குழந்தைகள் கடவுளின் வரம்

தமிழர் சமயம்    


மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். (குறள் 70)

விளக்கம்: மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

 குறிப்பு: குழந்தைகள் கடவுளின் வரம் என்பதால் அவன் என்ன தவம் செய்தானோ என்று கருத வேண்டி இருந்தது.  

கிறிஸ்தவம் 

"குழந்தைகள் ஆண்டவரிடமிருந்து பெற்ற சொத்து, சந்ததி அவரிடமிருந்து வெகுமதி."  - (சங்கீதம் 127:3)

“தந்தையர்களே, உங்கள் பிள்ளைகளை கோபப்படுத்தாதீர்கள்; மாறாக, அவர்களை இறைவனின் பயிற்சியிலும் போதனையிலும் வளர்த்து விடுங்கள்.” - (எபேசியர் 6:4)

இஸ்லாம்

மனிதன் இறந்துவிட்டால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அனைத்து அமல்களும் அவனைவிட்டு துண்டிக்கப்பட்டு விடுகிறது. (அவை) நிரந்தர தர்மம், பயன்தரும் கல்வி, அவருக்காக துஆச் செய்யும் சாலிஹான குழந்தை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

"ஏராளமான பொருள்களையும் புதல்வர்களையும் (தந்து) கொண்டு உங்களுக்கு உதவி செய்து, உங்களைத் திரளான கூட்டத்தினராகவும் ஆக்கினோம்." (ஸூரதுல் இஸ்ரா: 06) 

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 42 : 49)

உறவை பேணுதல்

உறவுகளை இழிவாக பேசும் இந்த இக்காலத்தில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால் உறவுகளை சார்ந்து நடத்தல் நமது நல்வாழ்வுக்கு மிக இன்றி அமையாதது. இரத்த உறவுகளை அனுசரித்து இணக்கமாக நடப்பதில் உள்ள நன்மைகளாக உலக வேதங்கள் சொல்வதை வாசிப்போம் வாருங்கள்.

தமிழர் சமயம் 


மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து. - (குறள் 459)
 
கருத்துரை - மன நலத்தினாலே மறுமைப் பயன் நன்றாகும். அம்மனத்தின் நன்மையும் இனநன்மையாலே தீத்தொழிலிற் செல்லாமற் காவலாதலையுடைத்து. இது மறுமைக்குத் துணையாமென்றது. 
 

இஸ்லாம் 


யார் தனக்கு செல்வம் பெருகுவதையும் நீண்ட ஆயுளையும் விரும்புகின்றாரோ அவர் இரத்த உறவைப் பேணிக்கொள்ளட்டும். அறிவிப்பவர் : அனஸ்(ரலி) (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

 ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சொர்க்கத்தில் நுழைவித்து நரகத்தை விட்டும் தூரமாக்கக் கூடிய ஒரு அமலை எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றார் அதற்கு நபி(ஸல்) அவர்கள், “நீ அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணைவைத்து விடாதே! தொழுகையை நிலை நிறுத்து, ஸகாத்தும் கொடுத்துவா, குடும்ப உறவைப் பேணிக்கொள்” என்றார்கள். அறிவிப்பவர் : ஹாலித் இப்னு ஸைத் அல் அன்ஸாரி(ரலி) (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ் இரத்த உறவைப் பார்த்து “யார் உன்னைச் சேர்ந்து நடக்கிறானோ நான் அவனைச் சேர்த்துக் கொள்வேன். யார் உறவைத் துண்டித்துக் கொள்கின்றானோ நான் அவனுடன் தொடர்பைத் துண்டித்து விடுவேன்” என்று கூறினான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) (ஆதாரம் : புகாரி)

யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

கிறிஸ்தவம் 

“தம் உறவினரை, சிறப்பாகத் தம் வீட்டாரை ஆதரியாதோர் விசுவாசத்தை மறுதலிப்பவராவர்” (1 திமோத்தேயு 5:8)

 

வழிபடுவோருக்கு ஞானம் கிடைக்கும்

இறைவனுக்கு கட்டுப்படுபவர்களுக்கு ஞானம் கிடைக்கும்


தமிழர் சமயம் 

வாய்ந்தறிந்‌ துள்ளே வழிபாடு செய்தவர்‌
காய்ந்தறி வாகக்‌ கருணை பொழிந்திடும்‌
பாய்ந்தறிந்‌ துள்ளே படிக்கத வொன்றிட்டுக்‌
கூய்ந்தறிந்‌ துள்ளுறை கோயிலு மாமே - (திருமந்திரம் 810)

விளக்கம்‌: இவனருள்‌ வாய்ந்து, சிவனின் அருமறை கூறும் அறங்களை வழிபடுபவர்களுக்கு, அவன்‌ கருணை பொழிவான்‌, அறிவு மினுங்கப்‌ பெறும்‌. வான்கங்கை பாயப்‌ பெற்று, படிக்கதவு ஆகிய அண்ணாக்கில்‌ மனம்‌ ஒன்றிட்டு கூர்ந்து அறிந்தால்‌, நம்முள்ளே சிவன்‌ கோயில்‌ கொண்டு அமர்ந்திருப்பதை உணரலாம்‌.

காய்ந்த அறிவு - மினுங்கும்‌ அறிவு, படிக்கத வொன்றிட்டு - படிக்கதவு ஒன்றி, கூய்ந்தறி - கூர்ந்து அறி 
 

இஸ்லாம் 


“ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (அவனது கட்டளைகளை பின்பற்றி) நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்”. (குர்ஆன் 8:29
 

யூதம் 


இதோ, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே, நீங்கள் அதைச் சுதந்தரித்துக்கொள்ளப் பிரவேசிக்கிற தேசத்திலே அவைகளைச் செய்யவேண்டும் என்று நான் உங்களுக்குக் கட்டளைகளையும் விதிகளையும் கற்பித்தேன். அவற்றைக் காத்து, அவைகளைச் செய், அதுவே உன் ஞானமும் ஜனங்களின் பார்வைக்கு உன் புத்தியுமாய் இருக்கும். ( உபாகமம் 4:5–6 )

கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து மரியாதை செய்! இதுவே ஞானத்தின் ஆரம்பம். புரிந்து கொள்ள, நீங்கள் பரிசுத்த கடவுளை அறிந்திருக்க வேண்டும். (நீதிமொழிகள் 9:10)

இறைவனின் கருணையால் சொர்கம் *

நம்பிக்கை அல்லது விசுவாசம் அல்லது ஈமான் என்பதன் மதிப்பு என்ன? 

கிறிஸ்தவம்

8 ஏனென்றால், கிருபையினால், விசுவாசத்தின் மூலமாக நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் - இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய பரிசு. 9 கிரியைகளால் அல்ல, அதனால் யாரும் பெருமை பேச முடியாது.10 ஏனென்றால், நாம் நற்கிரியைகளைச் செய்வதற்காக கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்ட தேவனுடைய கைவேலையாய் இருக்கிறோம்; எபேசியர் 2:8-10

இஸ்லாம்  

நிச்சயமாக எந்த மனிதரையும் அவருடைய அமல் அவரை சொர்க்கத்தில் நுழைவித்துவிட முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களைக் கூடவா? என்று கேட்டனர். அதற்கவர்கள், ஆம், நானும் கூட, அல்லாஹ்வின் கருணையும் பவமன்னிப்பும் என்னை சூழ்ந்து கொள்ளவில்லை என்றால் என்னைக் கூட என்னுடைய அமல் சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடாது என்றார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூல் : புகாரீ 5986)

 அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக உங்களில் எவரும் அவருடைய அமலின் காரணத்தால் -மறுமையில்- வெற்றியடையந்துவிட முடியாது என்றார்கள் (அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம் 5041)

 

யாரை வணங்கினாலும் அருள் செய்பவன் அவன் ஒருவனே

தமிழர் சமயம் 

யாதொரு தெயவம்‌ கொணெடீர் அத்தெய்வமாக ஆங்கே
மாதொரு பாகனார்தாம்‌ வருவர்‌ !!!! மற்றத்‌ தெய்வங்கள்‌
வேதனைப்படும்‌ பிறக்கும்‌ இறக்கும்‌ மேல்‌ வினையும்‌ செய்யும்‌
ஆதாலல்‌ அவை இலாதான்‌ அறிந்து அருள்‌ செய்வன்‌ அன்றே - திருமந்திரம்

சவஞானூத்தியார்‌ - அருணந்தி௫வம்‌

கருத்து - எந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலும்‌ அந்த தெய்வ வடிவில்‌ வந்து அருளுபவன்‌ சிவனே என்பதைக்‌ கூறும்‌ பாடல்‌.

பதவுரை: எந்தத்‌ தெய்வத்தை வணங்கி வழிபாடு செய்தாலும்‌ நமக்கு வேண்டுவனவற்றை எல்லாம்‌ வழங்க அந்த தெய்வங்களால்‌ இயலாது என்பதால்‌ மாதொரு பாகனாடிய இவனே வந்து அந்த தெய்வமா௫ அருள்செய்வான்‌. பிறதெய்வங்கள்‌ யாவும்‌ துன்பப்படும், பிறக்கும், இறக்கும், வினைகள் புரியும் ஆனால் எல்லாம்‌ வல்ல இறைவனாகிய இவபெருமானுக்கு இத்தகைய குறைவுகள்‌ இல்லையாதலால்‌, செய்த செயல்களுக்கு ஏற்ப பயனைக்‌ கொடுக்க வல்லவன்‌ அவனே ஆவான்‌. 
 

வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் என் பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேனா? அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப் படுவதில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக: இன்னும் (அல்லாஹ்வுக்கு) வழிபடுபவர்களில் முதன்மையானவனாக இருக்கும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்“ என்று கூறுவீராக! இன்னும், நீர் ஒருக்காலும் இணைவைப்போரில் ஒருவராகிவிட வேண்டாம். (குர்ஆன் 6:14)

''அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.' .(திருக்குர்ஆன் 30:40

கிறிஸ்தவம் 

 18.. அந்நியர்கள் மீதும் தேவன் அன்பு காட்டுகிறார். அவர்களுக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும் அளிக்கின்றார். 19 எனவே நீங்களும் அந்நியர்களிடம் அன்பு காட்ட வேண்டும். ஏனென்றால், நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராக இருந்துள்ளீர்கள். 20 “உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது மரியாதை செலுத்தி அவர் ஒருவரையே நீங்கள் ஆராதிக்க வேண்டும். (உபாகமம் 10)