அறியாமை நிறைந்த உலகம் *

தமிழர் சமயம் 

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல். குறள் 243

மு. வரதராசன் உரை: அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.

இஸ்லாம் 

“உங்கள் இறைவன் ஆதாமின் குழந்தைகளின் இடுப்புகளிலிருந்து சந்ததியினரைப் பிறப்பித்து, அவர்களைத் தங்களைப் பற்றி சாட்சியமளிக்கச் செய்தபோது (நான் உங்கள் இறைவன் இல்லையா?) அவர்கள் பதிலளித்தனர்: நீங்கள் தான் என்று நாங்கள் சாட்சியமளிக்கிறோம் …… (அவர் இதைச் செய்தார்) எனவே நியாயத்தீர்ப்பு நாளில் இதைப் பற்றி எங்களுக்கு எந்த அறிவும் இல்லை என்று நீங்கள் கூறக்கூடாது” (7:172)

புனித குர்ஆனின் இந்த வசனம், நாம் பிறப்பதற்கு முன்பு நமக்கும் நம் இறைவனுக்கும் இடையே செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை நினைவூட்டுகிறது.

நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம்; ஆனால் அதைச் சுமந்து கொள்ள மறுத்தன;அதைப் பற்றி அவை அஞ்சின;ஆனால் மனிதன் அதைச் சுமந்தான்;நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும் இருக்கின்றான்.எனவே, (இவ்வமானிதத்தை மாறு செய்யும்) முனாஃபிக்கான ஆண்களையும், முனாஃபிக்கான பெண்களையும்; முஷ்ரிக்கான ஆண்களையும், முஷ்ரிக்கான பெண்களையும் நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வான்; (ஆனால் இவ்வமானிதத்தை மதித்து நடக்கும்) முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் (அவர்கள் தவ்பாவை ஏற்று) மன்னிக்கின்றான். அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். (33:72&73)

 மனிதன் எவ்வாறு அமானாவைச் சுமந்தான்?

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக அல்-அவ்ஃபி அவர்கள் அறிவித்தார்கள், "அல்-அமானா என்றால் கீழ்ப்படிதல் என்று பொருள். இது ஆதம் (அலை) அவர்களுக்கு வழங்கப்படும் முன்பு, அவற்றுக்கு (வானங்கள், பூமி, மலைகள்) வழங்கப்பட்டது, ஆனால் அவற்றால் அதைத் தாங்க முடியவில்லை. பிறகு அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களிடம் கூறினான்: 'நான் அமானாவை வானங்கள், பூமி மற்றும் மலைகளுக்கு வழங்கினேன், ஆனால் அவற்றால் அதைத் தாங்க முடியவில்லை. நீ அதை ஏற்றுக்கொள்வாயா?' அதற்கு அவர், 'இறைவா, அதில் என்ன அடங்கியுள்ளது?' என்று கேட்டார்கள். அதற்கு அவன், 'நீ நன்மை செய்தால், உனக்கு வெகுமதி வழங்கப்படும், நீ தீமை செய்தால், நீ தண்டிக்கப்படுவாய்' என்று கூறினான். எனவே, ஆதம் (அலை) அவர்கள் அமானாவை ஏற்றுக்கொண்டு அதைச் சுமந்தார்கள். இதுவே இந்த ஆயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது:

(ஆனால் மனிதன் அதைச் சுமந்தான். நிச்சயமாக, அவன் அநீதி இழைப்பவனாகவும், அறியாமையில் இருப்பவனாகவும் இருந்தான்.)" இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக அலி பின் அபீ தல்ஹா அவர்கள் அறிவித்தார்கள், "அல்-அமானா என்பது அல்-ஃபராஇத் (கடமையான கடமைகள்) என்று பொருள். அல்லாஹ் அவற்றை வானங்கள், பூமி மற்றும் மலைகளுக்கு வழங்கினான், (இந்த அடிப்படையில்) அவற்றை நிறைவேற்றினால், அவன் அவற்றுக்கு வெகுமதி அளிப்பான்; தவறினால், அவன் அவற்றைத் தண்டிப்பான். ஆனால், அவை அதைச் செய்ய விரும்பவில்லை, அதற்கு அஞ்சின. அவற்றின் நோக்கம் பாவமானது என்பதற்காக அல்ல, மாறாக, அதில் உள்ள கடமைகளை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக அவை அஞ்சின. பிறகு அல்லாஹ் அதை ஆதம் (அலை) அவர்களுக்கு வழங்கினான், அவர் அதில் உள்ள அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்கள். இதுவே இந்த ஆயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது:

 பிறக்கும் முன் மற்றும் இறப்புக்கு பின் உள்ளவற்றை அறியாமல் மனிதன் வாழ்வதால் இது இருள் நிறைந்த அல்லது அறியாமை நிறைந்த உலகம் என்று கருதலாம். அதிலிருந்து வெளிச்சம் கொடுப்பது இறைவனின் வார்த்தைகளே. 

அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக!). (4:1

அறம் செய்யப்படுவதன் விளைவு என்ன

தமிழர் சமயம் 

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. குறள் 39

மு. வரதராசன் உரை: அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும்; அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை. 

இஸ்லாம் 

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு நல்வாழ்வும், அழகிய தங்குமிடமும் உண்டு. (அல்குர்ஆன்: 13:29)

கிறிஸ்தவம் / யூதம் 

தீயவர்கள் தாம் செய்யும் தவறுகளுக்குத் தண்டனை பெறுவார்கள். நல்லவர்கள் தாம் செய்யும் நற்செயல்களுக்காக விருது பெறுகிறார்கள்நீதிமொழிகள் 14:14


முடிவும் பிறப்பும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது

தமிழர் சமயம் 

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறநெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவங்
கடிமலர்க் குன்ற மலையது தானே. - திருமந்திரம் 19

(ப. இ.) ஆக்கப்பாடுகளாகிய மாயாகாரியப் பொருள்கள் அனைத்திற்கும் முடிவாகிய இறப்பினையும் தோற்றமாகிய பிறப்பினையும் முன்னுதலாகிய திருவுள்ளத்தானே படைத்தருளியவன் சிவபெருமான். அவனே அடிகள். அவன் உறையும் அறநெறியினை ஆராயின் அஞ்சத் தகுந்த இடியும் வேறு பல முழக்கமும் ஈசர் உருவும் தனக்கு அடக்கம் என்பதனைப் புலப்படுத்த ஆண்டும் உறைவன். மேலும் அவன் எங்கும் நிறைந்தவன். அதனால் எதுவும் அவனுக்கு விலக்கன்று. ஆருயிர்க்கு அருள் செய்தற் பொருட்டு அம்மையும் தானுமாய் எழுந்தருளி இருப்பது நறுமணம் கமழாநின்ற திருக்கயிலாய மலையதுவாகும். வெள்ளி - அறிவின் அடையாளம்.

இஸ்லாம் 

அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதிவிட்டான். (அப்போது) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மேல் இருந்தது. அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ்(ரலி)  நூல்: ஸஹீஹ் முஸ்லிம் : 5160

தமிழ் சமயத்தில் இறைத்தூதர்கள் இருந்தார்களா?

சமூகங்களுக்கு இடையே இன்றைய காலகட்டத்தில் நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையில், ஒரு சமூகத்துக்கும் மற்றொரு சமூகத்துக்கும் இடையிலான வேறுபாடுகளை முன்னிறுத்திச் சிந்திப்பதைவிட, அவர்களுக்கிடையே உள்ள ஒற்றுமைகளை உணர்ந்து, அவற்றை உரையாடலின் மூலம் பகிர்ந்து கொண்டு ஏற்றுக்கொண்டு நடப்பதே அமைதியானதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருக்கும் பண்பட்ட சமுதாயத்தை உருவாக்கும் வழியாகும். நாம் வாழும் நிலப்பரப்பின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாது, இந்த அமைதியான சமூகச் சூழலையும் நமது பிள்ளைகளுக்குப் பாரம்பரியமாக விட்டுச் செல்லுவது நமது கடமையாகும்.

மறைநூல் ஒப்பீடு ஏன்? அது சரியான வழிமுறையா? 

மனிதன் படைக்கப்பட்டவனா, பரிணமித்தவனா என்கிற இரு தத்துவ அடிப்படை பிரிவில் இக்கட்டுரை மனிதன் படைக்கப்பட்டவன் எனும் கோணத்தில் பயணிகிறது. இவ்விரண்டும் ஒன்றுக்கொன்றுக்கு நேர் முரணானது. ஆனால் இரண்டையும் இணைத்து ஒரு குழப்பமான கருத்தை இன்றைய ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். அதாவது மனிதன் ஆரம்பத்தில் குடிகளாக மாறிய பிறகு, கால வோட்டத்தில் சிந்தித்து தேவைகளுக்கு ஏற்ப கடவுள் எனும் கருப்பொருளை உருவாக்கினான் என்பதாகும். ஆனால் மனிதன் படைக்கப்பட்டவன் என்றும் அதற்கான தரவுகளை உலக மறைநூல்களில் உள்ளது என்றும் பல்வேறு தரவுகளை அவைகள் சொல்லுகின்றன. அந்த தரவுகளை எடுத்து ஆராய்ந்து சீர்த்தூக்கி பார்ப்பதன் மூலம் அதன் உண்மைத்தன்மையை நாம் அறிந்துகொள்ள முடியும். 
 
தமிழ் சமயத்தில் மறைநூல்களாக அறியப்படும் நூல்களையும், இஸ்லாமிய மறைநூலான திருக்குர்ஆன் மற்றும் அதற்கு விளக்கமாக அமைந்த நபி மொழியும் ஒப்பிட்டு ஆராய்வதன் நோக்கம், இரு சமூகங்களுக்கிடையே உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கம் மட்டுமல்ல; அவ்வாறு ஒற்றுமையை தேடி அறிந்துகொள்ளும் பொழுது குறைந்தது இருவருக்கும் பொதுவான அறத்தின் வழி வாழ இவ்விரு மார்க்க வேதங்களுமே வலியுறுத்துவதால் இந்த முயற்சி செய்யப்படுகிறது.

குறளை வெய்யோர்க்கு மறைவிரி எளிது. - (முதுமொழிக் காஞ்சி 8. எளிய பத்து 4)

பதவுரை: குறளை - திருக்குறளை; வெய்யோர்க்கு - விரும்புவோர்க்கு; மறை - மறை நூல் விளக்கம்; விரி - அவிழ்வது; எளிது - எளிது

பொருள்: திருக்குறளை விரும்புவோர்க்கு மறை நூல்களின் விளக்கம் வெளிப்படுவது எளிது. 

குறிப்பு: முதுமொழிக்காஞ்சி-யின் ஆசிரியர் கிபி 5 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மதுரை கூடலூர் கிழார் ஆவார், இதை 1919-ல் உரையுடன் பதிப்பித்தவர் கே. செல்வகேசவராய முதலியார் ஆவார். அவரின் பொழிப்புரையில் குறள் எனபதற்கு 'கோள் சொல்லுதல்' என பொழிப்புரை எழுதப்பட்டு உள்ளது. ஆனால் அதற்கு அப்படி ஒரு பொருள் இருப்பதாக எந்த ஒரு அகராதியிலும் நிகண்டிலும் இருப்பதாக தெரியவில்லை. குறள் என்பதற்கு (குரு+அள்=குருகிய அளவுடையது) குறுமையானது, சிறியது, சுருக்கமானது என்ற பொருளைதான் காணமுடிகிறது. 
 
எனவே இவ்வாறு முதுமொழி கூறுவதன் காரணம் குறளோடு இன்னொரு மறை நூலை ஒப்பிட அவற்றில் ஒன்று மற்றொன்று ஆதாரமாக, சாட்சியாக, ஒன்றை ஒன்  று நிறுவக்கூடியதாக அமையும் என்பதால். இது தமிழ் மறைகளை மட்டும் ஒப்பிட அனுமதிக்கிறதா? அல்லது மொழி, நிலம் காலம் கடந்து இறைவனால் வழங்கப்பட்ட எந்த மறைநூலையும் ஒப்பிட அனுமதிக்கிறதா? என்ற கேள்விக்கு நல்வழி பாடல் ஒரு கருத்தை கூறுகிறது. 
 
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனி மொழியும்
கோவை திருவாசகமும் திருமூலர் சொ ல்லும்
ஒருவா சகமென் றுணர். - (நல்வழி 40)

பதவுரை: தேவர் குறளும் - தேவர் வழங்கிய திருக்குறளும்; திரு நான்மறை முடிவும் - உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் உள்ள வேதங்களாகிய நான்மறையின் சாரமும், மூவர் தமிழும் - (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் எனும்) மூவர்களுடைய (தேவாரமாகிய) தமிழ் வேதமும், முனிமொழியும் - இது வல்லாத ஒத்தகருத்துடைய மற்ற நூல்களும், சித்தர் பாடல்களும்; கோவை திருவாசகமும் - மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம், திருமூலர் சொல்லும் - திருமூலரின் திருமந்திரமும், ஒரு வாசகம் என்று உணர் - ஒரு பொருளையே குறிப்பனவென்று உணர்ந்துகொள்.

இஸ்லாம் குர்ஆனுடன் மற்ற வேதங்களை ஒப்பிட அனுமதிக்கிறதா?

“வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” (என்று கூறுங்கள். நம்பிக்கை யாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) “நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள் - (குர்ஆன் 3:64)

குறிப்பு: மேலும் இவ்வாறு வேதங்களை ஒப்பீடு செய்வது ஏன்? என்றும் நான்மறை என்பது உலக வேதங்கள் ஆகும்! எனபதும், சம்ஸ்கிருத வேதமல்ல! என்பதும், திருக்குறள் மட்டுமல்ல! எனபதும் அதற்குரிய தலைப்பில் விரிவாக ஆதாரங்களுடன் எழுதப்பட்டு உள்ளது. எனவே அவற்றை இங்கே விரிவாக எழுதவில்லை.

இந்த அடிப்படை புரிதலோடு இந்த கட்டுரையின் மையக்கருத்தான தூது-வை வாசிப்போம்.

தூது என்பது பொதுவாக இருவரிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ளப் பிறிதொருவரை (அல்லது அஃறிணைப் பொருட்களை) அனுப்புவதாகும். இது, தலைவன்-தலைவியர் இடையேயான காதல், அரசர்களின் அரசியல் உறவு எனப் பல காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதை நாம் அறிந்து வைத்து உள்ளோம்.

அதே வேளையில் ஆபிரகாமிய மாதங்களில் கூறப்படுவது போல இறைத்தூதர் எனும் கருத்து தமிழ் சமயத்தில் உண்டா? என்ற கோணத்தில் நாம் ஆய்வு செய்யவேண்டி உள்ளது. ஏன்? ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் திருமந்திர தத்துவம் உண்மை என்றால் இறைவன் என்று பேசும் எந்த மொழியாக இருந்தாலும் எந்த மறைநூலாக இருந்தாலும் அந்த சமயம் உருவான முறையில், அதன் அடிப்படை தத்துவத்தில் ஒற்றுமைகள் இருக்க வாய்ப்பு அதிகம் உண்டு. அந்தவகையில் ஆபிரகாமிய மதங்கள் கூறும் தூதுத்துவம் எப்படி இயங்குகிறது என்பதை நாம் முதலில் அறிந்து கொள்வோம்.

தூது செய்தி எப்படி மக்களுக்கு வருகிறது என்று கூறும் பொழுது இசுலாம் இவ்வாறு விளக்குகிறது.

அல்லாஹ் --> ஜிப்ராயீல் (தேவர்) --> குரு (மனிதர்) --> மனிதர்கள் & ஜின்கள் (அசுரர்கள்)   

தூது செய்தி எங்கு தொடங்கி எப்படி பயணித்து எங்கே முடிகிறது என்பதை மேலுள்ள படம் விளக்குகிறது.

அதற்கான ஆதாரமான பின்வரும் வசனம் கூறுகிறது: 

அல்லாஹ் ஜிப்ராயீல் எனும் தேவர்தூதருக்கு தனது கட்டளைகளை கூறுகிறான். 

யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது; இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது - (குர்ஆன் 2:97)

அவன் மலக்குகளிடம் (தேவதூதர்களிடம்) வஹீயைக் (தூது செய்தியை) கொடுத்துத் தன் அடியார்களில் தான் நாடியவர் மீது (அனுப்பி வைத்து) “நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன், என்னைத்தவிர வேறுயாருமில்லை; ஆகையால் நீங்கள் எனக்கே அஞ்சுங்கள் என (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யுங்கள்” என்ற கட்டளையுடன் (மலக்குகளை) இறக்கி வைக்கிறான். - (குர்ஆன் 16:2)

அந்த தேவதூதர்கள் மனிதர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்களுக்கு அதை உபேதேசம் செய்கின்றனர்.

மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் (தேவர்கள்) மீதும் சத்தியமாக! - (குர்ஆன் 77:5,6)

இன்னும், (ஜிப்ரீலே! நபி முஹம்மதுக்கு கூறுவீராக!) உமது இறைவனின் உத்தரவின்படியே தவிர நாம் இறங்க மாட்டோம். எங்களுக்கு முன் இருப்பவையும் (-மறுமை காரியங்களும்) எங்களுக்கு பின் இருப்பவையும் (-உலக காரியங்களும்) அவற்றுக்கு மத்தியில் இருக்கின்ற காரியங்களும் அவனுக்கே உரிமையானவை ஆகும். இன்னும், உமது இறைவன் மறதியாளனாக இல்லை. - (குர்ஆன் 19:64)

(நபியே!) (நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கி வைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்..- (குர்ஆன் 2:99)
 
முகமது நபி அவரிகளின் பணி அந்த குர்ஆனை மக்களுக்கு போதிப்பதோடு அதை பயிற்றுவிப்பதும் ஆகும். அதை அவர் செவ்வனே செய்து முடித்தார் என்பது வரலாறு.

தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை எல்லாம் (ஒரு குறைவுமின்றி அவர்களுக்கு) எடுத்துரைப்பீராக!. நீர் அவ்வாறு செய்யாவிடில் அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக ஆக மாட்டீர். (இதில் எவருக்கும் அஞ்சாதீர்!) மனிதர்(களின் தீங்கு)களில் இருந்து, அல்லாஹ் உம்மைக் காப்பாற்றிக் கொள்வான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான். - (குர்ஆன் 5:67)

(நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவு படுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். (குர்ஆன் 16:44 )

எனினும் (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர்); நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை; (தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும்; இன்னும், நிச்சயமாக நம்முடைய ரஹ்மத்தை - நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின் காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் - நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான். (குர்ஆன் 42:48)

(மக்களே!) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறைவேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்? ‘நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு அறிவித்துவிட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!’ (முகமது நபி அவர்களின் இறுதி பேருரை)

அவர் தம் இச்சைப்படி (எதனையும்) கூறுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டேயன்றி வேறில்லை.. (குர்ஆன் 53:3,4)
 
அவர் கொடுத்த தூது செய்தியில், குர்ஆனில் வேறு எந்த ஒரு செய்தியை கூட்டுவதும் குறைப்பதும் மற்ற எவருக்கும் தடை செய்யப்பட்டு உள்ளது . அதோடு அவரின் உபதேசத்துக்கும் மாற்று விளக்கம் கூறுவதும் தடசைசெய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் அவரின் போதனையின் அடிப்படை பாதுகாக்கப்படுகிறது. கால ஓட்டத்தில் அந்த அடித்தளத்தின் மீது நமது வாழ்வை கட்டி அமைக்கலாம், ஆனால் அந்த அடிப்படைகளை தகர்த்துவிட்டு இஸ்லாத்தில் பயணிக்க முடியாது என்கிறது இஸ்லாம். எனவே இறைவனின் தூது செய்தியில் பொய் கலக்காமல் இருக்க என்னென்ன முன்னேற்பாடுகள் செய்யபபட வேண்டுமோ அதை இஸ்லாம் தெளிவாக செய்து உளள்து. 
 
நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை (உம் மீது) இறக்கிவைத்தோம். ஆகவே, (அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதைப் பாதுகாத்துக் கொள்வோம். - (குர்ஆன் 15:9
 
நபி அவர்களின் சொல் என்பது குர்ஆனுக்கு விளக்கமானது, எனவே அவர் சொன்னானதாக அல்லது செய்ததாக பொய் கூறுவது நரகிற்கு அழைத்து செல்லும். 
 
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'என் மீது பொய் சொல்லாதீர்கள்! என் மீது பொய் சொன்னவன் நரகத்தில் நுழையட்டும்!' நூல்கள் : (புகாரீ -106, முஸ்லிம் 2
 
குர்ஆனை பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் ஏற்று உளளதால் அதில் மாற்றம் செய்ய முடியாதவர்கள் அடுத்து நபி அவர்களின் மீது பொய் கூற முயல்வர் அடுத்தது குர்ஆனுக்குஇ மாற்று வியாக்கம் சொல்ல முயற்சி செய்வர் என்பதால் குர்ஆனுக்கு சுய விளக்கம் கொடுக்க முயல்வர். எனவே அதற்கும் தடை உள்ளது. 
 
ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(நபியே!) அ(ந்த இறை)வனே இந்த வேத நூலை உங்களுக்கு அருளினான். (இதில்) தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய வேறு சில (முதஷாபிஹாத்) வசனங்களும் (இதில்) உள்ளன. யாருடைய இதயங்களில் ‘கோணல்’ உள்ளதோ, அவர்கள் குழப்பம் செய்ய விரும்பியதாலும், (சுய) விளக்கம் அளிக்க நாடியதாலும் பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய (வசனத்)தையே பின்தொடர்கின்றனர். ஆனால், அவற்றின் (உண்மை) விளக்கத்தை அல்லாஹ்வையன்றி எவரும் அறியார். அறிவில் முதிந்தவர்களோ ‘இவற்றை நாங்கள் நம்பினோம். (இவ்விரு வகையான வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்தே வந்துள்ளன’ என்று கூறுகின்றனர். (எதையும்) அறிவாளிகளன்றி எவரும் (சரியாக) உணர்வதில்லை’ எனும் (திருக்குர்ஆன் 03:7 வது) வசனத்தை ஓதிவிட்டு, ‘முதஷாபிஹாத்தான வசனங்களைத் தேடித் திரிபவர்களை நீங்கள் பார்த்தால் அவர்கள் தாம் (இந்த வசனத்தில்) அல்லாஹ்வால் குறிப்பிடப்பட்டவர்கள் (என்பதைப் புரிந்து கொண்டு) அவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்’ என்று கூறினார்கள். (புஹாரி
 
மேற்சொன்ன வசனத்தில் "அ(ந்த இறை)வனே இந்த வேத நூலை உங்களுக்கு அருளினான். (இதில்) தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும்..." என்கிற செய்தி மூலம் தூது என்பது மிக வெளிபபடையான இந்த வேதத்தின் ஆதாரம் என்பது புலப்படுகிறது.

இதே போல வேறு காலத்தில், மொழியில் இடத்தில் இப்படி தூதர்கள் இருந்து இருக்கிறார்களா? குர்ஆன் என்ன சொல்கிறது? 
 
மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள். (குர்ஆன் 16:36) 
 
எனவே இந்த தூத்துவ கட்டமைப்பு தமிழ் சமயங்களில் இருந்ததா? இருந்திருதால் அது இப்பொழுது ஏன் அந்நியமாக தெரிகிறது? என்பதை ஆய்வு செய்வோம் வாருங்கள்.

தமிழ் மறைநூல்கள் இந்த தூது பற்றி என்ன சொல்கிறது?  

முதலில் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால், இதில் நாம் ஆய்வு செய்யும் நூல்கள் எல்லாம் குறைந்தது 2000 ஆண்டுகள் பழமையானவை, அதற்கு பொழிப்புரைகள் அதிகபட்சம் 1000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் எழுதப்பட்டு உள்ளது. எனவே அந்த கால இடைவெளி, அந்த இரு காலங்களிலும் இருந்த அரசியல் சூழ்நிலைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த பொழிப்புரைகளை அப்படியே பயன்படுத்தாமல், அவற்றை அடிப்படியாக கொண்டு, சொல்லுக்கு சொல் அகராதியில் உள்ள பொருளையும் பயன்படுத்தி கொண்டு இந்த ஒப்பீட்டு பணி முன்னெடுத்து செல்லப்படுகிறது. ஏனென்றால் பல சொற்களுக்கு கொடுக்கப்படும் பொருளுக்கும் அதன் வேர்ச்சொல்லுக்கு சிறிதும் தொடர் இல்லாமல் இருக்கின்றது.  இன்றைய AI காலத்தில்  தரவுகள் எளிதாக கிடைப்பதால் சொல்லுக்கு சொல் பொருளை ஆய்ந்து பொருத்துவதன் மூலம் சரியான விளக்கத்தை பெற முடியும் என கருத முடிகிறது. பல்வேறு தமிழ் நூல்கள் தூதுப்பற்றி பேசுகிறது. அவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம். 

திருமந்திரம்  

இஸ்லாத்தில் அல்லாஹ் தேவர்கள் மனிதர்களுக்கு போதிக்கும் பொருட்டு முதலில் வேதத்தை தேவர்களுக்கு கொடுத்ததாக அறிந்துள்ள நாம், தமிழர் சமயத்தில் அந்த வழிமுறை உள்ளதா என்று ஆய்வு செய்யும் பொழுது திருமந்திரம் இப்படி சொல்வதை கண்டோம்.

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே. (பாடல் 10) 
 
பொழிப்புரை : மூன்று படைப்புகளாகிய தேவர், அசுரர், இயக்கருக்கும், நான்கு நந்திகளுக்கும் வேதத்தை சொல்பவன் ஈசன் ஆவான்.

குறிப்பு: சிவன் என்பதற்கும், நந்தி என்பதற்கும் சிவபுராணம் அல்லது மற்ற புராணங்கள் கூறிய கதைகளை மறந்துவிட்டு இப்பாடல்களின் விளக்கத்தை நேரடியாக திருமந்திரம் எனும் வேதம் வழியாக தமிழ் சொற்களின் பொருள்களை கொண்டு வாசிக்கும் பொழுதுதான் அதன் உண்மை பொருளை அறிய முடியும்.

இதில் மூவர் யார்?

போற்றி என்பார் அமரர் புனிதன் அடி
போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி
போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி
போற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே. - திருமந்திரம்

குறிப்பு: அசுரர் என்பது மனிதர்கள் அணுகமுடியாத வேறு ஒரு படைப்பு. எனவே நரகாசூரன் பத்மாசூரன் போல சொல்லப்படும் அனைத்தும் கட்டுக்கதைகள் ஆகும். 

நால்வர் யார்? 

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.

மனிதர்களில் நந்தியின் அருள்பெற்ற நாதனை / குருவை நீங்கள் தேடினால், 1) சிவயோக மாமுனி, 2) பதஞ்சலி, 3) வியக்ராமர் 4) எண்மர் இந்த நால்வரும் தான் நதிதேவர் ஆவார்கள் என்பதை அறிக. 

நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே.  
 
நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. - திருமந்திரம் 

அந்த நந்தி தேவர் என்பவரை குருவாக ஏற்ற திருமூலர் அவர்கள் மக்களுக்கு குருவாக ஆக்கபட்டதாவகவும், அவர் வழிகாட்ட அந்த வழியை பின்பற்றியதாக அவர் கூறுகிறார். இது முகமது நபி அவர்கள் தேவதூதர் ஜிப்ரியேலின் மூலம் எப்படி தூதுத்துவத்தை பெற்றாரோ அவ்வாறே உள்ளது. மொழி மாற்றம் காரணமாக இறைவன், தேவர்கள், இறைத்தூதர்களின் பொதுப்பெயர் வேறுபடுகிறது ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே வரையறையுடனும், ஒரே பண்புடனும் இருக்கின்றனர். இதன் பொருள் அவர்கள் வேறு வேறு என்பதல்ல, 

திருக்குறள் 

திருக்குறளில் கூறப்படும் மன்னன் மற்றும் தூது ஆகிய கருத்துகளை நாம் பெரும்பாலும் அரசியல் அல்லது நிர்வாகக் கோணத்தில் மட்டும் அணுகும் பழக்கம் கொண்டுள்ளோம். ஆனால் வடமொழி அல்லது வடமொழி சார்ந்த சமயச் சிந்தனைகள் இந்நிலத்தில் ஆதிக்கம் பெறுவதற்கு முன்பு, இங்கு நிலவிய தமிழ்சமய மரபில் இந்த நிலத்தை ஆண்ட மன்னன் வெறும் அரசாராக மட்டுமல்ல; அவன் தூதனாகவும் இருந்தான். அதாவது, அவன் அறநெறி மற்றும் மறைநூல் கருத்துகளை மக்களிடம் எடுத்துச் சொல்லும் பொறுப்பையும் ஏற்றிருந்தான்.

மன்னன் மறைநூல் போதிப்பவனாக இருந்தானா?” என்ற கேள்விக்கு திருக்குறளே ஆதாரமாக நிற்கிறது.

எப்பொருளும் ஓரார் தொடரார் மற்றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. - மன்னரோடு சேர்ந்தொழுகல் 695

இக்குறளுக்கான மு. வரதராசன் அவர்களின் விளக்கம்: (அரசர் மறைபொருள் பேசும் போது வேறு) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும் என்பதாகும்.

இதன் மூலம், மன்னனின் கடமை ஆட்சி செய்வதோடு மட்டுமல்ல; ஆன்மீகத்திற்கும் அறநெறிக்கும் அடிப்படையாக விளங்கிய மறைநூலை மக்களுக்கு எடுத்துரைக்கும் பொறுப்பும் அவனுக்கிருந்தது என்பது தெளிவாகிறது. 

இதை தொல்காப்பிய மரபியல் இப்படி கூறுகிறது.

நூலே கரகம் முக்கோல் மணையே ஆயும் காலை அந்தணர்க்கு உரிய. - தொல்காப்பியம் மரபியல் 71
பதவுரை: 
 
நூலே: நூல் (மறை நூல் - பெயர்ச் சொல்) + ஏ (உறுதிப்படுத்தும் உருபு). அதாவது "அது நூல்தான்" என்று அதை தொடர்ந்து வரும்  கரகம் மற்றும் முக்கோல் சுட்டுகிறது.

கரகம்: கரகம் என்பதை கரம் (கை) + அகம் (உள்ளே, உள்ளம்)  என பிரிக்கலாம். இதில் கரம் என்றால் பற்றி பிடித்தல் என்றும் பொருள் படும். எனவே உள்ளத்தில் தோன்றும் நூலை பற்றிப்பிடித்தல் என்று பொருள் கொள்ளலாம். அதாவது இஸ்லாம் கூறும் வகீயை இது ஒத்துள்ளது. வகீயின் மூலம் மறைநூல் வழங்கப்படுவதாக இஸ்லாம் சொல்கிறது. பின்னாளில் கரகம் என்பதன் குறியீடாக நீர் அடங்கிய சிறு குடம் மாறி, பிறகு கரகம் என்றாலே குடம் என்று ஆகி இருக்க வேண்டும். 

முக்கோல்: பழந்தமிழ் மரபில், முக்கோல் என்பது அரசன் அல்லது தலைவன் கையில் இருப்பது: 1) அறம் (நீதி), 2) பொருள் (ஆட்சி – ஒழுங்கு), 3) இன்பம் (பாதுகாப்பு – நலன்) என்ற மூன்று தளங்களையும் சமநிலையில் நடத்த வேண்டும் என்பதைக் குறிக்கும்

மணையே: மணை (உயர்வு, மரியாதை) + ஏ (உறுதிப்படுத்தும் உருபு). இதுதான் உயர்வு 
ஆயும் காலை: ஆராயும் போது

அந்தணர்க்கு உரிய: இதை செய்பவர்தான் அந்தணர் 

பொருள்: கரகம் மற்றும் முக்கோல் தான் நூல் ஆகும், அதை ஆராயும் பொழுது தான் உயர்வு கிடைக்கும், இதை செய்பவர் அந்தணர் ஆவார்.

குறிப்பு: இதில் முரண் இருப்பதாக கருதுவோர் தொல்காப்பியம் கூறும் முதல் நூல் வழி நூல் சூத்திரத்தை வாசிக்கவும்.

அந்தணாளர்க்கு உரியவும் அரசர்க்கு ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே. - தொல்காப்பியம் மரபியல் 73

பொருள்: இந்த உரிமைகளை அரசனும் பெறலாம்.

அந்தணாளர்க்கு அரசு வரைவு இன்றே. - தொல்காப்பியம் மரபியல் 83

பொருள்: அரசாளும் உரிமையும் அந்தணர்க்கு உண்டு.

எனவே வடமொழி பாரம்பரியம் போலல்லாமல் தமிழ் மரபில் அந்தணரும் அரசரும் ஒரே ஆளாக இருக்கமுடியும். இது சனாதனத்தை விட ஆபிரகாமிய மதங்களோடு இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் இசுலாமிய மரபோடு ஒத்துப்போகிறது. இங்கே நாம் நோக்கத்தகுந்தது என்னவென்றால் வர்ண அடுக்குமுறையை இது மறுதலிப்பதால் தமிழ் கூறும் அந்தணரும் இன்று உள்ள பிராமணரும் ஒரே குணமுடையவர்கள் அல்ல. எனவே ஒன்றுக்கு மற்றொன்றை மாற்று சொல்லாக பயன்படுத்த முடியாது. 

ஆடுர்த்ததாக, அந்தணனும் அரசனும் ஒன்றாக இருக்க வாய்ப்பு உண்டு என்று ஏற்று கொண்டாலும், தூதன் என்பவன் தலைவனாகவோ அரசனாகவோ இருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது?

பொதுவாக தூது என்பது ஒருவர் தம் கருத்தை இன்னொருவருக்குப் புலப்படுத்த இடையே பிறிதொருவரை அனுப்புவதாகும். அந்தப் பொறுப்பை ஏற்றுச் செல்பவன் தூதன் ஆவான் என்று நாம் புரிந்து வைத்து உள்ளோம். அந்த வரையறை சரியா அல்லது முழுமையானதா என்று நாம் சிந்திக்கே வேண்டிய தருணம் இது. இது இஸ்லாம் கூறும் இறை தூதை குறிப்பிடவில்லையா என்று ஆய்வு செய்வோம். அதற்க்கு நாம் திருக்குறளில் கூறப்பட்ட 69 ஆவது அத்தியாயமாக தூதுவை வாசிப்போம்.
 
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை. - தூது 687

இக்குறளின் விளக்கம் என்னவென்றால் "தன் கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தை எதிர்நோக்கித் தக்க இடத்தையும் அறிந்து ஆராய்ந்து சொல்கின்றவனே தலைவன் ஆவன்". இங்கே தூதன் என்று இக்குறள் சொல்லவில்லை. ஒரு அரசின் தூதுவன் எப்போதும் தலைவனாக அறியப்பட்டது இல்லை என்பதை நம் அறிவோம்.  

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு. - குறள் 683:

மறைநூல்களை கற்றோரைவிட நூலை தெளிவு பெற அறிந்து அதில் வல்லவனாகியவன் வேலுடையாரை வென்று (நல்வினை எது தீவினை எது என) இரு வினையைச் சொல்லுவது இயல்பாம். 

தொல்காப்பிய கூற்றுப்படி நூல் என்றாலே மறைநூல் தான் என்பதும், அந்த நூல் அந்தணருக்கு உரியது, அதேபோல அரசனும் அந்தணராகலாம், அந்தணரும் அரசனாகலாம் என்றும் மேற்சொன்ன மரபியல் 73 & 83 இல் தெளிவு படுத்துகிறது.  
 
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு. - தூது 688

இக்குறள் தூதனை வழியுரைப்பான் என்று குறிப்பிடுகிறது. வழி என்பதற்கு மார்க்கம் என்ற ஒரு பொருள் உண்டு. மார்க்கம் என்றால் சமயம் என்றும் பொருள். சன்மார்க்கம் என்ற சொற்பிரயோகத்தை நாம் கேள்விப்பட்டு இருப்போம். எட்டு சமயங்கள் தான் சன்மார்க்கம் என்று அழைக்கப்படுகிறத்து. வழியுரைப்பவன் என்றால் ஆன்மீக தூதன் அல்லது இறைதூதன் அல்லது சமயத்தை போதிப்பவன் என்று பொருள். 

மேலும் இது அரசியல் தூதனை குறித்தால் அவன் தூய்மையாகவும் துணை உடையவனாகவும் அதாவது மணமுடித்தவனாகவும் இருக்கவேண்டிய அவசியம் என்ன?  என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இதே போல பின்வரும் குறள்களிலும் இதே போன்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. - தூது 681

இங்கு தூதனுக்குத் தேவையானவை அன்பு, சிறந்த பண்பு, ஆன்ற குடிப்பிறப்பு எனக் கூறப்படுகின்றன. பண்பு அவசியமான தகுதி, அன்பு இருப்பது கூடுதல் சிறப்பு; ஆனால் ஆன்ற குடிப்பிறப்பு ஏன் அவசியமாக்கப் படுகிறது?

இதற்கான விடை, தூதன் வெறும் செய்தியாளன் அல்ல என்பதிலேயே உள்ளது. அவன் மறை கூறும் அறத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறான்; ஆகவே, அவனது சொல், செயல், நின்று பேசும் துணிவு ஒரு மரபின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.

இந்த உண்மையை மேலும் தெளிவாக்குவது குறள் 685

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது. - தூது 685

பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும்  நன்மை உண்டாக்குவதுதான் தூது ஆகும். 

ஒரு அரசன் தன் தூதனை இன்னொரு அரசனிடம் அனுப்பும்போது, அவனிடம் கொடுக்கப்பட்ட செய்தியில் இருந்து “பயனற்றவை” என்று எண்ணி சிலவற்றை நீக்க செய்தியாளனுக்கு அனுமதி உண்டா? இல்லை என்றுதான் நாம் உணர்கிறோம். அதுபோல, அந்த செய்தி கொண்டு செல்வதால் எதிர் தரப்பை மகிழ்விப்பதா, சினமூட்டுவதா என்பது செய்தியின் தன்மையைப் பொறுத்ததே தவிர, தூதனின் சொல்வித்தையால் அல்ல. எனவே, இந்தக் குறள் அரசர்களுக்கிடையேயான அரசியல் தூதை மட்டும் குறிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

தூவாத நீக்கி என்றால் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு நபரின் தன்மைக்கு ஏற்ப தேவையற்ற முறைகளை அல்லது விடயங்களை நீக்கி கேட்பவர் நன்மை பெறும் விதமாக, ஆனால் தூதின் அடிப்படை மாறாமல் செய்தியை சுவையாக சொல்லுவது ஆகும். அது இறைதூதர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

குறள் 686 இதை மேலும் வலுப்படுத்துகிறது:

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது. - தூது 686  
 
இங்கு வரும் “காலத்தால் தக்கது அறிவதாம் தூது” என்பது, ஓரிரு நாளில் செய்தி சொல்லி திரும்பும் ஒருவனைச் சுட்டவில்லை. மாறாக, அந்த மக்களிடையே தங்கி, அவர்களைப் புரிந்து கொண்டு, ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றவாறு தொடர்ந்து உபதேசிக்கும் ஒருவனைச் சுட்டுகிறது. 
 
குறள் 688 இல் வரும் தூய்மை, துணைமை, துணிவு என்ற மூன்றும் இதனை உறுதிப்படுத்துகின்றன. தூய்மை ஒழுக்கத்தைக் குறிக்கிறது. ஆனால் துணைமை ஏன்?.

இந்த முழுச் சிந்தனையின் உச்சமாக விளங்குவது குறள் 690:

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது. - தூது 690 
 
இதை அரசியல் தூதுவாக எடுத்தால் பொருள் பிழை படும். ஆனால் இறைவனின் மறை உண்மையை எடுத்துச் சொல்லும் தூதனாக எடுத்தால், இதன் பொருள் மிகத் தெளிவாகிறது. உண்மையைச் சொல்வதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும், அதற்காக அஞ்சாமல் இறைவனின் சத்தியத்தைப் பேச வேண்டும் என்பதே இக்குறளின் உள்ளடக்கம்.

ஆகவே, தூது அதிகாரம் முழுவதையும் ஒருங்கிணைத்து பார்க்கும்போது, இது

    • மறை நூல்களை தேவர்களிடம் பெற்று மக்களுக்கு தூது கூறும் தூதரைப் பற்றியதாகவும்
    • அரசியல் தூதர் மறைத் தூதர் இருவருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய அடிப்படை குணங்களை வரையறுக்கும் அத்தியாயமாகவும் விளங்குகிறது.

நேர்வழியை காட்டுபவன் இறைவனே

தமிழர் சமயம்

மாசற்ற கொள்கை மதிபோலத்தான் றோன்றும்
ஈசனருள் பெற்றக் கால். - (ஞானக்குறள் 108)

 பொருள் கலப்படம் இல்லாத இறை கொள்கை முழு நிலவை போல தெளிவாகத் தோன்றும் ஈசன் அருளைப் பெற்றுவிட்டால்.

இஸ்லாம்
 
அல்லாஹ்வே அவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான் - (குர்ஆன் 6:88)

 உங்களுடைய இணையர்களில் (விக்ரகங்களில்) சத்தியத்தின்பால் நேர்வழி காட்டுபவர் எவரேனும் இருக்கிறார்களா? என்று (நபியே) நீர் கூறுவீராக. அல்லாஹ் (தான்) உண்மையின் பால் வழி கட்டுகிறான். (சூரத்து யூனுஸ் வசனம் 35.)

கிரிஸ்தவம் / யூதம் 

கர்த்தரை முழுமையாக நம்பு. உன் சொந்த அறிவைச் சார்ந்து இருக்காதே. நீ செய்கிற எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தத்தை அறிந்திட முயற்சிசெய். அப்போது அவர் உனக்கு உதவுவார். உன் சொந்த ஞானத்தைச் சார்ந்து இருக்காதே. ஆனால் கர்த்தரை மதித்து தீயவற்றில் இருந்து விலகியிரு. நீ இதனைச் செய்தால், இது உன் உடலுக்கு மருந்தைப் போன்றது. இது உன்னை பலப்படுத்தும் புத்துணர்ச்சியான பானத்தைப் போன்றது. - (நீதிமொழிகள் 3:5-8)

பதஞ்சலி அட்டாங்க யோகம் Vs இஸ்லாம்

பதஞ்சலி என்பவர் யார்? 

பதஞ்சலி என்பவர் மனிதர் அல்ல, அவன் தேவர் சார்ந்த நந்தி ஆவார். நந்தி என்பது மாடு அல்ல, அவர் மனித இனத்தில் உள்ள குரு மார்களுக்கு தேவ குருவாக இருந்து போதனை செய்பவர். சரி, ஆதாரம் என்ன? 

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே. (திருமந்திரம் பாயிரம் பாடல் 6)

பதவுரை: நாதர் - ஆசிரியர்; 

பொழிப்புரை: நந்தியின் உதவி பெற்ற ஆசிரியர் யார் என்று அறிய விரும்பினால், நந்திகள் நான்கு பேர் : 1) சிவயோக மாமுனி, 2) பதஞ்சலி, 3) வியாக்கிரமர் என்றும் என்னொடுகூட இருப்பவர் 4) எண்மர் என்பவர்களாம்.  

நால்வரும் நாலு திசைக்கொன்றும் நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதரா னார்களே(பாடல் 9)

பதவுரை: நானா - பலவகைப்பட்ட;  நாதர்  - குரு, ஆசிரியர்

பொழிப்புரைநான்கு நந்திகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கும் (நான்கு மரபுகளுக்கு) ஒரு ஆசிரியராக உள்ளனர். நந்திகள் எனப்பட்ட நால்வரும் பலவகை பொருள்களை (Subject) கைக்கொண்டு  எல்லா உலகங்கட்கும் பொருந்திய ஆசிரியர்களாய், நான் பெற்ற பேற்றினை உலகம் பெறுக என்று நான்கு நந்தி தேவர்களும் ஆசிரியர்கள் ஆனார்கள். 

இதில் சிவயோக மாமுனி என்பவர் மேற்கத்திய மதங்களான ஆப்ரஹாமிய மதங்களின் வேதங்களை கொடுத்தவராக இருக்கலாம், எண்மர் எனபவர் தெற்குக்கு அதாவது தமிழ் சமூகத்துக்கு வேதங்களை கொடுத்த தேவர் ஆவார். பதஞ்சலி என்பவர் வடக்குக்கு அதாவது வடமொழி வேதங்களை ரிஷிகளுக்கு போதித்தவர். 

பதஞ்சலியை மகரிஷி (மனிதர்) என்றும், பல காலங்களில் வாழ்ந்த வெவ்வேறு மகரிஷிகள் என்றும் கூறுவோர் உண்டு. அவை எல்லாம் பிழையான புரிதல்கள், அவர் நான்கு நந்தி தேவர்களில் ஒருவர், அதனால் தான் அவரது உபதேசங்கள் வெவ்வேறுகாலங்களில் வெளிப்பட்டு உள்ளது. தேவர் ஒருவர் எப்படி அவரது பெயரில் ஒரு நூலை  கொடுக்க முடியும் என்று நீங்கள் கேட்டால், நந்தியின் பெயரில் நூல்கள் உண்டு என்பதை அறிந்து கொள்க.

பதஞ்சலியின் 8 உறுப்புகள் (அட்டாங்க யோகம்) விவரம்:
  1. யமம் (Yama): சமூக ஒழுக்கங்கள் (அஹிம்சை, சத்தியம், திருடாமை போன்றவை).
  2. நியமம் (Niyama): தனிப்பட்ட ஒழுக்கங்கள் (சுத்தம், திருப்தி, தவம் போன்றவை).
  3. ஆசனம் (Asana): உடல் நிலைகள் (தியானத்திற்கு ஏற்ற உடல் அமைப்பை உருவாக்குதல்).
  4. பிராணாயாமம் (Pranayama): சுவாசக் கட்டுப்பாடு (மூச்சைக் கட்டுப்படுத்தி ஆற்றலை ஒழுங்குபடுத்துதல்).
  5. பிரத்யாஹாரம் (Pratyahara): புலன்களை உள்நோக்கித் திருப்புதல் (வெளிப்புற விஷயங்களிலிருந்து கவனத்தைத் திருப்புதல்).
  6. தாரணை (Dharana): செறிவு (ஒரு விஷயத்தில் மனதை நிலை நிறுத்துதல்).
  7. தியானம் (Dhyana): தியானம் (சலனமின்றி மனதை ஒருமுகப்படுத்துதல்).
  8. சமாதி (Samadhi): ஆழ்ந்த நிலை (உயர்ந்த ஆன்மீக உணர்வு நிலை). 
இதே எட்டு உறுப்புகளை திருமூலரும் திருமந்திரத்தின் ஆறாவது தந்திரத்தில் விளக்கி உள்ளார்.எனவே ஒரே இறைவனே பதஞ்சலிக்கும், திருமூலரின் நாதரான எண்மர் எனும் நந்தி தேவருக்கும் போதித்து உள்ளான் என்பது புலப்படுகிறது. 

அஷ்டாங்க யோக Vs இஸ்லாம் ஒப்பீடு:
அஷ்டாங்க யோகாவின் 8 அங்கங்கள் தனிப்பட்ட மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு ஒரு கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையை வழங்குகின்றன. ஒவ்வொரு அங்கமும் இணக்கமான மற்றும் நிறைவான வாழ்க்கையை அடைவதற்கான பாதையில் ஒரு படியைக் குறிக்கிறது. ஒவ்வொரு அங்கத்தின் விரிவான ஆய்வு இங்கே: அதோடு இஸ்லாமிய போதனைகளை ஒப்பிடுவோம்.
1. யமம்: நெறிமுறை தரநிலைகள்
முதல் உறுப்பு அஷ்டாங்க யோகா மம் என்பது நெறிமுறை மற்றும் தார்மீகக் கொள்கைகளில் கவனம் செலுத்துகிறது. நாம் நம்முடனும் மற்றவர்களுடனும் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பதற்கும், இணக்கமான சூழலை உருவாக்குவதற்கும், மரியாதைக்குரிய உறவுகளை வளர்ப்பதற்கும் யமம் அடித்தளத்தை அமைக்கிறது. யமங்களில் பின்வருவன அடங்கும்: 
அஹிம்சை (அகிம்சை): அஹிம்சை என்பது அகிம்சை மற்றும் இரக்கத்தின் கொள்கையாகும். இது கருணையுடன் செயல்படவும், உடல் ரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்க்கவும் நம்மை ஊக்குவிக்கிறது. அஹிம்சையைப் பயிற்சி செய்வது அமைதியான மற்றும் இணக்கமான சூழலை ஊக்குவிக்கிறது மற்றும் மற்றவர்களுடன் உண்மையான தொடர்புகளை வளர்க்கிறது. 

ஹிம்ஸை என்பது தமிழில் தீங்கு, துன்பம், தொல்லை, அல்லது பிறருக்குக் கெடுதல் விளைவித்தல் எனப் பொருள்படும் ஒரு சொல் ஆகும், இது சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. இது பிறருக்கு வலி அல்லது துன்பம் கொடுப்பதைக் குறிக்கிறது. அதற்கு எதிரான பொருளுடையது அஹிம்சை. இதை இஸ்லாமும் போதிக்கிறது.  

மார்க்கம் (தீன்) என்பதே “நலம் நாடுவது‘ தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: தமீமுத்தாரீ (ரலி) (நூல்: முஸ்லிம் 95)

ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்துகொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி) - (நூல்: புகாரி 6011)

இரக்கம்  

மனிதர்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான். - (புஹாரியும் முஸ்லிமும் 2319)

சிறியவர்களிடம் இரக்கம் காட்டாதவரும், பெரியவர்களிடம் மரியாதை செலுத்தாதவரும் நம்மைச் சார்ந்தோர் அல்லநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), திர்மிதி)

பாவியிடமிருந்தே தவிர இரக்கம் பிடுங்கப்படாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), அஹ்மது).   

உடல், உணர்ச்சி அல்லது மன ரீதியாகவோ பிறருக்கு தீங்கு விளைவிக்காதே:

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்! ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்! எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். (அல்-குர்ஆன் 49:11)

அண்டை வீட்டாருக்கு தொல்லை தராதே!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)

சத்யா (உண்மைத்தன்மை): சத்யா நமது எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களில் நேர்மை மற்றும் நேர்மையை வலியுறுத்துகிறது. உண்மையாக வாழ்வதன் மூலம், நமது உறவுகளில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறோம், மேலும் நமது வெளிப்புற நடத்தையை நமது உள் மதிப்புகளுடன் இணைத்து, நம்பகத்தன்மையின் உணர்வை உருவாக்குகிறோம்.

நேர்மை  

நீதி, நன்மை, மற்றும் உறவினருக்குக் கொடுப்பதை அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக்கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுவதை உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். (அல்குர்ஆன்: 16:90)

நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்." - (குர்ஆன் 33:70) 

உண்மை  

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்மையே பேசுங்கள். உண்மை நன்மைக்கு வழிகாட்டும். நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும் ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார், அதை தேர்ந்தெடுத்துப் பேசிவருவார். இறுதியில் அல்லாஹ்விடம் வாய்மையாளர் (சித்தீக்) எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார் அறிவிப்பாளர் : அப்துல்லா பின் மஸ்டீத் ரலி (முஸ்லிம்: 5083)

அஸ்தேயம் (திருடாமை): அஸ்தேயம் என்பது பொருள் உடைமைகள், நேரம் மற்றும் சக்தி உட்பட இலவசமாகக் கொடுக்கப்படாதவற்றை எடுத்துக்கொள்வதைத் தவிர்ப்பதாகும். இந்தக் கொள்கை மற்றவர்களுக்கு மரியாதை அளிக்கவும், நம்மிடம் இருப்பதை மதிக்கவும் பாராட்டவும் ஊக்குவிக்கிறது.
திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்’ (அல்குர்ஆன் 5:38
பிரம்மச்சரியம் (நிதானம்): பாரம்பரியமாக பிரம்மச்சரியம் என்று விளக்கப்படும் பிரம்மச்சரியம் இன்று பெரும்பாலும் பாலியல் ஆற்றலை மிதமான மற்றும் பொறுப்புடன் பயன்படுத்துவதற்கான நடைமுறையாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. இது நமது ஆசைகள் மற்றும் உறவுகளில் சமநிலை மற்றும் கவனம் செலுத்துவதை ஆதரிக்கிறது, சுய கட்டுப்பாடு மற்றும் கவனத்துடன் வாழ்வதை ஊக்குவிக்கிறது.

உரிமை இல்லா பெண்களோடு எப்பொழுதும் உறவு கூடாது 

விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன்: 17:32)

ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள். (23:6)

 மனைவியாக இருந்தாலும் சில நேரங்களில் விலகி இரு 

ஒருவர் வேண்டுமென்று உண்பதும், குடிப்பதும், பகல் நேரத்தில் உடலுறவு கொள்வதும் நோன்பை முறிக்கும். - நூல்: அபூதாவூத்

 மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.” (2:222)

அபரிகிரஹம் (சொந்தமாக்காமை): அபரிகிரஹம் பொருள் உடைமைகள் மற்றும் ஆசைகள் மீது பற்றின்மையைக் கற்பிக்கிறது. இது எளிமையை ஊக்குவிக்கிறது மற்றும் உண்மையான மனநிறைவு வெளிப்புறக் குவிப்பிலிருந்து அல்ல, உள்ளிருந்து வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள். (குர்ஆன் 4:10)

அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை. ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை. இன்னும் (பிறருடைய) அனந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள். இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள். (குர்ஆன் 89:17-20) 

நம்பிக்கைக் கொண்டோரே! உங்களுக்கிடையே, உங்கள் பொருள்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்! திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர.  (குர்ஆன் 4:29

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாக எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்ற அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியை தடைசெய்து விட்டான். (குர்ஆன் 2:275)

உங்களுக்கிடையே உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் (இலஞ்சம்) கொண்டு செல்லாதீர்கள! (குர்ஆன் 2:188)

2. நியாமா: தனிப்பட்ட அனுசரிப்புகள்
இரண்டாவது அங்கமான நியாமா, ஒழுக்கமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஆதரிக்கும் தனிப்பட்ட ஒழுக்கங்கள் மற்றும் நடைமுறைகளில் கவனம் செலுத்துகிறது. யமா மற்றவர்களுடனான நமது தொடர்புகளைப் பற்றி பேசுகையில், நியாமா நமது உள் மனப்பான்மைகள் மற்றும் நடத்தைகளைப் பற்றியது. நியாமாக்கள்:
சௌச்சா (சுத்தம்): சௌச்சா உடல் மற்றும் மனம் இரண்டிலும் தூய்மை மற்றும் தூய்மையை வலியுறுத்துகிறது. இது உடல் சுகாதாரத்தைப் பராமரிப்பதையும் மன மற்றும் உணர்ச்சித் தெளிவை வளர்ப்பதையும் உள்ளடக்கியது. சௌச்சாவைப் பயிற்சி செய்வது ஆன்மீக வளர்ச்சி மற்றும் உள் அமைதிக்கு உகந்த சூழலை உருவாக்க உதவுகிறது.

உடல் சுத்தம்  

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமாலிக் அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : 'சுத்தம் இறைநம்பிக்கையில்  பாதியாகும். 'الحمد لله' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறுவது மீஸானின் நன்மையின் தட்டை நிரப்புகின்றது. 'سبحان الله' (அல்லாஹ் மிகத்தூய்மையானவன்) 'الحمد لله' ஆகிய இரண்டுமோ அல்லது ஒன்றோ, வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது. தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும், பொறுமை பிரகாசமாகும். திருக்குர்ஆன் உனக்கு சாதகமான அல்லது பாதகமான ஒரு ஆதாரமாகும்; தனது நாளைத் துவங்கும் ஒவ்வொரு மனிதனும் தனது ஆன்மாவை பேரத்தில் விடுகின்றான். ஒன்று அதற்கு விடுதலையைத் தேடித் தந்திருக்கின்றான். அல்லது அதற்கு அழிவைத் தேடித் தருகின்றான்' - (முஸ்லிம் 223)

 பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( خَمْسُ صَلَوَاتٍ افْتَرَضَهُنَّ اللَّهُ تَعَالَى مَنْ أَحْسَنَ وُضُوءَهُنَّ وَصَلَّاهُنَّ لوقتهن وَأتم ركوعهن خشوعهن كَانَ لَهُ عَلَى اللَّهِ عَهْدٌ أَنْ يَغْفِرَ لَهُ وَمَنْ لَمْ يَفْعَلْ فَلَيْسَ لَهُ عَلَى اللَّهِ عَهْدٌ إِنْ شَاءَ غَفَرَ لَهُ وَإِنْ شَاءَ عَذَّبَهُ ) (ஒரு நாளில்) ஐந்து வேளை தொழுகையைத்தான் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான்; அவற்றுக்காக அழகிய முறையில் (அங்கத்தூய்மை) செய்து, அவற்றுக்குரிய நேரத்தில் ஒரு ருகூஉவையும் இறையச்சத்தையும் முழுமையாக கடைப்பிடித்து தொழுதால் அவரை மன்னிப்பதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவ்வாறு செய்யவில்லையென்றால், அல்லாஹ்வின் வாக்குறுதி அவருக்கு இல்லை. அல்லாஹ் நாடினால் அவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான். அறிவிப்பாளர்:- உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் (நூல்:- அபூதாவூத்-361, நசாயீ457, முவத்தா மாலிக், முஸ்னது அஹ்மத், மிஷ்காத்-570)

மனத்தூய்மை  

இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!. அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா. எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்). - (குர்ஆன் 26:87-89)

 மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம். (குர்ஆன் 2:21)

“எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.” (2:129)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (நம்) தூதருடன் இரகசியம் பேச நேரிட்டால் உங்கள் இரகசியத்திற்கு முன்னர் ஏதேனும் தான தர்மத்தை முற்படுத்துங்கள். இது உங்களுக்கு, நன்மையாகவும், (உள்ளத்திற்குத்) தூய்மையாகவும் இருக்கும், ஆனால் (தான தர்மம் செய்வதற்கு) நீங்கள் வசதிபெற்றிராவிடின் - நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன். (58:12)

சந்தோஷா (மனநிறைவு): சந்தோஷா நம்மிடம் இருப்பதை மனநிறைவு மற்றும் ஏற்றுக்கொள்வதை ஆதரிக்கிறார். வெளிப்புற சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், எளிமையில் மகிழ்ச்சியைக் காணவும், உள் திருப்தி உணர்வை வளர்த்துக் கொள்ளவும் இது நம்மை ஊக்குவிக்கிறது.

நேர் வழி பெறும் அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் முற்றிலும் ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! [அல்குர்ஆன் 13:28]

 "... மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களை நேசிக்கிறான். (அல்குர்ஆன், 3:146)

"அவர்கள் சுகத்திலும் கஷ்டத்திலும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்கள், கோபத்தை அடக்குகிறார்கள், மக்களை மன்னிப்பார்கள் - மேலும் அல்லாஹ் நன்மை செய்பவர்களை நேசிக்கிறான்." (அல்குர்ஆன் 3:134)

அல்லாஹ், உங்கள் வீடுகளை உங்களுக்கு நிம்மதியளிப்பதாக ஆக்கியுள்ளான். (அல்குர்ஆன்: 16:80)

தன் தூதர்மீதும், இறைநம்பிக்கையாளர்கள் மீதும் அல்லாஹ் தனது அமைதியை இறக்கினான். (அல்குர்ஆன்: 9:26)

தப (சுய ஒழுக்கம்): தப என்பது சுய ஒழுக்கத்தையும் சவால்களைத் தாங்கும் விருப்பத்தையும் குறிக்கிறது. இந்தக் கொள்கை, தனிப்பட்ட மற்றும் ஆன்மீக இலக்குகளை அடைய உள் வலிமையையும் விடாமுயற்சியையும் வளர்ப்பதையும், ஒழுக்கமான முயற்சியின் மூலம் வளர்ச்சியை வளர்ப்பதையும் உள்ளடக்கியது.

வலிமை 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறைநம்பிக்கையாளரைவிடச் சிறந்த வரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே. உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, “நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!” என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, “அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்” என்று சொல். ஏனெனில், (“இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே’ என்பதைச் சுட்டும்) “லவ்’ எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும். அறிவிப்பவா் : உக்பா பின் ஆமிர் (ரலி), (நுால் :முஸ்லிம்  5178)

முயற்சி 

மூஸா, முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப் படவில்லையா? அவனது உழைப்பு (மறுமையில்) காட்டப்படும். (அல்குர்ஆன்: 53:36-40)

ஒழுக்கம் 

அவர்கள் (எத்தகையோரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்.  (குர்ஆன் 42:37)

நீர் கூறுவீராக: என் இறைவன் நிச்சயமாகத் தடை செய்தவை: வெட்கக்கேடான செயல்கள், அவை வெளிப்படையானவை அல்லது இரகசியமானவை; பாவங்கள் மற்றும் உண்மை அல்லது பகுத்தறிவுக்கு எதிரான மீறல்கள்; அல்லாஹ் எந்த அதிகாரமும் வழங்காதவற்றை அவனுக்கு இணை வைப்பது; அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாதவற்றைச் சொல்வது. [அல்-குர்ஆன் 7:33] 

"நற்செயல் என்பது உங்களுடைய முகங்களைக் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல! மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் ஒருவன் முழுமையாக நம்புவதும் மேலும் (அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்தின் காரணமாகத்) தமக்கு விருப்பமான பொருளை உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை மீட்பதற்கும் வழங்குவதும், மேலும் தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தைக் கொடுத்து வருவதுமே நற்செயல்களாகும். மேலும், வாக்குறுதி அளித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களும், வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்களுமே புண்ணியவான்கள் ஆவர்! இவர்களே உண்மையாளர்கள்; மேலும் இவர்களே இறையச்ச முடையவர்கள்." [அல்-குர்ஆன் 2:177]

ஸ்வாத்யாயா (சுய ஆய்வு): ஸ்வாத்யாயா என்பது சுய சிந்தனை மற்றும் ஆன்மீக நூல்கள் அல்லது போதனைகளைப் படிப்பதை உள்ளடக்கியது. இது நம்மைப் பற்றியும் பிரபஞ்சத்துடனான நமது தொடர்பைப் பற்றியும் நமது புரிதலை ஆழப்படுத்த ஊக்குவிக்கிறது, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் நுண்ணறிவை ஊக்குவிக்கிறது.

உமர் ரழி அவர்கள் கூறினார்கள் "நீங்கள் விசாரிக்கப்படு முன்னர் உங்களை நீங்களே விசாரித்துக் (முஹாஸபா செய்து) கொள்ளுங்கள். உங்களது செயற்பாடுகள் மறுமையில் நிறுக்கப்படுவதற்கு முன்னர் நீங்களாகவே எடை போட்டுப் பாருங்கள்" என்று குறிப்பிட்டு உள்ளார்கள். ஒவ்வொருவரும் ஒருநாளில் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு எந்தளவு கட்டுப்பட்டு வாழ்ந்தோம், இன்னும் அல்லாஹ்வினால் விலக்கப்பட்ட அம்சங்களிலிருந்து எந்தளவு விலகி நடந்து கொண்டோம் என்பது பற்றித் தன்னைத் தானே வினவிக் கொள்வதே "முஹாஸபா" வாகும். நபியவர்கள் கூறினார்கள் "ஒரு காலம் வரும், அக்காலத்தில் நரகத்தின் வாயில்களிலிருந்து அழைக்கும் அழைப்பாளர்கள் தோன்றுவார்கள். அவர்களுக்கு சாதகமாக பதிலளிப்பவர்களை அவர்கள் நரகத்தினுள் எறிந்து விடுவார்கள்... "(புஹாரி).

ஈஸ்வர பிராணிதானம் (தெய்வீகத்திடம் சரணடைதல்): ஈஸ்வர பிராணிதானம் என்பது உயர்ந்த சக்தி அல்லது தெய்வீகக் கொள்கைக்கு சரணடைவது பற்றியது. இது ஈகோவால் இயக்கப்படும் ஆசைகளை விட்டுவிட்டு, உயர்ந்த ஞானம் அல்லது உலகளாவிய ஒழுங்கில் நம்பிக்கை வைத்து, பணிவு மற்றும் நம்பிக்கையை வளர்க்க நம்மை அழைக்கிறது.

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102

(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:5)

நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்விடமே பொறுப்புச்சாட்ட வேண்டும்.” (ஆலு இம்ரான் 122.

இவர்கள்தான் நம் வசனங்களை நம்பிக்கை கொண்டு (நமக்கு) முற்றிலும் பணிந்து வழிபட்டு நடப்பவர்கள். (43:69)

3. ஆசனம்: உடல் தோரணைகள்
அஷ்டாங்க யோகாவின் மூன்றாவது அங்கம் ஆசனங்கள் ஆகும், இது உடல் தோரணைகள் அல்லது யோகா ஆசனங்களின் பயிற்சியில் கவனம் செலுத்துகிறது. நவீன சூழல்களில், அஷ்டாங்க யோகாவிற்குள் உள்ள ஆசனங்கள் பெரும்பாலும் அவற்றின் உடல் நன்மைகளுக்காக சிறப்பிக்கப்படுகின்றன, ஆனால் பதஞ்சலியின் அசல் கட்டமைப்பு ஆசனங்களை தியானத்திற்கு உடலை தயார்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக வைத்தது. இந்த அஷ்டாங்கங்களின் பயிற்சிஓகா ஆசனங்கள்பல நோக்கங்களுக்கு உதவுகிறது:

தொழுகையில் நிற்க (கையும்)

நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு நிற்கும் போது இரு கைகளையும் (மூடாமல்) நீட்டுவார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  (நூல்கள்: திர்மிதீ 223, அபூதாவூத்643, நஸயீ 873, அஹ்மத் 85)

 நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்ற போது... தங்களது வலக்கையால் இடக்கையைப் பிடித்திருந்ததை நான் பார்த்தேன். அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) (நூல்: அபூதாவூத் 624)

 குனிந்து நிற்க (ருகூ)

ருகூவிலும், ஸஜ்தாவிலும் எவர் தமது முதுகை (வளைவின்றி) நேராக நிறுத்தவில்லையோ அவரது தொழுகை செல்லாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்வூத் அல்அன்சாரீ (ரலி) (நூல்கள்: திர்மிதீ 245, நஸயீ 1017, அபூதாவூத் 729, இப்னுமாஜா 860, தாரமீ 129)

நெற்றியை தரையில் வைக்க (சுஜூத்)

'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்: புகாரீ 812)

அமர்க (ஜூல்ஸ்) 

நபி (ஸல்) அவர்கள் ஒற்றையான ரக்அத்களை நிறைவேற்றி விட்டு எழும் போது உட்காராமல் நிலைக்கு வர மாட்டார்கள். அறிவிப்பவர்: மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) (நூல்: புகாரீ 823)

உடல் வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்: ஆசனங்களைத் தொடர்ந்து பயிற்சி செய்வது வலிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் சமநிலையை மேம்படுத்துவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அஷ்டாங்க யோகா ஆசனங்கள் ஒட்டுமொத்த உடல் நலனை ஆதரிப்பதற்கும், நீண்ட கால தியானத்திற்கு உடலைத் தயார்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

“ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஒரு முறை பிரசங்கம் நிகழ்த்தும் போது, “கடந்த வருடம் பெருமானார் (ஸல்) அவர்கள் நான் நிற்கும் இதே இடத்தில் (பிரசங்கம் செய்ய) நின்றிருந்தார்கள்’’ என்று கூறி அழ ஆரம்பித்தார்கள். பிறகு “அல்லாஹ்விடம் சுகத்தைக் கேளுங்கள். ஏனேனில், இறை நம்பிக்கைக்குப் பிறகு சுகத்தைவிட சிறந்த பாக்கியம் யாருக்கும் கொடுக்கப்படவில்லை’’ (முஸ்னத் அஹ்மத்

 ஹஸ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடந்தால், மேடான பகுதியிலிருந்து கீழே இறங்கும்பொழுது எவ்வளவு வேகம் இருக்குமோ அவ்வளவு வேகமும், அவர்களின் கால்களுக்கு அவ்வளவு பலமும் இருக்கும்.” (திர்மிதீ)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அம்பெறிதலையும், குதிரையேற்றத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்.” (முஸ்லிம்)
தியானத்திற்கு உடலைத் தயார்படுத்துங்கள்: ஆசனங்கள் உடல் ஆறுதலையும் நிலைத்தன்மையையும் ஊக்குவிக்கின்றன, பயிற்சியாளர்கள் தியானத்தின் போது நீண்ட நேரம் வசதியாக உட்கார உதவுகிறது. இந்தத் தயாரிப்பு ஆழமான தியான அனுபவங்களுக்கு சரியான நிலைமைகளை உருவாக்க உதவுகிறது.

நீ தொழுகைக்காக நின்றால் நன்றாக உளுச் செய்து கொள்! பின்னர் கிப்லாபை நோக்கி நின்று, 'அல்லாஹு அக்பர்' என்று தக்பீர் கூறிக் கொள்! பின் (மெதுவாக) ருகூவு செய்! பின்னர் எழுந்து நேராக உனக்குத் திருப்தி ஏற்படும் வகையில் நிதானமாக நின்று கொள்! பின்னர் தலையை உயர்த்தி நன்றாக அமர்ந்து கொள்! பின்னர் திருப்தியாக ஸஜ்தா செய்து கொள்! பின்னர் இதேபோன்று உனக்குத் திருப்தி ஏற்படும் வரையில் தொழுகை முழுவதும் (ஒவ்வொரு ரக்அத்திலும்) செய்து கொள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். (புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, நஸாயீ மற்றும் இப்னு மாஜா)

மனக் கவனத்தை மேம்படுத்துதல்: ஆசனப் பயிற்சி ஆழ்ந்த தியானப் பயிற்சிகளுக்கு அவசியமான செறிவு மற்றும் நினைவாற்றலை வளர்க்கிறது. உடல் ஆசனங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், பயிற்சியாளர்கள் தங்கள் கவனத்தை செலுத்தவும் மனத் தெளிவைப் பராமரிக்கவும் கற்றுக்கொள்கிறார்கள். 

யார் நான் செய்ததை போல இந்த அழகிய முறையில் உளூச் செய்து இரண்டு ரக்அத்துகளை தொழுவாரோ, அந்த தொழுகையில் தனது உள்ளத்தில் அவர் எந்தவிதமான பேச்சுகளையும் பேசவில்லையோ, தொழுகையில் வீணான எண்ணங்களை அவர் கொண்டு வரவில்லையோ அவருடைய முந்தைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். அறிவிப்பாளர் : ஹம்ரான் ரழியல்லாஹு அன்ஹு, (நூல் : புகாரி 164.)

4. பிராணயாமா: சுவாசக் கட்டுப்பாடு
நான்காவது அங்கமான பிராணயாமம், சுவாசத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. "பிராண" என்பது உயிர் சக்தி அல்லது சக்தியைக் குறிக்கிறது, மேலும் "அயமா" என்பது நீட்டிப்பு அல்லது கட்டுப்பாடு என்பதைக் குறிக்கிறது. மூலம் பிராணயாமம், பயிற்சியாளர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்:
உயிர் சக்தியை மேம்படுத்துதல்: சுவாசத்தை ஒழுங்குபடுத்துவது உடல் முழுவதும் பிராணனின் ஓட்டத்தை அதிகரிக்கிறது, ஒட்டுமொத்த உயிர்ச்சக்தி மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துகிறது. பிராணயாமா உடலின் ஆற்றல் மட்டங்களை சமநிலைப்படுத்த உதவுகிறது மற்றும் உடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

 மேலும், இம்ரானின் மகள் மர்யம், அவள் தன் கற்பைப் பாதுகாத்துக் கொண்டாள், அதனால் நாம் அவளுக்குள் நம்முடைய வஹீயை ஊதினோம், அவள் தன் இறைவனின் வார்த்தைகளையும் அவனுடைய வேதங்களையும் உண்மையாக ஏற்றுக்கொண்டாள், அவள் கீழ்ப்படிந்தவர்களில் ஒருத்தியானாள்" (அல்குர்ஆன்: 66:12) .

மனதை அமைதிப்படுத்துங்கள்: கட்டுப்படுத்தப்பட்ட சுவாசம் மனதை அமைதிப்படுத்தவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. பிராணயாமா அதிக கவனம் செலுத்தும் மற்றும் அமைதியான மனநிலையை வளர்க்கிறது, தியானத்திற்கு உகந்த சூழலை உருவாக்குகிறது.
துணை தியானம்: பிராணயாமம் ஒரு சமநிலையான மற்றும் மையப்படுத்தப்பட்ட நிலையை உருவாக்குவதன் மூலம் மனதையும் உடலையும் தியானத்திற்கு தயார்படுத்துகிறது. சுவாசக் கட்டுப்பாட்டின் மூலம், பயிற்சியாளர்கள் கவனத்தைத் தக்கவைத்து, ஆழமான விழிப்புணர்வு நிலைகளை அடையும் திறனை வளர்த்துக் கொள்கிறார்கள்.

 (நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! (அல்-குர்ஆன் 13:28) 

5. பிரத்யாஹாரம்: புலன்களை விலக்குதல்.
அஷ்டாங்க யோகாவின் ஐந்தாவது அங்கமான பிரத்யாஹாரம், புலன்களை வெளிப்புற கவனச்சிதறல்களிலிருந்து விலக்கி உள்நோக்கி கவனம் செலுத்துவதை உள்ளடக்கியது. புலன் பற்றின்மையின் இந்த பயிற்சி உதவுகிறது:
வெளிப்புற கவனச்சிதறல்களைக் குறைத்தல்: உள்நோக்கி கவனம் செலுத்துவதன் மூலமும், புலன் உள்ளீடுகளைக் குறைப்பதன் மூலமும், பயிற்சியாளர்கள் அதிக உள் விழிப்புணர்வையும் செறிவையும் வளர்த்துக் கொள்கிறார்கள். பிரத்யாஹாரா வெளிப்புற குறுக்கீடு இல்லாத இடத்தை உருவாக்க உதவுகிறது.
உள்நோக்கி கவனம் செலுத்து
 
இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர்; “அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (குர்ஆன் 62:11) 

அதிக உள் விழிப்புணர்வையும் செறிவையும் வளர்த்துக் கொள்

நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? (குர்ஆன் 2:44)
தியானத்தை எளிதாக்குங்கள்: வெளிப்புற கவனச்சிதறல்கள் இல்லாமல் உள் அனுபவங்களை ஆராயக்கூடிய ஒரு இடத்தை உருவாக்குவதன் மூலம் பிரத்யாஹாரம் மனதை ஆழமான தியானத்திற்கு தயார்படுத்துகிறது. இது வெளிப்புறத்திலிருந்து உள் கவனத்திற்கு மாறுவதை ஆதரிக்கிறது.

ஆழமான தியானம்  

நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனை(ப் பார்க்காதிருந்தும்) அந்தரங்கத்தில் அவனுக்கு அஞ்சுகிறார்களோ, அவர்களுக்கு மன்னிப்புமுண்டு, பெரிய நற்கூலியும் உண்டு (அல்-குர்ஆன் 67:12)

சுய விழிப்புணர்வை மேம்படுத்துதல்: இந்தப் பயிற்சி சுயபரிசோதனை மற்றும் ஒருவரின் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளைப் பற்றிய ஆழமான புரிதலை ஊக்குவிக்கிறது. பிரத்யாஹாரா பயிற்சியாளர்கள் தங்கள் உள் உலகத்தைப் பற்றிய நுண்ணறிவைப் பெறவும் சுய விழிப்புணர்வை வளர்க்கவும் உதவுகிறது.

அல்லாஹ் உங்களுடைய செவிப்புலனையும், பார்க்கும் சக்தியையும் எடுத்துவிட்டு, உங்கள் இருதயங்களின் மீது முத்திரையிட்டு விடுவானானால் - அதை உங்களுக்கு அல்லாஹ்வையன்றி வேறு எந்த இறைவன் கொடுப்பான்? என்று நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக, (நம்) அத்தாட்சிகளை எவ்வாறு விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீர்ராக (இவ்வாறு இருந்தும); பின்னரும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றனர். (குர்ஆன் 6:46) 

6. தாரணா: செறிவு
தாரணை என்பது ஆறாவது அங்கமாகும், இது ஒருமுகப்படுத்துதல் அல்லது ஒருமுகப்படுத்தப்பட்ட கவனத்தைப் பயிற்சி செய்வதாகும். இது ஒற்றைக் கூர்மையாக கவனம் செலுத்த மனதைப் பயிற்றுவிப்பதை உள்ளடக்கியது, இது இதற்கு மிகவும் முக்கியமானது:
மன ஒழுக்கத்தை வளர்ப்பது: தாரணை மனதின் ஒருமுகப்படுத்தும் திறனை வலுப்படுத்துகிறது, மன தெளிவு மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்கிறது. இது மனதை ஒருமுகப்படுத்தப்பட்ட ஒரு புள்ளியில் கவனத்தை நிலைநிறுத்த பயிற்சி அளிக்கிறது.

மனதை ஒருமுகப்படுத்து  

(கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான். அவர்கள் எத்தகையவர்கள் என்றால் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள். (திருக்குர்ஆன்:- 107:4, 5)

தியானத்திற்கு (தியானம்) தயாராகுதல்: செறிவு என்பது தியானத்திற்கு முன்னோடியாகும். தாரணை என்பது மனதைத் தேர்ந்தெடுத்த பொருள் அல்லது சிந்தனையில் கவனம் செலுத்தப் பயிற்சி அளிப்பதன் மூலம் தியான நிலைகளை ஆழப்படுத்தவும் நிலைநிறுத்தவும் உதவுகிறது.

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஒரு நாளில்) ஐந்து வேளை தொழுகையைத்தான் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான்; அவற்றுக்காக அழகிய முறையில் (அங்கத்தூய்மை) செய்து, அவற்றுக்குரிய நேரத்தில் ஒரு ருகூஉவையும் இறையச்சத்தையும் முழுமையாக கடைப்பிடித்து தொழுதால் அவரை மன்னிப்பதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவ்வாறு செய்யவில்லையென்றால், அல்லாஹ்வின் வாக்குறுதி அவருக்கு இல்லை. அல்லாஹ் நாடினால் அவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான். அறிவிப்பாளர்:- உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-361, நசாயீ457, முவத்தா மாலிக், முஸ்னது அஹ்மத், மிஷ்காத்-570

உள் கவனத்தை அடைதல்: தாரணை மூலம், பயிற்சியாளர்கள் தங்கள் கவனத்தை குறிப்பிட்ட பொருள்கள், எண்ணங்கள் அல்லது ஆன்மீக இலக்குகளை நோக்கி செலுத்த முடியும். இந்த கவனம் செலுத்தப்பட்ட கவனம் உள் கவனம் மற்றும் நினைவாற்றலை வளர்ப்பதை ஆதரிக்கிறது.

 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதரும் (அந்த நேரத்தில்) பள்ளிக்கு வந்து தொழலானார்.(தொழுது முடித்ததும்) நபி(ஸல்) அவர்களுக்கு அவர் ஸலாம் கூறினார். நபி(ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள்.

அந்த மனிதர் முன்பு தொழுதது போன்றே மீண்டும் தொழுதுவிட்டு வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். 'திரும்பவும் தொழுவீராக! நீர் தொழவே இல்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு மூன்று முறை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர் 'சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை! எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்!' என்று கேட்டார்.

'நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறும்! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதும்! பின்னர் அமைதியாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து சரியான நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தா செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக! இவ்வாறே உம்முடைய எல்லாத் தொழுகையிலும் செய்து வருவீராக! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.. புகாரி: 757.

7. தியானம்: தியானம்
ஏழாவது அங்கமான தியானம், தியானப் பயிற்சியைக் குறிக்கிறது. இது நீடித்த மற்றும் தடையற்ற கவனத்தை உள்ளடக்கியது, இது உள் சுயத்துடன் ஆழமான தொடர்பை அனுமதிக்கிறது. தியானம் இதன் நோக்கமாகும்:
உள் அமைதியை வளர்த்துக் கொள்ளுங்கள்: வழக்கமான தியானம் ஆழ்ந்த உள் அமைதி மற்றும் அமைதியை வளர்க்கிறது. தியானம் பயிற்சி செய்பவர்கள் உள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அனுபவிக்க உதவுகிறது.

(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! (அல்-குர்ஆன் 13:28) 

சுய உணர்தலை மேம்படுத்துதல்: தியானம் சுயத்தின் தன்மை மற்றும் பிரபஞ்சத்தைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது. தியானத்தின் மூலம், பயிற்சியாளர்கள் தங்கள் ஆன்மீக இயல்பு மற்றும் பிரபஞ்சத்தில் தங்கள் இடத்தைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெறுகிறார்கள்.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் கவனக்குறைவு, மறதியின்றி இரண்டு ரக்அத்கள் தொழுதாரோ அவர் முன் பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுகிறான். அறிவிப்பாளர்:-ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் (நூல்:- முஸ்னது அஹமத், மிஷ்காத்-577)

உயர்ந்த உணர்வு நிலைகளை அடையுங்கள்: தியானத்தின் மூலம், பயிற்சியாளர்கள் உயர்ந்த விழிப்புணர்வு நிலைகளை அனுபவிக்க முடியும் மற்றும் ஆழமான உணர்வு நிலைகளுடன் இணைக்க முடியும். தியானம் விரிவாக்கப்பட்ட உணர்வு நிலைகளை ஆராய உதவுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும்போது நிச்சயமாக அவர் தன் இறைவனுடன் இரகசியமாக உரையாடுகிறார். எனவே, அவர் தம் இறைவனுடன் என்ன உரையாடுகிறார் என்பதை சிந்தித்துக் கொள்ளட்டும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் (நூல்:- ஹாகிம், ஜாமிஉஸ் ஸஙீர்-2174 இமாம் சுயூத்தீ, ஸஹீஹ் ஜாமிஉ-1538 இமாம் அல்பானீ) 

8. சமாதி: ஞானம் அல்லது பேரின்பம்
அஷ்டாங்க யோகாவின் 8 அங்கங்களில் எட்டாவது மற்றும் இறுதி அங்கமான சமாதி, யோகப் பாதையின் உச்சக்கட்டத்தைக் குறிக்கிறது. இது பெரும்பாலும் ஆழ்ந்த ஞானம், பேரின்பம் அல்லது தெய்வீகத்துடன் ஐக்கியத்தின் நிலை என்று விவரிக்கப்படுகிறது. சமாதியில், பயிற்சியாளர்கள் அனுபவிக்கும் அனுபவம்:
சுயத்தை கடந்த நிலை: சமாதி என்பது அகங்காரத்தைக் கடந்து பிரபஞ்சத்துடன் ஒற்றுமை உணர்வை அனுபவிப்பதாகும். இது சுயத்தின் உண்மையான தன்மையையும் யதார்த்தத்தையும் உணர்ந்து கொள்வதைக் குறிக்கிறது.

 மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம் என்று நினைத்தார். “”உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகிவிட்டேன்” என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார். அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம். (அல்குர்ஆன் 21:87,88)

அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல் வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான் (அல்குர்ஆன் 3:134

முஃமின்களே! அல்லாஹ்வை மிக அதிகமான அளவு நினைவு கூறுதலாக நினைவு கூறுங்கள். (அல்குர்ஆன் 33 : 41)

ஆழ்ந்த மகிழ்ச்சி மற்றும் பேரின்பம்: சமாதி என்பது ஆன்மீக உணர்தலில் இருந்து எழும் ஆழ்ந்த உள் மகிழ்ச்சி மற்றும் மனநிறைவால் வகைப்படுத்தப்படுகிறது. இது பேரின்ப விழிப்புணர்வு மற்றும் மகிழ்ச்சியின் நிலை.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வ தில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும் போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செய-லும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன் (புகாரி: 6502)

ஒற்றுமை மற்றும் நுண்ணறிவு: சமாதி என்பது யதார்த்தத்தின் உண்மையான தன்மை மற்றும் அனைத்து இருப்புகளின் ஒன்றோடொன்று இணைந்திருத்தல் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது. இது அஷ்டாங்க யோகாவின் 8 மூட்டுகளின் இறுதி இலக்கைக் குறிக்கிறது - ஆன்மீக ஒற்றுமை மற்றும் ஞானத்தை அடைதல்.

அவன், தான் நாடியோருக்கு ஞானத்தைக் கொடுக்கிறான். யாருக்கு ஞானம் வழங்கப்பட்டதோ அவர் அதிகமான நன்மைகள் வழங்கப்பட்டுள்ளார். அறிவுடையோரைத் தவிர எவரும் படிப்பினை பெறுவதில்லை. (அல்குர்ஆன்: 2:269)

என் இறைவனே! எனக்கு ஞானத்தை வழங்குவாயாக (குர்ஆன்: 26:83)

முடிவில், அஷ்டாங்க யோகாவின் எட்டு மூட்டுகள் ஆன்மீக நல்லிணக்கம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை அடைவதற்கான ஒரு விரிவான கட்டமைப்பை வழங்குகின்றன. இந்த கொள்கைகளை நம் அன்றாட வாழ்வில் ஒருங்கிணைப்பதன் மூலம், நாம் அதிக சமநிலை, நோக்கம் மற்றும் நிறைவை வளர்த்துக் கொள்ள முடியும். நீங்கள் ஒரு அனுபவமிக்க பயிற்சியாளராக இருந்தாலும் சரி அல்லது யோகாவில் புதியவராக இருந்தாலும் சரி, உடல் ஆசனங்கள் (ஆசனங்கள்) மற்றும் ஆன்மீக கொள்கைகள் இரண்டிலும் முக்கியத்துவம் அளிக்கும் அஷ்டாங்க யோகா பயிற்சி, மிகவும் இணக்கமான மற்றும் அறிவொளி பெற்ற இருப்புக்கான மதிப்புமிக்க நுண்ணறிவுகளையும் கருவிகளையும் வழங்குகிறது.

பதஞ்சலி அட்டாங்க யோகத்துடனான இந்த ஒப்பீடு ஒரு சில இடங்களில் பொருந்தாமல் இருக்கலாம். காரணம் மொழி. சமஸ்கிருதத்தில் உள்ள நூல் பற்றி ஆங்கிலத்தில் விரிவுரை எழுதி அதை தமிழில் மொழிபெயர்த்து அதற்க்கு விளக்கம் எழுதப்பட்டது. எனவே இதே போதனையை கூறிய திருமூலரின் அட்டாங்க யோகத்தோடு விரைவில் ஒப்பிட்டு எழுதப்படும்.