மது அருந்திவிட்டு தொழுகைக்கு வரக்கூடாது என்று புத்தகம் சொல்கிறதா?

கள் உண்ணுவதை எல்லா வேதமும் எல்லா நேரங்களிலும் தடை செய்யும் அதே வேளையில், இறைவணக்கத்தின் போது அறவே செய்யக்கூடாத கருமமாக உறுதியாக கூறுகிறது.

இஸ்லாம்

இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் பேசுவதை நீங்களே அறிய முடியாதவாறு போதையாக இருக்கும் நிலையில் தொழுகைக்கு நெருங்காதீர்கள்! (குர்ஆன் 4:43)

கிறிஸ்தவம் & யூதம்

ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் (Wine) மதுவையும் (Strong Drink) குடிக்கவேண்டாம். பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம்பண்ணும்படிக்கும், கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். - (லேவியராகமம் : 10: 8 - 11)

தமிழர் சமயம் 

யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி
மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்று
ஆகும் மதத்தால் அறிவழிந் தாரே.

(திருமந்திரம்: கள்ளுண்ணமை 318)

பொருள்: உண்மையான யோகிகள் அமர்ந்து (கால்கட்டி), சிறந்த அழகிய ஞான அமுதத்தைப் பருகி, எண்வகைச் சித்திகளையும் பெற்றுச் சிவானந்தத்தில் திளைப்பர். ஆனால், அத்தகைய யோக நிலையை விடுத்து, இச்சை கொண்டு கள்ளைக் குடிப்பவர்கள், அறிவை இழந்து, மூடர்களாகி, மோகத்தில் ஆழ்ந்து, கள் தரும் மதத்தால் (போதையால்) அறிவு கெட்டு, அழியும் நிலையை அடைவர்.

இந்த வேத வரிகள் அனைத்தும் போதையும் இறைவணக்கம் ஒன்றாக அமையக்கூடாது அமையாது என்று தெளிவுபட கூறுகிறது.

இறைவனின் கோபம் *

கிறிஸ்தவம் 

கர்த்தர் மோசேக்கு முன்னர் கடந்து சென்று, “யேகோவா என்னும் கர்த்தர், இரக்கமும் தயவும் உள்ள தேவன். கர்த்தர் எளிதில் கோபம் கொள்ளமாட்டார். கர்த்தர் அன்பு மிகுந்தவர், கர்த்தர் நம்பிக்கைக்குரியவர். (யாத்திராகமம் 34:6)

இஸ்லாம்  


அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தன்னுடைய (‘லவ்ஹுல் மஹ்ஃபூழ்’ என்னும்) பதிவேட்டில் – அது அர்ஷுக்கு மேலே அவனிடம் உள்ளது – ‘என் கருணை என் கோபத்தை மிகைத்து விட்டது” என்று எழுதினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல்லுஃலுவு வல்மர்ஜான்)

வேதம் ஓதும் பொழுது வாய்மூடி கேட்க

தமிழரசமயம்


பால்: பொருட்பால்
அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுதல் 

எப்பொருளும் ஓரார் தொடரார் மற்றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. (குறள் 695)

விளக்கம்: மறைநூல் ஓதப்பபிடும்பொழுது வேறு எப்பொருளையும் உற்றுக் கேட்காமல், தொடர்ந்து சிந்திக்காமல் அது ஓதி முடிக்கும் பொழுது அது பற்றி விளக்கத்தை கேட்டறிய வேண்டும். ஒதப்படும் வரை வேறு எதுவும் செய்யமல் மன ஒர்மையுடன் கேட்க தகுதியானது மறை நூல் என்பது இக்குறளின் பொருள். 
 

இஸ்லாம்


(மனிதர்களே!) திருக்குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி,செவி தாழ்த்தி அதனைக் கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்) அருளை அடைவீர்கள். [அல்குர்ஆன் : 7:204]

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது எங்களுக்கு (நாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய) எங்களது வழிமுறையைக் கற்றுத் தந்தார்கள். எங்களுக்குத் தொழும் முறையை விளக்கினார்கள். “இமாம் தக்பீர் சொன்னால் நீங்கள் தக்பீர் சொல்லுங்கள்; அவர் ஓதினால் நீங்கள் வாய் மூடுங்கள்” என்று சொன்னார்கள். (நூல்: முஸ்தக்ரஜ் அபீ உவானா) 
 

கிறிஸ்தவம் 

தேவனிடமிருந்து வந்த இச்செய்திகளை வாசிக்கிற எவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன். இச்செய்தியைக் கேள்விப்படுகிறவர்களும் இதில் எழுதியுள்ளபடி நடக்கின்றவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். காலம் குறுகினதாயிருக்கிறது. (வெளி 1:3-4)