்டுகிறது.

    https://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a04112l2.htm

    பதிலளிநீக்கு