மரபு திரிதல் முற்றும் திரிதல்..!


"எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே" (நன்னூல்-சொல்-388)

என்று நன்னூலார் இலக்கணம் வகுக்கிறார்.

மரபு மாறிச் சொற்கள் வழங்குமாயின் இவ்வுலகத்துச் சொற்கள் எல்லாம் பொருளை இழந்து வேறு வேறாக ஆகிவிடும்.

"மரபு நிலை திரியின் பிறிது பிறிது ஆகும்" (தொல்-சொல்-646)

என்கிறார் தொல்காப்பியர்

"மரபு நிலை திரிதல் செய்யுட் கில்லை
மரபு வழிப் பட்ட சொல்லி னான" (தொல்-பொருள்-645)

மரபு மாறாமல் சொற்களால் செய்யுட்கள் இயற்றப்படுதல் வேண்டும். தொல்காப்பியர் மரபின் இன்றியமையாமையை உணர்த்துகிறார். ஆனால், இன்று மரபு மாறி செய்யுள் இயற்றப்படுகின்றன.

"வழக்கெனப் படுவ துயர்தோர் மேற்றே" (தொல்-பொருள்-647)

வழக்கு என்று சொல்லப்படுவது உயர்ந்தோர் வழங்கிய வழக்கே. உயர்ந்தோர் ஒழுகலாறுகள் தான் வழக்காக் கருதப்பட்டன. ஆனால், இன்று தற்போது எளியோருடைய ஒழுகலாரும் இலக்கிய வழக்காக ஆட்சி பெற்றுள்ளது.

மரபு திரிபு நோயா இல்லை ஆரோக்கியமா?

உண்மையில் நோயே.! உயர்ந்தோர் வடித்து வைத்த நெறி நூல்களின் வார்த்தை திரிபால் வாழ்க்கை திரிந்து நிற்கிறது..! பழந்தமிழ் நூல்களில் பெரும்பான்மை சைவ வைணவ சமய சித்தாந்தங்கள் இலகுவாய் பொழிப்புரை என்ற பெயரிலும் இடைசொருகல் பாடல் வடிவிலும் திணிக்க பட்டுள்ளது..! நல்லது எதுவாக இருந்தால் எற்ப்பதில் என்ன பிழை என்று சிந்தித்தால், நன்மையான ஒன்றை இப்படி கள்ளத்தனமாக திணிக்க வேண்டிய அவசியம் என்ன?

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற தமிழன் கொள்கை வீரியமற்று போனதன் காரணம் இந்த திட்டமிட்ட மரபு திரிபு..! வென்ற அவர்கள் யுத்த முறை வாளும் எழுத்தும், ஆனால் இறுதியில் வாய்மையே வெல்லும்..!

சான்று :
http://www.muthukamalam.com/essay/literature/p92.html
http://www.muthukamalam.com/essay/literature/main.html

மரபு திரிபின் விளைவு :

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த
பண்ணு... X ஆயிரம் பேரிடம் போய்
சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு...

2.படிச்சவன் பாட்டை கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்.... X படிச்சவன் பாட்டை கொடுத்தான், எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ...
.
3.ஆயிரம் பேரை கொன்றவன்
அரை வைத்தியன்... X இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை) ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்.......

4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு .... X சூடு அல்ல சுவடு...
சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும்....

5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்.... X அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.... வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம்... காலப்போக்கில்....நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்...

சான்று :
http://thamil.co.uk/?p=6457
http://cowboymathu.blogspot.in/
http://tamilvizhumiyangal.blogspot.in/2014/09/blog-post_5.html
http://davidmeansbeloved.blogspot.in/2013/08/blog-post_4131.html
http://noolaham.net/project/42/4153/4153.pdf
http://www.chennailibrary.com/pathinenkeelkanakku/pazhamozhinaanooru.html
http://www.edubilla.com/tamil/pazhamozhigal/
http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/77833/8/08_chapter1.pdf
http://www.thamizhagam.net/projectmadurai/pdf/pm0219.pdf
http://www.riyadhtamilsangam.com/EK/arinthathu_1.htm
https://rajanscorner.wordpress.com/2011/06/28/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B4/
http://www.yarl.com/forum3/topic/127414-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/
https://arulakam.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-14404.html
http://www.tamilpriyan.com/tamil-proverbs-part-4/
http://sgnanasambandan.blogspot.in/2012/01/blog-post_10.html

1 கருத்து: