போகர் ஏழாயிரம் - பொய் மொழி


போகர் ஏழாயிரம் என்னும் நுலில் மூன்றாம் காண்டத்தில் போகர் மக்காபுரி கண்டது எனும் உட்தலைப்பு காணப்படுகிறது. போகர் மக்காபுரி சென்று வந்து சமாதியிருந்த இடம் என்று ஓரிடம் (இன்னும்) பழனியில் பேணப்பட்டு வருகிறது. நபி(ஸல்) அவர்களை தரிசிப்பதற்காக போகர்

"எழுந்துமே புகை ரதத்தை நடத்திக்கொண்டு
ஏகினேன் எருசலேம் நகரத்திற்கு" (3:222)

என்ற இடத்தில் ஜெருசலேம் சென்றதைக் குறிப்பிட்டுள்ளார். பின்னர் மக்காவுக்கு சென்றபோது

"வந்திட்டேன் நபி பாதம் காண வந்தேன்" ( 3:227)

என்று போகர் கூறினார்

"பட்சமுடன் கோரிக்குள் சென்றேனப்பா
நேர்த்தியாம் நவரத்ன சமாதிக்குள்ளே
நேர்மையுடன் நபியிருக்கச் சொன்னாரப்பா" ( 3:230)

அங்கே அசரீரியாகச் சில சொற்களைக் கேட்டபின்பு

"துணையாக யானுமொரு மலுங்கானேனே" (3:231)

என்று போகர் நபியின் சீடர் (முஸ்லிம்) ஆனதாகக் கூறியுள்ளார்.

மேற்கண்ட செய்தி சில வலைப்பூக்களில் காணக் கிடைக்கிறது.

Fact Check 
 
முதலில், போகர் கிமு 550 மற்றும் 300 க்கு இடையில் வாழ்ந்தார் என்று விக்கிபீடியா தகவல் தரும் நிலையில் அவர் கிபி 570-இல் பிறந்து தனது 40-ஆவது வயதில் நபி ஆகிய முகமது நபியை அவர் சந்தித்ததாக சொல்வது வரலாற்றுப் புனைவு. 

இரண்டாவது, முகமது நபி-யின் போதனையை அறிந்த ஒருவர், போகர் ஏழாயிரத்தை படித்தால் அது நூறு சதவிகிதம் முரண்படுவதை மிக எளிதாக கண்டறிய முடியும்.

மூன்றாவது, போகர் பிரபஞ்ச பயணம் செய்ததாக கூறப்படும் சம்பவங்கள் 100% பொய் ஏனென்றால் முகமது நபி அவர்கள்தான் இறைவனின் தேவதூதர்களோடு நேரடி தொடர்புடை கடைசி நபர், எனவே தேவர்களின் தொடர்பில்லாமல் பிரபஞ்சப்பயணம் செய்ய சாத்தியம் இல்லை. இவ்வாறு ஒரு நபரோ சம்பவமோ நடந்திருந்தால் நபிகளாரால் அதை செய்தி அறிவிக்கப் பட்டு இருக்கும்.

1 கருத்து: