நல்லோரால் நிலைக்கும் உலகு *

தமிழர் சமயம் 

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 

பொருள்:  உழவன் நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் அங்கிருக்கும்  புல்லுக்கும் பயனைத் தரும்.  அது போலவே இந்தப் பழமையான உலகில் நல்லவர் ஒருவர்க்காகப் பெய்யும் மழை (பலன்கள்)  எல்லாருக்குமே பயனைத் தரும்.

இஸ்லாம்  

மேலும், அவர்களுக்காக நாம் வானத்திலிருந்து நன்கு மழை பொழிய வைத்தோம். மேலும், அவர்களுக்குக் கீழே ஆறுகளையும் ஓடச் செய்தோம். ஆனால் இறுதியில் (அவர்கள் நன்றி கொன்ற போது) அவர்கள் செய்த பாவங்களினால் நாம் அவர்களை அழித்துவிட்டோம்”. (திருக்குர்ஆன் 6:6)

இது முஸ்லிம்களின் நன்மை, நம்பிக்கை மற்றும் பரவலின் ஒரு கட்டமாக இருக்கும். பின்னர் மற்றொரு கட்டம் வரும், அதில் விசுவாசிகளின் எண்ணிக்கை குறையும் வரை அல்லாஹ் அவர்களின் ஆன்மாக்களை எடுக்கும் ஒரு காற்றை அனுப்பும் வரை, அந்த நேரம் வரும் மனிதர்களில் மிகவும் தீயவர்களைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள். முஸ்லீம் (148)

கிறிஸ்தவம் 

நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவீர்கள். உங்கள் பிதாவானவர் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார். உங்கள் பிதாவானவர் நன்மை செய்பவர்களுக்கும் தீமை செய்பவர்களுக்கும் மழையை அனுப்புகிறார் (மத்தேயு 5:45)

முடிவுரை 

 நல்லோரால் தான் மழை பொழிகிறது ஆனால் அதனால் தீமை செய்வோருக்கும் சேர்த்துதான் பொழிகிறது. 

கூடா நட்பு

தமிழர் சமயம் 


தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. - (மூதுரை)

பொருள்: தீயவர்களைப் பார்ப்பதும், பயனற்ற அவர் சொல்லைக்  கேட்பதுவும், அவர்களைப் பற்றி அடுத்தவர்களிடத்தில் சொல்வதுவும், அவர்களோடு சேர்ந்து இருப்பதுவும் நமக்குக் கெடுதியே.

இஸ்லாம் 


குற்றவாளிகளிடம் “உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள். “நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை” எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். (குர்ஆன் 74 : 45)

நல்ல நண்பன் நம்முடன் இருந்தால் தவறு செய்ய நாம் முற்பட்டாலும் நல்லதை நமக்கு விளக்கிச் சொல்லி அதில் விழவிடாமல் நம்பை பாதுகாத்து விடுவான். நபிமார்கள் நல்வழியை மக்களுக்குப் போதிப்பதற்காக வந்தார்கள். அவர்களை இப்பணியில் தூண்டிவிடுவதற்காக அல்லாஹ் அவர்களுக்கென்று ஒரு நண்பரை ஏற்படுத்தியுள்ளான். நபிமார்களுக்கே நல்ல நண்பர் தேவைப்படுகிறார் என்றால் நிச்சயமாக நாம் அனைவரும் நல்லவர்களை நண்பர்களாகப் பெற்றிருக்க வேண்டும். 
 

கிறிஸ்தவம் 

ஏமாந்துவிடாதீர்கள்: "கெட்ட சகவாசம் நல்ல ஒழுக்கத்தை அழிக்கிறது." - ( 1 கொரிந்தியர் 15:33 )

கோபம் கொண்ட மனிதனுடன் நட்பு கொள்ளாதே, கோபம் கொண்டவனுடன் செல்லாதே, அவனுடைய வழிகளைக் கற்று, கண்ணியில் சிக்கிக் கொள்ளாதே. ( நீதிமொழிகள் 22:24-25 )

ஞானிகளுடன் நடப்பவன் ஞானியாவான், ஆனால் மூடர்களின் தோழனோ கேடு அடைவான். (நீதிமொழிகள் 13:20 )

ஒரு முட்டாள் இருப்பை விட்டு விடுங்கள், ஏனென்றால் நீங்கள் அறிவின் வார்த்தைகளை சந்திக்கவில்லை. (நீதிமொழிகள் 14:7 )

விரயம் - வரவு எட்டணா செலவு பத்தனா

தமிழர் சமயம் 


ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு நல்வழி வெண்பா : 25

விளக்கம் ஒருவன் தன் வருவாயை விட அதிகம் செலவு செய்தால், அவன் கடன் வாங்கி தன் மானத்தை இழந்து, சொந்த புத்தியை இழந்து போக வேண்டிய சூழல் ஏற்படும், போகும் திசை எல்லாம் அவனை எல்லாரும் திருடனைப் போல் பாவித்து அவனிடம் பேச தவிர்ப்பர், ஏழு பிறப்புக்கும் தீயவனாய், நல்லவர்களுக்கு ஆகாதவனாய் மாறிவிடுவான். ஆதலால் வருவாய்க்கு அதிகமாக செலவு செய்யக்கூடாது 

இஸ்லாம் 

“இன்னும், (வீண்) விரயம் செய்யாதீர்கள். வீண் விரயம் செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.” (அல்அன்ஆம்: 141)

“மேலும், (அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாக) உண்ணுங்கள். மேலும், பருகுங்கள். (ஆனால்) வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிக்கமாட்டான்.” (அல்அஃராஃப்: 31)

“(செல்வத்தை) அளவு கடந்து வீண் விரயம் செய்யாதுமிருப்பீராக! நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ, தன் இரட்சகனுக்கு நன்றி செலுத்தா(து மாறு செய்)தவனாக இருக்கின்றான்.” (பனீ இஸ்ராயீல்: 26, 27)


கிறிஸ்தவம் 

 சில நாட்கள் கழித்து, அந்த இளைய மகன் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு தூர தேசத்துக்குப் புறப்பட்டுப் போனான். அங்கே அவன் மோசமான வாழ்க்கை* வாழ்ந்து, தன்னிடமிருந்த சொத்துகளையெல்லாம் ஊதாரித்தனமாகச் செலவழித்தான்.  லூக்கா 15:13

வேதத்துக்கு மாற்று விளக்கம் கொடுக்கலாமா? *

கிறிஸ்தவம் / யூதம்
 
தேவன் சொல்லுகிற அனைத்தும் பூரணமானவை. தேவன் அவரிடம் செல்லுகிறவர்களுக்குப் பாதுகாப்பான இடமாக இருக்கிறார். 6 எனவே தேவன் சொன்னவற்றை மாற்றுவதற்கு முயற்சி செய்யாதே. நீ அவ்வாறு செய்தால், அவர் உன்னைத் தண்டிப்பார். நீ பொய் சொல்கிறாய் என்பதையும் நிரூபிப்பார். (நீதிமொழிகள் 30: 5)

இஸ்லாம்

நமது வசனங்களை வளைப்போரும், இந்த அறிவுரை தங்களிடம் வந்த போது மறுத்தோரும் நம்மிடமிருந்து மறைந்திட முடியாது. நரகில் வீசப்படுபவன் சிறந்தவனா? அல்லது கியாமத் நாளில் அச்சமற்றவனாக வருபவனா? நீங்கள் நினைத்ததைச் செய்து கொள்ளுங்கள்! நீங்கள் செய்பவற்றை அவன் பார்ப்பவன். இது மிகைக்கும் வேதம். இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது. (குர்ஆன்: 41:40-42)

ஒரு குர்ஆன் வசனத்துக்கான விளக்கத்தை யார் கொடுக்க முடியும்?

(நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவு படுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். (குர்ஆன் 16:44

 

பாவ புண்ணியம் பயனளிக்கும்

தமிழர் சமயம் 

புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல் - (நல்வழி பாடல் 1)

விளக்கம்மனிதன் இறக்கும் போது அவன் கூட வருவது அவன் செய்த புண்ணியம் பாவம் என்று கூறும் இரண்டு மட்டுமே, இதைத் தவிர வேறு எதுவும் கூட வாராது, அனைத்து சமயமும் கூறுவது தீமையை செய்யாதே உன்னால் முடிந்த நன்மையை செய் என்பது தான்…

இஸ்லாம்  

அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள் எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டுகொள்வார். அன்றியும் எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டுகொள்வான் (அல்குர்ஆன் 99:6-8)

கிறிஸ்தவம்  

6 கடவுள் “ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்ததற்கு ஏற்றவாறு பிரதிபலிப்பார்.” 7 விடாமுயற்சியுடன் நன்மை செய்வதால் மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுபவர்களுக்கு அவர் நித்திய ஜீவனைக் கொடுப்பார். 8 ஆனால், சுயதேடும், சத்தியத்தை நிராகரித்து தீமையை பின்பற்றுகிறவர்களுக்கு கோபமும் கோபமும் இருக்கும். 9 தீமை செய்யும் ஒவ்வொரு மனிதனுக்கும் துன்பமும் துன்பமும் இருக்கும்: முதலில் யூதனுக்கும், பிற இனத்தவருக்கும்; 10 நன்மை செய்கிற யாவருக்கும் மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்: முதலில் யூதனுக்கும் பின்பு புறஜாதியாருக்கும். 11 ஏனெனில் கடவுள் தயவைக் காட்டுவதில்லை. 12 நியாயப்பிரமாணத்திற்குப் புறம்பாகப் பாவம் செய்கிற யாவரும் நியாயப்பிரமாணத்திற்குப் புறம்பாக அழிந்துபோவார்கள்; (ரோமர்கள் 2 கடவுளின் நீதியான தீர்ப்பு)