பொறுமை

தமிழர் சமயம் 

திருக்குறள்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (குறள்: பொறையுடைமை - 151)

 தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும் (௱௫௰௧) —மு. வரதராசன்

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. (௱௫௰௨ - 152)

வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது. (௱௫௰௨) —மு. வரதராசன்

இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. (௱௫௰௩ - 153)

வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும். (௱௫௰௩) —மு. வரதராசன்

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும். (௱௫௰௪ - 154)

நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும். (௱௫௰௪) —மு. வரதராசன்

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. (௱௫௰௫ - 155)

( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர். (௱௫௰௫) —மு. வரதராசன்

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். (௱௫௰௬ - 156)
 
தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு. (௱௫௰௬) —மு. வரதராசன்

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று. (௱௫௰௭ - 157)
 
தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது. (௱௫௰௭) —மு. வரதராசன்

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல். (௱௫௰௮ - 158)
 
செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும். (௱௫௰௮) —மு. வரதராசன்

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர். (௱௫௰௯ - 159)

வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர். (௱௫௰௯) —மு. வரதராசன்

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். (௱௬௰ - 160)

உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர். (௱௬௰) —மு. வரதராசன்

திருமந்திரம்

24. பொறையுடைமை (பொறை யுடைமையாவது, பொறுத்தலை உடைமை, உடம்பிலுள்ள அமுதம் வற்றி அழியாமல் பொறுத்தல் பொறை நிலை என்க)

பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே. - திருமந்திரம் 539 

பொருள்: மெய்ந்நெறி பற்றி வழுவாமல் நிற்கும் யோகியர் நெஞ்சில் மெய்ப் பொருளோடு கூட வேண்டுமென்ற எண்ணமாகிய பல்லி ஒன்றுள்ளது. அது மூக்கையும் நாக்கையும் முற்றுகை யிட்டு அவற்றைச் செயலும்படி அப்பொழுது மாறி நின்று இருளில் செலுத்துகின்ற மன மண்டலத்தில் உலராது அமுதத்தைப் பெருகச் செய்வது மிக்க பொறுமையாகு

ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய
மாலுக்கும் ஆதி பிரமற்கும் மன்னவன்
ஞாலத் திவன்மிக நல்லன்என் றாரே. - 540

பொருள்: பால் போன்ற வெண்ணிற ஒளியில் விளங்கும் சிவனது திருவடியை வணங்கி உய்தி பெறுவதற்காக அவனது கொலு மண்டபத்தைச் சூழ்ந்துள்ள அழிவில்லாத தேவர்களிடம், பொறுமையுடைய இந்த ஞானி திருமாலுக்கும் ஆதிப் பிரமனுக்கும் தலைவன்; உலகத்துக்கும் மிகச் சிறப்புடையவன் என்று சிவபெருமான் அருளிச் செய்தான். (உலாப்பிலி - அழிவில்லாத சிவன். இப்பாடல் சிறு மாறுதல்களுடன் 108 ஆம் பாடலாக வந்துள்ளது.)

ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்
சேனை வளைந்து திசைதொறும் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை விளைந்தருள் எட்டலு மாமே. - 541 

பொருள்: மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்றவர் சீவர்களுக்கு மன்னராவர். அத்தகைய ஞானியைக் கருவி கரணங்களாகிய சேனை சூழ்ந்து அவர் ஏவல் வழி நிற்ப அவரது உடம்பை மாற்றிப் படைக்கும் தேவ தேவனை அவர் ஏனை வழி நீத்து ஞானத்தால் அணுகி அருள் கூட முடியும்

வல்வகை யானும் மனையிலும் மன்றிலும்
பல்வகை யானும் பயிற்றி பதஞ்செய்யும்
கொல்லையி னின்று குதிகொள்ளும் கூத்தனுக்கு
எல்லையி லாத இலயம்உண் டாமே.   - 542

பொருள்: ஆன்மாக்களின் பக்குவத்துக்குத் தக்கவாறு அவரது உடலிலும் உள்ளத்திலும் பலவாறாக இன்ப துன்பங்களை நுகர்வித்துச் சிவபெருமான் பக்குவம் செய்வான். மூலாதாரத்தினின்று ஆதார நிராதாரக் கலைகளிலும் ஆடுகின்ற அக்கூத்தப் பெருமானுக்கு அக் கூத்தின் பயனாக அளவில்லாத ஒருமைப்பாடு உண்டாகும். (கொல்லை - மூலாதாரமே.)

நாலடியார்

கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோடு யாதும் உரையற்க - பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று. நாலடியார் 71

மாலை போன்ற அருவிகளாலே குளிர்ந்த மலைகளையுடைய மன்னனே! அறிவில்லாதவனோடு எதையும் சொல்லவேண்டாம்! அவனிடம் ஒன்றைச் சொன்னால் அவன் மாறுபட்டுப் பதில் உரைப்பான். ஆதலின் கூடுமானவரை அப்பேதையிடமிருந்து தப்பித்து நீங்குதல் நல்லது.

நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
தாரித் திருத்தல் தகுதிமற்று - ஓரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும். - 72

நற்குணமில்லாதவர் பண்பற்ற சொற்களைச் சொல்லும்போது அச்சொற்களைப் பொறுத்துக் கொண்டிருப்பதே தகுதியாகும்! அவற்றைப் பொறுக்காமல் பதில் கூறினால், கடல் சூழ்ந்த உலகம் அதனைப் புகழுக்குரிய செயலாகக் கொள்ளாது; பழிக்குரிய செயலாகக் கருதும்.

காதலார் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
ஏதிலார் இன்சொல்லின் தீதாமோ - போதெல்லாம்
மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப!
ஆவ தறிவார்ப் பெறின். 73

மலர்களிலெல்லாம் அழகான வண்டுகள் ஒலிக்கும் குளிர்ச்சி பொருந்திய கடற்கரையையுடைய வேந்தனே! நமக்கு நன்மை தருவதை ஆராய்ந்து சொல்லும் அறிஞரை உறுதுணையாகப் பெற்றால், அவர்கள் நம் மீது அன்பு கொண்டு கூறும் கடுமையான சொல்லானது, அயலார் மகிழ்ந்து கூறும் இனிமையான சொல்லினும் தீதாகுமா? ஆகாது. (ஏதிலார் என்பதற்குப் 'பகைவர்' எனப் பொருள் கொண்டு, உள்ளத்தில் பகையுணர்வுடன், அதை மறைக்க முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுபவா¢ன் இன்சொல்லைப் போல், அன்புடையார் கடுஞ்சொல் தீதாகுமோ? எனவும் பொருள் கொள்ளலாம்.)

அறிவது அறிந்தடங்கி அஞ்சுவது அஞ்சி
உறுவது உலகுவப்பச் செய்து - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது. 74

அறிய வேண்டிய நன்மை தீமைகளை அறிந்து, அடக்கமுடையவராகி, அஞ்ச வேண்டிய பழி பாவங்களுக்கு அஞ்சி, செய்வதை உலகம் மகிழுமாறு செய்து, அறநெறியில் வந்த பொருளால் மகிழ்ந்து வாழும் இயல்புடையவர் எக்காலத்தும் துன்புற்று வாழ்தல் இல்லை. (நன்மை தீமைகளை அறிந்து தீமைக்கு அஞ்சி உலகம் மகிழ வாழும் அடக்கமுடையவர் துன்புறுதல் இல்லை.)

வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க, பொறானாயின
தூற்றாதே தூர விடல். 75

மனவேற்றுமை சிறிதும் இன்றி இருவர் நண்பரான பிறகு, தகாத ஒழுக்கம் ஒருவனிடம் உண்டானால் அதனை மற்றொருவன் பொறுக்கக் கூடிய அளவு பொறுத்துக் கொள்க! பொறுக்கமுடியாமற் போனால் பிறர் அறிய அவனது குற்றத்தை வெளிப்படுத்திப் பழிக்காமல் அவன் நட்பை விட்டு விடுக. (நண்பா¢டையே மன வேறுபாடு தோன்றினால் விலகிவிட வேண்டுமேதவிர, பழி தூற்றித் திரியக்கூடாது. குறிப்பு : விட்டு நீங்குதல் என்பது இறுதி நிலை ஆதலால், இப்பாடல், அடுத்த இரு பாடல்களுக்குப் பின் அமைதல் நன்று).

இன்னா செயினும் இனிய ஒழிகென்று
தன்னையே தான்நோவின் அல்லது - துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட!
விலங்கிற்கும் விள்ளல் அரிது. 76

காடுகள் நிறைந்த நாட்டையுடைய மன்னனே! நண்பர்கள் நமக்குத் தீமைகள் செய்தாலும் அவை நன்மையாகக் கடவது என்று நினைத்து, வினைப்பயன் என எண்ணித் தன்னையே தான் வெறுப்பதல்லாமல், நெருங்கி மனம் ஒன்றிப் பழகியவரை விட்டு விடாதே! சேர்ந்தபின் பிரிதல் விலங்கினிடத்தும் இல்லை! (பிறர் செய்யும் தீமையும் நாம் பொறுக்கும் தன்மையால் அவர் மனமாற்றத்துக்குக் காரணமாதல் கூடும். ஆதலால் 'விட்டு விலகாதே' என்றார்).

பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த
அரிய பொறுப்ப என்றன்றோ - அரியரோ
ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட!
நல்லசெய் வார்க்குத் தமர். 77

ஓல்' என ஒலிக்கும் அருவிகளைக் கொண்ட உயர்ந்த மலைகளையுடைய நல்ல நாட்டின் வேந்தனே! பொ¢யோர்களின் மேன்மையான நட்பைக் கொள்ளுதல், தாங்கள் செய்த அரிய குற்றங்களையும் அவர்கள் பொறுத்துக்கொள்வார்கள் அல்லவா? எப்போதும் நல்ல செயல்களைச் செய்பவர்க்கு நல்ல நண்பர்கள் கிடைக்க மாட்டார்களா? கிடைப்பார்கள். (பழகியவர் பிழையைப் பொறுத்தலே உயர்ந்த நட்பாம்).

வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
அற்றம் அறிய உரையற்க - அற்றம்
மறைக்கும் துணையார்க்கு உரைப்பவே தம்மைத்
துறக்கும் துணிவிலா தார். 78

உடல்வற்றித் துரும்பு ஒத்த நிலை எய்துமாறு பசி வந்தாலும், உதவி செய்யும் பண்பு இல்லாதவா¢டம் சென்று வறுமையைச் சொல்லாதீர்! உயிரை விடும் துணிவில்லாதவர், உதவி செய்யும் பண்புடையவா¢டம் மட்டும் தமது வறுமைபற்றியுரைப்பர். (பசித் துன்பத்தைப் பொறுத்து, உழைத்து வாழ வேண்டுமே தவிர, பிறர் உதவிகேட்டு வாழ்தல் சிறப்பன்று என்பது பொருள்).

இன்பம் பயந்தாங்கு இழிவு தலைவரினும்
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க - இன்பம்
ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட!
பழியாகா ஆறே தலை. 79

இன்பம் தந்த செயலிலே தாழ்வு நேர்ந்தாலும் இன்பத்தையே கருதி, அவ்வின்பத்திலேயே நிலைத்திருக்கும் உனக்கு இன்பம் இடையறாது பெருகுவதைக் கண்டாலும், நீ பழியுண்டாகாத செயலைச் செய்வதுதான் சிறந்ததாகும். (ஒரு செயலைச் செய்யும்போது அதில் இன்பம் உண்டாவதோடு தாழ்வும் பழியும் உண்டானால், அச்செயலை விட்டு விட வேண்டும்).

தான்கெடினும் தக்கார்கேடு எண்ணற்க தன்னுடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத்து உண்ணற்க - வான்கவிந்த
வையக மெல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோடு இடைமிடைந்த சொல். 80

தான் கெட்டாலும் தக்கார்க்குக் கேடு செய்ய எண்ணாதிருப்பாயாக! தனது உடலில் உள்ள சதை முழுதும் பசியால் உலர்வதானாலும், உண்ணத்தகாதவா¢டத்து உணவை உண்ணாதிருப்பாயாக! வானம் மூடிய இந்த உலகம் எல்லாம் பெறுவதாயினும் பொய் கலந்த சொற்களைச் சொல்லாதிருப்பாயாக!


இஸ்லாம்


குர்ஆன் கூறும் பொன்னான போதனைகளில் பொறுமையும் ஒன்றாகும். பொறுமையைப் போதிப்பது எளிதானது. ஆனால், நடைமுறையில் அதை கடைப்பிடித்துக் காட்டுவதே கடினமானதாகும். நபியவர்கள் பொறுமையின் பொக்கிஷமாக வாழ்ந்து எமக்கு வழிகாட்டியுள்ளார்கள். பொறுமையின் பெருமை குறித்தும் அதை எப்படி ஏற்படுத்திக் கொள்வது என்பது குறித்தும் சற்று நோக்குவோம்.

பொறுமையின் பெருமை:

அல்குர்ஆனில் பல வசனங்கள் நபி(ச) அவர்களை விளித்து பொறுமையைப் போதிக்கின்றது.

‘(நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக! உமது பொறுமை அல்லாஹ்வுக்கே அன்றி வேறில்லை. அவர்களுக்காக நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் சூழ்ச்சி செய்வதன் காரணமாக நீர் (மன) நெருக்கடிக் குள்ளாக வேண்டாம்.’ (16:127)

‘(நமது) தூதர்களில் உறுதிமிக்கோர் பொறுமையாக இருந்தது போல் (நபியே!) நீரும் பொறுமையாக இருப்பீராக! அவர்களுக்காக நீர் அவசரப்பட வேண்டாம். அவர்களுக்கு வாக்களிக்கப் பட்டதை அவர்கள் காணும் நாளில் (பூமியில்) பகலின் ஒரு கணப்பொழுதேயன்றி தாம் தங்கியிருக்கவில்லை என்பது போன்று (உணர்வார்கள். இது) எடுத்துரைக்க வேண்டியதாகும். பாவிகளான இக்கூட்டத்தாரைத் தவிர வேறெவரும் அழிக்கப்படுவார்களா?’ (46:35)

இவ்வாறே முஃமின்களை விளித்தும் பொறுமை போதிக்கப்படுகின்றது.

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் பொறுமையாக இருங்கள். (எதிரிகளை மிஞ்சும் வண்ணம்) சகிப்புத் தன்மையைக் கடைப்பிடியுங்கள். இன்னும் உறுதியாக இருங்கள். நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.’ (3:200)

பொறுமையுடையோரை அல்லாஹ் போற்றுகின்றான்.

கிழக்கு, மேற்குத் திசைப் பக்கம் உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது (மட்டும்) நன்மையாகாது. மாறாக அல்லாஹ்வையும் இறுதி நாளையும் வானவர்களையும் வேதங்களையும் நபிமார்களையும் நம்புவோரும், தாம் விரும்புகின்ற செல்வத்தை (அல்லாஹ்வுக்காக) நெருங்கிய உறவினர், அநாதைகள், வறியோர், வழிப்போக்கர், யாசிப்போர் (ஆகியோருக்கும்) அடிமைகளை விடுதலை செய்வதற்கும் வழங்கி, தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தைக் கொடுப்போரும், வாக்குறுதி அளித்தால் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும், வறுமை, துன்பம், போர் என்பவற்றின் போது சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்களாவர். அவர்கள்தாம் உண்மை உரைத்தவர்கள்ளூ பயபக்தியாளர்கள்.’ (2:177)

பொறுமையுடையோரை அல்லாஹ் நேசிப்பதாகக் கூறுகின்றான்.

‘மேலும் எத்தனையோ நபிமார்களுடன் இணைந்து அவர்களைப் பின்பற்றிய பலரும் போர் புரிந்துள்ளனர். அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்)திற்காக அவர்கள் மனம் தளரவோ, பலவீனப்படவோ, அசத்தியத்திற்கு அடிபணியவோ இல்லை. மேலும், பொறுமையாளர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்.’ (3:146)

பொறுமையாளர்களுக்கு உதவுவதாக அறிவிக்கின்றான்.

‘மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள். உங்களுக்குள் முரண்பட்டுக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் துணிவிழந்து, பலமிழந்துவிடுவீர்கள். பொறுமையாக இருங்கள், நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.’ (8:46)

பொறுப்பவர்களுக்கே நல்லது என்று போற்றுகின்றான்.

‘நீங்கள் தண்டிப்பதாயின் நீங்கள் துன்புறுத் தப்பட்ட அளவுக்கே தண்டியுங்கள். நீங்கள் பொறுமை யுடனிருந்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே மிகச் சிறந்ததாகும்.’ (16:126)

பொறுமையுடையோரை அளவற்ற நற்கூலி வழங்குவதாக வாக்களிக்கின்றான்.

‘உங்களிடம் உள்ளவை முடிந்து விடக் கூடியவையே. அல்லாஹ்விடம் உள்ளவையோ நிலையான வையாகும். மேலும், பொறுமையுடன் இருந்தவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றிற்காக அவர்களது கூலியை நாம் வழங்குவோம்.’ (16:96)

‘நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே! உங்கள் இரட்சகனை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நன்மையுண்டு. மேலும், அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர் களுக்கு அவர்களது கூலி கணக்கின்றி வழங்கப்படும் என (நபியே!) நீர் கூறுவீராக!’ (39:10)

பொறுப்பவர்களுக்கே சுவனத்தை அருளுவதாக கூறுகின்றான்.

‘மேலும், அவர்கள் பொறுமையாக இருந்த காரணத்தால், சுவர்க்கத்தையும், பட்டாடையையும் அவர்களுக்குக் கூலியாக வழங்குவான்.’ (76:12)

பொறுமை பல வகை:

01. அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதில் பொறுமையைக் கடைப்பிடித்தல்: அல்லாஹ்வின் ஏவல்களைச் செயற்படுத்தும் போது பல கஷ;டங்களைச் சந்திக்க நேரிடும். அவற்றைச் சகித்துக் கொள்வது முதல் வகை.

02. தடுக்கப்பட்டவற்றைத் தவிர்ந்து கொள்வதில் பொறுமை. அல்லாஹ் தடுத்தவற்றை விட்டும் நாம் ஒதுங்கி வாழ்வதும் பொறுமையே! ஷத்தானிய சக்திகளும் மனோ இச்சையும் தவறின்பால் அழைக்கும். அந்தத் தவறைச் செய்வதில் தற்காலிக இன்பம் கிடைக்கும். மனதைக் கட்டுப்படுத்தி பொறுமையாக இருந்தால்தான் தவறை விட்டும் ஒதுங்கி வாழ முடியும்.

03. தனக்கு ஏற்படும் சோதனைகள், இழப்புக்கள் என்பவற்றைப் பொறுத்துக் கொள்ளல்: தனது தேர்வு இல்லாமலேயே ஏற்படும் இழப்புக்களை மனிதன் இலகுவில் சகித்துக் கொள்கின்றான். எல்லாம் விதிப்படி நடந்தது என்று நம்பிவிட்டும் போகின்றான். இவற்றை விரும்பியோ விரும்பாமலோ அவன் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

சோதனைகள், இழப்புக்களில் இன்னுமொரு வகை உள்ளது. அதுதான் அடுத்த மனிதர்களால் எமக்கு ஏற்படுத்தப்படும் இழப்புக்கள், கஷ;டங்கள். இவற்றை மனம் இலகுவாக மன்னிப்பதில்லை. இதற்குப் பழி தீர்க்க வேண்டும் என மனம் வெறி கொள்ளும். இவற்றையும் மன்னிப்பதுதான் உயர்ந்த உள்ளத்திற்கான அடையாளமாகும். நபி(ச) அவர்கள் இப்படித்தான் வாழ்ந்து காட்டினார்கள். நபி(ச) அவர்கள் இதில் உயர்ந்த நிலையில் இருந்தார்கள். தீங்கு செய்தவர்களை மன்னித்தது மட்டுமன்றி அவர்களுக்கு நல்லுபகாரமும் செய்தார்கள்.

‘நன்மையும் தீமையும் சமமாக மாட்டாது. மிகச் சிறந்ததைக் கொண்டே (தீமையை) நீர் தடுப்பீராக! அப்போது, எவருக்கும் உமக்கும் இடையில் பகைமை இருக்கின்றதோ அவர் உற்ற நண்பரைப்போல் ஆகிவிடுவார்.’

‘பொறுமையாக இருப்போரைத் தவிர வேறு எவருக்கும் இ(ப் பண்பான)து கொடுக்கப்படமாட்டாது. மேலும், மகத்தான பாக்கியமுடையோரைத் தவிர வேறு எவருக்கும் இது கொடுக்கப்பட மாட்டாது.’(41:34-35)

இந்த மூன்று வகைப் பொறுமையும் தலைமைத்துவப் பண்பிற்கு அவசிய மானதாகும்.

‘அவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்து, எமது வசனங்களை உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தபோது எமது கட்டளைப் பிரகாரம் நேர்வழி காட்டும் தலைவர்களை அவர்களிலிருந்து நாம் உருவாக்கினோம். (32:24)

பொறுமையும் உறுதியும் இணையும் போது தலைமைத்துவத்தை வழங்கியதாக அல்லாஹ் கூறுகின்றான். இந்த உயரிய பண்பை எப்படி உருவாக்கிக் கொள்வது என்று வினா இப்போது எழலாம்.

* உலகில் எது நடந்தாலும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது. அவனது அனுமதியின்றி அணுவும் அசையாது! உங்களுக்கு எவராவது ஒரு தீங்கை செய்துவிட்டால் அது அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்தது என்று உறுதியாக நம்பினால் செய்தவன் இவன் என்றாலும் செய்வித்தவன் அல்லாஹ் என்று எண்ணும் போது பழிவாங்கும் வெறி அடங்கி மனம் கொஞ்சம் பக்குவம் பெறும்.

* நான் செய்த ஏதோ ஒரு தவறுக்காக அல்லாஹ் இவனை என்மீது ஏவி விட்டிருக்கலாம். எனவே, நான் என்ன தவறு செய்தேன் எனச் சிந்தித்து தவறைத் திருத்த முனைய வேண்டும். இப்படி சிந்திக்கும் போது அவன் தவறு செய்ததற்கு ஒரு வகையில் நானும் காரணம் என மனம் கோபத்தைத் தணிக்கும்.

‘உங்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால், அது உங்கள் கைகள் சம்பாதித்துக் கொண்டதினாலேயாகும். மேலும், அவன் அதிகமானவற்றை மன்னித்து விடுகின்றான்.’(42:30)

இச்சந்தர்ப்பத்தில் தவ்பா செய்ய வேண்டும். அலி(வ) அவர்கள் இது பற்றிக் கூறும் போது,

‘ஒரு அடியான் அல்லாஹ்வின் மீதே நல்லெண்ணம் வைக்கட்டும். தான் செய்த தவறுகளுக்காக அச்சப்படட்டும்’ என்பார்கள். மற்றும் சிலர்,

‘எந்த பலாய் முஸிபத்து இறங்குவ தென்றாலும் பாவம்தான் காரணமாக இருக்கும். தவ்பாவின் மூலமாகவே அது நீக்கப்டும்’ என்று கூறுவர்.

* தனக்குப் பிறரால் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்வதில் கிடைக்கும் நன்மைகளை எண்ணிப்பார்க்க வேண்டும். அப்போது உள்ளம் அமைதிபெறும்.

‘தீமையின் கூலி அது போன்ற தீமையேயாகும். எனினும் எவர் மன்னித்து, (உறவை) சீர் செய்து கொள்கின்றாரோ அவருடைய கூலி அல்லாஹ் விடமே இருக்கின்றது. நிச்சயமாக அவன் அநியாயக் காரர்களை நேசிக்கமாட்டான்.’ (42:40)

ஒருவருக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதை எதிர்கொள்வதில் மூன்று வகையினர் உள்ளனர்.

1. தனக்கு அநீதி இழைத்தவனுக்கு அதே அளவு பதிலடி கொடுப்பவர்.

2. தனக்கு ஏற்பட்ட பாதிப்பை விட அதிகமாக தவறு செய்தவனுக்கு பதிலடி கொடுப்பவர். (இவர் அநியாயக்காரர்)

3. மன்னித்து பொறுமை காப்பவர்:

இவருக்கு அல்லாஹ் நற்கூலிகளை வழங்குகின்றான். அநியாயக்காரரை அல்லாஹ் நேசிப்பதில்லை. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அதேயளவு பதிலடி கொடுப்பவரை அல்லாஹ் விரும்புவதாகவும் சொல்லவில்லை. தண்டிப்பதாகவும் கூறவில்லை.

எனவே, அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்து மன்னித்துவிட்டுப் போகலாம் என உள்ளத்தை ஆறுதல் படுத்தினால் கொந்தளித்து வரும் கோபத்தைத் தணித்துவிடும். கொதிக்கும் உள்ளம் அடங்கிவிடும்.

* உங்களுக்குத் தீங்கு செய்தவரைப் பழி தீர்ப்பதை விட மன்னித்துவிடுவது உங்கள் உள்ளத்தில் கோபம், ஏமாற்றும் எண்ணம், பழிதீர்க்கும் வஞ்சகம் போன்ற கெட்ட எண்ணங்களை அகற்றிவிடும். உள்ளம் உடனே அமைதி பெற்றுவிடும். பழிதீர்க்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் பழிதீர்க்கும் வரை அது அமைதி பெறாது. அதற்காக நேரத்தை, சக்தியை, பணத்தையெல்லாம் செலவு செய்து சிரமப்பட வேண்டியும் இருக்கும். மன்னித்துவிட்டால் மனம் அமைதி பெற்று விடும். இது ஒரு வகையில் இலாபமாகும்.

* தனக்குத் தீங்கிழைத்தவரைத் தண்டிப்பது உள்ளத்திற்கு ஒரு இழிவாகும். மன்னிப்பது உள்ளத்திற்கு ஒரு கண்ணியமாகும். இதையே நபி(ச) அவர்கள், ‘மன்னிப்ப தால் அல்லாஹ் கண்ணியத்தைத் தவிர வேறு எதையும் அதிகரிப்பதில்லை.’ (முஸ்லிம்) என்றும் கூறினார்கள். தண்டிப்பது வெளிப்படையில் கௌரவ மாகத் தெரிந்தாலும் அந்தரங்கத்தில் அது இழிவாகும். மன்னிப்பது வெளிப்படையில் இழிவாகத் தெரிந்தாலும் அந்த்ரங்கத்தில் அது கண்ணியமாகும்.

* தன்னைத் தாக்கியவனைத் தான் மன்னித்து தாராளமாக நடந்து கொண்டால் தான் செய்த தவறுகளையும் அல்லாஹ் மன்னித்து தன்னுடன் தாராளமாக நடந்து கொள்வான் என்று எண்ணினால் மனம் அடங்கிப் போகும்.

* தனக்கு தீங்கிழைத்தவனுக்கு பதிலடி கொடுக்க திட்டம் தீட்டி அதற்காக பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து பழி தீர்க்கும் போது அது வெற்றி பெறாவிட்டால் அனைத்துமே நஷ;டமாகிப் போகும். அத்துடன் மனம் ஆறுதல் அடையவே மாட்டாது. அதே வேளை, பழி தீர்க்கும் பணியில் நமக்கே மீண்டும் அதில் பாதிப்பு ஏற்பட்டால் அது ஈடு செய்ய முடியாத இழப்பாகிவிடும். இதைவிட மன்னித்துவிட்டால் மனம் நிம்மதி பெறுவதுடன் அல்லாஹ்விடத்தில் கூலியைப் பெறுவது இலாபமானதாகும்.

* நபி(ச) அவர்கள் தனக்காக யாரையும் பழிதீர்த்ததில்லை. நபி(ச)அவர்களே எமக்கு அழகிய முன்மாதிரியாவார்கள். அவர்கள் உயர்ந்த குணநலன்மிக்கவர்கள். அப்படியென்றால் பழிக்குப் பழி வாங்குவது உயர்ந்த பண்போ அழகிய முன்மாதிரியோ அல்ல. இதை சிந்தித்துப் பார்த்தால் பழிதீர்த்தல் என்பது சிறந்த வழி அல்ல என்பதைப் புரியலாம்.

அல்லாஹ்வின் ஏவலைச் செய்யும் விடயத்தில் அல்லது தடையை விட்டும் ஒதுங்கும் விடயத்தில் அல்லது நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் விடயத்தில் எமக்கு எதிராகச் செயற்பட்டவரிடத்தில் பழிவாங்கும் விதத்தில் நடக்காமல் மன்னிப்பது கட்டாயமாகும். ஏனெனில், அல்லாஹ் முஃமின்களின் உயிரையும் உடைமைகளையும் விலை கொடுத்து வாங்கிவிட்டான்.

‘நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர் களிடமிருந்து அவர்களது உயிர்களையும், அவர்களது செல்வங்களையும் அவர்களுக்கு சுவர்க்கம் உண்டென விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள்ளூ அவர்கள் (எதிரி களைக்) கொல்வார்கள்ளூ (எதிரிகளால்) கொல்லப்படுவார்கள். (இது) தவ்றாத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் (அல்லாஹ்) தன்மீது கடமையாக்கிக்கொண்ட வாக்குறுதியாகும். அல்லாஹ்வை விட, தனது வாக்குறுதியை நிறைவேற்றுபவன் வேறு யார்? எனவே, நீங்கள் செய்த உங்களது இவ்வியாபாரம் குறித்து மகிழ்ச்சியடையுங்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.’ (9:111)

எனவே, இதற்கான கூலியை அல்லாஹ்விடமே எதிர்பார்க்க வேண்டும்.

நாம் ஏதாவது தவறு செய்து அதனால் பாதிப்பைச் சந்தித்திருந்தால் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் மீது கோபப்படுவதை விட்டு விட்டு எம்மையே நாம் நொந்து கொள்ள வேண்டியதுதான். நம்மை நாம் திருத்தியாக வேண்டும்.

உலக விவகாரங்களில் எதையேனும் அடைந்து கொள்ளும் விடயத்தில் நாம் பிறரால் சிரமங்களைச் சந்தித்தால் சிரமங்கள், இழப்புக்கள் இன்றி இந்த உலகில் எதையும் பெற முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்து விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும்.

பொறுமையாளிகளுடன் அல்லாஹ் இருப்பதாகவும் பொறுமையாளிகளை அல்லாஹ் நேசிப்பதாகவும் அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான். நாம் பொறுத்துக் கொண்டால் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும். அல்லாஹ்வின் உதவி கிடைத்தால் பல்வேறு பட்ட தீங்குகளில் இருந்தும் பாதுகாப்புக் கிடைக்கும். இந்த வகையில் நாம் எதிர் நடவடிக்கை எடுப்பதை விட மன்னிப்பது பெரிதும் பாதுகாப்பானது என்பதை உணர்ந்தால் பழி தீர்க்கும் வெறிநிலையை ஒழிக்கலாம்.

* பொறுமை ஈமானின் பாதி என்று கூறப்படுகின்றது. ஈமானின் பாதியை இழக்க மனம் இடம் தரக் கூடாது.

* நாம் பொறுத்துக் கொண்டால் எமக்கு அல்லாஹ் உதவி செய்வான். நாம் பழி தீர்க்கச் சென்றால் அல்லாஹ்வின் உதவி எமக்குக் கிடைக்காது. பொறுப்பவன் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றான். பழி தீர்ப்பவன் தன்னையே நம்பி களத்தில் இறங்குகின்றான். அல்லாஹ்வின் உதவி எமக்குக் கிடைப்பதே அனைத்துவித வெற்றிக்கும் வழியாகும். இதை உணர்ந்தால் பழிதீர்ப்பதை விட மன்னிப்பதே மகத்தான வெற்றி என்பதை அறியலாம்.

* சில வேளை பழிதீர்ப்பதில் நாம் வெற்றி பெற்றால் கூட பின்னர் மனம் நோகலாம். ஏன் இப்படிச் செய்தோம் என்று எம்மை நாமே நொந்து கொள்ள நேரிடலாம். அல்லது எம்மை மக்கள் சபிக்கலாம். அப்போது மனம் நொந்தாலும் தீர்வு பெற மாற்று வழி இருக்காது.

* சில வேளை நாம் பழி தீர்த்த பின்னர் மீண்டும் அவன் எம்மைப் பழி தீர்க்க முனையலாம். முன்னரை விட தீவிரமாக நமக்கு எதிராகச் செயற்பட முனையலாம். பின்னர் நம்மை நாம் தற்காத்துக் கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். அல்லது இழப்புக்களைச் சந்திக்க நேரிடும். இதை விட மன்னித்து விடுவது இலகுவான தல்லவா?

* பழிதீர்க்க நினைப்பவன் பழிதீர்க்கும் போது கோபம், ஆத்திரம் காரணமாக வரம்பு மீறிவிடலாம். அதனால் அவன் அநியாயக்காரன் எனும் பட்டியலில் அடங்கிவிடுவான். அல்லாஹ்வின் நேசத்தை இழந்து கோபத்தைப் பெற்றுத் தரும் செயல் இதுவாகும். இதனாலும் பழிவாங்கும் எண்ணம் தவிர்க்கப்பட வேண்டும்.

* பிறரால் ஏற்படும் தீங்குகளை மன்னிப்பதால் எமது பாவங்கள் மன்னிக்கப்படும்É அந்தஸ்து உயர்த்தப் படும். ஆனால், பழிவாங்கினால் பாவம் மன்னிக்கப்படுவதையும், அந்தஸ்து உயர்த்தப்படுவதையும் நாம் இழந்துவிடுவோம். எனவே, மன்னிப்பதே மேலானதாகும்.

எனவே, மன்னிப்பதால் ஏற்படும் இது போன்ற நன்மைகளை மனதிற் கொண்டு மன்னிக்கும் மனதைப் பெறலாம். பழிவாங்கும் உணர்வையும் கோபத்தையும் அடக்கலாம். இந்த வகையில் மூன்று வகைப் பொறுமையிலும் உறுதியாக இருப்பதுதான் ஏற்கனவே நாம் கூறிய பொறுமையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வசனங்கள் கூறிய பயன்களைப் பெறுவதற்கான சிறந்த வழியாகும். ஆகவே, பொறுமை மூலம் உயர்வு பெற முயல்வோமாக!..

கிறிஸ்தவம்

‘உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்’ (லூக்கா 21:19)

"நீங்கள் குறைவே இல்லாதவர்களாய் முதிர்ச்சியும் முழுமையும் அடையும்படி பொறுமை நிறைவாய்ச் செயல்படட்டும்!" (யாக் 1:4).

ஜெப வேளையில் ஆண்டவரிடம் யோபு கதறியழுதாலும், பதில் வருவதற்குப் பொறுமையோடு காத்திருந்தான் (யாக் 5: 10,11). 

தானியேலும், தன் ஜெபத்தின் பலனைக் காண அநேக நாள் காத்திருக்க வேண்டியிருந்தது (தானி 10:12).

"கடவுளின் அன்மைப் பெறவும், கிறிஸ்துவின் பொறுமையை அடையவும் ஆண்டவர் உங்கள் உள்ளங்களுக்கு வழிகாட்டுவாராக" (2 தெச 3:5).

நமக்கு ஏற்படுகிற துன்பங்களுக்காகவும் நாம் மகிழ்கிறோம். துன்பங்களுக்காக நாம் ஏன் மகிழ்கிறோம்?ஏனென்றால் இத்துன்பங்கள் தான் நம்மைப் பொறுமை உடையவர்களாக ஆக்குகிறது. - (ரோமர் 5:3)

ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், சுயநிர்ணயம், இவைகளுக்கு விரோதமான சட்டங்கள் இல்லை." (கலாத்தியர் 5: 22-23)

"உங்களை நேசிக்கிற பரிசுத்த ஜனமாக தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியால், இரக்கமுள்ள இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், மென்மையான தன்மையையும், பொறுமையையும் வைத்து உங்களைத் துலக்க வேண்டும், ஒருவருக்கொருவர் செய்யும் தவறுகளைத் தாங்கிக் கொள்ளுங்கள், உங்களைத் துன்புறுத்துபவரை மன்னியுங்கள். எனவே நீங்கள் மற்றவர்களை மன்னிக்க வேண்டும். (கொலோசெயர் 3: 12-13)

"சகோதரர்களே, மன்னிப்புக் கேட்கிறவர்களை எச்சரிக்கவும், பயந்தவர்களை ஊக்குவிக்கவும், பலவீனருக்கு உதவுங்கள், அனைவருக்கும் பொறுமையாய் இருங்கள்." (1 தெசலோனிக்கேயர் 5:14)

"கர்த்தருடைய சந்நிதியில் நீ இரு, அவனுக்காகப் பொறுமையாயிரு, நீ துன்மார்க்கமாய் நடந்து, துன்மார்க்கமாய் நடக்கிற உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடு" என்று கோபமடைந்து, உன் கோபத்தை நீக்கிவிடாதே. துன்மார்க்கன் அழிந்துபோவான், கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். (சங்கீதம் 37: 7-9)

20 கருத்துகள்:

  1. திருமந்திரம்

    • பொறுமையை உயிரினும் சிறப்பாகக் கைக்கொள்ளுதல் வேண்டும் (512).
    • பொறுமையைச் சிறப்பாக வீட்டிலும் நாட்டிலும் கடை பிடித்தால் நற்பயன் நல்கும் (524).
    எனக் கூறுகின்றது. ஆக, ஒரு மாந்தனுக்குப் பொறுமை மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.
    பொறுமை என்பது வெகுளி(கோபம்)யின்மையைக் குறிக்கும். அஃதாவது, பிறர் தம்மீது கோபம் வரத்தக்க குற்றங்களைச் செய்தாலும், அவர் மீது கோபப்படாமல் அறிவால் மீட்கலாம் (1990:194) என்பதாம். நாலடியார்
    • அறிவில்லாதவர் வெகுளியினால் கூறும் கடுஞ்சொற்களைப் பொறுத்தல் வேண்டும் (66).
    • அறிவில்லாதவர் கூறும் தகாத சொற்களைப் பொறுத்தல் வேண்டும் (71).
    • தமக்கு இணையில்லாதவர் மொழியும் நீர்மையற்ற சொற்களைப் பொறுத்தல் வேண்டும். ஒருவரின் தகுதியை இது நிலைநாட்டும் (72).
    • தன் சுற்றத்தார் கூறும் கடுஞ்சொல்லைப் பொறுத்தல் வேண்டும் (73).
    • நட்பில் அறிவின்மையில் வரும் தீய ஒழுக்கங்களைப் பொறுத்தல் வேண்டும் (75).
    • நட்புடையார் செய்யும் பிழைகளைப் பொறுத்தல் வேண்டும் (76).
    • பெரியாரே பொறுப்பர் அறிவில்லாதவர் பொறுப்பது கிடையாது (77).
    • மேற்கொண்ட நற்செயலுக்கு இடையூறு வராது பொறுத்தல் வேண்டும் (78).
    • தான் கெட்டாலும் தன்னைக் கெடுக்க நினைப்பவர் மீது வெகுளி கொள்ளல் கூடாது (80).
    • நண்பரது குணத்தைக் கருதிக் குற்றத்தைப் பொறுத்தல் வேண்டும் (221).
    • நட்பினர் பிழையைப் பொறுத்தல் வேண்டும் (223).
    • கைவிடத் தகாத நண்பர் எவ்வளவு துன்பம் செய்யினும் அதனைக் கருதுதல் நன்றன்று (225).
    • நட்பினர் அறியாமல் செய்த பிழையைப் பொறுத்தல் வேண்டும் (226).
    • நண்பரது குற்றத்தைப் பொறுத்தல் வேண்டும் (226).
    எனக் குறிப்பிடுகின்றது. ஆக, சமணமுனிவர்கள் அறிவிலார் செய்யக்கூடிய பிழைகளைப் பொறுத்தல் அவசியம் என்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  2. சங்க இலக்கியங்களில் பொறுத்தல் எனும் கருத்தியல் பெண்டிருக்கே தேவை எனக் கூறப்பட்டுள்ளது. அவ்வாறெனின் பெண்டிர் பொறுத்திருக்கும் பண்பை இழந்திருந்தனரா? ஆடவருக்குத் தேவையில்லையா? என வினவ இடம் அளிக்கின்றது.

    பெண்டிர் பொறுக்கும் பண்பு குறைந்து காணப்பட்டனரா? எனின் பொறுத்திருக்கும் பண்பை மிகுதியாகக் கொண்டனர் எனலாம். அவர்கள் பொறுத்திருக்க வேண்டும். ஏனெனின் அவர்கள் குடும்பத்தை நல்வழியில் நடத்திச் செல்ல வேண்டிய கடப்பாடு மிக்கிருந்தமையேயாம். அதனாலே பெண் நாசம் குலநாசம் என்பர். இதனைச் சங்க இலக்கியங்களின் பொறுக்கல்லா (கலி.58-21), பொறுக்குநர் (புறம்.63-8), பொறுக்கும் (புறம்.43-18), பொறுத்தல் (நற்.99-7, 354-13, கலி.132-14, புறம்.27), பொறுத்தார் (பரி.தி.1-75), பொறுத்து (குறு.287-3, அகம்.34-3, புறம்.58-3), பொறுத்தேன் (கலி.142-55), பொறுப்ப (பதி.41-2), பொறுப்பர் (கலி.105-59) என்ற சொல்லாட்சிகள் புலப்படுத்துகின்றன. காட்டாக,

    பொறுத்தல் செல்லா திறுத்தன்று வண்பெயல் (நற்.99:7)
    தான்அது பொறுத்தல் யாவது வேனல் (நற்.354:1)
    பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல் (கலி.132:14)
    போற்றார்ப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும் (புறம்.2:7)

    எனவரும் அடிகள் விளக்குகின்றன. இவ்வடிகள் சங்க இலக்கியத் தலைவனின் பிரிவையும், தலைவன் மீது நிகழ்ந்த காதலான் ஏற்பட்ட அலரையும் தலைவியானவள் பொறுக்க வேண்டும் எனவும், பகைவர் செய்யக் கூடிய பிழைகளை மன்னன் பொறுக்க வேண்டும் எனவும் அறைகூவுகின்றன. இது மாந்தனின் தலையாய கடமை என்கின்றது. அக்கடமையைக் காதல் வாழ்வு, போர்க்கள வாழ்வு என இணைத்துப்பேசின சங்கப்பாடல்கள். ஆனால், அற இலக்கியங்கள் அதனைத் தனித்து நோக்குவதன் அவசியம் என்ன? என்பதை உணர்ந்தால் இவ்விரு (வள்ளுவர், கபீர்) புலவர்களும் பொறு எனும் கருத்தியலை வலியுறுத்துவதன் முக்கியத்துவம் என்ன? என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.
    அப்படி அந்தச் சொல்லில் என்னதான் இருக்கிறது? அச்சொல்லைச் சொல்வதனால் என்ன பயன்? இதனால் ஏற்படக் கூடிய மாற்றம்தான் என்ன? என வினாக்களைத் தொடுத்துக் கொண்டே செல்ல இயலும். இதனையும் ஈண்டு நோக்க முற்படுகின்றது. இச்சொல் ஒரு மாயச் சொல்லே. இதனை ஆங்கிலத்தில் Sorry எனக் கூறுவர். அச்சொல் புரிந்தவுடன் மாந்தனிடம் சிறுமாற்றம் தென்படுகின்றது. அது மன அழுத்தத்தை வெகுவாகக் குறைத்து விடுகின்றது. இதனால் நற்பயனே மாந்தனுக்கு விளைகின்றது. எனவே பல்வேறு மொழி இலக்கிய அறிஞர்கள் பொறுத்திருத்தலைத் தவறாமல் வலியுறுத்துவதில் இருந்து விலகி நிற்பதில்லை. இதனை,

    மறைவழி பிறழ்தல், இடையூறுகளால் துன்புறுதல், வெளிச்சொல்ல முடியாத வேதனைகள், பொறுத்துக்கொள்ள இயலாத துன்பங்கள், ரகசியங்கள் அறியாமை – ஆகிய இவை ஒருவர்க்கு ஊழினால் ஏற்படுகின்றன – வஜ்ஜாலக்கம்:121

    தலைவர்கட்கு மென்மையும், மடந்தையர்க்குக் கற்பும், ஆற்றலுடையவர்கட்குப் பொறுமையும், தெரிந்ததைச் சொல்வதும், தெரியாதபோது மௌனமாக இருப்பதும் மாந்தர்கட்கு அழகாகும் – வஜ்ஜாலக்கம்:147

    எனவரும் பிராகிருத மொழியின் வைரப்பேழைக் கருத்துக்கள் நினைவூட்டுகின்றன. ஆக, பொறுக்கும் பண்பை வலியுறுத்திய இலக்கியங்கள் எண்ணிறந்தன.

    பதிலளிநீக்கு
  3. பிழை புரிவது அறியாமையால் நிகழ்வது. அதனைப் பொறுத்தாற்றுவதே அதற்குரிய மருந்து என்பதை இதுவரை நோக்கப்பெற்ற கருத்துக்கள் புலப்படுத்தின.
    திருக்குறள் – கபீர் அருள்வாக்கு பொதுமரபுகள்
    இனி, அவ்விரு புலவர்களின் (வள்ளுவர், கபீர்) பொறையுடைமைக் கருத்துக்களை அறிவதற்கு முன்பு, அவர்தம் பொதுவான சிந்தனைகளை (அமைப்புமுறைகளை) அறிவது இன்றியமையாதது. வள்ளுவரின் கருத்துக்களை அறம், பொருள், இன்பம் என மூன்றாகப் பாவித்துப் பார்க்க முடிந்தது. அவற்றுள் அறம்: பாயிரவியல் (4), இல்லறவியல் (20), துறவறவியல் (14) என்பனவாகவும்; பொருள்: அரசியல் (25), அங்கவியல் (10), பொருளியல் (22), ஒழிபியல் (13) என்பனவாகவும்; இன்பம்: களவியல் (7), கற்பியல் (18) என்பனவாகவும் அமைந்துள்ளன.
    கபீரின் சிந்தனைகளை இந்திப் பதிப்பு சாகி, பதாவளி, ரமைணி என மூன்றாகப் பாவிக்கின்றது. தமிழில் மொழியாக்கம் செய்த தி.சேசாத்திரி என்பார் இரண்டு காண்டங்களாகப் பாவிக்கிறார். அவ்விரு காண்டங்களிலும் இருநூற்று ஐம்பத்தொரு உட்தலைப்புகள் கொண்ட கருத்தமைவுகள் உள்ளன. அவை வருமாறு: முதல் காண்டத்தில் கர்த்தா நிருணயம், வலியுடைமை, பரந்து நிற்கும் தன்மை, சப்தம், பெயர், பரிச்சயம், அனுபவம், சாரம் கிரஹித்தல், சமநோக்கு, பக்தி, பிரேமை, ஸ்மரணம், நம்பிக்கை, விரஹிணி, வினியம், சூட்சமமான வழி, சோதிப்பவன், அறிய வேண்டும் என்று ஆசையுள்ளவன், ஐயநிலை, சொல்லும் செய்கையும், சகஜபாவம், மௌன நிலை, முழுகி எழுந்தவன், நல்வழி, சூரன் நெறி, கற்பு, சற்குரு, அசத்குரு, சாது சனங்கள், சத்சங்கம், கெட்ட சேர்க்கை, ஊழியனும் தாசனும், எச்சரிக்கை, உபதேசம், காமம், குரோதம், பற்றுணர்வு, மோகம், அகங்காரம், வஞ்சனை, ஆசை, திருஷ்ணை, நித்திரை, நிந்தனை, மாயை, பொன்னும் பெண்ணும், லாகிரிப் பொருள்கள், சீலம், பொறையுடைமை, உதாரத் தன்மை, போதுமென்ற மனம், பதற்றமில்லாத தன்மை, பணிவு, தயை, சத்தியம், பேச்சளவில் அறிவு, விசாரணை, விவேகம், நல்ல புத்தியும் கெட்ட புத்தியும், சாப்பாடு, உலக உற்பத்தி, மனம், பொது ஆகியனவும்; இரண்டாம் காண்டத்தில், கர்த்தா நிரூபணம், ஆண்டவன் பெருமை, கர்த்தா யுகம், சத்திய லோகம், கர்த்தாவின் இடம், படைத்தவனை அடைய வழி, ராம நாமத்தின் பெருமை, சப்த மகிமை, மாயப் பிரபஞ்சம், ஜகத்தின் உற்பத்தி, மனத்தின் பெருமை, நிர்வாணபதம், சற்குரு மகிமையும் இலக்கணமும், சந்தர்கள் இலக்கணம், வேதாந்த வாதம், சாம்ய வாதம், பக்தியுணர்ச்சிப் பெருக்கு, பிரிவாற்றமைப் பேச்சு, இல்துறவு, கருமகதி – ஊழ், மோகத்தின் மகிமை, விழிப்பு, உபதேசமும் எச்சரிக்கையும், சங்கோசமும் சிட்சையும், பொய் நடத்தை, உலகத்தின் சாரமற்ற தன்மை, இறுதிக்காட்சி, அகம்பாவம், பதினாறு வகை உபசாரங்கள் ஆகியனவும் அமைந்துள்ளன. இவற்றை திருக்குறள் போன்று அறம், பொருள், இல்வாழ்வு என்ற கோட்பாடுகளாக நிலைத்த பாகுபாடுகளாக வைத்துக் காண்பது என்பது சற்றுக் கடினமே.
    திருவள்ளுவர் ஒவ்வொரு கருத்தையும் விளக்குவதற்குப் பத்துப் பத்துச் சிந்தனைகளை முன்வைக்கின்றார். இத்தன்மையைக் கபீரின் சிந்தனைகளில் காண இயலவில்லை. இனி, பொறையுடைமைச் சிந்தனைகளை விளக்குவதில் இருவரும் ஒத்தும் வேறுபட்டும் நிற்கும் தன்மைகளைப் பின்வருமாறு விளக்கப்படுகின்றது. அஃதாவது அவ்விரு புலவர்களும் அவமதிப்பாரைப் பொறுக்கின்ற இடத்திலும், தீயோர் சொல்லைப் பற்றிக் கூறுமிடத்தும் ஒத்த சிந்தனையுடையவர்களாகவே அமைந்துள்ளனர்.

    பதிலளிநீக்கு
  4. https://sathiyaraj.pressbooks.com/chapter/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81/

    பதிலளிநீக்கு
  5. பொறுமை என்ற உத்தரவாத வெகுமதி
    நீ ஏன் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்? ஏனென்றால் கடவுள் வேலை செய்கிறார்.

    சங்கீதம் 40: 1

    "கர்த்தருக்கு நான் பொறுமையாய்க் காத்திருந்தேன், அவர் என் பக்கம் திரும்பி, என் கூப்பிடுதலைக் கேட்டார். (என்ஐவி)

    ரோமர் 8: 24-25

    "நாங்கள் சேமித்த இந்த நம்பிக்கையை நாம் பெற்றிருந்தால், நமக்கு ஏற்கனவே ஏதேனும் இருந்தால், அதை நம்புவதே எங்களுக்குத் தேவையில்லை, ஆனால் நாம் இன்னும் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றால், நாம் பொறுமையாகவும் நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும்." (தமிழ்)

    ரோமர் 15: 4-5

    "வேதவாக்கியங்களின் பொறுமையும் ஆறுதலினாலுமே நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளான நம்முடைய கிருபையினிமித்தம் எழுதப்பட்டவைகளுக்கெல்லாம், நல்மனச்சாட்சியோடும் ஆறுதலுக்கும் தேவனானவராகிய கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஒருவரையொருவர் நோக்கி: . " (NKJV)

    யாக்கோபு 5: 7-8

    "ஆண்டவரது வருகையை வருமளவிற்கு பொறுமையாக இருங்கள், பார்வோன் நிலத்தை எவ்வாறு பெறுகிறான் என்பதைப் பார்க்கவும், பயிர் விளைச்சலைக் கொடுக்கவும், இலையுதிர்காலம் மற்றும் வசந்த மழையைப் பொறுத்தவரை எவ்வளவு பொறுமையாகவும் காத்திருக்கவும். வரவிருக்கிறது. " (என்ஐவி)

    ஏசாயா 40:31

    "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் தங்கள் பலத்தைத் புதுப்பிப்பார்கள், அவர்கள் கழுகுகளைப்போல செட்டைகளை ஏறி, ஓடுவார்கள், சோர்ந்துபோகாதிரும், சோர்ந்துபோவார்கள்." (NKJV)

    https://ta.eferrit.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/

    பதிலளிநீக்கு
  6. நீண்ட தூரத்திற்கான பொறுமை
    ஒரு சூழ்நிலையில் நீங்கள் பொறுமையாய் இருக்கலாம், அது தேவைப்படுகிறதென்றால், வாழ்க்கையின் முடிவில் பொறுமை தேவை என்பதை பைபிள் காட்டுகிறது.

    கலாத்தியர் 6: 9

    "நன்மை செய்வதில் நாம் சோர்வடையாதிருப்போமாக; நாம் விடாதிருந்தால் அறுப்பு அறுப்போம்." (என்ஐவி)

    எபிரெயர் 6:12

    "நீ சோம்பேறியாமல், விசுவாசத்தினாலும் பொறுமையினாலும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நாங்கள் விரும்புகிறதில்லை." (என்ஐவி)

    வெளிப்படுத்துதல் 14:12

    "கடவுளுடைய பரிசுத்தவான்கள் துன்புறுத்துதலை பொறுமையாய், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, இயேசுமீது விசுவாசம் வைத்திருக்க வேண்டும்." (தமிழ்)

    பதிலளிநீக்கு
  7. கோபமடைந்தால் பொறுமை
    இந்த வசனங்கள் கோபமாக அல்லது கோபப்படுவதைத் தவிர்ப்பதுடன், உங்களைத் தூண்டிவிடும் சூழ்நிலைகளால் எதிர்கொள்ளும் பொறுமையையும் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகின்றன.

    சங்கீதம் 37: 7-9

    "கர்த்தருடைய சந்நிதியில் நீ இரு, அவனுக்காகப் பொறுமையாயிரு, நீ துன்மார்க்கமாய் நடந்து, துன்மார்க்கமாய் நடக்கிற உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடு" என்று கோபமடைந்து, உன் கோபத்தை நீக்கிவிடாதே. துன்மார்க்கன் அழிந்துபோவான், கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். (தமிழ்)

    நீதிமொழிகள் 15:18

    "சூடான ஆணவமுள்ள மனிதன் முரண்பாட்டைத் தூண்டிவிடுகிறான், ஆனால் ஒரு நோயாளி மனிதன் சண்டையிடுகிறான்." (என்ஐவி)

    ரோமர் 12:12

    "நம்பிக்கையிலே மகிழ்ச்சியாயிரு, உபத்திரவத்தில் பொறுமையிருந்து, ஜெபத்திலே உண்மையாயிருங்கள்." (என்ஐவி)

    யாக்கோபு 1: 19-20

    "என் அன்பு சகோதரர்களே, இதை கவனியுங்கள்: எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும், பேசுவதற்கு மெதுவாக, கோபப்படுவதற்கு மெதுவாக இருக்க வேண்டும், ஏனென்றால் மனிதனுடைய கோபம் கடவுள் விரும்பும் நீதியுள்ள வாழ்வைக் கொண்டுவருவதில்லை." (என்ஐவி)

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் பொறுமை காட்டுங்கள்
    அன்புள்ள ஒவ்வொருவரிடமிருந்தும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நீங்கள் பொறுமையாய் முயற்சி செய்யுங்கள். எல்லோருடனும் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று இந்த வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

    கொலோசெயர் 3: 12-13

    "உங்களை நேசிக்கிற பரிசுத்த ஜனமாக தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியால், இரக்கமுள்ள இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், மென்மையான தன்மையையும், பொறுமையையும் வைத்து உங்களைத் துலக்க வேண்டும், ஒருவருக்கொருவர் செய்யும் தவறுகளைத் தாங்கிக் கொள்ளுங்கள், உங்களைத் துன்புறுத்துபவரை மன்னியுங்கள். எனவே நீங்கள் மற்றவர்களை மன்னிக்க வேண்டும். " (தமிழ்)

    1 தெசலோனிக்கேயர் 5:14

    "சகோதரர்களே, மன்னிப்புக் கேட்கிறவர்களை எச்சரிக்கவும், பயந்தவர்களை ஊக்குவிக்கவும், பலவீனருக்கு உதவுங்கள், அனைவருக்கும் பொறுமையாய் இருங்கள்." (என்ஐவி)

    பதிலளிநீக்கு
  9. பொறுமை கடவுளின் பரிசு
    பொறுமை கடவுளின் தரம், விசுவாசிக்கு ஆவியின் கனியாக அளிக்கப்படுகிறது.

    சங்கீதம் 86:15

    "நீரே, ஆண்டவரே, இரக்கமும், கிருபையுமுள்ள கடவுள், கோபத்திற்கு மெதுவாக, அன்பிலும் விசுவாசத்திலும் பெருகுவீர்." (என்ஐவி)

    கலாத்தியர் 5: 22-23

    "ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், சுயநிர்ணயம், இவைகளுக்கு விரோதமான சட்டங்கள் இல்லை."

    1 கொரிந்தியர் 13: 4-8 அ

    "அன்பே நோயாளி, அன்பே அன்பு, அது பொறாமை இல்லை, அது பெருமை இல்லை, அது பெருமை இல்லை, அது முரட்டு அல்ல, சுய-தேடும் அல்ல, அது எளிதில் கோபமடைவதில்லை, அது தவறுகளை பதிவு செய்யாது. துன்மார்க்கத்தில் மகிழ்ச்சியாயிராமல், சத்தியத்தால் களிகூருகிறது, எப்பொழுதும் பாதுகாக்கிறது, எப்பொழுதும் நம்பிக்கை வைக்கிறது, எப்பொழுதும் நம்பிக்கை வைக்கிறது, எப்பொழுதும் துன்பம் தருகிறது. (என்ஐவி)

    பதிலளிநீக்கு
  10. 1. ரோமர் 12:12 நம்பிக்கையில் சந்தோஷமாக இருங்கள், துன்பத்தில் பொறுமையாக இருங்கள், ஜெபத்தில் உண்மையுள்ளவர்களாக இருங்கள்.

    2. எபேசியர் 4:2 முற்றிலும் பணிவாகவும் மென்மையாகவும் இருங்கள்; பொறுமையாக இருங்கள், அன்பில் ஒருவருக்கொருவர் தாங்கிக் கொள்ளுங்கள்.

    3. பிலிப்பியர் 4:6 எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம், ஆனால் ஒவ்வொரு சூழ்நிலையிலும், பிரார்த்தனை மற்றும் வேண்டுகோள் மூலம், நன்றி செலுத்துவதன் மூலம், உங்கள் கோரிக்கைகளை கடவுளிடம் முன்வைக்கவும்.

    4. பிரசங்கி 7:9 உங்கள் ஆவிக்கு விரைவாக தூண்டிவிடாதீர்கள், ஏனென்றால் கோபம் முட்டாள்களின் மடியில் இருக்கிறது.

    5. கலாத்தியர் 6:9 நல்லதைச் செய்வதில் நாம் சோர்வடைய வேண்டாம், ஏனென்றால் நாம் கைவிடாவிட்டால் சரியான நேரத்தில் அறுவடை செய்வோம்.

    6. ஆதியாகமம் XX: 29 ஆகவே, ரேச்சலைப் பெற யாக்கோபு ஏழு ஆண்டுகள் பணியாற்றினான், ஆனால் அவளிடம் அவளுக்கு இருந்த அன்பின் காரணமாக அவை அவனுக்கு சில நாட்கள் மட்டுமே தோன்றின.

    7. நீதிமொழிகள் 15: 18 ஒரு சூடான மனிதர் மோதலைத் தூண்டுகிறார், ஆனால் இருப்பவர் நோயாளி ஒரு சண்டையை அமைதிப்படுத்துகிறார்.

    8. எரேமியா 29:11 கர்த்தர் அறிவிக்கிறார், “உங்களுக்காக நான் வைத்திருக்கும் திட்டங்களை நான் அறிவேன், உன்னை வளப்படுத்த திட்டமிட்டுள்ளான், உனக்கு தீங்கு விளைவிக்காமல், உனக்கு நம்பிக்கையையும் எதிர்காலத்தையும் கொடுக்க திட்டமிட்டுள்ளான்.

    9. 1 சாமுவேல் 13: 8-14 சாமுவேல் நிர்ணயித்த நேரம் ஏழு நாட்கள் காத்திருந்தார்; சாமுவேல் கில்கலுக்கு வரவில்லை, சவுலின் ஆட்கள் சிதற ஆரம்பித்தார்கள். 8 ஆகவே, “சர்வாங்க தகனபலியாகவும் கூட்டுறவுப் பிரசாதங்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்றார்.

    சவுல் சர்வாங்க தகனபலியைக் கொடுத்தான். 10 அவர் பிரசாதம் செய்து முடித்தவுடன், சாமுவேல் வந்து, சவுல் அவரை வாழ்த்துவதற்காக வெளியே சென்றார். 11 “நீங்கள் என்ன செய்தீர்கள்?” சாமுவேல் கேட்டார். அதற்கு சவுல்,

    “அந்த மனிதர்கள் சிதறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், நீங்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வரவில்லை என்பதையும், பெலிஸ்தர்கள் மிக்மாஷில் கூடிவருவதையும் நான் கண்டபோது, ​​12 நான் நினைத்தேன், 'இப்போது பெலிஸ்தர்கள் கில்கலில் எனக்கு எதிராக வருவார்கள், நான் இல்லை கர்த்தருடைய தயவைத் தேடினார். ' ஆகவே, சர்வாங்க தகனபலியை வழங்க நான் நிர்பந்திக்கப்பட்டேன். ” 13 “நீங்கள் ஒரு முட்டாள்தனமான காரியத்தைச் செய்தீர்கள்” என்று சாமுவேல் கூறினார்.

    “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த கட்டளையை நீங்கள் கடைப்பிடிக்கவில்லை; நீங்கள் இருந்திருந்தால், அவர் உங்கள் ராஜ்யத்தை இஸ்ரவேலின் மீது எப்போதும் நிலைநிறுத்தியிருப்பார். 14 ஆனால் இப்போது உங்கள் ராஜ்யம் நீடிக்காது; கர்த்தர் ஒரு மனிதனைத் தேடினார் அவரது சொந்த இதயம் கர்த்தருடைய கட்டளையை நீங்கள் கடைப்பிடிக்காததால் அவரை அவருடைய ஜனங்களுக்கு அதிபதியாக நியமித்தீர்கள். ” “பொறுமை பற்றிய பைபிள் வசனங்கள்”

    10. சங்கீதம் 37: 7-9 7 கர்த்தருக்கு முன்பாக இருங்கள், அவருக்காக பொறுமையாக காத்திருங்கள்; மக்கள் தங்கள் பொல்லாத திட்டங்களைச் செய்யும்போது அவர்களின் வழிகளில் வெற்றிபெறும்போது கவலைப்பட வேண்டாம்.

    8 கோபத்திலிருந்து விலகி, கோபத்திலிருந்து விலகுங்கள்; வருத்தப்பட வேண்டாம் - அது தீமைக்கு மட்டுமே வழிவகுக்கிறது. 9 ஏனெனில் தீயவர்கள் அழிக்கப்படுவார்கள், ஆனால் கர்த்தரை நம்புகிறவர்கள் தேசத்தைப் பெறுவார்கள்.

    பதிலளிநீக்கு

  11. 11. ரோமர் 8: 24-30 24 இந்த நம்பிக்கையில் நாங்கள் இரட்சிக்கப்பட்டோம். ஆனால் காணப்படும் நம்பிக்கை எந்த நம்பிக்கையும் இல்லை. அவர்கள் ஏற்கனவே வைத்திருப்பதை யார் நம்புகிறார்கள்? 25 ஆனால், இன்னும் நம்மிடம் இல்லாததை நம்பினால், அதற்காக பொறுமையாக காத்திருக்கிறோம். 26 அதேபோல், நம்முடைய பலவீனத்தில் ஆவியானவர் நமக்கு உதவுகிறார்.

    நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் ஆவியானவர் வார்த்தையற்ற கூக்குரல்களின் மூலம் நமக்காக பரிந்து பேசுகிறார். 27 நம்முடைய இருதயங்களைத் தேடுபவர் ஆவியின் மனதை அறிவார், ஏனென்றால் ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படி தேவனுடைய ஜனங்களுக்காக பரிந்து பேசுகிறார்.

    28 எல்லாவற்றிலும் கடவுள் தம்மை நேசிப்பவர்களின் நன்மைக்காக செயல்படுகிறார் என்பதை நாம் அறிவோம், அவருடைய நோக்கத்தின்படி அழைக்கப்படுகிறார். 29 கடவுள் முன்னறிவித்தவர்களுக்காக, அவர் பல சகோதர சகோதரிகளிடையே முதற்பேறாக இருக்கும்படி, அவருடைய குமாரனுடைய சாயலுக்கு இணங்கும்படி முன்னறிவித்தார்.

    30 அவர் முன்னரே தீர்மானித்தவர்களையும் அழைத்தார்; அவர் அழைத்தவர்களை நியாயப்படுத்தினார்; அவர் நியாயப்படுத்தியவர்களை மகிமைப்படுத்தினார். "பொறுமை பற்றிய பைபிள் வசனங்கள்"

    12. 2 தெசலோனிக்கேயர் 1: 4-5 4 ஆகையால், நீங்கள் சகித்துக்கொண்டிருக்கும் எல்லா துன்புறுத்தல்களிலும் சோதனைகளிலும் உங்கள் விடாமுயற்சி மற்றும் விசுவாசத்தைப் பற்றி கடவுளுடைய தேவாலயங்களில் பெருமை பேசுகிறோம். 5 இவை அனைத்தும் கடவுளின் நியாயத்தீர்ப்பு சரியானது என்பதற்கான சான்றாகும், இதன் விளைவாக, நீங்கள் துன்பப்படுகிற தேவனுடைய ராஜ்யத்திற்கு நீங்கள் தகுதியுள்ளவர்களாக எண்ணப்படுவீர்கள்.

    13. 1 கொரிந்தியர் 13:4 காதல் பொறுமையாக இருக்கிறது, அன்பு கருணை. அது பொறாமைப்படுவதில்லை, பெருமை கொள்ளாது, பெருமைப்படுவதில்லை.

    14. எபிரெயர் 11: 13-16 13 இந்த மக்கள் அனைவரும் இறந்தபோதும் விசுவாசத்தினாலே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். வாக்குறுதியளித்ததை அவர்கள் பெறவில்லை; அவர்கள் அவர்களை மட்டுமே பார்த்தார்கள், தூரத்திலிருந்து அவர்களை வரவேற்றார்கள், அவர்கள் பூமியில் வெளிநாட்டினர் மற்றும் அந்நியர்கள் என்று ஒப்புக்கொண்டார்கள்.

    14 இதுபோன்ற விஷயங்களைச் சொல்லும் மக்கள் தாங்கள் சொந்த நாட்டைத் தேடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறார்கள். 15 அவர்கள் விட்டுச் சென்ற நாட்டைப் பற்றி அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அவர்கள் திரும்புவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும்.

    16 அதற்கு பதிலாக, அவர்கள் ஒரு சிறந்த நாட்டிற்காக-பரலோக நாடுக்காக ஏங்குகிறார்கள். ஆகையால், அவர்களுக்காக ஒரு நகரத்தைத் தயார் செய்திருப்பதால், அவர்களுடைய கடவுள் என்று அழைக்கப்படுவதற்கு கடவுள் வெட்கப்படுவதில்லை.

    15. 2 பேதுரு 3:9 இறைவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதில் மெதுவாக இல்லை, ஆனால் உங்களிடம் பொறுமையாக இருக்கிறார், யாரும் அழிந்துபோக வேண்டும் என்று விரும்பவில்லை, ஆனால் அனைவரும் மனந்திரும்புதலை அடைய வேண்டும்.

    16. 2 சாமுவேல் 5: 4-5 4 தாவீது ராஜாவானபோது முப்பது வயது, அவன் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான். 5 எபிரோனில் அவர் யூதாவை ஏழு ஆண்டுகள் ஆறு மாதங்கள் ஆண்டார், எருசலேமில் இஸ்ரவேலையும் யூதாவையும் முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தார். “பொறுமை பற்றிய பைபிள் வசனங்கள்”

    17. சங்கீதம் 75:2 நீங்கள் சொல்கிறீர்கள், “நான் நியமிக்கப்பட்ட நேரத்தை தேர்வு செய்கிறேன்; நான் தான் தீர்ப்பளிக்கிறேன் பங்கு.

    18. ஹபக்குக் 2:3: வெளிப்பாடு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு காத்திருக்கிறது; அது முடிவைப் பற்றி பேசுகிறது மற்றும் பொய்யை நிரூபிக்காது. அது நீடித்தாலும், அதற்காக காத்திருங்கள்; அது நிச்சயமாக வரும், தாமதிக்காது.

    19. ரோமர் 5: 2-4 2 நாம் இப்போது நிற்கும் இந்த கிருபையினாலே விசுவாசத்தினாலே அணுகினோம். தேவனுடைய மகிமையின் நம்பிக்கையில் பெருமை பேசுகிறோம். 3 அது மட்டுமல்லாமல், நம்முடைய துன்பங்களிலும் பெருமை கொள்கிறோம், ஏனென்றால் துன்பம் விடாமுயற்சியைத் தருகிறது என்பதை நாம் அறிவோம்; 4 விடாமுயற்சி, தன்மை; மற்றும் தன்மை, நம்பிக்கை.

    20. வெளிப்படுத்துதல் 6: 9-11 9 அவர் ஐந்தாவது முத்திரையைத் திறந்தபோது, ​​தேவனுடைய வார்த்தையினாலும் அவர்கள் பேசிய சாட்சியத்தினாலும் கொல்லப்பட்டவர்களின் ஆத்துமாக்களை பலிபீடத்தின் கீழ் கண்டேன்.

    10 அவர்கள் உரத்த குரலில், “கர்த்தராகிய ஆண்டவரே, எவ்வளவு காலம் புனித மற்றும் உண்மை நீங்கள் பூமியில் வசிப்பவர்களை நியாயந்தீர்க்கும் வரை, எங்கள் இரத்தத்திற்குப் பழிவாங்கும் வரை? ”

    1 பின்னர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வெள்ளை அங்கி வழங்கப்பட்டது, மேலும் அவர்களுடைய சக ஊழியர்களும், சகோதரர்களும், சகோதரிகளும் முழு எண்ணிக்கையிலும் கொல்லப்பட்ட வரை இன்னும் சிறிது நேரம் காத்திருக்கும்படி அவர்களிடம் கூறப்பட்டது. “பொறுமை பற்றிய பைபிள் வசனங்கள்”

    பதிலளிநீக்கு

  12. 21. நீதிமொழிகள் 16:32 ஒரு வீரனை விட ஒரு நோயாளி நபர் சிறந்தவர் சுய கட்டுப்பாடு ஒரு நகரத்தை எடுக்கும் ஒருவரை விட.

    22. சங்கீதம் 37:7 கர்த்தருக்கு முன்பாக இருங்கள், அவருக்காக பொறுமையாக காத்திருங்கள்; மக்கள் தங்கள் பொல்லாத திட்டங்களைச் செய்யும்போது அவர்கள் வழிகளில் வெற்றிபெறும்போது கவலைப்பட வேண்டாம். “பொறுமை பற்றிய பைபிள் வசனங்கள்”

    23. சங்கீதம் 27:14 கர்த்தருக்காகக் காத்திருங்கள்; பலமாக இருங்கள், இருதயம் எடுத்து கர்த்தருக்காக காத்திருங்கள். சங்கீதம் 27:14

    24. ​​யாத்திராகமம் 14:14 கர்த்தர் உங்களுக்காகப் போராடுவார்; நீங்கள் இன்னும் இருக்க வேண்டும்.

    25. 2 பேதுரு 3:9 சிலர் மந்தநிலையை புரிந்துகொள்வதால், இறைவன் தனது வாக்குறுதியைக் கடைப்பிடிப்பதில் மெதுவாக இல்லை. மாறாக, அவர் உங்களுடன் பொறுமையாக இருக்கிறார், யாரும் அழிந்துபோக விரும்பவில்லை, ஆனால் எல்லோரும் மனந்திரும்புதலுக்கு வர வேண்டும்.

    26. ரோமர் 15:5 சகிப்புத்தன்மையையும் ஊக்கத்தையும் கொடுக்கும் கடவுள், கிறிஸ்து இயேசுவிடம் இருந்த அதே மனநிலையை உங்களுக்குக் கொடுப்பார். “பொறுமை பற்றிய பைபிள் வசனங்கள்”

    27. சங்கீதம் 30:5 அவருடைய கோபம் ஒரு கணம் மட்டுமே நீடிக்கும், ஆனால் அவருடைய தயவு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்; அழுகை இரவு வரை இருக்கலாம், ஆனால் மகிழ்ச்சி காலையில் வருகிறது.

    28. சங்கீதம் 103: 8 கர்த்தர் இரக்கமுள்ளவர், கிருபையுள்ளவர், கோபத்திற்கு மெதுவானவர், அன்பில் பெருகும்.

    29. தீமோத்தேயு 9: 9 ஆனால் அந்த காரணத்திற்காகவே, பாவிகளில் மிக மோசமான கிறிஸ்து இயேசு தம்மை நம்பி நித்திய ஜீவனைப் பெறுபவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அவருடைய அபரிமிதமான பொறுமையைக் காட்டும்படி எனக்கு இரக்கம் காட்டப்பட்டது.

    30. 2 பேதுரு 3:8 ஆனால் இந்த ஒரு விஷயத்தை மறந்துவிடாதீர்கள், அன்பிற்குரிய நண்பர்களே: இறைவனுடன், ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள் போன்றது, ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாள் போன்றவை.

    பதிலளிநீக்கு

  13. 31. மத்தேயு 24:42 ஆகையால், உங்கள் இறைவன் எந்த நாளில் வருவார் என்று உங்களுக்குத் தெரியாததால், கவனமாக இருங்கள்.

    32. மத்தேயு 24: 13 ஆனால் கடைசிவரை உறுதியாக நிற்பவர் காப்பாற்றப்படுவார்.

    33. 2 தீமோத்தேயு 4: 2 வார்த்தையைப் பிரசங்கிக்கவும்; பருவத்திலும் பருவத்திலும் வெளியே இருக்க வேண்டும்; மிகுந்த பொறுமையுடனும் கவனமாக அறிவுறுத்தலுடனும் சரியான, கண்டிப்பு மற்றும் ஊக்குவிப்பு.

    34. வெளிப்படுத்துதல் 3:11 நான் விரைவில் வருகிறேன். உங்களிடம் உள்ளதைப் பிடித்துக் கொள்ளுங்கள், இதனால் உங்கள் கிரீடத்தை யாரும் எடுக்க மாட்டார்கள்.

    35. ஜோயல் 2:13 உங்கள் ஆடைகளை அல்ல, உங்கள் இதயத்தை ஒழுங்கமைக்கவும். உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்புங்கள், ஏனென்றால் அவர் இருக்கிறார் கருணை மற்றும் இரக்கமுள்ள, கோபத்திற்கு மெதுவாகவும், அன்பில் பெருகவும், அவர் பேரழிவை அனுப்புவதிலிருந்து விலகுகிறார்.

    36. நீதிமொழிகள் 10:28 நீதிமான்களின் எதிர்பார்ப்பு மகிழ்ச்சி, ஆனால் துன்மார்க்கரின் நம்பிக்கைகள் ஒன்றும் இல்லை.

    37. கலாத்தியர் 6:9 நம்பிக்கையில் மகிழ்ச்சி, பொறுமையாக இருங்கள் இன்னல்கள், ஜெபத்தில் தொடர்ந்து இருங்கள்.

    நீங்கள் விரும்பும் கூடுதல் வசனங்கள்
    38. ரோமர் 8:25 நல்லதைச் செய்வதில் நாம் சோர்வடையாமல் இருப்போம், ஏனென்றால் நாம் கைவிடாவிட்டால், சரியான நேரத்தில் அறுவடை செய்வோம்.

    39. எபேசியர் 4:2 ஆனால் நாம் காணாததை நம்புகிறோம் என்றால், அதற்காக பொறுமையுடன் காத்திருக்கிறோம். “பொறுமை பற்றிய பைபிள் வசனங்கள்”

    40. சங்கீதம் 37: 7-9 எல்லா மனத்தாழ்மையுடனும், மென்மையுடனும், பொறுமையுடனும், ஒருவருக்கொருவர் அன்பிலும் தாங்கிக் கொள்ளுங்கள்

    41. பிலிப்பியர் 4:6 கர்த்தருக்கு முன்பாக இருங்கள், அவருக்காக பொறுமையாக காத்திருங்கள்; தன் வழியில் முன்னேறுபவனுக்கும், தீய சாதனங்களைச் செய்கிறவனுக்கும் உன்னைப் பற்றி கவலைப்படாதே!

    கோபத்திலிருந்து விலகுங்கள், கோபத்தை கைவிடுங்கள்! நீங்களே கவலைப்படாதீர்கள்; அது தீமைக்கு மட்டுமே முனைகிறது. அக்கிரமக்காரர்கள் துண்டிக்கப்படுவார்கள், ஆனால் கர்த்தருக்காகக் காத்திருப்பவர்கள் தேசத்தை சுதந்தரிப்பார்கள்.

    42. 1 கொரிந்தியர் 13: 4 எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம், ஆனால் எல்லாவற்றிலும் ஜெபத்தினாலும், நன்றி செலுத்துவதன் மூலமும் உங்கள் கோரிக்கைகள் கடவுளுக்குத் தெரியப்படுத்தப்படட்டும்.

    43. 1 கொரிந்தியர் 13:1 அன்பு பொறுமையாகவும் கனிவாகவும் இருக்கிறது; காதல் பொறாமைப்படுவதில்லை அல்லது பெருமை கொள்ளாது; அது அல்ல திமிர்பிடித்த

    44. ஏசாயா 40:31 ஆனால் கர்த்தருக்காகக் காத்திருப்பவர்கள் தங்கள் பலத்தை புதுப்பிப்பார்கள்; அவர்கள் கழுகுகள் போன்ற சிறகுகளால் ஏறுவார்கள்; ஓடி சோர்ந்து போகாதே; நடக்க மற்றும் மயக்கம் அல்ல.

    45. எரேமியா 29:11 உங்களுக்காக நான் வைத்திருக்கும் திட்டங்களை நான் அறிவேன், கர்த்தர் அறிவிக்கிறார், நலனுக்காகத் திட்டமிடுகிறார், தீமைக்காக அல்ல, உங்களுக்கு எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் தருகிறார்.

    பதிலளிநீக்கு

  14. 46. நீதிமொழிகள் 15: 18 ஒரு சூடான மனிதர் சண்டையைத் தூண்டுகிறார், ஆனால் கோபத்திற்கு மெதுவாக இருப்பவர் சர்ச்சையைத் தடுக்கிறார்.

    47. பிரசங்கி 7:8 ஒரு காரியத்தின் தொடக்கத்தை விட சிறந்தது, ஆவியின் நோயாளி ஆவியின் பெருமையை விட சிறந்தது.

    48. யாக்கோபு 1:19 இதை அறிந்து கொள்ளுங்கள், என் அன்பான சகோதரர்கள்: ஒவ்வொரு நபரும் விரைவாக கேட்க, பேச மெதுவாக, கோபத்திற்கு மெதுவாக இருக்கட்டும்;

    49. கலாத்தியர் 5:22 ஆனால் ஆவியின் கனியே அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, இரக்கம், நன்மை, உண்மையுள்ள தன்மை,

    50. 1 தெசலோனிக்கேயர் 5:14 சகோதரர்களே, செயலற்றவர்களை அறிவுறுத்துங்கள், மயக்கமடைந்தவர்களை ஊக்குவிக்கவும், பலவீனமானவர்களுக்கு உதவவும், அவர்கள் அனைவரிடமும் பொறுமையாக இருக்கவும் நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.

    https://www.currentschoolnews.com/ta/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

    பதிலளிநீக்கு

  15. பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்
    திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக்
    கார் ஆண்மை போல ஒழுகலும், - இம் மூன்றும்
    ஊராண்மை என்னும் செருக்கு. திரிகடுகம் 6


    பிறர் தன்னை உயர்த்திப் பேசும்போது நாணுதலும், தன்னை விரும்பாதவர் இகழ்ந்து பேசும்போது பொறுத்துக் கொள்ளுதலும், பிறர்க்கு கைம்மாறு கருதாமல் உதவி செய்வதும் சிறந்த செல்வமாகும்.

    பதிலளிநீக்கு
  16. நீதிமொழி 1429 பொறுமையுள்ளவன் மிகவும் புத்திசாலி. விரைவில் கோபப்படுபவன் முட்டாள் என்பதைக் காட்டிக்கொள்கிறான்.

    பதிலளிநீக்கு
  17. பொறுமையை மேற்கொள்ளத் துன்பம் நீங்கும்
    அறநெறிச்சாரம் பாடல் - 80

    தன்னை ஒருவன் இகழ்ந்துரைப்பின் தான் அவனைப்
    பின்னை உரையாப் பெருமையான் - முன்னை
    வினைப்பயனும் ஆயிற்றாம் என்று அதன்கண் மெய்ம்மை
    நினைத்தொழிய நெஞ்சில் நோய்இல்.

    விளக்கவுரை ஒருவன் தன்னை இகழ்ந்து பேசினால், பின்பு தானும் இகழ்ந்து உரைத்த அவனை உரையாத பெருமையுடையவன், முன்பிறப்பில் செய்த தீவினைப் பயனும் இதனால் ஆனதுது என்று அதன் உண்மையை எண்ணி, அதனைக் கருதாது மனத்தில் துன்பம் இல்லாது இருப்பான்.

    பதிலளிநீக்கு
  18. கடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்க பாடல் - 81

    எள்ளிப் பிறர்உரைக்கும் இன்னாச்சொல் தன்நெஞ்சில்
    கொள்ளிவைத் தாற்போல் கொடிதுஎனினும் - மெள்ள
    அறிவுஎன்னும் நீரால் அவித்துஒழுகல் ஆற்றின்
    பிறிதுஒன்று வேண்டா தவம்.

    விளக்கவுரை தன்னை மற்றவர் இகழ்ந்து கூறும் கொடிய சொல் நெருப்பினால் சுட்டாற் போன்று தன் மனத்தில் துன்பத்தைத் தருவதாயினும் அறிவாகிய நீரால் அமைதியாக அந்தத் துன்பத்தைக் கெடுத்து ஒழுகுவாய் என்றால் வேறு தவம் ஒன்றைச் செய்ய வேண்டியதில்லை.

    பதிலளிநீக்கு
  19. சோதனை பொறுமையை கற்றுக்கொள்ள
    . அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, ரோமர் 5:3

    உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம்.
    ரோமர் 5:4

    பதிலளிநீக்கு
  20. நல்லோர்க்குப் பொறுமையே துணை.

    https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_3/14

    பதிலளிநீக்கு