நாம் ஏன் அடுத்தவர்களை குறை கூறுகிறோம்? காரணமென்ன?

 நாம் நம்மை குறையற்றவர்களாக கருதுகிறோம். ஆனால் அது உண்மையல்ல என்று பலநேரங்களில் நாமே உணர்கிறோம்.

மனிதர்கள் எல்லோரும் பாவம் (அ) தவறு செய்பவர்கள் தான் என்று உணர வேண்டும்.

யூதத் தலைவர்கள் அதே கேள்வியை இயேசுவிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். ஆகையால் இயேசு எழுந்து நின்று, “பாவமே செய்யாதவன் எவனாவது இங்கே இருக்கிறானா? இருந்தால் பாவம் செய்யாத அந்த மனிதன் இவள் மீது முதல் கல்லை எறியட்டும்” என்றார். - யோவான் 8:7

மனிதர்கள் அனைவரும் பாவம் செய்பவர்கள்,பாவம் செய்பவர்களில் சிறந்தவர்கள் தவ்பா செய்பவர்கள். (அல்ஜாமிவுஸ் ஸகீர் ; 6274)

அதை உணர்ந்தால் மற்றவரை குறைகூறுவது குறைந்துவிடும்.

நான் நபி அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அப்பொழுது அவர்கள் என்னை ஒரு பொழுதும் ”உப்” (சீ) என்று கூறியதில்லை. மேலும் நான் செய்த எந்த செயலுக்கும் நீ ஏன் செய்தாய்? என்றோ, நான் செய்யாத விஷயத்திற்கும், நீ இப்படி செய்திருக்கலாமே! என்றோ அவர்கள் ஒருபொழுதும் என்னிடம் கூறியதில்லை. அனஸ்(ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

மேலும் குறை கூறினால் நமக்கு என்ன நடக்கும்?

குறை கூறிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான்'' குர்ஆன் (104:1)

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும் - 
குறள் 186

விளக்கம்: பிறனுடைய பழியைச் சொல்லுமவன் தனக்குண்டான பழிகளிலுஞ் சிலவற்றை வேறுபடத் தெரிந்து பிறராற் சொல்லப் படுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக